சமீபத்திய பதிவுகள்

எக்ஸெல் 2010:

>> Wednesday, June 30, 2010

 


புதிய வசதிகள்சென்ற வாரம் ஆபீஸ் 2010 தொகுப்பில் உள்ள வேர்ட் தொகுப்பில் தரப்பட்டுள்ள புதிய வசதிகள் குறித்துப் பார்த்தோம். எக்ஸெல் தொகுப்பில் உள்ள புதிய வசதிகளில் குறிப்பிடத்தக்க சிலவற்றை இங்கு காணலாம். வேர்ட் தொகுப்பில் போலவே, எக்ஸெல் தொகுப்பிலும் சில வசதிகள் புதியதாகத் தரப்பட்டுள்ளன. 
இவற்றில் அனைவரையும் கவர்வது "Sparklines"  என்ற அம்சமாகும். இவை செல் அளவிலான சிறிய சார்ட்களாகும். இவற்றை ஒர்க்ஷீட்களில் பதிந்து, டேட்டா குறித்து அப்படியே காட்சிகளாக அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, கடை ஒன்றில் உள்ள சில பொருட்களின் ஸ்டாக் நிலைமை அறிய, அவை குறித்த சார்ட் ஒன்றை, ஒவ்வொரு பொருளுக்கும் தயார் செய்து அமைக்கலாம். இதனால், ஒர்க் ஷீட்டின் உள்ளே செல்லாமல், திறந்தவுடனேயே அவற்றை காட்சியின் மூலம் அறியலாம். 
அடுத்ததாக நாம் அறிய வேண்டியது "slicers" என்ற டூல் வசதி. இவை ஒர்க்ஷீட்டிலேயே பதியப்பட்ட ஆப்லெட்களாகும். இவற்றின் மூலம் டேட்டாவினை அலசிப் பார்த்து, வகைப்படுத்தி, குறிப்பிட்ட டேட்டாவிற்கு டேஷ் போர்டுகளை அமைக்கலாம். இந்த வசதியின் மூலமும் டேட்டாக்களை விசுவலாக ஒரு காட்சியாகக் காட்ட முடியும். 
அடுத்து தரப்படும் ப்ராஜக்ட் ஜெமினி ("Project Gemini")  என்பது, லட்சக்கணக்கில் நீங்கள் படுக்கை வரிசைகளை அமைத்து, அவற்றில் டேட்டாவினை செலுத்த இருப்பவர் களுக்கான டூல். இதனைத் தனியே டவுண்லோட் செய்து கொள்ள வேண்டும். இந்த ஆட் ஆன் புரோகிராம் இல்லாமல், லட்சக் கணக்கில் செல்களில் டேட்டாவினைக் கொண்டு சென்றால், ஒர்க்ஷீட் திணறிப் போகும்.
அடுத்ததாக நமக்கு எக்ஸெல் 2010ல் கிடைத்திருக்கும் வசதி கண்டிஷனல் பார்மட்டிங் டூலில் புதிய திருப்பு முனை. பார்முலா அல்லது செல் வேல்யூவிற்கு ஏற்ற வகையில் செல்லில் பார்மட்டிங் மேற்கொள்ளும்படி அமைத்திடலாம்.
ஜிமெயில் வழியே திருட்டு
இந்தியாவில் பிராட்பேண்ட் பயன்படுத்தும் அனைவருக்கும் ஏதேனும் ஒருவகையில் பிஷ்ஷிங் அட்டாக் எனச் சொல்லப்படும், திருட்டு மெயில்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. சென்ற வாரம் புதன்கிழமை, ஜிமெயில் பயன்படுத்துவோர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு அதிகார பூர்வ கடிதம் கூகுள் நிறுவனத்திலிருந்து வருவது போல அனுப்பப்பட்டது. அதில் ஜிமெயில் சேவையை முழுமையான பாதுகாப்பு நிறைந்தததாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், அதனால் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்கள் அனைவரும், வரும் ஏழு நாட்களுக்குள் தங்களுடைய யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இல்லை எனில் ஜிமெயில் அக்கவுண்ட்டினை இழக்க நேரிடும் என எச்சரிக்கை விடப்பட்டது. 
இது குறித்து கூகுள் நிறுவன அதிகாரியை விசாரித்த போது, கூகுள் எந்த நிலையிலும் இது போன்ற ஒரு கடிதத்தை அனுப்பாது என்றும், ஜிமெயில் வாடிக்கையாளர்கள் கவனத்துடன் இது போன்ற மெயில்களை ஒதுக்க வேண்டும் எனவும் கூறினார். இது குறித்த செய்தி ஒன்று http://mail.google.com/support/bin /answer.py?hl=en&answer=8253  என்ற முகவரியில் உள்ள தளத்தில் வெளியிட்டிருப்பதாகவும் கூறினார். இந்த வகை திருட்டு செய்திக்குப் பலியான மும்பை பள்ளி ஆசிரியை ஒருவர் தன் நெட் பேங்கிங் அக்கவுண்ட்டில் இருந்த ரூ.10 லட்சத்தை இழந்திருக்கிறார். எனவே இது போன்ற செய்திகள் எங்கிருந்து வந்தாலும், சற்று யோசித்து செயல்படுமாறு இன்டர்நெட் அண்ட் மொபைல் அசோசியேஷன் ஆப் இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.


 source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொன்றுள்ள இலங்கை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

>> Monday, June 28, 2010

கே.பி என்னும் துருப்புச் சீட்டை எடுத்து விளையாடும் இலங்கை!

 

இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அழைத்துவரப்பட்டார் கே.பி என்றும், அவர் சிறையில் வாடுவதாகவும், அவரை இலங்கை அரசு சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், கே.பி அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தார், கே.பி இவருடன் பேசினார் என அரசல் புரசலாக பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 9 பேர் அடங்கிய தமிழர்கள் குழு ஒன்று அவரைச் சென்று சர்வசாதாரணமாக பார்த்துவிட்டு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து கே.பி நடத்திய பத்திரிகையாளர் மாநாடும் அதன் விபரங்களையும் லக்பிம வார ஏடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது:

சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக சிறீலங்கா அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எங்கு உள்ளார் என்பதை தென்னிலங்கை மக்கள் கூட அறியவில்லை. ஆனால் திடீரென கே.பி புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலருடன் வடக்கு – கிழக்குக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து திரும்பிய கே.பி குழுவினர் கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துள்ளனர்.

பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வெள்ளை நிற காரில் வந்து இறங்கினார் பத்மநாதன். அவரின் பையை பாதுகாப்பு படையினரே சுமந்து வந்தனர். அவருக்கு தேவையான சிகரட்டையும் அவர்களே ஓடிச் சென்று வாங்கி வந்தனர் எனவும், கே.பியின் குழுவில் அங்கம் வகித்த 9 உறுப்பினர்களில் அவரது உறவினர்கள் சிலரும் இருந்ததாகவும் லக்பிம தெரிவித்துள்ளது. அது மேலும் குறிப்பிடுகையில்..

புலம் பெயர் தமிழர்கள் தற்போது இரண்டாகப் பிளவுற்றிருப்பதாக குறிப்பிடுகிறது. அதாவது கே.பியின் அபிமானிகள் என்று ஒரு பிரிவும், ஈழ விடுதலை ஆதரவாளர்கள் என ஒரு பிரிவாக, புலம்பெயர் தமிழர்கள் இரண்டாகப் பிரிவுற்றுள்ளனராம். இதில் பிரித்தானியாவில் உள்ள பலர் கே.பியோடு தொடர்ந்தும் தொலைபேசியில் உரையாடிவருகின்றனர். குறிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசில் அங்கத்துவம் வகிக்கும் சிலரும் இதில் அடங்குவர்.

கே.பியை துருப்புச் சீட்டாக வைத்து இலங்கை அரசு தற்போது ஒரு புதிய அரசியல் யுத்தக் களத்தை திறந்துள்ளதே இப்போது தோன்றியுள்ள நிலையாகும். இதனை புலம்பெயர் தமிழ் சமூகம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பதே பெரும் பாடாக உள்ளது. எங்கு குத்தினால் தமிழர்களுக்கு வலிக்கும் என்று தெரிந்து வைத்துள்ள இலங்கை அரசு, அதனை தற்போது பாவிக்கிறது. புரியவில்லையா? அதுதான் ""போராளிகளின் புனர்வாழ்வு"" ! இதனைப் பயன்படுத்தி துருப்புச் சீட்டாக கே.பியைக் களமிறக்கி இருக்கிறது இலங்கை அரசு. போராளிகளை வெளியே விட அவர்களுக்கு ஏதாவது கற்கை(கல்வி) கொடுக்கப்படவேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்துகிறதாம். அதனால் பெரும் நிதியை புலம்பெயர் நாடுகளில் திரட்டி அதனை இலங்கையில் பாவிக்க சில தமிழ் பிரமுகர்கள் நேரடியாகவே பிரயத்தனம் மேற்கொள்ள இருக்கின்றனர்.

இது இவ்வாறு இருக்க, நாம் ஏற்கனவே எதிர் பார்த்தது போல கே.பிக்கு அரசாங்கம் ஒரு பொது மன்னிப்பை வழங்குவதாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு அவர் அரசுக்கு விடுதலைப் புலிகளின் பெரும் பணத்தை வழங்கினார், மற்றும் கப்பல்களை இலங்கை அரசுக்கு வழங்கினார் என்று செய்திகளை சிங்கள மக்களிடம் திட்டமிட்டு இலங்கை அரசு பரப்பி வருகிறது. எனவே பிற்காலத்தில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டாலும் சிங்கள மக்களிடம் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பாது. அத்தோடு விடுதலைப் புலிகளின் தலைவர் கே.பி என்ற வாசகங்களையே இலங்கை அரசு தொடர்ந்தும் வெளிப்படுத்தி வருகிறது, இந்நிலையில் சர்வதேச சமூகத்திற்கு விடுதலைப் புலிகள் தம்மோடு இணைந்தே செயல்பட்டு வருவதாக இலங்கை அரசு தன்னை இனம் காட்டும் அபாயமும் உள்ளது.

அத்தோடு கே.பியின் வரவால், கருணா, ஆனந்த சங்கரி, சித்தார்த்தன், டக்ளஸ், மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் ஒட்டுக் குழுக்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. இதனால் இவர்கள் ஒரு பொது உடன்பாட்டிற்குள் வர சமீபத்தில் ஒன்றுகூடியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கே.பி குழுவோடு சென்றிருந்த 9 பேரும், அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சர் ஒருவரை சந்திக்க ஏற்பாடாகி இருந்ததாம், அந்தவேளை அங்கு வந்த அந்த குறிப்பிட்ட அமைச்சரை, தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக் கூற முற்பட்டவேளை, அவர் அதனைத் தவிர்த்து கையால் வணக்கம் மட்டும் சொன்னாராம், அத்தோடு இங்கு அரசியல் பேச வேண்டாம், நீங்கள் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை, அதனால் புனர்வாழ்வு பற்றி மட்டும் பேசினால் போதும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டாராம்.

சரணடைந்த பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொன்றுள்ள இலங்கை அரசின் இராணுவம் போர்குற்றங்களையும், இனப்படுகொலைகளையும் புரிந்துள்ளது என்பதை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. எனவே புனர்வாழ்வு மற்றும் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களுக்கு இடையே ஊடுருவி போர்குற்ற முன்னெடுப்புக்களைத் தடைசெய்யக்கூடும் அல்லது முன்னெடுக்கப்படும் விடயங்களை அறிந்து அவற்றை செயலிழக்கச் செய்ய முடியும். எனவே அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவோர் இது குறித்து மிகுந்த கவனம் கொள்வது நல்லது.

இலங்கை அரசின் நோக்கம் அதன் செயல்பாடுகள் குறித்து அறிந்து, தெளிவுபெறுதல், நல்லது. ஒரு சிலரின் சுயலாபம், மற்றும் அரசியல் நலனுக்காக எமது இனத்தின் மானத்தை அடகு வைக்கவேண்டாம். சூழ் நிலைக் கைதியாக இருக்கும் கே.பி குறித்தும் மிக அவதானமாகச் செயல்படுவதே நல்லது.



இன்னும் சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ள கே.பி விரைவில்

இந்த மாதிரியான தோற்றத்தையே தமிழ் மக்களிடம் பெறப்போகிறார்.


source:athirvu




--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தொழுகை நடத்தும்முதல் முஸ்லிம் பெண்

 
 
லண்டன்:கனடா நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், தொழுகையை வழிநடத்திய முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை, விரைவில் அடைய இருக்கிறார்.இஸ்லாமிய மதத்தில், ஆண்கள் மட்டுமே தொழுகையை வழிநடத்துவர். இவர்கள் இமாம் என்றழைக்கப்படுவர். சமீபகாலங்களில், பெண்களையும் இமாம்களாக ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதற்கு ஆதரவும் பெருகி வருகிறது.கடந்த 2008ல், அமெரிக்காவில் பிறந்து முஸ்லிமாக மதம் மாறிய அமினா வதூத் என்ற பெண், முதல் முதலாக, தொழுகையை வழிநடத்திக் காட்டினார்.

 
 

 
இப்போது கனடாவின் டொரன்டோ நகரைச் சேர்ந்த ரஹீல் ராசா என்ற பெண், லண்டனில் விரைவில் தொழுகையை வழிநடத்த உள்ளார்.  லண்டனின் ஆக்ஸ்போர்டு நகரைச் சேர்ந்த தாஜ் ஹார்கே என்ற இமாம், இஸ்லாமிய மதத்தை முற்போக்குச் சிந்தனை வழிப் பரப்பி வருபவர். இவர், தான் நடத்தி வரும் தொழுகைகளில் பெண்களை இமாம்களாக நியமித்து வருகிறார்.ரஹீல் ரஜா, பெண்கள் இமாம்களாக ஆக்கப்பட வேண்டும் என்பதற்காகப் பல போராட்டங்கள் நடத்தி வருபவர். ஐந்து ஆண்டுகளுக்கு முன் டொரன்டோவில் நடந்த தொழுகை ஒன்றில் இவர் இமாமாக இருந்து வழிநடத்தினார்.

 
 

 
அதை எதிர்த்து இவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன."நான் இமாம்களின் வேலையைப் பறிக்கவில்லை.  முஸ்லிம் சமுதாயத்தில் 50 சதவீதம் பெண்கள் இருக்கின்றனர் என்பதை நினைவூட்டுவதுதான் என் வேலை' என்கிறார் ரஜா. தாஜ் ஹார்கே, ஆக்ஸ்போர்டில் நடத்தவிருக்கும் தொழுகை ஒன்றில் இமாமாகப் பணியாற்றும்படி, ரஜாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் ரஜா பங்கு கொண்டால், அந்தத் தொழுகைதான், உலகில் முஸ்லிம் பெண் ஒருவர், முதன் முதலாக இமாமாகப் பணியாற்றும் தொழுகையாக இருக்கும்.

 
source:tamilcnn

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இணையத்தை கட்டுப்படுத்துவது யார்?

அமெரிக்க இணையத்தை கட்டுப்படுத்துவது யார் என்ற விவாதம்" அமெரிக்க இணையத்தை கட்டுப்படுத்துவது யார் என்ற விவாதம்

அமெரிக்காவில் இணைய பாவனையின் விநியோகத்தை கட்டுப்படுத்துவது யார் என்பது குறித்து தேசிய மட்டத்திலான விவாதம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

வாடிக்கையாளர்கள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இணையத் தொடர்பை வழங்கும் வணிக நிறுவனங்கள் நிர்ணயிப்பதை தடுக்கும் நோக்கில், இணைய பாவனைக்கான அதிவேக தொடர்புகளை வழங்கும் நிறுவனங்களை ஒருங்குபடுத்த அமெரிக்க அரசு விரும்புகிறது.

இன்னும் 10 வருடங்களில் அனைத்து அமெரிக்கர்களுக்கும் அதிவேக இணைய இணைப்புக்களை வழங்கும் திட்டம் ஒன்றை அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் கொண்டிருக்கிறது.

அத்துடன், அனைத்து இணைய தளங்களையும் சமமாக அணுகும் வாய்ப்பு அனைவருக்கும் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும், யார் எதனைப் பார்ப்பது என்பதை கேபிள் இணைப்புக்களை வங்கும் நிறுவனங்கள் அல்லது வயர்லெஸ் நிறுவனங்கள் நிர்ணயிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அது விரும்புகிறது.

இணையங்கள் வகைப்படுத்தப்படும் முறையில் மாற்றத்தைக் கொண்டுவராவிட்டால், ''என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது'' என்பதை இணைய விநியோக நிறுவனங்களுக்கு உத்தரவிடுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் கிடையாதுபோகும்.

டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளின் உரிமைகளுக்கான நிறுவனமான 'பப்ளிக் நொலேட்ஜ்'' ,அரசாங்கம் இணையத்தை தனது கட்டுப்பாட்டிலே எடுப்பதற்கு ஆதரவு வழங்குகிறது.

இணையத்தை அணுகுவதற்கான அனுமதி குறித்த முடிவுகள் வணிக நிறுவனங்களிடம் போய்விடக்கூடாது என்கிறார் ''பப்ளிக்நொலேட்ஜ்'' நிறுவனதத்தின் சட்ட இயக்குனரான ஹரோல்ட் ஃபெல்ட்.

ஆனால், சி ரி ஐ ஏ எனப்படுகின்ற அமெரிக்க வயர்லெஸ் அசோசியேசனைச் சேர்ந்த ஸ்டீவ் லார்ஜண்ட் அவர்கள், அரசாங்க தலையீடு ''முதலீட்டையும், துறைசார் புதிய கண்டுபிடிப்புக்களையும்'' பாதிக்கும் என்று கூறுகிறார்.

அரசாங்கத்தின் ஒழுங்குபடுத்தும் திட்டம் குறித்த மறு ஆய்வு சட்டச் சவால்களால் சிக்கலுக்குள்ளாகும் போல் தெரிகிறது.

நீதிமன்றமும், அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றமுந்தான் அமெரிக்க இணைய விநியோகத் துறையை யார் கட்டுப்படுத்துவது என்பதை முடிவு சேய்ய வேண்டிவரும்.


source:BBC

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பில்கேட்ஸ் சரியான வால்ப் பையன்!


 பில்கேட்ஸ் சரியான வால்ப் பையன்! சொல்கிறார் அவரது அப்பா 
 
"இளம் வயதில், பில்கேட்ஸ் சரியான "வால் பையனாக' இருந்தான்' என அவரது தந்தை கூறியுள்ளார்."மைக்ரோ சாப்ட்' மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ், பல்வேறு சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

 

அவரும், அவரது மனைவி மெலிண்டாவும் இணைந்து, "பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்' என்ற அறக்கட்டளை மூலம், கல்வி மற்றும் மருத்துவ சேவைகளுக்கு பெருமளவில் உதவி வருகின்றனர்.

 

கடந்த 1996ம் ஆண்டு தங்களது அறக்கட்டளை மூலம், 1,800 கோடி ரூபாய் நிதி உதவி அளித்துள்ளனர். கடந்த ஆண்டும் ஏழை குழந்தைகளின் கல்விக்காக பெரும் தொகையை வழங்கியுள்ளனர்.

 

இந்நிலையில், நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய பில்கேட்சின் தந்தை,

 

தற்போது பொறுப்புள்ள பிள்ளையாக இருக்கும் பில்கேட்ஸ், இளம் வயதில், மிகவும் சுட்டித்தனமுள்ள "வால் பையனாக' இருந்தான் என்று தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:எங்களுடையது அளவான அழகான குடும்பம். மற்றவர்களுக்கு நாங்கள் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தோம். ஆனாலும், எங்களுக்குள் அவ்வப்போது சிறுசிறு சண்டைகள், ஊடல்கள் எழும்.

 

அவற்றை பேசி சரி செய்து கொள்வோம்.  பில்கேட்ஸ் இளம் வயதில் மிகவும் சுட்டித்தனமாகவும், வால் பையனாகவும் இருந்தான். அவனது அம்மாவுடன் அடிக்கடி சண்டை போடுவான். கண்மூடித்தனமாக கோபம் வரும்.

 

இதை கட்டுப்படுத்துவதற்காக, அவனை மனநல மருத்துவரிடம் காண்பித்து ஆலோசனை பெற்றிருக்கிறோம்.

 

அப்போது,"உங்களுக்கும், உங்கள் மகனுக்கும் இடையே ஏற்படும் பிரச்னைகளுக்கான காரணத்தை புரிந்து கொண்டு, நீங்கள் விட்டுக் கொடுத்து போனால், அவன் வாழ்க்கையில் பெரிய வெற்றிகளை குவிப்பான்' என்று டாக்டர் கூறினார்.

 

அவரின் நம்பிக்கை இப்போது உண்மையாகி இருக்கிறது.இவ்வாறு கேட்ஸ் சீனியர் கூறினார்.

 

இது தொடர்பாக பில்கேட்ஸ் கூறியதாவது:சிறு வயதில் நான் அவ்வாறு இருந்தது உண்மைதான். எனது தந்தை மிகவும் அமைதியானவர்.

 

தாயார் முன்கோபக்காரர். இதனால் எனக்கும், அம்மாவுக்கும் தான் அடிக்கடி சண்டை நடக்கும்.

 

ஆனால், இறுதியில் நான் தான் வெற்றி பெறுவேன்.இவ்வாறு பில்கேட்ஸ் கூறினார்

source:tamilcnn

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அன்னைத் தமிழை வளர்த்த வெளிநாட்டவர்

>> Sunday, June 27, 2010

 

தமிழ் வளர்த்த வெளிநாட்டவர் - டாக்டர் பெ.சந்திர போஸ்

கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்த்த அன்னியர்கள் என்ற தலைப்பில் வாசிக்கப்பட்ட கட்டுரை மிக்க தகவல் தருவதாகவும் நாம் அறியா சிலரைக் கண்டு கொள்ளவும் உதவுகிறது. கிறிஸ்துவை அறிமுகப்படுத்த இந்தியா வந்த ஊழியர்கள் நம் பெருமைமிகு மொழியின் சிறப்பை நமக்கு மட்டுமல்லாது அவர்கள் தேசத்திலும் பரப்பினர் என்பதற்கு இவை ஒரு சான்று. நாமும் இவர்களை தெரிந்து கொள்வோம்.

 

செம்மொழியாம் தமிழ் மொழியின் இனிமை, செழுமை, வளம் கண்டு, அதன் பால் ஈர்க்கப்பட்டு, தமிழைப் பேசவும் எழுதவும் கற்றுக் கொண்டவர் பலர். அதோடு நிற்காமல் தமிழ் இலக்கியத்தையும், இலக்கணத்தையும் கற்று தமிழ் புகழ் பாடியவர் பலர். இன்னும் சிலரோ, தமிழ் இலக்கியத்திற்கும் இலக்கணத்திற்கும் சிறந்த முறையில் தங்கள் பங்கீட்டினை அளித்துள்ளனர்.

தமிழுக்கு மகுடம் சூட்டும் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறும் இத்தருணத்தில் அவர்களையும், அவர்கள் ஆற்றிய தமிழ்த் தொண்டினையும் நினைவு கூர்தல் நாம் அவர்களுக்குக் காட்டும் நன்றியாகும். இங்கு ஆங்கில அகர வரிசைப்படி அவர்களைப் பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன. இங்கு தரப்பட்டுள்ள பட்டியலில் விடுபட்டவர்களும் இருக்கலாம்.


1.        ஆல்பர்ட் ஹென்றி ஆர்டன் (1841–1897): தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கான இலக்கணம் குறித்து நூல்களை வெளியிட்டவர். அவருடைய நூல்கள்

A progressive grammar of the Tamil language revised by A.C. Clayton. 5th ed. Madras : Christian Literature Society, 1942; reprinted 1976

Arden, A.H.: A progressive grammar of the Telugu language. [4th ed. Madras] Christian Literature Society [c1937, 1975 printing].

Arden, Albert Henry: A companion reader to Arden's progressive tamil grammar: Madras : Society for promoting Christian knowledge, 1914

 

2.        பெஷ்சி(1680–1747):  வீரமா முனிவர் எனத் தமிழ் மக்களால் போற்றப்படும் தமிழ் அறிஞர். ஒரு ஜெசூயிட் பாதிரியாராக இந்தியா வந்தவர் தமிழின் பால் தீராத காதல் கொண்டவராக மாறினார். தன் வாழ் நாள் முழுவதும் தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்கு தொண்டு ஆற்றுவதில் காலத்தைக் கழித்தவர். பல தமிழ் இலக்கிய நூல்களை எழுதி உள்ளார். கொடுந்தமிழ் இலக்கணம், பரமார்த்த குருவின் கதை, தமிழ்–இலத்தீன் அகராதி, செந்தமிழ் இலக்கணம் (இலத்தீனில் எழுதப்பட்டது), வாமன் சரித்திரம் (பாடநூல்), தொன்னூல் விளக்கம், சதுரகராதி என்னும் சொற்களஞ்சியம், வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம் ஆகிய நூல்கள் தமிழுக்கும் இவருக்கும் சிறப்பு சேர்த்தன.  கீழே அவரின் நூல்கள் பிரசுரித்தவர்களின் முகவரியுடன் தரப்படுகின்றன.

 

Beschi, C.G: A grammar of the high dialect of the Tamil language called centamil, translated from the original latin by Benjamin Guy Babington. Thanjavur : Tanjore Maharaja Serfoji's Sarasvati Mahal Library, 1974.

Beschi, C.G.: The adventures of Gooroo Paramartan: a tale in the Tamul language: accompanied by a translation and vocabulary, together with an analysis of the first story. By Benjamin Babington. London, J.M. Richardson, 1822; Reprint Cleveland : The Clerk's Press, 1916

Beschi, C.G.: Tirukkavalurk kalampakam : mulamum uraiyum, uraiyaciriyar Rampola Maskaranes. Tiruccirappalli : Tamizh Ilakkiyak Kazhakam, 1977.

Beschi, C.G.: Tirukkural, Viramamunivar urai, potuppatippaciriyar Cu. Innaci ; patippaciriyar Es. Cauntarapantiyan., Cen_nai : Cennaip Palkalaik Kazhakam, 1985.

Beschi, C G.: Tiruppatalkal. 1972.

Beschi, C.G.: thEn cottum thEmpavanic colai, 1962.

Beschi, C G.: Virama Munivar aruliya Tempavani, 1st ed., 1965.

Beschi, C G.: Viramamunivar aruliya caturakarati : ayvup patippu , patippaciriyar Cu Innaci.: Palaiyankottai : Viramamu_nivar Ayvuk Ka_lakam, 1979, 1st ed.< br>

Beschi, C G: Viramamunivar iyarriya Citteriyammal ammanai, Kurippurai Iraikkuruvanar ; anitturai Rampola Maskarenacu., Cennai : Tirunelveli Thenninthiya Caiva Ciththanta Nurpatippuk Kazhakam, 1977.

Beschi, C G: Viramamunivar iyarriya Kitteriyammal ammanai. Madras, 1977.

 

3.        ராபர்ட் கால்டுவெல் (1814–1891): திராவிட மொழிகளின் இலக்கணம் குறித்து ஆய்வு செய்தவர். இவரின் நூல்கள் பிற்காலத்தில் திராவிட மொழிகள் குறித்து ஆய்வு செய்தவர்களுக்கு ஒரு முதல் நூலாக இருந்தது. பெரும்பாலும் திருநெல்வேலி மாவட்டத்தை மையமாகக் கொண்டு தன் மதப் பணியையும், தமிழ்த் தொண்டையும் மேற்கொண்டவர்.

Caldwell, R,: A comparative grammar of the Dravidian, or, South-Indian family of languages, London : Harrison, 1856.; Reprinted London, K. Paul, Trench, Trubner & co., ltd., 1913.

Caldwell, R: A comparative grammar of the Dravidian or South-Indian family of languages, 3d ed. rev. and edited by J.L. Wyatt and T. Ramakrishna Pillai. Madras, University of Madras, 1961.

 

4.        ஆலன் டேனியலு (1907–1994): இவர் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். தன் வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழ்நாட்டில் கழித்தவர். தொன்மவியல் மற்றும் இசையில் வல்லுநர். வேதம், இந்து தத்துவம் மற்றும் சைவ சித்தாந்தம் கற்றுணர்ந்து ஆய்வு மேற்கொண்டவர். காசியில் ஹிந்து பல்கலையில் பேராசிரியராகப் பணி ஆற்றியவர். தமிழ் இலக்கியங்கள் மீது தீராத பற்றுக் கொண்டவர். சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இவரின் சிறப்பு பெற்ற நூல்கள்:

Danielou, A.: Shilappadikâram, The Ankle Bracelet, of Ilanko Adikal, Translation from the Tamil with the collaboration of R.S. Desikan New Directions, New York, 1965; Penguin Classics, India, 1993

Danielou, A.: Manimekhalai, The Dancer with the Magic Bowl, Translated from the Tamil with the collaboration of T.V. Gopala Iyer, New directions New York, 1989

Danielou, A.: The Way to the Labyrinth, Memories from east and west, New York: New Directions, 1987

Danielou, A.: Virtue, Success, Pleasure and Liberation, Traditional India's social structures, Rochester, NY: Inner Traditions International, 1993

Danielou, A.: The Myths and Gods of India: Rochester, NY: Inner Traditions International, 1991

Danielou, A.: While the Gods play, : Rochester, NY: Inner Traditions International, 1987

Danielou, A.: Fools of God, Translation of one of the Tales from the Ganges, Hanuman Books, Madras and New York 1988

 

5.ஜோகன் பிலிப் பேப்ரிசியஸ் (1711–1791):  சத்தியவேத புத்தகம் என பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் இந்த அறிஞர். தமிழ் – ஆங்கில அகராதியினைத் தயாரித்து வெளியிட்டார். இவரின் குறிப்பிடத்தக்க நூல்கள்

 

Fabricius, J P.: A dictionary, Tamil and English, based on Johann Philip Fabricius's "Malabar-English dictionary". 3d ed., rev. and enl. Tranquebar, Evangelical Lutheran Mission Publishing House, 1910,1933.

J. P. Fabricius's Tamil and English dictionary. Based on Johann Philip Fabricius's Malabar-English dictionary. 4th ed., rev. and enl. Tranquebar, Evangelical Lutheran Mission Pub. House, 1972.

 

6.  ஹென்ரிக் ஹென்ரிக்ஸ் (1520–1600):இவர் ஒரு போர்த்துகீசிய மத போதகர். தமிழில் நூல்களை அச்சடிக்க என தொடக்க காலத்தில் அச்சுக் கூடத்தினை நிறுவி தமிழில் நூல்களை அச்சிட்டவர். 1578 ஆம் ஆண்டிலேயே தம்பிரான் வணக்கம் என்ற நூலினை அச்சில் வெளியிட்டவர். கிரிசித்தியாணி வணக்கம் என்ற நூலினையும் கொண்டு வந்தவர்.

7. ஹூப்பர்: ஆழ்வார் பாடல்களை  அச்சில் வெளியிட்டவர்.  நூல் குறித்த தகவல்கள்

 

Hymns of the Alvars by J. S. M. Hooper ... Calcutta, Association Press; London, New York [etc.] Oxford University Press, 1929.

 

8. ஜென்சன் ஹெர்மன் (1842–): தமிழ்ப் பழமொழிகளால் ஈர்க்கப்பட்டு, அவை குறித்து நூல்களை வெளியிட்டவர். ஐரோப்பாவில் உள்ளவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள நூல்களை உருவாக்கியவர்.

Jensen, H., Rev.: A classified collection of Tamil proverbs , Madras : Methodist Episcopal Publ. House ; London : Trubner, 1897.; Reprinted New Delhi : Asian Educational Services, 1982

Jensen, H: A dictionary of Tamil proverbs, Delhi, India : Mittal Publications, 1988.

Jensen, H: A practical Tamil reading book for European beginners, Madras : Memorial Press, 1882.

 

9.எம்.ஏ. லேப்: பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த  மொழி அறிஞர். தமிழ் மொழி சொற்கள் குறித்து பிரெஞ்ச் மொழியில் நூல்களை எழுதியவர். இவரின் குறிப்பிடத்தக்க நூல்

 

Lap, M.A.: Vocabulaire tamoul francais : contenant les mots tamouls d'un usage plus frequent, avec leurs sens francais les plus usites, New Delhi : Asian Educational Services, 1984.

 

10. ஜான் லேசரஸ்: தமிழ் இலக்கணம் குறித்தும், பழமொழிகள் குறித்தும் நூல்களை எழுதியவர்.

Lazarus, J.: Tamil grammar : designed for use in colleges and schools , Madras : Printed by Addison, 1878.

Lazarus, John, Rev.: A dictionary of Tamil proverbs : with an introduction and hints in English on their meaning and application , New Delhi : Asian Educational Services, 1991

 

11. ஜான் முர்டாக் (1819–1904): தமிழில் வெளியான நூல்கள் குறித்து அடவுத் தொகுப்பு ஒன்றைக் கொண்டுவந்தவர். அதில் ஒவ்வொரு நூல் குறித்தும் சிறிய குறிப்புரையும் தந்துள்ளார். இவரின் நூல் பிற்காலத்தில் தமிழக அரசின் முயற்சியால், கூடுதல் குறிப்புகளுடன் வெளியிடப்பட்டது.  மத போதனையில் ஈடுபட்டதுடன், தமிழகத்தில் நிலவிய ஜாதிக் கட்டமைப்பு குறித்தும் இவர் ஆய்வு நடத்தி நூல்களை வெளியிட்டார். மஹாபாரதத்தைச் சுருக்கமாக ஆங்கிலத்தில் எழுதி நூலாகக் கொண்டு வந்தார்.

 

Murdoch, J.: Classified catalogue of Tamil printed books. With introductory notices., Compiled by John Murdoch., Edited by M. Shanmukham, Reprinted with a number of appendices & supplement. [Madras] Tamil Development and Research Council, Govt. of Tamilnad [1968].

Murdoch, J: Indian missionary manual : hints to young missionaries in India, 4th ed., rev. and enl. London : J. Nisbet, 1895.

Murdoch, J.: Caste : its supposed origin: its history; its effects : the duty of government, Hindus, and Christians with respect to it; and its prospects. 3d ed. London ; Madras : Christian literature society for India, 1896.

Murdoch, J: The Mahabharata : an English abridgment with introduction, notes, and review, New Delhi : Asian Educational Services,1987.

Murdoch, J: The religious history of India : for educated Hindus / compiled from Monier-Willimas, Max Muller, Muir...& other writers by John Murdoch. London ; Madras : Christian Literature Society for India, 1900.

Murdoch, J: Review of caste in India : a compilation of the ideas of leading thinkers, viz. Muir, Max Muller, Sherring, Wilson, Monier Williams, and Cornish; with a new introd. by K. L. Sharma. Jaipur : Rawat Publications, 1977.

 

12.இராபர்ட் நோபில் (1577–1656): இத்தாலிய நாட்டைச் சேர்ந்த ஜெஸூயிட் போதகர். இவரை அக தத்துவ போதகர் என அழைப்பார்கள். நானோ பதிகம், ஆத்ம நிருண்யம், அன்ன நிவாரணம் மற்றும் திவ்ய மந்திரிகா என்னும் நூல்களை எழுதி வெளியிட்டவர். கோவில், அருள், பிரசாதம், குரு, வேதம், பூசை ஆகிய சொற்கள் இவரால் பிரபலமடைந்தன.

13. பீட்டர் பெர்சிவல்: தமிழ்ப் பழமொழிகளில் ஆர்வம் கொண்டவர். ஏறத்தாழ 5,000 பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். அவ்வையாரின் நீதி பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர். தமிழ்–ஆங்கில அகராதி ஒன்றையும் தயாரித்து வெளியிட்டார்.

Percival, Peter, Tamil proberbs with their English translation, containing upwards of six thousand proverbs. Madras, Rigginbotham; London, H. S. King, 1877.

Percival, P, Percival's Tamil-English dictionary = Tamil-Ankila akarati, AES reprint. New Delhi : Asian Educational Services, 1993.

 

14.ஜி.யு.போப் (1820–1908): தமிழக மக்கள் நன்கறிந்த வெளிநாட்டு தமிழ் அறிஞர். தன் வாழ்நாள் முழுமையும் தமிழுக்கு அர்ப்பணம் செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டவர். தமிழ்க் கவிதைக் களஞ்சியம் என ஒன்றைத் தொகுத்து, தமிழ்க் கவிதைகளை அவற்றிற்கான குறிப்புகளுடன் வெளியிட்டார்.

 

Pope, G. U.: A compendious Tamil English dictionary, 7th ed. New Delhi : J. Jetley for Asian Educational Services, 1981.

Pope, G. U.: A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883; 7th ed. Oxford, Clarendon press, 1911, 1926 printing.

Pope, G. U.: A handbook of the Tamil language / G. U. Pope. 7th ed. New Delhi : Asian Educational Services, 1979, 1981

Pope, G. U.: A handbook of the Tamil language : a Tamil prose reader. New Delhi : Marwah, 1982.

Pope, G. U. : A handbook of the Tamil languages : a compendius Tamil-English dictionary, 7th ed. New Delhi : Asian Educational Services, 1981.

Pope, G. U.: A Tamil prose reader : a handbook of the Tamil language, New Delhi : Marwah Publications, 1982.

Pope, G. U.: Tamil heroic poems, translations, 1st ed. Madras : South India Saiva Siddhanta Works Pub. Society, Tinnevelly, 1973.

Pope, G. U.: Tiru-valluvar -The 'Sacred' Kurral of Tiruvalluva-Nayanar / With introduction, grammar, translation, notes (in which are reprinted C.J. Beschi's and F.W. Ellis' versions) lexicon and concordance by the Rev. G.U. Pope. London : W. H. Allen & co., 1886.

Pope, G.U.: The Tiruvacagam, or, Sacred utterances of the Tamil poet, saint, and sage Manikka-Vacagar : the Tamil text of the fifty-one poems, with English translation, introductions, and notes : to which is prefixed a summary... Oxford : Clarendon Press, 1900.

Pope, G.U.: The Naladiyar, or, Four hundred quatrains in Tamil / with introduction, translation, and notes, critical, philological, and explanatory, to which is added a concordance and lexicon [by] Rev. G.U. Pope. New Delhi : Asian Educational Services, 1984.

Pope, G.U.: Manikkavacakar aruliya Tiruvacakam. 1970. Series title: Madras University Tamil Department publication series ; 27.

A catalogue of the Tamil books in the library of the British museum, compiled by L. D. Barnett, and the late G. U. Pope, D.D. Printed by order of the Trustees of the British museum. London, British museum [etc.] 1909.

Pope, G. U. : A hand-book of the ordinary dialect of the Tamil language : In three parts, London : W.H. Allen & Co., 1883.; Reprint 7th ed. Oxford, Clarendon Press, 1906, 1911, 1926

Pope, G. U: Longman's school history of India, by the Rev. G.U. Pope ... London, New York, Longmans, Green, and co., 1892.

Pope, G. U. : Pope's third Tamil grammar ... 2nd ed. Madras : P.R. Hunt, 1858-1859.

Pope, G. U.: A Tamil hand-book : or, full introduction to the common dialect of that language, on the plan of Ollendorf and Arnold : for the use of foreigners learning Tamil, and of Tamulians learning English : with... 2nd ed Madras : P.R. Hunt, 1859.

 

15.ரேணியஸ் சி.ட்டி.இ.(1790–1838):  தமிழ் இலக்கணம் பால் ஆர்வம் கொண்டு, கற்றறிந்து நூல்களை வெளியிட்டார்.

 

Rhenius, C T E. Rev.: A grammar of the Tamil language, with an appendix., 3d ed. Madras, Printed for the proprietor, by P.R. Hunt, American mission press, 1853.

16. ஹில்கோ  வியார்டோ ஸ்கோமெரஸ் (1879– ): தமிழ் மதங்கள் குறிப்பாக சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டு நூல்களை எழுதியவர்.

 

Schomerus, H W.: Der Caiva-Siddhanta / H. W. Schomerus. New York : Garland Pub., 1980.; Series title: Oriental religions 9.

Schomerus, H W.: Arunantis Sivajnasiddhiyar : die Erlangung des Wissens um Siva oder um die Erlosung / unter Beifugung einer Einleitung und Meykantadevas Sivajnanabodha aus dem Tamil ubersetzt und kommentiert, Wiesbaden :Steiner, 1981.

Schomerus, H.W.: Indische erlosungslehren; ihre bedeutung fur das verstandnis des christentums und fur die missionspredigt, von lic. theol. , Leipzig, J.C. Hinrichs'sche buchhandlung, 1919.; Series title: Sachsische forschungs-institute in Leipzig.

Schomerus, H W.: Sivaitische Heiligenlegenden : (Periyapurana und Tiruvatavurar-purana) , aus dem Tamil ubersetzt,Jena : E. Diederichs, 1925.; Series title: His Texte zur Gottesmystik des Hinduismus ; Bd. 2.

 

17. ஜூலியன் வின்சன் (1843–1926): தமிழ்  இலக்கணத்தினை பிரெஞ்ச் மொழியில் எழுதியவர். சீவகசிந்தாமணி மற்றும் திருக்குறளின் ஒரு பகுதியை மொழி பெயர்த்து வெளியிட்டவர்.

Vinson, Julien: Manuel de la langue tamoule (grammaire, textes, vocabulaire): Paris Imprimerie nationale, E. Leroux, editeur, 1903; Reprinted New Delhi : Asian Educational Services, 1986.

Vinson, Julien : Le verbe dans les langues dravidiennes : tamoul, canara, telinga, malayala, tulu, etc., Paris : Maisonneuve et cie, 1878.

Vinson, Julien: Les religions actuelles, leurs doctrines, leur evolution, leur histoire,: Paris, A. Delahaye et E. Lecrosnier, 1888.

 

 

18. விண்ஸ்லோ, மிரன் (1789–1864): இவரின்  தமிழ் – ஆங்கிலம்  அகராதி இன்றும் சிறப்புப் பெற்றதாக விளங்குகிறது.  முதன் முதலில் 67,000 சொற்களுடன்  வெளியானது  இந்த அகராதி. 1862 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

 

Winslow, Miron, Rev. (assisted by competent native scholars: in part from manuscript materials of the late Rev. Joseph Knight, and others.) :A comprehensive Tamil and English dictionary of high and low Tamil, Madras : P.R. Hunt, American Mission Press, 1862.

Winslow, Miron,: Tamil-English dictionary, Reprint of 1862 edition/ ed. by Klaus Ludwig Janert. Wiesbaden : Steiner, 1977.

Winslow's English and Tamil dictionary = [Vinculovin Ankila-Tamil akarati by Rev. Winslow, L. Spaulding, revised, enlarged & romanized by C. Appaswamy Pillai, 3rd ed. New Delhi : Asian Educational Services, 1989.

Winslow, Miron,: A sketch of missions, or, History of the principal attempts to propagate Christianity among the heathen / by Miron Winslow. Andover, Mass. : Flagg and Gould, 1819

19. பார்த்தலோமியோ சீகன் பால் (1683–1719): ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மத போதகர். 40,000 சொற்களுடன் மலபார் அகராதி என்ற ஒன்றை வெளியிட்டார். 17,000 சொற்களுடன் கவிதைச் சொற்கள் அடங்கிய நூல் ஒன்றையும் கொண்டு வந்தார்.

Ziegenbalg, B: Genealogy of the South-Indian gods : a manual of the mythology and religion of the people of southern India, including a description of popular Hinduism, published in Madras : Higginbotham, 1869; Reprinted with notes and additions..,New Delhi : Unity Book Service, 1984.

Ziegenbalg, B: Grammatica damulica von Bartholomaeus Ziegenbalg, herausgegeben von Burchard Brentjes und Karl Gallus. Halle : Martin-Luther-Universitat Halle-Wittenberg, c1985.

Ziegenbalg, Bartholomaeus: Alte Briefe aus Indien : unveroffentlichte Briefe; hrsg. von Arno Lehmann. Berlin : Evangelische Verlagsanstalt, [1957].


source:www.tamilchristians.com


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

வெள்ளைக்கொடியுடன் சென்று சரணடையுங்கள் என்றேன் - எரிக் சொல்ஹெய்ம்

 

இலங்கையில் நடைபெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் மே மாதம் 17ஆம் திகதி விடுதலைப் புலிகளின் நடேசன், புலித்தேவன் போன்ற தலைவர்கள், தாம் சரணடைய ஏற்பாடு செய்துதரும்படி என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான் "உங்களுடைய முடிவு, காலம் பிந்தியது. இருந்தாலும் நீங்கள் வெள்ளைக் கொடியுடன் சென்று படையினரிடம் சரண் அடையுங்கள்'' என்று கூறினேன். அதற்கு முன்னதாக புலிகள் சரணடைவது குறித்து இலங்கை அரசுக்கும் தெரியப்படுத்தி இருந்தேன். அவர்கள் சரண் அடைவதற்கான ஒழுங்குகள் குறித்து இலங்கை அரசுக்கு ஏற்கனவே தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதனை என்னால் உறுதியாகக் கூறமுடியும். இவ்வாறு தெரிவித்தார் நோர்வேயின் அபிவிருத்தி அமைச்சரும், விடுதலைப் புலிகள் இலங்கை அரசு சமாதானப் பேச்சுக்கான அனுசரணையாளருமான எரிக்சொல்ஹெய்ம். இலங்கையிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களிடம் அவர் இத்தகவலை நேற்று வெளியிட்டார். 

மேலும், "இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவும் புலிகளின் தலைவர் பிரபாகரனும் கேட்டுக்கொண்டமைக்கு இணங்க இலங்கை விவகாரத்தில் மத்தியஸ்தம் வகிப்பதற்கு நாங்கள் முன்வந்திருந்தோம். கடைசிவரை யுத்தத்தைத் தவிர்த்து இரு தரப்புகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்த நாங்கள் முயற்சி எடுத்தோம். ஆனால் இரு தரப்பினரும் பல தடவைகள் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இறுதியில் போர் ஏற்பட்டுவிட்டது.'' என்றும் சொல்லி வருத்தப்பட்டார் சொல்ஹெய்ம்.

போர் தொடர்பில், 2009 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் கே.பி என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் பல தடவைகள் என்னுடன் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டார். நாங்களும் அதற்காகப் பல வழிகளில் முயன்றுகொண்டிருந்தோம். மேலும் சரணடைவது தொடர்பில், எங்களுடன் மாத்திரமல்ல, செஞ்சிலுவைச் சர்வதேசக்குழு, ஐ.நா. போன்ற பல தரப்புகளுடனும் அவர்கள் தொடர்புகொண்டு பேசிய பிறகே சரணடைந்தார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் சரணடைவதற்கான ஒழுங்குகள் பற்றி ஏற்கனவே இலங்கை அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். ஆனால் அரசு சார்பான எவருடன் பேசினேன் என்பதை நான் கூற விரும்பவில்லை. ஆனால் புலித்தலைவர்கள் தொடர்பு கொண்டு சில மணித்தியாலங்களின் பின்னர் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று நான் அறிந்துகொண்டேன் என்று தெரிவித்துள்ளார் சொல்ஹெய்ம்.

யுத்தத்தின் இறுதிப்பகுதியில் பல போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணை ஒன்று தேவை. அதைத்தான் ஐ. நா. செயலரும் வலியுறுத்துகிறார். எமது நிலைப்பாடும் அதுதான். சர்வதேச சுயாதீன விசாரணைகள் மூலம் மேலும் பல உண்மைகள் வெளிவரலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



source:athirvu

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஸ்கூட்டரில் உள்ளது போல் சைக்கிளில் சைடு கேரியர் செய்வது எப்படி-Bicycle with Sidecar

>> Saturday, June 26, 2010

 

This is not a movie "about the Germans and not the old Soviet great - this vehicle is built not on an industrial scale and in the backyard or in the garage. This cool bike with a sidecar collected Briton Steve Bodiley his own hands. More images after the break...





source:ritemail-amazing

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

Tamil online movies:எல்லாளன் முழுநீளத் திரைப்படம்

>> Friday, June 25, 2010


தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் முழுநீளத் திரைப்படம்

ஈழப் போராளிகள் 2007 ஆம் ஆண்டு நடத்திய எல்லாளன் நடவடிக்கையில் அனுராதபுரம் வான்தளம் தகர்க்கப்பட்டது. ராணுவத்தின் 27 வான்கலன்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. உலகப் போராளிகள் ச‌ரித்திரத்தில் இதுவொரு தீரமிக்க நடவடிக்கையாக அமைந்தது. 21 கரும்புலிகள் தங்களது உயிரை ஈந்து எல்லாளன் நடவடிக்கையை வெற்றிபெற வைத்தனர். தமிழீழத்துக்கான ஈழப் போராளிகளின் போராட்ட வரலாற்றில் தீரத்தின், தியாகத்தின் அணையாப் பிரகாசம், எல்லாளன் நடவடிக்கை.

இந்த நடவடிக்கையை போர் மிகுந்த சூழலில் திரைப்படமாக எடுத்துள்ளனர் போராளிகள். கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் புலம்பெயர் மற்றும் தாய் தமிழர்களின் உள்ளங்களில் விடுதலைக்கான கனவை புதிய எழுச்சியுடன் மீட்டுக் கொண்டிருக்கிறது இத்திரைப்படம்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட எல்லாளன் திரைப்படம்.



StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டரும் தமிழும்

- டாக்டர் பெ.சந்திர போஸ்  சென்னை

இந்த நூற்றாண்டின் பயன்பாட்டிற்கு வந்த கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும், மனித சமுதாயத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றி அமைத்தன என்றால் அது மிகையாகாது. கம்ப்யூட்டருக்குப் பின்னர்,  காலம், மனிதன் நினைத்தபடி ஓடத் தொடங்கியது. உலக உருண்டை அவன் கரங்களுக்குள் இருந்து உருளத் தொடங்கியது. உலகின் எந்த மூலையையும் அவனால் பார்க்க முடிந்தது. எந்த முகவரிக்கும் அடையாளம் காட்ட முடிந்தது.
 இதுவரை மொழி மட்டுமே, சமுதாயத் தொடர்பிற்கு ஒரு வழியாய் இருந்த நிலையில், கம்ப்யூட்டர் வழித் தொடர்பு அனைத்து தடைகளையும் தகர்த்தது. ஒவ்வொரு மனிதனும், தன் மொழி கம்ப்யூட்டரில் வர வேண்டும் என எண்ணி, அதற்கான முயற்சியில் இறங்கினான். உலகம் முழுவதும் பரவி இருந்த தமிழ்ச் சமுதாயம் இந்த முயற்சியில் முழு மூச்சாய் இறங்கியது. பரவிக் கிடந்த தமிழர்கள் ஆங்காங்கே அவரவர் ஆர்வத்தில் தமிழைக் கம்ப்யூட்டரில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கினார்கள். இதனால் பல்வேறு வகைகளில், நிலைகளில்  அவர்களின் முயற்சிகள் இருந்தன. இந்த முயற்சிகள்,  தமிழ்ச் சமுதாயத்தினைப் போலவே, ஒருங்கிணைந்த முயற்சியாய் இல்லாமல், தெருவீதிக் கோவில்கள் போல, பலவகை வெளிப்பாடுகளாய் வெளிச்சத்திற்கு வந்தன.  
1980 ஆம் ஆண்டுவாக்கில், கம்ப்யூட்டர் பயன்பாடு பெருகத் தொடங்கிய காலத்தில், டாஸ் இயக்கம் செழிப்பான ஒரு நிலையை அடைந்த காலத்தில், கனடாவில் வசித்த தமிழரான சீனிவாசன், டாஸ் இயக்கத்தில் ஆதமி என்ற சிறிய தமிழ் எடிட்டரைக் கொண்டு வந்தார். இலவசமாக அனைவருக்கும் விநியோகித்தார். அப்போதே, வேர்ட் லார்ட் என்ற டாஸ் இயக்க வேர்ட் சாப்ட்வேர் மூலம் பல மேல்நாடுகளில் பிரபலமான, பெங்களூர் சாப்ட்வேர் நிறுவனம், தமிழுக்கு பாரதி என்றொரு தமிழ் சாப்ட்வேர் தொகுப்பினைக் கொண்டு வந்து பிரபலப்படுத்தியது. தினமலர் ஆசிரியர் தன் சொந்த முயற்சியில். புனே மாடுலர் நிறுவனத்தின் துணையுடன் பல எழுத்து வகைகளை உருவாக்கி, பத்திரிக்கையாக்கத்திற்குப் பயன்படுத்தினார். விண்டோஸ் புழக்கத்திற்கு வந்த பின்னர் சீனிவாசன் ஆங்கிலம் + தமிழ்+விண்டோஸ் பெயர் இணைத்து ஆதவிண் என்றொரு  தமிழ் சாப்ட்வேர் தொகுப்பினை உருவாக்கி இலவசமாகத் தந்து உதவினார்.
இதே காலக் கட்டத்தில் மலேசியா மற்றும் சிங்கப்பூரினைச் சேர்ந்த அறிஞர்கள் மற்றும் வல்லுநர்கள் துணைவன், கணியன் மற்றும் முரசு அஞ்சல் ஆகிய தொகுப்புகளைக் கொண்டு வந்தனர். 
ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பாலா பிள்ளை தமிழ் நெட் என்ற வலை அமைப்பினை ஏற்படுத்தி, தமிழர்களிடையே இந்த முயற்சிகளுக்கான ஒரு இணைய தளத்தை உருவாக்கினார். தமிழில் மின்னஞ்சல்கள் உருவாவதில் இவரின் முயற்சி  முதலாவதாகவும் முன்னுதாரணமாயும்  இருந்தது. பின்னர் சிங்கப்பூர் மாகோ உருவாக்கிய  குளோபல் தமிழ்,  மலேசிய ஜேபி  அமைத்த அகத்தியர், சிங்கப்பூர் பழனி  கட்டமைத்த தமிழ் உலகம் ஆகிய மின்னஞ்சல் குழுக்களை, தமிழ் மின்னஞ்சல் குழுக்களின் முன்னோடிகள் எனலாம். இப்போது இணையத்தில் தமிழ் பயன்படுத்தும் குழுக்கள் பல இயங்குகின்றன. எந்த அஞ்சல் குழுவிலும் எந்த மொழியையும் பயன்படுத்தும் நிலை வந்துவிட்டது.

மலேசிய கம்ப்யூட்டர் ஆராய்ச்சியாளர் முத்து நெடுமாறன்  உருவாக்கிய முரசு அஞ்சல் என்னும் தொகுப்பு இலவசமாக, இணையம் வழியாக வழங்கப்பட்டது. இது கம்ப்யூட்டர் மற்றும் இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவதில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.  இதன் எளிமை, திறன், பயன்படுத்த வழங்கப்பட்ட இடைமுகம் அனைத்தும், தமிழ் மக்களைக் கவர்ந்திட, அதுவே தமிழின் சாப்ட்வேர் தொகுப்பாக உலகத் தமிழரிடையே உலா வந்தது. இன்றும் முன்னேறிய நிலையில் பலவகைகளில் மேம்படுத்தப்பட்டு இத்தொகுப்பினை இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் பயன்படுத்தலாம். இணையத்தில் மட்டுமின்றி மின் அஞ்சல்களிலும், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களிலும் தமிழைக் கொண்டு வந்த பெருமை முரசு அஞ்சலையே சேரும். இதனை அடுத்து இணையத்தில் பயன்படுத்த வந்த தொகுப்புகளில், கனடாவைச் சேர்ந்த கலையரசன் உருவாக்கி, இலவசமாகத் தந்த, குறள் தமிழ்ச் செயலி  பலராலும் மின்னஞ்சல்கள், மற்றும் பிற பயன்பாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.  

தொடர்ந்து பல தமிழ் சாப்ட்வேர் தொகுப்புகள் தமிழகத்திலிருந்தும், மற்ற நாடுகளிலுருந்தும் வெளியாகின. இந்திய அரசின் சி–டாக் நிறுவனம், வட இந்திய மொழிகளுக்கான கட்டமைப்பில், தமிழையும் கொண்டு வந்தது. ஆனால் அது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. வர்த்தக ரீதியிலும் பல நிறுவனங்கள் தமிழ் சாப்ட்வேர் தொகுப்புகளை வெளியிட்டன. இதில் புனேயைச் சேர்ந்த மாடுலர் நிறுவனத்தின் லிபி சொல் தொகுப்பு, தமிழை அச்சுப் பணிகளில் பயன்படுத்துவோருக்கு மிகவும் உதவியாக இருந்தது; இருந்து வருகிறது. 
ஆனால் இவற்றிற்கிடையே எழுத்து வகை, அதனை கம்ப்யூட்டருக்கென அமைக்கப்படும்  என்கோடிங் எனப்படும் கட்டமைப்பு வகையில் ஒற்றுமை இல்லாததால், தமிழில் அமைக்கப்பட்ட ஆவணங்கள், தாங்கள் உருவாக்கப்பட்ட எழுத்து வகைகளுடன் வந்தால் தான் படித்து அறிய முடியும் என்ற நிலை தொடர்ந்து தமிழுக்கான தடுப்புக் கட்டையாக இருந்து வந்தது. 
1999 ஆம் ஆண்டில், தமிழக முதல்வராய் இருந்த கருணாநிதி  அவர்களின் முயற்சியால் கூட்டப்பட்ட இணைய மாநாடு தமிழ்நெட் 99,இதற்கு ஒரு தீர்வுகாணும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது. அந்த மாநாட்டுக் கருத்தரங்கத்தில் அமைக்கப்பட்ட குழு, டாம் மற்றும் டாப் என்னும் கட்டமைப்பில் உருவான எழுத்துவகைகளைப் பரிந்துரை  செய்தது. வெளிநாட்டில் வாழும் தமிழர்களால்,திஸ்கி என்ற வகையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் உடன் இருந்தது. ஆனால் இந்த முடிவுகளை எல்லாம் பற்றிக் கவலைப்படாத தமிழ்    உலகத்தினர் தொடர்ந்து தாங்கள் கொண்டிருந்த எழுத்து வகைகளிலேயே, இணைய தளங்களை உருவாக்கி, அவற்றைப்படிக்க தங்களின் எழுத்துருக்களை இறக்குவதனைக் கட்டாயமாக வைத்திருந்தனர். 

தொடர்ந்து வந்த கம்ப்யூட்டர் அறிவியல் வளர்ச்சி, இந்த சிக்கல்களுக்குத் தானாக ஒரு முடிவினைக் கண்டது. இது உலகின்  அனைத்து மொழிகளுக்குமான ஒரு தீர்வாக இருந்தது. அதுவே யூனிகோட் ஆகும். ஏற்கனவே இருந்த எழுத்து கட்டமைப்புகள் எல்லாம் 8 பிட் என்னும் குறுகிய அமைப்பில் இருந்து வருகையில், யூனிகோட் 32 பிட் கட்டமைப்பில் உருவானதால், எழுத்துக்களை நாம் விரும்பிய வகையில் அமைக்கின்ற வசதி, நமக்குக் கிடைத்தது. இதில் கிடைத்த தமிழ் எழுத்து அமைப்பு முறை, பலரால் குறை சொல்லப்படும் வகையில் இருந்தாலும், இன்றைய நிலையில், அனைத்து தமிழரையும் இணைக்கும் பாலமாக தமிழ் யூனிகோட் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே, தமிழ்ப் பயன்பாடு இணையத்திலும், கம்ப்யூட்டர்களிலும் பெரும் அளவில் பெருகி உள்ளது. இன்றைக்கு இருக்கின்ற வலைமனைகள் என்னும் பிளாக்குகளே இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். 
மேலும் கூகுள், யாஹூ போன்ற இணையத்தில் இயங்கும் நிறுவனங்கள் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தமிழைத் தங்கள் வலையகங்களில் பயன்படுத்த வசதி செய்து கொடுத்து வருகின்றனர். தமிழிலேயே தங்களின் தளங்களைத் தந்துள்ளனர். பயன்படுத்துபவர்கள் தமிழைப் பயன்படுத்த இடைமுகங்களை ஏற்படுத்தித் தந்துள்ளனர். 

தமிழக அரசு, கம்ப்யூட்டர் கல்வியைக் கற்பதில் மொழி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில், +1,+2 வகுப்புகளில் கம்ப்யூட்டர் பாடங்களை அனைத்து தமிழ் மாணவர்களும், குறிப்பாக கிராமப்புற மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் தமிழ் வழியில் கம்ப்யூட்டர் பாடங்களைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கியது. இதற்கானப் பாட நூல்களை தமிழக அரசின் பாட நூல் கழகம் தமிழில் 1996 முதல் வெளியிட்டு வருகிறது. 
தமிழில் பல கம்ப்யூட்டர் நாளிதழ்கள் வெளி வந்தன. முதன்முதலாக கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற இலக்குடன்,  1992 முதல் கம்ப்யூட்டர் குறித்து,தினமலர்  நாளிதழ்,  தமிழில் கட்டுரைகளைத் தந்தது. மக்கள்  பாராட்டுதலை மிகப் பெரிய அளவில் பெற்றதனாலும், அவர்களின் தொடர்ந்த வேண்டுகோள்களினாலும்,  வாரம் ஒரு முறை சிறிய இணைப்பு நூல் ஒன்றினை வெளியிட்டது. இலவசமாகத் தமிழில் கம்ப்யூட்டர் குறித்து  இவ்வாறு இணைப்பு நூல் வழங்கும் ஒரே தமிழ் நாளிதழ் தினமலர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் குறித்த முறையான கல்வி இல்லாத பல்லாயிரக்கணக்கானோர், தங்கள் வாழ்க்கை ஆதாரத்திற்கும், வேலைகளிலும்  கம்ப்யூட்டரைப் பயன்படுத்த வேண்டிய நிலையில், கம்ப்யூட்டர் மலர் பெரும் அளவில் அவர்களுக்குக் கை கொடுத்தது.
இன்று தமிழ்ப் பத்திரிக்கைகள் பல தங்களின் இணைய பதிப்பையும் வெளியிட்டு வருகின்றன. தமிழ் யூனிகோட் எழுத்து முறையினை முதலில் பயன்படுத்தித் தன் இணையப் பதிப்பினை வெளியிட்ட பெருமை தினமலரையே சேரும். இதனால் உள் நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் மிக எளிதாகத் தமிழகச் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. 
எந்த பிரவுசரைப் பயன்படுத்தி, எந்த தளத்தில் உலா வந்தாலும், இணையத்தில் இருக்கையில், செய்திகளைத் தமிழில் தரும் டூல் பார் சாதனத்தினையும் தினமலரே முதலில் தந்தது. இன்னும் தொடர்கிறது. இதனால் உலகெங்கும் வாழும் தமிழர்கள், தங்கள் தாய்த் தமிழ்த் திரு நாட்டில் என்ன நடக்கிறது என்பதனை உடனுக்குடன்  அறிய முடிகிறது.  
கம்ப்யூட்டர் இன்று உலக மக்களை நேயத்துடன் இணைக்கும் பாலமாக மாறி வருகிறது. அதில் தமிழ்  பயன்படுத்தப்படுகையில், கம்ப்யூட்டர் தமிழ் தனது மக்களைப் பாசத்துடன் சேர்க்கும் கருவியாக மாறுகிறது. இனி கம்ப்யூட்டர் என்பது தமிழ் மக்களுக்குத் தமிழில் தான் அமையும் என்ற நிலை விரைவில் உருவாகும் என்பதில் ஐயமேதும் இல்லை. இந்த முயற்சியில் இப்போது நடைபெற்று வரும் செம்மொழி மாநாடு போன்ற நிகழ்வுகள் நிச்சயம் கை கொடுக்கும். 
கம்ப்யூட்டரில் தமிழைக் கொண்டு வரும் முயற்சியில் பாடுபட்ட, தொடர்ந்து உழைத்துவரும் ஆர்வலர்கள் அனைவருக்கும் உற்சாகம் தந்து உரமூட்டுவோம்.


source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மனித உருவில் ஆட்டுக்குட்டி காண மக்கள் கூட்டம்

>> Tuesday, June 22, 2010



ஆத்தூர் : ஆத்தூர் அருகே, மனித உருவில் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டியை ஏராளமானோர் பார்த்து வியந்தனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி பைத்தூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து வருகிறார். நிறைமாத சினையாக இருந்த ஆடு, நேற்று அதிகாலை 5 மணியளவில் கடும் சிரமத்துடன் குட்டியை ஈன்றது. பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில் இறந்தே பிறந்ததை கண்ட வெற்றிவேல் அதிர்ச்சியடைந்தார். ஆட்டுக் குட்டியின் உடலில் முடிகள் இல்லை. ரப்பர் பொம்மை குழந்தை போல காணப்பட்டது. தகவலறிந்த அப்பகுதியினர், அதிசய ஆட்டுக் குட்டியை வியப்புடன் பார்த்துச் சென்றனர். கால்நடை மருத்துவ ஆய்வாளர் சேகரன், ஆட்டுக்குட்டியின் உடலை ஆத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு எடுத்து சென்றார்.


கால்நடை மருத்துவர் தேவேந்திரன் கூறியதாவது: ஒரே வகையான கிடா ஆடு மூலம் பெட்டை ஆடுகளுக்கு இனவிருத்திக்காக கருவூட்டல் செய்கின்றனர். மரபணு கோளாறு காரணமாக உடல் முழுவதும் நீர் நிரம்பி, ரப்பர் போன்ற குட்டி பிறந்துள்ளது. ஆடு சினை பிடிப்புக்கு வேறு கலப்பின கிடாவை பயன்படுத்த வேண்டும். மனித இனத்தில் நெருங்கிய உறவு முறையில் திருமணம் செய்தால் குறைபாடு உள்ள குழந்தைகள் பிறப்பது போல, ஆடுகளுக்கும் இனவிருத்தியில் குறைபாடு ஏற்படும். ஆத்தூரில் பிறந்த ஆட்டுக் குட்டி மனித உருவத்தில், ரப்பர் குழந்தை போல் உள்ளதால் பரிசோதனை செய்யவுள்ளோம். இவ்வாறு தேவேந்திரன் கூறினா


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

செம்மொழி மாநாட்டை ஈழத்தமிழ் மக்களின் உரிமைக்கான குரலாக ஒலிக்கசெய்யுங்கள் -விடுதலைப்புலிகள்

>> Monday, June 21, 2010



ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடாத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம்.

அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:


தலைமைச் செயலகம், தழிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். 15-06-2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க விரும்புகிறோம்.

தமிழக அரசு நடாத்தும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எதிர்வரும் யூன் 23 ஆம் நாள்முதல் 27 ஆம் நாள்வரை கோவையில் கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

முன்னர் நடைபெற்று வந்த உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு வலுச் சேர்க்கும் வகையில் இந்த ஆண்டு தமிழக அரசு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடாத்த முன்வந்துள்ளது.

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு முதன்முதலில் கோலாலம்பூரில் 1966 ஏப்ரல் 16 - 23 நாட்களில் நடாத்தப்பட்டது. அதன் இரண்டாவது மாநாடு 1968 ஆம் ஆண்டு சனவரி 3-10 நாட்களில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் நடைபெற்றது. அதன்பின், பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர், மொரீசியஸ், தஞ்சாவூர் எனப் பல இடங்களில் நடைபெற்றது.

முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழ் மக்கள் சந்தித்த பேரிழப்பின் வலி குறையுமுன்னர் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை உலகத் தமிழர்கள் விரும்பவில்லை. அதன் காரணமாக அந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் வேண்டுகோளை பல அமைப்புக்கள் விடுத்தன. எம் மக்களின் இந்த உணர்வு நியாயமானதே என்பதனை சான்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தநிலை இன்று மாறிவிட்டது. மொழியே ஒரு தேசிய இனத்தை அடையாளப்படுத்துகிறது. தமிழரின் தேசிய அடையாளத்தை தமிழ்மொழியே குறிக்கிறது.

1974 ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடந்தேறிய நான்காவது உலகத் தமிழாராட்சி மாநாட்டில் எம்மக்கள் தமது உயிரையே காணிக்கை ஆக்கினர் என்பதனை நினைவூட்ட விரும்புகின்றோம்.

செம்மொழி மாநாடு நடைபெறுவது பல வழிகளிலும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் பெருமையும் வளமும் அளிக்கும் என மனதார நம்புகிறோம். ஒரு மொழியின் வளர்ச்சி அம்மொழியின் தொன்மை தொடர்பானது மட்டுமே அன்று. எதிர்கால பயன்பாட்டுக்கு அது எந்த அளவு உதவப்போகிறது என்பதுதான் ஒரு மொழியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது.

இவை காரணமாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை தமிழக அரசியலில் இருந்து பிரித்துப் பார்க்க நாம் விரும்புகிறோம்.

தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கிய சிங்களப் பேரினவாதம், மேலும் தனிச்சிங்களச் சட்டம் என்று எமது தாய்மொழி மீதும் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கியது. தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட காரணத்தாலேயே தமிழர்கள் மீது படிப்படியாக அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

இவற்றையெதிர்த்துத் தொடங்கப்பட்ட ஈழவிடுதலைப் போராட்டமென்பது அடிப்படையில் மண்மீட்புக்கானதும் மொழிக்காப்புக்கானதுமான போராட்டமே. ஒரு மொழி வாழவேண்டுமானால், அம்மொழி பேசும் மக்கட்கூட்டம் பிழைத்திருக்க வேண்டும். அவ்வகையில் ஈழத்தமிழினம் தப்பிப் பிழைத்திருக்கவும் ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறவும் நடத்தப்படுவதே எமது போராட்டமாகும்.

விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழியின் மேம்பாட்டுக்குப் போர்ச் சூழலுக்கு மத்தியிலும் கடுமையாகப் பாடுபட்டு வந்தமையை அனைவரும் அறிவர்.

குழந்தைகளுக்குத் தூய தமிழ்ப் பெயர்களைச் சூட்டுதல், விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் அனைவருக்கும் தூய தமிழ்ப்பெயரை மாற்றியது, போர்ப்பயிற்சிக் கட்டளைகளைக்கூட தூய தமிழில் மாற்றிப் பயன்படுத்தியது, அங்காடிகளின் பெயர்ப் பலகைகளை நூறு விழுக்காடு தூய தமிழில் எழுதும் நடைமுறையைக் கொண்டு வந்தது என எமது இயக்கம் தமிழ்மொழியின் பால் கரிசனை கொண்டு எடுத்த நடவடிக்கைகள் பலவுண்டு. விடுதலைப் புலிகளின் தமிழ் வளர்ச்சிக் கழகம் "தமிழ்ப்பெயர்க் கையேடு - மக்கட்பெயர் 46,000" என்ற தொகுப்பைத் தயாரித்து வெளியிட்டது.

இது மட்டுமன்றி எமது மாவீரர்கள், மக்களின் தியாகத்தினால் உலகம் முழுவதும் எம் மொழி, இனம் புத்துயிர் பெற்று ஒரு மறுமலர்ச்சியினை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ்மொழி மீது கொண்டுள்ள காதலுக்கு போர்க்களத்தில் விழுப்புண்பட்டு வீழ்ந்த வேங்கைகளின் கல்லறையில் நின்று எடுக்கும் உறுதிமொழி சான்றாக உள்ளது.

மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம்! தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி!

மொழிக்காகவும் மண்ணுக்காகவும் இறுதிவரை போராடிய ஆயிரக்கணக்கான எம் வீரர்களும் மக்களும் முள்ளிவாய்க்காலில் மாண்டுபோயினர்; அனைத்துலக ஆதரவுடன் சிங்களத்தால் வதைக்கப்பட்டனர். இந்த இறுதிக் கணத்தில் நடந்தேறிய பேரவலத்தினை எம் அருகில் இருந்த கோடிக்கணக்கான தமிழர்களால் முயற்சித்தும் தடுக்க முடியவில்லை என்ற வேதனை எமக்கும் எமது மக்களுக்குமுண்டு.

தம்மையே கருக்கிய உயரிய தியாகங்கள் பல நடந்தபோதும், ஏதாவது செய்ய வேண்டுமென்ற துடிப்பு ஏராளமானவர்களுக்கு இருந்தபோதும் ஓர் அரசியற் சக்தியாக அதை முன்னெடுத்து நிறைவேற்ற முடியாமற்போன துயரம் தமிழகத்தில் நடந்தது.

இப்போதும் காலம் கடந்துவிடவில்லையென்றே நாம் நம்புகிறோம். மொழியின் வாழ்வும் வளர்ச்சியும் அம்மொழியைப் பேசும் இனத்தின் "இருப்போடு" தொடர்புபட்டது என்றவகையில், தமிழ்மொழியைப் பேசும் ஓர் இனக்குழுமத்தின் இருப்பை உறுதிசெய்வது அனைவரினதும் கடமையாகும்.

ஈழத்திலே தற்போது எமது மக்கள் படும் துன்பங்களைத் துடைத்து அவர்களின் நல்வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் உத்தரவாதத்தை உலகளவில் பெற்றுக்கொடுக்கும் பணி எல்லாத் தமிழருக்குமுண்டு. இன்று நடைபெறும் சிங்களக் குடியேற்றங்கள், தமிழர் படுகொலைகள் என்பன நிறுத்தப்பட்டு தமிழர்கள் தம் சொந்த மண்ணில் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.

இன்று மிகமுக்கியமான காலகட்டத்தில் இந்தச் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. எம் தாய்மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடாத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு.

இந்த மாநாடு தமிழ்மொழி வளர்ச்சிக்கு வழிகோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலுச்சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே தமிழீழ விடுதலைப் புலிகளாகிய எங்களின் அவா.

அதேவேளை, ஈழத்தமிழினம் இலங்கையில் படும் இன்னல்களைக் களைவதுடன், அம்மக்களுக்கு இழைக்கப்பட்ட பாரிய அநீதியைத் தட்டிக்கேட்டு அதற்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு இச்செம்மொழி மாநாட்டை நடாத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம். அவ்வாறு நடைபெறும் பட்சத்தில், செம்மொழி மாநாடு தனது குறிக்கோளைத் திறம்பட அடைந்ததாக அனைத்துத் தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அந்த வகையில், செம்மொழி மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் எம்மினத்தின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருக்கும் என நம்புவதுடன் இந்த மாநாடு சிறப்பாக நடைபெற நாம் வாழ்த்துகின்றோம்.

நன்றி.


"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம். 

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

தொட்டுவிடும் தூரத்தில் “பொட்டு” ரகசியம்


விழுப்புரம் தண்டவாள அதிர்வுகளே இன்னும் அடங்காத நிலையில் சந்திரகுமார், அருள் செல்வம், பாலா, செல்வம் என்கிற புனைப் பெயர்களைக்கொண்ட 'சிரஞ்சீவி மாஸ்டரை' வளைத் திருக்கிறது தமிழக உளவுத் துறை போலீஸ்!

சிரஞ்சீவி மாஸ்டர், புலிகளின் உளவுத் துறையில் பொட்டு அம்மானின் அடுத்த கட்டத் தலைவர்களில் ஒருவர் என்று கூறப்படுகிறது. 12 வருடங்களுக்கும் மேலாக மத்திய, மாநில உளவுத் துறைகளால் தேடப்பட்டு வந்த சிரஞ்சீவி மாஸ்டர், ஈழப் போரின் இறுதிக் காலத்தில் களத்தில் நின்றவர். கடைசிக்கட்ட நேரத்தில் கை, கால்களில் பலத்த காயமடைந்தவர், அதன் பிறகு என்ன ஆனார் என்பது தமிழீழ ஆர்வலர்களாலேயே நேற்று வரை யூகிக்க முடியாத விஷயம்.

தமிழீழ ஆர்வலர்கள் சிலரிடம் பேச்சுக் கொடுத்த போது, நம் தகவலையே முதல் செய்தியாகக் கேட்டு அதிர்ச்சியின் விளிம்புக்கே போனவர்கள், ''சிரஞ்சீவி மாஸ்டர் பொட்டு அம்மானின் பேரபிமானத்தைப் பெற்றவர். புலிகளின் தமிழகப் புலனாய்வுத் தலைவராக இருந்தார். இலங்கைக்கும் தமிழகத்துக்கும் அடிக்கடி விசிட் அடிப்பார். ஈழப் போர் தீவிரம் எடுத்த கால கட்டத்தில் புலனாய்வுப் பிரிவிடம் இருந்து அழைப்பு வர... உடனடியாகக் கிளம்பிப் போனார். போரின் உக்கிரம் மிகக் கடுமையானபோது, தமிழகத்துக்கு வந்து அதன் பாதிப்புகளை பட்டவர்த்தனமாக எடுத்துச் சொல்லி, தமிழக அரசியல் தலைவர்களின் ஆதரவைத் திரட்டும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது.

ஆனால், இந்திய - இலங்கை அரசுகளின் தீவிரக் கண்காணிப்புகளைத் தாண்டி, அவரால் இங்கே வந்து சேர முடியவில்லை. அதன் பிறகு அவர் என்ன ஆனார் என்பதே தெரியாத நிலையில்... அவர் தமிழகத்தில் பிடிபட்டிருப்பதாகச் சொல்வது பெரிய விந்தைதான்!'' என்கிறார்கள்.

இன்னும் சிலரோ, ''திரிகோணமலையில் உள்ள பனகுளம் பகுதியில் பிறந்த சிரஞ்சீவி, 91-ம் ஆண்டு இயக்கத்தின் நம்பகத்தைப் பெற்று யாழ்ப்பாணம் பகுதியில் தீவிர ஆயுதப் பயிற்சி எடுத்தார். அதன் பிறகு புலிகளின் உளவுப் பிரிவுக்கு வந்தார். 98-ம் வருடம் கண்ணன் என்கிற கண்ணப்பனும், சிரஞ்சீவியும் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டார்கள். அசம்பாவிதச் சம்பவங்களிலோ, ஆயுதக் கடத்தலிலோ ஈடுபடும் 'அசைன்மென்ட்' இவர்களுக்குக் கிடையாது. தமிழகத்தின் அரசியல் நிலைமைகளைக் கணித்துக் கொடுக்கும் பணி மட்டும்தான். அதைச் செவ்வனே செய்யக்கூடியவர் சிரஞ்சீவி. அதனாலேயே அவரை 'தமிழ்நாட்டு பொட்டு அம்மான்' என்பார்கள்.

ராஜீவ் படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த சீரஞ்சீவி, இங்கு உள்ள அரசியல் நிலவரங்களை ஊன்றி ஸ்டடி செய்த பிறகு, இங்கு இருந்தே ஆயுதப் பரிவர்த்தனைக்கான பொறுப்பையும்ஏற்றார். அப்போதுதான் தமிழக போலீஸ் அவர் மீது கண் வைத்தது. அவரை மடக்கினால், புலிகளின் உளவு நெட்வொர்க்குகளைத் துல்லியமாகத் தெரிந்து கொண்டுவிடலாம் எனத் திட்டமிட்டு அவரை வளைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஆனால், சாதுர்யமாகத் தப்பிச் சென்றுவிட்டார்.

இலங்கைத் தமிழர் என சந்தேகிக்க முடியாத அளவுக்கு சென்னைத் தமிழிலும் சரளமாகப் பேசுவார். 2004-ல் அவர் மறுபடி சென்னைக்கு வந்து சென்றபோது, பல திசைகளிலும் ரூட் போட்டு அவரை வளைக்கத் துடித்தது போலீஸ். அவர் மீது எந்த வழக்குகளும் அப்போது இல்லை என்பதால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 2007-ல் சிவகரன் என்கிற போராளி வெடிமருந்து கடத்தியதாகப் பதிவான வழக்கில் சிரஞ்சீவி மாஸ்டர் பெயரும் சேர்க்கப்பட்டது. அப்போது போட்ட வழக்கு ஒன்றை வைத்தே அதன் பிறகு அவரை வெளிப்படையாக போலீஸ் தேடத் தொடங்கியது.

தொண்டி வழியாக அவர் மீண்டும் சென்னைக்கு வரும் தகவலை அறிந்துகொண்ட உளவு போலீஸ், புலிகளின் அபிமானம் பெற்ற புதுக்கோட்டை மாவட்ட அரசியல் புள்ளியை வளைத்து, அவர் மூலமாக சிரஞ்சீவியை வளைக்கத் திட்டமிட்டது. ஆனால், கண்ணப்பன் என்ற போராளி மட்டும் சிக்க, போலீஸின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு எஸ்கேப் ஆனார் சிரஞ்சீவி.

தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளை ஈழத்துக்கே அழைத்துச் சென்று... பிரபாகரன், பொட்டு அம்மான், தமிழ்ச்செல்வன் ஆகியோரிடம் அறிமுகம் செய்து வைத்தவர் சிரஞ்சீவிதான். போர் உக்கிரமான காலத்திலேயே தமிழகத்து அரசியல் புள்ளி ஒருவரை ஈழத்துக்கு அழைத்துப்போய், குண்டு மழைகளுக்கு நடுவே வீடியோ காட்சிகளைப் பதிவுசெய்து கொண்டுவந்தார். கடைசிக் கட்ட ஈழப் போரில் பல்வேறு படை அணிகளாகப் பிரிந்து ஊடறுப்புத் தாக்குதல் நடத்தி வெளியேறியவர்களில் சிரஞ்சீவியும் ஒருவர் என எங்களுக்குத் தகவல் வந்ததே தவிர, தப்பித்த அவர் எங்கே இருக்கிறார் என்கிற விவரங்கள் எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார்கள்.

மேற்கொண்டு நாம் விசாரித்தபோது, ''ஒரு வாரத்துக்கு முன்னரே உளவுத் துறை போலீஸார் அவரை வளைத்து விட்டதாகவும், புலிகளின் உளவுப் பிரிவுத் தலைவரான பொட்டு அம்மான் குறித்து அவரிடம் துருவிக்கொண்டு இருப்பதாகவும் தெரிகிறது. கூடவே, தமிழக அரசியல் தலைவர்களின் புலித் தொடர்புகள் குறித்தும், அவர்களைச் சிக்கவைக்கும் விதமான தகவல்கள் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறதாம். விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பு விவகாரத்தில் ஆரம்பகட்ட விசாரணையின்போதே 'புலிகளின் ஆதரவாளர்கள் செய்திருக்கலாம்' எனச் சொன்ன போலீஸார், தற்போது சிரஞ்சீவியைச் சிக்கவைக்கவும் வாய்ப்பு இருக்கிறது!'' என்று கூறுகிறார்கள் காவல் வட்டாரத்தின் அசைவுகளை அறிந்தவர்கள்.

இன்னும் சில போலீஸார், ''இலங்கை யில் போர் தொடங்கியபோது புலிகள் பலரும் தமிழகத்துக்குள் ஊடுருவினார்கள். சென்னை மடிப்பாக்கம் அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பரமேஸ்வரன் என்பவரும் போராளிகளும் தங்கி இருந்தது தெரிந்து அவர்களை வளைத்தோம். அப்போது சிரஞ்சீவி மாஸ்டர் குறித்து பரமேஸ்வரன் சொன்ன தகவல்கள் படு பயங்கரமானவை. அப்போதே,

சிரஞ்சீவி குறித்துத் தீவிர விசாரணையைத் தொடங்கிவிட்டது எங்கள் துறை. போர்க் காலத்தில் அவர் ஈழத்தில் இருந்தார் என்ற தகவல் உறுதியானதாகத் தெரிகிறது. தற்போது சிக்கி இருக்கும் அவரிடம் பொட்டு அம்மான் குறித்து எங்கள் துறை அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு லேசான புன்னகையை மட்டுமே சிரஞ்சீவி மாஸ்டர் பதிலாக்கியதாகவும் தெரிகிறது. ஈழத்தின் கடைசிக்கட்டப் போர்க் கொடூரங்களை மட்டும் மனம்விட்டுச் சொன்னவர், புலித் தலைவர்களின் நிலை குறித்த கேள்விக்கு எந்த பதிலையும் சொல்லவில்லை!'' என்றார்கள்.

தமிழக உளவுத் துறை ஐ.ஜி-யான ஜாஃபர் சேட்டிடம், சிரஞ்சீவி கைது குறித்துக் கேட்டோம். ''விடுதலைப் புலிகளின் உளவுப் பிரிவில் சிரஞ்சீவி மிக முக்கியமான ஆள். தீவிரமாகத் தேடப்பட்ட இவர், இலங்கைப் போருக்குப் பிறகு சந்திரகுமார் என்ற பெயரில் தமிழகத்துக்கு வந்திருக்கிறார். 2007-ம் ஆண்டு வெடி மருந்து கடத்தல் விவகாரத்தில் சிவா என்கிற சிவகரனுடன் சிரஞ்சீவி சம்பந்தப்பட்டிருப்பதாக வழக்கு இருக்கிறது. மற்றபடி இலங்கைப் போருக்குப் பிறகு தமிழகம் வந்த சிரஞ்சீவி தவறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அவர் மீது புதிதாக வழக்குகள் ஏதும் இல்லை. மற்றபடி மேற்கொண்டும் அவரிடம் விசாரித்து வருகிறோம்!'' என்றவரிடம்,

''விழுப்புரம் தண்டவாளத் தகர்ப்பில் சிரஞ்சீவியைச் சிக்க வைக்க முயற்சிகள் நடப்ப தாகச் சொல்லப்படுகிறதே?'' எனக் கேட்டோம். ''கிடையவே கிடையாது. விழுப்புரம் தண்ட வாளத் தகர்ப்பு விவகாரத்தில் சிரஞ்சீவிக்கு எவ்விதச் சம்பந்த மும் கிடையாது. தண்டவாளத் தகர்ப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைப் பிடிக்கத் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டிருக் கிறோம்!'' என்றார்.

கை மற்றும் கால்களில் காயங்களோடு போலீஸ் விசார ணையில் இருக்கும் சிரஞ்சீவி புலிகள் குறித்தும்... குறிப்பாக பொட்டு அம்மான் குறித்தும் என்ன சொல்லப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி!

'பிரபாகரன் இருக்கிறாரா?' என்ற உலகளாவிய கேள்விக்கும் அவரிடம்... உறுதியான பதில் இருக்கலாம்


source:vikatan

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP