சமீபத்திய பதிவுகள்

சிரிப்பு நடிகர் ஒருவர் தன் காமெடியில் அடிக்கடி `அப்துல்கலாம்' பற்றி குறிப்பிடுவது ஏன்?

>> Wednesday, May 28, 2008

தங்கள் காமெடியில் அடிக்கடி `அப்துல்கலாம்' பற்றி குறிப்பிடுவது ஏன்?

அவர் `இஸ்ரோ' தந்த விஞ்ஞானி!
இலக்கியம், தத்துவம் பேசும் மெய்ஞானி!
இசையை நேசிப்பவர்:
பெற்றோரைப் பூசிப்பவர்.
`பொக்ரான்' சோதனையில்
உலகத்தையே உளப்பியவர்!
குழந்தைகள் உள்ளத்தில்
பூவாய் நுழைந்து, புயலைக்கிளப்பியவர்!
ஒரு மயிலுக்கு அடிபட்டாலும்
மருத்துவம் செய்யக் கூறியவர்!
வெயிலில் நிற்கும் ஜவானுக்கு
நிழற்குடை அமைக்கக் கோரியவர்!
இந்தியா, கல்வி - அவர் கடமைகள்!
இரண்டு பேண்ட், இரண்டு ஷர்ட்...
அவர்தம் உடமைகள்!
பாதுகாப்பு வளையம் தாண்டியவர்!
பாரதமாதாவுக்கு வேண்டியவர்!
இல்வாழ்க்கை என்னும்
இன்பம் துறந்தவர்!
இந்திய சுபிட்சத்தின்
கதவு திறந்தவர்!
அவர்!
மாணவர் நெற்றியில் எரியும் விளக்கு!
மணக்கும் பூக்களின் புதிய கிழக்கு!
இந்திய தேசத்தின் புதிய பிதா!
இதனால்தான் அவர் பற்றி கூறுகிறேன் சதா!.

டாக்டர். முருகுசுந்தரம், பூந்தமல்லி.
 
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP