சமீபத்திய பதிவுகள்

திடீர் அறிவிப்பு:எங்களால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் ;திடீர் அறிவிப்பு

>> Friday, May 29, 2009

எங்களால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் : பாகிஸ்தான் ராணுவம் அதிரடி
 
இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்திவந்தது.  சமீபத்தில் போரில் விடுதலைப்புலிகளை  முற்றிலுமாக அழித்துவிட்டதாக இலங்கை ராணுவத்தினர் அறிவித்தனர்.


விடுதலைப்புலிகளூடனான போரில் இலங்கை தீவிர தாக்குதலில் ஈடுபடுவதற்கு பல்வேறு நாடுகள் ஆயுத மற்றும் ஆட்கள் உதவி செய்துவந்ததாக பேசப்பட்டது.

இந்நிலையில் ''நாங்கள் உதவியதால்தான் இலங்கை ராணுவத்தால் விடுதலைப்புலிகளை வெல்ல முடிந்தது என்று பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
மேலும்,  2008-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா பாகிஸ்தான் சென்று அந்த நாட்டு தளபதி பர்வீஸ் கயானியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கை போருக்கு பல்வேறு உதவிகளை அவர் கேட்டார்.


அதன்படி ஏராளமான உதவிகளை பாகிஸ்தான் ராணுவம் செய்தது. பல்வேறு தொழில் நுட்ப கருவிகளை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்கு அதிகாரிகளையும் பாகிஸ்தானே அனுப்பி வைத்தது.

இந்த உதவிக்கு பிறகு தான் இலங்கை ராணுவம் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்ததாகவும் அந்த ராணுவ அதிகாரி கூறியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP