சமீபத்திய பதிவுகள்

கடுமையாக போராடும் விடுதலைப்புலிகள்: விரக்தியில் விளிம்பில் சிறிலங்கா இராணுவம்

>> Tuesday, March 31, 2009

இராணுவத்தின் முன்னேற்றத்ததை தடுத்து விடாப்பிடியுடன் விடுதலைப் புலிகள் கடுமையாக போராடி வருவதால், நகர முடியாமல் சிறிலங்கா இராணுவத்தினர் விரக்தியின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இன்னும் சில நாட்களில் விடுதலைப் புலிகளின் கதை முடிந்து விடும். இலங்கை முழுவதும் சுதந்திர பூமியாகி விடும். பிரபாகரன் அழிக்கப்பட்டு விடுவார். உயிர் தப்ப அவர் சரணடைவதுதான் புத்திசாலித்தனம் என அதிபர் ராஜபக்ச முழக்கமிட்டு 2 மாதங்களாகி விட்டது.

ஆனால் 2 மாதங்களுக்கு முன்பு எந்த இடத்தில் இருந்ததோ கிட்டத்தட்ட அதே இடத்தில்தான் இருக்கிறது இராணுவம். காரணம், விடுதலைப் புலிகள் காட்டி வரும் கடும் எதிர்ப்பு.

ஆமை வேக நகர்வு

சிறிலங்கா ராணுவத்தின் முன்னேற்றம் ஒரு ஆமையின் தினசரி நகர்வை விட மெதுவாக உள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு 500 மீற்றர் அளவுக்குத்தான் இராணுவம் முன்னேறி வருகிறதாம். அந்த அளவுக்கு புலிகள் கடும் எதிர் தாக்குதலை தொடுத்து தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றனர் இராணுவத்தினரை.

விடுதலைப் புலிகள் தற்போது 21 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்குள் சுருக்கப்பட்டு விட்டதாக இராணுவம் கூறுகிறது. ஆனால் அந்த பரப்பளவுக்குள் ஊடுருவ முடியாமல் இராணுவம் திணறிக் கொண்டிருக்கிறதாம்.

மேலும் வாசிக்க அழுத்தவும்

StumbleUpon.com Read more...

ஆங்கிலத்தில் வெளிவந்த அருந்ததிராயின் இந்தக் கட்டுரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

படுகொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கும் போது, இனவதைமுகாம்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அடைத்து வைக்கப்படுகிற போது, இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட  மக்கள் பட்டினியால் மரணத்தை எதிர்நோக்கும் போது, ஒரு இனப்படுகொலை நடக்க இருக்கும் போது ஒரு மாபெரும் தேசம் மரண அமைதி காக்கிறது.
 
இலங்கையைச் சூழ உள்ளவர்களது மௌனம் அங்கு பயங்கரம் படிப்படியாக அதிகரித்து வருவதற்குக் காரணமாக இருக்கிறது. இந்தியாவின் பிரதான ஊடகங்களில் அது பற்றிய எவ்வித அறிக்கைகளும் வெளியாவதில்லை. உண்மையில் சர்வதேச ஊடகங்களிலும் நிலைமை அவ்வாறு தான் உள்ளது.  அங்கு என்ன தான் நடைபெறுகிறது?  அவை பற்றி நாம் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும்?


அங்கிருந்து வடிகட்டப்பட்டு வெளிவரும் செய்திகளினூடாக இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் நாட்டின் ஜனநாயகத்தையே சிதைத்து அழித்து வருவதை அறிய முடிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மேல் சொல்லுந்தரமற்ற குற்றங்களைப் புரிந்து வருகிறது.




மேலும் வாசிக்க அழுத்தவும்

StumbleUpon.com Read more...

கடந்த ஏழு நாட்களில் புதுக்குடியிருப்புச் சமரில் 1,412 படையினர் பலி; 6,123 பேர் காயம்

புலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக சிங்களப்படை கடும் சமர்: முறியடிக்கப்பட்ட புதுக்குடியிருப்புச் சமரில் 1,412 படையினர் பலி; 6,123 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் முன்னரங்க அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாய் எடுத்த பாரிய முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னி சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களின் தகவல்களை மேற்கோள் காட்டி 'புதினம்' வன்னிச் செய்தியாளர் தெரிவித்ததாவது:

புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளின் ஊடாக பாரிய முன்னேற்ற தாக்குதல் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த முன்னேற்ற முன்நகர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் முறியடிப்புத் தாக்குதல்களில் இதுவரை 1,412 சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 6,123 படையினர் படுகாயமடைந்தும் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

இலங்கை இராணுவ இணைய தளங்களின் முரண்பட்ட தகவல்களை குறித்த செய்திகள்

>> Monday, March 30, 2009

StumbleUpon.com Read more...

நடக்காத சண்டையில் உயிர் இழந்த கடற்புலிகள்???


முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையே சமர் எதுவும் நிகழவில்லை. மாறாக பொதுமக்கள் சென்ற மூன்று படகுகளை இலங்கை இராணுவம் தாக்கியழித்துள்ளது. இறந்தவர்களின் சடலங்கள் முல்லைத் தீவில் கரை ஒதுங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்று காலை(30.03.2009) புதுமத்தளான் பகுதியில் இருந்து 4 படகுகளில் பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகுள் சென்றுள்ளனர். அதிகாலை வேளையில் அவர்கள் மீது இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. சிலபடகுகள் கரைதிரும்பிய போதும் சுமார் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகவும் அதில் பயணித்த அனைவரும் இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


மேலும் விவரங்களுக்கு அழுத்தவும்




StumbleUpon.com Read more...

தமிழ் பதிவர்களை ஏமாற்றிய இலங்கை அரசாங்கம்

சமீபத்தில் இலங்கை அரசாங்கம் தங்களுடைய உலங்கு வானூர்த்திகள் தாக்கப்பட்டதாக ஒரு வதந்தியை பரப்பிவிட்டிருந்ததன் காரணத்தை அதிர்வு இணைய தளம் வெளியிட்டு உள்ளது.அதனை நம்மவர்களின் கையை கொண்டே நம்முடைய கண்ணை குத்தும் திட்டமாகவே இலங்கை அரசு செயல்பட்டுள்ளதாக அந்த இணையம் தெரிவிக்கிறது.விரிவான செய்திகளை வாசிக்க அழுத்தவும்

StumbleUpon.com Read more...

ஐ.நாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது போர் நிறுத்தத்துக்கு உடண்பாடு

ஐ.நாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது அரசாங்கம். தற்காலிக தாக்குதல் நிறுத்தத்திற்கு உடன்பாடு!!

அரசாங்கம் தற்காலிகமான தாக்குதல் நிறுத்தமொன்றை இன்று அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம இதனைத்  தெரிவித்துள்ளார். வன்னியில் சிக்கியுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கும் அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும் இந்த தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 




மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

சிங்கிளாக்கப்படும் சிங்கள ராணுவம்

>> Sunday, March 29, 2009

உலக நாடுகளின் எதிர்ப்புகளினால் சிங்கள அரசு திணறி வரும் விடயம் அனைவரும் அறிந்ததே.அதை பற்றியதான ஒரு ஆய்வுக்கட்டுரை

சிந்திக்காத சிங்களம் இதுவரை சந்திக்காத சமர்க்களம்



இன்று போர்வெறி பிடித்து கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு. வெற்றிக்களிப்பில் திளைத்துப்போயிருக்கும் அதன் செயற்பாடுகள் பின்விளைவுகள், எதிர்விளைவுகளை பற்றி துளியெயேனும் சிந்திக்காத விதமாக அமைந்திருக்கிறது. "தானே உலகின் வல்லரசு" என்ற பாணியில் உலக நாடுகளின் கோரிக்கைகளையும் நிராகரித்து திமிருடன் பேசிவருகிறது. இந்நிலையில், இதுவரை காலமும் சந்திக்காத சமர்க்களங்களை சந்திக்கப்போகிறது சிங்களதேசம்.

தமிழினம் மீது வில்லங்கமாகவே திணிக்கப்பட்ட போரில் தமிழினம் அதிகமாகவே இழந்துவிட்டது. "புலிகளை ஒழிக்கின்றோம்" என்று சொல்லிகொண்டு தமிழினத்தின் மீது இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. அப்பாவித் தமிழர்களின் அழிவுகளை, இழப்புக்களை தமது மாபெரும் வெற்றிகளாக பிரகடனப்படுத்தியும் வருகின்றது. ஆனால் அதுவே தங்களுக்கெதிராக உருவெடுத்து நிற்குமென எள்ளளவேனும் சிந்தித்துப் பார்த்திருக்காது சிங்கள அரசு. தப்பான கணிப்பு, எதேச்சைத்தனமான போக்கு மற்றும் போர்வெறிக் கொள்கை என்பவற்றுடன் வலம்வரும் சிங்கள அரசில், களயதார்த்தங்களை புரிந்து சிந்தித்து செயலாற்றக்கூடியவர்கள் யாருமே இல்லையென்பது பரிதாபமே!!!

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையினர் 500 மீற்றர் பின்நகர்வு: லக்பிம தகவல்



சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமன்ட் மற்றும் 20 ம் கஜபாகு ரெஜிமன்ட் மீது சுமார் 300 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியினர் கடந்த புதன்கிழமை பானு மற்றும் லோரன்ஸ் ஆகியோர் வழிநடாத்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலையடுத்து சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமண்ட் தமது நிலைகளில் இருந்து 500 மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்ததாகவும், இச்சமயத்தில் 58 ம் படையணியின் படையதிகாரி பிரிகேடியர் சிவாந்திர சில்வா விடுமுறையில் இருந்ததாகவும், இதனையடுத்து உடனடியாக மறுநாள் அவர் களமுனைக்கு திரும்பியதாகவும், மேலும் மேலதிக படையினர் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அப்பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கிய விஜயபா படையணி

விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கிய விஜயபா படையணி
[ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009, 07:06 மு.ப ஈழம்] [பி.கெளரி]
வன்னிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிச்சூட்டுத் தாக்குதலில் சிக்கி 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

சாலை பகுதியால் நகர்வில் ஈடுபட்டு வரும் 55 ஆவது படையணியின் 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி விடுதலைப் புலிகளின் 10 அடி உயரமான மணல் அணை ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.

இந்த மணல் அணையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலை இடங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நோக்கத்துடள் பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லெப். சந்திரஜித் தலைமையில் 4 பேர் கொண்ட இராணுவ அணி ஒன்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.


மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

StumbleUpon.com Read more...

ஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்?

>> Saturday, March 28, 2009

வன்னியில் புதுக்குடியிருப்பு களமுனையில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் இதுவரை சுமார் 200 இந்திய படையினர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனன.
இவ்வாறு புதுக்குடியிருப்பு களமுனையில் நடைபெற்ற மோதலில் புலிகளோடு போரிட்டு மடிந்து போன 200 இந்திய படையினரின் சடலஙகள் இந்திய நகரமான புனேக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.


StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினரின் யுத்த டாங்கி புலிகளால் தாக்கியழிப்பு: தப்பியோடும் படையினர் தொகை அதிகரிப்பு

புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினரின் யுத்த டாங்கி புலிகளால் தாக்கியழிப்பு: தப்பியோடும் படையினர் தொகை அதிகரிப்பு


முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பு பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலின் போது யுத்த டாங்கி (Tank) ஒன்று விடுதலைப்புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஆனந்தபுரத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சிறிலங்கா படையினர்யுத்த டாங்கிகள் சகிதம் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியவாறு முன்நகர்வினை மேற்கொண்டனர்.

இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர தாக்குதலின் போது படையினருக்கு பெரும் எண்ணிக்கையிலான இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் முன்நகர்வும் முறியக்கப்பட்டது.

இம் முறியடிப்புச் சமரில் படையினரின் யுத்த டாங்கி ஒன்று விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் விடுதலைப் புலிகளின் மறிப்புச் சண்டைகள் மற்றும் மட்டுப்படுத்திய வலிந்த தாக்குதல் நடவடிக்கையின் காரணமாக சிங்களப் படைகளிடையே மனச்சோர்வும் அச்சமும் அதிகரித்து வருவதாகவும் வலிந்த தாக்குதல்கள் நடத்தும் மனநிலையில் இருந்த சிங்களப் படைகள் தற்போது தற்காப்பு நிலையை எடுக்கும் மனநிலையை நோக்கிச் செல்வதாகவும் தெரிய வருகின்றது.


மேலும் வாசிக்க அழுத்தவும்

StumbleUpon.com Read more...

இமாம் வேடத்தில் இருந்தவர் மசூதி ஒன்றில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்

>> Friday, March 27, 2009

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி கைபர் கணவாய் பகுதியில் உள்ளது ஜம்ரூத் நகரம். இங்குள்ள மசூதி ஒன்றில் இன்று வழக்கமான வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக 250-க்கும் மேற்பட்டோர் கூடியிருந்தனர்.


அப்போது இமாம் வேடத்தில் வந்த ஒருவர் தொழுகையை நடத்த ஆரம்பித்தார். அனைவரும் தொழுகையில் மும்முரமாக இருந்தபோது, இமாம் வேடத்தில் இருந்தவர் தனது உடலில் கட்டியிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.


அந்த குண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில், மசூதியின் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.

மேலும் அதிக விவரங்களுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பில் கடந்த 3 நாள் சமரில் 108 சிறிலங்கா படையினர் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு களமுனையில் கடந்த மூன்று நாட்கள் நடைபெற்ற சமரில் சிறிலங்கா படையைச் சேர்ந்த 108 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளைப்பீட வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது:


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

தமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்.-தேர்தலுக்குள் தீர்த்துக் கட்டு!....

'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசுஇ தன்னுடைய ராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.
இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசினோம். ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால்இ புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை.
 
கடந்த இரண்டு மாதங் களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள் சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால்இ இதையெல்லாம் மறைத்துவிட்டுஇ 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது.
இந்திய ராணுவமோ... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய ராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம்இ விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சிஇ பூநகரிஇ வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் சிங்கள ராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பதுஇ எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள ராணுவம் மீட்டு வைத்திருந்தபோதுஇ பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தா என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து யானையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள ராணுவம் அஞ்சுகிறது.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திரிகோணமலை மாவட்டம் புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில்இ இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள்.
அவர்களைக்கொண்டு இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் ரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழுஇ ஒரு மருத்துவமனையையே நிறுவியது. இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயகஇ 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார்.
அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல்இ 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார்.
சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த ராணுவ அதிகாரி ஒருவர்இ 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய ராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னஇ 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதையை போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார்.
இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள்இ இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள்.
''சிங்கள ராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய ராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத் தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய ராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத் தீவுக்கு அருகே நிற்கிறது. இந்தப் படைகள் ஒருசேர முல்லைத் தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன.
இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால்இ இந்திய ராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள்.
இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன்இ 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடிஇ 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள்.
தமிழ் ஆர்வலர்களோஇ ''கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்... அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய ராணுவம்இ இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில்இ இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சத்தீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப் பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. 'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில்இ ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் அரசோ ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது.
மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ?

 

http://www.seithy.com/breifNews.php?newsID=13078&category=TamilNews

StumbleUpon.com Read more...

இரணைபாலையில் புலிகள் நடத்திய தாக்குதலின் நேரடி வீடியோ காட்சிகள்

>> Thursday, March 26, 2009

இந்த மோதல்களில் ஒரு நாளிலேயே 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருந்ததுடன் படையினரது உடலங்களும் படைக்கருவிகளும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன. இதன்போது படையினரால் கைப்பற்றப்பட்ட ஒட்டுசுட்டான் காட்டுப் பிரதேசத்தில் விடுதலைப்புலிகளில் ஆழ ஊடுருவும் படையணிகள் நடத்திய தாக்குதலில் ட்ரக் ஒன்றில் பயணம் செய்த சுமார் 30 படையினர்; கொல்லப்பட்டிருந்தனர்.





இத்தாக்குதல் நடந்தபொழுது நேரடியாக எடுக்கப்பட்ட காணொளிக் காட்சியை விடுதலைப்புலிகள் வெளியிட்டுள்ளனர்.




மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

கள்ளத்தோணியும்,கைகூலியும்

கள்ளத்தோணியில் சென்று இலங்கை ராணுவத்துடன் சண்டை போடுங்கள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதன் மூலம் அரசியல் தலைவர்களை கொச்சைப்படுத்தி இருப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று கன்னியாகுமரியில் தமது கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்குகிறார்.

திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் சென்று அங்கிருந்து அவர் கன்னியாகுமரி செல்கிறார். இன்று காலை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்திடம் நிருபர்கள், கருணாநிதியின் அறிக்கை குறித்து கருத்து கேட்டனர்.

StumbleUpon.com Read more...

இலங்கை நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமகி வருகிறது :கிறிஸ்வ உதவி அமைப்பு


இலங்கையில் பொதுமக்களின் நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமகி வருவதாக கிறிஸ்வ உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.


இலங்கையில் போர் நடைபெறும் பகுதிகளில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் மக்கள் சிக்கியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பகுதியில் சிக்கியுள்ள மக்களுக்கு போதுமான உணவு, மருந்து குடிநீர் இல்லை எனவும் போர் பகுதியில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவது ஆபத்தானது எனவும் கிறிஸ்தவ உதவி அமைப்பு கூறியுள்ளது.


போர் காரணமாக சாதாரண பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் பெரும் துயரங்களை அனுபவித்து வருவதாக கிறிஸ்தவ உதவி அமைப்பின் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு தலைவர் றொபின் கரீன்வூட் தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இலங்கையின் வடக்கில் இடம்பெறும் மோதலில் இருந்து தப்பிப்பதற்காக பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து;ளளனர். அத்துடன் இரண்டு வாரங்களில் 7 ஆயிரம் பொதுமக்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.


கடந்த டிசம்பரில் இருந்து இதுவரை 50 ஆயிரம் மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மன்னார், யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பிரதேசங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில தங்கியுள்ளதாக உத்தியோபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.


கிறிஸ்தவ உதவி பங்காளர்கள் போர் பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு மற்றும் உடனடி தேவைகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் குறைந்தளவான உதவி பணியாளர்களே பணிகளில் ஈடுபட்டு;ளளனர்.


இடம்பெயர்ந்து வரும் மக்கள் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள இடைதங்கல் முகாம்களில் கவனிக்கப்படுவது குறித்து  தாம் கூடிய கவனம் செலுத்தியுள்ளதாக றொபின் கிரீன்வூட் தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்கள் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பானதும் உதவியளிக்க கூடியதுமாக இல்லை.


பொதுமக்களை பாதுகாப்பது அரசாங்கம் மற்றும் விடுதலைப்புலிகளின் கடமை, அத்துடன் உடனடி மனிதாபிமான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக உதவி பணியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் கிறிஸ்தவ உதவி அமைப்பின் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு தலைவர் றொபின் கிரீன்வூட் கோரியுள்ளார்.


இலங்கையில் இருந்து உண்மையான தகவல்கள் வெளியாவது மிகவும் ஆபத்து நிறைந்தது. ஊடகவியலாளர்களும், தொண்டு பணியாளர்களுக்கும் குறைந்தளவான வழிகளே உள்ளன.


ஜெனிவாக் கோட்பாடுகளுக்கு அமைய இலங்கையில் சிக்கியுள்ள பொதுமக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியான உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.


பொதுமக்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்கவும், அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக வெளியேறவும் உடனடியாக தற்காலிக மோதல் தவிர்ப்பை ஏற்படுத்த வேண்டும்.



மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

தமிழ் செய்திகள்

>> Wednesday, March 25, 2009

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளைப் பற்றிய மதிப்பீடுகள் என்றுமே மாறப் போவதில்லை. ஏனெனில், மக்களே புலிகள் புலிகளே மக்கள்.

ஒரு சிறிய நிலப்பரப்புக்கு உள்ளே விடுதலைப் புலிகளை முடக்கி வைத்துள்ளோம் என சிங்கள தேசம் மார்தட்டி வந்த நிலையில் மார்ச் மாத ஆரம்பம் முதல் கள முனையில் நடைபெற்று வரும் சம்பவங்கள், களமுனை விடுதலைப் புலிகளுக்குச் சார்பாக மாறி வருவது போன்ற உணர்வைத் தோற்றுவித்துள்ளது.

முதலாம் திகதி முதல் முல்லைத் தீவு மாவட்டத்தில் முன்னரங்கக் களமுனைகளில் நடைபெற்றுவரும் மோதல்களுக்கு அப்பால் இராணுவத்தினர் எதிர்பார்த்திராத இடங்களில் பல ஊடுருவல் தாக்குதல்களும் கரும்புலித் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன.

இதில் மகுடம் வைத்தாற் போன்று 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேராவில் பகுதியில் நடைபெற்ற ஊடறுப்புச் சமரில் ஆறு ஆட்டிலறித் தளங்கள் அழிக்கப் பட்டுள்ளன. இந்தத் தளங்கள் அழிக்கப்பட முன்னதாக அதனைக் கைப்பற்றிய விடுதலைப் புலிகள் அந்த ஆட்டிலெறிகளைக் கொண்டே இராணுவத்தினர் மீது தாக்குதல் நடாத்தியிருப்பதும் 3 கரும்புலிகள் தவிர ஏனையோர் தப்பிச் சென்றிருப்பதாகவும் படைத் தரப்பிடையே கிலியை ஏற்படுத்தியுள்ளது.


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

என் கற்பு விற்பனைக்கு:கல்லூரி மாணவி

>> Tuesday, March 24, 2009

ருமேனியா நாட்டை சேர்ந்த இளம்பெண் அலீனா பெர்சியா. 18 வயதான அவர் ஒரு மாணவி.


அவர் தன் பல்கலைக்கழக படிப்பை முடிப்பதற்கு போதுமான நிதி வசதி இல்லாமல் கஷ்டப்பட்டார். இதனால் அவர் படிப்புச் செலவுக்கான தொகையை சரிக்கட்டுவதற்காக அவர் தன் கற்பை ஏலம் விடுவது என்று முடிவு செய்தார். இதுதொடர்பாக அவர் ஒரு இணையதளத்தில் விளம்பரம் செய்து இருக்கிறார்.


"நான் 48 கிலோ எடை உள்ளவள். என் உயரம் 5 அடி 6 அங்குலம். ருமேனியாவை சேர்ந்தவள். நான் புகைபிடிக்க மாட்டேன்.


நான் கன்னிப்பெண் என்பதற்கான டாக்டர் `சர்டிபிகேட்' வைத்து இருக்கிறேன். நான் முதல் அனுபவத்தை மிக முக்கியமானதாகவும், சிறப்பானதாகவும் கருதுகிறேன்.


ஏலத்தில் வெற்றி பெறுபவர் வாரஇறுதி முழுவதையும் என்னுடன் செலவிடலாம். ஆனால் எல்லா செலவும் அவர் பொறுப்பு தான். என் பயணம், ஓட்டலில் தங்குவதற்கான கட்டணம் அனைத்தும் அவர் செலவு தான்.''


இவ்வாறு அவர் விளம்பரம் கொடுத்து இருக்கிறார்


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

இது... இது... எப்படிச் சாத்தியம்? லசந்தவா? லசந்த விக்ரமதுங்கவா? கொல்லப்பட்ட லசந்தவா?

இது... இது... எப்படிச் சாத்தியம்? லசந்தவா? லசந்த விக்ரமதுங்கவா? கொல்லப்பட்ட லசந்தவா?



கொழும்பு நகரத்தில், மிகுந்த பாதுகாப்பு வளையங்களுக்கு இடையே அமைந்திருந்த அந்தப் பிரமாண்டமான மாளிகை அமைதியாகக் காணப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால், ஒரு சில ஃபோகஸ் விளக்குகள் மட்டுமே எரிந்துகொண்டு இருந்தன.

அப்போது காற்றில் கலந்து ஒலித்த மெல்லிய ஓசை, சற்று தூரே இருந்த கடல் அலைகளின் ஓசையா அல்லது கோடை இரவின் தணியாத தணலின் ஓசையா என்பது தெரியவில்லை.

ஆனால், அந்தப் புதிரான சத்தம் மகிந்தாவை மிகவும் தொந்தரவுபடுத்தியது. அருகே, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தன் மனைவியைப் பார்த்தார். தண்ணீர் குடிக்க வேண்டும் என்கிற உணர்வு தோன்றியது.
படுக்கையிலிருந்து எழுந்து, கதவைத் திறந்து வெளியே வந்தார். வாசல் கதவுக்கு வெளியே ராணுவக் காவல்காரர்கள் தோளில் துப்பாக்கியுடன் பாரா நடந்த காட்சி 'சில்-அவுட்' ஆகத் தெரிந்தது. அந்த நள்ளிரவிலும் கொழும்பு நகர வீதிகளில் எங்கோ ஒரு வாகனம் சக்கரங்களைத் தரை யுடன் தேய்த்தபடி செல்லும் ஓசை. ராணுவ வண்டியாக இருக்கக்கூடும். மகிந்தா ஃபிரிஜ் ஜைத் திறந்தார். தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குளிர்ந்த நீரைக் கொஞ்சம் பருகினார்.

இப்போதெல்லாம் தூக்க தேவதை அவரிடம் கொஞ்சமும் கருணை காட்டுவதில்லை. அவர் நிம்மதியாகத் தூங்கிப் பல காலம் ஆகிவிட்டது. கண்ணை மூடினால், குண்டடி பட்டுக்கிடக்கும் பிணங்கள் முன்னே எழுந்து வந்து தொந்தரவுபடுத்தும். ராணுவ உடை அணிந்த, வரிசையான பிணங்களும் எழுந்து நின்று, 'நாங்கள் சாக வேண்டிய பருவமா இது?' என்று கேள்வி கேட்கும். அதற்காகவே, அவருடைய கண்கள் மூட மறுக்கும். விடியற்காலையில்தான் உடல் அசதியில் கண்கள் மெள்ளச் செருகும். இரவு சரியாகத் தூங்காததன் விளைவு, அடுத்த நாள் முழுக்க எதிரொலிக்கும். எரிச்சல் கலந்த கடுமையான சில முடிவுகளையும் எடுக்கவைக்கும்.

மகிந்தா மீண்டும் படுக்கையறையை நோக்கி நடந்தார். அப்போதுதான் அந்தக் குரல் கேட்டது. 'மகிந்தா, நாம் கொஞ்சம் கதைப்போமா?'

மகிந்தா திகைத்தார். உண்மையிலேயே அப்படி ஒரு குரல் கேட்டதா? அல்லது மனப்பிரமையா? பல பாதுகாப்பு வளையங்களையும் தாண்டி, அந்தக் குரல் எங்கிருந்து வந்திருக்கும் என்று யோசித்தபடி சுற்றிலும் பார்த்தார். எதுவும் விசேஷமாகத் தென்படவில்லை. அப்போது மீண்டும் அந்தக் குரல் ஒலித்தது.

'மகிந்தா, சோபாவில் பார், உனக்காக நான் அமர்ந்து காத்திருக்கிறேன்.'

மகிந்தா சோபாவைப் பார்த்தார். அவர் ரத்தம் உறைந்தது. வெள்ளி நிற மெல்லிய ஒளிப் பின்னணியில் தகதகக்கும் தோற்றத்தில் அந்த உருவம் அமர்ந்திருந்தது. அந்த உடல், முகம், தலைமுடி, எல்லாவற்றுக்கும் மேலாக, என்றுமே மறக்க முடியாத அந்தச் சிரிப்பு. இது... இது... எப்படிச் சாத்தியம்? லசந்தவா? லசந்த விக்ரமதுங்கவா? கொல்லப்பட்ட லசந்தவா?

மேலும் தொடர்ந்து வாசிக்க அழுத்தவும்.

StumbleUpon.com Read more...

ஈழம் எரிய வைக்கிறார்கள் அங்கே,வயிறு எரிய வைக்கிறார்கள் இங்கே

ஜெயலலிதாவை தலைவியாக கொண்டு இலங்கை மீது படையெடுங்கள்-ராஜபக்சேயை போரில் வெல்வார்:கலைஞர்


தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவ்வறிக்கையில்,


’’டாக்டர் ராமதாஸ் போன்றவர்கள் இலங்கைப் பிரச்சினையிலே எங்களை விடத் தீவிரமானவர்கள் என்று காட்டிக்கொள்ள - காலையிலே ஒரு அறிக்கை, மாலையிலே ஒரு அறிக்கை என்று வெளியிட்டுக் கொண்டிருக் கிறார்கள்.


இலங்கைத் தமிழர் பிரச்சினையை கைகழுவி விட்டோம் என்று கதைக்கிறார்கள்.


அவர்கள் வாதப்படி நாம் கை கழுவி விட்டவர்கள் - அல்லது கையாலாகாதவர்கள் - இவர்கள்தான் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்றும் அந்தக் கருமமே கண்ணாயினார் என்ற நிலையிலே உள்ளவர்கள் ஆயிற்றே; இலங்கைத் தமிழர்கள் பாதுகாப்புக் குழுவிலே இருக்கின்ற இந்த வீராதி வீரர்கள், சூராதி சூரர்கள், ரண ரங்க மார்த்தாண்டர்கள் - முழங்கட்டுமே முரசம் - கொட்டட்டுமே பேரிகை.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

ஊடகவியாளர்களை இலங்கை ஒடுக்குகிறது-அமேரிக்க அமைப்பு கண்டணம்

StumbleUpon.com Read more...

மட்டக்கிளப்பில் அதிரடிப்படையினரின் மினி முகாம் தாக்கியளிப்பு

>> Monday, March 23, 2009

மட்டக்கிளப்பில் விடுத்லைப்புலிகளால் அதிரடிப்படையினரின் மினி முகாம் தாக்கியளிப்பு 3 படையினர் பலி ஜவர் காயம்.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

புலிக்கொடியை தடைசெய்ய வேண்டுமாம்? ஏன்

புலிக்கொடியென்பது தமிழர்களின் வரலாற்றுக்கால சோழ மன்னர்களிற்குரிய , அவர்களின் வீர வரலாற்றை பறைசாற்றிய கொடியென்பது சரித்திரம். அந்தவகையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் தமக்கான கொடியாக, சின்னமாக புலிக்கொடியை தேர்ந்தெடுத்திருந்தனர். தற்போதும் தமிழரின் வீரத்தினை இப்புலிக்கொடியே பறைசாற்றி வருகின்றது.

அண்மையில் அனைத்துலக நாடுகளில் நடந்த தமிழர் எழுச்சிகள் அனைத்திலும் விடுதலைப் புலிகளைக் குறிக்கும் புலிக்கொடி பாவிக்கப்பட்டிருந்ததானது பல மட்டங்களில் பலவிதமாக பேசப்பட்டிருக்கிறது. அதற்கு எதிராக மற்றும் ஆதரவாக எழுப்பப்பட்டுள்ள கருத்துக்களை உற்றுநோக்கும்போது, தமிழீழ தேசியக்கொடியான புலிக்கொடி பாவிக்கப்பட்ட விடயம் அனைவர் மத்தியிலும் ஏதோவொரு தாக்கத்தினை உண்டுபண்ணியிருக்கிறது என்பது தெளிவாகப் புலப்படும்.

குறிப்பாக இலங்கை அரசு பாய்ந்தடித்துக்கொண்டு தனது எதிர்ப்பை வெளியிட்டிருப்பதென்பது அதன் விளைவுகள் மிக அழுத்தமாக இருக்கும் என்பதனையே கோடிட்டுக் காட்டுகிறது. இத்தாக்கங்களின் பிரதிபலிப்புகள் எவ்வாறு அமையும் அதன் பலாபலன்கள்,விளைவுகள் எவ்வாறிருக்கும் என்பது பற்றி பார்ப்போமானால்...

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

புலிகள் தயாரித்துள்ளா மோட்டரை கண்டு அதிர்ச்சி அடைந்த ராணுவம்-‍போட்டோ இணைக்கப்பட்டுள்ளது

>> Sunday, March 22, 2009

பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்

StumbleUpon.com Read more...

Breaking News:வியாழன், வெள்ளி மோதல்களில் 600 வரையான படையினர் பலி!

வியாழன், வெள்ளி மோதல்களில் 600 வரையான படையினர் பலி!


புதுக்குடியிருப்பு பகுதியில் சிறீலங்காப் படையினரின் நான்கு முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளனர். இதன்போது 600 வரையான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் நான்கு முனைகளில் கனரக ஆயுதங்களின் பின்புல சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் பெருமெடுப்பில் முன்னகர்வுகளை மேற்கொண்டுள்ளனர்.


இதற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதல்களிலேயே 600 வரையான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர்.

மேலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளின் சர்வதேச நெட்வொர்க்‍-புலிகள் அறிவிப்பு

>> Saturday, March 21, 2009

உலகு எங்கும் வியாபித்து தமிழ் மக்களின் உள்ளத்து உணர்வாக இருப்பதே எமது விடுதலை அமைப்பு என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புதுக்குடியிருப்பு கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.இளம்பருதி தெரிவித்துள்ளார்.
மக்கள் மத்தியில் நிகழ்கால நிலைமைகள் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை நடத்திய கலந்துரையாடலின் போது சி.இளம்பருதி மேலும் தெரிவித்துள்ளதாவது:

எதிரியின் பொருண்மியத் தடை, மருந்துத் தடை, எறிகணைத் தாக்குதல், வான் தாக்குதல் மத்தியிலும் சளைக்காது முகம் கொடுத்து நம்பிக்கையுடன் எதிர்காலத்தை நோக்கி நகர்கின்றோம்.

எல்லாவற்றையும் இழந்த நிலையிலும் உறுதியை இழக்காமல் நம்பிக்கையுடன் மக்கள் இருக்கின்றனர். நிலங்களை நாம் இழந்தது நெருக்கடியை ஏற்படுத்துகின்றதுதான். இதனை எதிரி தனது பெருவெற்றியாக பரப்புரை செய்கின்றான்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் அண்மைய நாட்களிலும் சிங்களப் படைகளின் முன்னணிப் படைகள் பாரிய சிதைவுகளை சந்தித்திருக்கின்றன. பாரிய உயிரழிவுகளை சந்தித்திருக்கின்றன.

அவர்களின் முன்னணிப் படைகள் சிதைவடைந்து கொண்டிருக்கின்றன. இதனைச் சிங்களப் படைத்தரப்பு எதிர்பார்க்கவில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரலில் எதுவும் நடந்தேறவும் இல்லை. இனி நடக்கப்போவதும் இல்லை.

0மேலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...

Breaking News:களமுனையில் நேற்றைய மோதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் பலி!

வன்னியில் சிறீலங்காப் படையினரின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கில் படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் மேற்கோள்காட்டி பதிவு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை புதுக்குடியிருப்பு நகரைச் சுற்றிய பகுதிகளிலும், இரணைப்பாலை முன்னணி நிலைகளிலும், கடற்கரைப் பகுதி ஒன்றிலும் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த மோதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மோதல்களின் பின்னர் விடுதலைப் புலிகள் நடதிய தேடுதல் நடவடிக்கையின் போது படையினரது உடலங்களும் படைக்கருவிகளும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதை ஒரு முறை படியுங்களேன்.

 இணையதளத்தில் உலாவி வரும்பொழுது இந்த கட்டுரை காண நேர்ந்தது.என்னை மிகவும் கவந்தபடியினால் உங்களுக்காகவும் இதை இங்கு பதிவு செய்துள்ளேன்.இதை எழுதிய நண்பர் இரண்டு இணைய மலர்களை நடத்திவருகிறார்.
 
 

வானாந்திர‌ வ‌ழியாய் ச‌மாதான‌த்தைத் தேடி

பிரியமானவர்களே..,

கடவுளின் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன், இங்கே என்னைப் பற்றிய ஒரு சிறு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

நான் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயதில் ஜெபிப்பதிலும் வேதம் வாசிப்பதிலும் பெற்றோரின் வழிகாட்டுதல் படி நடந்தவன், நான் பிறந்து 16 ஆம் நாள் முதற்கொண்டு 5 வயது வரை மிகவும் பெலவீணம்(5ஆவது வயதில் என் மருத்துவப் பதிவில் உள்ள என் எடை 8 கிலோ மட்டுமே) உள்ளவனாய் இருந்தேன், மேலும் எனக்கு இல்லாத நோயின் அறிகுறியே இல்லை என்று இப்போதும் என் உறவினர்கள் சொல்லக் கேட்பதுண்டு காசநோய் தொடங்கி காமாலை, ஆஸ்துமா, மாதம் ஒரு முறை கடும் காய்ச்சல் என மிகவும் அவதிப்பட்டேனாம், என்னுடைய 5ஆவது வயது வரை நான் மருத்துவமனை செல்லாத மாதமோ, மருந்து எடுத்துக் கொள்ளாத நாளோ இல்லை என்றே சொல்லி விடலாம், என் தகப்பனும் தாயும் என் படுக்கையில் வந்து மணிக்கனக்காய் ஜெபித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது,

அப்போது ஒருமுறை எங்கள் நகருக்கு சகோதரர் DGS தினகரன் அவர்கள் வந்திருந்தார், கூட்டம் நடந்த இடத்திற்கு என் தகப்பனார் என்னை அழைத்துச் சென்றார், அங்கே அவர் விபத்திலிருந்து மீண்டு கையில் கட்டோடு தம்மிடம் வருபவர்களுக்காய் ஜெபித்துக்கொண்டிருந்தார், அப்போது எனக்காகவும் அவர் ஜெபித்தார், அப்போது ஆண்டவராகிய கிறிஸ்துவின் மூலமாக அற்புத சுகம் பெற்றுக் கொண்டேன். அன்றிலிருந்து என் உடலில் அதிசய மாற்றங்கள் நிகழ்ந்தது பல நாட்கள் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என சொன்ன மருத்துவர்கள் மருந்து தேவையில்லை என நிறுத்திவிட்டார்கள், காச நோய் அறிகுறிகள் முற்றிலும் மாறின, ஆஸ்துமா அறவே இல்லை, ஆரோக்கியமான மற்ற குழந்தைகளைப்போல் கிறிஸ்துவே என்னை அதிசயமாய் மாற்றினார்,

இப்படி கிறிஸ்துவின் மூலம் அற்புதம் பெற்றுக்கொண்ட நான் அவருக்கு உண்மையாய் வாழ்தேனா? இல்லை என்றுதான் சொல்ல‌வேண்டும், என் 15ஆவ‌து வ‌ய‌தில் பெரியார் அவ‌ர்க‌ளில் க‌ருத்துக்க‌ளால் ஈர்க்க‌ப்ப‌ட்டேன், க‌ட‌வுள் ம‌றுப்பை என் கொள்கையாக‌ ஏற்றுக்கொண்டேன். அன்றிலிருத்து ஜெப‌த்தையும் கிறிஸ்துவ‌ ந‌ம்பிக்கையையும் கேலிசெய்வேன், கிறிஸ்து சிலுவையில் மாண்டிருந்தால் தானே உயிர்த்தெழுவதற்கு? அவ‌ர் ம‌ய‌க்க‌திலிருந்திருப்பார் என‌ வாதிடுவேன்.


இப்ப‌டியாக‌ என் வ‌ழிவில‌க‌ல் ஆர‌ம்ப‌மான‌து. ஒரு வ‌ருட‌ம் க‌ழித்து க‌ண்ண‌தாச‌னின் "அர்த்த‌முள்ள‌ இந்து ம‌தம்" (இந்த புத்தகம் கீழே கண்டெடுத்தேன் இரகசியமாக ப‌ள்ளியில் படிப்பேன்) என்ற‌ புத்த‌க‌த்தைப் ப‌டிக்க‌ நேர்ந்த‌து அவைக‌ளில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ த‌க‌வ‌ல்க‌ள் நான் அனுதின‌ வாழ்க்கையில் சாதார‌ன‌மான‌ வ‌ழ‌க்கத்தில் இருந்த‌ ப‌ழ‌க்க‌ங்க‌ளாய் இருந்த‌ப‌டியால் அவைக‌ளின் ஆழ‌மான‌ உண்மைக‌ளை அறிந்து? ந‌ம் ப‌ண்பாட்டிற்கு க‌லாச்சார‌த்திற்கு இந்து ம‌த‌மே ச‌ரியான‌து என‌ நினைத்தேன், அந்த நினைவுகள் இந்து மத‌த்தின் மீது பற்றாக வளர்ந்தது, மற்ற மதங்கள் அது தோன்றிய பகுதிகளுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம் ஆனால் நம் நாட்டிற்கு இந்து மதமே சரியானது என முடிவுக்கு வந்தேன்.


என்னுடைய நண்பர்கள் சிலர் இந்துக்கள் என்பதால் அவர்களோடு கோவில்களுக்குச் செல்லும் பழக்கம் உருவானது, அது மெல்ல மெல்ல என்னை அதன் ஆழங்களான சகுனம்பார்த்தல், ஜோதிடம், வாஸ்து ஜாககம் எனப் பரினாமம் அடைந்தது, நாளிடையில் நான் ஒரு பூரண இந்துவாக மாறிவிட்டேன், படங்களை இரகசியமாக வைத்து வழிபடுவது, சிறிய விநாயகர் சிலையை வீட்டில் மறைத்து வைத்து வழிபடுவது ந‌ண்ப‌ர்க‌ள் வீட்டில் புண்ணிய ஸ்த‌ல‌ங்க‌ளுக்குச் சென்றால் என‌க்காக‌ அர்ச்ச‌னை செய்யச் சொல்வ‌து அவ‌ர்க‌ள் த‌ரும் பிர‌சாத‌த்தை(குங்குமம், எலுமிச்சம்பழம் படங்கள்) வாங்கி வைத்துக்கொள்வ‌து, நாள் பார்ப்பது (அஸ்ட‌மி, ந‌வ‌மி, ச‌ந்திராஸ்ட‌ம‌ம், ஆகிய‌ நாட்க‌ளில் புதிய காரிய‌ம் செய்வ‌தில்லை)

க‌ல்லூரி நாட்க‌ளில் வீட்டிற்குத் தெரியாம‌ல் ஒரு ஜோதிடரிடம் சென்று என்னுடைய ஜாத‌கத்தை எழுதிக்கொண்டேன், மேலும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மேற்படிப்பு, அல்லது மற்ற ஏதாவது குழப்பங்கள் ஆகியவை நேரிடும் போது ஜோதிட‌ரிட‌ம் சென்று என்னுடைய‌ நேர‌ம் எப்ப‌டி என‌க் கேட்டுத் தெரிந்து அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பேன்,

நான் UG இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எங்கள் வீட்டின் முன் பகுதியில் அரசின் வீட்டு வசதி வாரியத் திட்டம் ஒன்று செயல் படுத்தப்பட்டது, அப்போது வீட்டிற்கு முன்னால் ஒரு சாலை அமைக்கப்பட்டது வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்கு முன்னால் சாலையிருந்தால் அது "முச்சந்தி" "நேர்குத்து" ஆகும். இந்துக்கள் முறைப்படி தங்கள் தீட்டான பொருட்கள், மற்றும் திருஸ்டி கழித்த பொருட்களாகிய அசுத்தங்களை முச்சந்தியிலேயே கொட்டுவார்கள், இதனால் அதற்கு நேராக வாசல் இருக்கும் நாலாவது சந்தியான வீட்டிற்குள் அந்த அசுத்தங்கள் குடியேரும் என்பதும், இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆகாது என்பதும், அவர்களது நம்பிக்கை இந்த (மூட‌)நம்பிக்கையை நானும் நம்பினேன்.

இதனால் நான் என்னுடைய மூத்த நண்பர் ஒருவர் வாஸ்துவில் கைதேர்ந்தவர் அவரது உதவியோடு வாஸ்துவைக் கற்றுக்கொண்டேன் அவர் ஒரு இஸ்லாமியர். நாங்கள் இருக்கும் வீட்டை வாஸ்து முறைப்படி மிக மிக கவனமாக மாற்றி அமைக்க‌த் திட்டமிட்டேன். அயலாரின் தொடர்ச்சியான பயப்படுத்தலாலும், என்னுடைய விடாத நச்சரிப்பாலும், என் தகப்பனார் நான் வடிவமைத்திருந்த திட்டப்படி வீட்டை மாற்றியமைக்க அரை மனதாக ஒப்புக்கொண்டார், தொழில் முறை வாஸ்து பார்ப்பவரின் சரிபார்புக்குப் பிறகு வீடு மாற்றியமைக்கப்பட்டு விட்டது, எனக்கு ஏதோ உலக சாதனை செய்தது போல மன நிறைவு, இனி தான் எந்த தீங்கும் எங்கள் வீட்டை அனுகாதே? ஆனால் நடந்தது என்ன? வீடு மற்றியமைக்கப்பட்ட ஆறே மாதத்தில் என் தாயார் ஆரோக்கியமாக இருக்கும் போதே நினையாத நேரத்தில் மரணம் அடைந்தார். அவர் மரணம் அவருக்கே ஒரு நிமிடத்திற்கு முன்பு வரை தெரியாது. நான் இதை நம்பவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. என்னுடைய் மீருதல்களுக்கு எங்கள் குடும்பம் என் தாயாரின் உயிரை விலைக் கிரையம் செலுத்த வேண்டியதாயிற்று. அப்போதாவது மனம் மாறினேனா? அதுதான் இல்லை, என் பயனம் தீவிரமானதே தவிர பாதை மாறிவிடவில்லை, ஜோதிடத்தை நாடினேன் அவர்கள் உன் ஜாதகப்படி உன் தந்தையின் உயிருக்கு வேண்டுமானால் பாதிப்பு வரலாம், உன் தாய் நீடிய ஆயுள் பெற்றவர்கள் என்றே சாதித்தனர், (சமீப காலங்களில் ஜோதிடத்தை நம்பும் என் புற மத நண்பர்களிடம் என் ஜாதகத்தை கொடுத்து ஜோதிடத்தின் முகத்திரையை கிழித்த சம்பவங்களும் அர‌ங்கேற‌யிருக்கின்றன.)

நான் PG படிக்கும் போது ஒரு முறை என் நண்பன் ஒருவரின் வழிகாட்டுதலில் ஒரு வயதான ஜோதிடரை சந்திக்க நேர்ந்தது அவர் என் ஜாதகத்தை ஆராய்ந்த போது எனக்கு கால சர்பதோஸ‌ம் (இராகு தோசம்) இருப்பதாகவும், அது ஒரு பரம்பரைச் சாபம் எனவும், அதற்கு ஒரு யாகம் செய்தால் அதை நிவர்த்தி செய்யலாம், என்று கூறினார். நானும் அதை ஏற்றுக் கொண்டு யாகம் செய்தேன். அதிகாலை வேளையில் ஒரு புகழ்பெற்ற மலை மீது யாக குண்டம் முழங்க இரண்டு புரோகிதர்கள் ஒரு ஜோதிடர் உட்பட நான்குபேர் கலந்து கொண்டோம். சுமார் மூன்று மணி நேரம் யாகம் நடந்தது, மந்திரம் சொல்லச் சொல்ல புரோகிதர் கொடுக்கும் பொருட்களை நான் தீயிலிட்டேன் பிறகு முடிவாக ஒரு பாம்பு உருவத்தை மாவினால் செய்து அதனோடு சில பொருட்களை வைத்து அதை ஒரு நீர் நிலையில் கொண்டுபோய் விட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வரச்சொன்னார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு என் தலையில் தண்ணீரை ஊற்றி புதிதாக வாங்கி வைத்திருந்த உடையை உடுத்திக் கொண்டேன்.


அன்று எனக்கு நடந்தது என்னவென்றால் ஒரு பாம்பின் ஆவியை அவர்கள் என்மீது ஏவி விட்டிருகிறார்கள், ஆனால் எனக்கு இது தெரியாது. காரனம் (அது எனக்கு கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகே எனக்கு தெரியவந்தது, இது பற்றி பின்பு விளக்கம் தருகிறேன்.) பொதுவாக நான் இந்து மதத்தின் கோட்பாடுகளை நம்பினாலும், அவர்கள் சொல்லும் மந்திரம், செய்வினை, ஏவல், ஆகியவற்றின் மீது எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை.

நாட்கள் கடந்தன ஒரு இந்துவாகவே வாழந்தேன். ஆனாலும் என்னையும் அறியாமல் ஓர் வெறுமை, சமாதானமின்மை காரணம் நான் இயல்பிலேயே மனதிடம் குறைவானவனாய் இருந்ததாலும் என்னுடைய தகப்பனாரும் சகோதரியும் என்னோடு ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்களின் அன்பைப் பெற முடியாமல் போனேன், காரனம் என் வழி அவர்களின் வழியிலிருந்து முற்றிலும் வேறாய் இருந்தது. மேலும் நான் இந்துவாக இருந்தாலும் என் நெருங்கிய நட்பு வட்டம் கிறிஸ்தவ வட்டமாய் இருந்தது, அவர்களோடு நேரம் செலவிடுவதை தவிர்த்தேன். காரனம் அவர்களோடு தர்க்கம் செய்வதே. அதனால் நண்ப‌ர்களின் ஆதரவையும் இழந்தேன். அலுவலக கசப்புகள் ஒரு புறம் என்னை வாட்ட இவ்வுலகில் எனக்கு அடைக்கலம் இல்லாததைப் போல உண்ர்ந்தேன். சிறு பிர‌ச்ச‌னைக‌ளையும் எதிர்கொள்ள‌ முடியாத‌ கோழையாக‌ மாறினேன்.

திருச்சந்தூர், இராமேஸ்வரம், பழநி, மதுரை, சென்னிமலை, திருச்செங்கோடு, பொள்ளாச்சி, பண்ணாரி, பாரியூர், திருநள்ளாரு, என எல்லாக் கோவில்களுக்கும் சென்று வந்தேன், ஆனாலும் என் வெறுமை மாறவில்லை, வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பின் தரிசனம் சிறப்பானது எனக் கேள்விப்பட்டு, அதிகாலை ஒரு மனிக்கு எழுந்து அதையும் பார்த்தேன. ஆனாலும் வெறுமையும் சமாதானமின்மையும் மாறவில்லை. கார‌ன‌ம் நான் அங்கே சென்று பார்த்த‌வைக‌ள் வெறும் ம‌னித‌னின் க‌ற்ப‌னைக்கு உட்ப‌ட்ட‌ க‌ற்சிலைக‌ளாக‌வே இருந்த‌ன‌. அவைக‌ள் அழ‌காய்த்தோன்றுவ‌தாக‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ள் சொன்ன‌ போது நானும் அதை ஆமோதித்தேன் அரை ம‌ன‌தோடு, ஆனாலும் அவைக‌ளின் அழ‌கு எனக்கு ச‌மாதான‌த்தைத் த‌ர‌வில்லை.


நான் மிக‌வும் ந‌ம்பிய சகுணம் பார்ப்பது, வாஸ்து, ஜோதிட‌ம், ஜாத‌க‌ம், புண்ணிய ஸ்த‌ல‌ வ‌ழிபாடு, ஆகிய‌வைக‌ளில் உண்மையில்லை என்ப‌தை கசப்பான அனுப‌வங்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.


ச‌ரி யோகா க‌ற்றுக்கொள்ள‌லாம் என யோகாவும் தியான‌மும் க‌ற்றுக் கொள்ள‌ ஆர‌ம்பித்தேன். அதுவும் என் வெறுமைக்குத் தீணி போட‌முடிய‌வில்லை. தியானமும் யோகாவும் இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்தாக பரவலாக அறியப்பட்டாலும் என்னைப் போன்ற சாமானியனுக்கு அதன் பயன் என்ன எனபதே அறியமுடியாமல் போனது. இதைப் படிக்கும் ம‌ருத்துவர்கள் தங்களிடம் வரும் "மன இருக்கமுள்ள நோயாளிகள் மிகவும் புத்தியுள்ள ஞானிகளா என அறிந்து யோகாவை அவர்களுக்குப் பரிந்துரையுங்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாக இருக்கும், காரணம் அவர்கள் என்னைப் போன்ற பேதையாக இருக்கும் பட்சத்தில் அவைகளால் பலன் ஒன்றும் ஏற்படாது என்பதற்கு நானே ஒரு சான்று.

என் தேட‌ல் என்ன‌ என்ப‌தே என‌க்கு அறிய‌முடியாத‌ ப‌ரிதாப‌ நிலைக்குத் த‌ள்ள‌ப்ப‌ட்டேன். சரி க‌டைசியாக‌ ம‌ன ந‌ல‌ ம‌ருத்துவ‌ரை பார்க்க‌லாம் என‌ முடிவு செய்தேன், ஆனால் மருந்து வெறுமையையும் சமாதானமின்மையையும் எப்ப‌டிப் போக்கும் என எண்ணி, அம்முய‌ற்சியை கைவிட்டேன், க‌டைசியாக‌ த‌ற்கொலை ம‌ட்டுமே தீர்வு என‌த் தீர்மானித்த‌ நான், நாளும் குறித்துவிட்டேன். ஏற்கென‌வே எங்கள் தாயாரை இழ‌ந்து வாடும் என் குடும்ப‌த்திற்கு மீண்டும் ஓர் இழ‌ப்பை தெரிய‌ப்ப‌டுத்த‌ வேண்டாம் என‌ எண்ணி வீட்டில் நேர்முக‌த்தேவுக்குச் செல்வ‌தாக‌க் கூறிக் கொண்டு வேறொரு திசையில் ப‌ய‌னிக்க‌லானேன், நான் தற்கொலை செய்யத் தேர்வு செய்த‌ மாநில‌ம், இது வ‌ரை ப‌ழ‌க்க‌மில்லாத வேறு ஒரு வ‌ட‌ மாநில‌ம், காரண‌ம் என் த‌க‌ப்ப‌னாருக்கும் என் ச‌கோத‌ரிக்கும் என் ம‌ரண‌ம் தெரிய‌க்கூடாது என‌ நான் நினைத்த‌துதான்,

நான் ம‌னதில் ம‌ர‌ண‌ம‌டைய‌ப் போகிறோம் என்ற‌ க‌ல‌க்க‌ம் சிறிதும் இன்றி உற‌ங்க‌லானேன், இர‌வில் ஓர் க‌ன‌வு; "வீட்டிலுள்ள வேத‌த்தின் மீது என்னை என் தாயார் மிக‌ ஆக்ரோச‌மாக‌த் த‌ள்ளி விடுவது போல்"
உடலெல்லாம் ஒரே வலி, ஊர் பெயர் தெரியாத இடத்தில் இரங்கி மனம் மாறி வீட்டிற்கு வந்து விட்டேன்,

ஒரு சில நாட்கள் சென்றன, மீண்டும் வெறுமை....

இம்முறை மன நல மருத்துவரை சந்திப்பது என முடிவு செய்தேன். கிறிஸ்துவின் சித்தத்தால் நான் சந்தித்த மன நல மருத்துவர் ஓர் கிறிஸ்தவர், அவர் நான் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டு முடித்து "உனக்குத் தேவையான மருந்து இயேசுகிறிஸ்துவே நீ இன்றே அவரிடம் சரனடைந்து விடு" எனச் சொன்னார். இதைக் கேட்டதும் தாங்க முடியாத கோபத்திற்குள்ளானேன். என் பெற்றோர் உறவினர், நண்பர்கள், எல்லார் சொல்லியும் கேட்காத நான் நீங்கள் சொல்வதைக் காசுகொடுத்துக் கேட்கவேண்டுமா? என்று காட்டமாகப் பேசிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.

சில நாட்கள் முடிவு ஏதுமின்றி சென்றது மீண்டும் வெறுமை......


பசியில்லை, தூக்கமில்லை, எதிலும் ஈடுபாடில்லை, சமாதானமில்லாத எதையோ இழந்துவிட்டது போல ஒரு மாயை ஒரு நாள் நள்ளிரவு திடீரென ஒரு யோசனை "இயேசுவை முயற்சி செய்து பார்த்தால் என்ன?" என்று , ஆனால் யாரிடம் போய் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வது? தகப்பனார்....? உறவினர்கள்....? நண்பர்கள்...?


முடியாது முடியவே முடியாது..


காரணம் நான் அவர்களிடம் கேட்பதற்கு வெட்கப்பட்டேன், ஏனென்றால் நான் அவர்களிடம் கிறிஸ்துவைப் பற்றி மிகக் கேவலமாக வாதிட்டிருக்கிறேன். சரி என்ன தான் வழி? அந்த மருத்துவரிடமே கேட்டுவிடலாம், என்ற முடிவுக்கு வந்துவிட்டேன், நான் திரும்பி வந்ததை பார்த்து சிரித்த அவர் பின்பு புன்முறுவலோடு கிறிஸ்துவை எனக்கு அறிமுகப் படுத்தினார், ஆனாலும் நான் தேடுவது கிறிஸ்துவிடம் தான் இருக்கின்றது என்ப‌தை உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை, வீட்டில் எப்போதும் போல இரகசியமாய் வேதத்தையும் கிறிஸ்தவ அறிஞர்களின் புத்தகத்தையும் படிக்கலானேன், இவைகளில் பெரும்பாலவைகளை நான் ஏற்கெனவே படித்ததுண்டு நான் முன்பு படித்தது விவாதத்திற்கும் குற்றம் கண்டுபிடிப்பதற்குமே தவிர வேறு எதற்கும் இல்லை. ஆனால் இப்போது நான் படிப்பது ஒரு தேடல் அடிப்படையில்.. ஆம் நான் இழ‌ந்து போன‌ ச‌மாதான‌த்தைத் தேடி


மெல்ல மெல்ல நான் தேடியது கிடப்பதாகத் தோன்றியது, ஆனாலும் இவைகள் உண்மையா? என்ற எண்ணம் என்னைக் குழப்பியது, குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்க ஒரு நாள் இயேசு அழைகிறார் புத்தகத்தில் கோவை காருண்யாவில் சகோ. தினகரன் அவர்களின் கூட்டம் பற்றிய அறிவிப்பு கண்ணில் பட்டது அங்கே செல்ல முடிவு செய்தேன். அங்கே சொல்லப்பட்ட சில வார்த்தைகள் எனக்காகவே கிறிஸ்துவால் சொல்லப்பட்டதாக உணர்ந்தேன், ஆனாலும் அடுத்தநாள் தான் அது எனக்காகச் சொல்லப்பட்டது என்பதை மிகவும் ச‌ங்கடப்பட்டு எனக்குள்ளேயே ஒத்துக் கொண்டேன். சில நாட்களிலேயே பழைய, புதிய ஏற்பாடுகளின் ஒற்றுமைகளை நண்பரொருவர் மூலமாய் அறிந்து கொண்டேன்.


சரியாக நான் தற்கொலை முடிவைக் கைவிட்ட மூன்றாம் மாதத்தில் இந்த உலகத்தில் நான் தேடிய நிம்மதியை கிறிஸ்துவே தரமுடியும் என முழு மனதோடு ஒத்துக்கொண்டேன், அன்றே என் பாவங்களை அறிக்கையிட்டு என் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுத்தேன். என்னிடம் இருந்த செப்புத்தகடுகள், எந்திரங்கள், தாயத்துகள் படங்கள், சிலைகள், ஆகியவற்றை தேடியெடுத்து தூக்கி எறிந்துவிட்டேன். ஆனாலும் என்னால் சரியாக ஜெபிக்க முடியவில்லை,

கிறிஸ்தவம் தொடர்பான என் சந்தேகங்களை நான் எப்போதும் கேட்டுத் தெளிவு பெறும் நண்பரிடம் நான் ஜெபம் செய்ய முடியாததை முறையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவர் முகம் பயம் கலந்த கலவரமாக மாறத்தொடங்கியது, எனக்கு எதுவும் தெரியவில்லை, பின்பு அவர் சுதாரித்துக் கொண்டு உனக்கும் பாம்புக்கும் என்ன தொடர்பு என்றார்? எனக்கு அவர் கேட்பது சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததால் நானும் குழம்பிவிட்டேன். பிறகு அவர் திரும்பத்திரும்பக் கேட்டதால் என் ஜாதகத்தில் கால சர்ப தோசம் என்ற ஒன்று இருப்பதாக சொன்னேன். அவர் அதையும் மீறி நீ பாம்போடு எதாவது ஒப்பந்தம் செய்திருக்கிறாயா? என்றார். நான் நான் பாம்பிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள நான் என்ன பாம்பா? நான் அந்த தோசம் நீங்க சில ஆண்டுகளுக்கு முன்னால் யாகம் வேண்டுமானால் செய்தேன் வேறொன்றுமில்லை என்றேன், அப்போது தான் அவர் ஒரு உண்மையைச் சொன்னார் நான் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு நான் தெரியவில்லை பாம்புதான் தெரிந்தது, என்றார் மேலும் அந்த பாம்பின் ஆவியை உடனே விரட்ட வேண்டும் என்றார்.


நான் ந‌ம்ப‌வில்லை ஆனாலும் அவ‌ர் வ‌ற்புறுத்த‌லினால் அரைமனதோடு ஜெப‌த்தில் அம‌ர்ந்தேன், அப்போது திடீரென என் உட‌லை என்னாலேயே க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ துடிப்பு என்னில் தோன்றி நேர‌மாக ஆக‌ அதிகமான‌து என் நாக்கு வெளியே வந்து விட்ட‌து ஆனாலும் என் ம‌ன‌ம் இது வேறொருவரின் இட‌ம் நான் இப்ப‌டி ந‌ட‌ந்து கொள்ள‌க்கூடாது என‌ என் உட‌லைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ துடியாய் துடித்தது ஆனால் உட‌லை என்னால் சிறிதும் க‌ட்டுக்குள் கொண்டுவ‌ர முடிய‌வில்லை பிற‌கு சிறிது நேர‌த்தில் என் உட‌ல் என் க‌ட்டுக்குள் வந்த‌து. நான் PG படிக்கும் போது அந்த பிசாசோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை என் ஆண்டவராகிய கிறிஸ்துவே முறித்துப் போட்டார், அன்றிலிருந்து நான் கிறிஸ்துவை என் முழு முதல் பரம தகப்பனாக ஏற்றுக்கொண்டேன்.


அன்றிலிருந்து நான் இழ‌ந்து போயிருந்த‌ ச‌மாதான‌ம் என்னில் நிலைபெற்று வ‌ள‌ர‌ ஆர‌ம்பித்த‌து, இதை வாசித்த சிலருக்கு இப்போது உனக்கு பிரச்சனைகள் இல்லையா? என ஒரு ஐயம் தோன்றும், ஒரு உண்மையைச் சொல்கிறேன் நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாத நாட்களைவிட கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு தான் எனக்குப் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, பிரச்சனைகளைச் ச‌ந்திக்கும் தெம்பு எப்போதும் எனக்கு இருந்ததில்லை ஆனால் நான் கிறிஸ்தவனான பின்பு எனக்கு பிரச்சனைகள் வரும்போது நான் எந்த இடத்தில் எந்த நிலையில் இருக்கிறேனோ அதே நிலையில் என் இயேசப்பாவிடம் என் பிரச்சனைக்ளை அவரிடம் ஒப்புக் கொடுத்து விடுவேன்(1 பேதுரு 5:7). மேலும் அவர் எப்போது என்னோடு இருக்கிறார் என்ற அவரது உறுதிமொழியும், அவர் என்னைக்கை விடுவதில்லை என்ற வாக்குறுதியும்(ஆதி 28:15), தானாக எனக்கு தன்னம்பிக்கையைத் தருகின்றன இப்போது எனக்கு தேவையில்லா பயமும், நம்பிக்கையில்லாதால் உருவாகும் சமாதானமின்மையும், அரவே இல்லை, காரணம்: நான் இந்த உலகத்தை உருவாக்கிய சர்வ வல்லவரின் பிள்ளை, அவரிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்(சங் 121:2),


முடிவாக‌ "என் ஆத்மா தேடி அலைந்த‌து கிறிஸ்துவ‌த்தான், அவர் எனக்கு வைத்துவிட்டுப் போன சமாதானத்தைத்தான், என‌ இப்போதும் உண‌ர்கிறேன். மேலும் என் வாழ்க்கையில் இப்போது வெறுமையில்லை. நான் கிறிஸ்துவுக்குள்ளாக‌வே ம‌ரிக்க‌ விரும்புகிறேன், கார‌ண‌ம் நான் கிறிஸ்துவிட‌ம் தேடிய‌த்தை விட‌வும் கேட்ட‌தை விட‌வும் அதிக‌மாக‌வே பெற்றுகொண்டேன். பெற்றுக் கொள்கிறேன். பெற்றுக் கொள்வேன் என்றும் விசுவாசிக்கிறேன்.


இதைப் ப‌டிக்கும் ச‌கோத‌ர‌னே ச‌கோத‌ரியே ஒருவேளை நீங்க‌ளும் இதே போன்ற‌ ச‌மாதான‌மில்லாத‌ ஒரு வெறுமையான‌ வாழ்க்கையை வாழ்ந்து கொன்டிருக்க‌லாம், உங்களுக்கு நிரந்தரமான‌ ச‌மாதான‌த்தையும் நிம்ம‌தியையும் கிறிஸ்துவே த‌ர‌முடியும். என்னை நேசிக்கும் இயேசு கிறிஸ்து உங்க‌ளையும் நேசிக்க‌ ஆய‌த்த‌மாய் இருக்கிறார்(யோவான் 6:37). ஒரு முறை.... ஒரே ஒரு முறை.... கிறிஸ்துவுக்குள் உங்க‌ள் முழு ம‌ன‌தோடு வந்து உங்க‌ள் குறைவுக‌ளை ஒப்புகொடுங்க‌ள், க‌ட்டாய‌ம் ஒரு மாற்ற‌த்தைக் காண்பீர்க‌ள். அவ‌ர் உங்க‌ள் குறைவுக‌ளையெள்ளாம் நிறைவாக்குவார்(பிலிப்பியர் 4:19). அவ‌ர் என்றென்றும் மாறாத‌வராக இருக்கிறார்(எபிரெயர் 13:8), அவ‌ர் பொய் சொல்லாதவர், மனிதனைப்போல மனம் மாறுகிறவர் அல்ல‌ (எண்ணாகமம் 23:19). என‌வே நீங்க‌ள் ஒருமுறை அவ‌ரை முழு ம‌ன‌தோடு தேடிப்பாருங்க‌ள், நீங்க‌ள் நினைப்ப‌த‌ற்கும் வேண்டிக்கொள்வ‌த‌ற்கும் அதிக‌மான‌தைச் த‌ருவார், செய்வார். ஆமேன்.

StumbleUpon.com Read more...

33 வருடத்திற்கு பிறகு வரலாற்று சாதனை-இதில் சச்சின் பங்கு என்ன?

ஹாமில்டனில் நடைபெற்ற நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.


சுமார் 33 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் அணி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.


முதல் இன்னிங்ஸ்: நியூசிலாந்து-279; இந்தியா-520. 2 வது இன்னிங்ஸ்: நியூசிலாந்து-279; இந்தியா-39(விக்கெட் இழப்பின்றி). இந்திய தரப்பில் ஹர்பஜன் சிங் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.


இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெஸ்ட் அரங்கில் தனது 42 வது சதத்தை பூர்த்தி செய்தார்.

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகள் மீண்டும் ஒரு வான் தாக்குதல்?

>> Friday, March 20, 2009

தமிழீழ விடுதலைப் புலிகள் மேலுமொரு வான் தாக்குதலை நடத்தக் கூடும்: காவல்துறையினர் எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள், பகல் வேளையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அல்லது வர்த்தக மத்திய நிலையமொன்றை இலக்கு வைத்து மேலுமொரு வான் தாக்குதலை மேற்கொள்ளக் கூடுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திடீர் தாக்குதலொன்றை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.


.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

மகளோடு வல்லுறவு வைத்துள்ள இந்து,முஸ்லீம்,கிறிஸ்தாவர்

தாறுமாறான எண்ணங்கள் கொண்ட மனிதர்களுக்கு மதம்,நாடு,கலாச்சாரம் என்று ஒன்றும் இல்லை.அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும் எந்த நாட்டவர்களாக இருந்தாலும்,எந்த கலாச்சாரமாக இருந்தாலும் ஓரே இனத்தை சேர்ந்தவர்களாகவே கருத வேண்டும்.அது மிருக இனம்.

இதில் அந்த மதத்தவர் செய்தார்,இந்த மதத்தவர் செய்தார்,இல்லை நாத்திகர் செய்தார் என்று சொல்லிக்கொள்ளும் கீழ்தரமான செயலை எந்த மதத்தவர்களும் தங்கள் சட்டைக் காலரை தூக்கிவிட்டு சொல்ல முடியாது என்பது என் கருத்து.இதற்கு உதாரணமாக சமீபக்காலங்களாக இதயத்தை பிழிந்தெடுக்கும் சம்பவங்கள் உலகத்தில் அடிக்கடி கேட்கப்படுகிறது.


தானே மாவட்டத்தில் உள்ள மிரா ரோட்டைச் சேர்ந்தவர்

பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் பெயர் போன பாரத நாட்டில் மும்பை அருகே அரங்கேறி, இந்திய மக்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது. கணினியுகம், இன்டர்நெட் யுகம் என்று கூறப்படுகிற இந்தக் காலகட்டத்தில் பணத்தாசை பிடித்து, மூட நம்பிக்கைக்கு ஆளாகி, பெற்ற மகளையே சிதைத்த ஒரு வியாபாரியின் அலங்கோலம் இது.

வியாபார நஷ்டம்

மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில் உள்ள மிரா ரோட்டைச் சேர்ந்தவர் அந்த வியாபாரி. அவர் தொடர்ந்து வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்தார். இந்த நிலையில் தனக்கு 20 வருடங்களாக அறிமுகமான வில்லேபார்லேயை சேர்ந்த மந்திரவாதி ஹஸ்முக் ரத்தோடை கடந்த 2000-ம் ஆண்டு சந்தித்தார். தான் வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதை எடுத்துக் கூறினார். அத்துடன், இந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன வழி என்று யோசனை கேடடார்.

அப்போதுதான் அந்த வியாபாரியிடம் மந்திரவாதி, "உங்களது மூத்த மகளுடன் நீங்கள் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் உங்கள் நிலைமை மாறிவிடும். வாழ்வில் வளங்கள் வந்து சேரும்'' என்றார்.

துணை போன தாய்

இதை வியாபாரி நம்பினார். வீட்டுக்கு வந்தவர், மனைவியிடம் மந்திரவாதி சொன்ன விஷயத்தை போட்டு உடைத்தார். பணத்தாசை பிடித்த மனைவியும், "மந்திரவாதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நீங்கள் அப்படியே செய்யுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, தனது மூத்த மகளை அழைத்து, "நமது குடும்பம் நல்ல நிலைமைக்கு வரவேண்டும், அப்பாவின் வியாபாரம் செழிக்க வேண்டும் என்றால் அவர் சொல்கிறபடி நீ நடந்து கொள்'' என்று கூறினார். அந்தப் பெண், அந்த நிமிடத்தில், தந்தை இப்படித்தான் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க வில்லை.

.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி

தனது சொந்த மகளையே அவளுடைய பதினைந்தாவது வயதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி என்பவர் திருமணம் செய்திருக்கிறார்.

அந்த திருமணத்திற்கு அவர் சொன்ன காரணம் “கடவுளின் கட்டளை”. அல்லா சொல்லிவிட்டார் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ள அனுமதியும் வாங்கியிருக்கிறார் அவர்.

இந்த விஷயம் நடந்து ஐந்தாறு மாதங்களாகியிருக்கின்றன. இப்போது அந்தப் பெண் தன்னுடைய தந்தையால் தாயாகியிருக்கிறாள்.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்


ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் ஜோசப்

இருபத்து நான்கு வருடங்களாக தனது மகளை (எலிசபெத்) குகை போன்ற வெளிச்சமே நுழைய முடியாத அறைகளில் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்திருக்கிறான் ஒரு தந்தை.

சின்னச் சின்ன குறுகலான குகைகள் போன்ற ஐந்தடி உயரமே உள்ள, முழுவதும் அடைக்கப்பட்ட உறுதியான அறைகளில் அவள் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறாள். ரகசிய அறை மூலம் தந்தை அந்த அறைகளுக்குச் செல்ல முடியும். அதற்கான நவீன கதவையும், அதைத் திறக்கும் சங்கேத எண்ணையும் யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த அந்த கொடூரமான தந்தைக்கு இப்போது வயது 73.



இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது வியன்னாவிலிருந்து 80 மைல் தொலைவில் இருக்கும் ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் பகுதியில்.

எலிசபெத் பதினெட்டு வயது சுட்டிப் பெண்ணாக இருந்தபோது அவளுடைய கைகளை கட்டி ஒரு இருட்டு அறைக்குள் பூட்டி அவளை பலாத்காரம் செய்த தந்தை, அவள் வீட்டை விட்டு ஓடி விட்டதாக நாடகமாடி எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறான்.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

சிங்கள ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள ராணுவத்தினர் பல முனைகளில் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.


இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பகுதியில் புதன்கிழமை சிங்களப் படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.


இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டளை மையங்களை நோக்கி முன்னகர்ந்த படையினர் மீதும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இதில் மிகக்குறுகிய இடைவெளியில் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.


ஆயுதங்களை கைவிட்டு விட்டு படையினர் பழைய நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
.மேலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...

புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் எறிகணைகளை வீசும் இந்திய ராணுவம்

 
இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாற்ரை காட்டுபகுதியை முற்றூகை யிட இன்னும் ஒரு பிரிவினர் புல்மோட்டையில்இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி , பல்குழல் ஏவுகனை , ஆட்லறீகலாலும்....
அறூபது கிலோ மிற்றர் சென்றூ தாக்கும் ஏவுகனைமூலமாகவும் (இவ் ஏவுகனை ஜந்து கிலோ மிற்றர் பகுதிகளய் முற்றாக தாக்கி துவசம் செய்யக்கூடியது இவ் ஏவுகனையில் இருந்து எந்த உயிரினமும் தப்பமுடியாது) இந்தியப்படைகள் தாக்குதலை நடத்திக் கேண்டு நகர்வை மேற்கோண்டுள்ளதாக நம்பகரமான சிங்கள அதிகாரி உறூதிப்படுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/view.php?2adsQG7DD4cc2e5ZLu6b04dc2gE9ZTcd0eb5Vj06e24d20C6QVtde0bd4Ph2gO4ce0ecuWnZB03b42fDpYUcae

StumbleUpon.com Read more...

சுதந்திர ஈழம் மலரும் நாள் அண்மிக்கிறது.... ஒரு ஆய்வு

 
ராஜபக்சவின் முட்டாள்தனத்தால் ஈழம் மலரும் நாள் மிக அருகாமையில் வந்து விட்டது. ஒழுங்காக சமாதான காலத்தில் தனியாட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகளை அப்படியே விட்டிருக்கலாம். அதை விடுத்து புலிகளை வீண் வம்புக்கு இழுத்து போரை சோனியாவும், ராஜபக்சவும் தொடக்கினார்கள். இப்போது அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். இராணுவம் மரணப்பொறிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதை குழிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை அரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. யாராவது அப்படி முயன்றால் அவர்களும் சேர்ந்து உள்ளே போக வேண்டியதுதான்.

ஏனென்றால் போர் எதிர்பாராத வகையில் மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் போர் முடிவுக்கு வந்து விடும் என்று கணித்த இவர்களின் எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது. 50,000 இராணுவத்தினர், ஏராளமான ஆயுதங்களை வைத்து சண்டையிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற இவர்களின் எண்ணம் புலிகளின் தந்திரங்களில் சிக்கி மண்ணாகிப் போனது. ஒட்டப் பந்தயங்களில் முதலில் ஒடுபவர்கள் கடைசியில் மூச்சு வாங்கி திணறுவதைப் போல முதலில் எல்லா வளங்களையும் உபயோகித்த இராணுவம் இப்போது ஆளணி இல்லாமல் திணறுகிறது. புலிகளோ எல்லா வளங்களையும் அப்படியே காப்பாற்றி வைத்திருந்து இப்போது உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த இரு வார காலமாக இராணுவம் செமத்தியாக அடி வாங்கிக் கொண்டுள்ளது. இத்தனை காலமும் புலிகளுக்கு மிகப் பெரும் இழப்பு. அதே சமயம் இராணுவத்திற்கு சிறிதளவு இழப்பு என்று கதை விட்டுக் கொண்டிருந்த இராணுவம் கடந்த சில நாட்களாக இரு தரப்பிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளது.

இன்னும் புலிகளிடம் என்னென்ன இரகசியமான ஆயுதங்கள் உள்ளன என்று தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்து கடைசியில் அவைகளை உபயோகப்படுத்தக் கூடும். எப்படியாவது ஒரு இராணுவ வெற்றியை பெற்று விடலாம். அதன் பின்பு தொடர்ந்து குடும்ப ஆட்சியை நாமே நடத்தலாம் என்று ராஜபக்ச கணக்கு போட்டார். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி வலிமையான நாடுகளையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே வல்லரசு நாடுகளே சிரமப்படுகின்றன. இந்த இலட்சணத்தில் சுண்டைக்காய் இலங்கை நாடு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் பெருமளவு பணத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அரசின் பொருளாதாரமோ அதல பாதாளத்திற்கு போய் விட்டது.

புலிகள் விட்டுச் சென்ற இடங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு வெற்றி பெறுகிறோம் என்ற மாய வலைக்குள் மக்களை ராஜபக்ச ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எத்தனை நாளைக்குதான் இப்படி ஏமாற்ற முடியும்? கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணக்கு போடுவதற்கு கணணி கூட திணறும் போலிருக்கிறதே? இ ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அவர் எப்படி பதில் சொல்லப் போகிறார்? இலங்கை அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் வேறு தொடங்கி விட்டது. மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தப் போகிறார்? . பிரபாகரன் வேறு நாட்டிற்கு ஓடி விட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சதான் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு நாட்டிற்கு ஓடப் போகிறார். ஏனென்றால் பலவீனத்தையும் பலமாக மாற்றும் சக்தி தேசியத் தலைவருக்கு உண்டு. இந்திய காங்கிரஸ் அரசின் ஆயுள் முடிந்து விட்டது. இனிமேல் இந்திய அரசும் இந்த போரை முட்டு கொடுத்து தூக்கி விட முடியாது. பணம், ஆயுதம் கொடுத்து உதவ முடியாது. புலிகளுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு இராணுவத்தினரிடமிருந்து பிடுங்கப்படும் ஆயுதங்களே போதும்.

இலங்கை அரசு போரை வெற்றி கொள்ள வேண்டுமானால் புலிகளின் மரபுவழிப் படைத்திறனையும் ஆளணியையும் அழிக்க வேண்டும். புலிகளின் கட்டமைப்பு வசதிகள் உடைக்கப்பட வேண்டும். மக்களையும், புலிகளையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அப்படியே இராணுவம் பிரிப்பதில் வெற்றி கண்டாலும் புலிகள் மீண்டும் கொரில்லா படையாக மாறுவார்கள். காலத்திற்கும் தலைவலியாய் இருப்பார்கள். வன்னி மக்களோ புலித்தலைவரை விட்டு அகல மறுக்கின்றனர். ராஜிவ் மரணத்திற்கு பின் எப்போதும் இல்லாத அளவு எழுச்சி தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 11 இளைஞர்கள் இதுவரை உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் பிற நாடுகளை முடக்கும் வண்ணம் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் இப்போது இந்திய, இலங்கை அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது

போர் நீண்டு கொண்டே செல்வதால் இலங்கை இராணுவத்தினர் சோர்ந்து போய் உளவுரண் பாதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் ஏற்கனவே புலிகளின் சிறப்புப் படையணிகள் ஊடுருவி விட்டனர். ஆளணி பற்றாக்குறையால் ஊர்காவல் படைதான் அங்கு பாதுகாப்புக்கு நிற்கப் போகிறது. மக்கள் எழுச்சியுடன் புலிகள் ஒரு பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நிகழ்த்தும் போது இலங்கை இராணுவம் இறுதி மூச்சை விடும். வெற்றிக்கனி நிச்சயம் பறிக்கப்படும். காலம் நமக்கு சாதகமாக கனிந்து வருகிறது, இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக் கூடாது. ஆகவே தனியரசை நிறுவ நமது மக்கள் மன உறுதியை இழக்காமல் எழுச்சியுடன் தொடர்ந்து போராடினால் நிச்சயம் ஈழத்தை வென்றெடுக்கலாம். அந்த பொன்னாள் வெகு தொலைவில் இல்லை.

தமிழ்நாட்டிலிருந்து அதிபதி.

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் மக்களை தாக்கி அழிக்க முன்னனியில் நின்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்

ஒரிசாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுட்டுக்கொலைமாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அட்டூழியம்




ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பிரபாத் பானிகிராகி. இவர் கடந்த ஆண்டு விசுவஇந்து பரிஷத் தலைவர் லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் ஆவார். கடந்த 14-ந் தேதிதான் ஜெயிலில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்நிலையில், அவர் ருடிகுமா கிராமத்தில் தனது ஆர்.எஸ்.எஸ். நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது, துப்பாக்கி ஏந்திய 15 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புகுந்து பிரபாத் பானிகிராகியை சுட்டுக்கொன்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் விரைந்தனர். ஆனால் அவர்களின் வருகையைத் தடுக்க தீவிரவாதிகள் மரங்களை வெட்டி சாலையில் போட்டனர்.

StumbleUpon.com Read more...

செவ்வாய்கிழமை தொடக்கம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோதலில் 600க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் முன்நகர்வை மேற்கொண்டுள்ள படையினரை வழிமறித்து விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் தாக்குதலில் இதுவரை 320க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 400க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.



நேற்று புதன்கிழமை தொடக்கம் இன்று பிற்பகல் வரையில் இரணைப்பாலை மற்றும் புதுக்குடியிருப்பு-முல்லைத்தீவு வீதி,சாலை தெற்கு பகுதி என்பனவற்றிலேயே படையினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்களை மேற்கொள்காட்டி அங்கிருக்கும் எமது ‘முரசம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

புதுவகையான ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் தாக்குதல்

>> Thursday, March 19, 2009

புதுவகையான ஆயுதங்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துவதாக ராணுவ தரப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளது.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

இரணைபாலையில் கடும் மோதல்-கவச வாகனம் தாக்கியழிப்பு

இரணைபாலையில் கடும் மோதல் நைபெற்றுவருவதாகவும் அங்கு 60 க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் ,ஒரு கவச வாகனம் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்வு இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது

StumbleUpon.com Read more...

புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி 3 படையணிகள் முன்னகர்வு

புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தை நோக்கி 3 படையணிகள் முன்னகர்வு: படைத்தரப்பு தெரிவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக புதுமாத்தளன் பகுதியை நோக்கி இராணுவத்தின் மூன்று படையணிகள் தீவிர முன்னகர்வு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.

StumbleUpon.com Read more...

Breaking News:புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உக்கிர மோதல்கள்! 250 படையினனர் பலி!

புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையை அண்மித்த பகுதிகள், புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதி, மற்றும் இரணைப்பாலைச் சந்தியில் இடம்பெற்ற மோதல்களிலேயே 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாளாந்தம் பல நூற்றுக்கண்கான படையினர் வன்னிக் களமுனையில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். படையினருக்கு ஏற்பட்டு வரும் ஆளணி இழப்புகளை அடுத்து சிறீலங்காப் படையினர் பலர் மாறி மாறி படையணிகளுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

StumbleUpon.com Read more...

புலிகளை காப்பதற்காக எதையும் செய்வோம் -சச்சின் டெண்டுல்கர்

புலி இனத்தை பாதுகாக்க வேண்டும்: சச்சின் வலியுறுத்தல்




அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள புலி இனத்தை பாதுகாக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.



நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டுக்கு எதிரான போட்டிகளில் விளையாடி வருகிறது. போட்டிக்கு முன்னதாக நடந்த ஒரு நிகழ்ச்சியில், புலிகளைக் காக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக இந்திய அணி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



இதற்காக உருவாக்கப்பட்டிருந்த பேனரில், ஒன்றாக இணைந்து, புலி இனத்தைக் காப்பதற்காக எதையும் செய்வோம் என்ற வாசகத்தை எழுதி சச்சின் டெண்டுல்கர் கையெழுத்திட்டார்.


.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

மலேசியாவில் விடுதலைப் புலிகள் முகாம்

>> Wednesday, March 18, 2009

மலேசியாவில் விடுதலைப் புலிகள் முகாம் அமைத்து வருவதாக தகவல்!




ஸ்ரீ லங்கா அரசு வன்னியில் மேற்கொண்டுவரும் யுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வன்னியில் விடுதலைப் புலிகள் இயக்கப்பயங்கரவாதிகளின் முகாம்கள் ,நிலையங்கள் மீது அரச விமானப்படையினரும் இராணுவத்தினரும் மேற்கொள்ளும் வான்வழி , தரைவழி, கடல்வழித்தாக்குதல்களின் போது ஏற்படக்கூடிய பொதுமக்கள் உயிரிழப்புகளைக்காரணம் காட்டி அங்கு புலிகளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஸ்ரீலங்கா அரசு தமிழினத்தவர்களையே கொல்லும் இனஒழிப்பு யுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியும் யுத்தத்தை உடனே நிறுத்தி புலிகள் இயக்கத்துடன் சமாதானப்பேச்சுக்களை மேற்கொள்ளும்படியும் இனப்பிரச்சினைக்கு யுத்தத்தைதீர்வாக கைவிட்டு அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும்படி கோரி அண்மைக் காலங்களில் மலேசியாவில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களும் ஊர்வலங்களும் நடத்தப்பட்டு வந்துள்ளன. அவ்வாறே ஸ்ரீ லங்கா அரசு பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட தீர்க்கமாக எடுத்துள்ள யுத்தத்தில் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத்தெரிவித்துத் தீக்குளிப்பு சம்பவமும் நடைபெற்றது.
.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

பல நூறு படையினர் பலி-தொலைக்காட்சி செய்தி

StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பு குறித்த தொலைக்காட்சி செய்தி

>> Tuesday, March 17, 2009




StumbleUpon.com Read more...

ஆனையிறவில் புலிகள் ஊடறுத்து தாக்குதல்

புதுக்குடியிருப்பில் இருந்து மும்முனைகளில் பாரிய முன் நகர்வொன்றை மேற்கொண்ட இராணுவத்தினர், பாரிய இழப்புக்களை சந்தித்து பின் நகர்த்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமான இச் சமரில் இதுவாரை 400 கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் 850 பேர்வரை காயமடைந்துள்ளதாக அறியப்படுகிறது. இதனிடையே ஊர்ஜிதமற்ற தகவலின் படி புலிகளின் சிறப்பு படையனி ஒன்று ஆனையிறவு பகுதிக்குள் ஊடுருவி கடும் தாக்குதல் தொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த படையினர் முதலில் மன்னார் வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் இடப் பற்றாக்குறை காரணமாக வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், தற்போது அங்கும் இடப் பற்றாக்குறை காரணமாக கொழும்புக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...

மூன்று நாள் மோதலில் புதுக்குடியிருப்பில் 610 படையினர் பலி; 700 பேர் காயம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் மோதல்களில் சிறிலங்கா படையினர் தரப்பில் 610 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 700 பேர் வரையானோர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை மைய வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'புதினம்' செய்தியாளர் தெரிவித்ததாவது

.மேலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...

ஏய் தாய் தமிழகமே !!!!!!!!!!!

StumbleUpon.com Read more...

கீதையில் சொன்னபடி அவர்கள் தலையை நான் வெட்டுவேன்.-காந்தி

கீதையில் சொன்னபடி அவர்கள் தலையை நான் வெட்டுவேன்.இதை சொன்னது எந்த காந்தி என்று உங்களுக்கு குழப்பம் இருக்கும்.அது வேறு யாருமல்ல மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி.இவருடைய பேச்சு பாஜாகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மெலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP