சமீபத்திய பதிவுகள்

உலக மொழிகளில் இணைய முகவரி

>> Thursday, December 17, 2009

 

இன்டர்நெட் தள முகவரிகளை இன்றளவிலும் ஆங்கிலத்தில் தான் அமைத்து வருகிறோம். இதனை மற்ற மொழிகளிலும் அமைத்து இயக்கும் காலம் விரைவில் வர இருக்கிறது.
இன்று நாம் பயன்படுத்தும் இன்டர்நெட் உண்மையிலேயே உலக மக்கள் அனைவரின் சொத்தா? ஆம், அதில் என்ன சந்தேகம். யாரும் இன்டர்நெட்டை அணுகலாம். தகவல்களைத் தேடலாம். அவர்கள் மொழியில் தளங்களை அமைக்கலாம். சில நாடுகள் இன்டர்நெட் இணைப்பினை மனிதனின் அடிப்படை உரிமையாகவும் தேவையாகவும் பிரகடனப்படுத்தி உள்ளதே. அப்படியானால் ஏன் இன்னும் இன்டர்நெட் தள முகவரிகளை ஆங்கிலத்தில் மட்டுமே அமைத்து வருகிறோம். அனைத்துலக மொழிகளில் ஏன் அமைக்கக் கூடாது? நல்ல, நியாயமான கேள்வி. 
இன்டர்நெட்டை உலகளாவிய அளவில் 160 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பாதிப்பேருக்கு ஆங்கிலம் அந்நிய மொழியாகும். எனவே தான் காலத்தின் கட்டாயத்தில் இணைய முகவரிகளை ஆங்கிலம் அல்லாத மொழிகளிலும் அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்டர்நெட்டின் 40 ஆண்டுகால வரலாற்றில் இது ஒரு பெரும் திருப்புமுனையாகும். 
தொழில் நுட்ப வசதிக்காகத்தான் நாம் ஆங்கில எழுத்துக்களில் அமைத்துவருகிறோம். அடிப்படையில் இன்டர்நெட் தள முகவரிகள் எண்களில் தான் உள்ளன. நாம் அதனை மனதில் கொண்டு பயன்படுத்த முடியாது என்பதால் தான், ஆங்கிலச் சொற்களில், தொடக்க காலம் தொட்டு பயன்படுத்தி வருகிறோம். மற்ற மொழிகளில் பயன்படுத்தக் கூடாது; இப்படியே ஆங்கிலத்தில் இருக்கட்டும் என்று யார் சொல்வது? இன்டர்நெட் தளங்களின் பெயர்கள் எப்படி அமைய வேண்டும் என்பதனை Internet Corporation for Assigned Names and Numbers (Icann) என்ற அமைப்பு தான் வரையறை செய்து வருகிறது. இதுவரை ஆங்கிலத்தில் தான் வெப்சைட் முகவரிகள் இருக்க வேண்டும் எனக் கூறி வந்த இந்த அமைப்பு, அண்மையில் தென் கொரியா, சீயோல் நகரில் நடந்த கூட்டத்தில் மற்ற மொழிகளிலும் முகவரிகள் இருக்கலாம் என்ற அறிவிப்பினை வெளியிட்டது. 
இந்த மாற்றத்தை வரவேற்றவர்கள், இன்டர்நெட் செயல்பாட்டில் இது மாபெரும் தொழில் நுட்ப மாற்றமும் வரும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அப்படி ஆங்கிலம் அல்லாத மற்ற மொழிகளில் முகவரிகள் அமைக்கப் பட்டால், இன்டர்நெட் இன்னும் பல கோடி மக்களைச் சென்றடையும். எந்த மொழியில் அமைக்கப்பட்டாலும், இன்டர்நெட் முகவரியின் இறுதிச் சொல் ..com, .gov, .co.uk, .cn போன்ற ஒன்றில்தான் முடிவடைய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
இன்டர்நெட் முதன் முதலில் அமெரிக்க நாட்டில் தான் செயல்படுத்தப்பட்டது. அங்கு ஆங்கில மொழி சொற்களில் தான் முகவரிகளை அமைத்தனர். அதுவே உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்டர்நெட் பயன்பாடு வேகமாகப் பரவி வரும் இந்நாளில், அதுவே பொருளாதார மேம்பாட்டின் ஓர் அங்கமாக இயங்கும் இந்நாளில், பிற மொழிகளையும் இன்டர்நெட் ஏற்றுக் கொள்வது அவசியம் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டு இந்த முடிவினை ஐகான் எடுத்துள்ளது. பிற மொழிகளில் முகவரிகள் அமைத்திட ஐகான் அமைப்பு இன்று முதல் விண்ணப்பங்களைப் பெற இருக்கிறது. அநேகமாக முதலில் சீன, அரபிக் மற்றும் ரஷ்ய மொழிகளில் இந்த முகவரிகளுக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டு ஓரளவில் இயங்கி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரில் இயங்கும் ஐ–டி.என்.எஸ். என்ற நிறுவனம் தமிழ், சீனம், ஜப்பானிய மொழிகளில் இணைய முகவரியை அமைக்க முன்வந்து, அதனை விற்பனைக்கும் கொண்டு வந்தது. கம்ப்யூட்டர் ஒன்றில் பிற மொழிகளைப் பயன்படுத்த எண்ணம் உள்ளவர்கள், அதற்கான புரோகிராமினை இந்நிறுவனத்தின் தளத்தில் இருந்து இறக்கிப் பதிந்து கொள்ள வேண்டும். பின் தமிழில் டைப் செய்வதற்கான கீ போர்டு மற்றும் எழுத்து வகையினையும் இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். 
இந்த முன் தேவைகளை அமைத்துக் கொண்டவுடன், இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்கியவுடன், கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம், முகவரியை வாங்கி, இந்நிறுவனம் உலகெங்கும் பல இடங்களில் நிறுவியுள்ள தன் சர்வருக்கு அதனை அனுப்பும். அந்த சர்வர்கள் அதனை ஆங்கிலத்திற்கு மாற்றி, அங்கிருந்து ஆங்கில முகவரி அடிப்படையில் தளங்களைப் பெற்று முகவரி தொடங்கிய கம்ப்யூட்டருக்கு இணைப்பினைத் தரும். தொடக்கத்தில் இது வெற்றி அடைந்தது; பின்னர் இந்த முயற்சி தமிழ் நாட்டில் உரம் பெறவில்லை. ஆனால் இப்போது ஐகான் அனுமதி தந்த பின்னர், தொழில் நுட்பம் எந்த வகையில் மாறப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் இந்த அனைத்து மொழி மாற்றம், இன்டர்நெட் பயன்பாட்டிலும், உலகப் பொருளாதார வளர்ச்சியிலும் பெரும் மாற்றத்தை உண்டு பண்ணும்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

துவாரகாவின் புகைப்படத்தில் உண்மை இல்லை

   பிரபாகரன் மகள் துவாரகாவின் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியீடு




நேற்று முன் தினம் வெளியான தேசிய தலைவரின் மகள் இறந்து இருப்பது போன்ற படம், துவாரகாவினது அல்ல என நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும் தமிழின உணர்வாளருமான சீமான் அவர்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சிங்களவர்கள் நடத்தும் ஒரு உளவியல் போர் இது எனக் குறிப்பிட்டுள்ள சீமான் அவர்கள், அப் புகைப்படத்தில் காணப்படுவது ஒரு பெண்போராளி எனவும் குறிப்பிட்டுள்ளார். வன்னி வதைமுகாமில் இருந்து தற்போது திருகோணமலையில் வசித்துவரும் ஒருவரின் தகவலில் அடிப்படையில் இந்தப் பெண்போராளி, இசைப்பிரியா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவின் மகளிர் பிரிவு போராளியும், போராளி கலைஞரும் செய்தி வாசிப்பாளரும் விடுதலை புலிகளின் கடற்படையின் தளபதியுமாக இருந்த சிறீராம் என்பவரின் துணைவியான இசைப்பிரியா வாக இருக்கலாம் என சில தவல்கள் தெரிவிக்கின்றன. சீமானின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது


source:athirvu





--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பழைய செய்திகள்: புதிய உண்மைகள்

பெரிதாக படிக்க படத்தின் மேல் அழுத்தவும்




StumbleUpon.com Read more...

கண்ணிவெடிகளை பாக்​டீ​ரியா மூலம் கண்​டு​பி​டிக்​க​லாம்

 

 
வாஷிங்​டன்,​ நவ.17: மண்​ணில் புதைத்​து​வைக்​கப்​பட்​டுள்ள கண்​ணி​வெ​டி​களை பாக்​டீ​ரியா மூலம் கண்​டு​பி​டித்து அமெ​ரிக்க விஞ்​ஞா​னி​கள் சாதனை படைத்​துள்​ள​னர்.

  அ​மெ​ரிக்​கா​வின் எடின்​பர்க் பல்​க​லைக்​க​ழக விஞ்​ஞா​னி​கள் இந்த சாத​னையை நிகழ்த்​தி​யுள்​ள​னர்.

  ஒ​ரு​வித நிற​மற்ற ரசா​ய​னத்​து​ட​னான ஒரு​வகை பாக்​டீ​ரியா கலந்த கரை​ச​லுக்கு கண்​ணி​வெ​டி​களை கண்​டு​பி​டிக்​கும் திறன் உண்டு என்​பதை அவர்​கள் நிரூ​பித்​துள்​ள​னர்.

   எங்​கா​வது கண்​ணி​வெ​டி​கள் இருப்​ப​தாக சந்​தே​கப்​பட்​டால் அந்த இடத்​தில் தற்​போது கண்​டு​பி​டித்​துள்ள பாக்​டீ​ரியா கரை​சலை தெளிக்க வேண்​டும். கண்​ணி​வெடி இருக்​கு​மா​னால் அந்த இடத்​தில் பச்சை நிற​மாக தோன்​றும்.

   இல்​லை​யேல் கரை​சல் எவ்​வித மாற்​றத்​தை​யும் உரு​வாக்​காது.

  இதை வைத்து ஒரு இடத்​தில் கண்​ணி​வெடி உள்​ளதா,​ இல்​லையா என்​பதை கண்​டு​பி​டித்​து​வி​ட​லாம் என்​கின்​ற​னர் அந்த விஞ்​ஞா​னி​கள். தற்​போ​தைய நிலை​யில் கண்​ணி​வெடி கண்​டு​பி​டிக்​கும் சோத​னைக்கு அதிக செல​விட வேண்​டி​யுள்​ளது.

   ஆனால் நாங்​கள் கண்​டு​பி​டித்​துள்ள பாக்​டீ​ரியா கரை​சல் சோதனை மூலம் குறைந்த செல​வில் கண்​ணி​வெ​டியை கண்​டு​பி​டித்​து​வி​ட​லாம்.

   அத்​து​டன்,​ கண்​ணி​வெ​டியை கண்​டு​பி​டிக்க உத​வும் ரசா​ய​னம் மற்​றும் பாக்​டீ​ரி​யா​வால் மனி​தர்​க​ளுக்கோ,​ விலங்​கு​க​ளுக்கோ எவ்​வித பாதிப்​பும் இல்லை என்​றும் அந்த விஞ்​ஞா​னி​கள் கூறி​னர்.

   உ​ல​கம் முழு​வ​தும் ஆண்​டுக்கு 15 ஆயி​ரம் முதல் 20 ஆயி​ரம் பேர் வரை கண்​ணி​வெ​டித் தாக்​குத​லில் பலி​யா​கின்​ற​னர் என்​பது தெரி​ய​வந்​துள்​ளது.

   இது வருத்​தம் அளிக்​கக்​கூ​டி​யது. இந்​நி​லை​யில் கண்​ணி​வெ​டித் தாக்​கு​தல் அதி​கம் நிக​ழும் நாடு​க​ளுக்கு எங்​க​ளது கண்​டு​பி​டிப்பு பெரிய அள​வில் பய​னுள்​ள​தாக இருக்​கும் என்று நம்​பு​கி​றோம் என்​றும் அந்த விஞ்​ஞா​னி​கள் தெரி​வித்​த​னர்.

source:dinamani

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பாக தமிழகத்திலும் வாக்கெடுப்பு நடத்த முயல்வோம்

நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பாக தமிழகத்திலும் வாக்கெடுப்பு நடத்த முயல்வோம் : திருமாவளவன்

சென்னை, டிச.15,2009: நாடுகடந்த தமிழ் ஈழ அரசு தொடர்பாக பல்வேறு நாடுகளில் தமிழர்களிடையே நடத்தப்படும் பொதுவாக்கெடுப்பு போன்று தமிழகத்திலும் நடத்துவதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்வோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், "உலகெங்கும் பரந்து வாழுகிற புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், தங்களுக்கான 'நாடுகடந்த தமிழ் ஈழ அரசு' தொடர்பாக ஆங்காங்கே பொதுமக்கள் வாக்கெடுப்பு நடத்திவருகின்றனர். அத்துடன், ஈழத்தந்தை செல்வா காலத்தில் நிறைவேற்றப்பட்ட 'வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை' ஆதரிக்கும் வகையில் இன்றைய புலம்பெயர்ந்த தமிழர்களின் மனநிலையை அறியும்பொருட்டும் 'பொதுவாக்கெடுப்பு' நடந்து வருகிறது.

அண்மையில் நார்வே மற்றும் ஃபிரான்சு ஆகிய நாடுகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வாக்களித்துள்ளனர். நார்வேயில் 98 விழுக்காடு மற்றும் ஃபிரான்சில் 99 விழுக்காடு அளவிலும் பொதுமக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்துள்ளனர்.

அதாவது, ஈழத்தமிழர்களுக்கு நிலையான பாதுகாப்பு தமிழ் ஈழ விடுதலை மட்டுமே என்பதை மீண்டும் மக்கள் இத்தகைய வாக்கெடுப்பின் மூலம் உறுதி செய்துள்ளனர்.

இலங்கை அதிபருக்கான தேர்தல் நடைபெறவுள்ள சூழலில் புலம்பெயர்ந்த தமிழ்மக்கள் தங்களுக்குள் வாக்கெடுப்பு நடத்தி தமது ஒற்றுமையை வெளிப்படுத்தியிருப்பது மிகுந்த ஆறுதலையளிக்கிறது.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை - நாடுகடந்த தமிழ் ஈழ அரசை விடுதலைச்சிறுத்தைகள் முழுமையாக வரவேற்று ஆதரிக்கிறது.

அத்துடன், தமிழகத்திலும் அத்தகைய பொதுவாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் முன்முயற்சிகளை மேற்கொள்ளும்," என்று திருமாவளவன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


source:vikatan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

முட்கம்பி வேலி கடந்து வந்து விட்டார்கள்; ஆனால், இனி...?

 
 

கிழக்கு இலங்கையைச் சேர்ந்தவர் வைரமுத்து பவானி.

தனது உறவினர் ஒருவரின் திருமணச் சடங்கிற்காக மூன்று வருடங்களின் முன்னர் வடக்கிற்கு அவர் போயிருந்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் வரையில் அவரால் தனது சொந்த இடத்திற்குத் திரும்பி வர முடியவில்லை; வடக்கில் நடைபெற்ற போரில் சிக்கிக்கொண்டார்.

குண்டுத் தாக்குதலால் தன்னுடைய குடும்பத்தில் 6 உறுப்பினர்களையும், தனது கால்கள் இரண்டையும் அவர் பறிகொடுத்துவிட்டார்; அந்த நிலையிலும் பல மாதங்களை, மக்கள் நிரம்பி வழிந்த தடுப்பு முகாம்களில் அவர் கழிக்க வேண்டி இருந்தது.

இப்போதும் கூட - அரச அதிகாரிகளின் கடும் கண்காணிப்புக்கு மத்தியிலேயே அவர் வாழ்கிறார்.

தடுப்பு முகாமிலிருந்து அவர் கிழக்குக்குத் திரும்பிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் தனது வீட்டிற்கு வந்து பார்த்துச் செல்கிறார்கள் என பவானி கூறுகிறார்.

"வன்னியில் நான் எங்கு போனேன், அங்கு என்ன செய்தேன் என்பது பற்றி அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள்" என்றார் பவானி.

அவருக்கு 25 வயதாகிறது; தனது சகோதரியின் வீட்டுத் தரையில் அமர்ந்தபடி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்; சோர்வையும் சலிப்பையும் விரட்டுவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறார்.

போருக்குப் பின்னரான சிறிலங்காவில் அரசின் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையைக் கட்டி எழுப்ப அல்லல்படும் இலட்சக் கணக்கான மக்களில் ஒருவர் தான் பவானி.

வைரமுத்து பவானி [ படம் - நன்றி: Associated Press ]

அமெரிக்காவி்ல் வெளிவரும் The Philadelphia Inquirer ஏட்டிற்காக Associated Pressநிறுனத்தின் எரிக்கா கினெட்ஸ் [ Erika Kinetz ] எழுதியுள்ள செய்திக் கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் கட்டுரையி்ல் மேலும் எழுதப்பட்டுள்ளதாவது:

நாட்டின் வடக்கில் நடைபெற்ற இறுதிப் போரில், படையினர் முன்னேறிய போது விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் 300,000 தமிழ் மக்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். 

இந்த தமிழ் அகதிகளில் பெரும்பாலானவர்கள் இன்று எதிர்காலம் பற்றிய உறுதியின்மையின் பல்வேறு தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

சிறிலங்காவின் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்காகப் போராளிகள் நடத்திய கால் நூற்றாண்டு காலப் போரில் 80,000 முதல் 100,000 வரையான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுவிட்டன.

கடந்த மே மாதத்தில் அந்தப் போராளிகள் தோல்வியடைந்த பின்னர், சனக் கூட்டத்தால் நிரம்பி வழிந்த முகாம்களில் சிறிலங்கா அரசு மக்களை மந்தைகள் போன்று அடைத்து வைத்தது.

அவர்களுடன் பல போராளிகளும் அடைக்கப்பட்டு இருந்தார்கள். 

இந்த முகாம்களின் நிலைமை குறித்து மனித உரிமை அமைப்புக்களும் மேற்கு நாடுகளும் குறை கூறி வந்தன; இது தமிழ் மக்கள் எல்லோருக்கும், சட்டவிரோதமாகக் கூட்டுத் தண்டனை வழங்கப்படும் செயல் என அவை தெரிவித்தன.

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, முகாம்களை ஜனவரி மாத இறுதியில் மூடிவிடுவதாக சிறிலங்கா அரசு அறிவித்தது. 

ஆனால், ஏற்கனவே தமது சொந்த இடங்களுக்குக் திரும்பியவர்கள் கூட காவல்துறையினரின் அனுமதி இன்றி எங்கும் பயணிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களது வீடுகளுக்குப் படை அதிகாரிகள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்கிறார்கள். 

இழுத்துச் செல்லப்பட்ட அல்லது தெரிந்தே படையினரால் விசாரணைக்கு எனக் கூட்டிச் செல்லப்பட்ட தமது அன்புக்குரியவர்கள் குறித்த செய்திக்காகப் பலர் காத்துக் கிடக்கிறார்கள். 

இவ்வாறு அகதிகள் அரசினால் கண்காணிக்கப்படுவதும் அவர்களது வருமானத்திற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு தவறுவதும் இன ரீதியான பிரிவினைப் பதற்றத்தை மீண்டும் ஏற்படுத்தி விடுமோ என மனித உரிமைகள் குழுக்கள் அஞ்சுகின்றன. 

"இடம்பெயர்ந்த 300,000 மக்களையும் அவர்களது உறவினர்களையும் இந்தச் செயல்கள் மனமுடைய வைத்துள்ளன" என்றார் மீனாட்சி கங்குலி [ Meenakshi Ganguly ]. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அவர் [ researcher at the Human Rights Watch ]. 

"தங்களுடையது அல்லாத, நம்பிக்கை வைக்க முடியாத அரசு ஒன்றின் கீழ் தாம் வாழ்கிறார்கள் என்று அந்த மக்கள் எண்ணத் தலைப்படுகிறார்கள்" எனக் கவலை தெரிவித்தார் அவர். 

சிறிலங்காவில் உள்ள 20 மில்லியன் மக்களில் பெரும்பான்மையாக இந்துக்களைக் கொண்ட தமிழர்கள் 18 விழுக்காட்டினரே.

பெரும்பாலும் பௌத்தர்களை உள்ளடக்கிய பெரும்பான்மையினரால் தாங்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர் எனத் தமிழர்கள் பல பத்தாண்டுகளாக முறையிட்டு வருகின்றனர். 

அதேசமயம் - அகதிகள் அரசிடம் இருந்தும் தொண்டு அமைப்புகளிடம் இருந்தும் உதவிகளைப் பெற்று வருகின்றார்கள் என்று புனர்வாழ்வு மற்றும் பேரிடர் உதவி அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார். 

"போரின் கடைசிப் பகுதியில் இடம்பெயர்ந்த பின்னர் வடக்கில் மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பக்கத்து நாடான இந்தியா தகரக் கூரைகளையும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் 25,000 ரூபா பணத்தையும், 6 மாதங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்களை உலக உணவுத் திட்டமும் [ World Food Program ] வழங்கி வருகின்றன" என்றார் அமைச்சர்.

விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். 

அகதிகளில் பலர் விடுதலைப் புலிகள் ஏற்படுத்திய துன்பங்களையும் தாங்கியவர்கள்.

சண்டை நடைபெற்ற பகுதிகளில் இருந்து தப்பியோட முயன்ற மக்கள் போராளிகளால் சுடப்பட்டார்கள் என்றும் தமது பிள்ளைகள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 

6,000 சிறுவர்கள் பலவந்தமாகப் படைக்குச் சேர்க்கப்பட்டார்கள் என ஐ.நா. சிறுவர் அமைப்பு UNICEF குற்றஞ்சாட்டி உள்ளது. 

"அங்கே பிள்ளைகளை வளர்ப்பதென்பது, ஆடு மாடுகளை வளாத்துக் கொல்லக் கொடுப்பது போன்றது" என்றார் சுகதாஸ் ராஜ்வதனி.

34 வயதான அவர், கடந்த ஒக்டோபரில் தான் தனது சகோதரியின் வீடு அமைந்துள்ள துறைமுக நகரான திருகோணமலைக்குத் திரும்பி இருக்கிறார்.

பிள்ளைகளைப் பிடித்துச் செல்ல போராளிகள் வந்த போது - தனது குழந்தைகளை ஒரு குழிக்குள் மறைத்து வைத்து, அதன் மேல் இரும்புத் தகடு ஒன்றைப் போட்டு மூடி - அந்த இரும்புத் தகட்டுக்கு மேலே உலைப் பானையை வைத்து அவர் மறைத்துள்ளர்.

ஒரு நாள் இரவு தமது கூடாரத்திற்கு அருகில் இருந்த கூடாரத்திற்கு வந்த பேராளிகள், அங்கிருந்த சிறுவனைப் பிடித்துச் செல்வதற்குத் தடையாக இருந்த அவனது தந்தையைச் சுட்டுக்கொன்றனர் என்று ராஜ்வதனி கூறுகிறார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பையன் "இவங்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணும்" என்று உரக்கக் கத்தினான் என அந்த நினைவுகளை மீட்கிறார் ராஜ்வதனி.

அப்போது - அங்கிருந்தர்கள் எல்லோரும் - தமது கைகளில் கிடைத்த தடிகளை எடுத்துக் கொண்டு போராளிகளைத் துரத்தித் துரத்தித் தாக்கத் தொடங்கினர். இந்தக் குழப்பம், கொந்தளிப்புகளுக்கு நடுவே ராஜ்வதனியின் குடும்பம் நீரேரியைக் கடந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பி வந்தது. 

அந்தச் சமயத்தில் - இரு தரப்பிலிருந்தும் பீரங்கிக் குண்டுகள் வீசப்பட்டதாக அவர் கூறுகிறார். அவருக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த பெண் எறிகணைச் சிதறல் தாக்கி அப்படியே தலைகுப்புற தண்ணீருக்குள் வீழ்ந்துள்ளார். 

"எங்கள் முன்னாள் வீழ்ந்து கொண்டிருந்த பிணங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு நாங்கள் தொடர்ந்து நடந்தோம்" - ராஜ்வதனியின் குரல் இறுகுகிறது.

தனது வீட்டில் இருப்பது குறித்து இப்போது மகிழ்ச்சியடைகிறார் ராஜ்வதனி; சுற்றிவர மதில் சுவர்கள் கட்டப்பட்ட அந்த வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் அவர் தங்கி இருக்கிறார்.

அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே இருப்பதை அவரால் நிறுத்தவே முடியவில்லை. 

ஆனால், எவருக்கும் எந்த வருமானமும் கிடையாது; தனது இரண்டு தங்க வளையல்களை அடகு வைத்துப் பெற்ற 30,000 ரூபாயுடன் தான் அவரது முழுக் குடும்பம் காலந் தள்ளுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கில் போர் முடிந்துவிட்ட போதும் கூட - தமது இடங்களுக்குத் திரும்பியதில் இருந்து, மிகச் சிலரால் மட்டுமே வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை இங்கு பெற முடிந்துள்ளது; அதிலும் பெண்களின் நிலை மிகச் சிரமமானது. 

சசிகலா சிவராஜாவும் அவரது கணவரும் வடக்கே சென்று வேலை தேடிக்கொள்ளலாம் என்று விரும்பி மட்டக்களப்பில் உள்ள தமது சிறிய கிராமத்தை விட்டு 2006 ஆம் ஆண்டு வெளியேறினார்கள்.

கடந்த ஓகஸ்ட் மாதம் சசிகலா திரும்பி வந்தார்; அவரது கணவர் வரவில்லை. இப்போது அவரும் இரண்டு குழந்தைகளும் நிவாரண உணவை நம்பியும் அவரது சகோதரியின் உதவியை நம்பியுமே வாழ்கிறார்கள். 

பவானியின் வேலை வாய்ப்பு நிலவரமோ மிகக் கேவலமாக உள்ளது. உள்ளுர் தேவாலயம் ஏற்பாடு செய்திருந்த தையல் வகுப்புக்களில் கலந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கு முன்னர் இருந்தது; ஆனால், இப்போது அவர் செய்வதறியாது இருக்கிறார்.

ஏனென்றால் - "அந்த தையல் இயந்திரங்களை இயக்குவதற்குக் கால்கள் வேண்டுமே...".

தொடர்பான செய்திகள்:

முட்கம்பிச் சிறையிலிருந்து விடுதலை; ஆனால், தமிழர்கள் கொடுத்த விலை...

11,000 முன்னாள் புலிப் போராளிகள் வெளித் தொடர்புகள் ஏதுமின்றி "இரகசிய முகாம்"களில் அடைப்பு: நிலைமை கேள்விக் குறி

படங்களால் ஒரு செய்தி: வளமான மண்ணிலிருந்து வரண்ட நிலத்திற்கு

11,000 முன்னாள் புலிகள் சிறையில்: 200 பேருக்கு விசாரணை; மிகுதி எல்லோருக்கும் விடுதலையாம்

source:puthinappalakai


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பொன்சேகா அவிழ்த்துவிட்ட போர்க்குற்ற தகவல்: ஆடிப்போய் உள்ளது இந்தியா தானாம்

 
வன்னிப் போரின் இறுதி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்கள் சிறிலங்கா அரசாங்கத்தை விட இந்தியாவுக்கே அதிக குழப்பத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கருதப்படுகின்றது. 

இது தொடர்பாக கொழும்பு ஆங்கில ஏடு ஒன்றில் எழுதப்பட்டுள்ள கட்டுரை ஒன்றின்படி - 

வன்னிப் போரை நடத்துவதற்கு இந்தியா உதவியதாகவும், உலக நாடுகளின் அழுத்தங்களில் இருந்து சிறிலங்காவுக்கு அப்போது இந்தியா பாதுகாப்பு அளித்ததாகவும் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கோத்தாபய ராஜபக்ச உரையாற்றினார். 

அதே நேரத்தில் - சரணடையும் விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் கொல்லும்படி கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்னொரு பக்கத்தில் கூறிக் கொண்டிருந்தார். 

முன்னதாக - போரின் இறுதிக் கட்டத்தில் - போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த அமெரிக்கா முயன்றது; ஆனால், அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 

கடைசி நேரத்தில் - விடுதலைப் புலிகளின் அரசியற்துறைத் தலைவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா முயன்றது; இதனால் அவர்களை வெள்ளைக் கொடியுடன் முன்னே சென்று சரணடையுமாறு நோர்வே ஊடாக அறிவுறுத்தியது. 

ஆனால், பின்னர் அவர்களின் சடலங்களே கண்டெடுக்கப்பட்டன; சரணடைந்த போது அவர்கள் சிறிலங்கா படையினரால் சுடப்பட்டதாகவே குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

அமெரிக்காவின் அறிவுறுத்தலின் பேரில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களைக் காப்பாற்றத் தவறி விட்டதாக அமெரிக்கா மீது தமிழ் மக்கள் குற்றம் சாட்டினர்; அமெரிக்கா இந்தக் குற்றச்சாட்டு குறித்து இதுவரை அமைதி காத்து வருகிறது.

சரணடைய வந்தோரைக் கொலை செய்தது போர்க் குற்றம் என்றும், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சிறிலங்காவுக்கு எதிராக போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்த போது - தனது பிராந்திய எதிரியான சீனாவுடன் கூட்டுச் செர்ந்து அதை இந்தியாவே தடுத்தது. 

இந்த நிலையில் - சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு இந்தியாவின் South Block எனப்படும் வெளிவிகாரக் கொள்கை வகுப்புப் பீடத்திற்கு அதிருப்தியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கும். 

மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அதிபர் தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிடுவதை இந்த South Block கொள்கை வகுப்புப் பீடம் விரும்பவில்லை. 

இதே சமயத்தில் - சரத் பொன்சேகா, அமெரிக்க அதிகாரிகளால் - போர்க் குற்றம் தொடர்பான 'கேள்வி-பதில்' ஒன்றுக்கு சமூகமளிக்குமாறு கேட்கப்பட்ட பின்னர் இந்திய ஊடகங்கள் அவருக்கு எதிரான கருத்துகளை வெளியிட ஆரம்பித்தன. 

அவர் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நெருக்கமானவர் என்றும் ஆபத்தான ஒரு படைத் தளபதி என்றும் இந்திய ஊடகங்கள் விபரித்தன. 

ஏற்கெனவே - கொழும்பு ஆனந்தா கல்லூரியில் உரையாற்றிய போது - போரின் இறுதி நாட்களில் சிறிலங்கா அரசு மீதான சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுபட இந்தியா உதவியதாக கோத்தாபய ராஜபக்ச கூறியிருந்தார். 

இந்த நிலையில் - இந்தியாவின் பக்க பலம் இருக்கிற துணிச்சலில் தான், சரணடையும் விடுதலைப் புலிகளைக் கொல்லுமாறு கொத்தாபய உத்தரவிட்டாரா என்ற கேள்வியும் இப்போது எழும்புகின்றது. 

சரத் பொன்சேகா இதுபற்றி இப்போது அதிகம் பேசுவது இந்தியாவுக்குத் தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது: சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர்க் குற்ற விசாரணை வருமானால், அது இந்தியாவுக்கும் பிரச்சனைகளைக் கொண்டு வரலாம். இது இந்தியாவுக்குப் பெரும் நெருக்கடியாக உருவாகும். 

அதனால் - மகிந்த ராஜபக்சவை காப்பாற்ற இந்தியா முனையலாம் என்றும் கருதப்படுகின்றது


source:puthinappalakai

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP