சமீபத்திய பதிவுகள்

கிறிஸ்தவம் பார்வை: மூலத்தொடுப்பு கொடுக்க பயந்து நடுங்கும் முஸ்லீம்கள்

>> Tuesday, August 26, 2008

ஏட்டிக்கு போட்டி : கிறிஸ்தவம் பார்வையும் ஒரு கிறிஸ்தவனின் அழுகையும்



Quote:
ChristianPaarvai said:
கிறிஸ்தவம் பார்வையும் ஒரு கிறிஸ்தவனின் அழுகையும்!

உமர் மற்றும் உண்மை அடியான் என்ற பெயர்களில் நபிகளாரை விமர்சித்து வரும் கிறிஸ்தவரை நேரடி விவாதத்துக்கு அழைத்திருந்தனர் இணையப் பேரவை சகோதரர்கள். நேரடி விவாத்தைப் பயந்தவர்கள் எங்களுக்கு நேரடி விவாதமெல்லாம் சரிப்பட்டு வராது அதில் எங்களுக்குத் திறமை இல்லை, நாங்கள் எழுத்து விவாதத்துக்குத் தயார் என்று கூறியவர்கள் இப்போது நாங்கள் விவாதிக்க தயார் ஆனால் நீங்கள் கல்லெரிவீர்கள் என்ற புதிய புலம்பலுடன் ஒரு இடுகை இட்டுள்ளனர்.



Isa Koran said:
அருமையான இஸ்லாமியர் கிறிஸ்தவன் பார்வை தள நண்பரே, "நீங்கள் கல்லெரிவீர்கள்" என்று நான் சொன்னது ஒன்றும் புதியதாக நான் சொன்னதில்லை. நீங்கள் உங்கள் பதிலில் நான்காவது பாயிண்டை கொஞ்சம் பார்த்தால் உங்களுக்கு நன்றாக புரியும், அதாவது, முஸ்லீம்கள் கல்லெரிவார்கள் என்பதை நான் ஆரம்பமுதலே சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.


Quote:
4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? ", அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்" என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.

Source: http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&t=654&view=next





Quote:
ChristianPaarvai said:

இவர்கள் ஆதாரமில்லாமல் எழுதிய ஒவ்வொன்றுக்கும் இன்று முஸ்லிம்கள் பதில் எழுதி வருகிறார்கள். எதையேனும் எழுதினால் முஸ்லிம்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருந்தவர்களின் வயிற்றில் புளிளைக் கரைத்தது போல் இன்று பல சிந்தனையாளர்கயும் அறிவு ஜீவிகளும் இவர்களுக்கு பதிலளித்து வருகிறார்கள்.
பல தளங்களிலிருந்தும் தங்களுக்கு அடி விழுவதை சமாளிக்க முடியாமல் இப்போது புதிய கதை கூறி வருகின்றனர். நேரடி விவாதத்துக்கு சாக்குபோக்கு கூறி எழுத்து விவாதம் செய்கிறோம் என்று கூறியவர்கள் அதிலேனும் உண்மையாக இருக்கிறார்களா?

இஸ்லாம் கல்வி தளத்தில் வெளியான எம்.எம். அக்பர் அவர்களின் திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் மொத்தம் ஆறு தொடர்கள் வெளியாகி இருந்தன. அதில் பைபிளில் காணப்படும் முரண்பாடுகள், இறைகொள்கையில் உள்ள குழப்பங்கள், வராற்றுத் திரிபுகள், இறைதூதர்கள் மீதுள்ள இட்டுக் கட்டுதல்கள், முரண்பட்ட வரலாற்றுத் தகவல்கள், மற்றும் திருக்குர்ஆன் அதிலிருந்து எவ்வளவு வேறுபட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக ஆதாரத்துடன் விளக்கப்பட்டது. அதில் வைக்கப்பட்ட ஒவ்வொரு வாதங்களுக்கும் பதிலளித்தார்களா என்றால் இல்லை. ஏதோ சிலவற்றுக்கு மட்டும் பதில் எழுதியவர்கள் சம்மந்தமில்லாமல் உளறியது தான் மிச்சம். எங்கள் பைபிளில் தவறு இருந்தால் உங்கள் குர்ஆனிலும் தவறு உள்ளது என்று சிறுபிள்ளைத் தனமாக பதிலளித்ததுதான் மிச்சம்.

ஏகத்துவம் வலைப்பதிவாளர் கிறிஸ்தவம் தொடர்பாக எழுதிப் பதிவு செய்த கட்டுரைகளுக்கு தெளிவாக பதில் அளித்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. இன்னும் இதுதான் இஸ்லாம் சுவனப் பாதை போன்று அநேகம் தளங்களில் கிறிஸ்தவம் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.




Isa Koran Said:

அருமை நண்பரே, இஸ்லாமுக்கு பதில் சொல்வதற்கு நாங்கள் சிலரே உள்ளோம், ஆனால், நீங்கள் அதிகமாக இருக்கிறீர்கள். முக்கியமாக நாங்கள் ஒரு சிலரே போதும் இஸ்லாமுக்கு பதில் சொல்வதற்கு. எனவே, கொஞ்சம் காலதாமதம் ஆகும்.

பொய்யையும், புரட்டுக்களையும் மற்ற தளங்களிலிருந்து எடுத்து எழுதி, மூல தொடுப்பையும் கொடுக்காமல் எழுதும் ஆயிரம் பேர் இருந்தாலும், உண்மையாக எழுதும் ஒரு சிலரே போதும், உங்கள் இஸ்லாமுக்கு பதில் அளிப்பதற்கு! அன்று கோலியாத்தை கொள்வதற்கு ஒரு சின்னவன் தாவீது போதும். பொருத்திருங்கள், ஏன் அவசரப்படுகிறீர்கள். நீங்களும் இருக்கப்போகிறீர்கள், உங்கள் கட்டுரைகளும் இருக்கப்போகிறது, பதில் அளிக்காமலா போவேன்.


என்னவோ பதில் அளித்துவிட்டோம் என்றுச் சொல்லிக்கொள்கிறீர்கள், மனசாட்சி என்று ஒன்று இருந்தால், ஈஸா குர்‍ஆன் தளத்தில் உள்ள கட்டுரைகளுக்கு எத்தனை கட்டுரைகளுக்கு பதில் அளித்துள்ளீர்கள் சொல்லுங்கள். ஆனால், நான் சொல்கிறேன், நிச்சயமாக உங்கள் எல்லா பொய்களுக்கும் நான் பதிலைச் சொல்வேன்.

நான் என்ன உங்களைப்போல எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதமுடியுமா? ஆதாரம் இல்லாமல் எழுதமுடியுமா? அல்லது பொய்யான படங்களை தயாரித்து வெளியிட்டு இது தான் உண்மை என்று எழுதமுடியுமா? ஒரு கட்டுரை எழுத அதிக நேரமாகும், ஒருவேளை மொழிபெயர்க்கும் கட்டுரை என்றால் கொஞ்சம் சீக்கிரமாக ஆகலாம், காத்திருங்கள். கடந்த ஆண்டுலிருந்து, இதுவரை பல தளங்களை நான் பார்த்துவிட்டேன், வீராவேசமாக எழுதுவார்கள், ஒரு தில்லுமுல்லு செய்து வாயை மூடிக்கொள்வார்கள். எங்களுக்குத் தெரியாத உங்கள் நேர்மையும், நீதியும்.


Quote:
ChristianPaarvai said:
முஹம்மது நபி (ஸல்) பைபிளை விமர்சித்தார்களாம்!

பைபிள் என்ற வார்த்தையே குர்ஆனில் இல்லை. மாறாக இறைவனால் இறக்கப்பட்ட வேதம் குர்ஆன். வேதத்தில் கையூடல் செய்த யூத கிறித்தவர்களை குர்ஆன் விமர்சிக்கவே செய்கிறது. தான் அருளிய வேதத்தை தங்கள் மன இச்சைக்கு ஏற்ப மாற்றியவர்களை விமர்சிப்பது அல்லாஹ்வின் அதிகாரம்.



Isa Koran Said:
பைபிளை விமர்சிக்க உங்கள் நபிக்கு உரிமை இருக்கும் போது, உங்கள் குர்‍ஆனை விமர்சிக்க உலக மக்களுக்கு ஏன் உரிமை இல்லை?

உங்கள் முகமது என்ன உத்தம புருஷரா? அவ‌ரை ந‌பி என்று நீங்க‌ள் ந‌ம்புங்க‌ள், அது உங்க‌ள் விருப்ப‌ம், அதை நாங்க‌ள் ந‌ம்ப‌வேண்டிய‌ அவ‌சிய‌மென்ன‌?

தன் வேதத்தை மாற்றிவிட்டார்கள் என்று புலம்புவதற்கு உங்கள் இறைவனுக்கு நெருடலாக தெரியவில்லையா?

இறைவனால் இறக்கப்பட்ட வேதம் என்று நீங்கள் நம்புகிறீர்கள், அவ்வளவு தான் அது உண்மையல்ல.

முகமது தன் விருப்பத்திற்கு சொன்ன வசனங்களை குர்‍ஆன் என்று 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்.

ஆயிரம் பேர் தன்னை நபி என்று சொல்லிக்கொண்டு வருவார்கள், அவர்கள், சொல்வதெல்லாம் உலக மக்கள் வேதம் என்று ஏற்றுக்கொள்ளவேண்டுமா என்ன? சொல்லுங்கள்?

இதைப் பற்றி ஏற்கனவே, நான் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன், அதை அப்படியே தருகிறேன். நீங்களே சொல்லுங்கள், ரஷித் காலிபா என்பவர் குர்‍ஆன் வசனத்தை மாற்றி தன் பெயரை எழுதிக்கொண்டார், ஏன் அவரை நீங்கள் நம்பவில்லை? அதேபோலத்தான் வந்தவன் எல்லாம் தன்னை நபி என்று சொல்லிக்கொண்டு வந்தால், உலகம் அப்படியே ஏற்றுக்கொள்ளாது.

எப்படி முகமது தன்னை கடைசி நபி என்று சொல்லிவிட்டுச் சென்றாரோ, அதே போல, இயேசுவும் "சில நரிகள் ஆட்டுக்குட்டியின் தோலைப்போர்த்திக் கொண்டு கள்ள நபிகளாக வருவார்கள், அவர்களை நம்பவேண்டாம்" என்று முகமதுவிற்கு முன்பு 6 நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டுச் சென்றுள்ளார்.

Quote:
ஈஸா குர்-ஆன் பதில்:

நபி (தீர்க்கதரிசி) என்று சொல்லிக்கொண்டு வருகிற எல்லாரையும் ஏற்றுக்கொள்ள முடியுமா? பைபிள் தெளிவாகச் சொல்கிறது, இயேசுவிற்கு அடுத்து, பரிசுத்த ஆவியானவருக்கு அடுத்து வேறு யாரும் வரவேண்டிய அவசியமில்லை என்று, இப்படி இருக்க கிறிஸ்தவர்கள் எப்படி முகமதுவை நம்ப முடியும்? சொல்லுங்கள்.

"மெஹ்தி" Mehdi

ஷிய முஸ்லீம்கள் "மெஹ்தி" Mehdi என்ற ஒரு "நபி" அல்லது ஒருவர் வருவார், அவர் வந்து உலகத்தை மாற்றுவார் என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். அவரை சுன்னி முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வதில்லை. இவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? இவரைப் பற்றி சில ஹதீஸ்கள் உள்ளது என்று விகீபீடியா சொல்கிறது (http://en.wikipedia.org/wiki/Mahdi). எனவே, ஒருவர் நபி என்று வந்தால், எல்லாரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை.

வந்தவர் உண்மையாக இறைவன் அனுப்பியவராக இருந்து, மக்கள் அவரை நம்பவில்லையானால், அவர்களுக்கு இறைவன் அதற்கேற்ற கூலி கொடுப்பான் என்பதை மட்டும் நான் நம்புகிறேன். கிறிஸ்தவர்களுக்கு பைபிளில் விவரமாக எல்லாம் சொன்னதால்( ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை), நாங்கள் நம்புவதில்லை, அவ்வளவு தான்.


ரஷீத் காலிஃபா:

ரஷீத் என்று ஒருவர் கூட ஒரு நபி என்று சொல்லிக்கொண்டு வந்தார் (November 19, 1935 – January 31, 1990) , குர்-ஆனில் உள்ள "Numerical Miracle" என்று சொல்லிக்கொண்டு ஒரு கலக்கு கலக்கினார். தான் மொழி பெயர்த்த குர்-ஆனில் "தன் பெயரை" கூட சேர்த்துக்கொண்டார்.

தன்னிடம் அல்லா பேசுவதாகச் சொன்னார், அவரையும் எத்தனையோ பேர் அங்கீகரித்தனர். தான் சொல்லும் இஸ்லாம் தான் உண்மையானது, இப்போது உள்ளது உண்மையானது இல்லை என்றுச் சொன்னார்.


இவரை ஒரு பெரிய "அல்லாவின் சேவகன்" என்று அஹமத் தீதத் (Ahmad Deedat) என்ற இஸ்லாமிய ஊழியர் கூட புகழ்ந்தார். இவரின் Numerical Miracle பற்றி மிகவும் அதிகமாக அஹமத் தீதத் புகழ்ந்தார்.

படிக்கவும் இங்கே: http://en.wikipedia.org/wiki/Rashad_Khalifa

Quote: from Wikipedia
Khalifa was initially well-received throughout the Muslim world upon his mathematical discoveries embedded in the text of the Quran. Prominent Shaykh Ahmed Deedat referred to him as a "great servant" of God in his book based on Khalifa's discoveries "Al-Qur'an: The Ultimate Miracle


1991ல் அவரை கொலை செய்தார்கள். இவரைப் பற்றி உங்கள் கருத்து என்ன? இவரை அஹமத் தீதத் புகழ்ந்துள்ளாரே. இவரை நம்பும்படி நான் சொல்லவில்லை, இப்படி பல பேர் வருவார்கள் என்றுச் சொல்கிறேன். ( ஒரு தமிழ் பாட்டு: யாரோ வருவார், யாரோ போவார், வருவதும் போவதும் தெரியாது..)

ரஷீத் அவர்களின் குர்-ஆன் மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம்: http://19.org/km/RK/1

கீழ் கண்ட வசனங்களில் அவர் தன்னுடைய பெயரை எழுதிக்கொண்டு குர்-ஆனை மொழி பெயர்த்தார். இவைகள் முகமதுவிற்கு என்று எங்களுக்குத் தெரியும்.
Quote:
Quran 13:30

We have sent you (O Rashad) to this community, just as we did for other communities in the past. You shall recite to them what we reveal to you, for they have disbelieved in the Most Gracious. Say, "He is my Lord. There is no god except He. I put my trust in Him alone; to Him is my ultimate destiny."

Quran 13:38

We have sent messengers before you (O Rashad), and we made them husbands with wives and children. No messenger can produce a miracle without GOD's authorization, and in accordance with a specific, predetermined time.

Quran 25:56

We have sent you (Rashad)as a deliverer of good news, as well as a warner.

Quran 34:28

We have sent you (O Rashad) to all the people, a bearer of good news, as well as a warner, but most people do not know.

Quran 34:46

Say, "I ask you to do one thing: Devote yourselves to GOD, in pairs or as individuals, then reflect. Your friend (Rashad) is not crazy. He is a manifest warner to you, just before the advent of a terrible retribution."

Quran 36:3

Most assuredly, you (Rashad) are one of the messengers.

Quran 42:24

Are they saying, "He (Rashad) has fabricated lies about GOD!"? If GOD willed, He could have sealed your mind, but GOD erases the falsehood and affirms the truth with His words. He is fully aware of the innermost thoughts.

Quran 81:22

Your friend (Rashad) is not crazy.


இப்படி சிலர் இருக்கிறார்கள், இவரை நபி என்று நாங்கள் (ஏன், நீங்கள் கூட) ஏற்றுக்கொள்ள முடியுமா? சொல்லுங்கள்.


கிறிஸ்தவத்திற்கு வெளியே ஒருவர் "நபி என்று" சொல்லிக்கொண்டு வந்தால், அவர்களை கிறிஸ்தவர்கள் நிராகரிக்கின்றனர் என்று குற்றம்சாட்டும் இவர்கள், இஸ்லாமுக்குள்ளேயே, அதன் பெயரை வைத்துக்கொண்டே "நபி என்று" வந்த மற்றும் வருவார்கள் என்று நம்பப்படுகின்ற சிலரைப் (மெஹ்தி என்பவரும், ரஷீத காலிபா ) பற்றி இவர்களின் கருத்து என்ன என்று தெரிந்தால் தானே, நாங்களும் ஏன் முகமதுவை நிராகரிக்கிறோம் என்று சொல்வதற்கு ஏதுவாகும்?

http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=3273





Quote:
ChristianPaarvai said:
குர்ஆன் இறைவேதம் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வருகிறோம். முந்தைய வேதங்களைத் தழுவி யூத கிறித்தவப் புரோகிதர்களால் எழுதப்பட்ட பைபிளில் அதில் காணப்படும் முரண்பாடுகளும் கட்டுக் கதைகளும், ஆபாசங்களும், அறிவுக்கு ஒவ்வாத கதைகளும், அறிவியலுக்கு முரண்பட்ட விஷயங்களும் குர்ஆனின் இந்த குற்றச்சாட்டை நிரூபிப்பதாக உள்ளது. உங்களிடம் உண்மை இருந்தால் அதற்கு மறுப்பு எழுதுங்களேன்.




Isa Koran said:

கண்டிப்பாக சகோதரரே கண்டிப்பாக, நான் உங்கள் கேள்விகளுக்கு எல்லாம் பதிலை தமிழிலேயே தருவேன். அதே நேரத்தில் உங்கள் குர்‍ஆனில் உள்ள பிழைகள், முரண்பாடுகள், தில்லுமுல்லுகள், புராண புரட்டுக்கதைகள் போன்றவற்றிற்கும் நீங்களும் பதில் தாருங்கள், உங்களால் முடிந்தால். கட்டுரைகளை படிக்கும் வாசகர்கள் முடிவு எடுக்கட்டும், இஸ்லாம் அமைதியான மார்க்கமா? அல்லது மக்களின் இரத்தத்தில் தோய்த்து அதன் அஸ்திபாரத்தில் முகமது கட்டியெழுப்பிய மார்க்கமா? என்று. எனவே, நீங்கள் எழுதுங்கள், நாங்களும் எழுதுகிறோம்.




Quote:
ChristianPaarvai said:
முஸ்லிம் பெயரை ஏன் வைத்துள்ளீர்கள் என்று கேட்டதற்கு முஸ்லிம் பெயர் வைத்தாலும் கிறித்தவனாகத் தான் அடையாளம் காட்டுகிறார்களாம். இது தான் அவல நிலை. பெயர் வைத்து விட்டீர்கள் மாற்றுவதற்கு மனமில்லை. உமர் என்ற பெயர்வைத்ததன் நோக்கம் என்ன? சற்று விளக்குவீர்களா? ஈஸா குர்ஆன் என்ற பெயருக்கு செப்டம்பர் 2007 அன்றே விளக்கம் அளித்தார்களாம். அந்த விளக்கத்துக்கு முரண்பட்டு சமீபத்தில் அனனானிமசுக்கு பதிலளித்ததை தந்திரமாக மறைத்து விட்டனர்.



Isa Koran Said:

எது சொன்னாலும் நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள், என்னத்தைச் சொல்ல, அதாவது மூடனை உலக்கையில் நொய்யோடு புடைத்தாலும்,அவன் மூடத்தனம் அவனைவிட்டு போகாதம். அதுபோலத் தான் உங்கள் நிலையும். நான் எதையும் மறைக்காமல் சொல்கிறேன், ஆனால், ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள். ஆனால்,

ஒருவர் தன்னை நபி என்றுச் சொன்னால் நம்புவீர்கள்

உங்கள் நபி பேத்தி வயதில் உள்ள 6 வயது சிறுமியை திருமணம் செய்துக்கொண்டாலும், அது சரிதான் என்றுச் சொல்வீர்கள்.

தன் மருமகளை திருமணம் செய்துக்கொண்டாலும், அதுவும் சரி என்றுச் சொல்வீர்கள்.

போர் செய்து நாட்டை பிடித்து, கிடைத்த பெண்ணை அன்றே கற்பழித்தாலும், அது சரியானது என்பீர்கள்.

சொர்க்கத்தில் அனேக பெண்களை அல்லா தயார் நிலையில் வைத்துள்ளார் என்றால், அதை நம்புவீர்கள்.

நாங்கள் சொல்வதை நீங்கள் நம்புவீர்களா?

மற்றபடி தந்திரமாக மறைப்பது எனக்கு வழக்கமில்லை, உங்களுக்கு அது வழக்கமாக இருக்கும், அதனால், தான் உண்மை வெளிப்பட்டு விடும் என்று தெரிந்து பல பொய்களை சொல்லி, எழுதி வருகிறீர்கள். இதில் வேறு ஆதாரமும், மூல தொடுப்புக்களையும் தருவதும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம், கடந்த ஒருவருடமாக, உங்கள் பொய்கள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக்கொண்டு இருக்கிறது.



Quote:
ChristianPaarvai said:

கிறிஸ்தவம் பார்வை: கிறிஸ்தவம் பார்வை என்பது கிறிஸ்தவ பெயர் என்று கருதவில்லை. கிறிஸ்தவத்தின் உண்மை நிலையை படம்பிடித்துக் காட்டவே இப்படி பெயர் வைக்கப்பட்டுள்ளது. பைபிள் என்றோ, ஜேம்ஸ் என்றோ, ஜோசப் என்றோ கிறித்தவப் பெயர்களை நாங்கள் வைக்க மாட்டோம். அந்த அவல நிலை எங்களுக்கு இல்லை. அனானிமசுகள் முஸ்லிமா கிறித்தவரா என்பது யாருக்கும் தெரியாது. எனவே அனானிமசுகளை இங்கே இழுக்காதீர்கள்.


Isa Koran Said:

நீங்கள் எது கருதினாலும், உலகம் அதற்கு ஆமோதம் தரவேண்டும், ஆனால், நாங்கள் கருதுவது மட்டும் உங்களுக்கு பொய்யாக தெரியும்? நல்லா இருக்கு உங்கள் கதை.

அனானிமஸ் கிறிஸ்தவரா முஸ்லீமா என்று தெரியாதா உங்களுக்கு? நாங்கள் என்ன காதில் பூ வைத்துக்கொண்டா இருக்கிறோம். கிறிஸ்தவர் போல பெயர் வைத்துக்கொண்டு எனக்கு பின்னூட்டம் இடுவது, என்னவோ கிறிஸ்தவத்தை தான் தான் காப்பாற்றுவது போல எனக்கு பின்னூட்டம் இடுவது போன்ற இஸ்லாமிய தந்திரங்கள் எல்லாம் எல்லாருக்கும் தெரியும். உங்கள் நபிக்கு மட்டும் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதம் மீது நம்பி தன் மத வியாபாரத்தை நடத்தும் அவல நிலை இருந்தது.





Quote:
ChristianPaarvai said:

ஏன் லிங்க் கொடுப்பதில்லை?

உங்கள் விமர்சனங்களுக்கு நாங்கள் ஆதாரப் பூர்வமாக மறுப்பு அளித்து வருகிறோம். அவ்வாறு மறுப்பு எழுதும் போது எது சம்மந்தமாக நீங்கள் எழுதியுள்ளீர்களோ அதனை மேற்கோள் காட்டியும் வருகிறோம். உங்களைப் போன்று சம்மந்தமில்லாமல் தெளிவற்று உளறுவதில்லை. மட்டுமல்ல. இது அவசர உலகம் பக்கம் பக்கமாக படித்துக்கொண்டிருக்க யாரும் விரும்புவதில்லை. மேலும் லிங்க் கொடுக்கக் கூடிய அளவுக்கு தரம் வாய்ந்ததாக உங்கள் தளங்களை நாங்கள் கருதவில்லை. உங்களை நாங்கள் ஒரு பொருட்டாகவும் கருதவில்லை. எங்கள் கட்டுரைகளுக்கு ஆதாரப் பூர்வமாக மறுப்பு எழுதாமல் சம்மந்தமில்லாததையும் தெளிவற்ற விஷயங்களையும் எழுதும் உங்கள் பக்கங்களுக்கு நாங்கள் ஏன் லிங்க கொடுக்க வேண்டும்?




Isa Koran Said:

அதைத் தான் நானும் கேட்கிறேன், நான் எழுதிய எந்த வரிகளுக்கு நீங்கள் மறுப்பு எழுதுகிறீர்களோ, அந்த வரிகள் எந்த கட்டுரையில் இருக்கிறது என்றுச் சொல்லி, தொடுப்பு கொடுக்கும் குறைந்த பட்ச இங்கீதம் கூட உங்களுக்கு இல்லாமல் போவதைக் கண்டு தமிழ் இணைய உலகம், ஆச்சரியத்துடன் இஸ்லாமியர்களை பார்த்துக்கொண்டு இருக்கிறது.

சரி எப்படியோ, எங்கள் கட்டுரையைக் கண்டு நீங்கள் பயந்தால் சரி. வெளிச்சத்தைக் கண்டால் இருளுக்கு பயம் தானே அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள்.

எங்கள் கட்டுரைகள் தரம் வாய்ந்ததாக இல்லாமல் இருந்தால், பின் ஏன் நாங்கள் எழுதுகின்ற ஒரு சில வரிகளுக்கு மட்டும் பதில் கொடுத்தே தீரவேண்டும் என்று ஏதோதோ எழுதிக்கொண்டு, உங்கள் நேரத்தை வீணாக்குகிறீர்கள்.

பாவம் நீங்கள், எங்களை ஒரு பொருட்டாக கருதவில்லையானால், ஏன் என் வரிகளுக்கு வீணாக பதில் எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள்.

எங்களை ஒரு பொருட்டாக கருதாத நீங்கள், ஏன் போல அனேக தளங்களை எங்களுக்கு பதில் சொல்ல அமைத்து வருகிறீர்கள்.

இத்தனை தளங்கள் இருப்பதும், எங்களுக்கு பதில் என்றுச் சொல்லிக்கொண்டு, உங்கள் நபி பற்றி பெருமையாக எழுதிக்கொண்டு இருப்பதும், நாங்கள் சொல்வது இஸ்லாமுக்கு ஒரு மரண அடியாக மாறிவிடும் என்று பயந்துத் தானே?







Quote:
ChristianPaarvai said:
எது கோழைத்தனம்?

நேரடி விவாதத்துக்கு அழைத்த போது நீங்கள் என்ன காரணம் கூறினீர்கள்?

//1. நான் ஒரு முழு நேர ஊழியன் கிடையாது, வாரம் ஒரு நாள் எனக்கு கிடைக்கும் ஒரு சில மணித்துளிகளை நான் என் கட்டுரைகளுக்கு பயன்படுத்துகிறேன். எனவே, மேடை விவாதத்திற்கு என்னால் வரமுடியாது.

2. மேடை விவாதத்தில் "முஸ்லீம்கள்" முன்வைக்கும் ஆதாரங்கள் உணமையா பொய்யா? என்று என்னால் கண்டுபிடிக்க முடியாது. இதுவே எழுத்து விவாதமாக‌ இருந்தால், எனக்கு அதிக நேரமிருக்கும் அந்த நேரத்தில் என்னால் சில விவரங்களை கண்டுபிடிக்கமுடியும்.

3. மேடை விவாதத்தில் விவாதிக்கும் அளவிற்கு பேச்சாற்றல் பெற்றவன் அல்ல நான். அவ்வளவு அறிவு கூட எனக்கு இல்லை. மேடை பேச்சுக்கு அனுபவம் அதிகம் வேண்டும். அது எனக்கு இல்லை. எனவே, எழுத்து வடிவ விவாதமே எனக்கு சரியானது.

4. மேடையில் பேசும் போது, என் மீது ஒருவன் கல்லெடுத்து எரிவான், எனக்கு காயம் உண்டாகும். அதற்கு உங்கள் பதில் என்ன இருக்கும்? ", அவனுக்கு மார்க்க அறிவு கிடையாது, அதனால் தான் உன் மீது கல்லெரிந்தான்" என்று சொல்லி தப்பித்துக்கொள்வீர்கள்.

5. கடைசியாக இஸ்லாம் ‍கிறிஸ்தவ விவாதம் என்பது ஒரு நாளில் பல மணிகள் மேடையில் பேசினால் தீர்ந்துவிடும் விசயம் இல்லை. இதற்கு பல ஆதாரங்களை முன்வைக்கவேண்டும், பல விவரங்களை, புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்ளவேண்டும். மேடை விவாதத்தில் இதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காது. //

எனக்கு திறமை இல்லை, பேச்சாற்றல் இல்லை, நான் அறிவற்றவன் என்றெல்லாம் கூறியவர் இப்பாது ஐயோ எனக்கு பயமாக உள்ளது என்று அழுகிறார்.




Isa Koran Said:


அன்பான நண்பரே, கொஞ்சம் கண்களை திறந்துக்கொண்டு(நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால், அதை போட்டுக்கொண்டு), மேலே நான் கொடுத்த 5 பாயிண்டுகளில் நான்காவது பாயிண்டை படித்து தெரிந்துக் கொள்ளவும். ஒவ்வொரு முறையும் முழு இராமாயணத்தைச் சொல்லமுடியாது? யார் யாருக்கு என்ன எழுதவேண்டும் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கு இந்த வரிகள் போதும்.


Quote:
ChristianPaarvai said:
//நீங்கள் அமைதியானவர்களாக இருந்தால், உங்கள் முன் வந்து விவாதிக்க நாங்கள் தயார்? ஆனால், உங்களை யார் நம்புவார்கள்? மேடையில் விவாதம் என்றுச் சொல்லி, மேடையில் நீங்கள் பேசிக்கொண்டு இருப்பீர்கள், ஆனால், யாரோ ஒரு முஸ்லீம் எங்கள் மீது கல்லெரிவார், இது எங்களுக்கு வேண்டுமா? உங்களை நம்பலாம், ஆனால், எல்லா இஸ்லாமியர்களை நம்பமுடியாது?//

இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்துக்கும் மத்தியில் பல்வேறு விவாதங்கள் நடந்துள்ளன. நடக்கின்றன. கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் நடந்துள்ளன. யார் கல்லெரிந்தார்கள்? அஹ்மத் தீதாத், ஜாக்கிர் நாயக், எம். எம் அக்பர், ஜைனுல் ஆபிதீன் என பல்வேறு அறிஞர்கள் கிறித்தவ மிஷினரிகளிடம் பகிரங்க விவாதம் நடத்தியுள்ளனர். எந்த அசம்பாவிதமும் இதுவரை நடை பெறவில்லை. எனவே நீங்கள் அசம்பாவிதம் நடக்கும் என்று கூறி சாக்கு போக்கு கூறாதீர்கள். உங்கள் பாதுகாப்புக்குண்டான முழு உத்தரவாதத்தையும் தருகிறோம். எந்த அசம்பாவிதமும் நடக்காது என்று உறுதி கூறுகிறோம். இப்போது தயாரா?

source: http://christianpaarvai.blogspot.com/2008/07/blog-post_24.html



Isa Koran Said:
நான் ஒன்றும்,மேலோட்டமாக கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கவில்லை.

ஏன் முஸ்லீம் புர்கா அணிகிறார்கள்?
ஏன் மக்காவை நோக்கி நமாஜ் செய்கிறார்கள்?
ஏன் மூஸ்லீகள், 5 வேளை தொழுகிறார்கள்?

போன்ற சுலபமான கேள்விகளை கேட்பதில்லை. இப்படிப்பட்ட கேள்விகள் கேட்டால், மிகவும் சந்தோஷமாக நீங்கள் பதில் சொல்வீர்கள்.

குர்‍ஆனின் மற்றும் இஸ்லாமின் அஸ்திபாரங்கள் அதிரும் விதமான கேள்விகள் யாரும் கேட்பதில்லை. அப்படி கேட்பவர்களுக்கு நீங்கள் எப்படி பதில் தருகிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியும்.

எனவே, நேரடி விவாதம் என்பதை விட்டுவிட்டு, கட்டுரைகளினால் பதில்களைத் தருவீர்களானால், இணையத்தில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒர் அளவிற்காகவது மன ஆறுதலாக இருக்கும். இல்லையானால், சங்கு தான்.

ஒரு அறிவிப்பு: என்னிடம் எப்படி கேள்விகள் கேட்கப்படுமோ அப்படித் தான் என் பதில்களும் இருக்கும். எந்த வேகத்தில் பந்து வீசப்படுமோ அதே வேகத்தில் நானும் பந்தை வீசுவேன். எனவே, இந்த கட்டுரையில் கிறிஸ்தவன் பார்வை தளத்தின் வரிகளின் பிரதிபலிப்பே என் பதில்களும்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

2 கருத்துரைகள்:

Dr.AbuBenAdam August 26, 2008 at 7:51 AM  

Don't waste your time by answering this kind of Pests...

Islam- The Only Religion from the Almighty God.

Dr.AbuBenAdam

Unknown October 27, 2008 at 12:09 AM  

Muslims have to know first about god because they have no knowledge about god.Bible is a holy god's words and "THE AUTHOR IS THE HOLY SPIRT" and also they can't understand bible witout the holy spirt.This is the cause why the muslims cannot understand still now .One who obeys god's words is the true christan and also a true muslim who is going to face today's islam

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP