சமீபத்திய பதிவுகள்

கிளிநொச்சியை இலங்கை ராணுவம் சுற்றி வளைத்தது: 2 லட்சம் தமிழர்கள் வெளியேற்றம்

>> Sunday, October 5, 2008

கிளிநொச்சியை இலங்கை ராணுவம் சுற்றி வளைத்தது: 2 லட்சம் தமிழர்கள் வெளியேற்றம்

கொழும்பு, அக். 5-

கடந்த ஜனவரி மாதத்தில் பேர் நிறுத்தத்தை தன்னிச் சையாக வாபஸ் பெற்றுக் கொண்ட இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளி நொச்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

கிளி நொச்சியை பிடிக்க இலங்கை ராணுவத்தின் முப்படைகளும் தாக்குதல் நடத்திய படி முன்னேறி வருகின்றன.

கிளிநொச்சியை பிடிக்க இன்னும் 2 கி.மீ.தூரம் தான் செல்ல வேண்டும். கிளிநொச்சியை முற்றுகை யிட்டு விட்டோம். விரைவில் அதை பிடித்து விடுவோம் என்று இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறி உள்ளார். ராணுவத்துக்கு உதவியாக விமானகளும் விடுதலைப்புலிகளின் முகாம் கள், பதுங்கு குழிகள் மீது குண்டு வீசி வருகின்றன.

இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தி முன்னேறி வருவதால் பாதுகாப்பு கருதி 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கிளிநொச்சியில் இருந்து வெளியேறி அதை சுற்றி உள்ள 10 கி.மீ. தூரத் தில் உள்ள போர் இல்லா பிரதேசத்துக்கு சென்று விட்டனர்.

கிளிநொச்சியைஅவ்வளவு எளிதில் பிடித்து விட முடியாது, விடு தலைப்புலிகளின் உள் கட்டு மானங்களை, அவர் களின் போர் தந்திரம் ஆகியவை வெளியே தெரி வதில்லை என்று ராணுவ வல்லுனர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ராணுவத்தின் மீது அதிரடி தாக்குதல் நடத்த விடுத லைப்புலிகள் புதிய விïகம் வகுத்துள்ளனர்.
 

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP