பொய்யும்,புணை சுருட்டுமான பிரச்சாரங்கள் - உங்கள் பார்வைக்கு வெளிச்சத்தில்
>> Wednesday, June 18, 2008
கலப்படமின்மை வணக்கங்களில் பித்அத் கூடாது என்று தத்துவார்த்தமாகச் சொன்ன போது, மக்கள் மிகக் கடுமையாக அதை எதிர்த்தனர். இன்று அதே மக்கள் செயல்பாட்டு அடிப்படையில் பார்க்கும் போது அதை எற்றுச் செயல்படவும் அரம்பிக்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு வணக்கங்களில் கலந்து விட்ட கலப்படங்களைக் களைந்து விட்டோம். அனால் குர்அனில் உள்ள கலப்படங்களை நாம் இதுவரைக் களையவில்லை. குர்அனில் கலப்படமா? என்று கொதிப்புடனும், ஆச்சரியத்துடனும் நீங்கள் இங்கு கேள்வி எழுப்பலாம். அதற்கான விடை கீழே இடம் பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்ல! சவூதியின் வெளியீடுகளில் கூட இந்தச் சேர்மானங்கள் இடம் பெறத் தவறவில்லை.
இந்தச் சேர்மானங்களைக் களைவதற்கு அல்லாஹ் ஒர் அரிய வாய்ப்பை வழங்கினான். அது தான் இந்தத் தமிழாக்கமாகும்.
1. மன்ஜில் 2. ருகூவுக்கள் 3. ஸஜ்தா அடையாளங்கள்4. நிறுத்தல் குறியீடுகள். 5. வேண்டாத அய்வுகள் 6. மக்கீ, மதனீ 7. குர்அனை முடிக்கும் துஆ
மேற்கண்ட இந்தச் சேர்மானங்களை நீக்கி வெளியிட்டிருப்பதன் மூலம் ஆந்த தர்ஜுமா தனிச் சிறப்பைப் பெறுகின்றது. அல்லாஹ்வைப் பயந்து, உலகத்தில் யாருக்கும் பயப்படாமல் ஒரு தூய வடிவைக் கையாண்டதற்காக இது கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
குர்அன் மொழியாக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரும் பங்காற்றியதுடன் மட்டுமின்றி, குர்அனில் இருந்த இந்தக் கலப்படங்களை மக்களிடம் அடையாளம் காட்டி, அப்புறப்படுத்தியதும் தவ்ஹீது ஜமாஅத் செய்த சாதனைகளில் ஒன்று என்றால் மிகையாகாது. |
0 கருத்துரைகள்:
Post a Comment