சமீபத்திய பதிவுகள்

ஊனமுள்ள குழந்த பேசும் மொழி-மருத்துவர்கள் அறிவிப்பு

>> Thursday, March 27, 2008

மருத்துவத்தில் சம்ஸ்கிருதம்-1

From mypic


நன்றி: தினமலர்.காம்

 

http://nallaseithi.blogspot.com/2008/03/1_19.html

StumbleUpon.com Read more...

இது உங்களுக்கு தெரியுமா?எவரெஸ்ட் மலையைவிட ஆழம் சென்ற மனிதன்

மனிதன் சென்ற ஆழம்

மரியானா ட்ரெஞ்ச் என்ற இடம் இந்தோனேஷியாவுற்கு வடக்கே சீனாவுக்கு கிழக்கே இருக்கிறது.

இந்த இடம்தான் உலகத்திலேயே மிகவும் ஆழமான இடம்.

இந்த இடம் இரண்டு டெக்டானிக் பிளேட்டுகள் சேரும் இடம். பிலிப்பைன் பிளேட்டும் பசிபிக் பிளேட்டும் சேரும் இந்த இடத்தின் ஆழம் 10,911 மீட்டர்கள். அதாவது 35798 அடிகள்.

இந்த குழி 1951இல் பிரிட்டிஷ் கப்பலான சாலஞ்சரால் சர்வே செய்யப்பட்டது. அதனால் இந்த ஆழத்துக்கு சாலஞ்சர் டீப் என்ற பெயரும் வழங்கப்படுகிறது.

கடல் மட்டத்திலிருந்து எவரெஸ்ட் மலை இருக்கும் உயரத்தை விட கடல் மட்டத்திலிருந்து இந்த ஆழம் அதிகமானது.

1960இல் அமெரிக்க கப்பற்படையின் பாத்திஸ்கேப் டிரிஸ்ட்டீ என்ற நீர்மூழ்கி மூலமாக அமெரிக்க நேவி லெப்டினண்ட் டான் வால்ஷ் என்பவரும் ஜாக் பிக்கார்ட் என்பவரும் இதற்குள் இறங்கினார்கள்.

இந்த நீர்மூழ்கி இதன் அடி ஆழத்துக்கு வரை சென்றது. அந்த அடி ஆழத்தில் மீன்களும் ஷ்ரிம்புகளும் இருப்பதை பார்த்தார்கள். அந்த ஆழத்தில் தரை தெளிவானதாகவும் அமுங்குவதாகவும் இருந்தது என்று இதில் சென்றவர்கள் கூறினார்கள்.


http://en.wikipedia.org/wiki/Mariana_Trench

StumbleUpon.com Read more...

டென்மார்க் பொருளை வாங்காதே.

 
கார்டூன் வரஞ்சதுக்கே இந்த கூப்பாடா? நல்ல மதம்
 
 

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த டென்மார்க் அரசைக் கண்டித்து நமது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக டென்மார்க் நாட்டின் அனைத்து பொருட்களையும் புறக்கனிப்போம்.

ஒவ்வொரு முஸ்லிமும் புறக்கனிக்க வேண்டிய டென்மார்க் பொருட்களின் விபரங்களைக் கண்டறிய கீழ்க்கானும் சுட்டியை சொடுக்குங்கள்

http://masdooka.googlepages.com/BOYCOTTDENMARK_.pps

 

StumbleUpon.com Read more...

PRAYER FOR INDIA (VIDEO)

StumbleUpon.com Read more...

ஜைனூல் ஆபிதீனுக்கு ஆப்பு வைக்கும் த.மு.மு.க

இதுல நமக்கென்ன  அப்படின்னு கேக்கரிங்களா?அடுத்த மதத்துக்காரன் தும்மற சவுண்டு கேட்டுட்டா உடனேயே இவனுங்க போடுற ஆர்ப்பாட்டம் தாங்காது.ஒன்றே குலம் ஒருவனே தேவன் அப்பிடின்னுட்டு சினிமா ஸ்டைலில் பாட்டு போட்டு வஹாபியிசம் பண்ண வந்துருவானுங்க. நீங்க எங்கய்யா ஒத்துமைய இருக்கீங்க,மத்தவனுங்கள  கொற  சொல்ல வந்துட்டாங்க.மானம்,ரோசம் இருக்கான்னு தெரியல 
 
 
 
 
 
 
 
 
 
 
 
மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!

மார்க்கத்தை விற்கும் மனநோயாளி!


மூஸா முபாரக் அலி, சென்னை-1

கேள்வி: களவாடப்பட்ட பத்திரி கையில் கேட்கப்பட்ட கேள்விகளுக் கெல்லாம் தமுமுகவினர் பதில் அüக்க இயலவில்லை என்று ஒருவர் சொன்னதுடன், தனிப்பட்ட முறையில் தமுமுக தலைமையைப் பொதுக்கூட்டத்திலும் சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார். அதனை அவர்கள் தங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் ஒüபரப்பியுள்ளார்கள். தமுமுக ஏன் இன்னும் இதற்கு பதில் அüக்காமல் மவுனம் சாதிக்கிறது.?

பதில்: பொதுக்கூட்டத்தில் மட்டும் அல்ல, தொலைக்காட்சியிலும் பகற் கொள்ளை அடிக்கப்பட்ட பத்திரிகை யிலும் தாதா கலாச்சாரத்தைப் பின்பற்றும் அவர் தமுமுக மீது அவதூறுகளை சுமத்தித் தமுமுகவிற்கு நன்மை சேர்த்து வருகிறார். அவரது பேச்சையும் எழுத்தை யும் இப்போதெல்லாம் மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஒரு மன நோயாüயின் முனகலாகவே அதனைப் பெரும்பாலும் மக்கள் கருதுகிறார்கள்.

3 மாதத்தில் தமுமுகவை அழித்துக் காட்டுவேன் என்று சபதம் செய்தவருக்கு இன்று தமுமுக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்கüலும், அனைத்து ஊர்க üலும், அனைத்து தரப்பினர் நெஞ்சங் கüலும் நீக்கமற நிறைந்து விட்டதைப் பார்த்துப் பொறுக்க இயலாமல் ஒரு மனநோயாளி போல் உளறிக் கொட்டு கிறார். பொதுமக்கüடம் வசூல் செய்யப் பட்ட பணம், தவ்ஹீத் பிரச்சாரம் செய்கிறோம் என்ற பெயரில் திரட்டப் பட்ட பணம் இறைவன் கூறுவது போல் (திருக்குர்ஆன் 49:12) சொந்த சகோதரர் கüன் மாமிசத்தை உண்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இறைவனிடம் வெகுமதி பெறும் நோக்கில் இந்தப் பேச்சு வியாபாரிக்கு நன்கொடை அüக்கும் சகோதரர்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும், நன்மைக்குப் பதில் பாவச் சுமையை துôக்குவதற்கு உங்கள் பணம் பயன்படுகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று தமுமுக நாம் குறிப்பிட்டது போல் அனைத்துத் தரப்பு மக்கள் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து விட்டது. மக்கள் பல வகையில் தங்கள் பாதுகாப்பு பேரியக்கமான தமுமுகவிற்கு தங்கள் அன்பைக் காட்டி வருகின்றார்கள். பெரும் தொழில் அதிபர்கள் முதல் சாதாரண சாமானிய மக்கள் வரை தமுமுகவிற்குத் தங்கள் அன்பை, ஆதரவை நல்கி வருகின்றார்கள்.

நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசிடம் எடுத்து உரைத்து அதனை நாம் எவ்வித பிரதி உபகாரமுமின்றி நிறை வேற்றி வருகிறோம். நமது சமுதாயத் தைச் சேர்ந்த பல அரசு ஊழியர்கüன் நியாயமான பிரச்சனையையும் எவ்வித பிரதி உபகாரமுமின்றி தீர்த்துவைத்து வருகிறோம். இவற்றில் எந்தவொரு முறைகேடும் நடைபெறவில்லை. மனநோயாளி குறிப்பிட்டதுபோல் பரங்கிப்பேட்டையிலும் எந்தவொரு ரகசிய சந்திப்பும் நடைபெறவில்லை. ஆஸ்திரேலியாவில் பணியாற்றும் ஒரு தலைசிறந்த மருத்துவர் இந்தச் சமுதாயம் பயன்பெறுவதற்காகப் பல்வேறு கல்வி நிறுவனங்களை முஸ்லிம்கள் அதிகமாக வாழும் தனது சொந்த ஊரான பரங்கிப்பேட்டையில் நடத்தி வருகிறார்.

தமுமுக தலைவர் 22 ஆண்டு காலம் அனுபவம் பெற்ற ஒரு கல்வியாளர். அதாவது அந்த மனநோயாü பேச்சாளரின் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வாத்தியார். ஆம் கண்ணியமான தொழில் என்று போற்றப் படுகின்ற கல்வியைப் பிறருக்குப் போதிக்கும் வாத்தியார் தொழில் செய்து வருபவர். ஏன் இந்த மனநோயாü கூட ஒருகாலத்தில் வாத்தியாராக இருந்தவர் தான்.. தமுமுக தலைவர் கடலுôர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகüல் பங்குகொள்ளச் சென்றபோது தனது பள்üக்கூடம், ஆசிரியர் பயிற்சிப் பள்ü, செவிலியர் பள்ü போன்றவற்றைப் பார்க்க வருமாறு ஆஸ்திரேலிய டாக்டர் அழைப்பு விடுத்தார். ஒரு கல்வியாளர் என்ற முறையில் தனது கல்வி நிலையங் களைப் பார்வையிடவும், ஆலோசனை களைப் பெறவும் ஆஸ்திரேலிய டாக்டர் தமுமுக தலைவரை அழைத்திருந்தார். இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்ட போது கடலுôர் மாவட்டத் தலைவர் ஜின்னா விடம் இந்த அழைப்பை ஏற்கலாமா என்று ஆலோசனைக் கேட்டு அவர் ஒப்புதல் அüத்த பிறகுதான் தமுமுக தலைவர் அங்கு சென்றார். தமுமுக தலைவர் ரகசியமாக அங்கு செல்ல வில்லை. அவருடன் கடலுôர் மாவட்டத் தலைவர் ஜின்னா தலைமையில் மாவட்ட நிர்வாகிகளும் சென்றனர். பூட்டிய அறையில் மன நோயாü பிரமுகர் உளறி வருவதுபோல் எவ்வித பேச்சு வார்த்தையும் நடைபெற வில்லை. பரங்கிப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் தலைவர் யூனுஸ் உட்பட தமுமுக நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் பேசினார்கள் விருந்து சாப்பிட்டார்கள். இதனைக் குற்றம் என்று சொல்பவரை மனநோயாü என்றுதானே சொல்ல வேண்டும்.

வக்ஃப் நிலம் எதுவும் தாரை வார்க்கப் படவில்லை என்பதை வக்ஃப் ஆவணங் களே பதில் சொல்லும். பரங்கிப்பேட்டை கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, இன்று தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களுக்கும் தமுமுக தலைவர் அழைக்கப்பட்டுச் சென்று வருகிறார். மனநோயாü பிரமுகர் வசதிக்காக அதனை இங்கே பட்டியலிடுகிறோம்.

கடந்த இரண்டு மாத இடைவெüயில் சென்னை புதுக்கல்லுôரி நிர்வாகமும் ஆசிரியர் சங்கமும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகப் பேசுவதற்கு தமுமுக தலைவரை அழைத்தார்கள். தமுமுக தலைவர் சென்று வந்தார். பிறகு ஒரு நாள் ஆசிரியர் சங்கம் தனியாகத் தங்கள் சங்க மாடத்திற்கு அழைத்து தமுமுக தலைவருடன் நமது கல்லுôரிகள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்துக் கலந்துரையாடினார்கள். அவருக்கு விருந்தும் அüத்தார்கள். குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1981 முதல் இயங்கி வரும் முஸ்லிம் கலைக் கல்லுôரி நிர்வாகம் தமுமுக தலைவரை அழைத்து, கல்லுôரி வளாகத்தில் அமைந்துள்ள பள்üவாசலில் ஜும்ஆ உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள். இதன் பிறகு தமுமுக தலைவருக்கும் குமரி மாவட்ட தமுமுக நிர்வாகிகளுக்கும் விருந்தும் அüத்தார்கள். இதன் பிறகு இக்கல்லுôரி வளாகத்தில் புதிதாகத் தொடங்கப் பட்டுள்ள பி.எட். கல்லுôரியை தமுமுக தலைவர் தொடங்கி வைத்தார். திருவிதாங் கோடு இஸ்லாமிய மாதிரிப் பள்ü நிர்வாகிகள் தங்கள் பள்üக்கு தமுமுக தலைவரை அழைத்துச் சென்று தங்கள் நிறுவனத்தைப் பார்வையிட வைத்து ஆலோசனைகளைப் பெற்றனர். பிறகு அப்பள்üக்கூடத்தின் ஆண்டு விழா வில் தமுமுக தலைவர் உரையாற்றினார்.


சேலத்திற்கு சமீபத்தில் தமுமுக தலைவர் சென்றிருந்த போது கே.வி. ஹாஜியார், தான் நடத்தும் கல்வி நிறுவனங்கள் குறித்து தமுமுக தலைவரிடம் எடுத்துரைத்தார், சேலத்தில் இயங்கும் தாருல்சலாம் பள்ü நிர்வாகி கள் தமுமுக தலைவரைத் தங்கள் பள்üக்கூடத்திற்கு அழைத்துச் சென்று ஆலோசனைகளைப் பெற்றார்கள். மேல்விஷாரம் அப்துல் ஹக்கீம் கல்லுôரி நிர்வாகமும் தமுமுக தலைவரை சீரத்துன் நபி சிறப்புரை ஆற்ற அழைத்தது. அப்போது அந்த கல்லுôரி நிர்வாகிகள் மற்றும் அதன் சார்பு நிறுவனமான பொறி யியல் கல்லுôரி நிர்வாகிகள் தமுமுக தலைவரிடம் கல்வி தொடர்பான பல ஆலோசனைகளைச் செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹுசைன் கல்லுôரி தமுமுக தலைவரை அழைத்து வட்டியில்லா வங்கி குறித்து வணிகவியல் துறை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்குமாறு கேட்டுக் கொண்டது. இந்த சந்தர்ப்பத்தில் கல்லுôரியை சுற்றிக்காட்டிப் பல ஆலோசனைகளை அக்கல்லுôரி நிர்வாகம் தமுமுக தலைவரிடமிருந்து பெற்றுக் கொண்டது. தேநீர் விருந்து அüத்தார்கள். இதுமட்டுமின்றி அதே டிசம்பர் மாதம் வேலுôரில் உள்ள புகழ்பெற்ற ஆக்சிலியம் கல்லுôரியில் மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற நாடு தழுவிய கருத்தரங்கத்தில் இஸ்லாமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் தமுமுக தலைவர் உரையாற்றினார். வேலுôர் மாவட்ட நிர்வாகிகளும் உடன் வந்தனர். அக்கல்லுôரியிலும் தேநீர் விருந்து தமுமுக நிர்வாகிகளுக்கு அüக்கப் பட்டது. விரைவில் இன்ஷாஅல்லாஹ் சென்னை பல்கலைக்கழகத்தில் வட்டி யில்லா வங்கிகள் குறித்த தனது ஆய்விற் காக டாக்டர் பட்டம் பெறவுள்ள தமுமுக தலைவர் தன்னை வாத்தியார் என்று அழைத்துக் கொள்வதைச் சிறப்புக்குரிய தகுதியாகவே கருதுகிறார். எம்.பி.ஏ. படித்தவர்கள் வணிக நிறுவனங்களுக்கு பணிக்குச் செல்வது இயல்பாக இருந்த காலக்கட்டத்தில் தானே விரும்பி தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழில் இந்த வாத்தியார் தொழில் என்பதை அறிந்தவர் கள் புரிந்தவர்கள் விளங்கிக் கொள்வார் கள். அந்தத் தொழிலை இளக்காரமாக விமர்சிப்பது அவர்கள் உள்ளத்தில் நிரம்பி வழியும் பொறாமையையும் வஞ்சக உணர்வையும் மக்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.

விருந்துக்கு அழைத்தால் செல்ல வேண்டும் என்பது தான் நபிவழி. யூதர்கள் அழைத்த விருந்திலும் நபிகள் நாயகம் (ஸல்) பங்குகொண்டார்கள். இதனைக் கொச்சைப்படுத்திப் பேசும் இவர்கள் உண்மையான தவ்ஹீத்வாதிகளா?

ஈரோட்டில் நமது சமுதாயத்தவர்கள் நடத்தும் தோல் தொழிற்சாலைகளுக்கு அதிகார வர்க்கம் தேவையில்லாத தொல்லைகளை அüத்து வந்தனர். இதனை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று அவரும் ஒரு உயர் அதிகாரியின் தலைமையில் இப்பிரச்ச னையை ஆய்வுசெய்து நமது மக்கüன் நலன் பாதுகாக்கப்பட வழிவகைச் செய்தார். எவ்வித பிரதி உபகாரமுமின்றி நாம் செய்த இந்த உதவியைக் குற்றம் என்று பேசுபவர் மனநோயாüயாகத் தானே இருக்க இயலும்.

இன்று தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் செயற்பாடுகள் திறந்த புத்தகமாக ஆக்கப்பட்டுள்ளது. ஈலிகவர்னன்ஸ் என்று சொல்லப்படும் மின் நிர்வாக முறை தமுமுக பொதுச் செயலாளர் தலைமை யில் வக்ஃப் வாரியத்தில் கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வருகிறது. வக்ஃப் வாரியத்தின் நிலத்தின் ஒரு அடி கூட சட்டத்திற்கு புறம்பாகப் பயன்பட அனுமதிக்கப்படவில்லை. முந்தைய காலங்களைவிட தற்போது வக்ஃப் வாரியத்தின் நிர்வாகம் தமுமுக பொதுச் செயலாளர் தலைமையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு ஜமாஅத் நிர்வாகிகளே சான்று வழங்குவார்கள். கடந்தகால நிர்வாகச் சீர்கேடுகளை யெல்லாம் சரிப்படுத்த ஓர் ஆண்டு காலம் பிடித்துள்ளது. இனி மேலும் சிறப்பாக வக்ப் வாரியம் இயங்க உள்ளது. இவ்வாறு வக்ப் நிர்வாகத்தில் சிறந்த முறையில் செல்வதைப் பார்த்து மனம்போன போக்கில் பேசினால் அதனைப் பைத்தியக் காரனின் முனகல் என்று தான் குறிப்பிட முடியும்.

தமுமுகவின் சமுதாயப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இரண்டு அவசர சிகிச்சை ஊர்திகளை அüத்தது போல் நமது சமுதாயப் பிரமுகர்களும் கார்களையும், ஏன் விமானங்களையும் கூடத் தமுமுகவிற்கு இன்ஷாஅல்லாஹ் வழங்குவார்கள். இதனைக் குற்றம் என்று பேசுபவரை மனநோயாளி என்றுதானே குறிப்பிட வேண்டும். தமுமுக பொதுச் செயலாளர் செய்துவரும் தொழிலையும் கொச்சைப்படுத்தியுள்ளார் அந்த மன நோயாளி. ஆனால் தமுமுக பொதுச் செயலாளர் ஹலாலான வியாபாரத்தை செய்துவருகிறார். ஆனால் மனநோயாளி யோ, தான் மார்க்கத்தைக் காட்டி பிழைப்பு நடத்தவில்லை என்று நெஞ்சு நிமிர்த்தி கூற முடியுமா?

ஊர்தோறும் இஸ்லாத்தை அறிமுகப் படுத்துகிறோம் என்ற சாக்கில், தான் எழுதிய புத்தகங்களை குர்ஆன் தமிழாக்கத்தை நிகழ்ச்சிக்கு அழைத்து வரப்படும் அனைவருக்கும் இலவசமாகத் தருகிறேன் என நிகழ்ச்சி நடத்துபவர் களிடமும் வெளிநாட்டில் உள்ளவர் களிடமும் கட்டாய வசூல் செய்து பணம் சம்பாதிப்பது இதில் வேதனையானது என்னவெனில் பாதி புத்தகங்களை வினியோகித்துவிட்டு, மீதியை மீண்டும் கடைசரக்கு ஆக்குவது, தான் நடத்தும் அமைப்பின் சார்பாக வெளியிடப்படும் துண்டுப் பிரசுரம் முதல் எல்லாவகை யான அச்சு வேலைகளையும் தனது மனைவியின் தம்பியிடம் மட்டுமே தந்து மைத்துனர்களுக்கும் சம்பாதிக்க வழி ஏற்படுத்திக் கொடுத்தவர்.

தொலைக்காட்சியில் முதலீடு செய் வதற்காக மக்கள் பணத்தைத் திரட்டி, போட்ட முதலை விட மும்மடங்கு அதிகத் தொகையை வெற்றி தொலைக் காட்சியின் அதிபர் தெய்வ முதல்வனை மிரட்டி உருட்டி வாங்கிக்கொண்டு முதலீடு செய்த ரசிகர் கூட்டத்திற்கு அற்பசொற்பத்தைக் கொடுத்து ஏமாற்றிய நூதன ஏமாற்றுக் காரர்களின் சிதம்பர ரகசியம் இன்னும் பல உண்டு.

இந்த அளவிற்கு அந்த அப்நார்மல் மனிதனின் உளறல்களுக்கு பதிலலிக்க பக்கத்தை வீணாக்கியதற்காக வருந்து கிறோம். எனவே அந்த அப்நார்மல் மனிதர் நம்மை ஏசினால், நாம் மக்கள் உள்ளத்தில் அதிகமாக இடம்பிடித்து விட்டோம் என்று பொருள். அதேசமயம் அவர் மவுனமாக இருந்துவிட்டாலோ நாம் பலவீனமடைந்து விட்டோம் என்று அர்த்தம்.

http://tmpolitics.blogspot.com/2008_03_01_archive.html

 

 

முன்னால் பதிவுகள்

 

சகோதரர் சக்கரியா ]

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_2310.html

 

 

இஸ்லாம் எனால் ஏமாற்றா?பேரை கெடுக்கும் முஸ்லீம்கள்

http://thamilislam.blogspot.com/2008/03/blog-post_6472.html

StumbleUpon.com Read more...

நாத்திகவாதியும்,ஆத்திகவாதியும்

நாத்திகவாதியான ஆசிரியர் ஒருவர் தன் வகுப்பறையில் இருந்த ஒரு கிறிஸ்தவ மாணவனைப் பார்த்து," நீ மரத்தை பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டார்.

"ஆம் பார்த்திருக்கிறேன்" என்று மாணவன் பதிலளித்தான்.

"சரி,சரி நீ சிறிய புல் பூண்டுகளைப் பார்த்திருக்கிறாயா?" என்று திரும்பவும் அவனிடம் கேள்வி கேட்டார்.

அவனும் " ஆம் பார்த்திருக்கிறேன்" என்று பார்த்திருக்கிறேன்" என்றான்.

" நீ கொஞ்சம் வெளியே சென்று வானத்தை பார்த்து வா" என்று அவனிடம் சொன்னவர், அவன் வெளியே சென்று திரும்பி வந்த பின்," நீ வானத்தை பார்த்தாயா" என்று கேட்டார்.

" ஆம், அது அங்கேயேதானே இருக்கிறது!" என்று அந்த மாணவன் பதிலளித்தான்.

சரி நீ இப்போது மீண்டுமொருமுறை வெளியே சென்று வானத்திலே கடவுள் தெரிகிறாரா? பார்! என்று அந்த நாத்திகண் கேட்டான்.

அவன் வெளியே சென்று பார்த்து," ஐயா என்னால் கடவுளைப் பார்க்க முடியவில்லை" என்று சொன்னான்.

"கடவுள் என்று ஒருவர் கிடையாது. அதனால் தான் உன்னால் அவரை பார்க்க முடிய வில்லை. என்று அந்த நாத்திகன் அவனைப் பார்த்து சொன்னான்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு சிறியப் பெண் எழுந்து அந்த மாணவனைப் பார்த்து, "நான் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்கலாமா?" என்று கேட்டாள். திரும்ப திரும்ப கேள்விகள் கேட்கப்படுவதால் சலிப்படைந்த அந்த மாணவன் வேண்டா வெறுப்பாக சரி என்று சொன்னான்.

நீங்கள் மரத்தை பார்த்தீர்களா?

ஆம்.

நீங்க புல் பூண்டுகளை பார்த்தீர்களா?

ஆம்

நீங்க இப்போது இந்த ( நாத்திக ) ஆசிரியரை பார்க்கிறீர்களா?

ஆம். பார்க்கிறேன்.

அப்படியானால் அவருடைய மூளையை உங்களால் பார்க்க முடிகிறதா?

இல்லை என்னால் பார்க்க முடியவில்லை.

அப்படியானால் அவருக்கு மூளை இல்லை என்று அர்த்தமா????
 

StumbleUpon.com Read more...

அனிமேஷன் வைரஸ்

StumbleUpon.com Read more...

இந்த வீடியோவை பார்த்து விட்டு இப்படி நம்ம சண்டை போட முடியுமான்ன்னு சொல்லுங்க

StumbleUpon.com Read more...

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்த இத கண்டிப்பா பாக்காம போகமாட்டீங்க

StumbleUpon.com Read more...

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20304193&format=html

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)

ஒரு விவாத கருத்தரங்கு

அபுஹாலில்: ஒரு யூதரோ அல்லது கிறிஸ்தவரோ தனது ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கும் ஒரு பழைய ஏற்பாட்டு வசனத்தை தேடி ஓடுவதில்லை. அதைப்போலத்தான் ஒரு இஸ்லாமியனும். ஸ்பென்ஸர் மேற்கோள் காட்டும் குர்ரான் வசனங்கள் சில பழைய ஏற்பாடு வசனங்களை விட அதிக கொடூரத்தை கொண்டிருக்கவில்லை. அத்தகைய வசனங்கள் இன்று அவற்றின் வரலாற்று பின்புலத்தை அறிந்துகொள்ளும் ஒரே ஆர்வத்தால் மட்டுமே படிக்கப்படுகின்றன என்றாலும் ஒசாமா போன்ற வெறியர்கள் (அத்தகையவர்கள் எங்குதான் இல்லை) இத்தகைய வசனங்களை தவறாக பயன்படுத்தலாம். அதிர்ஷ்டவசமாக பின் லாடன் போன்றவர்கள் ஒரு சிறிய மதவெறிக்கூட்டத்தை தவிர பெரிய அளவில் யாரையும் கவர்ந்துவிட இயலவில்லை. அவனுக்காக பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அவன் விடுத்த கோரிக்கை கூட பெரும்பான்மை இஸ்லாமிய உலகால் புறக்கணிக்கப்பட்டது.

ஸ்பென்ஸர்: ஆசாத் ...உண்மையிலேயே அதிர்ச்சிதான். முஸ்லீம்கள் குர்ரானாலும் ஹதீசாலும் தங்கள் வாழ்க்கையை நடத்தவில்லை என்பதை கேட்க எனக்கு அதிர்ச்சியாகத்தான் உள்ளது. ஆனால் எனக்கு இது ஏற்கனவே தெரியும். பெரும்பாலான முஸ்லீம்கள் அமைதியான வாழ்க்கை வாழ்வதால் இரத்தத்தையும் வன்முறையையும் கோரும் வசனங்களை அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதனை நான் அறிவேன். ஆனால் நாம் இப்போது விவாதிப்பது இஸ்லாம் அதன் தன் இயற்கையிலேயே ஒரு சுதந்திரமான கருத்து சுதந்திரமுடைய ஜனநாயக அமைப்பிற்கு ஒவ்வாத தன்மையுடன் உள்ளதா ? என்பதுதான். நான் 'ஆம் ' என நிறுவியுள்ளேன். அங்கொன்று இங்கொன்றாக பொறுக்கி எடுக்கப்பட்ட வசனங்களால் அல்ல, அதற்கு மாறாக வெகு நன்றாக பாரம்பரியச் செறிவுடன் விளக்கப்பட்ட ஒரு சித்தாந்தமாகவும் மரபாகவும் வன்முறைத்தன்மையுடைய ஜிகாத் நம்பிக்கையற்றோர் மீது விளங்குகிறது. நான் அறிவற்ற மூடனாக இருக்கலாம் ஆனால் இஸ்லாமிய உலகில் பயங்கரவாதம் வேரூன்றியுள்ள அளவு குறித்து நீங்கள் என் கண்ணில் மண் துெவும் அளவுக்கு நான் மடையனல்ல. பின் லேடன் இஸ்லாமிய உலகில் ஆதரவற்ற வெறியன் என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இந்தோனேசியாவின் ஜஃபார் உமர் தாலிப்பும் 10,000 கிறிஸ்தவர்களை கொன்று குவித்துள்ள லக்ஷர் ஜிகாத் அமைப்பும் அப்படியா ? 'வெற்றி அல்லது புனித மரணம் வரை ஜிகாத் ' என அறிவிக்கும் பல்லாயிரக்கணக்கோரை கொன்ற ஹமாஸும் அப்படியா ? ஆயுதங்களும் இராசாயன போருக்கான பாதுகாப்பு கவசங்களும் கண்டெடுக்கப்பட்ட ஷூ வெடிகுண்டு பயங்கரவாதியின் மசூதியான பின்ஸ்பரி பார்க் மசூதியை நாம் எந்த கணக்கில் சேர்ப்பது ?

உலகம் முழுவதும் பரவியிருக்கும் பயங்கரவாத அமைப்புகளான அபு நிதால், அபு சையப், அஹில் ஈ ஹதீஸ், அல் அகுசாபுனித போராளிகள் பாசறை, அல் காமா அல் இஸ்லாமியா, அல் இதிஹாத் அல் இஸ்லாமி, ஹிஸ்புல்லா, இஸ்லாமிக் ஜிகாத், ஜைஷ் ஏ முகமது, லக்ஷர் இ தொய்பா மற்றும் ஏனயவற்றை எல்லாம் எந்த கணக்கில் சேர்ப்பது ? அனைவருமே ஆதரவற்ற தனிப்பட்ட வெறியர்கள் ? அனைவருமே இஸ்லாமுக்காக உயிரை கொடுக்க இஸ்லாமை தவறாக புரிந்து கொண்டவர்களா ? என்ன சொல்லுகிறீர்கள் ?

அபுஹாலில்: நீங்கள் வரிசைப்படுத்திய அனைத்துமே பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்க அரசால் அறிவிக்கப்பட்டவை.ஆனால் அமெரிக்க அரசுக்கு அரபு மற்றும் இஸ்லாமிய அமைப்புகளால் செய்யப்படும் பயங்கரவாத செயல்கள் மட்டுமே கண்காணிக்க தக்கவை போலும். பயங்கரவாதத்தை பொறுத்த வரை என்னுடைய வரைமுறை, எந்த அப்பாவியையும் கொல்வதுதான். இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளுவோமானால், இஸ்ரேல், ஹமாஸ் இரண்டுமே பயங்கரவாதத்தில் தான் ஈடுபடுகின்றன. ஆனால் ஹமாசை விட இஸ்ரேல் அதிக உயிர்களை கொன்றுள்ளது. ஆனால் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களை கொல்வதற்கு யூத அடிப்படைவாத ஆதரவு இருந்த போதிலும் கூட அது யூத பயங்கரவாதம், என கருதப்படுவதில்லை. அதைப்போலவே ஐ.ஆர்.ஏ (ஐரிஷ் விடுதலை அமைப்பு) கொடூரமான பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டாலும் கூட அது கத்தோலிக்க பயங்கரவாதம் என அழைக்கப்படுவதில்லை. ஏன் அவையெல்லாம் வெறும் பயங்கரவாதம் என்று மட்டுமே மதப்பூச்சு இல்லாமல் அறியப்படுகின்றன ?

ஸ்பென்ஸர்: தாராளமாக ஆசாத். தாராளமாக அதை கத்தோலிக்க பயங்கரவாதம் என அழையுங்கள். பின்னர் கத்தோலிக்க பயங்கரவாதத்திற்கு ஐ.ஆர்.ஏக்கு அப்பால் பிறிதொரு உதாரணமும் தாருங்கள். ஐ.ஆர்.ஏயைக் கூட போப் கண்டிப்பதை காண்பீர்கள். ஆனால் இஸ்லாமை பொறுத்தவரையில் இஸ்லாமின் பெயரால் வன்முறை புரியும் அமைப்புகளின் ஒரு பெரும் வரிசையையே நான் இப்போதுதான் அடுக்கினேன். ஆனால் மதத்திரிபு வாதிகள் என தங்கள் சக மதத்தவர்களால் வேட்டையாடப்படும் சூஃபி வட்டத்துக்கு அப்பால் வன்முறையை கண்டிக்கும் ஒரு குரலை உங்களால் காட்டமுடியாது. ஜிகாத் எனும் பெயரில் நடத்தப்படும் வன்முறைகளை கண்டிக்கும் ஒரு ஆதாரபூர்வமான இஸ்லாமிய இறை அறிஞரை தாங்கள் காட்டும்படி நான் உங்களிடம் கேட்டு கொண்டேன். நீங்கள் அதை மட்டும் செய்யவில்லை ஏனெனில் அது உங்களால் முடியாது. ஜிகாத் என்பது நம்பிக்கையற்றோர் மீது தொடுக்கப்படும் போர். நம்பிக்கையற்றோர் முன் ஜிகாத் மூன்று தேர்ந்தெடுப்புகளை வைக்கிறது. அவை மரணம், மதமாற்றம் அல்லது அடிபணிதல். இது முகமது நபி காலம் முதல் இஸ்லாமிய மறையியலின் பகுதியாக அவர் இம்மூன்று வாய்ப்புகளை உருவாக்கிய (ஷாஹி முஸ்லீம் 4294) காலம் முதல் உள்ளது, ஒருவேளை என்றென்றும் இனியும் தொடரலாம்.

அபுஹாலில்: ஜிகாத் அழைப்பினை முஸ்லீம்கள் புறக்கணித்த உதாரணங்களையே நான் தருகிறேன். 1991 இல் சதாம் அமெரிக்காவின் மீது ஜிகாத் அறிவித்த போது இஸ்லாமிய மத அறிஞர்களும் பொதுமக்களும் அதனை புறக்கணித்தனர். பின் லாடனும் அவனது சக வெறியர்களும் அமெரிக்கா மீது வாரத்திற்கொரு முறை ஜிகாத் அறிவித்த போதிலும், அந்த ஜிகாத் அழைப்புகள் புறக்கணிக்கப் படுகின்றன. மிக முக்கியமான இஸ்லாமிய அறிஞர்கள், முஃப்திகள், காஜிகள் மற்றும் அரபுலக எழுத்தாளர்கள் செப்டம்பர் 11 க்கு பின் வெளியிட்ட அறிக்கை அல் குட்ஸ் மற்றும் அல் அராபி பத்திரிகைகளில் வெளியாயிற்று. வழக்கம் போல் அமெரிக்க ஊடகங்கள் அவற்றை புறக்கணித்தன. இந்த அறிக்கையில் பின்லாடன் இஸ்லாமிய உலகின் முன்வைத்த ஜிகாத்திற்கான சமய ரீதியிலான வாதங்கள் மறுக்கப்பட்டிருந்தன.

புனிதப் போருக்கான கிறிஸ்தவ ஆதரவினை பொறுத்தவரையில் பில்லி கிரஹாமை எடுத்துக்கொள்ளலாம். அவர் ஒரு யூத வெறுப்பாளர் என்பது நிக்சனின்

வெள்ளை மாளிகை ஒலி நாடாபதிவுகள் மூலம் தெளிவாகியுள்ளது. முஸ்லீம் வெறுப்பினை ஏற்றுக்கொள்ளும் இபின் வராக் யூத வெறுப்புக்காகவாவது பில்லி கிரஹாமை கண்டிக்கலாம். பில்லி கிரஹாமால் ஆசிர்வதிக்கப்படாத ஒரு அமெரிக்க போர் கூட கிடையாது. இப்போதும் கூட 63% அமெரிக்க மக்கள் ஈராக் போரினை ஆதரிக்கின்றனர். இஸ்ரேலில் 'அரேபியர்களுக்கு சாவு ' என்பது அங்குள்ள அரசியலில் முக்கிய பாடலாகவே மாறிவிட்டது.

ஸ்பென்ஸர்: ஆசாத் மீண்டும் நீங்கள் நாம் விவாதிக்கும் விஷயத்தை பற்றி பேச மறுத்தால் எப்படி ? நான் உங்களை இஸ்லாமியர்கள் ஒரு குறிப்பிட்ட ஜிகாத் அழைப்பினை புறக்கணித்தது குறித்தல்ல கேட்டது. அவர்கள் பின் லாடனின் ஜிகாத் அழைப்பினை அவன் ஒரு ஜிகாத் அழைப்பினை விடுக்கும் மத அதிகாரமற்றவன் என நினைத்து புறக்கணித்திருக்கலாம் அல்லது ஜிகாத்திற்கான சந்தர்ப்பம் இது அல்ல என நினைத்து அதனை புறக்கணித்திருக்கலாம். எனவே அவர்கள் ஒசாமாவின் ஜிகாத் அழைப்பினை புறக்கணித்தார்கள் என்பது நான் கேட்ட ஆதாரத்தை அளிக்கவில்லை. வன்முறையான ஜிகாத் எனும் தத்துவத்தை மறுப்பது என்பதே நான் கேட்டது. இஸ்லாமின் வன்முறை மரபினை அவர்கள் துகெ¢கி எறிந்துவிட்டார்களா இல்லையா என்பதே நான் கேட்டது. முகமது நபி கட்டளையிட்டது படி நம்பிக்கையற்றோரினை மதமாற்றுதல் அல்லது

கொல்லுதல் அல்லது ஒடுக்குதல் என்பதே இஸ்லாமின் பணிநோக்கம் என்பதனை அவர்கள் மறுதலித்து விட்டார்களா என்பதே என் கேள்வி. அவ்வாறு செய்த ஒரு முஸ்லீம் மதத்தலைவரை நீங்கள் இன்னமும் எனக்கு கூற முடியவில்லை என்பதே உண்மை.

நீங்கள் ஏன் கூறவில்லை எனில் உங்களால் முடியாது. ஒருவேளை வன்முறையான ஜிகாத் கோட்பாட்டை தர்க்க ரீதியில் காப்பாற்ற முயலுவோர் இருக்கலாம். ஆனால் ஒடுக்கப்படும்

சூஃபி வட்டத்துக்கு வெளியே குர்ரான் மற்றும் ஹதீஸில் அது நன்கு வேரூன்றி நிற்பதை காண்பீர்கள். அதைப்போலவே பில்லி கிரஹமை எடுத்துக்கொண்டாலும் கிறிஸ்தவத்தின் எந்த கோட்பாடும் ஒரு போரினை ஆசிர்வதிப்பதைஅல்லது நம்பிக்கையற்றோர் மீதானதோர் போரை இன்றியமையாததாக்கவில்லை. கிறிஸ்தவத்தில் அத்தகையதோர் கோட்பாடு ஒல்லை; இஸ்லாமில் உண்டு. நீங்கள் மிகச்சரியாக மிகத்தீவிரமாக சுட்டிக்காட்டியபடி கடவுள் கருணையால் பெரும்பான்மை முஸ்லீம்கள் இக்கோட்பாட்டினை முக்கிய ஒன்றாக எடுத்துக்கொள்ளவில்லை.

அயலுஷெ¢: இஸ்லாமின் ஒரே நோக்கம் முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவதுதான் என்கிற ரீதியில் இஸ்லாமை காட்டுவது மட்டுமே ஸ்பென்ஸரின் நோக்கம். இது அவரது திருத்தமுடியாத மடத்தனத்தை அல்லது இன்னமும் வருத்தம் தரக்கூடிய இஸ்லாமீதான வெறுப்பச்சத்தை காட்டுகிறது. இதற்கு அவர் பயன்படுத்தும் செயல்முறை குர்ரானை தவறாக இடம் மாற்றி மேற்கோள் காட்டுவதுதான்.

இஸ்லாம் முஸ்லீம் அல்லாதவர்களுடன் கொள்ளும் உறவு பின்வரும் குர்ரான் வசனங்களால் விளக்கப்படுகிறது. 'மத விஷயத்தில் கட்டாயத்துக்கு இடமில்லை ' (2:256)

'உங்கள் நம்பிக்கையின் பேரில் உங்கள் மீது போரிடாதவர்கள் உங்கள் வீடுகளை அபகரிக்காதவர்களிடம் நீங்கள் அன்புடனும் நியாயத்துடனும் நடந்து கொள்வதனை இறைவன் தடைபடுத்தவில்லை.ஏனெனில் இறைவன் நியாயத்துடன் நடப்பவர்களிடம் பிரியமுடையவனாயிருக்கிறான். ' (60:8)

மேலும் முக்கியமாக இஸ்லாமின் சமயப்பொறுமையின் வரலாறே இதற்கு அத்தாட்சியாக உள்ளது. இஸ்லாமின் நோக்கம் முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவதுதான் எனில் 700 ஆண்டுகள் முஸ்லீம் ஆட்சியின் பின் ஏன் இந்தியா இன்னமும் 80% ஹிந்துக்களை கொண்டு விளங்குகிறது ?ஏன் ஸ்பெயினின் முஸ்லீம் ஆட்சிக்காலம் 'யூதர்களின் பொற்காலம் ' என வரலாற்றாசிரியர்களால் வழங்கப்படுகிறது ? ஏன் கிழக்கத்திய கிறிஸ்தவர்கள் தங்கள் முஸ்லீம் சகோதரர்களுடம் இணைந்து சிலுவைப்போர் படையெடுப்பாளர்களை எதிர்த்தனர் ? எவ்வாறு 1400 முஸ்லீம் அரசாட்சிக்கு பின்னும் இஸ்லாமிய உலகில் பல மில்லியன் கிறிஸ்தவர்கள் முஸ்லீம்களுடன் அமைதியாக வாழ்கின்றனர் ? ஐரோப்பிய காலனியவாதிகளால் சில பத்தாண்டுகளில் அமெரிக்க பூர்விகவாசிகளை பூண்டோடு கொல்லமுடிந்தது.ஆனால் இஸ்லாமின் நோக்கம் முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவதுதான் எனில் 1400 ஆண்டுகளில் அது எத்தனை சுலபமாக முடிந்திருக்கும் ? இதன் விடை இஸ்லாமின் நோக்கம் மக்களை கொடுமைகளிலிருந்து விடுவித்து, இறைவனால் கொடுக்கப்பட்ட உரிமையான தங்கள் விருப்பப்படும் சமயத்தை பின்பற்றி இனம், மதம் , மொழி மற்றும் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு அப்பால் மானுடன் எனும் முறையில் சுயமரியாதையுடன் வாழ வைப்பதே ஆகும்.

ஸ்பென்ஸர், இதுதான் பெரும்பாலான முஸ்லீம்கள் அறிந்து பின்பற்றும் இஸ்லாம்.

ஸ்பென்ஸர்: 'இடம் மாற்றி மேற்கோள் காட்டுவதுதான் ' உங்களால் வைக்க முடிந்த மிகப்பெரிய வாதமா ? இதோ சில இடம் மாறா வாதங்கள் உங்களுக்காக.

வரலாறு முழுவதும் முஸ்லீம்கள் வன்முறையான ஜிகாத்தினை முஸ்லீம் சமுதாயத்தின் பொறுப்பாகவே கொள்கின்றனர். அதனை அவர்கள் பின்வரும்விதத்தில் விளக்குகின்றனர்.

சுரா 9:29 கூறுகிறது, 'அல்லாவை , இறுதி தீர்ப்பு நாட்களை நம்பாதவர்கள் , அல்லாவால் விலக்கப்பட்டவற்றை விலக்காதவர்கள், அல்லா மீதும் அவர் துதெர் மீதும் நம்பிக்கை

கொள்ளாதவர்கள், உண்மையான சமயத்தின் மீது நம்பிக்கை வைக்காதவர்கள் அவர்கள் நுலெின் மக்களாக (கிறிஸ்தவர்களும் யூதர்களும்) இருந்தாலும் அவர்கள் ஜிஸியா வரியை

தானாகவே பணிவை ஏற்று கொடுக்க வேண்டும். தாங்கள் வெல்லப்பட்டதை அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். '

இதுவே மூன்று தேர்வு முறை. மதமாற்றம், மரணம் அல்லது பணிவு. இது சுரா அத் த்வாபா வெளிப்பாடென்னும் இறுதி வெளிப்பாடாகும். எனவே இஸ்லாமிய முறையான முன்கூறியதை தாண்டிச்செல்லுதல் (நாக்ஷ்) எனும் மரபின் படி இந்த சுராவின் வெளிச்சத்திலேயே நீங்கள் மேற்கோள் காட்டியவை அறியப்பட வேண்டும். இந்த அறிதல் முறை நான் உண்டாக்கி கூறவில்லை. இஸ்லாமிய பெரும் மறை அறிஞர்களான இபின் காதிர், இபின் ஜுசாயி, தஃப்சிர் அல் ஜலயன் மேலும் பல குர்ரான் அறிஞர்கள் இதனை கூறுகின்றனர், முகமதுவின் இந்த முத்தேர்வு முறை மிகத்தெளிவாக ஹாதித் ஷாகி முஸ்லீம் (4294) இல் வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் 'முஸ்லீமல்லாதவர்களை கொல்லுவது அல்லது மதமாற்றுவது ' என கூறுகையில் மூன்றாவது வாய்ப்பான (இஸ்லாமிய ஆதிக்கத்திற்கு) பணிதலை விட்டுவிடுகிறீர்கள். அதுவே உங்களுக்கு பதில் அளிக்கிறது. ஹிந்துக்கள் போன்ற பெரும் மக்களுடன் மோதுகையில் முஸ்லீம்கள் வரலாற்றில் இந்த போக்கினை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் முஸ்லீம்களின் வரலாறு தொடர்ந்து ஹிந்துக்களை அடக்கி அவமானப்படுத்தியதேயாகும். அதன் விளைவாகவே இன்றும் அங்கு இரு சமுதாய மக்களுக்கிடையே பதட்டங்கள் நிலவி வருகின்றன. இஸ்லாமிய உலகில் வாழும் யூதர்களும் கிறிஸ்தவர்களும் பணிவின் சுவையினை தெரிந்தவர்கள்தான்.

அயுலோஷ் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும் ஷரியாவின் படி( முகமதுவின் மூன்றுவாய்ப்பு நியதிக்கு இணங்க) யூதர்களும் கிறிஸ்தவர்களும்வைஸ்லாமிய உலகில் முஸ்லீம்களுக்கு இணையாக சட்டப்படி சமமாக நடத்தப்பட முடியாது. அயுலோஷ் இஸ்லாமிய சட்டத்தின் இனவாதத்தன்மையில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் திமிகளாக

அவமானத்துடன் நடத்தப்படுவது குறித்தும் அவ்வாறு நடத்தப்பட ஒப்புக்கொள்ளாவிட்டால் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலையிருப்பதையும் விளக்குகிறீர்களா ? யூதர்களும் கிறிஸ்தவர்களும் இஸ்லாமிய சட்டப்படியான ஒரு சமுதாயத்தில் முஸ்லீம்களுக்கு சமமாக நடத்தப்பட இஸ்லாமிய சட்டத்தில் இடமில்லை.

இஸ்லாமின் நோக்கம் 'மக்களை அடக்குமுறையிலிருந்து விடுவிப்பதானால் ' ஏன் ஆசியா மைனரிலோ அல்லது வட ஆப்பிரிக்காவிலோ கிறிஸ்தவ மக்களை காண இயலவில்லை. ஓ அவர்கள் துடைத்தெறியப்பட்டுவிட்டனர். ஏன் இன்று பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையரின் இல்லங்களை விட்டுவிட்டு விரைகின்றனர் ? இஸ்லாமிய கொடுமைகளிலிருந்து விடுபட. ஆனால் நீங்கள் 'பெரும்பாலான முஸ்லீம்கள் இதை எல்லாம் மறுக்கின்றனர் ' என கூறுவதை நான் ஏற்கிறேன். ஆனால் ஒரு இஸ்லாமிய மதகுருவாவது திமித்துவத்தையும் வன்முறை ஜிகாத் கோட்பாட்டையும் மறுக்கட்டும். அவற்றின் பெயரால் நடத்தப்பட்ட அட்டூழியங்களுக்கு மன்னிப்பு கேட்கட்டும். அயுலோஷ் உண்மையான பிரச்சனையை பேசலாம். என்னை மடையன் என்று கூறுவது வாதமல்ல.

அயலுஷெ¢: ஆம் ஸ்பென்ஸர். வரலாற்றுப் பின்புலம் மிக முக்கியமானதுதான். இஸ்லாமிய வரலாற்றினை அறிந்தவர்கள் வெளிப்பாட்டின் பின்புலமறிதல் (அஸ்பாப் அன் நுஸூல்) ஒரு அறிவியலாகவே உள்ளதென அறிவர். எனவே ஒவ்வொரு வெளிப்பாட்டின் காலம், நிகழ்வு மற்றும் வரலாற்றுப்பின்புலம் ஆகியவை முக்கியமானவை. அது இன்றி குர்ரானின் வெளிப்பட்டு ஞானத்தை அறிதல் இயலாது. 23 வருடங்களாக முகமது நபிக்கு கபிரீயல் இறைதுதெனால் 6000 வசனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை ஏக இறைவணக்கம், வாழ்வியல் ஒழுக்கங்களை மேம்படுத்தல், நியாயமற்ற சமுதாய அமைப்பினை எதிர்த்தல்,

முந்தைய நபிகளையும் மற்ற தேசங்களையும் மதித்தல் என மாறும் சமுதாய அரசியல் உலகில் முஸ்லீம் வாழத் தேவையான அனைத்து வழிக்காட்டலையும் உள்ளடக்கியுள்ளன. உதாரணாமாக ஏக இறைவணக்கம் குறித்த வெளிப்பாடு வழங்கப்பட்ட போது மெக்காவின் விக்கிரக ஆராதனையாளர்கள் பெறும் உணர்வு பூர்வமான தடைகளை நம்பிக்கையாளர்கள் மீது வைத்தனர்.எனவே அப்போதைய வெளிப்பாடுகள் முஸ்லீம்களை தளராதிருக்கும் படியும் மெக்காவிலேயே இருக்கும்படியும் கூறியது. பின்னர் அவர்கள் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறையினை பயன்படுத்த தொடங்கியதும் குர்ரானின் வெளிப்பாடு முஸ்லீம்களை மதினாவுக்கு செல்லும் படி பணித்தது. யூத இனக்குழு ஒன்று முஸ்லீம்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட போது குர்ரானின் வெளிப்பாடு அவர்களை மதிக்கவும் நியாயமாக நடத்தவும் முஸ்லீம்களை பணித்தது. ஆனால் அவர்கள் அந்த உடன்படிக்கையை முறித்து முஸ்லீம்களின் எதிரிகளுக்கு உதவ முற்பட்ட போது குர்ரான் தவறு செய்த அந்த யூத இனக்குழுவை மட்டுமே தண்டிக்குமாறு கூறியது. அவ்வாறே விக்கிரக ஆராதனையாளருடனான ஒப்பந்தங்களை மதிக்குமாறே இஸ்லாம் பணித்தது. அந்த ஒப்பந்தத்தை விக்கிரக ஆராதனையாளர்கள் மீறி அப்பாவி முஸ்லீம்களை துன்புறுத்திய போதே நியாயத்தை தேடுமாறு குர்ரான் முஸ்லீம்களை பணித்தது. இவை எல்லாமே விதி விலக்கான சூழ்நிலைகளில் முஸ்லீம்களை வழி நடத்தியவை ஆகும். ஆனால் போருக்கான சூழலில் கொடுக்கப்பட்ட ஒரு வசனத்தை வெளிப்பாட்டை அமைதி நிலவும் சூழலில் பயன்படுத்துவது என்பது ஸ்பென்ஸர் மற்றும் அல் கொய்தா போன்ற வெறி பிடித்தவர்களின் செயலேயாகும். முஸ்லீம்கள் முஸ்லீம் அல்லாதோருடனான உறவு முன் நான் மேற்கோள் காட்டிய வரிகளாலும் பின் வரும் வசனத்தாலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. 'ஓ மானுட குலமே! நாம் உங்களை ஆணும் பெண்ணுமாக படைத்தோம்; நீங்கள் உங்களை ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவே நாடுகளாகவும் இனங்களாகவும் ஆக்கினோம். உங்களைப் படைத்த இறைவனின் பார்வையில் மேன்மையானவர் உங்களுள் சிறந்த நன்னடத்தை உடையவரே ' (49:13)

ஸ்பென்ஸர்: நீங்கள் பின்புலம் குறித்து அளித்த விரிவுரைக்கு நன்றி. முதன்மையான முஸ்லீம் மறையியலாளர்கள் (குர்ரான் வசனங்களின்) பின்புலம் குறித்து கூறியவற்றை என் முந்தைய பேச்சில் கூறினேன். அதற்கு பதில் கூறிவதை நீங்கள் தவிர்த்துவிட்டார்கள். பரவாயில்லை. கூர்ந்து வாசிக்கும் எவரும் அதை கவனித்திருப்பார்கள்.

(முடிவுறுகிறது)

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20304193&format=print

StumbleUpon.com Read more...

இந்த பதிவு யாருதுன்னு சொல்ல முடியுமா?

இன்று காலையில் நண்பர் வெங்கட் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சாரு நிவேதிதா மலேசியாவில் அகப்பட்டுக் ...

இப்படி தலைப்பிடப்பாட்ட ஒரு பதிவு தேன்கூட்டில் உலாவி வந்தது.அது என்ன என்று ஹிட் அடித்தால் அந்த பிளக்கர் ஓப்பன் ஆகவில்லை.இது என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை.தகவல் தெரிந்த அன்பர்கள் இது எந்த பதிவரின் பதிவு என்பதை விலக்கினால் பரவாயில்லை.





கஷ்டப்பட்டு இவ்வளவு தூரம் வந்துட்டீங்க.நான் நல்லா இருக்கேனான்னு சொல்லிட்டு போங்களேன்

photo loading...

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP