ஆர்எஸ்எஸ் தலைவர் சுட்டுக்கொலை
>> Wednesday, November 5, 2008
ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படுபவர்களால் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.இதனால் ஒரிசாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் ஆர்எஸ்எஸ் தலைவர் தனு பிரதான். இவரை குமரிகாவ்ன் கிராமத்தில் வைத்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 3பேர் புதன்கிழமை மதியம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி கந்தமால் மாவட்டத்தில் விஎச்பி தலைவர் லட்சுமணனாந்த சரஸ்வதி மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். |
0 கருத்துரைகள்:
Post a Comment