சமீபத்திய பதிவுகள்

இந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,-ஏலம்?

>> Monday, March 31, 2008

முகலாய மன்னர் ஷாஜகானின்
இந்தியாவில் காதல் சின்னமாக திகழும் தாஜ்மஹால்,கட்டியவர் வாள் ஏலம்

ரூ.4 கோடி எதிர்பார்ப்பு தங்க கைப்பிடி வாள் லண்டனில் இன்று ஏலம்




லண்டன், மார்ச் 31-
முகலாய மன்னர்களில் பிரபலமானவரான ஷாஜகான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி கொண்ட வாள், லண்டனில் இன்று ஏலம் விடப்படுகிறது. அது ரூ.2.4 கோடி முதல் ரூ.4 கோடி வரை விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் மனைவி மும்தாஜுக்காக தாஜ் மகாலைக் கட்டிச் சரித்திரத்தில் என்றும் இடம் பிடித்தவர் மன்னர் ஷாஜகான். கி.பி. 1629க்கு முன் அவர் எப்போதும் வைத்திருந்த வாளின் கைப்பிடி சுத்தத் தங்கத்தால் செய்யப்பட்டது.
அதில் தங்க அலங்காரங்களும், சின்னங்களும் பொறிக்கப்பட்டிருக்கும். அதன் கூரிய வாளில் ஷாஜகானின் அதிகாரப்பூர்வ மற்ற பெயர்கள், பிறந்த இடம், தேதி ஆகியவை பொறிக்கப்பட்டிருக்கும். அதை தனது தனிப்பட்ட வாளாக மன்னர் எப்போதும் வைத்திருந்தார்.
பழங்கால ஆயுதங்கள் மற்றும் மண் பொருட்களைச் சேகரித்து பாதுகாப்பதுடன், ஆராய்ச்சியில் ஈடுபடும் ஜாக்கஸ் டெசன்பேன்ஸ் என்பவர் அந்த வாளை பாதுகாத்து வந்தார்.
அந்த வாள் லண்டனின் போன்ஹாம்ஸ் பகுதியில் இன்று ஏலம் விடப்படுகிறது. அது ரூ.2.4 கோடி முதல் ரூ.4 கோடி வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஏல நிறுவனம் தெரிவித்தது.




http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

மாட்டுச் சாமி பாத்தீங்களா?படம் போட்டுருக்கேன் பாருங்க.





சென்னை பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த இந்த காளை மாடு பிறக்கும்போதே 5 கால்களுடன் இருந்தது. மஞ்சள், குங்குமம் வைத்து காளையை வழிபடுபவர்கள், தெய்வ அம்சமாக கருதி கூடுதல் காலுக்கும் பொட்டு வைத்து வழிபடுகின்றனர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

சமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உறுப்பினர்கள் இருப்பதைவிட அப்படி ஒன்று இல்லாமல் இருப்பதே மேல்.

கிறீத்துவம் பரவலாகத் தீண்டாமைக் கொடுமையிலிருந்து பல சாதிகளை மீட்டெடுத்து அவர்களுக்கு ஒன்றுமில்லையென்றாலும் கல்வியை மட்டுமேனும் வழங்கியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆயினும் சாதி அடையாளங்களை கிறீத்துவர்கள் முற்றிலும் துறக்கவில்லை என்பது கிறீத்துவத்தின் அடிப்படைகளை மீறிய செயலே. கிறீத்துவம் பரவிய நாட்க்களிலேயே சாதி அடையாளத்துடன் கிறீத்துவர்கள் செயல்படக்கூடாது என்கிற தீர்க்கமான முடிவு இருந்திருக்குமானால் இன்று எறையூர் போன்ற பிரச்சனைகள் இருந்திருக்காது. அதே நேரம் அப்படி ஒரு நேர்மையான முயற்சி இருந்திருக்குமானால் கிறீத்துவம் இந்தியாவில் இத்தனை தூரம் பரவியிருந்திருக்காது. மதம் பரப்ப செய்த சமரசம் இது.

உயர்சாதி இந்துக்களிடமிருந்து கிறீத்துவர்களுக்கு விடுதலை கிடைத்ததே தவிர உள்ளுக்குள் அவர்களிடம் சாதி அடையாளங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவருகிறது. இதனால் இன்று சாதியின் பேரில் சமூகத்தில் நடக்கும் அனைத்து அரசியல்களும் கத்தோலிக்கர்களுக்குள்ளும் நடக்கிறது.

நெல்லை மாவட்டம் இராதாபுரத்தில் நாடார் அதிகம் வசிக்கும் பகுதியில் அங்கிருக்கும் பரதவர்களிடம் வரி வசூலிக்காமல், அவர்களை கோவிலில் வகை வைக்காமல் இருக்கும் நிலை உள்ளது. இதற்கு அந்தப் பங்கின் சாமியாரே துணை போவதாக செய்தியுள்ளது.

நகர்ப்புறம் தவிர்த்து எங்கெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட சாதியினர் ஒரே பங்கில் செயல்படுகிறார்களோ அங்கே இந்தப் பிரிவினை அழுத்தமாகத் தெரிகிறது. நகர்ப்புறக் கோவில்களிலும் தென் தமிழர்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் நாடார், மீனவர் குழுக்கள் உருவாகிவருகின்றன.

சாதி அடிப்படையிலான அரசியல் எழுச்சி இதற்கு ஒரு காரணி. சாதீய எதிர்ப்பு அதிகம் இருந்த காலகட்டங்களை விட இன்று சாதீய உணர்வு அதிகரித்திருப்பதை உணரமுடிகிறது. சாதி அடிப்படையில் சலுகைகளைப் பெற, தங்கள் ஓட்டு வங்கியை ஒருங்கிணைத்து பலம் காட்டச் செய்யும் முயற்சிகளால் இன்று மீண்டும் சாதி தன் அகோர முகத்தை அலங்கரித்துக் காட்டிக்கொள்ளத் துவங்கியுள்ளது.

கத்தோலிக்க கிறீத்துவம் இந்த அரசியலில் சிக்கிக் கொண்டுள்ளது மேலே சொன்னது போல ஒன்றுக்கும் மேற்பட்ட சாதியினர் வாழும் பல கத்தோலிக்க பங்குகளிலும் வெளிச்சம். இதில் சாதி அரசியல் செய்யும் கத்தோலிக்க பாதிரியார்களின் பங்களிப்பு மிக அதிகம். வெளியே மக்களிடையே மட்டுமன்றி திருச்சபைக்கு உள்ளேயும், சாமியார்கள் நடுவே சாதி அரசியல் மிகக் கேவலமான முறையில் பின்பற்றப்படுகிறது.

மறைமாவட்ட முக்கிய பதவிகள் அங்கு எந்த சாதி சாமியார்கள் அதிகமோ அந்த சாமியார்களுக்கு வழங்கப்படுவது, கூட்டங்களில் தலித் பாதிரியார்களின் கருத்துக்களை நிராகரிப்பது போன்ற கேவலங்கள் பலவற்றையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

எறையூர் கிறீத்துவர்கள் நேரடியாகத் தீண்டாமையை பின்பற்றுவது இன்றைக்கு வெளியில் தெரிந்திருந்தாலும் இத்தனை காலம் அது கிறீத்துவத்தின் மேலாண்மையின் கீழ் அனுமதிக்கப்பட்டிருப்பதை ஜீரணிக்க இயலவில்லை. மிக மேலோட்டமான தாக்குதலையே கிறீத்துவம் தன் மக்களிடம் நிகழ்த்தியுள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது.

தென் தமிழக கிறீத்துவ மீனவ கிராமங்கள் பலவும் வன்முறைக் களங்களாக இன்றும் திகழ்கின்றன. குறைந்த பட்சம் 400 ஆண்டுகள் கிறீத்துவப் பின்னணியில் வன்முறை குறித்த மாற்றத்தை கிறீத்துவம் தன் மக்களிடம் ஏற்படுத்தாமல் விட்டதன் பின்னணியில் பாதிரியார்களின் சுயநலப் போக்கும், பூசைகள் செய்வதில், நிறுவனங்களை மேலாள்வதில் மட்டுமான அவர்களின் கவனமும், பலநேரங்களில் இவர்களே இந்த அவலங்களை உருவாக்கித் துணை போவதுமே காரணம்.

ஒரு பங்கிற்கு சாமியார் ஒருவரை அனுப்ப வேண்டுமென்றால் முதலில் கணக்கில் கொள்ளப்படுவது அவரின் சாதி என்றால் கிறீத்துவத்தின் நிலமை கவலைக்கிடத்திலுள்ளதை உணர முடியும்.

தான் சார்ந்த மதத்தினை களையறுக்க உயிரைத் தியாகம் செய்தவர் இயேசு. ஒரு புரட்சியாளனாக, ஒதுக்கப்பட்ட இனத்தினரோடு பழகியவர், பெண்கள் கீழானவர்களாய் நடத்தப்பட்ட காலத்தில் அவர்களைத் தன் சீடர்களாக்கிக்கொண்டவர், பாவிகளோடும் தன் மதம் தடை செய்திருந்த தொழுநோயாளிகளிடமும் பழகியவர், மதத்தின் சட்டங்களை மனிதத்தின் பொருட்டு தூக்கி எறியத் தயங்காதவர், 'நீ சொன்னவற்றை மறுத்துவிடு உன்னை விடுதலை செய்கிறேன்' எனும் வாக்கின் முன்பும் சமரசம் செய்துகொள்ளாதவர் இயேசு. அவரை பலி பீடத்தில் தொழுகைப்பொருளாக்கிவைத்துவிட்டதில் அவரின் புரட்சிப் பின்னணி சாகடிக்கப்பட்டு அவரின் வழி வந்தவர்கள் வெறும் பூசாரிகளாக மாறிவிட்டது கத்தோலிக்க மதம் இயேசுவின் வழிகளிலிருந்து தடம்புரண்டுவிட்ட நிலையையே காண்பிக்கிறது.

மக்களின் வாழ்வைத் தொடாத மதம் வெறும் நிறுவனம். அங்கே பல செயல்களும் நிகழலாம், எல்லோரும் பல அலுவல்களைச் செய்யலாம் ஆனால் கடவுளைக் காண இயலாது, அங்கே ஆன்மீகம் வெறும் வார்த்தை. வெளிவேடம். அதைவிட ஏமாற்று வேலை ஒன்றுமே இல்லை.

சமூக அவலங்களை இயேசுவின் தீவிரத்தோடு எதிர்த்தால் இயேசுவுக்கு நேர்ந்த சிலுவை மரணம்தான் மிஞ்சும். இதுதான் இயேசுவின் வழி. அதன் முடிவாக ஒருவர் பெறுவது இழி பெயரும், அவமானமும் சிலுவை மரணமும்தான். ஆயினும் அதுவே உன்னத வழி என மக்களை நம்பச் செய்யும் வேகத்தில் தாங்களும் அந்த நம்பிக்கையில் சிறிதளவேனும் வெளிக்காட்ட வேண்டியதை சாமியார்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.

இயேசு தன் கடைசி இராவுணவின்போது சீடர்களின் பாதங்களைக் கழுவி தலைவன் என்பவன் தொண்டனாக இருப்பது எப்படி என்பதைக் காண்பித்தார். இன்றைய பாதிரியார்கள் வயதான மக்களையே உட்காரவைத்துப் பேசுவதில்லை. இயேசு எதிர்த்த மதபோதக அதிகார அமைப்பு மீண்டும் அவர் பெயரிலேயே கட்டி எழுப்பப்பட்டுள்ளது என்பதையே இதுபோன்ற செயல்கள் காட்டுகின்றன.

தீண்டாமையை, சாதிப் பாகுபாட்டை கத்தோலிக்கம் அங்கீகரிக்கவில்லை என்பதை வெறும் அறிவிப்போடு நிறுத்திவிடாமல் செயலில் காட்டவேண்டும். சாதிபார்த்து சாமியார்களை பங்குக்கு அனுப்பும் நிலமை மாற வேண்டும். இன்றைக்குத் தேவை சமாதானப் பேச்சு அல்ல சாட்டையடி. இந்தக் கொடுமையை இதுவரை அனுமதித்ததற்காக பாதிரியார்கள் தங்கள் முதுகில் இரண்டு போட்டுக்கொள்ளவும் வேண்டும். தமிழக கத்தோலிக்க திருச்சபை எறையூரில் தீண்டாமையை முன்னிறுத்தக் கேட்கும் கிறீத்துவர்களை உடனடியாக மதத்திலிருந்து விலக்கிவைக்க வேண்டும்.

இந்து மதம் இவர்களுக்கு பாதுகாப்பளிக்காது எனச் சொன்ன தலைவரை மனமார பாராட்டுகிறேன். இவரிடமே உண்மையான இயேசு தெரிகிறார். தன் சுயநலத்திற்காக அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. கொள்கைகளை காசுக்கு விற்க விரும்பவில்லை. எண்ணிக்கைக்காக எதையும் செய்வேன் எனும் மனப்போக்கு இல்லை.

உயிரற்ற கிறீத்துவத்தில், இயேசுவின் வழியில் செல்லாத கிறீத்துவத்தில், மக்களின் மனதைத் தொடாத கிறீத்துவத்தில், சமூக நீதிகளுக்காகப் போராடாத கிறீத்துவத்தில் கோடி உறுப்பினர்கள் இருப்பதைவிட அப்படி ஒன்று இல்லாமல் இருப்பதே மேல்.

Extreme situations require extreme actions.

 

StumbleUpon.com Read more...

காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!

காமப்பொருளா பெண்? இந்தியாவில் அதிகரித்துவரும் பெண்களுக்கு எதிரான கொடுமைகள்!
இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இரண்டு பெண்கள் கற்பழிக்கப்படுவதாகவும், இரண்டு பேர் கடத்தப்படுவதாகவும், நான்கு பேர் பாலியல் கொடுமைக்கு ஆளாவதாகவும், ஏழு பேர் கணவன்மார்களால் கொடுமைக்கு ஆளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில், தேசிய குற்றப்பதிவு ஆணையம் மேற்கொண்ட இந்த ஆய்வில் குற்ற எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 2006ம் ஆண்டுல் பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்களில் மிக அதிக அளவாக ஆந்திர மாநிலத்தில் 21,484 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த குற்றச் சம்பவங்களில் 13 சதவீதமாகும். அதற்கு அடுத்தபடியாக உத்திர பிரதேசத்தில் 9.9 சதவீதம் குற்றங்கள் பதிவாகியுள்ளன.

தேசிய குற்றப் பதிவு ஆணைய தகவலின்படி, 2003ம் ஆண்டிலிருந்து அடுத்த ஆண்டிற்குள் 15 சதவீதம் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது 2005ல் 0.7 சதவீதமாகவும், 2006ல் 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 35 நகரங்களில் பெண்களுக்கு எதிராக டெல்லியில் 4 ஆயிரத்து 134 குற்றங்களும், ஹைதராபாத்தில் 1,755 குற்றங்களும் பதிவாகியுள்ளன.

டெல்லியில் 31.2 சதவீதம் கற்பழிப்பு வழக்குகளும், 34.7 சதவீதம் கடத்தல் வழக்குகளும், 18.7 சதவீதம் வரதட்சணை கொடுமை வழக்குகளும், 17.1 சதவீதம் கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் துன்புறத்தப்பட்ட வழக்குகளும், 20.1 சதவீதம் பாலியல் தொந்தரவு வழக்குகளும் பதிவாகியுள்ளன.

இந்தியாவில் கடந்த 2005ம் ஆண்டு 15 ஆயிரத்து 847 கற்பழிப்பு வழக்குகள் பதிவான நிலையில், 2006ம் ஆண்டில் 19 ஆயிரத்து 348 கற்பழிப்பு வழக்குகளாக உயர்ந்துள்ளது. அதில் ஆயிரத்து 593 வழக்குகள் (8.2 சதவீதம்) 15 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கும், 3,364 வழக்குகள் (17.4 சதவீதம்) இளம் பெண்களுக்கும், 11,312 வழக்குகள் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்களுக்கும் நடந்துள்ளன. மத்திய பிரதேசத்தில் மட்டும் 2,900 கற்பழிப்பு சம்பவங்கள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் என பெண்களுக்கு ஏற்கனவே பழக்கப்பட்டவர்களால் மட்டும் 75.1 சதவீத (14 ஆயிரத்து 536 வழக்குகள்) கொடுமைகள் நிகழ்ந்துள்ளதை இந்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன். 431 கொடுமைகள் (3 சதவீதம்) பெற்றோர் அல்லது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களாலும், 36.8 சதவீதம் (5,351 வழக்குகள்) அக்கம்பக்கத்தினராலும் நிகழ்ந்துள்ளன.

பாலியல் பலாத்காரங்களை பொருத்தவரை, 34,175 வழக்குகள் 2005ல் பதிவான நிலையில், 2006ல் 36,617 வழக்குகளாக (7 சதவீதம்) அதிகரித்துள்ளது. 6,243 வழக்குகளை கொண்டு, 17 சதவீதத்துடன் மத்திய பிரதேசம் தான் இதிலும் முதலிடத்தில் உள்ளது.
7,618 வழக்குகளுடன் வரதட்சணை கொடுமையும் 12.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக உத்திர பிரதேசத்தில் 1,798 வழக்குகளும் அதற்கு அடுத்தபடியாக பிகாரில் 1,188 வழக்குகளும் பதிவாகியுள்ளன. கடத்தல் சம்பவங்களிலும் 2,551 வழக்குகளுடன் உத்திரபிரதேசம் முதலிடம் பெறுகிறது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு தீர்வுதான் என்ன?

2008ம் புத்தாண்டு பிறந்த இரண்டாவது மணிநேரத்தில், மும்பையில் அயல்நாடு வாழ் இந்திய பெண்களுக்கு நடந்த குழு பாலியல் பலாத்காரங்கள் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கைகளில் வெளியானதால், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி கிளம்பியது.

அதேபோல், உதய்ப்பூர் நகரில் பிரிட்டன் பெண் பத்திரிக்கையாளர் கற்பழிக்கப்பட்ட சம்பவமும் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெயர்போன இதே இந்திய மண்ணில் பெண்களுக்கான பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கும் அவலத்தை மீண்டும், மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்ட மற்றும் கணக்கில் வந்த குற்றங்கள். இவற்றை விட பலமடங்கு குற்றசம்பவங்கள் வெளிப்படையாக கூறப்படாமல், பெண்கள் தங்களுக்குள்ளாகவே புதைத்து வைத்திருப்பதும் மறுக்கமுடியாத உண்மை. ரயில், பேருந்து, கடை, அலுவலம், கோயில், சுற்றுலா தளங்களஎன எத்தனையோ இடங்களில் ஏன்? வீட்டிலேயே கூட நடந்த, நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஏராளம், ஏராளம்...

ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஏதாவது தொந்தரவுகள் நிகழக்கூடும் என்பதால், இதற்கு எதுதான் தீர்வாக அமைய முடியும் என்பது அனைவரது கேள்வியும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க காவல்துறை, சட்டங்களால் மட்டும் முடியாது. அதற்கு ஒவ்வொரு பெண்ணும் தன்னை தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று சமுதாய அக்கறை கொண்டவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

ஆனால், இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது அந்தந்த பெண்களைப் பொருத்தது என்றே எண்ண தோன்றுகிறது
 

StumbleUpon.com Read more...

இந்து மத கோவில்களில் மாற்று மதத்தவர்கள் நுழையக்கூடாது

ஜேசுதாஸூக்கு மறுப்பு : பூசாரிகள் வைத்ததுதான் சட்டம்!
கேரமாநிலத்திலுள்கடம்புழஅம்மனகோயிலிற்குளசென்றவழிபபிரபபாடகரஜேசுதாஸிற்கஅக்கோயிலநிர்வாகமஅனுமதி மறுத்திருப்பதவெட்கத்தையும், வேதனையையுமஅளித்துள்ளது.

webdunia photo FILE
கிறித்தவராகபபிறந்ஜேசுதாஸவேறுபாடபாராமலஏராளமாபக்தி பாடல்களைபபாடியுள்ளாரஎன்பதமட்டுமின்றி, கோயில்களுக்குமசென்றபக்தியுடனவழிபடுபவர். சுவாமி அய்யப்பனமீதஅவரபாடிபாடலஒன்றஒவ்வொரஇரவுமஒலித்பின்னரசபரிமலஅய்யப்பனகோயிலநடசாத்தப்படுவதவழமையாஇருந்தவருகிறது.

கர்நாடஇசைககச்சேரிகளசெய்தகோயில்களுக்கநிதி சேகரித்தஅளித்தஇறைப்பணி ஆற்றியவரபாடகரஜேசுதாஸஅவர்கள். அப்படிபட்இறைபபக்தரை, தூநெறியாளரை, சிறந்இசைககலைஞரகோயிலிற்குளஅனுமதிக்மறுத்திருப்பதஅடாசெயலமட்டுமின்றி, இந்தமதத்தினஆன்மீநோக்கத்திற்கமுற்றிலுமஎதிரானதஆகும்.

"கடவுளஅருகஎலிகளும், பூனைகளுமசெல்கின்றன. ஏனஜேசுதாஸூக்கமட்டுமதடவிதிக்கப்படுகிறது?" என்றவருத்தத்துடனகேள்வி எழுப்பியுள்ஜேசுதாஸ், மற்றொரவிவரத்தையுமகூறியுள்ளார். அதுவமுக்கியமானது:

"கர்நாடமாநிலமகொல்லூரிலஉள்புகழ்பெற்மூகாம்பிககோயிலிற்குசசென்றுள்ளேன். சபரிமலஅய்யப்பனகோயிலிற்குசசென்றதரிசித்தஇருக்கிறேன். அங்கெல்லாமஇதபோன்கசப்பாஅனுபவங்களஏற்பட்டதகிடையாது" என்றசுவாதிததிருநாளஇசைக்கல்லூரியிலநடந்விழாவிலவருதத்துடனஅவரபேசியுள்ளார்.

மற்மதத்தினரகோயிலிற்குளநுழைக்கூடாதஎன்பதஇந்துககோயில்களிலகடைபிடிக்கப்படுமபொதவிதியாஇருக்குமென்றால், ஜேசுதாஸசபரிமலஅய்யப்பனகோயிலிற்குளஅனுமதிப்பதும், குருவாயூரகிருஷ்ணனகோயிலஉள்ளிட்சிகோயில்களிலஅனுமதி மறுத்தஅவரஅவமானப்ப்படுத்துவதுமஏன்? இதஎல்லபக்தர்களினஉள்ளத்திலுமஎழுமகேள்வியாகும்.

"மற்மத்த்தினருக்கஅனுமதியில்லை" என்றஎழுதி வைத்திருப்பதஇந்தமதத்தினஆன்மீநெறிகளுக்கமுற்றிலுமமுரண்பட்டதாகும். நமதவேதங்களிலஅல்லதகீதை, உபநிஷத்துக்களஉள்ளிட்ஆன்மீவழிகாட்டநூல்களிலபறைசாற்றப்பட்உண்மைகளுக்கஎதிரானதாகும்.
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0801/21/1080121062_1.htm

StumbleUpon.com Read more...

தஸ்லிமா வெளியேற்றம் வெட்கக்கேடு!

தஸ்லிமா வெளியேற்றம் வெட்கக்கேடு!
மத ரீதியான சம்பிரதாயங்களால் அழுத்தப்பட்டு, பாதிற்பிற்குள்ளான பெண்களின் துயரத்தை தனது எழுத்துக்களால் எடுத்தியம்பிய காரணத்திற்காக மத அடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் உள்ளாகியும் மனம் தளராமல் போராடிய ஒரு பெண்ணை, தனது அரசியல் லாபத்திற்காக கட்டாயப்படுத்தி வெளியேற்றி தீராத அவமானத்தை இந்தியாவிற்கு பெற்றுதந்துவிட்டது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு.

taslima
webdunia photo WD
கருத்துச் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் ஆகியவற்றின் அடையாளமாக சித்தரிக்கப்பட்ட இந்திய நாடு, தன்னிடம் அடைக்கலமான தஸ்லிமா எனும் மானுட போராளியை நெருக்குதல் அளித்து துரத்தியதன் மூலம் தனது உண்மையான முகத்தை தெளிவாக உலகிற்கு காட்டியுள்ளது. இதுவரை மூடி, மறைத்து மாற்றிக் காட்டப்பட்ட அந்த முகத்தின் உண்மை சொரூபம் இன்று அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.

வங்கதேச அடிப்படைவாதிகளால் துரத்தப்பட்டதனால் கொல்கட்டா வந்த தஸ்லிமா, அங்குள்ள அடிப்படைவாதிகளின் மிரட்டல், துரத்தல், ஆர்ப்பாட்டம் காரணமாக மத்திய அரசின் பாதுகாப்பில் தலைநகர் டெல்லியில் தங்கவைக்கப்பட்டார். இதற்கிடையே ஆந்திரத் தலைநகர் ஹைதராபாத்தில் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்தபோது முஸ்லீம் மதவாதிகளால் தாக்கப்பட்டார்.

இந்தியாவில் இருந்து தஸ்லிமாவை வெளியேற்ற மத்திய அரசு முயற்சித்து வருவதாக செய்திகள் வந்தபோது அதனை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி வன்மையாக மறுத்தார். ஆனால் டெல்லியிலோ அல்லது மற்ற இடங்களிலோ எந்த ஒரு நிகழ்ச்சியிலும் தஸ்லிமா தென்படவில்லை.

இந்த நிலையில், நமது நாட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்ற தஸ்லிமா, தன்னை இந்தியாவை விட்டு வெளியேற்ற மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.

"இந்தியாவை விட்டு வெளியேறுவதற்கு மன ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்தது இந்திய அரசு, நான் அதற்கு உடன்படவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறுவதில்லை என்று உறுதியாக இருந்தேன். என்னை மன ரீதியாக வீழ்த்த முடியாது என்று அறிந்துகொண்டவர்கள், உடல் ரீதியான தொல்லைகளைத் தரத் துவங்கினார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். எனவே வேறு வழியின்றி நாட்டை விட்டு வெளியேறினேன்" என்று தஸ்லிமா கூறியுள்ளார்.

"புது டெல்லியில் நான் தங்க வைக்கப்பட்ட இடம் பாதுகாப்பானது என்று கூறினார்கள். அதனை நான் சித்தரவதைக் கூடம் என்றே கூறுவேன். அது என்னை கொல்லும் கூடம் என்பதையும் நான் அறிந்துகொண்டேன்" என்று தஸ்லிமா கூறியுள்ளது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.

தஸ்லிமா இவ்வாறு கூறி 24 மணி நேரம் ஆகிவிட்டது, ஆனால் இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதுதான் நமது நாடா? இதனைத்தான் முழுச் சுதந்திரம் உடைய நாடாக நாம் பேசிக் கொள்கிறோம், காட்டிக்கொள்கிறோமா?

taslima
webdunia photo WD
சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், நம்பிக்கைக்கும், வழிபாட்டிற்கும் முழுச் சுதந்திரத்தை தனது முகவுரையிலேயே உறுதியளிக்கும் அரசமைப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்திவரும் ஒரு நாட்டில், பட்டதைக் கூறிடும் உரிமை படைத்த ஒரு பெண் எழுத்தாளரைக் கூட பாதுகாப்பாக வைத்திருக்கும் தகுதியில்லையா? அல்லது விரும்பவில்லையா? என்ன காரணம்? மத்திய அரசு விளக்கிட வேண்டும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனது அரசியல் லாபத்திற்காக இந்த நாட்டினுடைய மதச் சார்ப்பற்ற கொள்கையை காற்றில் பறக்கவிடுகிறதா?

மக்கள் கேள்வி கேட்பதில்லை. ஆனால் பதிலளிப்பார்கள். அவர்களின் வாக்குகள் பேசும். அது இந்த நாட்டு அரசின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தை தோலுறுத்திக் காட்டும்
http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0803/20/1080320060_1.htm

StumbleUpon.com Read more...

கை இல்லாட்டி என்ன காலில் எழுதுவேன்.வித்தியாசமாக தேர்வு எழுதின மாணவர்






மாநிலம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்வு நடந்து வருகிறது. குமரி மாவட்டம் திருவட்டார் புத்தன்கடை அருணாசலம் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இரண்டு கைகளையும் இழந்த மாணவன் சிஜின்ஜோஸ் கால்களால் தேர்வு எழுதுகிறார்.


http://dkn.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

கண்ணு எழில் மொதல்ல இதுக்கு நீ பதில் சொல்லு.நண்பர்கள் மற்றதுக்கு பதில் சொல்லுவாங்க

என்னப்பா எழில் கொஞ்சம் திருதலாம்ன்ன உடமாட்டிங்கரியே.சரி இந்த இந்திரன் சாமி என்ன இப்படி பண்ணிபுடுச்சு,ஏன்னு கொஞ்சம் சொல்லறியா


உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? அவன் எப்படிப்பட்ட அயோக்கியன் என்பதைப் புராணம் கூறுவதைப் படியுங்கள்.

தேவர்களின் தலைவன் தேவேந்திரன். இந்தப் பதவி பரம்பரைப் பதவியல்ல. தேர்தலில் நின்று வென்று அடைய வேண்டிய பதவி. ஆனால் தேவேந்திரனின் மனைவியான இந்திராணியோ நிரந்தரமானவள். யார் தேவேந்திர பதவிக்கு வந்தாலும் அவர்களுக்கு மனைவி இந்திராணிதான். இது என்ன அசிங்கம் பிடித்த ஒழுக்கக் கேடு என்கிறீர்களா? இதுதான் அவாளின் ஒழுக்கம். அதைத்தான் புராணங்கள் பிரதிபலிக்கின்றன.தேவேந்திரன் பதவி நிலையானதல்ல. அடிக்கடி அதற்குப் போட்டி வருவதுண்டு.அப்பாவியான அகலியை எனும் பெண்ணைக் கெடுத்ததோடு கல்லாக்கிய கல்மனங்கொண்ட காமாந்தகாரன் தேவர்கள் எப்பேர்ப்பட்ட ஒழுக்கங் கெட்டவர்கள் என்பதற்கு இந்தப் புராணமே போதும்.

கௌதம முனிவர் மனைவி அகலிகை. சிறந்த அழகி. கற்புக்கரசி.தேவலோகம் சென்ற நாரதர் இந்திரனிடம் அகலிகை என்னும் அழகியைப் பற்றி வருணித்தார். இதனால் மதி மயங்கிய இந்திரன் அவளை அடைய ஒரு சூழ்ச்சி செய்தான்.முனிவர்கள் விடியற்காலையில் ஆற்றுக்குச் சென்று நீராடி ஜபதபங்கள் செய்வது வழக்கம். இதை அறிந்திருந்த இந்திரன் அந்த நேரத்தில் அகலிகையை அடைய எண்ணினான்.கவுதமர் ஆசிரமத்தை அடைந்த இந்திரன் நடு ஜாமத்தில் சேவலைப் போலக் கூவி கவுதமரை ஏமாறச் செய்தான். அது அதிகாலை என்று எண்ணிய கவுதமர் ஜபதபங்களை முடிப்பதற்கான ஏற்பாடுகளுடன் ஆற்றுக்கு நீராடச் சென்றார்.அவ்வமயம் இந்திரன், கவுதமர் வடிவில் ஆசிரமத்தில் நுழைந்தான். தன் வேலைகளைச் செய்து கொண்டிருந்த அகலிகை கவுதமர் திரும்பி வந்து விட்டதாக எண்ணினாள். அப்போது கவுதமர் வடிவில் இருந்த இந்திரன், ``இன்னும் விடியவில்லை. ஏதோ பறவையின் ஒலியைச் சேவல் கூவியதாக எண்ணினேன்' என்று கூறி அவளை அருகில் வருமாறு அழைத்தான்.அருகில் கட்டிலில் அமர்ந்த அகலிகையுடன் சேர்ந்து இன்பம் துய்த்தான்.இந்நிலையில் ஆற்றங்கரை சென்ற கவுதமர் ஏதோ தவறு நேர்ந்து விட்டிருப்பதாகக் குழப்பத்துடன் ஆசிரமத்துக்குத் திரும்பி வந்து கதவைத் தட்டினார். அக்குரலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அகலிகை திகைப்படைந்து நடுக்குற்றாள். ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்தாள். இந்திரன் சுயஉருவில் தோன்றி அவள் காலில் விழுந்து கும்பிட்டான். தன்னை மன்னித்து விடுமாறு வேண்டினான்.கதவைத் திறந்த அகலிகை தலைவிரிகோலமாக முனிவர் காலில் விழுந்துவணங்கி தன் புனிதத் தன்மையை இந்திரனால் இழந்ததாகக் கூறித் தன்னை மன்னிக்குமாறு பிரார்த்தித்தாள்.ஞானதிருஷ்டியால் நிகழ்ந்தது

அனைத்தையும் அறிந்த கவுதமர், பூனை உருவில் தப்பிக்க முயன்ற இந்திரனைக் கோபமாக அழைத்தார். அவர் கோபத்துக்கு அஞ்சிய இந்திரன் சுயஉருவில் தலை குனிந்து நின்றான்.எனினும் கோபம் அடங்காத முனிவர் அவன் உடம்பெல்லாம் பெண் குறியாகட்டும்' என்றும் `வெளியில் தலைகாட்ட முடியாமல் அவதிப்படு' என்றும் சபித்தார்.அகலிகையை நோக்கிக் கணவனுக்கும், அயலானுக்கும் வேறுபாடு அறியாத அவள் உடம்பு கல்லாகுமாறு சபித்தார் முனிவர். அகலிகை தெரியாமல் செய்த பாவத்துக்கு விமோசனம் அளிக்குமாறு வேண்டினாள். அப்போது முனிவர் `சிறீமந் நாராயணன் ராமனாக அவதரித்து விசுவாமித்திரருடைய யாகத்தை நிறைவேற்ற கானகத்துக்கு வருவார். அந்த ராமர் பாதம் பட்டு சாபம் நீங்கி சுய உருவைப் பெறுவாய்'' என்று கூறிவிட்டு வெளியேறினார் முனிவர்.சாபத்தின் காரணமாக இந்திரன் மறைந்து வாழ வேண்டிய அவல நிலை உண்டாயிற்று. இந்திரனுக்காகத் தேவர்கள் கவுதம முனிவரிடம் சென்று மன்னிப்புக் கோரினர். முனிவர் `இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானுடைய ஷடாட்சர மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிக்கட்டும்'' என்று கூறினார்.

இந்திரன் பிரகஸ்பதியிடம் சென்று விநாயகப் பெருமானின் ஷடாட்சர மந்திர உபதேசம் பெற்று ஜபித்து அவர் அருளால் அவன் உடலில் இருந்து பெண்குறிகள் கண்களாக மாறிக் காட்சி அளித்தன.எனவே அவனுக்கு ஆயிரம் கண்ணுடையான் என்ற பெயர் ஏற்பட்டது. (விடுதலை 19.05.2007)

 

http://idhuthanunmai.blogspot.com/2007/05/blog-post_9734.html

StumbleUpon.com Read more...

இன்னும் மூன்று மாதத்தில் பிள்ளை பெறப்போகும் ஆண்

ஒரு ஆண் தாயாகிறார்

hshe.jpg

அதிசயம் ஆனால் உண்மை !! என்று சத்தியம் செய்து சொல்கின்றன பிரபல பத்திரிகைகளான ABC News Advocate மற்றும் பல பிரபல பத்திரிகைகள்.

ஒரு ஆண் கர்ப்பமடைந்திருக்கிறாராம். இருபத்து இரண்டு வார கர்ப்பமாம். ஜூலை மாதத்தில் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கப் போகிறார்களாம்.

பிறக்கப் போகும் பெண்குழந்தை "என்னோட மம்மி ஒரு ஆண்" என்று சொல்லப்போகும் நாளை தாயுமானவர் பார்த்து ரசிக்கக் காத்திருக்கிறாராம்.

பெண்ணாய் இருந்து ஆணாய் மாறிய தாமஸ் பெட்டி தான் இந்த பரபரப்புச் செய்தியில் வரும் கர்ப்பவதி (கர்ப்பவதன் ? ) இவர் செயற்கைக் கருத்தரிப்பு மூலம் கருவுற்றிருக்கும் இவர் ஒரு பெண் குழந்தையை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்து இதோ நானே உலகின் முதல் தாயான தந்தை என பிரகடனம் செய்யப் போகிறாராம்.

பல ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஒரு பரபரப்புச் செய்தியை MalePregnancy.com
எனும் வலைத்தளம் வெளியிட்டிருந்தது. அதில் லீ என்பவர் குழந்தை பெற்றுக் கொள்ளப் போகிறார் என கிராபிக்ஸ் சித்து விளையாட்டுகள் விளையாடி இருந்தனர்.

அந்த லீ பல ஆண்டுகள் கடந்த பின்னும் இன்னும் கர்ப்பமாக அந்த வலைத்தளத்தில் உலவி வருகிறார். டாக்குமெண்டரி, மெடிக்கல் ரிப்போர்ட் அது இது என பல அலட்டல் வேலைகளைக் காண்பித்த அந்த வலைத்தளம் போலியானது என்றும் அதை நிறுவியவர்
விர்ஜில் வாங் என்பதும் தெரியவந்தது.

அதே போல இந்த தகவலும் போலியாய் இருக்கவே வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் நாளைய தினம் தாமஸ் பெட்டி ஒரு கான்ஃபரன்ஸ் ஏற்பாடு செய்திருக்கிறாராம்.

நாளை ஏப்பிரல் 1 – என்பது நமக்குத் தெரியாதா என்ன ?

 

http://sirippu.wordpress.com/2008/03/31/he_mother/

StumbleUpon.com Read more...

பெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ

 பெண்களுக்கான புதிய இணையதளம் துவங்கியது யாகூ
31 மார்ச்,2008 ::11:38

நியூயார்க்: மார்ச் 31ல் 25 முதல் 54 வயது வரையில் உள்ள பெண்களுக்கான புதிய இணையதளத்தை யாகூ தொடங்கியுள்ளது.பெண்களை இலக்காக வைத்துத் தொடங்கப்பட்டது இந்த இணையதளம். இவ்விணைய தளத்தை தொடங்குவதற்கு முன்னரே யாகூ நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது கண்டறியப்பட்டது. தாய்மை,குடும்பபொறுப்பு, அழகு போன்ற பல கோணங்களில் சிந்தித்து செயல்படும் பெண்களுக்காகவே பிரத்யோகமாக வடிவமைக்கப் பட்டுள்ளதாக யாகூவின் நிறுவன துணை அதிபர் யாமி லோரியோ கூறினார்
 
 

StumbleUpon.com Read more...

இணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால் கொந்தளிப்பு மிரட்டல்(வீடியோ இணைப்பு)






 

 இணையதளத்தில் வெளியிடப்பட்ட படத்தால்  கொந்தளிப்பு  மிரட்டல்(வீடியோ இணைப்பு)

இணையதளத்தில் வெளியிடப்பட்ட குரானுக்கு எதிரான படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு தீவிரவாதி மிரட்டல்(வீடியோ இணைப்பு)

முஸ்லிம்களின்

புனித நூலான குரானை விமர்சிக்கும் 15 நிமிட திரைப்படம், இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டு எம்.பி. கீர்ட் வில்டர்ஸ் இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தால் பாகிஸ்தானில் கொந்தளிப்பு நிலவுகிறது. படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

மேலும், `இது தரக்குறைவான படம், உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் படம்' என்று பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கான நெதர்லாந்து தூதரை நேரில் வரவழைத்து கண்டனம் தெரிவித்தது. இதற்கிடையே, இந்த படத்துக்கு பதிலடியாக வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா தலைவர் ஜவாகிரிக்கு நெருக்கமான முகமது ïசுப் என்ற தீவிரவாதி மிரட்டல் விடுத்துள்ளான்.

http://www.thiratti.com/view.php?id=20761

StumbleUpon.com Read more...

தமிழச்சியும்,தற்கொலை படையும்

தமிழச்சி ஒருவர் தன்னையே அளித்து தன் கூட்டத்துக்கு வெற்றி கிடைக்குமா என்று போராடியுள்ளார்.இலங்கையில் தமிழ் விடுதலை பெண் புலி ஒருவர் தன் உடலில் குண்டை கட்டிக்கொண்டு போய் வெடிக்க செய்த காட்சி

StumbleUpon.com Read more...

ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக படிக்க கூடாத செய்தி

ராமதாஸ் அவர்களும்,அன்பு மணி ராமதாஸ் அவர்களும் கண்டிப்பாக இந்த விலங்குடைய செய்தியை படிக்க வேண்டாம்


"தம்" அடிக்கும் ஆமை



ஜிலின்: சீனாவின் வடகிழக்குப் பகுதி நகரம் ஜிலின். அங்கு வசிக்கும் யுன் என்பவர் வளர்க்கும் ஆமைதான் இங்கே ஜோராக Ôதம்Õ அடிக்கிறது. புகை பிடிக்கும் பழக்கம் கொண்ட யுன், ஒருமுறை தனது செல்லப் பிராணி ஆமையின் வாயில் சிகரெட்டை விளையாட்டாக வைத்தாராம்.

அது பிடித்துப் போன ஆமை, எஜமானர் தம் பற்ற வைக்கும்போதெல்லாம் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடித்து காலைப் பிறாண்டுமாம். அப்போது முதல் Ôதம்Õமுக்கு அடிமையாகி விட்டது ஆமை. சிகரெட்டை லாவகமாக கவ்வி, உள்ளிழுத்து புகையை வெளிவிடுகிறது ஆமை.
http://www.dinakaran.com/

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP