சமீபத்திய பதிவுகள்

தினத்தந்தி,மாலைமலர் பத்திரிக்கைகள் வெளியிட்ட தவறான செய்தி

>> Monday, August 17, 2009

பொது மக்களுக்கான ஒரு பொது அறிவுப் பள்ளிக்கூடமாக இருப்பது பத்திரிக்கைகளே.ஆனால் அவைகள் செய்கின்ற கூத்து அவற்றின் நம்பகத்தன்மைகளை கேள்விக்குரியாக்குகிறது.

கடந்த 15ஆம் தேதி இந்தியா முழுவதும் 63ஆம் சுதந்திர நாள் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.ஆனால் மக்களுக்கு இயறகையான சந்தேகம் வருவது உண்மை.அதாவது 1947ல் ஆகஸ்ட் 15 சுதந்திரம் அடைந்த இந்தியா 2009 ஆகஸ்ட் 15ல் 62 வருடத்தை முடித்து 63 ஆம் வருடத்தை தொடங்குகிறது.ஒருவரின் பிறந்த நாளை கணக்கிடும் பொழுது அவர் பிறந்த தினத்தில் இருந்து ஒரு வருடம் கழிந்து அதே நாள் அவரும் பொழுதே ஒரு வயது என்று கணக்கிடப்படுகிறது.ஆனால் சுதந்திர தினம் அப்படி கணக்கிடக்கூடியது அல்ல.1947ல் இருந்து கணக்கிடப்பட வேண்டும்.அப்படி கணக்கிட்டால் 2009 ஆகஸ்ட் 15 இந்தியாவின் 63ஆம் சுதந்திர தினமாகும்.

இப்பொழுது இதில் என்ன பிரச்சனை உள்ளது என்று சொல்லுகிறேன்.

கடந்த 15,16ஆம் தேதி வெளியான தினத்தந்தி, மாலைமலர் ஆகிய பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வெளியிடப்பட்ட செய்தியில் நாடுமுழுவதும் 62ஆம் சுதந்திரதினம் என்று தவறான செய்தி வெளியாகியுள்ளது.ஆனால் உள் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 63ஆம் சுதந்திர தினம் என்று சரியாக இருந்தது.

என்னுடைய கேள்வி ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலையில் தவறான செய்தி வெளியிட்ட தினத்தந்தி இதழின் உறவு நிறுவணமான மாலைமலர் பத்திரிக்கையும் இதே தவறை திரும்ப செய்திருந்தது.இதுமட்டும் அல்ல அடுத்த நாள் 16ஆம் தேதியும் அதே தவறை மீண்டும் செய்து தங்களுடைய கவனக்குறைவை பறைசாற்றியது இந்த பத்திரிக்கை நிறுவனங்கள்.

இனிமேலாவது இது போன்ற தவறுகளை இந்த நிறுவனங்கள் தவிர்பார்களா??


தினத்தந்தி செய்தியை படிக்க

http://www.dailythanthi.com/article.asp?NewsID=507702&disdate=8/16/2009&advt=2

தினத்தந்தியின் செய்தி படவடிவில் அடிக்கொடிட்டு காட்டப்பட்டுள்ளது.பெரிதாக்க படத்தின் மேல் அழுத்தவும்



மாலைமலர் செய்தி ,பெரிதாக்க படத்தின் மேல் அழுத்தவும்



From தமிழ் முஸ்லீம்


அதே நாளில் வெளியான தினமலர் செய்தி அடிக்கொடிட்டு காட்டப்பட்டுள்ளது,பெரிதாக்க படத்தின் மேல் அழுத்தவும்

StumbleUpon.com Read more...

கணவனின் தாம்பத்திய ஆசைக்கு இணங்காத பெண்ணை பட்டினி போடலாம்


 


ஆப்கானிஸ்தான் நாட்டில் கணவனின் தாம்பத்திய ஆசைக்கு இணங்க மறுக்கும் பெண்களை கணவன் பட்டினி போடலாம், பணம் கொடுக்க மறுக்கலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. அந்த பெண்கள் மூலம் பிறந்த குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமை குழந்தைகளின் தந்தைக்கும், தாத்தாக்களுக்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. பெண்கள் வேலைக்கு செல்ல விரும்பினால் அவர்கள் கணவர்களின் அனுமதியை பெறவேண்டும் என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

பெண்ணை கற்பழிப்பவர்கள் கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ரத்தப்பணம் கொடுத்து விட்டால் அவர்கள் மீது வழக்கு தொடர முடியாது என்றும் அந்த சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வரப்பட்ட சட்டமுன்வடிவில், திருமணம் செய்து கொண்ட பெண்கள் விருப்பம் இல்லாமலும் கணவன் அவளை கற்பழிக்க முடியும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுன் ஆகியோர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த சட்ட முன்வடிவு கைவிடப்பட்டது. அதுதான் இப்போது இப்படி ஒரு சட்டமாக வடிவம் எடுத்து உள்ளது.

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP