கிறிஸ்தவ தேவாலயம் மீது சிங்கள ராணுவம் தாக்குவதை தடுத்து நிறுத்துங்கள் : நார்வே அரசுக்கு விடுதலைப்புலிகள் கடிதம்
>> Tuesday, April 8, 2008
கொளும்பு, ஏப். 8-
விடுதலைப்புலிகள் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் நார்வே அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஒரு வருட கால மாக சிங்கள படை வன்னி பகுதியை ஆக்கிரமித்து போர் தொடுத்து வருகிறது. மன்னார் மாவட்டதில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகு கிறிஸ்தவ தேவாலயத்தை இடைவிடாது தாக்கி வருகின்றனர். எப்படியாவது அந்த ஆலயத்தை தகர்க்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயல்படுகின்றனர்.
இது நூற்றாண்டு பழமை வாய்ந்த திருத்தலம். மத வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களும் வழிபடும் பகுதி. இந்த ஆலயத்தில் தினமும் குண்டுகளை வீசுகின்றனர். பீரங்கி, டாங்கி, மூலமும் தாக்குதல் நடக்கிறது. இதில் ஒரு பகுதி இடிந்து விட்டது. கண்மூடித்தனமாக நடக்கும் இந்த தாக்குதலால் அங்கு தஞ்சம் அடைந்திருக்கும் ஆயிரக்கணக்கான மக்களும், ஆலய மதகுருமார்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்களபடை ஆலயத்தின் மீத தாக்குவதை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள் மத சின்னங்களை அழிப்பது அந்த மதத்தை பின்பற்றும் மக்களை புண்படுத்துவதாக உள்ளது. உலக நாடுகள் உதவியோடு இந்த தாக்குதலை நிறுத்த நார்வே அரசு தேவையான முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.http://www.maalaimalar.com/
0 கருத்துரைகள்:
Post a Comment