|
சமீபத்திய பதிவுகள்
' ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கும் '
' ஈரான் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கும் ' | |
| |
ஈரான் அணு உலைகள் மீது இஸ்ரேல் இந்த ஆண்டு இறுதிக்குள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது. அமெரிக்க ராணுவத் தலைமையிடமான பென்டகன் அதிகாரிகள் இவ்வாறு அச்சம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் நாடான்ஸ் அணு உலை அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான அதிகபட்ச யுரேனியத்தை உற்பத்தி செய்கிறது. இதன் மீது 2009ஆம் ஆண்டில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க உளவுத்துறை கணித்துள்ளது. அவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளுக்கே அது பெரும் ஆபத்தை விளைவிப்பதாய் அமையும். அதாவது இஸ்ரேல், ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தினால், ஈராக், பெர்சிய வளைகுடா ஆகிய பகுதிகளில் ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்பிருக்கிறது. மேலும் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த புதிய அதிபர் பொறுப்பேற்பதற்குள் இந்த தாக்குதலை நடத்தலாம் என்றும் பென்டகன் கவலை வெளியிட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி மேலும் செய்தி வெளியிட்டுள்ளது. | |
(மூலம் - வெப்துனியா) |
Read more...
புலிகள் தாக்குதலில் உயிர் தப்பினார் ராஜ பக்சே
புலிகள் தாக்குதலில் உயிர் தப்பினார் ராஜ பக்சே | |
| |
இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே பயணம் செய்யவிருந்த ஹெலிகாப்டர் மீது விடுதலைப் புலிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அம்பாறை அறுகம்குடா பாலத்தினை திறந்து வைப்பதற்காக ராஜபக்சே பலத்த பாதுகாப்புடன் சென்றிருந்தார். பாலத்தினை திறந்து வைத்து ராஜபக்சே உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில், பிற்பகல் 1 மணியளவில் பொத்துவில் செங்காமம் சிறப்பு அதிரடிப்படையினரின் முகாமை நோக்கி விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து ராஜபக்சேவை அங்கிருந்து கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்காக ஹெலிகாப்டர் ஒன்று சம்பவ இடத்திற்கு விரைந்தது. அந்த ஹெலிகாப்டர் கஞ்சிகுடிச்சாறு வனப் பகுதி மீது பறந்தபோது விடுதலைப் புலிகள் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். உடனடியாக தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் உல்லைப் பாலத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கூட மைதானத்தில் தரையிறக்கப்பட்டது. ஹெலிகாப்டரை மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு அது சேதமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தை இலங்கை விமானப்படை உறுதிப்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் ராஜ பக்சே பயணம் செய்திருக்கலாம் என்று கருதி விடுதலைப் புலிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனிடையே இத்தாக்குதலில் இலங்கை விமானப் படையினர் 3 பேர் உயிரிழந்ததாகவும், 13 பேர் காயமடைந்ததாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | |
(மூலம் - வெப்துனியா) |
http://in.tamil.yahoo.com/News/International/0807/02/1080702025_1.htm
Read more...உயிருக்குப் போராடுகிறார் பின் லேடன்
| |||||
| |||||
http://in.tamil.yahoo.com/News/International/0807/02/1080702027_1.htm | |||||
Subscribe to:
Posts (Atom)