சமீபத்திய பதிவுகள்

வான் புலிகளுக்கு விருது வழங்கினார் பிரபாகரன்

>> Wednesday, November 5, 2008

இலங்கை ராணுவத்திற்கு எதிராக விமான தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வான் படையைச் சேர்ந்தவர்களுக்கு நீலப்புலிகள் மற்றும் மறவர் விருதுகளை வழங்கி, பிரபாகரன் கவுரவித்தார்.

இலங்கையில் ராணுவ முகாம்கள் மீது வான் தாக்குதலில் சிறப்பாக செயல்பட்ட விடுதலைப் புலிகளுக்கும், கர்ணல் கிட்டு பீரங்கி படையின் போராளிகளுக்கும் விடுதலைப் புலிகளின் இயக்கத்தலைவர் பிரபாகரன் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

ரகசியஇடம் ஒன்றில் நேற்று நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில்,இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான கரும்புலி மாவீரர்களுக்கு பிரபாகரன் விளக்கேற்றி, மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து 3 முறைக்கு மேல் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்திய விடுதலைப் புலிகளின் வான் புலிகளுக்கு மறவர் விருதை அவர் வழங்கினார்.

மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வவுனியா, இலங்கை கூட்டுப் படை தளம் மீதான தாக்குதல் நடத்திய வான் புலிகளுக்கும் கர்ணல் கிட்டு பீரங்கிபடை போராளிகளுக்கும் பிரபாகரன் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், கட்டளை தளபதிகள், போராளிகள் உட்பட பலர் கலந்து கொண்டதாக புலிகள் ஆதரவு இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP