சமீபத்திய பதிவுகள்

சவுதி அரேபியாவில், நாய், பூனை வளர்க்க தடை

>> Thursday, July 31, 2008


சவுதி அரேபியாவில், நாய், பூனை வளர்க்க தடை


சவுதி அரேபியாவில் நாய், பூனை விற்பதற்கும், அவற்றை பொது இடங்களுக்கு கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. ரியாத் கவர்னர் இளவரசர் சட்டாம் இப்படி ஒரு தடையை விதித்து ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறார். மார்க்க அறிஞர்கள் கவுன்சில் கொடுத்த உத்தரவுக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு ஒழுக்க விதிகளை மேம்படுத்தும் கமிஷன் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இறைத்தூதர் நபிகள் நாயகம் கூறிய அறிவுரையின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதாக இந்த கமிஷன் தலைவர் அகமது அல் கம்தி தெரிவித்தார். வீட்டுக்குள் நாய்களை வைத்துக்கொள்ளவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வேட்டைக்காகவும், போலீஸ் வேலைக்காகவும், வீடுகளை காவல் காக்கவும், ஆடு, மாடுகளை விவசாயிகள் பாதுகாக்கவும் நாய்கள் வளர்க்கலாம் என்று விலக்கும் அளிக்கப்பட்டு உள்ளது.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=429223&disdate=8/1/2008

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP