கள்ளப் போதகமும் வஞ்சிக்கப்பட்டவர்களும்
>> Saturday, November 1, 2008
கள்ள உபதேசங்கள் குறித்து கால தாமதமாக பதிவதற்காக் பொறுத்துக் கொள்ளுங்கள். செய்வதை திருந்தச் செய்யவேண்டுமென்பதற்காகத்தான் இந்த கால தாமதம். சரி தலைப்புக்கு வருவோம். என்ற ஒரு விவாத தொடுப்பு ஆரம்பிக்கப்பட்டது நினைவிலிருக்கலாம். அது எங்கே போய் ஒளிந்து கிடக்கிறது என்பது தெரியவில்லை. எல்லாருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்ற அப்பியாசத்தில் இங்கே கொடுத்துள்ளேன். இக்கட்டுரைக்கு வலு சேர்க்கும் வண்ணம் சகோ.ஸ்டான்லி அவர்களின் துண்டுப் பிரதி ஒன்றையும் இணைத்துள்ளேன்.
கள்ளப் போதகர்கள் யார்?
வேதத்தை வேத வெளிச்சத்தில் காணாதவர்கள். தங்கள் விருப்பு வெறுப்புக்கு ஏற்ப அல்லது தங்கள் இஷ்டக் கருத்துக்களை ஊர்ஜிதம் செய்ய மட்டுமே வேதத்தை பொய்யாய் யாதொரு நெறிமுறையின்றி மேற்கோளாக பயன்படுத்துவார்கள்.
வினோதமாக வேதசத்தியத்திற்கு இவர்கள் விளக்கம் அளிப்பது போதாதென்று தாங்கள் புதுமை படைப்பாளிகள் என்றும் சில வேளைகளில் மார்தட்டிக் கொள்வார்கள்.
தங்கள் போதகத்தின் பயனாக கிறிஸ்து மகிமைப்படுத்தப்பட்டாரா? ஜனங்கள் எச்சரிக்கப்பட்டு பயன்பெற்றார்களா? என்றெல்லாம் அவர்கள் கிஞ்சித்தும் நோக்குவதில்லை.
ஜனங்களை தங்கள் பக்கம் வசப்படுத்தி அடிமைகளாக்கி தங்களுக்கு ஆதாயம் அல்லது பிழைப்பை தேடிக்கொள்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.
இந்திய திருச்சபையில் கொசுக்களைப் போல பெருகியிருக்கும் இவர்களைக் குறித்து நாம் மிகுந்த எச்சரிப்போடு நடந்து கொள்ள வேண்டும்.
தப்பான போதனைகள் இன்று இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் வேகத்தைப் பார்த்தால் இந்த வெள்ளத்தில் எவருமே மீந்திருக்க முடியாது என்ற அளவுக்கு சிந்தைக்கு தொட்டில் கட்டி அப்பாவி விசுவாசிகளுக்கு மகுடி வாசித்து மயங்கவைக்கும் போதை உபதேசங்கள் விஷம் போல பெருகியிருக்கின்றன.
கள்ள உபதேசங்கள் கள்ளப் போதகர்கள் இவற்றைப் பற்றி பேசும் போது முதலாவது நாம் ஒரு காரியத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இவர்கள் எல்லாரும் ஏதோ ஒருவகையில் பிசாசினால் சத்தியத்தினின்று விலகும் படி வஞ்சிக்கப்பட்டவர்கள் ஆவர். நாம் அவர்கள் எந்தப் பகுதியில் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை சரியாய் விளங்கிக்கொண்டால்தான் அவர்களிடம் நாம் தப்பவோ அல்லது சரியாய் பதில் கூறவோ முடியும். இந்தக் காரியத்தில் நமக்கு உதவியாய் இருக்கும் படிக்கு நான் சமீபத்தில் வாசித்த சகோ.ஸ்டான்லி அவர்கள் எழுதிய வஞ்சிக்கப்பட்டவர்களுக்கான அடையாளங்கள் என்ற துண்டுப் பிரதியை இங்கே தர விரும்புகிறேண். நிச்சயம் அது மிகவும் பிரயோஜனமாக் இருக்கும் என்பதில் ஐயமில்லை.
"உமது வருகைக்கும் உலகின் முடிவுக்கும் அடையாளம் என்ன?" என்று சீடர்கள் இயேசுவிடம் கேட்டனர். அதற்கு இயேசு கொடுத்த 93 வசனப் பதிலின் முதல் வாக்கியம் ஒருவனும் உங்களை வஞ்சியாதபடி எச்சரிக்கையாயிருங்கள் என்பதே. அனேகர் வஞ்சிக்கப்படுவார்கள் என்றும் சொன்னார். பகுத்தறிவதில் விசுவாசிகள் வளரவேண்டுமென்று பவுல் ஜெபித்தார் (பிலி.1:9). வஞ்சிக்கப்படுதலை அடையாளங்காண இதோ சில பரிசோதனைகள். வஞ்சிக்கப்பட்ட ஊழியர் அல்லது மக்களில் கீழ்கண்ட ஒன்று அல்லது கூடுதல் அடையாளங்களைக் காணலாம்.
Note: வஞ்சிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளங்காண.........இதைப் படிங்க முதல்ல
0 கருத்துரைகள்:
Post a Comment