மண்ணின் மழலைகள்
>> Monday, June 2, 2008
மண்ணின் மழலைகள்
மியான்யங்: சீனாவை சமீபத்தில் உலுக்கிய பூகம்பத்தில் சொந்த நாட்டில் அகதிகளாகிப் போனவர்களின் குழந்தைகள் இவர்கள். மியான்யங் நகரின் ஹாங்டூ பகுதியில் ஒவ்வொரு வேளையும் நிவாரண உதவிகளை எதிர்பார்த்து, விளையாட மனமின்றி பசியோடு காத்திருப்பவர்கள்.
50 ஆயிரம் பேரை பலி வாங்கி அமைதியாகிப் போன சிசியான் மாகாணத்தின் இடிபாடுகளில் இன்னும் தேடுதல் பணி நீடிக்கிறது. பூமியின் கோர தாண்டவம் என்ன என்று தெரியாத பிஞ்சு வயதில், குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. பரிசுப் பொருட்களை வாங்கிக் கொண்டு தங்கள் முகாமுக்குத் திரும்பும் மண்ணின் மழலைகள் இவர்கள்.