|
சமீபத்திய பதிவுகள்
இந்தியத் துரோகத்தால் நாம் இழந்தது போதும்!!
'எதிரிகளிலும் பார்க்க துரோகிகளே அதிக ஆபத்தானவர்கள்' என்பது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது தீர்க்கமான கருத்து. தமிழீழ விடுதலைப் போராட்டம் எதிரிகளால் பலவீனமுற்றது என்பதிலும் பார்க்க, துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டு சிதைவுற்றது என்பதே உண்மை. இப்போது ஈழத் தமிழர்களுக்கு இருக்கும் ஒரே தேர்வு எதிரிகளுடன் சமரசம் செய்து கொள்வதா? அல்லது துரோகிகளுடன் கூட்டுச் சேர்வதா என்பதே. சிங்கள எதிரிகளா? இந்தியத் துரோகிகளா? என்று தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில், தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் எதிரியுடன் சமரசம் செய்து கொண்டு துரோகியை எதிர்க்கும் முடிவை எடுத்தார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அனுமதிக்கப்பட்ட இந்திய இராணுவத்தின் பிரசன்னம் சிங்கள மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெறவில்லை. தெற்காசிய நாடுகளின் தாதாவாகத் தன்னை நிலைநிறுத்த முணலும் இந்தியாவின் அணுகுமுறை சிங்கள இனவாதிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. இதனை விடுதலைப் புலிகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தத் தீர்மானித்தார்கள். பிரேமதாஸ தலைமையிலான சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. இந்தியப் படைகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற விரும்பிய பிரேமதாஸ விடுதலைப் புலிகளுக்கு வேண்டிய அனைத்து வளங்களையும் அள்ளி வழங்கினார். இந்திய இராணுவம் பலத்த இழப்புக்களுடன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பியது. தமிழீழத் தேசியத் தலைவரது 'எதிரியைப் பின்னர் பார்த்துக்கொள்வோம்' என்ற தத்துவம் மீண்டும் அரங்கேறியது. இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தின் பின்னர் விடுதலைபர் புலிகளை அழித்து விடலாம் என்ற பிரேமதாஸவின் கனவு கனவாகவே நிலைபெற, பிரேமதாஸ விடுதலைப் புலிகளால் அழிக்கப்பட்டார். தமிழீழத் தேசியத் தலைவரது வார்த்தையும் செயலும் ஒன்றாகவே இருந்தது. துரோகிகள் விரட்டப்பட்டார்கள். எதிரியின் முக்கிய தலைவன் காவு கொள்ளப்பட்டான். கருணா என்ற துரோகி வீழ்த்தப்படாததாலேயே தமிழீழத்தின் இராணுவம் சிதைக்கப்பட்டது என்பதை நாம் மறந்துவிடலாகாது. சிங்களக் கொடூரங்களிலிருந்து விடுதலை பெற்ற இனமாக ஈழத் தமிழர்கள் வாழ்வதை இந்திய அரசு அனுமதிக்கப் போவதில்லை. இந்தியச் சதிக்கும், சிங்களக் கொடூரங்களுக்கும் இடையே ஈழத் தமிழர்களது உயிர்வாழ்தல் என்பது சாத்தியமே இல்லாதது. இத்தனை இன அழிப்பிற்கும், இத்தனை துயரங்களுக்கும், இத்தனை இழப்புக்களுக்கும் பின்னரும் 'சிங்கள தேசத்துடன் சேர்ந்து வாழ்' என்ற சாத்தானின் வேதம் இலங்கைத் தீவில் தமிழர்களை முற்றாகவே அழிக்கும் நிலையையே உருவாக்கும். ஈழத் தமிழர்கள் எப்போதுமே இந்திய நலனுடன் சேர்த்தே தமது விருப்பங்களை நிறைவேற்ற எண்ணியதன் விழைவாக பல பிராந்திய நாடுகளின் ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றுக்கொள்ளத் தவறிவிட்டார்கள். ஈழத் தமிழர்களை இந்திய உதிரிகளாகக் கருதிய சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் தமது இந்திய எதிர்ப்பு நிலைக்குள் ஈழத் தமிழர்களையும் அடக்கி விட்டதனால் சிங்கள தேசத்தின் பக்கம் அவர்களும் நின்று கொண்டார்கள். இந்த நிலை மாற்றம் பெறாத வரை ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை இலங்கைத் தீவில் நிலைநிறுத்தப்படப் போவதில்லை. மாறாக, இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்காக ஈழத் தமிழர்கள் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டு இலங்கைத் தீவில் இல்லாமலேயே போய்விடுவார்கள். ஒரு உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால், 'நீங்கள் வவுனியா தடை முகாம் ஒன்றினுள் அடைக்கப்பட்டவராக இருந்தால், வெளியே வரும் சூழலில் என்ன செய்வீர்கள்?'. நிச்சயமாக இலங்கைத் தீவிலிருந்து வெளியேறி, எங்கேயாவது கரை ஒதுங்கவே முயற்சி செய்வீர்கள். அல்லது, வெட்கத்தை விட்டாவது கடல் கடந்து தமிழகம் செல்ல முற்படுவீர்கள். இதுதான் மனித யதார்த்தம். அப்படியாயின், தமிழீழம் நிரந்தர கனவாகவே புலம்பெயர் தேசங்களில் நிலைத்து விடும். இந்த நிலையை மாற்ற வேண்டுமானால், புலம்பெயர் தேசத்து மக்கள் தாம் வாழும் நாடுகளின் மனச்சாட்சியைத் தட்டி எழுப்பும் போராட்டங்களைத் தீவிரப்படுத்த வேண்டும். மேற்குலக நாடுகள் கடந்தகாலத்தின் தவறான கணிப்புக்களைத் திருத்தி, தமிழீழ மக்களுக்கு நீதி வழங்கத் தவறினால், எமது வாழ்வைத் தனது பிராந்திய நலனுக்காகப் பலி கொள்ளும் இந்தியாவை விட்டு விலகி, அதன் எதிர்த் துருவமான சீனாவின் பக்கம் ஈழத் தமிழர்கள் முழுமையாகச் சாயவேண்டும். இந்தியாவின் பக்கம் நின்று நாம் இழந்தது போதும். இந்தியாவை நம்பி நாம் அழிந்தது போதும். இந்தியாவின் சிதைவில்தான் தமிழீழம் மலருமானால், அதற்காகவேனும் நாம் சீனாவின் பக்கம் நின்றேதான் ஆகவேண்டும். இந்திய புராணம் பாடி, ஈழத் தமிழர்களுக்கு மகுடி ஊதும் பலரும் ஈழத் தமிழர்களின் அத்தனை துயரங்களுக்கும் இந்தியாவே காரணம் என்பதை வசதியாக மறந்து விடுகின்றார்கள். தன்னிடம் ஒடுங்க மறுத்த சிறிலங்காவை அடிபணிய வைக்கும் மந்திரக் கோலாகவே ஈழத் தமிழர்களது பிரச்சினையை இந்தியா பயன்படுத்தியுள்ளது. இன்றும் சிறிலங்காவைக் குளிர்வித்துக் காரியமாற்ற ஈழத் தமிழர்களைப் பலிக்கடா ஆக்குவதற்கு இந்தியா தயங்கப் போவதில்லை. இந்தியத் துரேகம் இன்றுடன் முடிவுறப் போவதில்லை. இதிலிருந்து விடுபடுவதே ஈழத் தமிழர்களுக்கிருக்கும் மிகப் பெரிய சவாலாகும். 'எதிரிகளிலும் பார்க்க துரோகிகள் ஆபத்தானவர்கள்' இது தேசியத் தலைவர் அவர்களது வார்த்தை. நன்றி:
'அமைதிப்படை' என்ற பெயரோடு தமிழீழ மண்ணில் கால் பதித்த இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் துரோகத்திற்கு முதல் களப்பலியானவர் லெப். கேர்ணல் திலீபன் அவர்கள். காந்திய மொழியில் இந்தியத் தவறுகளை எடுத்துரைக்க அதே காந்திய பாதையில் பயணித்து, உண்ணா நோன்பிருந்து கேர்ணல் திலீபன் அவர்கள் தன் உயிரைத் தமிழீழ இலட்சியத்திற்காக அர்ப்பணித்தார். தொடர்ந்து, குமரப்பா, புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள் இந்தியத் துரோகத்தால் பலியானபோது விடுதலைப் புலிகள் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராகப் போராட முடிவு செய்தார்கள். அப்போதும் அவர்களுக்கு இதே விதமான குழப்பம் உருவாகியது.
இந்தியாவின் பிராந்திய வல்லாதிக்கக் கனவுக்கு பல்லாயிரக்கணக்கான தமிழாகளையும், தமிழீழக் கனவோடு போராடிய விடுதலைப் புலிகளின் இராணுவக் கட்டமைப்பையும் பலி கொடுத்தாகிவிட்டது. இனிமேலாவது தமிழீழ மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும்.
சி. பாலச்சந்திரன்
ஆசிரியர் (பாரிஸ் ஈழநாடு)
--
www.thamilislam.co.cc
பழங்களும் காய்கறிகளும்-இந்த வார இணையதளம்
""சென்ற மாதம் என் பிறந்த நாள் வந்தது. டாக்டர் எனக்குக் கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதாகச் சொன்னதால், பிறந்த நாளிலிருந்து பழங்களும் காய்கறிகளும் மட்டுமே சாப்பிட முடிவெடுத்தேன். ஆனால் 1) இவற்றை எப்படிச் சாப்பாடுடன் கலப்பது என்று தெரியவில்லை; 2) பசுமையான பழங்களை வாங்கப்போனால் விலை அதிகமாக இருக்கிறது. இவற்றில் எதனை வாங்கலாம் என்று தெரியவில்லை. இதற்கு செலவழிக்கும் பணம் உடல் நலத்திற்கான முதலீடு என்பதால், இந்த முதலீட்டை வீணாக்கமல் எப்படி பாதுகாப்பது என்று தெரியவில்லை; 3) விலை அதிகமாக இருப்பதால் எதை விடுத்து, அந்த இடத்தில் எதனை வாங்குவது என்று தெரியவில்லை'' என்று அண்மையில் சந்தித்த நண்பர் ஒருவர் என்னிடம் புலம்பினார். அதோடு விடாமல் உங்கள் இன்டர்நெட்டில் இதற்கு தீர்வு இருக்கிறதா, பார்த்துச் சொல்லுங்களேன் என்றும் அன்புக் கட்டளை இட்டுச் சென்று விட்டார். ஆனால் தொடர்ந்து போனில் ""என்ன பார்த்தீர்களா?'' என்று அவ்வப்போது விசாரிக்கவும் செய்தார்.
இவரின் கேள்விக் கணைகளை முன்னிறுத்தி இணையத்தில் தேடியதில் ஓர் அருமையான தளம் இவருக்கெனவே வடிவமைத்தது போலக் கிடைத்தது. அதன் முகவரி http://www.fruitsandveggiesmorematters.org/
இந்த தளம் பழங்களையும் காய்கறிகளையும் எப்படி பயன்படுத்தினால் சுவையாக இருக்கும் எனப் பல வழிகளைத் தருகிறது. அத்துடன் அவற்றை எப்படி பத்திரமாக வைத்துப் பாதுகாத்துப் பின் எடுத்து பயன்படுத்துவது என்று காட்டுகிறது. இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டில் வைத்தல், இதயத்தை நலத்துடன் இருக்க வைத்தல், கேன்சர் போன்ற நோய்களைத் தடுத்தல் போன்ற பல பயன்களுக்குக் காய்கறிகளும் பழங்களும் எப்படி உதவுகின்றன என்று காட்டுகிறது.
ஏன் பழங்களையும் காய்கறிகளையும் சாப்பிட வேண்டும்? இந்த சத்து மற்றவற்றில் இல்லையா? என்ற கேள்விக்கு இந்த தளத்தில் நல்ல பல காரணங்களைப் பார்க்கலாம். இவற்றைப் படிக்கும் ஒவ்வொருவரும் நிச்சயம் பழங்களையும் காய்கறிகளையும் தங்கள் உணவில் அதிகம் சேர்க்க ஆரம்பித்துவிடுவார்கள்.
இந்த தளத்தில் ஆறு பிரிவுகள் உள்ளன. 1) பழங்களும் காய்கறிகளும் எதற்காக? 2)திட்டமிட்டு இவற்றை வாங்குதல் 3)சமைத்தல், 4)குழந்தைகளை எப்படி ஈடுபடுத்துவது? 5) சமுதாயம், மற்றும் 6) நல வாழ்க்கைக்கான மூலக் கூறுகள். இவை ஒவ்வொன்றிலும் பல துணைப் பிரிவுகள் உள்ளன.
சமைத்தல் என்னும் பிரிவில் பல சுவையான பண்டங்கள் தயாரிக்கும் வழிமுறை குறித்து குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
இந்த தளத்தை ஒரு முறை பார்த்தவர்கள் பின் தொடர்ந்து பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்
source:dinamalar
www.thamilislam.co.cc
Read more...
பயங்கரவாதத்தைச் சமாளிக்க... இந்தியாவில் முதல் முறையாக ஒரு பட்டப்படிப்பு!
தீவிரவாதிகள் அச்சுறுத்தலின் பின்புலத்தில் ஸ்ரீநகரில் வளர்ந்தவர், சுமாயா ரஃபீக் ஸாகர் என்ற 23 வயது இளம்பெண். அவர் தனது அடுத்தத் தலைமுறைக்கு பயங்கரவாதம் குறித்த அச்சமின்றி வாழ்வதற்காக ஒரு முடிவை எடுக்கிறார். முதுகலைப் பட்டம் ஒன்றைப் படிப்பது என்பதே அம்முடிவு! முதுகலைப் பட்டம் படிப்பதற்கும், தனது அடுத்த தலைமுறையின் பயங்கரவாத அச்சத்தைப் போக்க முனைவதற்கும் என்ன தொடர்பு? சுமயா படிக்கப் போகும் இரண்டு ஆண்டு கால முதுகலைப் பட்டப் படிப்பின் பெயர்... 'பயங்கரவாதத்தை எதிர்த்தல் மற்றும் அமைதி மேலாண்மை' (Counter Terrorism and Peace Management). பயங்கரவாத அச்சுறுதல் மலிந்துள்ள இன்றையச் சூழலுக்கு மிகவும் தேவையான ஒரு படிப்பாகவே அறிமுகப்படுத்தப்படுகிறது, இந்த முதுகலைப் பட்டப்படிப்பு. புனே-யில் உள்ள சர்ஹத் ரிசர்ச் சென்டர் அறிமுகப்படுத்தும் இந்தப் படிப்புக்கான வகுப்புகள், தேசத் தந்தை காந்தியடிகளின் பிறந்ததினமான அக்டோபர் 2-ம் தேதி துவங்குகிறது. இந்த முதுகலைப்படிப்பை முதல் முறையாக பயிலும் 18 மாணவர்களில் ஒருவர் தான் ஸ்ரீநகரைச் சேர்ந்த மாணவி சுமாயா! இந்தப் படிப்புக்கு அங்கீகாரம் பெறுவதற்கு, பல்கலைக்கழக மானிய ஆணையத்துக்கு சர்ஹத் ஆராய்ச்சி மையம் விண்ணப்பித்துள்ளது. பயங்கரவாதத்தைச் சமாளிப்பதற்குச் சொல்லித் தரும் வகையில் பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ள இந்தப் படிப்பை தேர்வு செய்வதற்கான காரணம் குறித்து விவரித்துள்ள மீடியா மாணவி சுமாயா, "ஏறத்தாழ கால் நூற்றாண்டுகளாக பயங்கரவாதக் காற்றைச் சுவாசித்து வருகிறேன். பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி அடித்துக் கொல்லப்பட்டார். என்னுடைய குடும்பத்தில் அனைவரும் தூங்காமல் மரண பயத்துடன் விழித்திருந்த இரவுகள் ஏராளம். இதே பயத்துடன் எனது அடுத்த தலைமுறை வாழக்கூடாது என்பதே எனது விருப்பம்," என்றார். பயங்கராதம் மூலம் ஏற்படும் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்வு காணபதற்காகவே இந்தப் படிப்புக்கு தாம் விண்ணப்பித்ததாக அவர் தெரிவித்தார். மும்பை பயங்கரவாத சம்பவத்துக்குப் பிறகே, இந்த படிப்புக்கான பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளதாக கூறும் சர்ஹத் கல்வி நிறுவனத்தின் நிறுவனத் தலைவர் சஞ்சய் நேஹர் கூறுகையில், "இந்தியா கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்தின் தாக்கம் பற்றியும், அதனை எதிர்கொள்வது பற்றியும் இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வது மேலும் அவசியமாகியிருக்கிறது," என்றார். பயங்கரவாதக் கொள்கைகள், அதற்கான காரணங்கள், தேசியக் கொள்கை, பத்திரிகைகளின் பங்களிப்பு உள்ளிட்டவை முதலாம் ஆண்டிலும், பல்வேறு பயங்கரவாத அமைப்புகள், பயங்கரவாதத்தை எதிர்கொள்வதற்கான வழிமுறைகள் முதலியவை பற்றி இரண்டாம் ஆண்டிலும் சொல்லித் தரப்படும். சட்டம், நிர்வாகம், காவல்துறை, கல்வித் துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் வல்லுனர்களாக திகழ்பவர்களின் உதவியுடன், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முகம்மது உர் ரஹ்மானின் வழிகாட்டுதலுடன் பாடத்திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாக கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
--
www.thamilislam.co.cc
தேசப்பிதா நினைவுகள்!
காந்திஜியின் தனிச் செயலராக பணிபுரிந்த 88 வயது வை. கல்யாணத்துடன் ஒரு பேட்டி... டில்லியில், காந்திஜி தலைமையில், ஜன., 3, 1948ல் பிர்லா மாளிகை தோட்டத்தில், பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த மாலை நேரம், திடீரென்று குண்டு வெடித்தது. மதன்லால் பாவா என்பவன் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டான். நல்லவேளை, காம்பவுண்ட் சுவர் மட்டும் சேதமடைந்தது. ஜனவரி 30, 1948 அன்று மாலை ஐந்தேகால் மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி சுடப்பட்டு சாய்ந்தார். சில வினாடிகளில் அவர் உயிர் பிரிந்தது. உலகமே அதிர்ந்து, கண்ணீர் விட்டது. எனக்கு எப்போதுமே ஆபீஸ் சேவகம் பிடிக்காது; உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலைகளையே விரும்புவேன். அப்போது டில்லியில், "மெட்ராஸ் கிளப்' என்று ஒன்று இருந்தது. அந்தக் காலத்தில் டில்லியில் பிரிட்டிஷாரிடம் முக்கால் பங்கு பேர் தமிழர்கள் தான் வேலை பார்த்தனர். அவர்கள் சேர்ந்து துவங்கியது தான் மெட்ராஸ் கிளப். காந்திஜியுடன் பணியாற்றிய வருடங்களில் தங்களின் மனநிலை எப்படி இருந்தது?
"காந்திஜியைக் கொலை செய்ய முயற்சியா?' என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. "காந்திஜியைப் பார்க்க வருபவர்களின் பையை சோதனையிட வேண்டும். அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், போலீஸ் துறை மீது களங்கம் வந்துவிடும்!' என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலிடம் போலீஸ் முறையிட, அவர், காந்திஜியைச் சந்திக்க ஒரு டி.ஐ.ஜி.,யை அனுப்பி வைத்தார்.
காந்திஜியோ, "நீங்கள் பல ஆயிரம் போலீசைக் காவலுக்கு போட்டு சோதனைகள் நடத்தினாலும் என் உயிரைக் காப்பாற்ற முடியாது; காரணம், என் உயிர் இருப்பது கடவுளின் கையில். நடக்கிறபடிதான் நடக்கும்!' என்று டி.ஐ.ஜி.,யிடம், கூறி, பார்க்க வருபவர்களின் பைகளை சோதனை போடக்கூடாது என்று மறுத்து விட்டார்.
காந்திஜி சுடப்பட்ட போது நான் அருகில் தான் இருந்தேன். சர்தார் வல்லபாய் பட்டேல் அப்போது தான் காந்திஜியிடம் பேசிவிட்டுச் சென்றிருந்தார். நான் பரபரப்பாக இரண்டு தெரு தள்ளியிருந்த அவரது வீட்டுக்கு ஓடியபோது, பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார்.அவர் மகளிடம் விஷயத்தைத் தெரிவித்து விட்டு மறுபடியும் ஓடி வந்தேன்.
ஒரே பரபரப்பு... பதைபதைப்பு... என்னிடமோ, காந்திஜியைத் தாங்கிப் பிடித்து வந்த ஆபா, மனுபென் காந்தியிடமோ போலீஸ் எதுவுமே விசாரிக்கவில்லை.
காந்திஜியிடம் தனிச் செயலராக பணியாற்ற எப்படி வாய்ப்பு கிடைத்தது?
அது தற்செயலாக நடந்தது. நான் சிம்லாவில் பிறந்து வளர்ந்தாலும், என் சொந்த ஊர் தஞ்சை வட்டம். அக்ரஹாரம். அப்பா வெங்கட்ராம ஐயர் சிம்லாவில் வெள்ளைக்காரர் ஆபீசில் மேலாளராக இருந்தார். சிம்லாவில் இருந்த மதராசி ஸ்கூலில் தான் ஆரம்ப கல்வி பயின்றேன். பிறகு, பி.காம்., டில்லிக்கு வந்து பிரிட்டிஷ் கம்பெனி ஒன்றில் பணி செய்து கொண்டிருந்தேன்.
அங்கு நான் சென்ற போது தேவதாஸ் காந்திக்கு தெரிந்தவர், என்னைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார். காந்தியின் மீது விசுவாசம் கொண்ட என் கம்பெனி முதலாளியிடம் அனுமதி பெற்று, லீவில் ஆசிரமத்திற்கு சென்றேன்.
காந்திஜியை எப்போது முதன் முதலாகச் சந்தித்தீர்கள்?
ஆகாகான் மாளிகையில் ஹவுஸ் அரெஸ்ட் ஆகியிருந்த காந்திஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதும், அவர் அலோபதி மருத்துவத்தை ஏற்க மறுத்ததும், ஆங்கிலேயருக்கு பிரச்னை ஏற்பட்டது. காந்திஜிக்கு ஏதாவது ஆகிவிட்டால். பிரச்னை ஆகிவிடும் என்று பயந்து, அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்துவிட்டனர். அவர் பம்பாயில், சாந்திகுமார் மொரார்ஜி என்பவர் வீட்டில் தங்கி, இயற்கை சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் நான் அவரைச் சந்தித்தேன்.
நான் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம் என்ன என்று கேட்டார். 250 ரூபாய் என்றேன். அது, இப்போது, பல ஆயிரங்களுக்கு சமம். "அடடா... எனக்கு இவ்வளவு தர முடியாது; அறுபது ரூபாய் தான் தரமுடியும்...' என்றதும், "அதுகூட வேண்டாம். எனக்குத்தான் உண்ண உணவும்... இருக்க இடமும் கிடைக்கிறதே...' என்றதும் வியந்தார்.
மிகப் பெருமையாக உணர்ந்தேன். தேசியத் தலைவர்களையும், மவுண்ட்பேட்டன் போன்ற உலகத் தலைவர்களையும் சாதாரணமாக சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்ல, அவர்கள் முதலில் என்னிடம் தான் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்குவர். நேரு, பட்டேல் போன்ற மிகச்சிலர் தான் காந்திஜி யிடம்அப்பாயின்ட் மென்ட் இல்லாமல் பேச முடியும்.
காந்திஜியை சந்திக்க வந்த சாதாரண மனிதர் ஒருவர் பிற்காலத்தில் மிகப்பெரும் தமிழகத் தலைவராகவும், தேசியத் தலைவராகவும் மாறினார்; அவர் தான் காமராஜர். இதைப் போல ஜனாதிபதியாக பதவி வகித்த, ஜாகிர் உசேன், நீலம் சஞ்சிவரெட்டி, சங்கர் தயாள் சர்மா போன்றவர்கள் கூட அப்போது சாதாரணத் தொண்டர்களாக காந்திஜியின் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அத்தனை பேரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்கால இளைஞர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது?
காந்திஜி, நிறைய தியாகங்கள் புரிந்துள்ளார். அவர் செய்த தியாகங்கள் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. இளைஞர்கள், அவர் சரித்திரத்தை பலமுறை படிக்க வேண்டும். அவர்களின் மூலம் அவரது கனவுகள் நிறைவேற வேண்டும்.
தொகுப்பு :கே.ஜி.ஜவஹர்
--
www.thamilislam.co.cc
அம்மன் கோவிலில் முஸ்லிம் குழந்தைக்கு வித்யாரம்பம்
கோடஞ்சேரி: மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, அம்மன் கோவிலில் முஸ்லிம் குழந்தைக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி நடந்தது. கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், கோடஞ்சேரி ஊராட்சியில், வட்டல் சர்ச் உள்ளது. இங்கு, பல ஆண்டுகளாக, விஜயதசமி நாளில் வித்யாரம்ப நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு விஜயதசமி நாளன்று, சர்ச் நிர்வாகி பாதிரியார் எல்தோ தோம்ப்ரா, முன்னாள் நிர்வாகி பாதிரியார் வர்கீஸ் குடம் கீரில் ஆகியோர், குழந்தைகளுக்கு கல்விக்கான முதல் எழுத்தை நாக்கில் எழுதினர். நிகழ்ச்சியில், 143 குழந்தைகள் பங்கேற்றனர். சர்ச்சில் இந்து ஆசாரப்படி வித்யாரம்ப நிகழ்ச்சி நடந்தது. அதேபோல், பத்தனம்திட்டா மாவட்டம், மான்னார் பகுதியில் உள்ள கார்த்தியாயினி அம்மன் கோவிலுக்கு, ஜாகீர் உசேன் மற்றும் ஷபி தம்பதியரின் நான்கு வயது மகன் அஜ்மல் முகமது வந்தான். அங்கு, ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர் முரளிதரன் நாயர் மடியில் அவன் அமர்ந்தான். அவனது நாக்கின் நுனியில், தங்கத்தால், அவர் "ஹரி ஸ்ரீ' என்று எழுதினார். பின், குழந்தையின் விரலை பிடித்து , அரிசியில்"ஹரி ஸ்ரீ 'என்று எழுதினார். இவ்விரு நிகழ்ச்சிகளும் மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தன. source:dinamalar
--
www.thamilislam.co.cc