சமீபத்திய பதிவுகள்

இஸ்லாமியர்களுடனான கிறிஸ்தவர்களின் மாபெரும் விவாதம்

>> Saturday, January 7, 2012


கிறிஸ்துவுக்குள் நம்மால் நேசிக்கப்படுகிற நமது நண்பர்களில் சிலர் எடுத்திருக்கும் புதிய முயற்சி. இஸ்லாமிய சகோதரர்களுடன் நேரடியான விவாத அமர்வு.

இதன் வழியாக கர்த்தருடைய சுத்த சுவிஷேசம் அனைவருக்குள்ளும் அறிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாமிய சகோதரருக்குள்ளே ஒரு தாக்கத்தை உண்டு பண்ண வேண்டும். இஸ்லாமிய சகோதரார்கள் இரட்சகருடைய இரட்சிப்பை அடைய வேண்டும். 

ஆத்தும பாரமுள்ள ஒவ்வொருவரும் இந்த அமர்வுக்காக..., 
ஊக்கமாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.






நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? 
நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து. கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். 
உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். 
கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள். 1பேது 3: 13...16
என்கிறதான வேதவசனத்தின்படி செயல்படுகிற நமது நண்பர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன். ஆத்தும பாரமுள்ள ஒவ்வொருவரும் இந்த அமர்வுக்காக ஊக்கமாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.


மேலும் முழுமையான விபரங்களுக்கு: -  http://www.iemtindia.com/ 

source:krmchuch.blogspot


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

சிங்களப் பெண் உதவியாளருடன் இலங்கை ஓட்டலில் கருணா கும்மாளம் ( படங்கள் )

இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா.
 ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பிரபாகரன் இவரைக் கண்டித்தார்.  

 உடனே தனது பொறுப்பில் இருந்த வீரர்களுடன் விடுதலைப்புலிகள்  இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா,   
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற தனி அமைப்பை தொடங்கினார்.

அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்.  பின்னர் ராஜபக்சே அரசிடம் விலை
போனார்.   

கடந்த 2008ம் ஆண்டு ராஜபக்சே கட்சியில் சேர்ந்த கருணா,  தேர்தலில் போட்டியிட்டு  எம்.பி. ஆனார்.  பின்னர் 
2009ம் ஆண்டு இவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் பதவியையும் ராஜபக்சே வழங்கினார்.

சொகுசு வாழ்க்கையை அனுபதிதுக்கொண்டிருக்கும் கருனா,  அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று  அங்குள்ள 
தமிழின ஆதரவாளர்களையும் சந்தித்து அவர்களையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.    ஆனால் கருணாவின் துரோகத்தை மறக்க தமிழர்கள் ஒருபோதும் தயாராக இல்லை.  அவரை புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இலங்கை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை மது விருந்துடன் கொண்டாடி 
மகிழ்ந்துள்ளார்.    இவரது அலுவலகத்தில் அந்தரங்க பெண் உதவியாளராக இருப்பவர் சாந்தினி.  இவருடன் மிக நெருக்கமாக ஆடிப்பாடி  மகிழ்ந்துள்ளார் கருணா. 

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.  இவையெல்லாம் கருணா மீது ஏற்கவே உலகத்தமிழர்களுக்கு 
இருக்கும்  கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கச்செய்துள்ளன.

கருணாவின் சுயரூபத்தை பாருங்கள்  என்று தமிழர்கள் தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.   தமிழினத்தை 
காட்டிக்கொடுத்தற்கு ராஜபக்சே கொடுத்த பரிசுதான் இந்த சிங்களப்பெண் சாந்தினி என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.






source:nakkheeran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP