சமீபத்திய பதிவுகள்

பொட்டம்மான் ‐ கபில் அம்மான் பற்றி பரவிவரும் வதந்திகளில் உண்மையில்லை:சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்

>> Sunday, May 31, 2009

பொட்டம்மான் ‐ கபில் அம்மான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் வதந்திகளில் உண்மையில்லை ‐ பொட்டு அம்மானின் உயிரிழப்பு குறித்து சந்தேகம்?

 
 
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மானின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
 
பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தாக்குலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லை.
 
எனவே, பொட்டு அம்மான் உயிருடன் இருக்கக் கூடுமென இலங்கை இராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
 
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
எவ்வாறெனினும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டுள்ளதாக புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் அண்மையில் வானொலியொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
 
பொட்டம்மான் ‐ கபில் அம்மான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் வதந்திகளில் உண்மையில்லை:
 
விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான், அதன் இரண்டாம் நிலை பொறுப்பாளர் கபில் அம்மான் ஆகியோர் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் வதந்திகளில் எந்த உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
 
பொட்டு, கபில் மாத்திரமல்ல பிரபாகரனையும் உயிருடன் பிடிக்கும் தேவை இருந்த போதிலும் கடுமையான யுத்தத்தின் போது ஒருவரை கொன்று விட்டு மற்றுமொருவரை கைதுசெய்வதென்பது இயலாத காரியம் என தெரிவித்துள்ள பொன்சேக்கா, இவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால் பல முக்கிய தகவல்களை கண்டறிந்திருக்கலாம் என கூறியுள்ளார்.
 
பொட்டாம்மானின் சடலம் அடையாளம் காணப்படாததன் காரணமாகவே இவ்வாறான வதந்திகள் பரவி வருகின்றன. பொட்டம்மானின் சடலத்தை அடையாளம் காண படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இறுதியாக நந்திக்கடல் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றன இதில் கொல்லப்பட்ட புலிகளின் சுமார் 100 சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. இவற்றில் பல சடலங்கள் நீரில் மூழ்க்கியுள்ளன. அவற்றை மீட்க்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டு, சடலங்கள் மீட்க்கப்பட்ட போதிலும் அவை அடையாளம் காணமுடியாத அளவில் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.
 
 

StumbleUpon.com Read more...

தமிழீழ செய்திகள் காணொளியில்(30.5.2009)

StumbleUpon.com Read more...

மனிதாபிமான விதிகளையும் புறம் தள்ளி சிறிலங்கா நடத்திய போர்: இந்திய ஊடகம்

அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் புறம் தள்ளி சிறிலங்கா நடத்திய போர்: இந்திய ஊடகம்
அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகத்தின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நடத்திய போர் தொடர்பாக பத்து கேள்விகளை இந்திய ஊடகமான 'கௌண்டர் கரண்ட்ஸ்' முன்வைத்திருக்கின்றது.

இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: 

தமிழ் மக்கள் கடந்த சில வாரங்களாக சந்தித்த போர் அழிவுகளை கருதும்போது, ஒவ்வொரு படிமுறையாக  சிறிலங்கா அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகள் தொடர்பான முழுமையான விபரங்கள் திரட்டப்படவேண்டும்.

கொழும்பு அரசாங்கத்தின் வெற்றி கொண்டாட்டங்களுக்கு பின்னால் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பாரிய குற்றங்கள் பேசமுடியாத விடயங்களாக உள்ளன. அது தொடர்பான தவறுகளை தவிர்ப்பதற்கு வன்னியில் நடைபெற்ற போரில் இறுதி வாரங்களில் என்ன நடைபெற்றது என்பதை சிறிலங்கா மக்கள் எல்லோரும் திரும்பி பார்க்க வேண்டும்.

அதாவது, இந்த போரானது அனைத்துலகத்தின் சட்டவிதிகளையும் மனிதாபிமான விதிகளையும் உலகின் கருத்துக்களையும் புறம் தள்ளியவாறு மேற்கொள்ளப்பட்ட ஒன்று என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.

பயங்கரவாத்திற்கு எதிரான போர் என்ற கொடுமையான கோட்பாடுகளை ஏற்றுக்கொண்டுள்ள அனைத்துலகம் கண்மூடிக்கொண்டு இருந்துள்ளது அல்லது இந்த போரில் ஒரு பக்கத்தில் மரணிப்பவர்கள் கருமையான தோலைக்கொண்ட ஏழை மக்கள் எனவும் அவர்கள் எண்ணி மௌனமாக இருந்திருக்கலாம்.

எவ்வளவு பேர் படுகொலை செய்யப்பட்டனர் என்பதற்கு அப்பால் அவர்கள் மீது இனச்சுத்திகரிப்பு என்ற பதமும் பிரயோகிக்கப்படவில்லை.

உலகின் மக்களை பொறுத்தவரையில் அவர்கள் தொடர்ச்சியாகவும், வரலாற்று ரீதியாகவும் அரச பயங்கரவாதத்திற்கு பலியாகி வருகின்றனர்.

எனவே தமது உரிமைகளுக்காக எதிர்த்து போராடுவதை தவிர அவர்களுக்கு வேறு வழிகள் இல்லை.

இதன் தொடக்கமாக உடனடியாக விடை காணப்படவேண்டிய பத்து கேள்விகள் உள்ளன.

1. இறுதி வாரங்களில் மோதல் தவிர்ப்பு வலயப்பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் எவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் உடலங்களுக்கு என்ன நடந்தது?

2. நோயாளர்களுக்கும், காயமடைந்த மக்களுக்கும் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைகளை ஏன் சிறிலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் எறிகணைகளால் தாக்கினார்கள்?, உலகின் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களின் நிலை என்ன?

3. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவம் எத்தகைய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது, அதனை வழங்கிய நாடுகள் எவை?

4. போர் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றபோதும் ஏன் அவர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களையும், மனிதாபிமான பணியாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் அங்கு அனுமதிக்க மறுத்து வருகின்றனர்?

5. ஏன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களுக்குள் பலிகொடுக்க தடுத்து வைக்கப்படும் மிருகங்களை போன்று தடுத்துவைக்கப்ட்டுள்ளனர்?, அந்த முகாம்களில் உள்ள இளைஞர்கள் ஏன் கடத்திச் செல்லப்படுகின்றனர்?

6. விசாரணைகளின்போது தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஏன் மீண்டும் மீண்டும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன?

7. அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என்றால் போரில் கொல்லப்படுபவர்கள், துன்புறுத்தப்படுபவர்கள் தொடர்பாக ஏன் ஊடகவியலாளர்கள் விசாரணைகள் செய்யப்படுகின்றனர்?

8. ஒரு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளை மேற்கொண்ட இனவாத அரசாங்கத்தினால் உடனடியான புனர்வாழ்வையும், நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க முடியும் என எவ்வாறு நம்பமுடியும்?

9. போரியல் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அனைத்துலகத்தின் நீதிமன்றத்தின் முன் மகிந்த ராஜபக்சவையும், அவரின் கீழ் இயங்கிய உயர் கட்டளைப் பீடங்களின் அதிகாரிகளையும் நிறுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

10. தற்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டுள்ளனர் எனவே மிகவும் மோசமான சிங்கள சிங்கங்கள் மீது உலகம் அக்கறை கொள்வதற்குரிய நேரம் இதுவா?

இவ்வாறு 'கௌண்டர் கரண்ட்ஸ்' கேள்வி எழுப்பியுள்ளது.

 

source:http://www.puthinam.com/full.php?2b1VoUe0dAcYo0ecUA4I3b4g6DX4d3f1e2cc2AmS3d424OO3a030Mt3e

 

StumbleUpon.com Read more...

புளூ டூத் பஸ் சர்வீஸ் இந்தியாவில் அறிமுகம்

மும்பை: விரைவில் புளூ டூத் பஸ் சர்வீஸ்

        மும்பையில் புளூ டூத் டெக்னாலஜி கொண்ட பஸ் சர்வீஸ் விரைவில் துவக்கப்படவுள்ளதாக போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர், நியூயார்க் போன்ற நகரங்களில் இந்த வசதி உள்ளது. இம்முறை அமலுக்கு வந்தால், பஸ் செல்லும் பாதை, அடுத்த ஸ்டாப், இன்னும் எவ்வளவு நேரத்தில் பஸ் சென்றடைய வேண்டிய இடத்தை அடையும் போன்ற தகவல்களை பஸ்சில் இருந்தபடியே செல்போன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

முதல்கட்டமாக, நீண்ட தூர பஸ்களிலும், பின்னர் குறைந்த தூர பஸ்களிலும் இந்த வசதி செய்து கொடுக்கப்படும் என்றும், இதன் மூலம் சுமார் 50 லட்சம் பயணிகள் பயனடைவர் என்ற மும்பை மாநகர போக்குவரத்து கழக தலைவர் திலீப் படேல் தெரிவித்துள்ளார்.

StumbleUpon.com Read more...

பெண் எழுத்தாளர் கமலாதாஸ் மரணம்

பெண் எழுத்தாளர் கமலாதாஸ் மரணம்



கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா தாஸ். ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் ஏராளமான சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதி உள்ளார். ஆங்கிலத்தில் அவர் எழுதிய, மை ஸ்டோரி', சம்மர் இன் கல்கத்தா', தி டிசென்டன்ட்ஸ்' போன்ற புத்தகங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

குறிப்பாக, மை ஸ்டோரி' என்ற புத்தகம் பல்வேறு இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உள்ளது. மலையாள, ஆங்கில மொழிகளில் அவருக்கென ஏராளமான ரசிகர் வட்டாரம் உள்ளது. இலக்கியத் துறையில் தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார்.

செக்ஸ், காதல், நம்பிக்கை துரோகம் போன்றவை குறித்து துணிச்சலாக புத்தகங்கள் எழுதியதால் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர். 75 வயதான அவருக்கு முதுமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. எனவே, புனே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏப்ரல் 18 ந் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலையில் அவர் காலமானார்.

StumbleUpon.com Read more...

‌பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, : சீமா‌ன் ஆவேசம்

‌பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்: சீமா‌ன் ஆவேசம்
பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக, ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன் எ‌ன்று இய‌க்குன‌‌ர் ‌‌சீமா‌ன் கூ‌றினா‌ர்.

இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து சென்னையில் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேற்‌று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பேசுகை‌யி‌ல்,

"இய‌க்குன‌ர் பார‌திராஜா ஒரு மாபெரு‌ம் கலைஞ‌‌ன். பாலா, சேர‌ன், த‌ங்க‌ர்ப‌ச்சா‌ன் உ‌ள்‌ளி‌ட்ட எ‌ண்ண‌ற்ற கலைஞ‌ர்க‌ள் பூ‌த்து‌க்குலு‌ங்க காரணமாக உ‌ள்ள அடிமர‌ம். அவ‌ர் அலுவலக வாச‌லி‌ல் உ‌ள்ள வே‌‌ப்பமரமு‌ம் நா‌‌ங்களு‌ம் ஒ‌ன்றாக வள‌ர்‌ந்தவ‌ர்க‌ள். அவ‌ர் அலுவலக‌த்தை தா‌க்‌கியு‌ள்ளன‌ர்.

ஒரு த‌மிழ‌ன் த‌மிழனாக இரு‌ந்தத‌ற்காக ‌கிடை‌த்த ப‌ரிசு இது. ஈழ‌த் த‌‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கை‌யி‌ல் ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு ஆதரவாக இரு‌ப்பவ‌ர்க‌ள் இ‌ங்கு ‌மிர‌ட்ட‌ப்படு‌‌கிறா‌ர்க‌ள்.

எ‌ன்னை‌‌த் தொட‌ர்‌ந்து 4 முறை ‌சிறை‌யி‌ல் அடை‌த்தா‌ர்க‌ள். நா‌ன் எ‌ன்ன தவறு செ‌ய்தே‌ன். எ‌ன் இன‌ம் அ‌ழி‌க்க‌ப்படுவதை‌க் க‌‌ண்டு ந‌ல்ல அ‌‌ப்பனு‌க்கு‌ப் ‌பிற‌ந்த எ‌ன்னா‌ல் பொறு‌க்க முடிய‌வி‌ல்லை. நா‌ன் ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டதா‌ல் எ‌ன் தொ‌‌‌ழி‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது. எ‌ன்னுடைய காரை எ‌‌ரி‌த்தா‌ர்க‌ள். உ‌யி‌ர் எ‌ன்பது உ‌திரு‌ம் ம‌யிரை‌ப் போ‌ன்றது. ஒரு ல‌ட்ச‌ம் து‌ப்பா‌க்‌கிகளை‌க் கட‌ந்து செ‌ன்று ‌பிரபாகரனை ச‌ந்‌தி‌த்தவ‌ன் நா‌ன். இத‌ற்கெ‌ல்லா‌ம் பய‌ப்பட மா‌ட்டே‌ன். பே‌சினா அடி‌ப்போ‌ம் இதுதா‌ன் ஜனநாயகமா?

தா.பா‌ண்டிய‌ன் காரை எ‌‌‌ரி‌த்தா‌ர்க‌ள். யாரை கைது செ‌ய்‌தீ‌ர்க‌ள். த‌மிழ‌ன் மன‌‌தி‌ல் இடி‌விழு‌ந்து ந‌ி‌ற்‌கிறா‌ன். த‌மி‌‌ழ்‌ச்சா‌தி உறை‌ந்து போ‌ய் ‌கிட‌க்‌கிறது. இ‌ந்‌தியா நட‌த்த‌ வே‌ண்டிய போரை நா‌ங்க‌ள் நட‌‌த்‌தியு‌ள்ளோ‌ம் எ‌ன்று ராஜப‌க்சே கொ‌க்க‌ரி‌க்‌கிறா‌ன். 25,000 ஈழ‌த் த‌‌மிழ‌ர்களை உ‌யிரோடு புதை‌த்து‌ள்ளன‌ர் ‌சி‌ங்கள‌வர்க‌ள்.

 பிரபாகர‌ன் இற‌ந்து ‌வி‌ட்டா‌ர், அவ‌ர் உடலை எ‌‌ரி‌த்து சா‌ம்பலை கட‌லி‌ல் ‌வீ‌சி‌வி‌ட்டோ‌ம் எ‌ன்‌கி‌‌ன்றன‌ர். பிரபாகர‌ன் செ‌‌த்து‌வி‌ட்டார‌ா‌ம். மா‌வீரனு‌க்கு ஏதடா மரண‌ம். வா‌ர்‌‌த்தை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் அவ‌ர் மரண‌ம் அட‌ை‌ந்‌‌திரு‌க்கலா‌ம். வா‌ழ்‌க்கை‌யி‌ல் அவ‌ர் ஒருபோது‌ம் மரண‌ம் அடையமா‌ட்டா‌ர். பிரபாகர‌ன் செ‌ய்த ஒரே தவறு, ந‌ல்லவனாக ‌அ‌ற்புத ம‌னிதனாக இரு‌ந்ததுதா‌ன்.

தி‌ருகோணமலையை அமெ‌ரி‌க்காவு‌க்கு ‌வி‌ட்டு‌க் கொடு‌த்‌திரு‌ந்தா‌ல் இ‌வ்வளவு பெ‌ரிய இழ‌ப்பை ச‌ந்‌தி‌த்து இரு‌க்க மா‌ட்டா‌ர். சி‌ங்கள‌வர்க‌ள் செ‌ய்த அ‌ட்டூ‌‌ழிய‌த்தை‌ப் போல நாமு‌ம் செ‌ய்‌திரு‌க்க வே‌ண்டு‌ம். ஆனா‌ல் ‌பிரபாகர‌ன் செ‌ய்ய‌வி‌ல்லை. க‌ற்ப‌ழி‌ப்புகளை நட‌த்‌தினா‌ர்க‌ள். ப‌ச்‌சிள‌ங் குழ‌ந்தைகளை கொ‌ன்று ‌‌கு‌வி‌த்தா‌ர்க‌ள். பிரபாகர‌ன் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தா‌ல், கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து 5 ல‌ட்ச‌‌‌த்‌திற‌்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ம‌க்களை கொ‌ன்று கு‌வி‌த்‌திரு‌க்க முடியு‌ம். அதை அவ‌ர் ‌விரு‌ம்ப‌வி‌ல்லை.

மரு‌த்துவமனை, ப‌ள்‌ளி‌க்கூட‌ம், பொதும‌க்க‌ள் வாழு‌ம் பகு‌‌திக‌ளி‌ல் கு‌ண்டுபோட வே‌ண்டா‌ம் எ‌ன்று கூ‌றி‌வி‌ட்டா‌ர். இ‌ன்றை‌க்கு, பிரபாகர‌னி‌ன் 75 வயது ‌த‌ந்தையு‌ம், 72 வயது தாயாரு‌ம் ‌சி‌ங்கள இராணுவ‌த்‌தி‌ன் ‌பிடி‌‌யி‌ல் இரு‌க்‌கிறா‌‌ர்க‌ள். விசாரணை எ‌ன்‌‌கிற பெய‌ரி‌ல் அழை‌த்து‌ச் செ‌ன்‌றிரு‌க்‌கிறா‌ர்க‌ள். அ‌வ‌ர்களை எ‌ப்படியெ‌ல்லா‌ம் ‌சி‌த்ரவதை செ‌ய்‌கிறா‌ர்களோ? தெ‌ரிய‌வி‌ல்லை.

சி‌ங்கள இராணுவ‌‌ம் செ‌ய்த அ‌த்து‌மீற‌ல்களு‌க்கு‌ம் ம‌னித உ‌ரிமை ‌மீற‌ல்களு‌க்கு‌ம் ஆதார‌ம் இரு‌ப்பதாக இ‌ன்றை‌க்கு அமெ‌ரி‌க்கா சொ‌ல்‌கிறது. இ‌‌ந்த அமெ‌ரி‌க்கா அ‌ன்றை‌க்கு ஏ‌ன் சொ‌ல்ல‌வி‌ல்லை?ஐ.நா. பொது‌ச் செயல‌ர் பா‌ன் ‌கீ மூ‌ன் எ‌ல்லா‌ம் முடி‌ந்த ‌பிறகு இ‌ன்று இல‌ங்கை‌க்கு செ‌ன்று பா‌ர்வை‌யிடு‌கிறா‌‌ர். உலக‌த் த‌மி‌ழ் இனமே வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்‌திரு‌ந்தபோது அ‌ன்றை‌க்கு அவ‌ர் செ‌ன்‌றிரு‌க்கலாமே? அ‌ன்று செ‌ல்ல‌‌வி‌ல்லை.

சீனா செ‌ங்கொடி தூ‌க்‌கி ‌நி‌ற்‌கிறது. அ‌ந்த‌க் கொடியை தூ‌க்க அத‌ற்கு எ‌ன்ன தகு‌தி இரு‌க்‌கிறது. இ‌‌ங்‌கிலா‌ந்து, இ‌ஸ்ரே‌ல் போ‌ன்ற நாடுக‌ள் எ‌ல்லா‌ம் ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு ஆதரவாக வ‌ந்து ‌நி‌ற்‌கி‌ன்றன. ஆனா‌ல் இ‌ந்‌தியா எ‌‌திராக உ‌ள்ளது. இதை‌ச் சொ‌ன்னா‌ல் இறையா‌ண்மை ‌மீறலா?

நடேச‌ன், பு‌‌‌லி‌த்தேவ‌ன் உ‌ள்‌ளி‌ட்ட 350 பே‌ர் வெ‌ள்ளை‌க்கொடி தா‌ங்‌கி ‌சி‌ங்கள இராணுவ‌த்தை நோ‌க்‌கி வ‌ந்தா‌ர்க‌ள். அவ‌ர்களை வ‌‌ஞ்சகமாக கொ‌ன்று கொடு‌ஞ்செய‌ல் பு‌ரி‌ந்ததை உல‌கி‌ல் யாராவது க‌ண்டி‌த்து‌ள்ளா‌ர்களா?

இதுவரை நட‌ந்தது மு‌ன்னோ‌ட்ட‌ம்தா‌ன். இ‌னி தா‌ண்டா போ‌ர் நட‌க்க‌ப் போ‌கிறது. 5ஆ‌ம் க‌ட்ட‌‌ப் போ‌ரி‌ல் ‌பிரபாகர‌ன் கடைப்பிடி‌த்த மரபுகளை நா‌ங்க‌ள் கடைப்‌பிடி‌க்க‌ப் போ‌வ‌தி‌ல்லை. ஒரு ‌சி‌ங்கள‌வன் கூட ‌‌நி‌‌ம்ம‌தியாக உற‌ங்க முடியாத அள‌வி‌ற்கு தா‌க்குவோ‌ம். கொழு‌ம்பு நகரு‌க்கு‌ள் புகு‌ந்து தா‌க்குத‌ல் நட‌த்துவோ‌ம். மானமு‌ள்ள கடை‌சி ஒரு த‌மிழ‌ன் இரு‌க்கு‌ம்வரை ‌சி‌ங்கள‌வர்களு‌க்கு எ‌திரான போரா‌ட்ட‌ம் தொடரு‌ம்.

ந‌‌ள்‌ளிர‌வி‌ல் ஒரு பெ‌ண் நகை அ‌ணி‌ந்து பாதுகா‌ப்பாக நட‌ந்து செ‌ல்லு‌ம் போதுதா‌ன் சுத‌ந்‌திர‌ம் ‌கிடை‌த்து ‌வி‌ட்டதாக அ‌ர்‌த்த‌ம் எ‌‌ன்று கா‌ந்‌தி கூ‌றினா‌ர். இ‌ந்த கா‌ந்‌தி‌யி‌ன் கனவை ‌பிரபாகர‌ன் ‌நனவா‌க்‌கினா‌ர். அ‌‌ற்புதமான த‌மி‌‌ழ்‌‌த் தேச‌த்தை அ‌ங்கு ‌‌நி‌ர்மா‌ணி‌த்தா‌ர். நீ‌தி‌த்துறை, காவ‌ல்துறை உ‌ள்‌ளி‌ட்ட அனை‌த்து துறைகளையு‌ம் க‌ட்டமை‌த்தா‌ர். அ‌ங்கு ‌திருட‌ன் இ‌ல்லை, எ‌ந்த கு‌ற்றமு‌ம் நடைபெற‌வி‌ல்லை. அ‌ப்படி‌ப்ப‌ட்ட தேச‌த்தை ‌சிதை‌த்து ‌வி‌ட்டா‌ர்க‌ள்.

இத‌ற்கு காரணமாக இரு‌ந்த இ‌ந்‌திய அரசை க‌ண்டி‌ப்பது தவறா? இ‌ந்‌தியா எ‌ன்றா‌ல் ஒரு தேச‌ம். வா‌‌ஜ்பா‌ய் உ‌ள்‌ளி‌ட்ட வேறு பலரு‌ம் ‌பிரதமராக இரு‌ந்து‌ள்ளா‌ர்க‌ள். தேச‌த்தை நா‌ன் குறை கூற‌வி‌‌ல்லை. கா‌ங்‌கிர‌ஸ் அரசையு‌ம் அத‌ன் தலைமையையு‌ம்தா‌ன் கு‌ற்ற‌ம்சா‌ட்டுகிறே‌ன்.

இ‌ங்கு‌ள்ள த‌மிழ‌ர்க‌ள் பல‌ர் நட‌‌ந்து கொ‌ண்டதை ‌நினை‌க்கு‌ம்போது அவமானமாக இரு‌க்‌கிறது. பணமா? போரா‌ட்டமா? எ‌ன்ற கே‌ள்‌வி எழு‌ந்த போது, பண‌த்த‌ி‌ன் ப‌க்க‌ம் சே‌ர்‌ந்து ‌வி‌ட்டானே எ‌ன் த‌மிழ‌ன் எ‌ன்று ‌நினை‌த்து வெ‌ட்க‌ப்படு‌கிறே‌‌ன். எ‌ன் ‌வீ‌ட்டு‌க் கூரை ‌தீ‌ப்‌‌பிடி‌த்து எ‌ரியு‌ம்போதுதா‌ன், த‌ண்‌‌ணீ‌ர் எடு‌த்து வருவே‌ன் எ‌ன்ற எ‌ண்ண‌த்த‌ி‌ல் பல த‌‌மிழ‌ர்க‌ள் இ‌ங்கு உ‌ள்ளன‌ர்.

இ‌ந்த‌நிலை ந‌ல்லதா? உன‌க்கு பா‌தி‌ப்பு வரு‌ம் போது உதவுவத‌ற்கு அரு‌கி‌ல் யாரு‌ம் இரு‌க்க மா‌ட்டா‌ர்‌க‌ள். வைகோ, தா.பா‌ண்டிய‌ன் பாராளும‌ன்ற‌த்த‌ி‌ல் இரு‌ந்தா‌ல், த‌மிழக ‌மீனவ‌ர்க‌‌ள் கட‌லி‌ல் சுட‌ப்ப‌ட்டு செ‌த்‌திரு‌ப்பா‌ர்களா? இ‌னிமேலாவது த‌மிழ‌ர்க‌ள் வெகு‌ண்டு எழ வே‌ண்டு‌ம். இ‌ல்லை‌வி‌ட்டா‌ல், த‌மி‌‌ழ் இன‌த்தை கா‌ப்பா‌ற்ற வே‌ண்டு‌ம்.

இ‌ன்றை‌க்கு உலக அமை‌தி‌க்கான நோப‌ல் ப‌ரிசு‌க்கு உக‌ந்த நப‌ர் மா‌வீர‌ன் ‌பிரபாகர‌ன்தா‌ன்.

இ‌ந்‌‌தியாவு‌ம் ‌‌சீனாவு‌ம் பா‌‌கி‌ஸ்தானு‌ம் எ‌ந்த கால‌த்‌திலாவது ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்தது‌ண்டா? எ‌ந்த‌ப் ‌பிர‌ச்சினையை எடு‌த்து‌க்கொ‌ண்டாலு‌ம் ‌சீனாவு‌ம், இ‌ந்‌தியாவு‌ம் அ‌ல்லது இ‌ந்‌தியாவு‌ம், பா‌க‌ி‌ஸ்தானு‌ம் ‌எ‌திரு‌ம் பு‌திருமாக‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரையு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌த்து வை‌த்த பெருமை ‌பிரபாகரனை‌த்தா‌ன் சேரு‌ம். பிரபாகர‌னை எ‌தி‌ர்‌ப்பத‌ற்கு‌த்தா‌ன் இவ‌ர்க‌ள் மூ‌ன்று பேரு‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌‌ந்து‌ள்ளா‌ர்க‌ள்.

இல‌‌‌ங்கை‌க்கு எ‌திராக ஐ.நா.சபை‌யி‌ல் இ‌ங்‌கிலா‌ந்து, சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து உ‌ள்‌ளி‌ட்ட நாடு‌‌க‌ள் கொ‌ண்டு வ‌ந்த ‌தீ‌ர்மான‌ம் இ‌ன்றை‌க்கு தோ‌ற்கடி‌‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌க்கு ஆதரவாக ‌நி‌‌ன்று இ‌ந்த ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா தோ‌ற்கடி‌த்‌திரு‌க்‌கிறது.

தீ‌ர்மான‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்‌றிரு‌ந்தா‌ல் முத‌ல் கு‌ற்றவா‌ளியாக இ‌ந்‌தியா ‌நி‌ன்‌றிரு‌க்கு‌ம். அத‌ன் அரு‌கி‌ல் ‌சீனாவு‌ம், பா‌கி‌ஸ்தானு‌ம் ‌நி‌‌ற்கு‌ம். அ‌ந்த‌ப் ப‌ழி‌க்கு பய‌ந்துதா‌ன் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌‌‌தியா தோ‌ற்கடி‌த்து‌ள்ளது.

எ‌ங்க‌ள் ஆ‌ழ்மன‌தி‌ல் வேதனை‌த் ‌தீ எ‌ரி‌ந்து கொ‌ண்டிரு‌க்‌கிறது. அது எ‌ப்படி வெடி‌த்து வெ‌ளி‌க்‌கிள‌ம்ப‌ப் போ‌கிறது? எ‌ன்பதை‌‌ப் பா‌ர்‌க்க‌த்தா‌ன் போ‌கி‌றீ‌ர்க‌ள். மான‌மி‌க்க ‌வீர‌ம் பொரு‌ந்‌திய த‌மிழ‌ர்‌ கூ‌ட்ட‌ம் இ‌ன்னு‌ம் இரு‌ப்பதை மற‌ந்து‌விட வே‌ண்டா‌ம்" எ‌‌ன்று இய‌க்குன‌ர் ‌சீமா‌ன் பே‌சினா‌ர்.

StumbleUpon.com Read more...

"அசத்தப்போவது யாரு" புகழ் டிவி நடிகர் விபத்தில் மரணம்

 
 


காங்கயம், மே.31-

கார் மீது லாரி மோதிய விபத்தில் டி.வி. நடிகர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டி.வி. நடிகர்

கோவை ஒப்பணக்காரவீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவருடைய மகன் ரமேஷ்குமார் (வயது 40). `மிமிக்ரி' கலைஞரான இவர் கோவை ரமேஷ் என்ற பெயரில் டி.வி.யில் `அசத்தப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் நடித்து வந்தார். கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மாரப்பன் என்பவரின் மகன் கார்த்திகேயன் என்ற மோகன்குமார் (30). இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர்கள் இருவரும் திருவாரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர். பின்னர் நிகழ்ச்சியை முடித்து விட்டு ரமேஷ்குமார், கார்த்திகேயன், அசோக் ஆகியோர் காரில் கோவை நோக்கி வந்து கொண்டு இருந்தனர்.


விபத்தில் பலி

திருச்சி வந்ததும் காரில் இருந்து அசோக் இறங்கி விட்டார். பின்னர் ரமேஷ்குமார், கார்த்திகேயன் இருவரும் கோவை நோக்கி வந்தனர். நேற்று காலை 6 மணி அளவில் அவர்கள் காங்கயம்-முத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டு இருந்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டி வந்தார். அப்போது எதிரே வந்த லாரி, திடீரென்று கார் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த கோவை ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

லாரி டிரைவர் கைது

இது குறித்து தகவல் கிடைத்ததும் காங்கயம் போலீசாரும், காங்கயம் தீயணைப்பு நிலைய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், காரின் இடிபாடுகளில் சிக்கி இறந்த கோவை ரமேஷ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது உடல்களை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் முருகசாமி (வயது33) என்பவரை கைது செய்தனர். இவர் கோவை மதுக்கரை போடிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

StumbleUpon.com Read more...

செல்போனில் நிர்வாண படம் எடுத்த ஒரு போலீஸ்காரர்

>> Saturday, May 30, 2009

போலீசாரிடம் சிக்கி சீரழிந்த இளம்பெண்!
 
ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் போலீஸ் பயிற்சி மையத்தில் சமையல் வேலை செய்து வருபவர் உமா (28) (பெயர் மாற்றம்) இவரை அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மிரட்டி கற்பழித்தார். இதனால் அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
 
இது பற்றி அங்குள்ள சில போலீஸ்காரர்கள் அவரிடம் விசாரித்தபோது சப்- இன்ஸ்பெக்டர் கற்பழித்ததை கூறினாள்.
 
இந்நிலையில் அவர் அங்குள்ள குளியல் அறையில் குளிப்பதை ஒரு போலீஸ்காரர் தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அதை அவரிடம் காட்டி, இதை சி.டி.யில் பதிவு செய்து வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி கற்பழித்தார். பின்னர் அவரது நண்பர்கள் 9 பேரை அங்கு வரவழைத்தார். அவர்கள் கும்பலாக சேர்ந்து அவளை கற்பழித்தனர்.
 
இதில் அவர் மயங்கி விழுந்ததால் போலீசார் அவளை போட்டு விட்டு தப்பி ஓடினார்கள்.
 
இது பற்றி அவள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணாவை சந்தித்து புகார் கொடுத்தார். ராமகிருஷ்ணா உத்தரவின் பேரில் உமாவை கற்பழித்த போலீசாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் உமாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 
இது பற்றி உமா கூறும்போது, செல்போனில் என்னை நிர்வாண படம் எடுத்து மிரட்டி கற்பழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என்றார்.

StumbleUpon.com Read more...

சானியா மிர்சா இனிமே இந்த உடையில் தான் நீங்கள் பார்க்க முடியும்?




சானியா மிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம்

டென்னிஸ் உலகின் இளம் புயல் சானியாமிர்சா. தனது மின்னல் வேக ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்தவர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அவர் மகேஷ்பூபதியுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கிராண்ட்ஸ் சிலாம் வென்று சாதனை படைத்தார்.

டென்னிஸ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த சானியாமிர்சாவுக்கு ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது. அவர் சிறு வயது முதலே தன்னுடன் படித்த சோரப்மிர்சா என்பவரை மணக்கிறார். இருவரும் நெருங்கிய உறவினர்கள்.

சோரப்மிர்சா ஐதராபாத்தில் பேக்கரி, ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது தந்தை கம்ரான் மிர்சா ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

சானியா மிர்சாவின் தந்தை இம்ரான் மிர்சாவும், கம்ரான் மிர்சாவும் இணைந்து கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சானியா மிர்சா சோரப் மிர்சா திருமண நிச்சயதார்த்தத்தை ஐதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு அனுப்பப்படுகிறது.

நிச்சயதார்த்தத்தின் போது திருமண தேதி முடிவு செய்யப்படும் என்று சோரப் மிர்சாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.

சானியா மிர்சாவின் திருமணம் பற்றி அறிந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் கூறும்போது, சானியா மிர்சா திருமணத்திற்கு பிறகும் டென்னிஸ் ஆடவேண்டும் என்றனர்.

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளை வென்றதும் ராஜபக்சேவுக்கு பாராட்டின தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள்

விடுதலைப்புலிகளை வென்றதும் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்தினார்கள்: ராஜபக்சே

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே 'தி வீக்' என்ற ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அப்பேட்டியில்,  ''புலிகளுக்கு எதிராக என்னுடைய வெற்றியும் சோனியா காந்தியின் தேர்தல் வெற்றியும் ஒரே சமயத்தில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல்
காட்டியிருக்கிறது.


விடுதலைப் புலிகளை ஆதரித்த கட்சிகள் தோற்றுவிட்டன; எங்களுடைய நடவடிக்கைகளை ஆதரித்த கட்சியும் கூட்டணியும்
வென்றிருக்கிறது. புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள்.


 புலிகளுக்கு எதிரான போர் முடிந்ததும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல அரசியல் தலைவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு
பாராட்டினார்கள். அவர்கள் யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை''அதிரவைத்துள்ளார் ராஜபக்சே.

StumbleUpon.com Read more...

கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.

 

இலங்கை கிழக்கு பகுதியில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். இதனால் கிழக்கு மாகாணம் மீது சிங்கள ராணுவத்தின் கவனம் திரும்பி உள்ளது.

இது பற்றி, இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா,

''இலங்கை கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். இதற்காக தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

 மேலும் 300 தற்கொலைப் படையினர் இலங்கையின் பல பகுதிகளில் ஊடுருவி இருக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. எனவே ராணுவத்தை உஷார்படுத்தி உள்ளோம்.

வடக்கு பகுதியில் கூடுதல் ராணுவ படையை நிரந்தரமாக வைக்க இயலாது. மற்ற பகுதி அச்சுறுத்தல்களை ராணுவம் எதிர்கொள்ள வேண்டியதுள்ளது. எனவே வடக்கு மாகாணத்தில் உள்ள ராணுவம் படிப்படியாக வாபஸ் பெறப்பட்டு கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி வைக்கப்படும்''என்று தெரிவித்துள்ளார்.

StumbleUpon.com Read more...

தினத்தந்தி:விடுதலைப்புலி தளபதி வவுனியா முகாமில் கைது?

>> Friday, May 29, 2009


பெண் விடுதலைப்புலி தளபதி தமிழினி வவுனியா முகாமில் கைது
குடும்பத்தினருடன் தங்கி இருந்தபோது ராணுவத்திடம் பிடிபட்டார்


கொழும்பு, மே.30-

வவுனியா முகாமில் குடும்பத்தினருடன் தங்கி இருந்த பெண் விடுதலைப்புலி தளபதி தமிழினியை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தமிழினி கைது

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண்கள் பிரிவு தளபதியாக இருந்து வந்தவர் தமிழினி. வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் இவர் தனது தாயார் சுப்பிரமணியம் கவுரி விஜயராஜா, சகோதரி மகேஸ்வரி ஆகியோருடன் தங்கி இருந்தார். அப்போது, தமிழினியை ராணுவத்தினர் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்.

தமிழினி கைதானது பற்றியும், அவர் எப்படி அகதிகள் முகாமுக்கு வந்தார்? என்பது பற்றிய விவரங்களும் ஆசியன் டிரிபிïன் பத்திரிகையின் இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

அந்த தகவல்கள் வருமாறு:-

தாயாருடன் வந்தார்

முல்லைத்தீவு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தை எட்டியதும், பாதுகாக்கப்பட்ட புதுமாத்தளன் பகுதியில் இருந்து ஏராளமான தமிழர்கள் உயிர் தப்புவதற்காக ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு அகதிகளாக வந்தனர். அப்போது புதுமாத்தளன் பகுதியில் இருந்து தமிழினியும் தனது தாயார் சுப்பிரமணியம் கவுரி விஜயராஜா, சகோதரி மகேஸ்வரி ஆகியோருடன் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தார்.

தான் யார் என்பது அடையாளம் தெரிந்து விடாமல் இருப்பதற்காக தன்னிடம் இருந்த சயனைடு விஷ குப்பி, கைத்துப்பாக்கி ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு மக்களோடு மக்களாக கலந்து ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து விட்டார். அப்போது, உடன் வந்த அகதிகளுக்கு தமிழினி யார் என்று அடையாளம் தெரியவில்லை.

அகதி முகாமில் கைது

இதனால் தமிழினி மற்ற அகதிகளுடன் முகாமுக்கு சென்று தனது தயார் மற்றும் சகோதரியுடன் தங்கி இருந்தார். என்றாலும் அதன்பிறகு ராணுவத்தினர் முகாமுக்கு சென்று விசாரணை நடத்திய போது, தமிழினி பெண் விடுதலைப்புலி இயக்க தளபதி என தெரிந்து விட்டது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

பின்னர் தமிழினியிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தன.

கல்லூரியில் படித்தவர்

தமிழினியின் உண்மையான பெயர் சிவத்தாய். பரந்தன் இந்து கல்லூரியிலும், கிளிநொச்சியில் உள்ள சென்டிரல் கல்லூரியிலும் படித்தவர். 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு தமிழினி என்ற பெயர் சூட்டப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவரது பதிவு எண் 1736.

நீர்வேலி என்ற இடத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் போர் பயிற்சி பெற்ற தமிழினிக்கு, முதலில் ஒரு கயிறு தொழிற்சாலையை கவனிக்கும் பொறுப்பும், அதன்பிறகு கிலாலியில் உள்ள பண்ணையை கவனிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திலும் பணியாற்றி உள்ளார்.

மற்றொரு சகோதரி பலி

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண்கள் பிரிவு தளபதியாக இருந்த நெஸ்மியா என்பவர் முகமலை என்ற இடத்தில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் பலியானதை தொடர்ந்து, அந்த பதவிக்கு தமிழினி நியமிக்கப்பட்டார்.

தமிழினியின் மற்றொரு சகோதரியான சாந்திலன் கடந்த 1998-ம் ஆண்டு பரந்தன் என்ற இடத்தில் ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

 


 

StumbleUpon.com Read more...

'குமுதம் இதழ்' சாடல்:ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் ' நடுநிலைமை':

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் 'நாடக நடுநிலைமை': 'குமுதம்' சாடல்
ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்தியாவில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் 'நாடக நடுநிலைமை'யை கடைப்பிடித்து வருவதாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழ் சாடியுள்ளது.

இது தொடர்பாக 'குமுதம்' வார இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு:

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.

சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.

இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது. அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்... இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

StumbleUpon.com Read more...

திடீர் அறிவிப்பு:எங்களால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் ;திடீர் அறிவிப்பு

எங்களால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் : பாகிஸ்தான் ராணுவம் அதிரடி
 
இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்திவந்தது.  சமீபத்தில் போரில் விடுதலைப்புலிகளை  முற்றிலுமாக அழித்துவிட்டதாக இலங்கை ராணுவத்தினர் அறிவித்தனர்.


விடுதலைப்புலிகளூடனான போரில் இலங்கை தீவிர தாக்குதலில் ஈடுபடுவதற்கு பல்வேறு நாடுகள் ஆயுத மற்றும் ஆட்கள் உதவி செய்துவந்ததாக பேசப்பட்டது.

இந்நிலையில் ''நாங்கள் உதவியதால்தான் இலங்கை ராணுவத்தால் விடுதலைப்புலிகளை வெல்ல முடிந்தது என்று பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
மேலும்,  2008-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா பாகிஸ்தான் சென்று அந்த நாட்டு தளபதி பர்வீஸ் கயானியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கை போருக்கு பல்வேறு உதவிகளை அவர் கேட்டார்.


அதன்படி ஏராளமான உதவிகளை பாகிஸ்தான் ராணுவம் செய்தது. பல்வேறு தொழில் நுட்ப கருவிகளை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்கு அதிகாரிகளையும் பாகிஸ்தானே அனுப்பி வைத்தது.

இந்த உதவிக்கு பிறகு தான் இலங்கை ராணுவம் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்ததாகவும் அந்த ராணுவ அதிகாரி கூறியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

பிரபாகரன்-சார்லஸ் டிஎன்ஏ பொருந்தியது?-இலங்கை இராணுவம் மீண்டும் புருடா

கொழும்பு: பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் அந்தோணியுடைய டிஎன்ஏக்கள் பொருத்தமாக இருப்பதாகவும், இதன் மூலம் பிரபாகரன் மரணமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

மே 18ம் தேதி பிரபாகரனுடைய உடலை கருணாவும், தயா மாஸ்டரும் அடையாளம் காட்டியதாகவும், பிரபாகரன் மரணமடைந்திருப்பதை டிஎன்ஏ சோதனை உறுதி செய்துள்ளதாகவும் கூறியது ராணுவம். பின்னர் அடுத்த ஓரிரு நாட்களில் பிரபாகரனுடைய உடலை எரித்து சாம்பலை கடலில் வீசி விட்டதாகவும் அது கூறியது.

இருப்பினும் பிரபாகரன் மரணம் குறித்தும், அவருடைய உடல் என்று ராணுவம் காட்டிய உடலுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், சார்லஸ் அந்தோணி மற்றும் பிரபாகரனுடைய டிஎன்ஏக்கள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதாகவும், இரண்டும் ஒத்துப் போவதாகவும், இதன் மூலம் பிரபாகரனுடைய மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவத்தை கொண்ட இன்னொருவர்:காவற்துறைப் பேச்சாளர் அதிர்ச்சி தகவல்

>> Thursday, May 28, 2009

கொட்டாஞ்சேனையில் சுடப்பட்ட இளைஞரின் தந்தை விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவத்தை ஒத்தவர்: காவற்துறைப் பேச்சாளர்
 
கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடைய சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை புதுச்செட்டித்தெருவில் நேற்று முன்தினம் பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த விமலன் என்பவரின் தந்தையான சற்குணராஜாவே இவ்வாறு இனங்காணப்பட்ட சந்தேக நபர் எனத் தெரிவந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற போலி நபர் ஒருவர் இருப்பதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த போலிப் பிரபாகரன் குறித்த தீவிர விசாரணைகளை நடத்தி வந்த பாதுகாப்பு தரப்பினர் அவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

இருப்பினும் அந்தச்சந்தேக நபருடைய புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருந்தாலும் இது தொடர்பில் கொட்டாஞ்சேனை காற்துறையினர் உட்பட விசேட காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்
.

StumbleUpon.com Read more...

பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்-இன்று பழ.நெடுமாறன் தகவல்

பிரபாகரன் விரைவில் வெளியே வருவார்: நெல்லையில் பழ.நெடுமாறன் தகவல்
 
 
 
வைகோ எம்.பி.யாக வரக்கூடாது என்று முறையற்ற முறையில் செயல்பட்டுள்ளனர். அவர்கள் எம்.பி.யாக இருக்கும் போது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ராஜீவ் காந்தியிடமே நேருக்கு நேராக கேள்வி கேட்டு திணறடித்த துணிச்சல் பெற்றவர். தட்டி கேட்கும் குரல் நாடாளுமன்றத்தில் வரக்கூடாது என்பதற்காகத்தான் அவரை தோற்கடித்துள்ளனர்.

StumbleUpon.com Read more...

ஐநா(UN)வில் சண்டாளர்களுக்கே வெற்றி கிட்டியுள்ளது

சங்கீதம் 12:8 மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.
 
 
சிறிலங்காவிற்கு எதிரான பிரேரணை ஐ.நா.வில் தோற்கடிப்பு: நிதியுதவி வழங்கவும் தீர்மானம்
சிறிலங்கா படையினர் நடத்தி முடித்த தமிழ் இனப் படுகொலையில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு இந்தியா உள்ளிட்ட 22 நாடுகள் எதிராக வாக்களித்து சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தியுள்ளன.

ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற சிறப்பு மாநாட்டில் சிறிலங்கா அரசால் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலையில் அரங்கேறிய மனித உரிமை மீறுல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற பிரேரணையை ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் சுவிற்சர்லாந்து அரசாங்கம் முன்வைத்திருந்தது.

தொடக்கம் முதலே இந்த பிரேரணைக்கு எதிராக இந்தியா தலைமையிலான ஆசிய நாடுகள் செயற்பட்டு வந்தன.

இதனால், இந்த பிரேரணை குறித்து பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்ததால் பிரேரணையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய பின்னர் அது நேற்று புதன்கிழமை மாலையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் வாக்களித்தன. குறிப்பாக சுவிற்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, சிலி, மெக்சிக்கோ உள்ளிட்ட நாடுகள் வாக்களித்தன.

இந்தியா, பாகிஸ்தான், சீனா, மலேசியா, இந்தோனேசியா, கியூபா, ரஸ்யா மற்றும் ஆபிரிக்க நாடுகளும் இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களித்தன.

எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்வதை தவிர்த்தன.

வாக்கெடுப்பின் முடிவில் பிரேரணைக்கு ஆதரவாக 17 நாடுகளும் எதிராக 22 நாடுகளும் வாக்களித்திருந்ததால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிரான இந்த பிரேரணையை நிறைவேற்ற முடியாது அது தோல்வியடைந்துள்ளது.

இதேவேளையில் இதே கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கமும் தனது ஆதரவு நாடுகளின் ஆசியுடன் அனைத்துலக நாடுகளிடம் நிதியுதவி கோரும் பிரேரணை ஒன்றையும் முன்வைத்தது.

இந்த பிரேரணை மீதான விவாதமும் நேற்று இடம்பெற்றது.

சிறிலங்கா அரசாங்கத்திற்கு நிதியுதவி வழங்கும் இந்த பிரேரணைக்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளும் ஆபிரிக்க நாடுகளும் ஆதரவாக வாக்களித்தன. ஐரோப்பிய நாடுகள் நிதியுதவி வழங்குவதற்கு எதிராக வாக்களித்தன.

எனினும் வாக்கெடுப்பின் நிறைவில் சிறிலங்காவின் நிதியுதவி கோரும் பிரேரணைக்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக 12 நாடுகளும் வாக்களித்திருந்தன. எட்டு நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதனால் சிறிலங்கா முன்வைத்த பிரேரணை தீர்மானம் ஆக்கப்பட்டு நிதியுதவி வழங்குவது என முடிவாகியுள்ளது.

இதனிடையே, இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள 41 முகாம்களில் மூன்று லட்சம் மக்கள் வசிப்பதால் பாரிய இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் பிரதிநிதி கவலை வெளியிட்டுள்ளார்.

மக்களின் தரத்தை அரசு பேண வேண்டும் எனவும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் எனவும் நாம் சிறிலங்கா அரசாங்கத்தினை கேட்டுக்கொள்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

StumbleUpon.com Read more...

பிரபாகரனின் பெற்றோர் வவுனியா வதை முகாம்களில் தங்கியுள்ளனர்

பிரபாகரனின் பெற்றோர் வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் – ஜனாதிபதி :

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் வவுனியா அகதி முகாமொன்றில் தங்கியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமொன்றில் பிரபாகரனின் பெற்றோரும், ஏனைய விடுதலைப் புலித் தலைவர்களின் உறவினர்களும் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி ஆகியோர் தம்மிடம் சரணடைந்துள்ளதாகவும் பொதுமக்களுடன் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்ற இவர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் புகைப்பட அல்பம் ஒன்றை கைப்பற்றிய போதே பிரபாகரனின் பெற்றோர் தமிழ் நாட்டில் இருந்து சென்று வன்னியில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1924 ஆம் ஆண்டு சிங்கபூரில் பிறந்த பிரபாகரனின் தந்தையார், அங்கு தபால் துறையில் ஊழியராக பணியாற்றிய பின்னர், 1947 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளார். ஓய்வுபெறும் போது, இவர் யாழ்ப்பாண கச்சேரியில் காணி அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் வன்னியில் தங்கியிருந்த இவர்கள் படையினர் வன்னி பிரதேசத்தை சுற்றிவளைத்த பின்னர், பொதுமக்களுடன் இணைந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத போதிலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழக்கு பதிவுசெய்யப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் அகதி முகாம்களின் வசதிகளை அதிகரிப்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க துரித கதியில் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.
 
அகதி முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மலசலகூடங்களுக்கு பதிலாக 2000 நிரந்தர மலசலகூடங்களை அமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
 
அகதி முகாம்களில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

StumbleUpon.com Read more...

சாட்டிலைட் போனில் பிரபாகரனுடன் பேசிய அரசியல் தலைவர்கள்; “சிம்” கார்டில் ரகசியம் அம்பலம்?

>> Wednesday, May 27, 2009

 
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட போது அவர் வைத்திருந்த சாட்டிலைட் போன் துப்பாக்கி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சாட்டிலைட் போன் சிம்கார்டை எடுத்து இலங்கை ராணுவ உளவு பிரிவினர் ஆராய்ந்தனர். அந்த போனில் அவர் பேசிய எண்கள் அவருக்கு வந்த போன்களின் எண்கள் அனைத்தும் பதிவாகி உள்ளன.

இதன் மூலம் பிரபாகரனுடன் யார்-யார்? பேசியுள்ளனர். அவர் யாருக்கெல்லாம் போன் செய்து பேசி இருக்கிறார் என்ற விவரங்களை கண்டு பிடித்து உள்ளனர்.

தமிழக மற்றும் தென் மாநில அரசியல் தலைவர்கள் அவருடன் பேசியிருப்பதும் சிம் கார்டு மூலம் தெரிய வந்துள்ளது. அந்த தலைவர்கள் யார்? எந்தெந்த தேதிகளில் பேசி உள்ளனர். எந்த எண்ணில் இருந்து பேசி இருக்கிறார். போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

இது பற்றி இலங்கை மந்திரி பாண்டுலா குண வர்த்தனே கூறும் போது பிரபாகரன் போன் சிம் கார்டு மூலம் அவருக்கு யார்-யாருடன்? தொடர்பு இருந்தது என்பதை கண்டு பிடித்துள்ளோம்.

தென் இந்தியாவில் முக்கிய தலைவர்கள் அவருடன் பேசி இருப்பது தெரியவந்துள்ளது என்றார்.

StumbleUpon.com Read more...

பிரபாகரனின் 2-வது மகன் பாலச்சந்திரன் எங்கே?

பிரபாகரனின் 2-வது மகன் பாலச்சந்திரன் எங்கே?

StumbleUpon.com Read more...

இறுதி யுத்தத்தில் 24,100 சிறிலங்கா படையினர் பலி

இறுதி யுத்தத்தில் 24,100 படையினர் பலி
தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதற்காக இறுதியாக சிறிலங்கா அரசாங்கம் 2006 இல் மாவிலாற்றில் ஆரம்பித்த படை நடவடிக்கைகளில் இருந்து இறுதிப்படை நடவடிக்கைகள்வரை சிறி லங்கா இராணுவத்தில் 24 100 இராணுவத்தினர் பலியாகியிருப்பதாகவும், (இதில் தப்பியோடியோர் -காணாமற்போனோர் பட்டியல் உள்ளடக்கப்படவில்லை) இராணுவப் பதிவுகள் உறுதிப்படுத்தியுள்ள போதிலும் இந்த எண்ணிக்கைகளை தலைகீழாக மாற்றியே சிறி லங்கா அரசாங்கம் அறிவித்துள்ளதாக சிங்கள அமைப்பொன்றை ஆதாரமாகக்காட்டி ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் ஆரம்பம் முதலே தமது இழப்புக்களை சிறி லங்கா இராணுவத்தினர் மிகையாக குறைத்தே செய்திகளை வெளியிட்டுவருவதாக சிங்கள மக்களுக்கே புரியும் எனவும், அவர்கள் வாழை மரக்குற்றிகளை தமது பிள்ளைகளின் சடலம் என்று சொல்லப்பட்டே இராணுவத்தினரால் ஏமாற்றப்பட்டவர்கள் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே மாவிலாறு மற்றும் கிழக்கு மாகாண விடுவிப்பின்போது 2 900 இராணுவத்தினரும், வடக்கு கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் 1300 இராணுவத்தினரும் (கபறனை தாக்குதல் உட்பட), மன்னார் பிரதேசங்களில் எற்பட்ட மோதல்களின்போது 3100 இராணுவத்தினரும், மாங்குளம் பிரதேச மீட்பின்போது 2500 பேரும், மல்லாவி, துணுக்காய் பகுதிகளின் மீட்பின்போது 3500 பேரும், பின்னர் நடந்த இடை மோதல்களில் 1700 பேரும் பூனகரி மோதல்களின்போது 4200 பேரும், கிளிநொச்சி கைப்பற்றுதலில் 2600 பேரும், பின்னர் விடுதலைப்புலிகளின் கிளிநொச்சி ஊடறுப்புத்தாக்குதலில், 2300 பேரும், விடுதலைப்புலிகளின் குளம் உடைப்புத்தாக்குதலில் 3300 பேரும் பின்னர் இடம்பெற்ற இறுதித்தாக்குதலில் மிகுதி இராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை தமது தரப்பு இழப்புக்கள் பற்றி குறிப்பிட்ட சிறி லங்கா பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, இறுதிமோதல்களில் 6200 படையினர் மட்டுமே பலியானதாகவும், இத்தனைநாள் இடம்பெற்றமோதல்களில் சுமார் 22 அயிரம் வரையான படைவீரர்களே இறந்துள்ளதாக தெரிவித்தமை மிகவும் கேலிக்குரியதெனவும் இதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

StumbleUpon.com Read more...

தமிழீழ முக்கிய செய்திகள்

>> Tuesday, May 26, 2009

StumbleUpon.com Read more...

பிரபாகரன் இறப்பு குறித்து புலிகள் சொல்வதை நம்பாதீர்

பிரபாகரன் இறப்பு குறித்து புலிகள் சொல்வதை நம்பாதீர்: தா.பாண்டியன்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இறப்பு குறித்து இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் கூறுவதை நம்ப வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தேர்தல் முடிவு குறித்து ஆராய கோவையில் ஜூன் 6 முதல் 9 வரை கட்சியின் மாநில குழுவும், டில்லியில் ஜூலை 3 முதல் 6 வரை தேசிய குழுவும் கூடுகிறது. பொதுத்துறை, காப்பீடு கழகங்களில் 49 சதவீத பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு வங்கிகளை பாதிக்கும். அமெரிக்காவில் யுத்தத்திற்கான கடன் பத்திரங்களில் இந்தியா 31,800 கோடி முதலீடு செய்துள்ளது. இதில் 2008க்கு பிறகு 21 ஆயிரம் கோடி புதிதாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு முதலாளித்துவ பாதையில் செல்ல முடிவு செய்துள்ளதை கண்டித்து பிற கட்சிகளுடன் இணைந்து பொது இயக்கங்கள் நடத்தப்படும். தமிழகத்தில் அ.தி.மு.க., வுடன் கூட்டணி தொடரும். தேர்தல் கமிஷன் நடுநிலைமையுடன் செயல்பட்டாலும், கமிஷன் சொன்னதை அதிகாரிகள் கேட்கவில்லை. இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ளது. காயம்பட்டவர்களின் கிட்னி, கல்லீரல்களை வெட்டி விற்பதாக மனித உரிமை கழகம் குற்றம் சாட்டியுள்ளது. இதை இந்தியா தடுக்க வேண்டும்.

பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று விடுதலைப்புலிகளின் சர்வதேச செய்தி தொடர்பாளர் பத்மநாபன் முதலில் எங்களை தொடர்புகொண்டு கூறினார். 3 நாட்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார் என்றும், அதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது என்றும் கூறினார். அடுத்த 2 மணி நேரத்தில் விடுதலைபுலிகளின் நெட் பிரிவு பொறுப்பாளர் அறிவழகன், "பிரபாகரன் வேறு ஒரு இடத்தில் இருக்கிறார்' என்றார். இவ்விஷயத்தில் இலங்கை அரசும், புலிகளும் கூறுவதை நம்ப வேண்டாம். இதை விட்டுவிடுவது நல்லது என்றார்.

StumbleUpon.com Read more...

புலம்பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளுக்கு ஆபத்து!

படத்தை அழுத்தி பெரிதாக்கி படிக்கவும்



அதிர்வு இணையதளம்

StumbleUpon.com Read more...

ஓஹோ சீக்கியர்கள் கலவரத்துக்கு இதுதான் காரணமா!!!!

சீக்கியர் கலவரம்  ஏற்பட காரணம் என்ன?

  சீக்கிய குருக்கள் 1469-ம் ஆண்டு முதல் 1708-ம் ஆண்டு வரை பாடிய பஜனை பாடல்கள், போதனைகள் குரு கிராந்த் சாகிப் என்ற புனித நூலாக தொகுக்கப்பட்டுள்ளது.

1430 பக்கங்கள் கொண்ட இந்த புனித நூலை சீக்கியர்கள் வணங்கி வருகிறார்கள்.

சீக்கியர்களில் அதர்மி, தேரா என்ற இரு பிரிவினர் உள்ளனர். அதர்மி இன சீக்கியர்கள் தலைப்பாகை கட்டி இருப்பார்கள். தேரா இன சீக்கியர்கள் தலைப்பாகை கட்டமாட்டார்கள். அவர்கள் தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாபில் சுமார் 50 லட்சம் தலித் சீக்கியர்கள் உள்ளனர்.
 
70 ஆண்டுகளுக்கு முன்பு தேரா கச்சா பிரிவு உண்டானது. இதன் தலைவராக நிரஞ்சன்தாஸ் உள்ளார். வியன்னா சென்றிருந்த அவரது காலில் விழுந்து அவரது ஆதரவாளர்கள் வணங்கினார்கள்.


இதற்கு உயர்சாதி சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். உண்மையான சீக்கியர் புனித நூலான குரு கிராந்த் சாகிப்பை மட்டுமே வணங்க வேண்டும். யார் காலிலும் விழக்கூடாது என்று தகராறு செய்தனர்.

இந்த தகராறு முற்றி, துப்பாக்கி சூட்டில் தேரா சச்சு தலைவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதால் கலவரம் வெடித்தது.

StumbleUpon.com Read more...

வரலாறு படைத்த பிரபாகரன்!!!-அருட்தந்தை

>> Monday, May 25, 2009

     

        றப்பேனோவேலுப்பிள்ளை பிரபாகரன் தந்த பதிலை? 2002-ம் ஆண்டு நேர்காணலில் நான் கேட்ட 62-வது கேள்வி அது. ""உங்களுக்கு கடும் கோபம் வர வேண்டுமென்றால் நான் என்ன செய்ய வேண்டும்?'' அதற்கு அனிச்சை செயல் வேகத்தோடு அவரிடமிருந்து வந்த பதில்: ""என் தமிழ் இனத்தின் எதிரியாக இருந்து பாருங்கள். அப்ப தெரியும் என்ட கோபம்!''

வலியது வாழும். நியாயம், நீதி, உணர்வுகள், ஒழுக் கம், விழுமியங்கள் எவை பற்றியும் அதிகம் அலட்டிக் கொள்ளாத இயற்கையின் நியதி இது. ஆம், வலியது வாழும். போரின் கொடுமையோ அதனிலும் பெரிது. வெற்றி பெற்றவன் அனைத்தையும் எடுத்துக் கொள்வான், வரலாறு உட்பட. தோற்றுப் போனவன் தலைகுனிந்து குறுகி நிற்க வேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரனும், தமிழீழ விடுதலைப்புலிகளும் விட்ட பிழைகளையும், செய்த தவறுகளையும்தான் இனி பலரும் அதிகமாகப் பேசப்புறப்படுவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தவறிழைக்காத தேவ தூதர்கள் இல்லைதான். அவர்கள் செய்த குற்றங்களை, குற்றமென்று உரைக்கும் ஒழுக்க நிலை நமக்கு இருந்தால் மட்டுமே அவர்கள் முன்னெடுத்த விடுதலைப் போராட் டத்தை போற்றி, தொடர்ந்து அப்போராட்டத்தின் அரசியல் இலக்குகளை அம்மக்களுக்கு உறுதி செய்யும் செயற்பாடுகளை நாம் மேற்கொள்ள முடியும்.

மாற்றுக் கருத்துடைய பலரை அரசியல் களத்திலிருந்து அகற்றியது, உலக அளவிலான அரசியல் தலைமைத் துவங்களை உருவாக்காதது, "போர் வெற்றி' தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கைகளை மக்களிடையே உருவாக்கி தங்களை மக்களின் "பந்தயக் குதிரைகளாக' நிறுத்தி -மக்களை அரசியல்மயப்படுத்த தவறியது, ராஜீவ்காந்தி படுகொலையில் சம்பந்தப் பட்டது -அல்லது சம்பந்தப்படவில்லை யென்றால் அதனை சரிவர விளக்காதது... என தமிழீழ விடுதலைப்புலிகள் விட்ட பிழைகள் பல உண்டு.

எனினும் தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லாத தமிழ் வரலாறும், அவர்தம் வரலாற்றோடு தொடர்பற்ற தமிழர் எதிர்கால எழுச்சியும் இல்லை என்பதே நிதர்சனம். தமிழர் வரலாற்றின் அகற்றமுடியா ஆதர்ச மாகவும் வரலாற்றுப் பிரமாண்டமாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரன் நிலைபெற்று விட்டார் என்பதுதான் உண்மை. எனவேதான் அவரைப் பற்றின சரியான புரிதல் தமிழ் நாட்டுத் தமிழர்களாகிய நமக்கும் முக்கியமானதாகிறது. தமிழர்களாகிய நமது எதிர்கால எழுச்சிக்கும் அது முக்கியம்.

உலகின் ஒரு மூலையில் மிகச்சிறியதோர் தமிழ்க் கூட்டத்திலிருந்து முன்னுதாரணமான தோர் விடுதலைப் போராட்டத்தை கட்டி யெழுப்பியவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அந்தப் போராட்டம் நமது இனத்தில் பிறந்த தென்பது, உணர்வுகளைத் தவிர வேறெதுவும் பெரிதாகப் பங்களிக்காத நமக்கும் பெருமையே.

நாற்புறமும் நீர்சூழ்ந்த சிறியதோர் நிலப்பரப்பில், இலங்கையோடு சுற்றியிருக்கும் பெரிய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா நாடுகளினது நெருக்குவாரங்களுக்கு ஈடுகொடுத்து, மரபுவழித் தாக்குதல் படை யணிகள், சிறப்புப் படை பிரிவுகள், பீரங்கிப் பிரிவு, கடற்படை, உலக உளவு அமைப்புகள் மெச்சும் மிகத்திறன் கொண்ட புலனாய்வுத் துறை, 70-க்கும் மேலான கப்பல்களை கொண்ட அனைத்துலக ஆயுத கொள்வனவுப் பிரிவு, அரை உரிமை கொண்ட ஒரு செயற்கைக்கோள் -இவற்றிற்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் 2002-முதல் ஓர் அரசுக்கு இருக்க வேண்டிய துறைசார் அலகுகளுடன் கூடியதோர் நடை முறை அரசை உருவாக்கி பல உலக நாடுகளை விடவும் நேர்த்தியான முறையில் அதனை நிர்வகிக்கும் திறனும், கண்ணியமும், ஒழுக்கமும் கொண்ட நிர்வாக ஏற்பாட்டையும் உருவாக்கி சாதனை செய்தவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். உலகெங்கும் யூதர்கள் இருந்தாலும் இஸ்ரேல் அவர்களது உரிமை பூமியாய் இருப்பதுபோல் உலகெங்குமுள்ள எட்டு கோடித் தமிழர்கள் தம் இனத்திற்கும் ஒரு நாடு இருக்கிறது என்று பெருமையுடன் பேசும் நிலைக்கு வெகு அருகில் தமிழினத்தை கொண்டு வந்தவர் அவர்.

அவற்றிற்கெல்லாம் மேலாய் இயல்பாகவே தாழ்வு மனப்பான்மை, இலக்கு நோக்கிய விடாப் பிடியான உறுதியின்மை, அதிகாரவர்க்கத்தை கண்டு அஞ்சுதல் போன்ற குணாதியங்களைக் கொண்ட தமிழ் இனத்தினது மனவெளியில் கண்ணுக்குப் புலப்படாத போராட்டமொன்று நடத்தி, நம்பிக்கை ஊட்டி, துணிவுடன் நிமிர வைத்து, பிறர் வாழ தம் உயிரை மனமுவந்து ஈகம் செய்யும் தலைமுறை ஒன்றினை புடமிட்டு, நானும் பிறந்து பாக்கியம் பெற்ற இத்தமிழினத்தின் சிந்தனை இயக்கத்தையும் போக்கையும் மாற்றியமைத்ததுதான் வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த உண்மையான வரலாறு.

முல்லைத்தீவில் பல்லாயிரம் போராளிகளையும், பலநூறு கோடி ரூபாய் பெறுமதியுடைய ஆயுதங்களை யும் முற்றாக இழந்து ராணுவரீதியாய் நிர்மூலமாகி விட்டாலும்கூட -வேலுப்பிள்ளை பிரபாகரன் படைத்த இந்த மகத்தான வரலாற்றையும், கால் நூற்றாண்டிற்கு முன் தமிழர்கள் கற்பனைகூட செய்து பார்த்திராத அரசியல் உச்சநிலைக்கு தமிழினத்தை அவர் அழைத்து வந்துவிட்டதையும் தமிழர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ராஜீவ்காந்தி படுகொலையில் அவர் குற்றவாளியென்றால் அவ்வாறே இருக்கட்டும். தீர்ப்பு எழுதப்படட்டும், தண்டனையும் தரப்படட்டும். அதேவேளை சில குற்றங்களையும், சில தவறுகளையும் கடந்து அவர் படைத்த இவ்வரலாற்றி னை பெருமையுடன் சுவீகரித்துக் கொள்ளும் உரிமை தமிழராகிய நமக்கு இல்லையென்று சொல்ல எந்த அரசுக்கும், அதிகார அமைப்புக்கும் உரிமை யில்லை.

தனிப்பட்ட மனிதனாகவும், தன் வாழ்விலும் ஒரு இனத்தின் மாபெரும் நாயகனாகப் போற்றப்படும் இயல்புகள், ஒழுக்கங்கள் கொண்டிருந்தார் அவர் என்பதும் முக்கியமானது. ""தலையை குனியும் நிலையில் இங்கே புலிகள் இல்லையடா, எவனும் விலைகள் பேசும் நிலையில் எங்கள் தலைவன் இல்லையடா'' என அவர்கள் பாடும் பாடல் மிகவும் தகுதி யானதே. ""உலகத் தமிழ் மக்கள் உங்களை தேசியத் தலைவர் எனப் போற்றுகிறார்கள். இத்தகுதியை நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?'' என்று 2002-ல் நான் கேட்ட கேள்விக்கு அவர் தந்த பதில் இவரைப் போலொரு நேர்மை யான தலைவரை நாமறிந்த தமிழர் வரலாறு பெற்றிருக்கவில்லை என்ற உணர்வினை அன்றே என்னுள் உருவாக்கியது.

இதோ அவர் சொன்ன அதே வார்த்தைகள்: ""என்னை நானே மிகைப்படுத்திக்கொள் ளும் எண்ணம் எனக்குக் குறைவு. இப்படி தகுதியையெல் லாம் அடைய வேண்டு மென நான் உழைத்ததை விட என் இனத்திற்கான கடமையை செய்ய வேண்டும், எனது மக்களின் விடுதலைக்காக நான் அர்ப்பணிப்போடு போராட வேண்டும் என்ற எண்ணம்தான் மேலோங்கி யிருந்தது. கடமை உணர்வுதான் எனக்கு அதிகம். அதற்கு அப்பால் என்னை நானே பெரிதாக சிந்திக்கிற பழக்கம் எனக்கு இல்லை. என்னோடு கூட நிற்கும் தளபதியர், போராளிகள், அவர்களோடு போராட்ட சவால்களுக்கெல் லாம் ஈடுகொடுக்கும் எமது மக்கள் -எல்லோராலும்தான் போராட்ட சாதனைகள் உருவாக்கப்படுகின்றன''.

தொடர்ந்து நான் கேட்டேன், ""தமிழ் மக்கள் உங்களை அசாதாரணமான ஆற்றல்கள் கொண்ட ஒருவராகப் பார்க்கிறார்களே?'' -இக்கேள்விக்கு அவர் தந்த பதில் எனது வாழ்வில் பெற்ற நேர்காணல் பதில்களிலெல்லாம் அற்புதமானது. ""எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற வகையில் தாம் செய்யவேண்டிய கடமைகளை செய்தார்களென்றால் என்னை சுற்றின இந்த பிரம்மாண்டம் இருக்காது. நான் தலைவராகவே உங்களுக்குத் தெரியமாட்டேன்''. என்னே தெளிவு. என்னே நேர்மை! என்னே தன்னம்பிக்கை!

முல்லைத்தீவு பேரழிவிலிருந்து தங்களையும் விடுதலைப் போராட்டத்தையும் தற்காத்துக்கொள்ள ஒரே ஒரு வாய்ப்பு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இருந்தது. கடந்த ஜனவரி 24 அன்று வன்னிப்பரப்பிலுள்ள கல்மடு குளத்தை புலிகள் உடைத்துவிட நூற்றுக்கணக்கான ராணுவத்தினர் பலியான செய்தியை நக்கீரன் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள். கல்மடு குளத்தைவிட பன்மடங்கு பெரியது இரனைமடு ஏரி. இரனைமடு ஏரியை உடைத்திருந்தால் ஊழிப்பெருக்குபோல் பெருவெள்ளம் புறப்பட்டு வன்னிப் பரப்பு முழுதையும் விழுங்கி பூநகரி வரையுள்ள மரம், செடி, உயிர் அனைத் தையும் அழித்துத் தீர்த்திருக்கும். மிகக் குறைந்தபட்சம் 40,000 சிங்கள ராணுவத் தினர் செத்து மிதந்திருப்பர். அவர்தம் பல்லாயிரம் கோடி பெறுமதியுடைய ஆயுதங்கள், ராணுவ கட்டுமானங்களும் புதையுண்டு போயிருக்கும். இந்த மரண அடியிலிருந்து அடுத்த பத்து ஆண்டு களுக்கு சிங்கள ராணுவம் எழும்பியிருக் காது.

ராஜபக்சே சகோதரர்களின் அரசிய லும் முடிந்திருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தளபதிகள் இறுதி அஸ்திர மாக இரனைமடு ஏரியை உடைக்கும் ஆலோசனையை முன்வைத்தபோது யோசனைகளுக்கு இடம் கொடுக்காம லேயே பிரபாகரன் சொன்னாராம், ""நீங்க சொல்றது சரிதான். இரனை மடுவெ உடைச்சா சிங்கள ஆர்மிகாரனுக்கு மரண அடி கொடுக்கலாம். ஆனால் வன்னியின்றெ பொருளாதாரமும் அதோட போகும். அடுத்த நூறு ஆண்டுக்கு அந்த மண்வளத் தையும் விவசாய பொருளாதாரத்தையும் ஒருத்தராலயும் மீட்டெடுக்க முடியாது.

நம் வன்னி சனம் எத்தனையோ கஷ் டங்கள்பட்டு விடுதலைப்போராட்டத் தோடு நிக்கிறாங்கள். அந்த சனத்துக்கு நாம் இப்படியொரு துரோகம் செய்ய ஏலாது.'' பேரழிவு நெருங்கிவந்த பொழுதில்கூட தனது மக்களின் வாழ்வுக்கான ஆதார வளங்களை அழித்து தன்னையும் இயக்கத்தையும் பாதுகாக்க மறுத்த இந்த மாமனிதனா பயங்கரவாதி? ஐயப்படும் அன்பர் களுக்கும், ஆங்கில ஊடகத்து அந்நியர்களுக்கும் இவற்றையெல் லாம் எடுத்துரையுங்கள். அவர்கள் வனைவு செய்த பயங்கரவாத வர்ணஜாலங்களுக்கு அப்பால் இதயம் கொண்டதொரு மனி தன் பிரபாகரன் என்பதை உரத்துச் சொல்லுங்கள்.

StumbleUpon.com Read more...

தலைவர் மரணம்?:புலிகளின் பேச்சாளர் அறிவிப்பை தமிழர்கள் ஏற்றுக்கொண்டார்களா.



அதிர்வு

StumbleUpon.com Read more...

பெண்களுக்கு மட்டும்!!!:நீங்கள் மாமியாராகவோ,அல்லது மருமகளாகவோ இருந்தால் கண்டிப்பாக இது படியுங்கள்

 
ஹைய்யா..!
* மருமகளை தன்னுடைய மகளை போல் பாவித்தால் கண்டிப்பாக பிரச்சினையே ஏற்படாது. மருமகளுக்கு புரியாததை புரியும்படி, மெதுவாக எடுத்து சொல்லி புரியவைப்பது மாமியாரின் கடமை. மருமகளை குறை சொல்லிக் கொண்டிருந்தால் சிக்கல்கள் அதி கரிக்குமே தவிர, குறையாது. மருமகளின் மகிழ்ச்சியில்தான் உங்கள் மகனின் மகிழ்ச்சியும் உள்ளது. மொத்தத்தில் உங்களின் குடும்பத்தின் மகிழ்ச்சியும் அடங்கியுள்ளது.

* கணவரின் பாராட்டை விட மாமியார், மாமனார் மற்றும் குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்களின் பாராட்டுதலையே மருமகள் மிகவும் விரும்புவாள். அப்படி பாராட்டும் போது உச்சி குளிர்ந்து போவாள். பிறந்த வீட்டிலும், தன்னுடைய தோழிகளிடமும் இதை பெருமையாக சொல்லி மகிழ்வாள். அதனால் மருமகளிடம் நட்பு பாராட்டி, பின்னர் குறைகளை சொன்னால் கண்டிப்பாக மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொள்வாள்.

* மாமியார் மற்றும் மருமகள் இருவருமே உங்கள் வீட்டின் அஸ்திவாரம் நீங்கள்தான் என் பதை உணருங்கள். உங்களுக்குள் தோன்றும் நியாயமான கருத்துகளை அனைவருமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதும், அதற் காக வாக்குவாதம் செய்வதும் தவறு. மாமியாரின் நியாயமான கருத்தை மருமகள் நிராகரிப்பதும், மரு மகளின் முடிவு சரி என தெரிந்தும் வேண்டுமன்றே அதற்கு முட்டுக்கட்டை போடும் மாமியாரும் பிரச்சி னைகளுக்கு இன்னும் விளக்கேற்றி வைக்கிறார் கள்.

* உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை வெளி ஆட் களிடம் சொல்ல வேண்டாம். அதனால் எந்த நன்மையும் உண்டாகாது. இதனால் சிக்கல்கள் இன்னும் அதிகரிக்கும். அதனால் உங்கள் வீட்டுப் பிரச்சினைகளை பெரிதாக்காமல் நீங்களே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குணத்துடன் இருக்கமாட்டார்கள். ஆனால் நல்ல பேச்சுவார்த்தை, நயமான அணுகுமுறை பிரச்சினைகளை குறைக்கவே செய்யும்.

* புரிந்து கொள்ளுதல் என்பதே அன்பின் வெளிப்பாடுதான். அன்பு இல்லை என்றால் புரிந்து கொள்ளவும் முடியாது. குடும்பம் என ஆகிவிட்டால் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பினை முழுமையாக வெளிக்காட்ட வேண்டும். உங்களுக்கு வேண் டியவரை நீங்கள் கவர வேண்டும் என்றால் புரிந்து கொள்வது அவசியம். இதை மாமியார், மருமகள் இருவரும் தெரிந்து கொள்ளுங்கள்.


* மருமகள்களும், தங்களுடைய மாமியார், மாமனாரை அம்மா, அப்பாவாக நினைத்துக் கொண்டாட வேண்டும். மைத்துனர், நாத்தனார் ஆகிய குடும்பத்து உறுப்பினர்களை, பிறந்த வீட்டு சொந்தம் போல் நினைத்தால் உங்கள் வாழ்க்கையும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும். பூமியில் ஒருவர் பிறக்கும்போதே பல உறவுகளைக் கொண்டவராகத் தான் பிறக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* அன்பைப் புரிந்து கொண்டவர்களால் மட்டுமே அளவிலா ஆனந்தம் அடைய முடியும். மாமியார், மருமகள் இருவரும் அளவில்லா அன்பை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதே குடும்பத்திற்கு நல்லது. தனக்கு என்ன பிடிக்கிறதோ அதைத் தான் மருமகளும் செய்ய வேண்டும் என மாமியார் அடம் பிடிப்பது கூடாது. தன்னுடைய மருமகளை நல்ல தோழி யாகவும், மகளாகவும் நினைத்துக் கொண்டாலே போதும்.


* எப்பொழுதும் நம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும்போது தான் நாமும் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை மாமியார், மருமகள் இருவரும் புரிந்து கொள்ளுங்கள். மாமியார், மருமகள் இருவரும் பிரச்சினை இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தால் வீட்டில் அமைதியும், ஆனந்தமும் அதிகரிக்கும். இதனால் ஆண்களுக்கு ஆன்ம பலமும், ஆயுள் பலமும், வருமானமும் அதிகரிக்கும்.

* மருமகள்கள் தங்களுடைய அன்பின் அருமையை புகுந்த வீட்டு உறுப்பினர்கள் புரிந்து கொள்ளும்வரை பொறுமையாக இருப்பது நல்லது. அதே போல் புகுந்த வீட்டில் உள்ளவர்களிடம், எப்போதும் பிறந்த வீட்டுப் பெருமையை பேசிக் கொண்டு இருக்கக் கூடாது. புகுந்த வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது சிறிய தவறு செய்து விட்டாலும், பெரிது படுத்தாமல் அதை அவர்களுக்கு உணர்த்தினாலே போதும்.

* மருமகள்கள் புகுந்த வீட்டில் உள்ள பெரியவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரி யாதையையும், அன்பையும், செய்ய வேண்டிய கடமைகளையும் தவறாமல் செய்ய வேண் டும். பிறந்த வீட்டில் இருந்ததைப் போன்று அன்பு, கடமை, உரிமை மற்றும் பொறுமையை கடைபிடிப்பது மருமகள்களுக்கு மிகவும் அவசியம். மருமகள்களுக்கு பிறந்த வீட்டை விட புகுந்த வீடே மேன்மையானது.

 

StumbleUpon.com Read more...

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: விடுதலைப்புலிகள் உளவு பிரிவு அறிவிப்பு

 
 
 

Claims and scepticism sans evidence

 
The head of the LTTE's Department of International Relations on Sunday announced that the LTTE Leader Velupillai Pirapaharan attained martyrdom fighting the military oppression of the Sri Lankan state on 17 May. However, the LTTE's Department for Diaspora Affairs (DDA) told TamilNet that it would not comment without explicit authorisation from the LTTE leadership. In the meantime, the Intelligence Department of the Tigers reiterated on Sunday that the LTTE leadership is safe and it will re-emerge when the right time comes.

Tamil Nadu leaders, Mr. Vaiko and Mr. Pazha Nedumaran have expressed scepticism Sunday on the reports of Mr. Pirapaharan's demise.

Meanwhile, the general opinion prevails is that Colombo has failed in conclusively establishing the evidence for Pirapaharan's demise. It has not taken any credible efforts to verify evidence either.

Failure in the responsibility of coming out with the truth also falls on the Indian Establishment. The Indian Intelligence has recorded all the details of LTTE leader's physiognomy when it has taken him into custody in mid-80's in India. It should have verified his death with evidence at least for its legal purposes. But observers think that India maybe having its own reasons for its silence.

Even 'omnipotent' powers of the information age have not come out with any authentic statement.

As TamilNet is being heavily pressed by its readership to know the truth, it has become a necessity to state that TamilNet doesn't take any responsibility for any of the stands taken, as these are beyond its independent verification.

StumbleUpon.com Read more...

தலைவர் பிரபாகரன் பற்றி பத்மநாதன் வெளியிடப்பட்ட செய்தி ஒரு சர்வ தேச சதிச்செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்

புலம்பெயர் மக்களே அவதானமாக அறிக்கைகளை ஆய்வு செய்யுங்கள்

 

புலம்பெயர் மக்களே அவதானமாக அறிக்கைகளை ஆய்வு செய்யுங்கள்

லங்கா தீபா என்ற சிங்களப் பத்திரிகையில் „காட்டிலிருந்து தப்பிய புலிகளை கட்டுப்படுத்தல்...'என்ற கட்டுரை வடிவிலான செய்தியை உலகத்தமிழ் செய்திகள் இணையத்தளம் 22.05.09 அன்று மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது.


இவ்வாய்வுக் கட்டுரையின் கருத்து மையமாக லங்காதீபா பத்திரிகை புலம்பெயர் மக்களின் தமிழீழ விடுதலைக்கான எழுச்சியை தளர்நிலைக்கு கொண்டுவருவதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேசத் தொடர்பாளர் திரு.கே.பத்மநாதனை குறி வைத்து இலங்கை அரசு செயலாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது.


இதனடிப்படையில் இன்று திரு.கே.பத்மநாதன் அவர்களால் வெளியிடப்பட்ட தமிழீழத் தேசியத் தலைவரின் மரணம் தொடர்பானதாக கூறப்பட்ட செய்தியாகும்.


ஒரு முக்கியமான விடயத்தை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழர்கள் மனக் கிலேசமடையவோ அல்லது கலக்கமடையவோ தேவையில்லை. புலம்பெயர் தமிழர்கள் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.


தமிழர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவதற்காக பல சதிகள் இடம்பெறுகின்றன. தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் உயிரோடு பாதுகாப்பாக இருக்கிறார்.அவரின் பாதுகாப்பான இடத்தை அறிய முயற்சிக்கும் நடவடிக்கைகளே இன்று வெளிவந்த அறிக்கை.


சர்வதேசத்திற்கு பொறுப்பாக  ஒருவரை நியமித்து அவரின் அறிவித்தல்கள் மூலமாக தமிழர்களை முரண்பட வைப்பதன் மூலம் தமிழீழ விடுதலைப் போரில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு பிளவுபட வைப்பதன் நோக்கமாக இந்த அறிவித்தல்களை நோக்க வேண்டியள்ளது.


திரு.கே.பத்மநாதன் அவர்களால் வெளியிடப்பட்ட தகவலானது அவருக்கு அதற்கான நெருக்கடி ஏன் எந்தச் சூழ்நிலையைக் கொண்டது என்பதை மிகவும் தெளிவு பெற வேண்டும்.


சம்பந்தப்பட்ட அறிக்கை நிச்சயமாக புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்ட  செயலாகும்.


சர்வதேச உளவு நிறுவனங்களின் முனைப்பான செயல்பபாடுகளுக்குள் சர்வதேசத் தொடர்பாளர் சிக்குண்டுள்ளார், அவர் அதற்குள்ளிருந்து தன்னை சுதாகரித்துக் கொண்டு இயல்பு நிலைக்கு வரச் சில நாட்களாகும்.


புலம்பெயர் தமிழர்களையும் சர்வதேசத் தொடர்பாளரையும் முரண்பட வைக்கக்கூடிய சூழ்நிலை தோன்றியுள்ளது. இந்த விடயத்தில் புலம்பெயர் மக்கள் கூரான கத்தியில் நடப்பது போன்றதே.


இன்னும் கொஞ்சம் இது பற்றி ஆய்வு நோக்கில் எழுதலாம்.ஆனால் அது பாதகமான நிலையை ஏறபடுத்தும் என்பதனால் சிலவற்றை தவிர்த்துக் கொள்கின்றேன்.


எனவே திரு.கே.பியின் கடிதத்தை கருத்தில் கொண்டு உங்களுக்குள் கலக்கத்தை ஏற்படுத்த வேண்டாம்.தமிழீழத் தேசியத்தலைவர் பாதுகாப்பாக உயிரோடு இருக்கின்றார்.இந்தக் கடிதத்திற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கின்றது.அந்தக் காரணத்தை இங்கே எழுத விரும்பவில்லை.நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.இக்கடிதம் ஒரு நிர்ப்பந்த நிலையாகக்கூட கருத இடமுண்டு.


இலங்கை ஜனாதிபதியை போர்க் குற்றவாளியாக்குகின்ற பாரிய நடவடிக்கையினை தடுக்கும் தடைகளில் ஒன்றாக இக்கடிதத்தைப் பார்க்க முடிகின்றது.


திரு.கே.பி அவர்கள் இனி ஜனநாயக ரீதியாகவே இப்போராட்டம் இடம்பெறும் என்று சொன்ன  வாரத்தைப் பிரயோகத்தின் மூலம் அவரின் இக்கட்டான சூழ்நிலையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


றோ,இன்ரர்போல்,சிஐஏ போன்றவற்றின் செயல்பாடுகள் எப்படியானவை என்பதை நீங்கள் அறிவீர்கள். திரு.கே.பி அவர்கள் இச்சூழ்நிலைக்குள் அகப்பட்டுக் கொண்டாரா என்ற கேள்வியைத் தவிர்க்க இயலாது.
புலம்பெயர் மக்கள் மத்தியில் தமிழீழ உணர்வைச் சிதைக்கும் திட்டமாவே இக்கடிதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு நாட்டின் மீது பிரயோகிக்கும் இராஜதந்திர அழுத்தத்தைப் போன்றதொரு அழுத்தத்தை தமிழர்கள் மீது பிரயோகிக்கபபட்டு வருகின்றது. அதற்கான காரணம் தமிழர்களின் முனைப்பான வல்லமையேயாகும்.


வன்னிநிலப்பரப்பின் படுகொலை வெளிச்சத்திற்கு வருவதைத் தடுப்பதற்கும் தடைமுகாம்களில் 10,000 புலிப் போராளிகளிருப்பதாகக் கூறி இன்னும் 10,000 தமிழர்களை படுகொலை செய்ய அரசு எடுக்கும் நடவடிக்கையை தமிழர்கள் அவதானிக்க தவற வேண்டும் எனபது அரசின் திட்டமிடலாகும்.


எனவே தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பாக வெளிவந்த செய்தி ஒரு சதிச் செயல் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

 

-அங்கயற்பிரியன்-

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP