சமீபத்திய பதிவுகள்

அவர்கள் இருவரும் வாலிபர்களா?

>> Thursday, May 20, 2010

 http://www.lovefilm.com/lovefilm/images/products/7/5467-large.jpg

Two young men?

யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றியும், அஜீஜ் என்பவரின் மனைவியினால் அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது பற்றியும் குர்ஆன் கூறுகிறது.

அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், "நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன், "நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்" என்று கூறினான். (பின் இருவரும் "யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிவப்பீராக மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோன்" (என்று கூறினார்கள்). (குர்‍ஆன் 12:36)

And there entered with him two young men in the prison. One of them said: "Verily, I saw myself (in a dream) pressing wine." The other said: "Verily, I saw myself (in a dream) carrying bread on my head and birds were eating thereof." (They said): "Inform us of the interpretation of this. Verily, we think you are one of the Muhsinûn (doers of good)." [Hilali/Khan Translation] (Surah 12:36)

ஆதியாகமம் 40ம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சி விவரமாக கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு நபர்களில் ஒருவர், பார்வோன் இராஜாவின் பானங்களை சுமப்பவர்களுக்கு தலைவராக இருப்பதாகவும், இன்னொருவர் பார்வோன் இராஜாவிற்கு உணவு தயாரிப்பவராக இருப்பதாகவும் நாம் காண்கிறோம்.

மேலே படித்த குர்ஆன் வசனத்தில் இரண்டு தவறுகள் உள்ளது. முதலாவதாக, குர்ஆன் தோராவிற்கு முரண்பட்டதாக உள்ளது, அதாவது ஆதியாகமம் 39:19 லிருந்து 40:3 வரையிலுள்ள வசனங்களின் படி, அந்த இரண்டு மனிதர்கள் யோசேப்பு அடைக்கப்பட்ட அதே சிறைச்சாலைக்கு வருவதற்கு முன்பதாகவே யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தார். இதற்கு முரண்பட்ட விதமாக, அவர்கள் இருவரும் யோசேப்போடு கூட ஒரே சமயத்தில் சிறைச்சாலையில் சென்றார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

இரண்டாவதாக, அந்த இருவரின் வயது பைபிளில் குறிப்பிடவில்லையானாலும், பார்வோன் இராஜ்யத்தில் இந்த இரண்டு நபர்கள் அப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் (இராஜாவிற்கு பானங்களை சுமப்பவர்களின் தலைவராக, மற்றும் உணவு தயாரிப்பவர்களுக்கு தலைவராக இருக்கிறார்கள்) என்பதை கவனிக்கும் போது, குர்ஆன் சொல்வது போல இவர்கள் வாலிபர்களாக இருக்கமுடியாது என்பதை அறியலாம்.

ஆங்கில மூலம்: Two young men?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்


source:http://www.answering-islam.org/tamil/quran/contra/qb015.html

StumbleUpon.com Read more...

நண்பனை காப்பாற்றிய சச்சின் : 'ஆபரேஷன்' செலவை ஏற்றார்

 
 
Front page news and headlines today 

ஆமதாபாத் : கிரிக்கெட் அரங்கில் சாதனை நாயகனான சச்சின், சேவைப் பணிகளிலும் அசத்துகிறார். விபத்தில் படுகாயமடைந்த தனது நண்பனின் 'ஆபரேஷன்' செலவை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.


இந்திய அணியின் 'மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இவரது இளமைக் கால நண்பர் தான் 'ஆல்-ரவுண்டர்' தல்பிர் சிங் கில். இருவரும் 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளனர். அப்போது ஒரே 'ரூமில்' தங்கியுள்ளனர். ஒன்றாக பயிற்சி செய்துள்ளனர். காலம் மாறியது; காட்சிகள் மாறின. இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற சச்சின், 'கிரிக்கெட் கடவுளாக' உருவெடுத்தார். மறுபக்கம் தல்பிர் சிங்கை துரதிருஷ்டம் துரத்தியது. கடந்த 2002ல் பைக்கில் சென்ற இவர், 'டாங்கர்' லாரி மீது மோதி, பெரும் விபத்தில் சிக்கினார். இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு, சுமார் 8 மாதங்களுக்கு 'கோமா' நிலையில் இருந்துள்ளார். கால்கள் பாதிக்கப்பட்டதால், நடக்க முடியாது. மூளையில் காயம் ஏற்பட்டதால், பேசும் திறனையும் சிறிது காலத்துக்கு இழந்தார். பழைய நிலைக்கு திரும்ப வேண்டுமானால், இடுப்பு பகுதியில் 6 லட்ச ரூபாய் செலவில் 'ஆபரேஷன்' செய்ய வேண்டுமென டாக்டர்கள் கூறியுள்ளனர்.


'ஆபரேஷன்' வெற்றி: இதைக் கேட்ட தல்பிர் குடும்பம் ஆடிப் போயுள்ளது. அந்த நேரத்தில் தான் சச்சின் பெயர் நினைவுக்கு வந்துள்ளது. உடனே தல் பிரின் தாயார் சுக்தயால் கவுர், கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளார். இதனை பார்த்ததும் நெஞ்சம் பதறிய சச்சின், பழைய நட்பை மறக்காமல், மிகுந்த பெருந் தன்மையுடன் முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இதையடுத்து நேற்று ஆமதாபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் 'ஆபரேஷன்' வெற்றிகரமாக நடந்தது.


இது குறித்து தல்பிர் கூறுகையில்,''எனது 'ஆபபரேஷன்' செலவை ஏற்று, மிகப் பெரும் உதவி செய்துள்ளார் சச்சின். அவருக்கு கடமைப்பட்டுள்ளேன். 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்ட பின், அவரை நேரில் சந்தித்து நன்றியை தெரிவிப்பேன்,''என்றார். சுக்தயால் கவுர் கூறுகையில்,''எனது மகனின் மருத்துவ அறிக்கையை இணைத்து சச்சினுக்கு கடிதம் அனுப்பினேன். கடிதம் கிடைத்த சில மணி நேரத்தில், தனது நண்பனின் 'ஆபரேஷன்' செலவு அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்,''என்றார்.


மீண்டும் புன்னகை: இது குறித்து சச்சின் கூறுகையில்,''தல்பிர் வாழ்வில் மீண்டும் புன்னகையை கடவுள் கொடுக்க வேண்டும். 'ஆபரேஷன்' வெற்றிகரமாக நடந்ததில் மிகவும் மகிழ்ச்சி. அவரது மருத்துவ 'ரிப்போர்ட்டை' இந்திய கிரிக்கெட் போர்டின் மருத்துவ ஆலோசகர் ஆனந்த் ஜோஷிக்கு அனுப்பியுள்ளேன். அவரது பதிலுக்காக காத்திருக்கிறேன்,''என்றார். ஏற்கனவே மும்பையில் உள்ள 'அப்னாலயா' அமைப்பின் மூலம் 200 ஏழை குழந்தைகளின் படிப்பு செலவு முழுவதையும் சச்சின் ஏற்றுக் கொண்டுள்ளார். தற்போது நண்பரின் சிகிச்சைக்கு உதவி, அவரது வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்துள்ளார்.




source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

காசோலைகளில் திருத்தம் செய்தால் அபராதம்: ரிசர்வ் வங்கி


 

 
 
வங்கி காசோலைகளில் அடித்தல், திருத்தல் செய்தால், ரூ.500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு காசோலைகளில் அதிக அளவில் மோசடி நடப்பதாக புகார்கள் வந்தன. இந்த மோசடிகளை தடுக்க ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

இதன்படி காசோலைகளில் எந்த சிறு அடித்தலோ, திருத்தலோ இருக்க கூடாது. தொகை குறிப்பிடுவதிலும், எழுத்தால் எழுதும் போதும், சிறு தவறு இருந்தால் கூட 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.

இதற்கு தேதிகளை மாற்றம் செய்வதில் மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP