சமீபத்திய பதிவுகள்

ஜோதிடரை அடித்து உதைத்த பெண்

>> Wednesday, August 6, 2008

ஜோதிடரை அடித்து உதைத்த பெண்


ஆத்திகர்களின் மனோநிலை எப்-பொழுதுமே நிச்சயமற்ற, அதாவது மதில்மேல் பூனையாக, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இனிமேலும் அப்படித்தான். கோயிலுக்கு போவதாக இருந்தாலும் சரி, சாமியாடிகளை பார்க்கப் போவதாக இருந்தாலும் சரி தங்களது கோரிக்கை நிறைவேறக் கூடும் என்ற அய்யப்பாட்டுடன்தான் அணுகுவார்களே தவிர,

நிறைவேறியே தீரும் என்று அவர்களுக்கே நிச்சயமிருக்காது. ஏனெனில், அவர்களே அவர்களுக்கு உரைகல். இதற்கு முன்பும் பல விசயங்களில் ஏமாந்த அனுபவம் அவர்களுக்கு உண்டு. என்ன கேடு இந்த கடவுளுக்கு, எதில குறை வச்சேன், இப்படி மொத்திபுடுச்சே என்று கடவுளை உள்ளுக்குள் வைவதும் உண்டு. வைதபின், அதுசரி, நம்ம தலைவிதி இப்படின்னு எழுதி வச்சிருக்கும் போது கடவுள் என்ன பண்ணுவாரு? அவரு எழுதின விதிய அவரே மாத்தினா அப்புறம் எதுக்கு எழுதனும் என்று இப்படியும் நினைத்துக் கொண்டாலும், ஏற்கெனவே எழுதி வச்சிருக்கும் போது, எழுதி வச்சது நடந்துதான் தீரும்னு இருக்கும் போது அதை நம்ம வசதிக்கு மாத்தச் சொல்லி வேண்டுகோள் வைக்கலாமா என்று நினைப்-பதில்லை. ஆக, எதிலும் நிலைத்த முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறவர்களே ஆத்திகர்கள்.

அப்படியே இருந்தாலும் சில நேரங்களில் சில மனிதர்கள் சுயமரியாதையால், உந்தப்-பட்டு ஆத்திகராகவே இருந்தாலும் தெளிவான முடிவு எடுப்பதுண்டு. அப்படி ஒரு முடிவை ஆண்களைக் காட்டிலும் பக்தியில் அதிகம் ஈடுபடும் பெண் ஒருவர் எடுத்திருப்பது நமது புருவங்களை உயர வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் நிர்வாணம். ஆச்சர்யமாக இருக்கிற-தல்லவா. அந்த நிர்வாணம் ஒரு நிவாரணத்-தையும் தந்திருக்கிறது. ஆம், ஈரோட்டை அடுத்த ரங்கம்பாளையத்தில் பிரம்மரிஷி என்கிற ஜோதிட நிலையம் வைத்திருப்பவர், கிரி எஸ்.அய்யர், இவரிடம், ஓட்டல் வியா-பாரத்தில் நொடித்துப் போனதாக பரிகாரம் தேடிவந்த ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கலையின் மனைவிடம் பரிகாரம் கூறுவதற்காக திட்டமிட்டு கண-வனை வெளியே அனுப்பிவிட்டு பெண்ணிடம் சாமியார் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்று கூற மதில்மேல் பூனை, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால், என்ற அய்யமெல்லாம் காணாமல் போய், அல்லது சுயமரியாதை, அந்த அய்யப்பாடுகளையெல்லாம் தவிடு பொடியாக்கி, நிர்வாணமாக நிற்பதா? அதுவும் ஓர் அந்நியன் முன்பா? என்று பொங்கி எழுந்து கணவன், உறவினர்கள் துணையுடன் அந்தப் பெண் ஜோதிடப் பார்ப்பனரை அடுத்த-நாள் கண்மண் தெரியாமல் அடித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களும் நாளிதழ்களில் வந்திருக்கின்றன. இது பகுத்தறிவாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருந்தாலும், நிர்வாணமாக நில் என்று சொன்ன பிறகுதான் இந்த நிவாரணம் கிடைத்ததே தவிர, அந்தப் பெண்ணோ மற்றவர்களோ மூடத்தனங்களை இத்தோடு மூட்டை கட்டி குப்பைத் தொட்டி-யில் போட்டு விடுவார்கள் என்பதில் நிச்சய-மில்லை என்று எண்ணும்போது நெருடுகிறது. போகட்டும், இந்த செய்தியும் அது தொடர்-பான நாளிதழ்களில் வந்திருக்கின்றன. புகைப்படங்களும் மக்களிடம் பொதிந்து கிடக்கின்ற மூடத்தனங்களை ஓரளவாவது தூர்வார உதவும் என்பதில் அய்யமில்லை. அடிமேல் அடி வைத்தால் அம்மி மட்டுமா? மூடத்தனங்-கள் கூடத்தான் நகர்ந்துவிடும்; தகர்ந்து-விடும். அதற்கு கிரி அய்யரை அடித்த பெண் துவக்கி வைத்துள்ளார். துவங்கிய இடமும் பொருத்தமானதுதான். மூடத்தனங்-களை பகுத்தறிவுத் தீ நாக்குகளால் சுட்டுப் பொசுக்கிய பெரியார் என்னும் அக்கினிக் குஞ்சை ஈன்ற இடமல்லவா - ஈரோடு.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP