நல்ல குடும்பம் நாசனமான கதை:
>> Tuesday, April 22, 2008
நீங்கள் ஒரு சாதாரண முஸ்லீம், ஒரு கம்பனியில் வேலை செய்கிறீர்கள், உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் (இந்துவோ, கிறிஸ்தவனோ.. சீக்கியனோ, நாத்தீகனோ) உண்டு. அவன் தன் வயது சென்ற பெற்றோர்களோடும், மனைவி பிள்ளைகளோடும் சந்தோஷமாக, வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான். இந்த நிகழ்ச்சி நடக்கும்பொது இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சி உள்ளது என்று கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் தினமும் ஐந்து வேளை அல்லாவை தொழுதுக்கொள்ளும் நல்ல மனிதர். கம்பனியில் வேலை செய்யும் போது, அடிக்கடி மதம் சம்மந்தப்பட்ட உரையாடலை நீங்களும் உங்கள் நண்பரும் விவாதித்து இருக்கிறீர்கள். உங்கள் ஊரில் ஒரு இஸ்லாமிய கேள்விபதில் நிகழ்ச்சி நடப்பதாக அறிவிப்பு வருகிறது, அக்கூட்டத்தில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களோ அல்லது பிஜே அவர்களோ பேசுகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பரை இக்கூட்டத்திற்கு அழைக்கிறீர்கள், உன் கேள்விகளுக்கு சரியான பதிலை இக்கூட்டத்தில் ஜாகிர் நாயக் அவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள் என்றுச் சொல்கிறீர்கள், அவரும் உங்களோடு கூட்டத்திற்குச் செல்கிறார்.
கேள்வி பதில் நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும், அதற்கு ஜாகிர் நாயக் அவர்கள் கொடுத்த பதில்களையும் பார்த்து இந்த மாற்று மத நண்பர் ஆச்சரியப்பட்டு, இன்னும் இஸ்லாமைப் பற்றி அதிகம் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன் என்கிறார்.
அவருக்கு நீங்கள் சில இஸ்லாமிய புத்தகங்களை தருகிறீர்கள், அவரும் அதை படித்து, நான் முஸ்லீமாக விரும்புகிறேன். அல்லா தான் இறைவன் என்பதை நான் உணர்ந்தேன் என்றுச் சொல்ல, அவருக்கு இன்னும் அதிகமாக இஸ்லாம் பற்றிச் சொல்லி, ஒரு நாள் அவர் முஸ்லீமாக தன்னை ஒரு கூட்டத்தில் அங்கீகரித்து முஸ்லீமாக மாறிவிட்டார்.
நாட்கள் கடந்தன, மாதங்கள் விறைவாக மறைந்தன, சில வருடங்கள் ஓடிவிட்டன. தன் பெற்றோரோ அல்லது மனைவி பிள்ளைகளோ இன்னும் முஸ்லீமாக மாறவில்லை மட்டுமல்ல, இவரது பெற்றோரின் வற்புறுத்தலின் பேரில் அல்லது இன்ன பிற காரணங்களால், இந்த முன்னால் மாற்று மத நண்பர், மறுபடியும் தன் பழைய மதத்திற்கே (இந்துவாகவோ, கிறிஸ்தவனாகவோ, சீக்கியனாகவோ, அல்லது நாத்தீகனாகவோ) மாறுகிறேன் என்றுச் சொல்கிறார், மாறியும் விட்டார். தன்னுடைய பழைய மதத்தில் இப்போது ஆர்வமாக சில மார்க்க வேலையையும் செய்கிறார்.
இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு என்பதால், இவனுக்கு முஸ்லீமாக அவகாசம் கொடுக்கப்பட்டது இவர் இல்லை என்று மறுக்க, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஏனென்றால், இவன் ஒரு தேசத்துரோகி, அதாவது, ஜாகிர் நாயக் அவர்கள் சொன்னது போல இவன் ஒரு தேசத்துரோகம் செய்த குற்றத்திற்கு சமமான குற்றம் செய்தவர் ஆவார்.
1 கருத்துரைகள்:
Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the OLED, I hope you enjoy. The address is http://oled-brasil.blogspot.com. A hug.
Post a Comment