சமீபத்திய பதிவுகள்

ஜூனியர் விகடனனின் செய்தி உண்மையானதா?ஜெய்பூர் குண்டு வெடிப்பு:சீனாவின் சதி கண்டு பிடிப்பு,ரஷ்யாவின் தலையீடு

>> Saturday, June 7, 2008

 

 
 
செப்டம்பர் 11 அன்று அமேரிக்க இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட போது  இந்திய ஜிஹாதி பத்திரிக்கைகளும் ஜிஹாதிகளை காக்காய் பிடிக்கும் மற்றவர்களும் இதை ஒரு இஸ்ரேலிய சதியாகவே சித்தரித்தனர்.ஆனால் ஒரூ சில நாட்களுக்கு உள்ளாகவே உண்மை நிலவர ஒசாமா வடிவில் உலக்குக்கு அறிமுகமாகி ஜிஹாதிகளின் உண்மை உருவத்துக்கு எந்தவித களங்கமும் இல்லாமல் வெளிகொணர்ந்தது.
 
 
சரி இது போலவே இன்றைய சூழ்நிலையும் அது போலத்தான்.வெட்ட வெளிச்சமாக தெரியும் உண்மைகளை ஜீனியர் விகடன் ஒன்று மறைத்து தள்ள முடியாது.எதோ அவர்கள் மற்ற பத்திரிக்க்கை போலவே செய்தி வெளியிட்டால் ஒரு பரபரப்பு இருக்காது.கொஞ்சம் மாற்றி சந்தேகத்தை சீனாவின் சதி என்றொ,ரஷ்யாவின் தலையீடு என்றோ தலைப்பிட்டு கட்டுரை போட்டால் உடனே மக்கள் அதிகமாக வந்து பார்வையிடுவார்கள் அல்லவா.அதுக்குத்தான் இந்த இஸ்ரேலிய,அமேரிக்க சதி என்ற ஜிவியின் கட்டுரை.
 
 
 
 
 
 
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
 
 
உணர மறுக்கும் தேசம்

 

 

இஸ்லாமிய

அடிப்படைவாதத்தின் நீண்டகால பலிகடாவாக தொடரும் ஒரு தேசத்தின் மெத்தனத்தை ஜெய்பூர் தொடர் வெடிகுண்டு சம்பவங்கள் அம்பலமாக்கியுள்ளன.

எஸ்.பிரசன்னராஜன்
 
 
சம்பவம் நடந்த மறுநாள் எழும் வழக்கமான ஆத்திரம் அடங்கிவிடும்.அதேபோலத்தான் யார் இதை செய்தார்கள் என்ற தேடலும்.சடுதியில் பயங்கரவாதத் தாக்குதலுக்குள்ளான நகர்களில் ஜெய்பூர் பெயரும் எழுதப்பட்டுவிட்டது.மீண்டும் நாம் மரத்துப்போய் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவோம்.நாளை மற்றொரு நகரம்.இன்னும் சில சிதறிய உடல்களின் பிம்பங்கள் டிவியில் காட்டப்படும்.இப்போதைக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கொடுரத்தை தடுக்கும் அரசியல் உறுதியில்லாத ஆளும் வர்கத்தின் அபத்தப் பேச்சுகளை நாம் சகித்துக் கொண்டிருக்கவேண்டியதுதான்.இந்திய தாக்குதலுக்குள்ளாகிறது.இந்தக் கோர சம்பவங்களுக்கு இடையே உள்ள இடைவெளி ஒரு மாயைதான் என்பதை மீண்டும் உணர்த்த ஒரு முக்கிய சுற்றுலாத் தலம் ரத்தக்களறியான காட்சிகள் நமக்கு தேவையா?நமது எதிரி எதோ முகம் தெரியாத முகாமில் இருக்கவில்லை.நமது தாராள ஜனநாயகத்தின் கொழுத்த பயனாளி அவன்.அந்த எதிரியின் விசுவாசம் அவனது தேசத்திற்கல்ல,ஒரு கோபமான கடவுளுக்கே அது உரித்தானது.ஜிகாதிகளுக்கு இந்தியா என்பது சொர்கத்திற்குப் போக மிகவும் சுலபமான,அதிக எதிர்ப்பில்லாத ஒரு வழியாக மாறியிருக்கிறது......................
 
 

தில்லி 2005, மும்பை 2006 ஹைதராபாத் 2007, போதாக் குறைக்கு செப் 11 தாக்குதல்கள் நடந்த மூன்றே மாதங்களில் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல். இத்தனைக்குப் பிறகும் இஸ்லாமிய பயங்கரவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளுள் தானும் ஒன்று என்பதை ஏன் இந்தியா உணர மறுக்கிறது? இதற்கான விடை ஜிகாதின் டோரா போரா யுகத்தில் ஷியச
கிடைக்கும். அப்போது காஷஷ்மீரப் பகுதிகளுக்குள் பயங்கரவாதத்தின் குரூரம் குமுறிக்கொண்டிருந்ததால் துணைக் கண்டத்தின் பிற பகுதிகளில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரங்கள் எரிந்து வீழ்ந்ததும்தான் அந்த நாடு புதிய தீமையை எதிர்கொள்ளத் துணிந்தது. அந்தத் 'தீமை" நமக்கு ஏற்கனவே சிறய அளவில் பரிச்சயமானதுதான். இருப்பினும் செப் 11 உலகையே மாற்றியமைத்தது என்பது உண்மை. பயங்கரவாதம் குறித்த அச்சத்தை உலகளாவியதாக்கியது அந்த சம்பவம். அமெரிக்கா சோகத்திலும் ஆத்திரத்திலும் வெகுண்டு எழுந்தபோது அந்த நாட்டு மக்களின் தேசிய உணர்வுகளுக்கு கட்சிச் சாயம் பூசப்படவில்லை. பாதிக்கப்பட்டவுடன் எதிரியை நோக்கி 21 ம் நூற்றாண்டின் முதல் யுத்தத்தை, நியாயமான யுத்தத்தை அந்த நாடு முடுக்கி விட்டது. சதாமின் மெசபடோமியாவுக்குப் பிறகு என்னதான் தறிகெட்டுப்போயிருந்தாலும் ஜார்ஜ் ஷியச
புஷ்ஷுக்கு தார்மீகப் போராளி என்ற வரலாற்று முக்கியத்துவமுள்ள அங்கீகாரத்தை நாம் மறுக்க முடியாது.


    மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் படுகொலைகளுக்கு நாம் அமெரிக்கர்களைப் போலவோ, இஸ்ரேலியர்களைப் போலவோ பதிலடி தருவதில்லை. நமது தேசம் தீவிர கண்காணிப்புள்ள தேசம் அல்ல. இங்கு இடது தாராள இந்தியாவின் சில முகாம்களில் எப்படி தேசப்பற்று என்பது கெட்டவார்த்தையோ அதே போலத்தான் தேசியவாதம் என்பதும் ஒரு ஆபாசமான வார்த்தை. மத்திய அரசு 'பொடா" சட்டத்தை அரக்கத்தனமனது" என்று சொல்லி நீக்கிவிட்டது. ஆனால் அதற்கு மாறாக என்ன சட்டத்தை கொண்டுவந்தது? இந்த அரசு மனிதாபிமானம் என்ற பெயரில் ஏதோ பயங்கரவாதிகளின் அடிப்படை உரிமைகள் எதுவும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று பயப்படுவதுபோலத் தெரிகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் பயங்கரவாதம எதிர்ப்புச் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிருக்கின்றன. இருந்தாலும் அவற்றுக்கு ஜனாதிபதியின் அனுமதி இன்னும் கிடைத்தபாடில்லை. ஆனால் அத்தகைய சட்டங்கள் காங்கிரஸ் ஆளும் மஹாராஷஷ்டிரா மற்றும் ஆந்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அமலில் இருக்கின்றன. ஜெய்ப்பூர் கொடுமைச் சம்பவங்களையடுத்து தேசிய பாதுகாப்புக்கான முதலமைச்சர்கள் மாநாட்டைக் கூட்டும்படி நரேந்திர மோடி விடுத்துள்ள கோரிக்கையை, 'மரண வியாபாரியின் பிதற்றல்" என்று இந்த ஐ.மு.கூ அரசு ஒதுக்கித் தள்ளி விடுமா? இங்கே யார் அரசியல் ஆட்டம் ஆடுகிறார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறது.

  அந்த அரசியல் சிறுபான்மை அரசியல்தான், தேசியப் பாதுகாப்பை பலிகடாவாக்கினாலும் பரவாயில்லை, தங்கள் வாக்கு வங்கிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆடும் அரசியல் ஆட்டம் அது. பயங்கரவாதத்திற்காக மரண தண்டனை பெற்ற அஃப்சல் குருவை அப்படியே விட்டுவைப்பதன் மூலம் சிலரை சமாதானப்படுத்தலாம் என்று நினைக்கிறது அரசு. ஆனால் அது பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் முனைப்பாக இல்லை என்பதையே இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது. இத்தகைய அரசு, பயங்கரவாதத்தின் பெயரைக் கூடக் குறிப்பிட மறுக்கிறது. 'இந்தியக் குடும்பங்கள் படும் அவஸ்தையை நேற்றிரவு டி.வியில் பார்த்துவிட்டு என்னால் துஷ}ங்கவே முடியவில்லை. இந்தியர்களையோ, பாகிஸ்தானியர்களையோ பயங்கரவாதிகள் என்று முத்திரைக் குத்துவதை தவிர்க்க வேண்டும். பயங்கரவாதிகள் பயங்கரவாதிகள் தான. அவர்கள் எந்த சமூகத்தையோ, மதத்தையோ சேர்ந்தவர்கள் அல்ல." பெங்களுரு தொடர்புள்ள கிளாஸ்கோ பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பிறகு நமது பிரதமர் மன்மோகன் சிங் சொன்னவை அவை ( அது சரி, ஜெய்ப்பூர் கோரங்களை டிவியில் பார்த்த பிறகு அவர் சரியாகத் துஷ}ங்கினாரா?). பயங்கரவாதிக்கு மதம் கிடையாது என்ற பொய்யை ஒரு பயங்கரவாதி கூட ஏற்கமாட்டான் இன்று பயங்கரவாதத்திற்கு மதம் இருக்கிறது. அப்படி மதத்தின் பெயரைச் சொல்வதாலேயே ஒட்டு மொத்த முஸ்லீம் மக்களையும் குறிப்பிடுவதாக ஆகிவி;டாது.

   தேசிய துக்கம் கூட நம்மை அரசியல்ரீதியாக ஒருங்கிணைக்கத் தவறிவிட்டது. ஜெய்ப்பூர் சம்பவங்களால் கூட அது முடியவில்லை. ஒருவரை ஒருவர் சாடும் ஆட்டம் ஆரம்பமாகிவிட்டது. மற்றவர்கள் எல்லோரையும் விட உன்னத தேசியவாதியாகக் காட்டிக்கொள்ளும் பா.ஜ.க இந்த பிளவை அதிகரிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டது. ரத்தக் காயங்களுடன் இருக்கும் இந்தியவால் அரசியல் ஒற்றுமை இல்லாவிட்டால் இஸ்லாமிய அடிப்படைவாத வன்முறைகளுக்கு எதிராக சரியாக போராட முடியாது. நமக்கு கோபம் போதாது. இந்தியாவை திரும்பத் திரும்ப ஏமாற்றிக் கொண்டே இருக்கும் ஒரு அரசியல் வர்க்கத்தைப் பொறுத்தவர் பரபரப்பான சாலைகளில் சில உடல்கள் சிதறிக் கிடப்பது என்பது தவிர்க்க முடியத இடறல்கள் . அவ்வளவுதான்.

 

மே 26 இந்தியா டுடே

 

http://thamilislam.blogspot.com/2008/06/blog-post_05.html

StumbleUpon.com Read more...

ஐ.பி.எல்... சந்தோஷங்களும், சங்கடங்களும்!

   
  
 
``அதிகம் அலட்டிக் கொள்ளாத சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவரான டோனியையே ஐ.பி.எல். ஒரு வழியாக்கி விட்டது...''

இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி பெருவெற்றி பெற்றிருக்கிறது. சந்தோஷத்தில் மிதக்கிறார்கள் இந்திய

கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள். ஆனால் ஐ.பி.எல். ஏற்படுத்தியிருக்கும் விளைவுகள் என்னென்ன?

ஐ.பி.எல். போட்டிகள் துவங்கியபோது இது எந்தளவு `ஹிட்' ஆகும் என்று எல்லோருக்குமே பொதுவான சந்தேகம் இருந்தது. காரணம், கிரிக்கெட் ஆர்வத்துடன் பின்னிப் பிணைந்த `தேசப்பற்று'. ஆஸ்திரேலியர்களுடன் அல்லது பாகிஸ்தானியர்களுடன் இந்தியர்கள் கோதாவில் இறங்கும்போதுதான் சூடு பிறக்கும். அதனால்தான் நம் நாட்டு உள்ளூர் ரஞ்சி டிராபி போன்ற முதல்தரப் போட்டிகளில் ஸ்டேடியங்கள் காற்றாடும்.

அந்தவகையில், சென்னையும் பெங்களூரும் மல்லுக்கு நிற்பதை எந்தளவு ரசிகர்கள் ரசிகëகப் போகிறார்கள் என்ற யோசனை இருந்தது.

ஆனால் `ஐ.பி.எல். டுவென்டி- 20' முதல் தொடர், அதன் அசல் தன்மை போலவே தொடங்கிய சில நாட்களிலேயே சூடுபிடித்துவிட்டது.

ஒரு விறுவிறுப்பான சினிமா போல மூன்றே மணி நேரத்தில் முடிந்துவிடுவது, சர்வதேச நட்சத்திர வீரர்களுடன், திரை நடëசத்திரங்களும் பங்கேற்றது, களத்தில் கலக்கிய `சியர் லீடர்' பெண்கள் என்று எல்லாவகையிலும் ரசிகர்களை காந்தமெனக் கவர்ந்தது ஐ.பி.எல். இப்போட்டி காரணமாக சில சினிமா படங்களின் திரையீடு கூட தள்ளிப் போடப்பட்டது என்பது இத்தொடர் எந்தளவு மக்களிடம் பிரபலமானது என்பதை எடுத்துக்காட்டியது.

44 நாட்களில் 56 `லீக்' போட்டிகள்... பெரும் எதிர்பார்ப்புடன் பெருந்தொகைக்கு வாங்கப்பட்ட அணிகளும், ஸ்டார்களும் சொதப்ப, இத்தொடருக்கு முன் அதிகம் அறியப்படாத சில இளம்வீரர்களோ தூள் கிளப்பினார்கள்.

ஆனால் இத்தொடர் ஏற்படுத்தியிருக்கும் முக்கிய பாதகமான விளைவு என்று பார்த்தால், இந்த ஒன்றரை மாத காலத்தில் வீரர்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் எட்டு நகரங்களுக்கு இடையே பறந்து பறந்து விளையாட வேண்டியிருந்தது. அதன் தாக்கம் வீரர்களிடம் இருக்கும் என்கிறார்கள்.

உதாரணமாக, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித்துக்கு தனது அணி சாம்பியனானபோது மகிழ்ச்சியும், வருத்தமுமான மனநிலை. அணி வென்றதால் ஆனந்தம், ஆனால் இத்தொடரில் காயம் பட்டதால், எதிர்வரும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாயக அணிக்காக விளையாடுவது கடினம் என்பதால் துக்கம்.

இப்படி உருட்டிப் புரட்டிப் போடும் ஐ.பி.எல்., அதிகம் அலட்டிக்கொள்ளாத இந்திய ஒருநாள் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் தலைவரான டோனியையே ஒருவழியாக்கிவிட்டது.

``இது அதீத உழைப்பு தேவைப்படும் ஆட்டமுறை. எங்களுக்கு ஓய்வு எடுப்பதற்கு நேரம் கிடைப்பதே மிக அரிதாக இருந்தது. அதிலும் நாங்கள் அரையிறுதி, இறுதிப் போட்டியை 24 மணி நேர இடைவெளியில் ஆடி இருக்கிறோம். இதெல்லாம் இப்போட்டியின் ஓர் அங்கம்தான் என்றபோதும், எங்களை வருத்திவிடுகிறது என்பதும் உண்மை'' என்று கூறியிருக்கிறார் டோனி. கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரின் இறுதிக்கட்டத்தில் `கீப்பிங்' பொறுப்பை பார்த்தீவ் பட்டேலிடம் ஒப்படைத்துவிட்டார் டோனி.

முக்கியமாக, இப்போட்டித் தொடரின்போது அடைந்த காயம் காரணமாக இந்தியாவின் `லிட்டில் மாஸ்டர்' சச்சின் டெண்டுல்கரும், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கானும் வங்காளதேசத்தில் நடைபெறும் முத்தரப்புப் போட்டி மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க முடியாத நிலை.

சென்னை அணிக்காக அதிரடி காட்டிய ஆஸ்திரேலிய வீரர் மாத்ï ஹெய்டன், வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மேற்கிந்தìயத் தீவுகளுக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் விளையாட முடியாமல் இருக்கிறார். இலங்கை வீரர் குமார் சங்கக்காராவும் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாட முடியாமல் தவித்தார்.

இனி வருங்காலங்களில், ஐ.பி.எல்., இங்கிலாந்து கவுண்டி மற்றும் சர்வதேசப் போட்டிகள் என்று வருடம் முழுவதும் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் `பிசி'யாக இருக்க வேண்டிவரும். இந்த நெருக்கடி நிலையில், வீரர்கள் தங்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

அடுத்து அதிகம் விவாதத்துக்குள்ளாகும் விஷயம், ஐ.பி.எல். `டுவென்டி-20' பரபரப்புக் கவர்ச்சியால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் மெல்ல மெல்ல தமது மவுசை இழக்கும் என்பது.

அணிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அனைத்து வீரர் களும் தவறாமல் பங்கேற்குமë வகையில், ஐ.பி.எல். போட்டியை ஐ.சி.சி. தனது சர்வதேச போட்டி காலண்டரில் சேர்க்க வேண்டும் என்று பி.சி.சி.ஐ. கோரிவரும் நிலையில், இதனால் டெஸ்ட், ஒருநாள் போட்டிகளின் எதிர்காலம் என்னவாகும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

`டெஸ்ட் போட்டிகளுக்கு ஐ.பி.எல். சாவுமணி அடிக்கக்கூடும்!' என்று இமëரான்கானும், அவரது சகநாட்டு ஜாம்பவனான வாசிம் அக்ரமும் கடுமையாக விமர்சிக்க, சச்சின் தெண்டுல்கர், மார்ட்டின் குரோ போன்றோர், `டுவென்டி- 20' முறை பிரபலமாக்கப்பட்டால் உலகளவில் கிரிக்கெட் மேலும் செல்வாக்குப் பெறும் என்கிறார்கள்.

ஐ.பி.எல். மூலம் குறுகிய காலத்தில் கிடைக்கும் பெரும் பணத்தால், பன்னாட்டு வீரர்கள் சர்வதேசப் போட்டிகளிலிருந்து விரைவிலேயே சுயவிருப்ப ஓய்வு பெறும் வாய்ப்பு அதிகம் என்றும் அச்சப்படுகிறார் அக்ரம்.

ஆனால் `டுவென்டி- 20' என்பது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஆட்டமுறை. இதைவிட, டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபிக்கத்தான் எல்லா வீரர்களும் விரும்புவார்கள் என்ற கருத்தை பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்கின்றனர். `ஐ.பி.எல். தொடரின் `நீளத்தை'க் குறைத்தால் போதும்' என்று நயன் மோங்கியா, சந்துபோர்டே, சந்திரகாந்த் பண்டிட் போன்ற `முன்னாள்கள்' கூறுகின்றனர்.

தவிர, கடுமையான `டுவென்டி- 20' பயிற்சி காரணமாக டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் எல்லாமே தரம் உயரும். அணிகள் முன்னூறு ரன்களை தாண்டுவதெல்லாம் இனி சர்வசாதாரணமாகும் என்கிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

அதிலும் குறிப்பாக, இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஐ.பி.எல். ஓர் அருமையான களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. இவர்கள் சர்வதேச களத்தில் இறங்கும்முன்பே சர்வதேச நட்சத்திர வீரர்களுடன் இணைந்தும், எதிர்த்தும் விளையாடும் அரிய வாய்ப்பு. `ஐ.பி.எல். போட்டியால் இந்திய கிரிக்கெட் அணி மேலும் வலுவாகும்' என்று பாகிஸ்தான் அதிரடியாளர் அப்ரிடியும் கூறியிருக்கிறார்.

சாதாரண ரசிகனின் பார்வையில் ஐ.பி.எல். என்பது அட்டகாசம்! `தனது' அணிக்காக விளையாடும் அப்ரிடி அல்லது ஜெயசூர்யாவுக்காக கைதட்டுவதையும், `எதிரணி' என்பதால் காம்பீரின் கம்பீரமான சிக்சருக்கு அமைதி காப்பதையும் அவனே நினைத்து பார்த்திருக்க முடியாதே!
 
http://www.dailythanthi.com/muthucharam/Home/second_page.asp?issuedate=6/7/2008&secid=11

StumbleUpon.com Read more...

கல்விக் கடன் பெறுவது எப்படி?


வருடங்களுக்கு முன்பு தொழிற்கல்வி கற்பது என்பது பெரும்பாலான ஏழை மாணவர்களுக்கு பகல் கனவாகவே இருந்து வந்தது. அனைத்து மாணவர்களுக்கும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைப்பது சாத்தியமில்லை என்ற நிலையில் பெரும்பாலானவர்கள் தனியார் கல்லூரிகளில் படிக்க வேண்டி உள்ளது. ஒரு மாணவர் என்ஜினீயரிங் படித்து முடிப்பதற்கே சில லட்சங்கள் தேவைப்படுகிறது. ஏழை மாணவர்கள் சில லட்சங்களை தயார் செய்வது என்பது சிரமமான விஷயம். இப்போது கல்விக் கடன் கிடைப்பதால், அனைவரும் கல்வி கற்கும் சூழல் உருவாகி உள்ளது. எனவே கல்விக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள், வழிமுறைகள் போன்றவற்றை பார்ப்போம்.

கல்விக் கடன் என்றால் என்ன?

வாகனக் கடன், வீட்டுக் கடன் போன்று கல்வி கடனும் ஒருவகையான கடன் ஆகும். இந்தக்கடனை பெறும் மாணவர் படிப்பதற்காக ஆகும் செலவுகளை வங்கிகள், கடனாக அளிக்கும். படித்து முடித்தவுடன் வேலை கிடைத்தால், அதற்கு ஆறுமாதத்திற்கு பிறகு அல்லது படித்து முடித்த ஒரு வருடத்திற்கு (வேலை கிடைத்தாலும், கிடைக்கா விட்டாலும்) பிறகு, வாங்கிய கடனை தவணை முறையில் திருப்பி செலுத்த வேண்டும். மற்ற கடன்களைப் போல் அல்லாமல் கல்விக் கடனுக்கு சில சலுகைகளும் கிடைக்கும். 30 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கடனை பெறலாம். படித்து முடித்தபிறகு இ.எம்.ஐ மூலம் 1-8 வருடங்களுக்குள் கடனை திருப்பி செலுத்தலாம்.

கல்விக் கட்டணம், விடுதி கட்டணம், புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், தேர்வு கட்டணம் போன்ற செலவுகளுக்கு கடன் அளிக்கப்படுகிறது. சில வங்கிகள் கல்லூரிக்கு செல்ல உதவும் இரண்டு சக்கர வாகனம் வாங்கக்கூட கடன் அளிக்கின்றன. வெளிநாடு சென்று படிப்பவராக இருந்தால், விமானக் கட்டணமும் கல்விக்கடன் மூலம் அளிக்கப்படும்.

எந்த படிப்புகளுக்கு கடன் கிடைக்கும்?

வேலை வாய்ப்புள்ள அனைத்து வகையான படிப்புகளுக்கும் கல்விக்கடன் கிடைக்கும். ஒவ்வொரு வங்கிக்கும் தகுந்தபடி இந்த படிப்புகள் மாறுபடும். மேலாண்மைக் கல்வி, என்ஜினீயரிங், மருத்துவம் போன்ற தொழிற்கல்விகள், தொழில்நுட்ப படிப்புகள் போன்ற படிப்புகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படுகிறது. புகழ்பெற்ற அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் எளிதாக கல்விக்கடன் கிடைக்கும்.

இளநிலைப் படிப்புகளுக்கும் உயர்நிலைப் படிப்புகளுக்கும் கடன் வழங்கப்படும். சில வங்கிகள் பள்ளியில் படிப்பதற்கு கூட கடன் வழங்குகின்றன. சில வங்கிகள் சான்றிதழ் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் போன்றவற்றிற்கும் கடன் வழங்குகின்றன.

எவ்வளவு கடன் கிடைக்கும்?

இந்தியாவில் கல்வி கற்பதற்கு 7.5 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். வெளிநாட்டில் கல்வி கற்க 20 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது. இந்தியாவில் படிக்க 4 லட்ச ரூபாய் வரை கியாரண்டி இல்லாமல் கடன் பெறலாம். அதற்கு மேற்பட்ட தொகைக்கு மூன்றாம் நபர் கியாரண்டி தேவைப்படும். சில சமயம் சொத்துகளை கொலேட்டரல் செக்ïரிட்டியாக அளிக்க வேண்டி இருக்கும். தேசிய சேமிப்பு பத்திரங்கள், எல்.ஐ.சி பாலிசி போன்றவற்றையும் செக்ïரிட்டியாக அளிக்கலாம். நான்கு லட்சம் ரூபாய் வரையான கடன்கள், கடன் பெறும் மாணவரின் பெற்றோரை ஜாமீன்தாரராக கொண்டு வழங்கப்படும்.

 
 
4 லட்சத்திற்கு மேற்பட்ட கடன் எனில், படிப்பதற்கான மொத்த செலவில், 85 சதவீதம் வரை கடனாக அளிப்பார்கள். மீதமுள்ள 15 சதவீத தொகையை நமது கையிருப்பாக போட்டுக் கொள்ள வேண்டும்.

எப்படி கடன் பெறுவது?


கல்விக் கடன் பெறுவதற்கு கல்லூரியில் சேர்ந்ததற்கான சேர்க்கை சான்றை அளிக்க வேண்டும். மாணவர் கடைசியாக எழுதிய தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றையும் அளிக்க வேண்டும். படிப்பு முடியும் வரை ஆகும் தோராயமான செலவுகளை, சம்பந்தப்பட்ட கல்லூரியில் இருந்து வாங்கி அளிக்க வேண்டும். கூடுதலாக பெற்றோரின் வருமானத்தை தெரிவிக்கும் சான்றுகளையும் அளிக்கலாம். பெற்றோர் வருமான வரித்தாக்கல் செய்திருந்தால், அந்த சான்றையும் அளிக்க வேண்டும். அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றையும் அளிக்க வேண்டும். இதுதவிர கூடுதல் சான்றுகளையும் சில வங்கிகளில் கேட்பார்கள்.

வங்கியில் கேட்கப்படும் சான்றுகளை இணைத்து, விண்ணப்பம் அளித்தால் கல்விக்கடன் வழங்கப்படும். வருடா வருடமோ, ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ நிர்ணயிக்கப்பட்ட கடன் தொகையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக கல்விக்கான செலவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் மற்றக் கடன்களைப் போல முழுத் தொகையையும் ஆரம்பத்திலேயே அளிக்கமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
வட்டி விகிதம் :

இது ஒவ்வொரு வங்கிக்கும் தகுந்தபடி மாறுபடும். பொதுவாக 12-15 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. வீட்டுக் கடனைப் போன்று, இதிலும் நிலையான வட்டி விகிதம், மாறுபடும் வட்டி விகிதம் ஆகியவை உண்டு. மாதாமாதம், மூன்று மாதத்திற்கு ஒருமுறை, ஆறு மாதத்திற்கு ஒருமுறை என ஒவ்வொரு வங்கிக்கு தகுந்தபடி, இ.எம்.ஐ தொகையை கழித்து வட்டி கணக்கிடப்படும். படிப்பு முடியும் வரை கடனுக்கான வட்டி தனி வட்டியாகவே கணக்கிடப்படும். படிப்பு முடிந்தவுடன் அது கூட்டு வட்டியாக கணக்கிடப்படும். 0.25-2 சதவீதம் வரை செய்முறைக் கட்டணம் வசூலிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே கடனை முழுமையாக திருப்பி செலுத்தினால், மீதமுள்ள தொகையில் 2 சதவீதம் வரை அபராதமாக விதிக்கப்படும்.

***

கவனிக்க வேண்டியவை

கல்விக் கடனை, மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கு அருகில் இருக்கும் வங்கியில் வாங்குவதா? அல்லது மாணவரின் சொந்த ஊருக்கு அருகில் உள்ள வங்கியில் வாங்குவதா? என்ற சந்தேகம் பெரும்பாலான பெற்றோர்களுக்கு உண்டு. படிக்கும் கல்வி நிறுவனத்திற்கு அருகில் உள்ள வங்கியில் கடன் வாங்குவதே சிறந்தது. ஏனென்றால் சம்பந்தப்பட்ட மாணவர் தேவைப்படும்போது, கல்விக் கட்டணங்களை அருகில் இருக்கும் வங்கியில் இருந்து எளிதாக பெற்றுக் கொள்ளலாம்.

 
 
பெற்றோர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியில், தங்களது குழந்தைக்காக கல்விக்கடனை பெற

முயற்சி செய்வது நல்லது. வாடிக்கையாளராக அறியப்பட்ட வங்கியில் கடன் பெறுவதில் சிரமம் இருக்காது. புதிதாக அறிமுகமில்லாத வங்கியில் கடன் கேட்கும்போது, கடன் மறுக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

கல்விக் கடனுக்கு கியாரண்டி கேட்டு, கடன் மறுக்கப்படுவதாக பிரச்சினை எழுந்ததை தொடர்ந்து இந்த வருடம் புதிய திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி கல்விக் கடனாக அளிக்கப்படும் தொகைக்கு அரசு கியாரண்டி அளிக்கும். இதனால் அனைவருக்கும் கடன் எளிதாக கிடைக்கும்.

கல்விக்கடன் பெற வங்கிகளில் ஏறி இறங்குவதை தடுக்கவும், புதிய வசதி வந்துவிட்டது. அதன்படி ஆன்லைன் மூலமே கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தை அளிக்கலாம். சம்பந்தப்பட்ட வங்கி ஆன்லைனிலேயே விண்ணப்பத்தை பரிசீலித்து கடன் கிடைக்குமா? இல்லையா? என்ற தகவலை அளிக்கும். கடன் அளிப்பதாக உறுதி அளிக்கப்பட்டால், தேவைப்படும் ஆவணங்களை நேரடியாக அளித்துக் கடனை பெறலாம். இதன்மூலம் இரண்டு நாட்களுக்குள் கடனை பெறலாம். பிரபல வங்கிகள் இந்த வசதியை அறிமுகப்படுத்தி உள்ளன.

அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.எம் போன்ற பிரபலமான கல்வி நிறுவனங்கள் வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, தங்கள் மாணவர்களுக்கு எளிதாக கடனை அளிக்கின்றன.
 

 
http://www.dailythanthi.com/muthucharam/Home/second_page.asp?secid=23&artid=3261&issuedate=6/7/2008

StumbleUpon.com Read more...

ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே.ரவுலிங்குக்கு சவால் விடும் 19 வயது பெண்



இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் ஜே.கே.ரவுலிங். இவர் எழுதிய ஹாரிபாட்டார் கதைகள் இவருக்கு பெயரையும், புகழையும் கொடுத்ததோடு, கோடி கோடியாக பணத்தையும் குவித்தது. உலகக் கோடீசுவரர் பட்டியலில் அவர் பெயரையும் சேர்த்தது.

இப்போது இங்கிலாந்தில் புதிய எழுத்தாளர் ஒருவர் உருவாகி இருக்கிறார். அவர் பெயர் கேதரைன் பானர். இவருக்கு இப்போது 19 வயதாகிறது. 14 வயது முதலே கதைகள் எழுதி வருகிறார். மாயாஜால உலகில் வாழும் டீனேஜர் லியோ நார்த் என்னும் இளைஞரை மையமாக வைத்து கதைகளை எழுதி வருகிறார். லியோ நார்த் கையில் எழுதப்படாத புத்தகம் கிடைக்கிறது. இந்த புத்தகம் அவரை அதிசய உலகத்துக்கு அழைத்துச்செல்கிறது. இப்படி செல்கிறது கதை. இந்த கதைகள் ஹாரி பாட்டர் கதைகளை போல பிரபலம் அடையும் என்று புத்தக பதிப்பாளர்கள் நம்புகிறார்கள்.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=417555&disdate=6/7/2008

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP