அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் : பாகிஸ்தானில் 9 பேர் பலி
>> Tuesday, July 1, 2008
அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் : பாகிஸ்தானில் 9 பேர் பலி | |
பெஷாவர் : பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பழங்குடியின மக்கள் பெருமளவில் வசித்துவருகின்றனர். இந்த இடத்தில் தாலிபான் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதால், அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், நேற்று விமானி இல்லாத ரிமோட் மூலம் இயங்கக்கூடிய போர் விமானம் ஒன்று பாகிஸ்தான் பகுதியில் கைபர் கணவாய் அருகில் உள்ள ஹாஜி நம்தார் அமைப்பின் தலைமையிடம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் முற்றிலுமாக சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து உடல்களை மீட்கும் பணி நடைபெற்றுவருகிறது. |
0 கருத்துரைகள்:
Post a Comment