சமீபத்திய பதிவுகள்

சமைத்து பாருங்கள்-samaithu paarungal

>> Wednesday, July 21, 2010





samaithu paarungal
Uploaded by donjinx. - Check out other Film & TV videos.

StumbleUpon.com Read more...

இந்த வார இணையதளம் - போட்டோ எடுக்கக் கற்றுக்கொடுங்கள்

டிஜிட்டல் கேமராக்கள் வந்த பின்னர், சிறுவர்கள் கூட இப்போது போட்டோ எடுக்கத் தொடங்கிவிட்டனர். எனவே இவர்களுக்குச் சிறந்த முறையில் போட்டோ எடுப்பது குறித்துக் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிறுவர்கள் மட்டுமின்றி, தொழில் ரீதியாக இல்லாமல் போட்டோ எடுக்கும் அனைவருக்கும் நல்ல வகையில் போட்டோ எடுப்பது குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. இதற்கான தளம் ஒன்று இணையத்தில் உள்ளது. இதன் முகவரி http://www.betterphoto.com/photographyforkids.asp. இந்த தளத்தில் நுழைந்தவுடன் மிக எளிய முறையில் டிப்ஸ்கள் தரப்படுவதனைக் காணலாம். பல வகையான போட்டோக்களைக் காட்டியே, இளைஞர்களுக்கு போட்டோ எடுப்பது குறித்த தகவல்கள் மனதில் பதிய வைக்கப்படுகின்றன. குறிப்புகள் அதிகமாக தொழில் நுட்ப ரீதியாக இல்லாமல், எளிமையாக இருப்பதுவும் இவற்றின் சிறப்பாகும். வேடிக்கையான போட்டோக்களை எப்படி எடுப்பது என்று காட்டுவதன் மூலம், பார்ப்பவர்களின் ஆர்வம் தூண்டப்பட்டு, தகவல்கள் தரப்படுவது இந்த தளத்தின் இன்னொரு சிறப்பாகும். கேள்வி பதில் பகுதியில் சாதாரணமாக ஒருவருக்கு ஏற்படும் சந்தேகங்கள் அனைத்தும் தெளிவாக்கப் படுகின்றன. நீங்கள் போட்டோ எடுப்பது குறித்து அறிய விரும்பவில்லை என்றாலும், இதில் உள்ள ஆர்வம் ஊட்டும் தகவல்களுக் காகவும், சிறப்பாக எடுக்கப் பட்ட போட்டோக்களுக்கா கவும், இந்த தளத்தினைப் பார்வையிடலாம்.

source:dinamaalr

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

Fwd: வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்

 

Mist Said:

ஹாய் உமரண்ணா this is mist எப்படி இருக்கீங்கேபார்த்து ரொம்பபபபப நாள் ஆயிடுச்சு இல்லையாகொஞ்சம் வேலை பளு காரணமாக Net use பண்ண முடியலே.சரி மேட்டருக்கு வருவோம் . 


உமர் பதில்:

அருமையான மிஸ்ட் அவர்களே,

 உங்க வருகைக்கு நன்றி.

 எனக்கும் அதிக வேலை பளுவினால்முன்பு போல அதிகமாக எழுத நேரமிருப்பதில்லை. உங்களின் வரிகளை பார்த்தவுடன், அன்றைய நட்பு ஞாபகத்திற்கு வந்துவிட்டது, எனவே உடனே உட்கார்ந்து எழுத ஆரம்பித்தேன். சரி வாங்க விஷயத்திற்கு வருவோம்.

 

//

Umar said:

1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காகஉங்கள் முஹம்மதுவை அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா? (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால்முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானதுநியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களாஇல்லையா?

Mist said:

முழங்காலுக்கும் மொட்டை தலைக்கும் முடிச்சு போடுறதே ஒங்க வேலையா போச்சுமக்காவினரின் தெய்வங்களை பற்றி அவதூறா பேச வில்லை முஹம்மத்அம்மக்களை அந்த சிலைகளை வணகுவதால் எந்த பயனும் கிடையாது என்பதைத்தான் எடுத்து சொன்னாரே தவிர அவதூறு ன்னு ஏன் அதுக்கு கலர் பூசுரீங்கேஉதாரணத்துக்கு உங்க ஆளுங்க சர்ச்சுலே இயேசு சிலைமேரி சிலையெல்லாம் வச்சு பூஜை பண்றாங்க இல்லையா அதையே உங்க ஆளுங்கல்ல சில பேர் தப்புன்னு சொல்றது இல்லையா?//

உமர் பதில்:

ஓஹோ அப்படியா... உங்கள் தெய்வங்களை வணங்குவதினால்எந்த பிரயோஜனமும் இல்லை என்று மட்டும் தான் சொன்னாரா?

அப்படியானால்,  நீங்கள் வெள்ளிக்கிழமை மசூதிக்கு சென்று வரும்போதுயாராவது வேற்று மதத்தவர்கள் வந்து,

"அல்லாஹ்வை வணங்குபவர்களேஉங்களுக்கு இதனால் எந்த உபயோகமும் இல்லைமுஹம்மது ஒரு நபி அல்லஅவரை பின்பற்றுவதினால் ஒரு பிரயோஜனமும் இல்லைஆகையால்பொய்யை நம்புவதை விட்டுவிட்டுபொய் நபியை நம்புவதை விட்டுவிட்டுவெளியே வாருங்கள்உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும். அல்லாஹ்வை வணங்குவதினால் ஒரு நன்மையும் இல்லை"

 என்றுச் சொன்னால்அதனை என்னவென்று நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள்?

ஆரம்பத்தில்முஹம்மது அல்லாஹ்வைப் பற்றி சொல்லும் போது மக்காவினர் ஒன்றும் செய்யவில்லைஅவரை தாக்கவில்லை. எப்போது அவர் தங்கள் இதர தெய்வங்களை தாக்க ஆரம்பித்தாரோஅவர்களது மூதாதையர்கள் வழிதவறிவிட்டார்கள் என்றுச் சொன்னாரோ அப்போது தான்மக்காவினர் கொதித்து எழுந்தனர்.

உதாரணத்திற்கு:

இன்று இஸ்லாமியர்கள் குழுமியிருக்கும் இடத்தில் ஒருவர் வந்துநான் தான் நபிஎன்னை இறைவன் அனுப்பினான். உங்கள் கலிபாக்கள் எல்லாரும் வழி தவறியவர்கள்அவர்களுக்கு தெரியாத ஒன்றை வணங்கினார்கள்அவர்கள் பொய்யான தெய்வத்தை வணங்கினார்கள்,முஹம்மதுவும் இப்படித்தான் பொய்யான் தெய்வத்தையே பிரச்சாரம் செய்தார் என்றுச் சொன்னால்உங்கள் பதில் என்னவாக இருக்கும்?  இவர் உண்மையைச் சொல்கிறார் என்று நினைப்பீர்களா அல்லது அப்படியே விட்டுவிடுவீர்களா?

இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இதைப் பற்றி கீழகண்டவாறு கூறுகிறார்: 

அபூ தலீப்பிடம் குறைஷிகள் ஏன் வந்தார்கள்வந்து முஹம்மது பற்றி என்ன சொன்னார்கள்போன்றவற்றை படிக்கவும்.  இந்த கட்டுரையை முழுவதுமாக படித்துப்பாருங்கள் (Source: http://www.answering-islam.org/Shamoun/antagonizing.htm)

In regards to Muhammad's early preaching in Mecca, Al-Tabari notes:

Ibn Humayd- Salamah- Ibn Ishaq: The Messenger of God proclaimed God's message openly and declared Islam publicly to his tribesmen. When he did so, they did not withdraw from him or reject him in anyway, as far as I had heard, UNTIL he spoke of their gods and denounced them. When he did this, they took exception to it and united in opposition and hostility to him, except for those of them whom God had protected from error by means of Islam. The latter were few in number and practiced their faith in secret. His uncle Abu Talib was friendly to him, however, and protected him and shielded him from them. The Messenger of God continued to do God's work and to proclaim his message, undeterred by anything. When Quraysh saw that he would not give them any satisfaction, they objected to his departing from their ways and denouncing their gods, and seeing that Abu Talib protected him, shielded him from harm, and would not hand him over to them, a number of the nobles of Quraysh, consisting of such men as 'Utbah b. Rabi'ah, Shaybah b. Rabi'ah, Abu al-Bakhtari b. Hisham, al-Aswad b. al-Muttalib, al-Walid b. al-Mughirah, Abu Jahl b. Hisham, al-'As b. Wa'il and Nubayh and Munabbih, the sons of al-Hajjaj, went to Abu Talib and said, "Abu Talib, your nephew has reviled our gods, denounced our religion, derided our traditional values and told us that our forefathers were misguided. Either curb his attacks on us or give us a free hand to deal with him, for you are just as opposed to him as we are, and we will deal with him for you." Abu Talib gave them a mild answer and declined courteously, and they left him. The Messenger of God continued as before, proclaiming the faith of God and summoning people to it.

மக்காவினரின் தெய்வங்களைப் பற்றி கேவலமாக பேசுவதும்அவர்களின் பாரம்பரியங்களை தாக்குவதையும்அவர்கள் முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்வதையும் தாங்க முடியாமல் தான்அவரை கொல்ல முயற்சித்தனர்.

ஆனால்முஹம்மது செய்தது போலஇன்று இஸ்லாமிய தெய்வத்திற்குச் செய்தால்நீங்கள் என்ன செய்வீர்கள்?

உங்களுக்கு ஒரு நியாயம்மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

//

Umar said:

2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும்அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும்இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர். ஆகஇஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா?

Mist said:

உமரண்ணா இஸ்லாம்மற்ற மதத்தினரின் கடவுள்களை திட்ட வேண்டாம் என்று இஸ்லாமியர்களுக்கு அறிவுறுத்துவது உங்களுக்கு தெரியாதாஏனெனில் அறியாமையில் அவர்களும் பதிலுக்கு உங்களை போல அல்லாஹ்வை திட்டி பாவத்தை சேர்த்து கொள்ளக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில்தானே! உமரண்ணா முதலில் சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து பார்க்க கத்து கொள்ளுங்கள்எல்லாத்தையும் ஒண்ணா போட்டு குட்டையை குழப்பிநீங்களும் குழம்பிஏன் உங்க பின்னாடி அலையுற கொஞ்ச ஆளுங்களையும் குழப்பி what is this உமரண்ணா?//

 

இங்கு கேட்ட கேள்விமக்காவின் குறைஷிகள் செய்தது சரியா தவறா

தவறு என்றுச் சொன்னால்இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள்கொடுமை வாதிகள்முஹம்மதுவை பின்பற்றுகிறவர்கள் செய்தது கூட தவறு தானே. இதனை அங்கீகரிக்கிறீர்களா?

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டுமுஹம்மது செய்தது போலவன்முறையில் ஈடுபட்டவர்களாகிய அந்த சிலர் இஸ்லாமியர்களா அல்லது காபிர்களா?

உங்களுக்கு எப்படியோமற்றவர்களுக்கு மட்டும்அன்று முஹம்மதுவை தாக்கிய குறைஷிகளும்இன்று மற்றவர்களை தாக்கிய இஸ்லாமியர்களும் ஒன்று தான்.

ஏதோ எழுதவேண்டும் என்பதற்காக வந்து எழுதுகிறீர்களே தவிரஅந்த கொலைபாதகர்கள் செய்தது தவறு தான்... அவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல... அவர்களை நாங்கள் இஸ்லாமியர்களாக பாவிப்பதில்லை என்று பேச்சுக்காவது சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். அப்படியானால்அவர்களின் பின்னால் இருப்பவர்கள் உங்களைப்போன்றவர்கள் தான் என்பது விளங்குகிறது.

என்ன செய்ய?  அவர்கள் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டால்கடைசியாக முஹம்மது செய்ததும் தவறு என்று ஏற்றுக்கொள்ளவேண்டி வருமே என்ற பயம் உங்களுக்கு இருப்பது நியாயமே..

மற்ற மதத்தவர்களின் தெய்வங்களை திட்டவேண்டாமென்று அல்லாஹ் சொல்லியிருந்தும்,ஏன் இஸ்லாமியர்கள் அதனை பின்பற்றுவதில்லை. ஏன் முஹம்மதுவும் பின்பற்றவில்லை. ஏன் அவர் இயேசுவைப் பற்றி பேசினார்அவர் இறைவன் இல்லை என்றுச் சொன்னார். அதே போலஇன்று நாங்கள் அல்லாஹ் ஒரு இறைவன் அல்ல  என்றுச் சொன்னால்உங்களுக்கு கோபம் ஏன் வருகிறது?

 

இன்று ஏன் இஸ்லாம் அதிகமாக நாறுகிறது தெரியுமாஏன் இன்று முஹம்மது பற்றி எல்லாரும் அதிகமாக கற்றுக்கொண்டுஅவரது வண்டவாளத்தையெல்லாம் வெளியே சொல்கிறார்கள் தெரியுமா?  அவர் சும்மா இருக்காமல்மற்ற தெய்வங்களை விமர்சித்ததால் தான்.. இஸ்லாமிய அறிஞர்கள் அவர் செய்தது போலவே செய்வதினால் தான்இஸ்லாமை கற்றுக்கொண்டுகுட்டை கலக்கிக்கொண்டு இருக்கிறோம்.  அப்போது தானேஅந்த குட்டையில்(இஸ்லாமில்) அடிபாகத்தில் இருக்கும் உண்மைகள் வெளியே வரும்.

 

//umar qouted:

நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு பதில் சொல்லப்போகிறோம்அதுவே போதும்




--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

Sun Headlines


sun news
Uploaded by donjinx. - Check out other Film & TV videos.

StumbleUpon.com Read more...

முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள்

 

முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)
 
கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 
கேரளாவில் ஜோசப் என்ற பேராசிரியர், முஹம்மதுவை அவமதிக்கும் விதத்தில் கேள்வித் தாளை தயாரித்ததற்காக, இஸ்லாமியர்களில் சிலர் அவரது கையை துண்டித்தனர்.
 
இது சரியா தவறா?
 
ஒரு சாரார் "இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியதால், இந்த தண்டனை அவருக்கு சரியானது" என்று கூறுவார்கள்.
 
இன்னொரு சாரார் "அவர் தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே, கல்லூரியும் அவரை சஸ்பண்ஸ் செய்துவிட்டதே, பின் ஏன் அவருக்கு இந்த தண்டனையை தரவேண்டும்?" என்று கேட்பார்கள்.
 
இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 
இதை படிக்கும் நீங்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், உங்கள் கருத்தென்ன?
 
ஒரு மார்க்கத்தினரின் மனதை புண்படுத்தினால், இதற்கு காரணமாக இருந்தவருக்கு இந்த தண்டனை சரியானது தான் (அவர் மன்னிப்பு கேட்டுவிட்டாலும் சரி) என்று கூறுகிறீர்களா?
 
அல்லது
 
கைகளை துண்டித்தவர்கள் கொடுமைவாதிகள் என்றுச் சொல்வீர்களா?
 
மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்கலாமா வேண்டாமா?
 
ஒரு மார்க்கத்தை விமர்சித்து, அம்மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்துபவருக்கு இந்த தண்டனை சரி தான், அவர் மன்னிப்பு கோரினாலும் விடக்கூடாது, இப்படித்தான் செய்யவேண்டும் என்றுச் சொல்பவர்கள் மட்டுமே மேற்கொண்டு இந்த கட்டுரையை படியுங்கள். அவர்களுக்காகத் தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
 
இது கொடூரம், ஒரு சின்ன விஷயத்திற்காக, அதுவும் மன்னிப்பு கேட்டுவிட்ட பிறகும், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு கொடூரமாக நடந்துக்கொள்வது காட்டுமிராண்டித் தனம் என்றுச் சொல்பவர்கள், மீதமுள்ள இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்.
 
.
.
.
.
.
.
இந்த வரியை படிக்கும் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், நிதானத்தை இழக்காமல், நேர்மையான முறையில், ஒரு அமைதி மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்கள் என்றுச் சொல்லிக்கொள்ளுகின்றவர்கள் நீங்கள்   என்ற விவரத்தை மறந்துவிடாமல் மீதமுள்ள வரிகளை படிக்கவும்.
 
 
அதாவது, நாங்கள் அதிகமாக நேசிக்கும் நபியை அவர் எப்படி கேலி செய்யலாம்? எப்படி விமர்சிக்கலாம், எப்படி அவதூறாக எழுதலாம் என்பது தானே உங்கள் கோபம். 
 
உங்கள் கோபம் நியாயமானதா என்று சிந்தித்துப்பார்க்க உங்களுக்கு விருப்பமா?
 
உங்களின் கருத்துப்படி, ஒருவர் இன்னொருவரின் மார்க்கத்தை, அதன் ஆன்மீக தலைவரை விமர்சித்தால் (தெரிந்தும், தெரியாமலும் செய்தாலும் சரி) அவருக்கு தண்டனை தரவேண்டும்.
 
இந்த நிலையில் உள்ள நீங்கள் நேர்மையானவர்களாக இருப்பீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும், அது தான் நியாயமும் கூட. இதுவரை நிதானமாக படித்த நீங்கள், கீழ்கண்ட விவரங்களை படித்து கொதித்து எழவேண்டாம், அதற்கு பதிலாக, ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு, சிந்தித்துப் பாருங்கள். 
 
இதே மனநிலையில் இருந்த மக்கா மக்கள் (குறைஷிகள்): 
 
நீங்கள் மிகவும் நேசிக்கும் உங்கள் முஹம்மது வாழ்ந்த காலத்தில், அவர் இஸ்லாமை பரப்பும் போது, குறைஷிகளின் தெய்வங்கள் பற்றியும், நம்பிக்கைகள் பற்றியும் அவதூறாக பேசினார், அவர்களின் தெய்வங்கள்  வெறும் கற்கள் என்றுச் சொன்னார்.
 
இன்று இஸ்லாமியர்களுக்கு கோபம் வருவது போலவே அவர்களுக்கும் வந்தது, அவர்கள் முஹம்மதுவையும் , அவர்களின் அடியார்களையும், தோழர்களையும் கொல்லவும், கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்தனர். இதனால், உயிருக்கு பயந்து முஹம்மது மதினாவிற்கு இடம்பெயர்ந்துச் சென்றார்.
 
இப்போது நேர்மையானவர்களாகிய இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:
 
1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை  அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா?  (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா? இல்லையா?
 
2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர்.  ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே  இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா?  
 
இல்லை! நாங்கள் அங்கீகரிக்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால், எந்த வகையில் நீங்கள் அவர்களை விட வித்தியாசமானவர்கள் என்று இஸ்லாமியரல்லாதவர்களாகிய எங்களுக்கு தெரிவியுங்கள்.
 
இப்போது நீங்கள் என்ன முடிவை எடுக்கப்போகிறீர்கள்?
 
அன்றைய மக்காவினரும், இன்றைய இஸ்லாமியர்களும் ஒன்றா?  அவர்கள் நடந்துக்கொண்ட விதமாகவே அல்லவா நீங்களும் இன்று நடந்துக்கொள்கிறீர்கள்! அப்படியானால், உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமென்ன?
 
இன்று கேரளாவில் நடந்தது சரியே என்றுச் சொல்வீர்களானால், அன்று மக்காவில் நடந்ததும் சரியே. 
 
ஜோசப்பை சட்டத்தையும் மீறி இன்று இஸ்லாமியர்களில் சிலர்  கொடூரமாக தாக்கியது சரியே என்றுச் சொன்னால், அன்று மக்காவினர் முஹம்மதுவை கொடுமைப்படுத்தியதும் சரியே?
 
இதற்கு உங்களுடைய பதில் என்ன?
 
 (எந்த தெய்வம் உண்மை, எது பொய் என்பது இப்போது கேள்வி இல்லை,  இங்கு பிரச்சனை -   ஒரு மார்க்கத்தை ஒன்னொரு மார்க்கத்தவர்கள் விமர்சிக்கலாமா என்பது தான். அப்படி விமர்சித்தால், அவர் யாராக இருந்தாலும் [முஹம்மதுவாக இருந்தாலும் சரியே] இப்படியே சட்டத்தை மீறி தாக்கலாமா என்பது தான்).
 
உங்களுக்கும், மக்காவின் மக்களுக்கும் இடையே ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. நீங்கள் இருவரும் ஒரே வழியில் செல்கின்றவர்களாகவே தெரிகின்றனர்.
 
முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள்:
 
கிறிஸ்தவர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இயேசுவைப் பற்றி அவதூறாக முஹம்மது பேசினார், குர்‍ஆனில் இன்றும வசனங்கள் உண்டு. இயேசு இறைவன் அல்ல என்றுச் சொல்லும் போதெல்லாம் கிறிஸ்தவ மார்க்கத்தார்களின் மனது புண்பட்டு இருக்கும்? இன்றும் புண்பட்டுக்கொண்டே இருக்கிறது,  வேதனை அடைந்துக் கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கும் போது, கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவின் கைகளை அன்று வெட்டவில்லை. ஏனென்றால், கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் இயேசுக் கிறிஸ்து "என்னை அவமானப்படுத்தும் நபர்களை நீங்களே தண்டியுங்கள்" என்றுச் சொல்லவில்லை. ஆகையால், அவர்கள் முஹம்மதுவின் கைகளை வெட்டவில்லை, வெட்ட மாட்டார்களும் கூட.
 
அது அப்படி இல்லை, உண்மையாகவே இயேசு ஒரு நபி மட்டும் தான், அவர் இறைவன் இல்லையே!  அதைத் தான் முஹம்மது விமர்சித்தார் என்று இஸ்லாமியர்கள் இன்று சொல்லுவார்கள். ஆனால், கேள்வி என்னவென்றால்,  சொல்லப்பட்ட செய்தி உண்மையா இல்லையா என்பது இப்போது பிரச்சனை இல்லை, ஒருவர் இன்னொரு மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்தினால், அவருக்கு இந்த தண்டனையை அனைத்து மார்க்கத்தவர்ளும் கொடுக்கலாமா? முஹம்மதுவை ஒரு நபி என்று நீங்கள் மட்டும் தான் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள், இதை நம்பாதவர்கள் முஹம்மதுவை விமர்சிக்கலாமா?
 
உலகத்தில் இஸ்லாமியர்கள் தவிர வேறு எந்த மார்க்கத்தவர்களும் முஹம்மதுவை ஒரு நபி என்று ஏற்றுக்கொள்வதில்லை, அல்லாஹ்வை ஒரு இறைவன் என்று ஏற்றுக்கொள்வதில்லை, காரணம் அவர் ஒரு பொய் நபி என்று அவர்கள் நம்புகின்றனர். அவரவருக்கு அவரவர் நம்பிக்கை உண்மையானதாக தெரியும்.
 
இன்று இஸ்லாமியர்களின் கருத்தின்படி, அன்று கிறிஸ்தவர்கள் செய்தது தவறு, அதாவது தங்கள் மார்க்கத்தை முஹம்மது விமர்சித்தால், அவர்களின் மனதை புண்படுத்தினால், ஒரு எட்டுப்பேர் சென்று அவரது கைகளை பிடித்து வெட்டியிருக்கவேண்டும், அது தான் சரியானது என்று இஸ்லாமியர்களாகிய நீங்கள் சொல்லமுடியுமா? (நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்?).
 
இன்று கூட கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் கைகளை கிறிஸ்தவர்கள் வெட்டவேண்டும்? ஆனால், செய்வதில்லை?
 
பைபிளை விமர்சிக்கும் ஜாகிர் நாயக்கின் கைகளை வெட்டித் தள்ளவும்,  அதே போல, விமர்சிக்கும் பீஜே அவர்களின் கைகளையும் வெட்டிவிடவும் 
வேண்டுமென்று, எந்த ஒரு கிறிஸ்தவ குழுவாவது கோஷமிட்டுக்கொண்டு வருகின்றதை பார்க்கமுடியுமா?

நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு  பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அதை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா?  மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை,  ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.
 
முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய யூதர்கள் (ஆண்கள்):
 
முஹம்மது யூதர்களையும்,அவர்களின் நம்பிக்கையையும் விமர்சித்தார், இஸ்லாமியர்களைப்போல யூதர்களும் கற்றுக்கொண்டு இருந்திருந்தால், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று ஒரு கை பார்த்து இருப்பார்கள், ஆனால், அவர்கள் செய்யவில்லை.
 
இன்றைய இஸ்லாமியர்களின் மனநிலையின்படி, அவர்கள் முஹம்மதுவை தாக்கி,கொன்று அல்லவா இருக்கவேண்டும்? ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. (ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள்,  இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).
 
 
துண்டிக்கப்பட்டது கையா அல்லது இஸ்லாம் மீது மற்றவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையா?
 
இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள். ஆனால், ஒரு சிலர் உங்கள் முஹம்மதுவின் வழியில் நடந்து இப்படி வெட்டிச் சாய்க்கிறார்கள். இஸ்லாமியரல்லாதவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைப்பார்கள்?  இஸ்லாம் அமைதி மார்க்கமென்று நினைப்பார்களா அல்லது வன்முறை மார்க்கமென்பார்களா?
 
இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்,  எத்தனை அமைதி நிகழ்ச்சிகளை இஸ்லாமியர்கள் நடத்தினாலும், சில நாட்களில் இஸ்லாமியரல்லாதவர்கள் மறந்துவிடுவார்கள், ஆனால், கேரளாவில் நடந்த நிகழ்ச்சியை மக்கள் முக்கியமாக இஸ்லாமியரல்லாதவர்கள் என்றென்றும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.  நல்ல பெயர் எடுக்க ஆண்டுகள் பிடிக்கும், கெட்ட பெயர் எடுக்க ஒரு நாள் போதும்.
 
ஆக, இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் புரிந்துக்கொண்டது என்ன? இஸ்லாமியர்களில் சிலர் வன்முறைவாதிகளாக இருக்கிறார்கள், இதற்கு அவர்களின் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் காரணமாக இருக்கிறார்கள். மொத்தமாக பார்த்தால்,  ஜனநாயக நாட்டிலும், உண்மை இஸ்லாமிய முகம் காட்டப்பட்டுவிட்டது.
 
 
முடிவுரை: இதை நிதானமாக படித்த இஸ்லாமியரே, உங்கள் மார்க்கத்தை விமர்சித்தால், அவருக்கு தண்டனைத்தரவேண்டும் என்று அவேசம் கொள்ளும் நீங்கள், மற்றவர்களின் மார்க்கத்தை விமர்சிப்பது ஏன்?
 
உங்கள் முஹம்மது குறைஷிகளின் தெய்வங்களை ஏன் விமர்சித்தார், கிறிஸ்தவத்தையும், யூதர்களையும் ஏன் விமர்சித்தார்? உங்களுக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
 
மற்றவர்கள் கையில் வாளை எடுக்கவில்லை என்ற காரணத்தால் நீங்கள் தப்பித்துக்கொண்டு உலகில் வாழ்ந்துக்கொண்டு வருகிறீர்கள். உங்களைப்போன்றே மற்றவர்களும் செய்தால், நாட்டில் இரத்தவெள்ளம் அல்லவா ஓடும்?  
 
இனியும், கொடுமையையும், வன்முறையையும் பின்பற்றுவதை விட்டுவிட்டு, மனிதர்களாக வாழ முயற்சி எடுங்கள்.. முடிந்தால்..!!!




--
7/20/2010 10:21:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது




--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP