சமீபத்திய பதிவுகள்

போர்க்குற்றவாளி மகிந்த ஒக்ஸ்போர்டில் ஆற்ற இருந்த சிறப்புரை ரத்து(video)

>> Wednesday, December 1, 2010


 

பிரித்தானியாவுக்கு வருகைதந்திருக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை ஒக்ஸ்போர்டில் ஆற்ற இருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஒக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பு தமது இணையத்தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது.

இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாக கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்.

நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

எனினும், ஈழத்தமிழர்களின் ஆர்ப்பாட்டத்தை நிறுத்தமுடியாது என தெரிந்ததாலும், நேற்றையதினம் சனல்4 வெளியிட்ட போர்க்குற்ற காணொளியுமே இச் சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டமைக்கு காரணம் என அறியக்கூடியதாக இருக்கின்றது.

ஆனால், பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாகவும், இந்த ரத்துக்கு தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மேலும், ஈழத்தமிழர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த உரை பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

எனினும், மஹிந்த ராஜபக்ஷ, லண்டன் ஒக்ஸ்பேர்ட்டில் நடைபெறவிருந்த சிறப்புரை ரத்துச் செய்யப்பட்டமைக்காக தான் வருந்துவதாகவும், இம்முறை இல்லாவிடினும், மீண்டுமொருமுறை பிரித்தானியாவிலோ, இல்லை வேறெந்த நாட்டிலோ தான் சிறப்புரை நடாத்துவேன் என கூறியதாக தெரியப்படுகின்றது.

இவ்வுரை ரத்துச் செய்யப்பட்டாலும் நாளை ஒக்ஸ்போர்ட் முன்னால் நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம், மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்யக்கோரிஅவர் தங்கியிருக்கும் விடுதியின் முன்னால் நடைபெறும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ள போதிலும், மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது, அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது


source:puthinamnews

--



http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

போர் ஒத்திகை-இலங்கையில் பரபரப்பு

 

  புலிகளோடு நடைபெற்ற 3 தசாப்தகால யுத்தங்கள் முடிவடைந்து 18 மாதங்கள் ஆகின்ற நிலையிலும், புலிகளைத் தாம் முற்றாக அழித்துவிட்டோம் என இலங்கை கங்கணம் கட்டி அலைகிறது. இந்நேரத்தில் சுமார் 2,500 படையினர் அடங்கலாக முப்படைகளின் பாரிய போர் ஒத்திகை ஒன்று கடந்த 21ம் திகதி முதல் 9 நாட்களாக நடைபெற்றுவருகிறது. மன்னார் அடங்கலாக சாலைதுறையில் இந்த பாரிய ஒத்திகை இடம்பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவகள் தெரிவிகின்றன. இலங்கை வரலாற்றில் முப்படைகளும் இணைந்து முதல் தடவையாக இவ்வாறானதொரு பாரிய போர் ஒத்திகை ஒன்றை நீர் காகங்கள் என்ற பெயரில் நடத்திவருவது ஏன்? இதன் பின்னணி தான் என்ன?

குறிப்பாக இங்கு நடைபெற்று வரும் பாரிய படை ஒத்திகையில், வானில் இருந்து குதித்து குறிப்பிட்ட ஒரு இடத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் நடவடிக்கையும், சிறுபடகுகள் மூலம் ஊடறுத்துச் சென்று தாக்குதல் நடத்துவதும், மற்றும் தரையிறக்கம் செய்வதுமே மேற்கொள்ளப்படுவதாக இலங்கைப் பாதுகாப்புச் செயலகம் தெரிவித்துள்ளது. வான் படையினர் மற்றும் கடல் படையினரின் உதவியோடு, இராணுவத்தின் கமாண்டோப் படைப்பிரிவினர், திடீரென இடங்களைக் கைப்பற்றுவது எவ்வாறு என்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னணி தான் என்ன?

இலங்கை அரசானது வெளிநாட்டுப் படை ஒன்று இலங்கைக்குள் திடீரென ஊடுருவலாம் என்ற அச்சத்தில் உள்ளதா? பிறநாடுகளின் படையாக இருக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறு எந்த நாடும் இலங்கை மீது படையெடுக்கவேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஆனால் அப்படி இருந்தும் இவ்வாறானதொரு நடவடிக்கை ஏன் என்ற கேள்வி தமிழர்கள் மட்டுமல்ல சிங்களவர்கள் மத்தியிலும் எழுகின்றது. அப்படியாயின் புலிகளின் புலிகளின் அணிகள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்குள் எப்போதும் ஊடுருவலாம் என்ற அச்சத்தில் இலங்கை தற்போது இருப்பது அம்பலமாகிறது.

புலிகள் புதிதாக ஆள் பலத்தை திரட்டி, அணி ஒன்றைத் திரட்டி தம்மைத் தயார்ப்படுத்தி வருவதற்கு பல காலம் பிடிக்கும். அப்படியாயின் இந்நிலையில் இலங்கை அரசானது தற்போது அவசர அவசரமாக இந்த ஒத்திகையைச் செய்துபார்க்கவேண்டிய அவசியம் இல்லை. கணிசமான அளவு போராளிகள் தப்பிச் சென்றிருந்தால் மட்டுமே, இலங்கை அரசானது இது குறித்து கவலையடைய வேண்டும். அப்படியாயின் தற்போது இலங்கை இராணுவம் இவ்வாறு ஒத்திகை பார்த்து எந்த விடயத்தை தானே வெளிக்கொண்டுவர முனைகிறது

source:athirvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP