சமீபத்திய பதிவுகள்

இணைய தளங்களில் எளிமையான தேடலுக்கு வழிகள்

>> Saturday, May 3, 2008

எளிமையான தேடலுக்கு


http://en.serchilo.net    
  
 
தேடல் வசதிகள் புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படும் காலம் இது. நமக்கு தேவைப்படும் தகவலை, நாம் விரும்பும் இணையதளத்தில் இருந்து, உடனே பெறும் வசதியை அளிக்கும் இணையதளம் இது. உதாரணமாக சென்னையைப் பற்றி கூகுளில் தேட வேண்டும் என்றால், இந்த இணையதளத்திற்கு சென்று கீ g chennai என்று அளித்து, தேட வேண்டும். உடனே கூகுள் தேடலில் சென்னை சம்பந்தமான தேடலுக்கான பதில்கள் கிடைக்கும். சென்னையைப் பற்றி விக்கிபீடியா இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள தகவல்களை பெற w chennai என்று அளிக்க வேண்டும். gp chennai என்று அளித்து தேடினால், கூகுள் மேப்பில் சென்னை பற்றிய தகவல்கள் கிடைக்கும். a chennஎன்று தேடினால், சென்னை தொடர்பாக அமேசான் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள புத்தகங்கள் பற்றிய தகவல் கிடைக்கும். இப்படி விருப்பமான இணையதளத்தில் தேவையான தகவலை, நேரடியாக பெற விரும்புபவர்கள் பயன்படுத்தலாம். 
 
 

StumbleUpon.com Read more...

விலைவாசி உயர்வுக்கு இந்திய மக்கள் காரணமா?அமெரிக்க அதிபர் புஷ் கருத்து முற்றிலும் தவறானது-கண்டனம்


விலைவாசி உயர்வுக்கு இந்திய மக்கள் காரணமா?
அமெரிக்க அதிபர் புஷ் கருத்து முற்றிலும் தவறானது
காங்கிரஸ் - கம்ïனிஸ்டு கண்டனம்


புதுடெல்லி, மே.4-

விலைவாசி உயர்வுக்கு இந்தியர்கள் அதிகமாக சாப்பிடுவதே காரணம் என்று அதிபர் புஷ் தெரிவித்த கருத்துக்கு காங்கிரஸ், கம்ïனிஸ்டு உட்பட பல்வேறு கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

விலைவாசி உயர்வு

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் இதே நிலைமை நீடிக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்த தவறி விட்டதாக மத்திய அரசை கண்டித்து பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையே இந்தியா மற்றும் சீனாவில் அதிக அளவில் உணவு பொருட்கள் பயன் படுத்துவதால் விலை அதிகரித்து விட்டதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டலீசா ரைஸ் தெரிவித்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்தியாவே காரணம்

இந்த நிலையில், வாஷிங்டன் அருகே ஒரு பொருளாதார மாநாட்டில் பேசிய அமெரிக்க அதிபர் புஷ், `உலகம் முழுவதும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள் அதிக அளவில் உணவு பொருட்களை சாப்பிடுவதால் அவற்றின் தேவை அதிகரித்து விலைவாசி உயர்ந்து விட்டது' என்றார்.

புஷ்சின் இந்த கருத்துக்கு காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறியதாவது:-

காங்கிரஸ் கண்டனம்

இந்தியாவில் உணவு பொருட்கள் பயன்படுத்துவதில் மாற்றம் ஏற்பட்டதாலேயே விலைவாசி அதிகரித்து விட்டதாக அதிபர் புஷ் கருதுவது முற்றிலும் தவறானது. இந்தியா, உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு அல்ல. அது ஏற்றுமதி செய்யும் நாடு. வளர்ந்த நாடுகளில் பயோ-டீசல் உற்பத்திக்காக பெரும்பாலான விளைநிலங்களை ஒதுக்கியதே விலை உயர்வுக்கு முக்கிய காரணம் ஆகும்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின்போது, இந்தியாவின் உணவு தன்னிறைவுக்காக முதலாவது பசுமைப் புரட்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் இருந்து இந்தியா பின்வாங்கவில்லை. இரண்டாவது பசுமை புரட்சி திட்டம் குறித்து ஆலோசித்து வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளில் வேளாண் உற்பத்தியை 4 சதவீதம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மணீஷ் திவாரி தெரிவித்தார்.

மத்திய மந்திரி தாக்கு

மத்திய வர்த்தக துறை இணை மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "அதிபர் புஷ்சுக்கு ஒருபோதும் பொருளாதார அறிவு சிறப்பாக இருந்தது கிடையாது. தற்போது, மீண்டும் ஒருமுறை அதை நிரூபித்து இருக்கிறார். இந்தியாவில் உணவு பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதால் உலக அளவில் விலைவாசி உயர்ந்து விட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது'' என்றார்.

பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

பாரதீய ஜனதா

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் மத்திய மந்திரிகளின் பொறுப்பற்ற அறிக்கைகளுக்கு அதிபர் புஷ், முழு வடிவம் கொடுத்து இருக்கிறார். விலைவாசி உயர்வு குறித்து மத்திய மந்திரி பிரபுல் படேல் கூறியபோது கூட, `மக்களின் உணவு பழக்க மாற்றத்தால் விலைவாசி அதிகரித்து விட்டது' என்று இதே போன்ற கருத்தை தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சி என்பது, அத்தியாவசிய பொருட்களின் அதிகப்படியான தேவையோடு இணைந்தது ஆகும். தேவையான அளவு உணவு பொருட்களை வினியோகம் செய்வதோடு, விலைவாசியை கட்டுக்குள் வைத்திருப்பதும் அரசின் பொறுப்பு.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

இடதுசாரிகள்

இந்திய கம்ïனிஸ்டு தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா கூறுகையில், "இந்தியாவில் அதிக அளவு உணவு பொருட்கள் பயன்படுத்துவது குறித்து புஷ் எதுவும் சொல்லத் தேவையில்லை. அவருடைய நாட்டில் அவருக்கு நிலவும் பிரச்சினைகளை முதலில் கவனிக்க வேண்டும். இந்தியாவின் பிரச்சினையை நாங்களே சமாளிப்போம். இதுபோன்று அசிங்கமான முறையில், இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்'' என்றார்.

மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், "உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளே காரணம் என்று ஐ.நா.சபை தெளிவாக கூறியுள்ளது. எனவே, அதிபர் புஷ்சின் கருத்து முட்டாள்தனமானது'' என்று கூறினார்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=410584&disdate=5/4/2008

StumbleUpon.com Read more...

`விலைவாசி உயர்வுக்கு இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களே காரணம்'அமெரிக்க அதிபர் புஷ் சொல்கிறார்


`விலைவாசி உயர்வுக்கு இந்தியாவில் உள்ள நடுத்தர மக்களே காரணம்'
அமெரிக்க அதிபர் புஷ் சொல்கிறார்


வாஷிங்டன், மே.4-

``இந்தியாவில் உள்ள நடுத்தர மக்கள், நல்ல தரமான உணவை உண்ண ஆரம்பித்ததால்தான் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து விட்டது'' என்று அமெரிக்க அதிபர் புஷ் தெரிவித்தார்.

அமெரிக்க மந்திரி பேச்சு

இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்திலும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதிலும் உணவுப் பொருட்களின் விளைச்சல் வெகுவாக குறைந்து விட்டது. கணிசமான அளவிலான உணவு பொருட்களை பயோ-டீசல் உற்பத்திக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இதற்கிடையே, `இந்தியர்கள் அதிகமாக உணவு சாப்பிடுவதால்தான் தேவை அதிகரித்து விட்டது' என்று அமெரிக்க வெளியுறவு மந்திரி கண்டலீசா ரைஸ் கடந்த வாரம் தெரிவித்தார். இந்த நிலையில், வாஷிங்டன் அருகே மிசோரி என்ற இடத்தில் நடந்த பொருளாதார மாநாட்டில் அதிபர் புஷ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியர்களே காரணம்

தற்போதைய விலைவாசி உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க சில காரணங்களே முக்கியமானவை. உலகம் முழுவதும் உணவ பொருட்களின் தேவை அதிகரித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் வளமான வாழ்க்கைக்கு திரும்பி விட்டன. இந்த நாடுகளில் பொருட்களை விற்பதற்கு பெரிய நாடுகள் கூட விரும்புகின்றன.

இந்தியாவில் உள்ள மக்களில் 35 கோடி பேர் நடுத்தர வர்க்கத்தினராக உள்ளனர். இது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மக்கள் அனைவரும், வசதி வாய்ப்பு அதிகரித்ததும் தரமான, சத்தான உணவு வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். அதனால் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பயோ-டீசல் உற்பத்தி

அதுபோல பயோ-டீசல் உற்பத்திக்கு உணவு பொருட்களை பயன்படுத்துவதும் மற்றொரு காரணம் என்பதை மறுக்க முடியாது. எரிபொருட்களின் விலை கடுமையாக உயரும்போது இதை தவிர்க்க முடியாது. நீங்கள் ஒரு விவசாயியாக இருந்தால், உங்கள் விளை பொருட்களுக்கு அதிக விலை கிடைக்கும் இடத்தில்தானே விற்பனை செய்வீர்கள்.

ஆப்பிரிக்க Ö உள்ளிட்ட வளரும் நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதார கொள்கையை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பு வந்துள்ளதாக நான் கருதுகிறேன். வறுமையில் உள்ள நாடுகளில் பசி ஏற்படும்போது எல்லாம் அந்த துயரை துடைப்பதில் அமெரிக்கா முன்னிலையில் இருந்து வருகிறது. எனவே, அந்த நாடுகளில் உள்ள விவசாயிகளை ஊக்கப்படுத்த அமெரிக்கா உதவும்.

இவ்வாறு அதிபர் புஷ் கூறினார்.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=410443&disdate=5/4/2008

StumbleUpon.com Read more...

பெரியார் _ வினோபா சந்திப்பு 2 மணி நேரம் ரகசிய பேச்சு

 

ஈ.வெ.ரா. பெரியாரும், காந்தியின் சீடர் வினோபாவும் திருச்சியில் சந்தித்தனர். 2 மணி நேரம் தனியாகப் பேசினார்கள்.

பூமிதான இயக்கத் தலைவர் வினோபாவும், திராவிடர் கழக தலைவர் ஈ.வெ.ரா. பெரியாரும் நேர் எதிர்மாறான கொள்கை உடையவர்கள்.

.காந்தியின் சீடரான வினோபா கடவுள் பக்தி உடையவர். நிலங்களை தானமாக பெற்று நிலம் இல்லாத ஏழைகளுக்கு வழங்கி வந்தார். ஆனால் கோவில்களுக்கு நிலம் எழுதி வைப்பதை கண்டித்து வந்தார்.

பெரியார் மூட நம்பிக்கைகளை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். பிள்ளையார் சிலை உடைப்பு, ராமர் பட எரிப்பு போன்ற போராட்டங்களை நடத்தி வந்தார்.

வினோபா விருப்பம்

இப்படி நேர் எதிர் கொள்கைகளையுடைய இருபெரும் தலைவர்களும் ஒன்றாக சந்திப்பது என்பது மிகுந்த ஆச்சரியப்படத்தக்க நிகழ்ச்சி அல்லவா? யாருமே எதிர்பாராத இந்த சந்திப்பு திருச்சியில் 18_1_1957 அன்று நடைபெற்றது.

பெரியாரை சந்திக்க வேண்டும் என்பது வினோபாவின் நீண்ட நாளைய ஆசை. தமிழ்நாட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்ட அவர் திருச்சி "நேஷனல் காலேஜ்" கட்டிடத்தில் தங்கி இருந்தார். பெரியாரை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை பூமிதான இயக்க ஊழியர்களிடம் தெரிவித்தார் வினோபா.

உடனே அந்த ஊழியர்கள் பெரியார் மாளிகைக்கு சென்று விஷயத்தை தெரிவித்தனர். இந்த அழைப்பை பெரியார் ஏற்றுக்கொண்டார்.

தன்னுடைய காரில் ஏறி வினோபா இருக்கும் இடத்துக்கு வருவதாக உறுதி அளித்தார்.

மணியம்மையுடன் பெரியார்

உடனே காரை வரவழைத்து அதில் பெரியார் ஏறினார். கூடவே மணியம்மையையும் அழைத்துக்கொண்டு போனார்.

பெரியாரும், மணியம்மையும் ஒன்றாக புறப்பட்டதைப் பார்த்த அவர்களது செல்லப்பிராணியான "சீட்டா" என்ற நாய் ஓடோடி வந்து காரில் தாவி ஏறிக்கொண்டது. பூமிதான ஊழியர்கள் `ஜீப்'பில் முன்செல்ல பெரியாரின் கார் வினோபா தங்கியிருந்த நேஷனல் காலேஜ் கட்டிடத்தை சென்றடைந்தது.

மாடிக்கு

வினோபா கட்டிடத்தின் மாடி அறையில் இருப்பதாக பெரியாரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே பெரியாரும், மணியம்மையும் மாடிப்படி ஏறிப்போனார்கள். அங்கு ஒரு அறையில் வெறும் வேட்டி மட்டும் உடுத்திக்கொண்டு தேன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் வினோபா.

அவரைப் பார்த்ததும் "வணக்கம்" என்று பெரியார் சொன்னார். வினோபா கைகளை கூப்பி பதில் வணக்கம் தெரிவித்தார்.

"இதுதான் பெரியாரின் மனைவி மணியம்மை" என்று பூமிதான ஊழியர்கள் அறிமுகம் செய்து வைத்தனர். மணி யம்மையை உட்காரும்படி வினோபா கேட்டுக்கொண்டார்.

வயது என்ன?

"உங்களுக்கு எத்தனை வயது ஆகிறது?" என்று பெரியாரிடம் இந்தியில் வினோபா கேட்டார். அதை மொழி பெயர்ப்பாளர் தமிழில் சொன்னதும், "எனக்கு 78 வயது" என்று தமிழில் பதில் கூறினார் பெரியார்..

வினோபாவுக்கு தமிழ் படிக்கத் தெரியும் என்றாலும் பேசத்தெரியாது. ஆனால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர். 78 வயது என்று பெரியார் சொன்னதும், "அப்படியா நூறுக்கு இன்னும் 22 பாக்கி" என்று வினோபா சொன்னார்.

ரகசிய பேச்சு

சாப்பாட்டை முடித்துக்கொண்டதும், "இங்கேயே பேசலாமா? அல்லது தனியாக பேசலாமா?" என்று வினோபா கேட்டார். "தனியாக பேசலாம்" என்று பெரியார் பதில் சொல்ல ஒரு அறைக்குள் சென்று பேசினார்கள்.

அங்கு பெரியார், வினோபா, மணியம்மை, மொழி பெயர்ப்பாளர் ஆகிய 4 பேர் மட்டுமே இருந்தனர். காலை 10_40 மணிக்கு தொடங்கி பகல் 12_30 மணி வரையில் சுமார் 2 மணி நேரம் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பிறகு பெரியார் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார். "என்ன பேசினீர்கள்?" என்று பெரியாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "எல்லாம் அப்புறம்" என்று சொல்லிக்கொண்டே பெரியார் மணியம்மையுடன் காரில் ஏறி கிளம்பி விட்டார்.

"ஈ.வெ.ரா. பெரியாருடன் பேசியது பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?" என்று வினோபாவிடம் நிருபர்கள் கேட்டனர். "ஒன்றும் இல்லை" என்று வினோபா தலையை ஆட்டினார்.

இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது வெளிவராத ரகசியமாக இருந்தது. அதனை அறிவதில் பலரும் ஆவலாக இருந் தார்கள்.

பெரியார் விளக்கம்

வினோபாவுடன் பேசியது என்ன என்பதை அறிய, பெரியாரை `தினத்தந்தி' நிருபர் பேட்டி கண்டார்.

"நான் பேசியதை அப்படியே தெரிவித்து விடுகிறேன்" என்று கூறி முழு விவரத்தையும் வெளியிட்டார், பெரியார்.

சிலை உடைப்பு சரியா

வினோபா:_ நீங்கள் சாதி ஒழிப்பு வேலையில் மிக தீவிரமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.

பெரியார்:_ சாதி ஒழிப்பு வேலையை நான் என் முதல் வேலையாக வைத்துக்கொண்டு இருக்கிறேன். சாதிகள் ஒழிந்தால்தான் இந்த நாட்டு மக்கள் அறியாமையில் இருந்து விடுபட்டு ஒழுக்கமுடையவர்களாக வாழ முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை.

வினோபா:_ சாதிகள் ஒழிய வேண்டும் என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் அதற்காக நீங்கள் சாமி சிலை களை உடைப்பது, புராணங்களை எரிப்பது போன்ற காரியங்களைச் செய்வதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது.

பெரியார்:_ சாதிக்கு வேர் போல கடவுளும், புராணங்களும்தான் இருக்கின்றன. ஆகவேதான் நான் அடிப்படையில் கை வைக்கிறேன். கடவுளும், புராணங்களும் ஒழிந்தால், அவை உண்டாக்கிய சாதிகள் தானாக ஒழியும்.

வினோபா:_ புராணங்களில் நல்ல கருத்துக்களும் இருக்கின்றன; கெட்ட கருத்துக்களும் இருக்கின்றன. நாம் நல்ல கருத்தை எடுத்துக்கொண்டு கெட்ட கருத்தை விட்டுவிடவேண்டும்.

விஷமும், சர்க்கரையும்

பெரியார்:_ இப்படி எத்தனை பேர்களால் முடியும்? விஷத்தையும், சர்க்கரையையும் கலந்து கொடுத்தால் விஷத்தில் இருந்து சர்க்கரையை மட்டும் பிரித்து சாப்பிட எத்தனை பேர்களால் முடியும்?

புராணங்களில் வரும் கடவுள்கள், கண்ட பெண்களிடம் ஆசை வைக்கிறார்கள். பெண் கடவுள்களும் அப்படித்தான். நீங்கள் பத்தினி வேஷம் போட்டுவிடும் பாஞ்சாலி, அகல்யா, அருந்ததி எல்லோருமே விபசாரிகள். ஒருத்திகூட உண்மையான பத்தினி கிடையாது.

மணியம்மை

வினோபா:_ (பெரியாருக்கு பக்கத்தில் இருந்த மணியம்மையை சுட்டிக்காட்டி) அம்மாவை பக்கத்தில் வைத்துக் கொண்டே இப்படி பேசுகிறீர்களே?

பெரியார்:_ கடவுள் பத்தினிகள் விபசாரத்தை மறைக்க பத்தினி வேஷம் போட்டு எல்லோரையும் ஏமாற்றினார்கள். ஆனால் அம்மா (மணியம்மை) ஒழுக்கத்தையும், சொந்த நாணயத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பத்தினியாக நடந்து கொள்கிறாள்.

வினோபா:_ புராணங்களை நாம் அப்படியே ஒப்புக் கொள்ள வேண்டும் என்பதில்லை. காலத்துக்கு தகுந்தபடி நீங்கள் மாற்றிக் கொள்ளலாம்.

இவ்வாறு வினோபாவும் நானும் பேசினோம் என்று பெரியார் கூறி முடித்தார்.
 
 

StumbleUpon.com Read more...

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை:மந்திரவாதி உள்பட 3 பேர் கைது:பில்லி-சூனியம் வைத்து துன்புறுத்தியது அம்பலம்



நாகர்கோவில், மே.3-

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்த வழக்கில் மந்திரவாதி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்கொலை

கருங்கல் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட தொலையாவட்டம் கம்பிளார் பகுதியைச் சேர்ந்தவர் செறு மணி (வயது 55). இவர் பாறை உடைக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி பேபி சரோஜா (50) அருகில் உள்ள முந்திரி ஆலையில் வேலைபார்த்து வந்தார். செறுமணியின் மூத்தமகள் ஜெஸ்லின் உஷாவுக்கு கடந்த 11/2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

செறுமணி கடந்த 29-ந்தேதி தன் மனைவி பேபி சரோஜா, மகள்கள் ஜெஸ்லின் நிஷா (21), ஜெஸ்லின் ஆயிஷா (18) ஆகியோருடன் விஷப்பொடி சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மந்திரவாதி

இந்நிலையில் இறந்த பேபி சரோஜா தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை அவருடைய மூத்த மகள் ஜெஸ்லின் உஷா கைப்பற்றி போலீசில் ஒப்படைத்தார். அந்த கடிதத்தில் எழுதி இருப்பதாவது:-

எங்கள் வீட்டின் அருகில் வேதநாயகம் மகன் அய்யப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரிய மந்திரவாதி. இவருடைய மந்திர தொல்லையை எங்களால் தாங்க முடியவில்லை. அய்யப்பனின் பில்லி-சூனியத்தால் ஒவ்வொரு நாளும் நாங்கள் செத்து பிழைத்துக்கொண்டு இருந்தோம்.

நோய் தீர அப்பாவி மக்களிடம் கடன் வாங்கினோம். மந்திரவாதி அய்யப்பன் எங்களை வாழ விடமாட்டான் என்பதால் தற்கொலை செய்கிறோம். இந்த மரணத்துக்கு காரணம் அய்யப்பனும், அவருடைய மனைவி பேபியும் தான்.

இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதப்பட்டு இருந்ததாக தெரிகிறது.

இந்த கடிதம் கிடைத்தவுடன் போலீசார் மீண்டும் தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, செறுமணி சுமார் 10 ஆண்டுக்கு முன்பு வீடு கட்ட பலரிடம் கடன் வாங்கியதும், இந்த பணத்தை அவர் திருப்பி செலுத்த முடியாமல் வறுமையில் வாடி வந்ததும் தெரியவந்தது.

வெடி வெடித்து காயம்

மேலும் 21/2 ஆண்டுகளுக்கு முன்பு தனது 2-வது மகளுக்கு கை, கால் செயலிழந்ததால் அவர் பல லட்ச ரூபாய் கடன் வாங்கி செலவு செய்து சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதற்கிடையே அவர் பாறை உடைக்கும் தொழில் செய்த போது பாறை வெடி வெடித்து காயம் அடைந்து பல நாட்கள் சிகிச்சை பெற்றார். இதில் பல ஆயிரம் ரூபாய் செலவானது.

மேலும் பேபி சரோஜா அடிக்கடி நோய் வாய்ப்பட்டு அவதிப்பட்டதாகவும், அவரது கடைசி மகள் ஜெஸ்லின் ஆயிஷா போலீஸ் வேலைக்கு விண்ணப்பித்தார். இந்த வேலைக்கும் தடை ஏற்பட்டதாக தெரிகிறது.

பரிகாரம்

இந்த தொடர் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க செறுமணியின் குடும்பத்தினர் மந்திரவாதி அய்யப்பனின் தம்பி குருநாதனை நாடி அவர் மூலம் பல ஆயிரம் செலவு செய்து பரிகாரம் செய்தனர். இருப்பினும் அய்யப்பனின் மந்திரவாதம் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் செறுமணியின் வீட்டை சுற்றி அடிக்கடி முட்டைகளும், கோழி ரத்தமும் காணப்பட்டதால் அவர் மேலும் பயம் அடைந்தார்.

இது தவிர பக்கத்து வீட்டை சேர்ந்த ராணி என்ற பெண், பேபி சரோஜாவுக்கு ரூ.30 ஆயிரம் பணம் மற்றும் ஒரு தங்க வளையலை கடனாக கொடுத்துள்ளார். ராணி கடந்த 29-ந்தேதி காலையில் பணத்தையும், வளையலையும் சரோஜாவிடம் கேட்டு மனம் வருந்தும்படி பேசியதாக தெரிகிறது.

இந்த தொடர் தொல்லைகளால் செறுமணி தனது குடும்பத்துடன் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

கைது

ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்ய காரணமாக இருந்ததாக கூறப்படும் மந்திரவாதி அய்யப்பன் (47), இவருடைய மனைவி பேபி (32), மற்றும் கடன் கொடுத்த ராணி (34) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 
 

StumbleUpon.com Read more...

பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு

பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு


துபாய், மே.3-

சவுதி அரேபியாவில் 3 பாகிஸ்தானியர்கள் தலை துண்டித்துக் கொல்லப்பட்டனர். போதைப் பொருள் கடத்திய குற்றத்துக்காக இப்படி தண்டிக்கப்பட்டனர். இஸ்லாமிய சட்டப்படி போதை பொருள் கடத்தல் குற்றத்துக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது அந்த நாட்டின் வழக்கம் ஆகும். அதன்படி ரியாத் நகரில் அவர்களுக்கு இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது.

6 நாட்களுக்கு முன்பு அவர்களின் கூட்டாளிகள் ஜெட்டா நகரில் இதேபோல வாளால் தலை துண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

கற்பழிப்பு, போதைப்பொருள் கடத்தல், கொலை ஆகிய குற்றங்களுக்காக இந்த ஆண்டு இதுவரை 56பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும் 153 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

 


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=410405&disdate=5/3/2008

StumbleUpon.com Read more...

இவர் கண்டிப்பாக குரானையும் ஹதீஸையும் பின்பற்றும் முஸ்லீமாக இருக்க முடியாது.ஏன் என்றால் இவர் தன் வளர்த்த பெண்னை மகள் என்று சொல்லுகிறார்.காட்டரபிகள் இப்படித்தான் சொன்னார்கள்.ஆனால் முகமது மட்டும் தான் தன் வளர்ப்பு மகனின்? மகளை திருமணம் செய்தார்.இதன் படி தான் வளர்த்த பெண்ணையும் திருமணம் செய்வது ஹலால் ஆகும்.இதை அறியாமல் இவர் தான் வளர்த்த பெண்ணை மகள் என்று சொல்லி அடுத்தவனுக்கு திருமணம் செய்து வைப்பது அல்லாவுக்கும்,அவருடைய தூதன் முகமதுவுக்கும் எதிரானதாகும்.சுப்பானல்லாஹ்(அப்படின்னா என்ன?அல்லா தூய்மையானவன்?) முகமது வழியில் நடக்கிற உண்மை முஸ்லீம் இப்படி செய்யமாட்டான் அந்த பெண்ணுக்கு உரிய மஹர் கொடுத்து தானே கல்லியாணம் செய்வான்.அல்ஹதுலில்லா-அல்லாவுக்கே புகழ் அனைத்தும்




http://epaper.dinamalar.com/Web/Article/2008/05/03/002/03_05_2008_002_008.jpg

StumbleUpon.com Read more...

மகா அலெக்ஸாண்டர் முஸ்லீமா?குரானின் சரித்திர ஜோக்

1. அலேக்ஜாண்டர் த கிரேட் (Alexandar the Great) - ஓர் இறைகொள்கையாளரா (முஸ்லீமா) ? (குர்-ஆன் 18:83-97)

பதில்: குர்-ஆனில் அல்லா, அலேக்ஜாண்டர் ஒரு "ஓர் இறைக்கொள்கையாளன்"( பல தெய்வங்களை வணங்காதவன்) என்றும், அல்லாவின் வழியிலே நடப்பவன் என்றும் சொல்கிறான். ஆனால் சரித்திரம் நமக்குச் சொல்கிறது, அவன் பல தெய்வங்களை வணங்கியவன். அந்த தெய்வங்களுக்காக சென்ற இடமெல்லாம் பலிபீடங்களை நிறுவியவன்.

இந்தியாவில் படையெடுத்து வரும்போது "ஹைபாஸிஸ்" நதிக்கரையில் அவன் தன் நாட்டு தெய்வங்களுக்கு (ஒலிம்பியன்) 12 பலிபீடங்களை நிறுவினான். Click for Details



குர்-ஆன் 18: 83-98 - அலேக்ஜாண்டர் ஓர் இறைக்கொள்கையாளன்

18:83 (நபியே!) அவர்கள் துல்கர்னைனை பற்றி உங்களிடம் வினவுகின்றனர்; 'அவருடைய வரலாற்றில் சிறிது உங்களுக்கு நான் ஓதிக் காண்பிக்கிறேன்" என்று நீர் கூறுவீராக.

18:84 நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (தம் ஆட்சியை நிறுவ) வசதிகள் அளித்தோம்; இன்னும் ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பலனடையும்) வழியையும் அவருக்குக் (காண்பித்துக்) கொடுத்தோம்.

18:85 ஆகவே (அவர்) ஒரு வழியைப் பின் பற்றினார்.

18:86 சூரியன் மறையும் (மேற்குத்) திசைவரை அவர் சென்றடைந்த போது, அது ஒரு சேறு கலந்த நீரில் (மூழ்குவதுபோல்) மறையக் கண்டார்; இன்னும் அவர் அவ்விடத்தில் ஒரு சமூகத்தினரையும் கண்டார்; 'துல்கர்னைனே! நீர் இவர்களை(த் தண்டித்து) வேதனை செய்யலாம்; அல்லது அவர்களுக்கு அழகியதான நன்மை செய்யலாம்" என்று நாம் கூறினோம்.

18:87 (ஆகவே அம்மக்களிடம் அவர்) கூறினார்: 'எவன் ஒருவன் அநியாயம் செய்கிறானோ அவனை நாம் வேதனை செய்வோம்." பின்னர் அ(த்தகைய)வன் தன் இறைவனிடத்தில் மீள்விக்கப்பட்டு, (இறைவனும்) அவனைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வான்.

18:88 ஆனால், எவன் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறானோ அவனுக்கு அழகான நற்கூலி இருக்கிறது; இன்னும் நம்முடைய கட்டளைகளில் இலகுவானதை அவனுக்கு நாம் கூறுவோம்.

18:89 பின்னர், அவர் (மற்றும்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:90 அவர் சூரியன் உதயமாகும் (கிழக்குத்) திசையை எத்திய போது, அது ஒரு சமூகத்தாரின் மீது உதயமாகி (அவர்கள் வெயிலில்) இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும் சூரியனுக்குமிடையே நாம் ஒரு தடுப்பையும் ஏற்படுத்தவில்லை.

18:91 (வெப்பத்திலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளாத அவர்களுடைய நிலை) அவ்வாறுதான் இருந்தது; இன்னும் என்னென்ன அவருடன் இருந்தது என்பதை நாம் நன்கறிந்திருக்கிறோம்.

18:92 பின்னர், அவர் (வேறொரு) வழியைப் பின்பற்றிச் சென்றார்.

18:93 இரு மலைகளுக்கிடையே (இருந்த ஓரிடத்தை) அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும் அப்பால் இருந்த ஒரு சமூகத்தாரைக் கண்டார். அவர்கள் எந்தச் சொல்லையும் விளங்கிக் கொள்பவராக இருக்கவில்லை;

18:94 அவர்கள் 'துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜும், மஃஜூஜும் பூமியில் ஃபஸாது - குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஒரு தடுப்பு(ச் சுவரை) நீர் ஏற்படுத்தித் தரும் பொருட்டு நாங்கள் உமக்கு ஒரு தொகையைத் தரலாமா?" என்று கேட்டார்கள்.

18:95 அதற்கவர்: 'என் இறைவன் எனக்கு எதில் (வசதிகள்) அளித்திருக்கிறானோ அது (நீங்கள் கொடுக்க இருப்பதைவிட) மேலானது; ஆகவே, (உங்கள் உடல்) பலம் கொண்டு எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும், அவர்களுக்குமிடையே ஓர் உறுதியான தடுப்பை ஏற்படுத்தி விடுகிறேன்"'என்றுகூறினார்.

18:96 'நீங்கள் இரும்புப் பாளங்களை எனக்குக் கொண்டு வாருங்கள்" (என்றார்). பிறகு அவை இரு மலைகளின் (இடையே நிரம்பி) உச்சிக்குச் சமமாகும் போது, ஊதுங்கள் என்றார்; அதனை அவர் நெருப்பாக ஆக்கியதும் (பின்னர் 'உருக்கிய) செம்பை என்னிடம் கொண்டு வாருங்கள்; அதன் மேல் ஊற்றுகிறேன்" (என்றார்).

18:97 எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.

சில இஸ்லாமிய அறிஞர்கள் இதனை மறுக்கின்றனர். ஆனால் குர்-ஆன் "துல்கர்னைன்" என்று இந்த அரசனுக்குப் பெயர் உள்ளதாகச் சொல்கிறது. சரித்திர நூல்கள்படி அலேக்ஜாண்டருக்கு "துல்கர்னைன்" என்ற பெயர் உள்ளது.
1) See here for Dulkarnain at Wikipedia
2) And here

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP