சமீபத்திய பதிவுகள்

வதந்திகளை நம்பவேண்டாம்: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள்

>> Saturday, July 12, 2008

வதந்திகளை நம்பவேண்டாம்: விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள்
ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பில் "பொய்மையில் இருந்து உண்மைக்கு" எனும் தலைப்பில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அன்பிற்குரிய தமிழீழ மக்களே!

எதிரி தனது முப்படைகளையும் கொண்டு தமிழர் தாய் மண் மீது ஒரு கொடிய போரை ஏவிவிட்டுள்ளான்.

மூர்க்கமான இப்போரின் மூலம் தமிழரை அடிமைப்படுத்த முயலும் எதிரி தனது சூழ்ச்சிகரமான உளவியல் போரையும் தொடுத்துள்ளான்.

உளவியல் போரின் இலக்காக மக்களை தேர்ந்தெடுத்திருக்கும் எதிரி, மக்களிடையே வதந்திகளை பரப்பி மனங்களை குழப்பி வருகின்றான்.

எமது விடுதலைப் போராட்டத்தின் பலமாக திகழ்வது மக்கள் சக்தியே. இந்த மக்கள் சக்தியை பலவீனப்படுத்துவதன் மூலம் எமது விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க முடியும் என எதிரி கணக்கிடுகின்றான்.

எனவே, மக்களின் மனரீதியான தைரியத்தை கண்டு சரிப்பதன் மூலம் தமிழர் போராட்டத்தை அழிக்கமுடியும் என எண்ணி வதந்திகளை பரப்பி வருகின்றான்.

இந்த வதந்திகளின் காவு சக்தியாக நாம் இருந்தோமானால், அது நம் இனத்தை பலவீனமாக்கும் செயலுக்கு நாமே துணை போவதாக அமையும்.

எதிரியினால் திட்டமிட்டு பரப்பப்படும் உண்மையை போன்று தோற்றமளிக்கும் பொய்களை ஆய்வு செய்யும் சுய விழிப்பை எமது மக்கள் கொண்டிருக்க வேண்டும்.

நம்பிக்கையீனங்களை உருவாக்கி மக்களின் தன்னம்பிக்கையை உடைத்துவிட முயலும் எதிரியின் எண்ணத்தை முறியடிக்கவேண்டும்.

வதந்திகள் கொடிய பாம்பைவிட ஆபத்தானவை. உண்மை ஊர் சுற்றி முடிப்பதற்குள் வதந்திகள் உலகைச் சுற்றி வந்துவிடும்.

எனவே, ஆதாரமற்ற தகவல்களை அப்படியே நம்பிவிடும் மனநிலையிலிருந்து விடுபட்டு, பகுத்தறியும் திறன்கொண்ட மக்களாக நாம் இருக்க வேண்டும்.

இதுவே எதிரியின் உளவியல் போரை வெற்றிகொண்டு தமிழர் தாய் மண்ணை விடுவித்து பலமான தேசமாக்க துணைநிற்கும்.

"இருள் முடிந்தே தீரும் பொழுது புலர்ந்தே தீரும்"

"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்"

என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

 

StumbleUpon.com Read more...

பளு தூக்கும் வீரர் அன்புக்கு கருணாநிதி ரூ. 10 லட்சம் பரிசு

பளு தூக்கும் வீரர் அன்புக்கு கருணாநிதி ரூ. 10 லட்சம் பரிசு
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

சென்னை:  தமிழகத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் என். அன்புக்கு முதல்வர் கருணாநிதி இன்று ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டுள்ள அன்பு இதுவரை 15 தங்கப் பதக்கங்கள், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.

கடந்த ஆண்டு கேரளாவில் நடந்த தேசிய சாம்பியன் போட்டியில், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்ைதயும் அன்புவென்றார்.

அவரது சாதனைகளைப் பாராட்டும் வகையிலும், எதிர்கால சாதனைகளுக்கு ஊக்கம் தரும் வகையிலும் அன்புக்கு ரூ. 10 லட்சம் பரிசினை தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி இன்றுகாலை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் கருணாநிதி ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை அன்பிடம் வழங்கினார்
 

StumbleUpon.com Read more...

ச‌ச்‌சி‌ன் டெ‌‌ண்டு‌ல்க‌ர் பிறந்த நாள்!

ச‌ச்‌சி‌ன் டெ‌‌ண்டு‌ல்க‌ர் பிறந்த நாள்!
சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் எ‌னது ஆட்டத்தையே நினைவுபடுத்துகிறது என்று கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஆட்டக்காரராகத் திகழ்ந்த சர் டொனால்ட் பிராட்மேன் கூறினார்.

இந்திய கிரிக்கெட் ர‌சிக‌ர்களா‌ல் ‌‌லி‌ட்டி‌ல் மா‌‌‌‌ஸ்‌ட‌ர் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌ம் ச‌ச்‌சி‌ன், தனது தனித்த அபார ஆட்டத்தினால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளவர்.

ஆஸ்ட்ரேலியாவில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இளம் வீரராக களமிறங்கிய சச்சின் தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரையும் அசர வைத்தவர்.

16 வய‌தி‌ல் ‌கி‌ரி‌க்கெ‌ட் ‌விளையா‌ட்டை துவ‌ங்‌கிய ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர், பா‌கி‌ஸ்தா‌ன் அ‌ணி‌க்கு எ‌திரான தனது முத‌ல்‌டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் ‌விளையாடினா‌ர்.

டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் டொனா‌ல்டு ‌ஃ‌ப்ரா‌ட்மே‌னு‌க்கு‌ம் ‌பிறகு ச‌ச்‌சி‌ன் எ‌ன்று‌ம், ஒரு நா‌ள் போ‌‌ட்டிக‌ளி‌ல் ‌வி‌விய‌ன் ‌ரி‌ச்ச‌ர்ச‌னு‌க்கு ‌பிறகு ‌ச‌ச்‌சி‌ன் இரு‌ப்பதும் பெருமைபட வே‌ண்டியது எ‌ன்று வெ‌ஸ்டி‌‌ன் எ‌‌ன்ற இணையதள‌ம் கு‌றி‌ப்‌பி‌ட்டு‌ள்ளது.

இ‌ந்‌திய ‌‌கி‌ரி‌க்க‌ெ‌ட் ‌வீர‌ர்க‌ளி‌ல் அ‌திக ‌விருதுகளை பெ‌ற்றவ‌ர் ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர். 1997-98ஆ‌ம் ஆ‌ண்டு ரா‌ஜீவ் கா‌ந்‌தி கே‌ல் ர‌த்னா ‌விரு‌ம், 1999ஆ‌ம் ஆ‌ண்டு ‌சிற‌ந்த சேவை‌க்காக ப‌த்மஸ்ரீ ‌விரு‌து‌ம், பிறகு ப‌த்ம ‌விபூஷ‌ண் ‌விரு‌‌தும் ச‌ச்‌சி‌ன் பெ‌ற்‌று‌ள்ளா‌ர்.

ஒரு நா‌ள் போ‌ட்டி‌யி‌ல் 16,000 ர‌ன்களு‌‌க்கு மே‌ல் கு‌வி‌த்து‌ள்ள ச‌ச்‌சி‌ன், டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் லாராவு‌க்கு அடு‌த்தபடியாக உ‌ள்ளா‌ர். டெ‌‌‌‌‌‌ஸ்‌ட் போ‌ட்டி‌யி‌ல் 39 சத‌ங்களு‌ம், ஒரு நா‌ள் போ‌ட்டி‌யி‌ல் 42 சத‌‌‌ங்க‌ள் அடி‌த்து சாதனை படை‌த்து‌ள்ளா‌ர் ச‌ச்‌சி‌ன்.

2003ஆ‌ம் ஆ‌ண்டு நட‌ந்த உலக கோ‌ப்பை‌யி‌ல் அ‌திக ர‌ன் கு‌வி‌த்த ‌வீர‌ர் எ‌ன்ற பெருமையை பெ‌ற்றவ‌ர் ச‌ச்‌சி‌ன். 1994, 1996, 1997, 1998, 2000, 2003 ஆ‌‌ண்டுக‌ளி‌ல் 1000 ர‌ன்க‌ளை கு‌வி‌த்து‌ள்ள ஒரே ‌‌வீர‌ர் ‌ச‌ச்‌சி‌ன். ஒரு நா‌ள் போ‌ட்டி ம‌ற்று‌ம் டெ‌ஸ்‌ட் போ‌ட்டி‌க‌ளி‌ல் அ‌திக சத‌ங்க‌ள் அடி‌த்த‌தி‌ல் ச‌ச்‌சி‌ன் முத‌ல் இட‌த்‌தி‌‌ல் உ‌ள்ளா‌ர்.

தனக்கும், தனது நாட்டிற்கும் இன்றுவரை பெருமை சேர்த்துவரும் சச்சின் டெண்டுக்கரின் பிறந்த நாள் . வாழ்த்துங்கள் சச்சினை!
http://www.tamil.webdunia.com/sports/cricket/articles/0804/24/1080424022_1.htm

StumbleUpon.com Read more...

பா‌‌‌கி‌ஸ்தா‌ன் அரசு‌க்கு தாலிபா‌‌ன் ‌மிர‌ட்ட‌ல்!

பா‌‌‌கி‌ஸ்தா‌ன் அரசு‌க்கு தாலிபா‌‌ன் ‌மிர‌ட்ட‌ல்!  
பா‌கி‌ஸ்தா‌ன் அரசு ராணுவ நடவடி‌க்கையை ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம், கைது செ‌ய்து‌ள்ள ‌தீ‌விரவா‌திகளை ‌உடனே விடு‌வி‌க்க வே‌ண்டு‌ம் அ‌ல்லது தா‌ங்க‌ள் ‌பிடி‌த்து வை‌த்து‌ள்ள அ‌ந்நா‌ட்டை‌ச் சே‌ர்‌ந்த 29 பாதுகா‌ப்பு படை ‌வீர‌ர்களையு‌ம் இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் முத‌ல் ஒ‌வ்வொருவரையாக கொலை செ‌ய்து ‌விடுவதாக தெ‌ஹ‌்‌‌‌ரிக்- இ- தாலிபா‌‌ன் பா‌கி‌ஸ்தா‌ன் (TTP) தலைவ‌ர் பைது‌ல்லா மெசூ‌த் ‌மிர‌ட்ட‌ல் ‌கெடு விடு‌த்து‌ள்ளா‌ர்.

இதை‌த்த‌வி‌ர எ‌ங்களு‌க்கு வேறு ‌வ‌ழி‌யி‌ல்லை எ‌ன்று‌ம் இ‌ன்று ம‌திய‌ம் 2 ம‌ணி‌‌க்கு‌ள் கைது செ‌ய்து‌ள்ள ‌தீ‌விரவா‌திகளை ‌விடு‌வி‌க்கா‌வி‌ட்டா‌ல் ‌தா‌ங்க‌ள் கட‌‌த்‌தி ‌வை‌த்து‌ள்ள பாதுகா‌ப்பு படை‌யினரை கொ‌ல்ல‌த் தொட‌ங்‌கி‌விடுவோ‌ம் எ‌ன்று‌ம் தாலிபா‌ன் செ‌ய்‌திதொட‌ர்பாள‌ர் மவு‌ல்‌வி ஓம‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌ன் உ‌ள்ளூ‌ர் காவ‌ல் துறை‌யின‌ர் தோபா பஜா‌ர் பகு‌தி‌யி‌‌ல் இரு‌ந்து தாலிபா‌ன் ‌தீ‌விரவா‌திகளை கைது செ‌ய்தத‌ற்கு ப‌ழி வா‌ங்கு‌ம் நடவடி‌க்கையாக, தோபா, தா‌‌ல் பகு‌திக‌ளி‌ல் இரு‌ந்து பா‌கி‌ஸ்தா‌னி‌ன் பாதுகா‌ப்பு‌‌ப் படை‌யின‌ர் 12 பே‌ர், துணை ராணுவ‌த்‌தின‌‌‌ர் 8 பே‌ர், காவ‌ல்துறை‌யின‌ர் 7 பே‌ர் உ‌ள்பட 29 பேரை பிடி‌த்து வை‌த்து‌ள்ளோ‌ம் எ‌ன்று ஓம‌ர் கூ‌றியதாக தகவ‌ல்க‌ள் ‌தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

எ‌னினு‌ம், பைது‌ல்லா மசூ‌த்து‌க்கு நெரு‌க்கமானவரு‌ம், த‌லிபா‌ன் இய‌க்க துணை‌த்தலைவருமான ர‌பியுடி‌ன் இ‌த்தகவலை மறு‌த்து‌ள்ளா‌ர்.
http://www.tamil.webdunia.com/newsworld/news/international/0807/12/1080712023_1.htm

StumbleUpon.com Read more...

சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?

சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?




 

சௌதி மன்னர் சவ அடக்கம் கண்டு, இத்தாலி பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா? பொய்யா?

தயவு செய்து சந்தேகம் தீர்த்து வையுங்கள், முஸ்லீம்களே!!!


முன்னுரை: சமீப காலமாக தமிழ் முஸ்லீம் அறிஞர்கள், இஸ்லாமுக்காக பல கட்டுரைகளை, கேள்வி பதில் கட்டுரைகளை, இஸ்லாமை தழுவிய மாற்று மத நண்பர்களின் சாட்சிகளை பதித்துக்கொண்டு வருகிறார்கள். இதே போல கிறிஸ்தவர்களும் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். பொதுவாக, உலக அளவில் மக்கள் ஒரு மார்க்கத்திலிருந்து வேறு மார்க்கத்திற்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கும், அதே போல இஸ்லாமிலிருந்து கிறிஸ்தவத்திற்கும் மாறிக்கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக கவனித்தால், மத நம்பிக்கையிலிருந்து நாத்தீகத்திற்கும் அதிக அளவில் மக்கள் மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

முக்கியமாக நான் இக்கட்டுரை எழுதுவதின் நோக்கம், "கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுகிறார்கள்" என்று இஸ்லாமியர்கள் சொல்லும் செய்திகளில் உள்ள உண்மையை அலசுவதாகும். இந்த விஷயத்தில் பார்க்கும் போது, முஸ்லீம் அறிஞர்கள் (கவனிக்கவும், சாதாரண முஸ்லீம்கள் அல்ல, முஸ்லீம் அறிஞர்கள், கட்டுரை எழுதுபவர்கள் போன்றவர்கள்) பொய்யான தகவல்களை சில நேரங்களில் தெரிந்தே கொடுத்துவிடுவது உண்டு. இப்படிப்பட்ட ஒரு விவரத்தைப் பற்றி தெளிவை அல்லது உண்மையை தெரிவிக்கும் படி நான் தமிழ் முஸ்லீம் அறிஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.

1. பொய்யை உண்மை என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள்:

மக்கள் சின்ன பொய்யை விட பெரிய பொய்யை சீக்கிரத்தில் நம்புவார்கள் என்று சொல்லுவார்கள். அது போல, நம் இஸ்லாமிய தளங்கள் ஆதாரங்கள் எதையுமே காட்டாமல், பெரிய பொய்களை அவிழ்த்து விட்டுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒருசில பொய்களை கீழேயுள்ள கட்டுரைகளில் படிக்கலாம்:

A) 2500 கிறிஸ்தவ பாதிரிகள் இஸ்லாமை தழுவினார்கள்:

சூடான் நாட்டின் "கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின்" பொதுச் செயலாளர் இஸ்லாமுக்கு மாறினாராம். இவர் மூலமாக இதுவரை (5 ஆண்டுகளுக்குள்) 1,50,000 பேர் இஸ்லாமுக்கு மாறியிருக்கிறார்களாம். இவர்களில் 2500 பேர் கிறிஸ்தவ போதகர்களாம். படிக்கவும்: 2500 கிறிஸ்தவ பாதிரிகள் இஸ்லாமை தழுவினார்ககளா?

இந்த செய்தி உண்மையா என்று கேட்டேன், இன்று வரை பதில் இல்லை.

B) கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?

கிறிஸ்தவ பாதிரிகள் ஹஜ்செய்தார்கள் என்று கட்டுரை எழுதினார்கள், அப்படியானால், ஆதாரம் எங்கே என்று கேட்டேன், இதுவரை பதில் இல்லை. ஏதோ ஒரு பத்திரிக்கை பெயரை குறிப்பிடுவார்கள்( தமிழ் நாட்டில் உள்ளவர்கள், அந்த பத்திரிக்கைகளில் இச்செய்தி உள்ளதா என்று தேடிபார்க்கமாட்டர்கள் என்று நம்பிக்கையில்), ஆனால், அந்த செய்தி வெளியான தொடுப்பை கொடுக்கமாட்டார்கள். படிக்க:
கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா? நேசமுடன் தளம் வெளியிட்ட செய்தி பொய்யா மெய்யா?

C) ஜீமெயில் படத்தை திருத்தி, இது தான் ஆதாரம் என்றார்கள்:

தங்களுக்கு வாசகர்களிடமிருந்து கேள்விகள் வந்தன என்றுச் சொல்லி, கிறிஸ்தவம் பற்றி கட்டுரைகளை எழுதினார்கள். இவைகள் பொய் என்றுச் சொன்னோம், உடனே, தங்களுக்கு வாசகர்களிடமிருந்து மெயில் வந்ததாகச் சொல்லி, ஜீமெயில் படத்தை திருத்தி அதை ஆதாரமாக பதித்தார்கள். படிக்க: கிறித்துவம் கேள்வி பதில்-2 : எங்கள் மறுப்பு - 2 Fake Gmail e-mail ஆதாரமாக கொடுத்த இது தான் இஸ்லாம் தளம்

2. இப்பொழுது இன்னொரு செய்தி, முஸ்லீம்களிடமிருந்து:

மன்னர் பஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!


இந்த செய்தியை நான் பொய் என்று திட்டவட்டமாக சொல்லப்போவதில்லை, அதற்கு பதிலாக இந்த செய்திக்கான ஆதாரத்தை தரும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த செய்தி பல இஸ்லாமிய தமிழ் தளங்களில் பதிக்கப்பட்டுள்ளது.

இப்னுபஷீர், சித்தார் கோட்டை, மஸ்டோகா, ஆதிரை ஐஐசி, தமிழ் முஸ்லீம்.

இத்தாலிய பாதிரியார் இஸ்லாமை தழுவிய விதம்:

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

emphasis mine

3. இந்த செய்திக்காக இஸ்லாமியர்கள் காட்டிய ஆதாரங்கள்:

இந்த செய்திக்காக இஸ்லாமியர்கள் முன்வைக்கும் ஆதாரம், அரப் நியூஸ் என்ற ஆங்கில தளம் ஆகும். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், எந்த ஆங்கில செய்தித் தளத்தை இவர்கள் குறிப்பிட்டார்களோ, அந்த தளத்தில் இச்செய்தி வெளிவந்த தொடுப்பையும் இவர்கள் தரவில்லை. எந்த கட்டுரையை மொழிபெயர்த்தார்களோ அதன் தொடுப்பை கொடுத்து இருக்கலாம், அதையும் இவர்கள் தரவில்லை. மூல தொடுப்பை கொடுக்காமல் கட்டுரைகளை மொழிபெயர்த்து வெளியிடும் கலாச்சாரத்தை என்னவென்றுச் சொல்ல.

இனி இச்செய்தி உண்மையா அல்லது பொய்யா என்பதை அலசுவோம்

4. எளிமையான சவஅடக்கத்தை கண்டு ஒரு கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவ வாய்ப்பு இல்லையா?

ஒரு மனிதன் ஒரு மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு நற்செயலும் காரணமாக இருக்கலாம், ஒரு அரசரின் சவ அடக்கம், மிகவும் எளிமையாக நடைப்பெறுவதைக் கண்டு மக்கள் ஆச்சரியப்பட வாய்ப்பு உள்ளது. இங்கு என் சந்தேகம், என்னவென்றால், இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சி உண்மையா என்பதாகும்? மன்னர் மரித்தது உண்மை தான், மன்னரின் சவ அடக்கம் மிகவும் எளிமையான முறையில் நடந்தது உண்மை தான் ( மன்னர் உயிரோடு இருக்கும் போது எப்படி ஆடம்பரமாக வாழ்ந்தார் என்பது வேறு விஷயம்). ஆனால், இந்த எளிமையான சவ அடக்கத்தைக் கண்டு, கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவியது உண்மையா?

இச்செய்தி:

உண்மையாகவும் இருக்கலாம்

அல்லது

பொய்யாகவும், முஸ்லீம்களின் கட்டுக்கதையாகவும் இருக்கலாம்.


என் கருத்துப்படி, இச்செய்தியில் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி, இது உண்மையாக இருக்க குறைவான வாய்ப்பு உள்ளது. ஆனால், பொய்யாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக நான் காண்கின்றேன்.

நான் ஏன் இப்படி முடிவு செய்யவேண்டி வந்தது என்பதற்கான காரணங்களை இங்கே தருகிறேன். ஒருவேளை என் கணிப்பு தவறாக இருக்குமானால், அதை தெரிவித்தால், இச்செய்தி உண்மையாக இருக்கும்பட்சத்தில் இக்கட்டுரையை என் தளத்திலிருந்து எடுத்துவிடுகிறேன்.

1. முதலாவதாக, ஆங்கில மூல தொடுப்பையும் முஸ்லீம்கள் தராமல் ஏன் கட்டுரை எழுதுகின்றார்கள்.

நீங்கள் சொல்ல வந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இக்கட்டுரையை பதித்தவர்களில் ஒருவராவது ஆங்கில தொடுப்பை கொடுத்து இருக்கலாம்.

இக்கட்டுரையின் ஆங்கில தொடுப்பை நான் தருகிறேன்.

Moved by Simplicity of Royal Funeral, Priest Embraces Islam

P.K. Abdul Ghafour, Arab News

... அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. ...

Source: http://www.arabnews.com/?page=1§ion=0&article=68768&d=21&m=8&y=2005

2. மொழிபெயர்க்கும் போது, விட்டு விட்ட முக்கியமான விவரம்:

இஸ்லாமியர்கள் இக்கட்டுரையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் போது, தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ கீழ் கண்ட விவரங்களை மொழிபெயர்க்கவில்லை.

"Al-Riyadh Arabic daily reported without mentioning his name."
"ரியாத் நகரில் வெளியாகும் அரபி தின‌ பத்திரிக்கை அவரின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தது"


அதாவது, அரப்நியூஸ் என்ற தளத்தில் வெளியான இந்த செய்தி, "Al-Riyadh Arabic daily " பத்திரிக்கையின் மூல தொடுப்பு இல்லாமல், பெயர் இல்லாமல், நாள் இல்லாமல் வெளிவந்துள்ளது. இந்த விவரத்தை ரியாத் நகரில் வெளிவரும் அரபி செய்தித்தாள் வெளியிட்டதாம். இந்த அரப்நியூஸ் தளம் வேறு எந்த ஆதாரத்தையும் தராமல், ஒரே வரியில் தன் ஆதாரத்தை முன்வைத்து விட்டது. சரி, நம் இஸ்லாமியர்கள் அதையாவது மொழிபெயர்த்தார்களா என்று கேட்டால், அதையும் இவர்கள் செய்யவில்லை.

இப்போது நம் சந்தேகங்கள்:

1. ஏன் அரப்நியூஸ் தளம் தான் வெளியிட்ட செய்தி, ரியாதில் தினமும் வெளிவரும் அரபி தினபத்திரிக்கையில் எந்த நாள், எந்த தேதியில் வெளிவந்தது என்று குறிப்பிடவில்லை? இந்த அரப்நியூஸ் தள நிர்வாகிகளுக்கு இச்செய்தி ஒரு பொய்யான செய்தி என்று தெரியுமா?

2. "Al-Riyadh Arabic daily" என்பது ஒரு பத்திரிக்கையின் பெயரா? அல்லது "இந்தியாவில் தமிழில் வெளிவரும் ஒரு பத்திரிக்கையில் வெளியானது" என்று சரியான ஆதாரமே இல்லாமல் சொல்வது போல ஒரு பொதுவான விவரமா?

3. பிரபல கிறிஸ்துவ பாதிரியார் (a well-known Christian priest) என்பதன் பொருள் என்ன?

தமிழில் "பிரபல கிறிஸ்தவ பாதிரியார்" என்றும் ஆங்கிலத்தில் "A Well-Known Christian Priest" என்றும் எழுதிவிட்டு, அவர் இஸ்லாமை தழுவியது, ஏதோ ஒரு கிராமத்தில் ஒரு குடிசையில் நடந்த நிகழ்ச்சி போல ஆதாரமே சொல்லாமல் எழுதினால் எப்படி சகோதரரே? என் சந்தேகம் வலுவானதாக மாறியதற்கு இதுவும் ஒரு காரணமாகும்.

ஒரு பிரபலமான கிறிஸ்தவ பாதிரியார் இஸ்லாமை தழுவினார் என்பது ஒன்றும் ஒரு சாதாரண விஷயமல்லவே! மட்டுமல்ல, அவர் இஸ்லாமுக்கு மாறியிப்பாரானால், வேறு ஏதாவது பத்திரிக்கையில் அச்செய்தி வந்திருக்குமே, இப்படி இஸ்லாமியர் அல்லாத பத்திரிக்கையில் வந்ததாக என் கண்ணில் படவில்லை, தெரிந்தவர்கள் தெரிவிக்கவும்.

அப்படியில்லையானால், இந்த பிரபலமானவர் இன்னும் தன் கிறிஸ்தவ சபையையே நடத்திக்கொண்டு, இயேசுவைப் பற்றி சுவிசேஷம் சொல்லிக்கொண்டு இருக்கிறாரா? ஒரு பிரபல பாதிரியார் இஸ்லாமுக்கு மாறியிருந்தால், அந்த சபைக்கு முதலாவது தெரியும், அவர் சபையை நடத்தமாட்டார், இந்த விஷயம் குறைந்தபட்சம் இத்தாலியில் அவர் வாழ்ந்த நகரில், ஒரு செய்தியாக செய்தித்தாள்களில் வெளிவந்து இருக்கும். இந்த இணைய காலத்தில், இணையத்திலும் உலாவரும்.

சில முஸ்லீம்கள் "அவரது உயிருக்கு ஆபத்து வரும் என்பதால் தான், அவர் பெயர் மற்றும் இதர விவரங்கள் வெளியிடவில்லை" என்று சொல்லக்கூடும். இது பலவீனமான வாதம் ஏனென்றால், அவர் தழுவியது இஸ்லாமை, அப்படியானால், அவருக்கு பாதுகாப்பு நிச்சயமாக இஸ்லாமியர்களே தருவார்கள், இன்னும் ஒரு விவரம் என்னவென்றால், எந்த கிறிஸ்தவனும் அவரை கொல்லமாட்டான், அப்படி கொல்லும்படி எங்களுக்கு எங்கள் தேவன் கட்டளை கொடுக்கவும் இல்லை, அதாவது ஒரு கிறிஸ்தவர் முஸ்லீமாக மாறினால் அவரை கொல்லுங்கள் என்று இத்தாலியில் இப்படி ஒரு சட்டமும் இல்லை. விஷயம் இப்படி இருக்கும் போது, எப்படி ஆபத்து வரும்? இது நம்பும்படி இல்லை.

4. ஆதாரத்திற்காக இணையத்தில் என் தேடல்:

இக்கட்டுரையை எழுதுவதற்கு முன்பாக, இணையத்தில் இதற்கு யாரவது பதில் அளித்து இருப்பார்கள் என்று தேடிப்பார்த்ததில், ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஆனால், ஒரு கத்தோலிக்க போரமில் (http://forums.catholic.com/showthread.php?t=70876 ) ஒரு இஸ்லாமிய உறுப்பினர் இதே கட்டுரையை பதித்து இருந்தார்கள். அதற்கு ஆதாரம் என்ன‌? என்று அத்தளத்தில் கேட்கப்பட்டு இருந்தது, இதற்கு அக்கட்டுரையை பதித்த இஸ்லாமியர், தான் அந்த செய்தியை வெளியிட்ட அரப்நியூஸ் தளத்திற்கு மெயில் அனுப்பி, இன்னும் விவரங்களை சேகரித்து, பதிப்பதாக சொல்லியிருந்தார்கள்.

Re: Priest Embraces Islam B/c Of Fahd's Funeral

The story was taken from www.arabnews.com, which is run by Saudi Research & Publishing Co., a Saudi based English-language daily newspaper. It is a well established news outlet and is distributed around the world. It seems they took the story from ar-Riyadh, which is an arabic newspaper.

As for why theres no name, perhaps he didnt wanna be named for fear or to avoid public attention.

Anyhow, i dont mind looking into the story myself, i will write to the writer of the article and ask if he could provide more sources for the story. If he replies, ill post the sources. …..

I think it is fair for those reading this thread to doubt the story. Although what i know from that source is that they are credible, i cannot find anymore sources other than them. And since this is regarding a conversion, it is important there be no shadow of a doubt the story is true.

thanks for all your replies.

Source : http://forums.catholic.com/showthread.php?t=70876

அதே போல, ஒரு கிறிஸ்தவ சகோதரர், வாடிகன் ஏசியாநியூஸ்(AsiaNews, Vatican) செய்தித்தாள் நிறுவத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, அப்படி யாரும் மாறவில்லை என்று சொன்னதாக தெரிவித்துள்ளார். (உண்மையிலேயே இத்தாலி பாதிரியார் இஸ்லாமுக்கு மாறினார் என்பதை ஆதாரத்துடன் நிருபித்தால், இந்த சகோதரருக்கு மெயில் அனுப்பி இவரது செய்தியின் நம்பகத்தன்மையை நான் அறிந்துக்கொள்வேன்). இதையும் படிக்கவும்.

I have received a mail from the Director of Asianews, Vatican.

According his reports no priest embraced to Islam recently from Italy.

If any one has any link with the priest`s name please provide. If you don`t have his name and clear address please don`t.

Source Page 2: http://forums.catholic.com/showthread.php?t=70876&page=2

இந்த கத்தோலிக்க இணையத்தில் இப்பதிவுகள் பதிக்கப்பட்டது கடைசியாக செப்டம்பர் மாதம் 2005ம் ஆண்டு ஆகும்(மன்னர் காலமானவது 2005 ஆகஸ்ட் மாதமாகும்.) ஆனால், இதுவரை எந்த தகவலும் அந்த இஸ்லாமிய உறுப்பினர் பதித்ததாக தகவல் இல்லை.

5. தமிழ் முஸ்லீம்களிடம் நான் கேட்க விரும்புவது?

இந்த ஒரு செய்தியை பல தளங்களில் பதித்து உள்ளீர்கள், உங்களில் யாராவது அந்த அரப்நியூஸ் செய்தித்தாள் தளத்திற்கு மெயில் அனுப்பி, விவரங்களை தெரிந்துக்கொண்டு பதித்தால், நீங்கள் சொன்னது உண்மை என்று நிருபிக்கப்படும். இந்த வேலையை நாங்கள் ஏன் செய்யப்போகிறோம், நீ தான் செய்யனும் என்று என்னிடம் கேட்கவேண்டாம், ஏனென்றால், செய்தியை ஆதாரம் இல்லாமல் வெளியிட்டது நீங்கள், எனவே, ஆதாரத்தை சேகரிக்கும் வேலையும் உங்களுடையது தான். ரியாதில் உள்ள உங்கள் நண்பர்களை தொடர்பு கொண்டு அந்த "ரியாத் தினசெய்தித்தாள்" பற்றி தெரிந்துக்கொண்டு விவரங்களை சேகரித்து தெரிவியுங்கள். இப்படி நீங்கள் செய்தால், உங்கள் நம்பகத்தன்மை, நேர்மை வெளிப்படும், இஸ்லாமுக்காக நீங்கள் படும் பாடுகள் அனைத்திற்கும் உபயோகம் என்பது இருக்கும்.

நீங்கள் இந்த விவரங்களை தரவில்லையானால், பல பொய்களில் இதுவும் ஒரு பொய் என்று எல்லா மக்களுக்கும் தெரிந்துவிடும். உங்கள் தளங்களில் உள்ள கட்டுரைகளின் நம்பகத்தன்மை என்னவென்று எல்லாருக்கும் தெரிந்துவிடும்.

முடிவுரை: இதுவரை நான் சொன்ன விவரங்களில் ஏதாவது குறைகள் இருக்குமானால், அல்லது இதற்கு யாராவது பதில் சொல்ல விரும்பினால், எனக்கு தெரிவியுங்கள் ( isa.koran (at) gmail (dot) com ). அல்லது பின்னூட்டம் இடுங்கள். கடைசியாக நான் சொல்லவிரும்புவது இது தான், நீங்கள் சொன்ன விவரம் உண்மையாக இருக்குமானால், உங்களால் நிச்சயமாக ஆதாரங்களை சேகரிக்கமுடியும். எனக்கு வந்த இந்த சந்தேகம் தீர்க்கப்படலாம்.

என் சந்தேகத்தை மட்டுமே முன்வைத்தேன், ஒருவேளை உண்மையாகவே இத்தாலிய பாதிரியார் இஸ்லாமுக்கு மாறியிருக்கலாம், ஆனால், ஆதாரம் எங்கே என்று தான் கேட்கிறேன். இச்செய்தி பொய்யாக இருக்கலாம் என்று நம்புவதற்கு அதிகமாக வாய்ப்புக்கள் இருப்பதால் தான் நான் கேட்கிறேன், உங்களை அவமானப்படுத்த அல்ல.

(பின்குறிப்பு: யாராவது ஒரு பொய்யான மெயிலை தயார் செய்து, இது எங்களுக்கு அரப்நியூஸ் தள நிர்வாகத்திலிருந்து வந்தது என்றுச் சொல்லி, மறுபடியும் பொய்யான தகவலை பதித்தால், அதுவும் வெளிவர அதிக நாட்கள் பிடிக்காது என்பதையும் என் அருமை தமிழ் இஸ்லாமிய அறிஞர்களுக்கு அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்).

ரோமர் 1:18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.



 

 

StumbleUpon.com Read more...

எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்களா? (American=Christian?)

எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்களா? (American=Christian?)





 

கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது?

அல்லது

கிறிஸ்தவம் மேற்கு...கிழக்கு...வடக்கு ம‌ற்றும் தெற்கத்திய மார்க்கமாகும்!

Why Christianity is Western
Or
Christianity is Western ... And Eastern and Southern, and Northern!

உங்கள் மனதின் சிந்தனையை கிளறி, சிந்திக்க‌த் தூண்டும் சில‌ வரிக‌ளை நான் சொல்ல‌ட்டும்.

எல்லா யூதர்களும் பணக்காரர்கள்

எல்லா கருப்பின மக்களும் நல்ல விளையாட்டு வீரர்கள்

எல்லா பிரன்சுக்காரர்களும் க‌ரடுமுரடானவர்கள்

எல்லா மெக்ஸிக்கோகாரர்களும் சோம்பலானவர்கள்

எல்லா அரபியர்களும் தீவிரவாதிகள்


இப்படிப்பட்ட சுருக்கமான, சுலபமான வார்த்தைகளைத் தான் மக்கள் கலாச்சாரத்தை விவரிக்க பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவைகள் தவறானவைகளாக இருக்கின்றது. எனக்குத் தெரியும், பல பணக்கார யூதர்கள் இருப்பது உண்மை தான், பிரன்சுக்காரர்களில் சிலர் கரடுமுரடானவர்கள் இருப்பதும் உண்மை தான், மற்றும் சோம்பளுள்ள மெக்ஸிக்கோகாரகள் இருப்பதும் உண்மை தான். அதே போல, கருப்பர்களில் மிகவும் திறமையான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள், மற்றும் சில அரபியர்கள் தீவிரவாதிகளாகவும் இருக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட ஒரு சிலரை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் நாட்டிற்கும், இனத்திற்கும், கலாச்சாரத்திற்கும் பொதுவான பெயரைத் தருவது சரியானதல்ல. பல‌வித்தியாசமான கலாச்சாரத்தைப் பற்றி தெரியாதவர்களும், தெரியாத விவரங்களைப் பற்றி தெரிந்தவர்கள் போல காட்டிக்கொள்கிறவர்கள் சொல்லும் வார்த்தைக‌ள் தான் இந்த‌ வ‌ரிக‌ளாகும். உண்மையில் அவ‌ர்க‌ள் த‌வறாக‌ புரிந்துக் கொண்டுள்ளார்க‌ள். இன்னொரு முக்கிய‌மான‌ வ‌ரியைச் சொல்கிறேன்.

எல்லா அமெரிக்கர்களும் கிறிஸ்தவர்கள்.

நான் ஒரு அமெரிக்க பிரஜையாகவும், அதே நேரத்தில் ஒரு கிறிஸ்தவளாக‌னாகவும் இருப்பதினால், மேலே சொல்லப்பட்ட வரியும் உண்மைக்கு முரணாக உள்ளதென்பதை நான் நிச்சயமாக சொல்லமுடியும். நான் சொல்வதை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம், ஆனால், "கிறிஸ்தவன்" என்றால் என்ன பொருள் என்று அமெரிக்காவிற்கு தெரியவில்லை என்பது தான் உண்மை.

ஐரோப்பிய நாடுகளில் இருந்த மக்கள் மத கொடுமைகளிலிருந்து தப்பித்து இந்த அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்கள் என்றும் இப்படிப்பட்ட மக்களால் தான் இந்த அமெரிக்க நாடு உருவாக்கப்பட்டது என்றும் நம் எல்லாருக்கும் தெரியும். (இதே "கிறிஸ்தவ" மனப்பான்மை தான் குருசேடர்கள் என்ற பெயரில் முஸ்லீம்களை கொன்றது, ஆனால், தங்களுக்கு இதே பிரச்சனை வரும்போது, அதை இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை - the same "Christian" mentality that slaughtered Muslims during the Crusades turned its attention to others of which it didn't approve!), நம்முடைய சுதந்திரமும் மற்றும் சட்டங்களும் பைபிளில் அவர்கள் கண்ட சத்தியத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. இப்படிப்பட்ட சுதந்திரத்தில் ஒரு சுதந்திரம் தான், நம் சமய கோட்பாடுகளுக்கேற்ப நமக்கு விருப்பமான இறைவனை நாம் வணங்கவும் அல்லது வணங்காமல் இருக்கவும் கொடுக்கபப்டும் சுதந்திரம். இக்காரணங்களை முன்னிட்டு, மக்கள் பாதுகாப்பாகவும் மற்றும் சுயஅதிகாரம் உடையவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக‌, அமெரிக்க ஐக்கிய நாட்டின் அரசாங்கம் குறைவான அதிகாரங்களை தன்னிடம் கொண்டுள்ளது, அதே சமயத்தில் தேவைப்படும் போது சட்டம் மீறப்படும் சமயங்களில், அதே அரசாங்கம் தன் நீதித்துறையின் அதிகாரத்தின் மூலமாக மக்களை பாதுகாக்கிறது.

இன்னுமுள்ள சுதந்திரங்களில் குறிப்பிடத்தக்கது, அரசாங்கம் மக்களை அநியாயமாக கொடுமைபடுத்தக் கூடாது என்ற சுதந்திரமாகும்.

இந்த சுதந்திரங்கள் மிகவும் முக்கியமான மற்றும் சரித்திர பூர்வமாக உள்ள ஒரு கலவை உருவாக உதவுகின்றன, அது என்னவென்றால், வித்தியாசமான பின்னணிகளைக் கொண்ட மக்கள் ஒருமித்து வாழ கற்றுக்கொண்டு ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையாக வாழும் கலவையாகும். ஒருவன் நீங்கள் நம்புவதை நம்பாமல் வேறு ஒன்றை நம்புகின்றார் என்பதற்காக சட்டத்தை பயன்படுத்தி அவனை கொடுமைப்படுத்தக்கூடாது. இந்த சுதந்திரத்தை மக்கள் சரியாக பின்பற்றவில்லையானாலும், இந்த சுதந்திரத்தின் அடித்தளம் நேரடியாக தேவனின் யோசனையிலிருந்து வந்ததாகும், "யூதனென்றும் கிரேக்கன் என்றுமில்லை. அடிமையென்றும் சுயாதீனன் என்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை" நீங்கள் எல்லாரும் அவருடைய பார்வையில் சமமாயிருக்கிறீர்கள் (கலாத்தியர் 3:28).

எப்ப‌டியாயினும், அமெரிக்க‌ ஐக்கிய‌ நாடுக‌ள் உருவான‌ நாட்க‌ள் முத‌ற் கொண்டு, ப‌ல‌ ஆண்டுக‌ள் க‌ட‌ந்து விட்ட‌ன‌, ம‌ற்றும் ந‌ம் சுத‌ந்திர‌ங்க‌ளின் அடிப்ப‌டை த‌த்துவ‌ங்க‌ள் சிறிது சிறிதாக‌ ம‌ற‌க்க‌ப்ப‌ட்டு விட்ட‌ன‌ ம‌ற்றும் அல‌ட்சிய‌ம் செய்ய‌ப்பட்டுள்ள‌ன‌. ந‌ம்முடைய‌ நாடு கிறிஸ்தவத்தின் அடிப்படை கோட்பாடுக‌ளின் மீது உருவாக்க‌ப்ப‌ட்ட‌து என்ப‌தை கூட‌ ம‌க்க‌ள் ச‌ரியாக‌ தெரிந்துக் கொள்ளாம‌ல் இருக்கிறார்க‌ள். இது ம‌ட்டுமா, குறைந்த‌ ப‌ட்ச‌மாக‌ "கிறிஸ்த‌வ‌ அடிப்ப‌டை கோட்பாடுக‌ள்" என்றால் என்ன‌ என்ப‌தையும் தெரிந்துக் கொள்ளாம‌ல், "கிறிஸ்த‌வ‌ன்" என்றால் ஒரு கலாச்சார‌ம் ச‌ம்ம‌ந்த‌ப்ப‌ட்ட‌ வார்த்தையாக‌ க‌ருதிக்கொண்டு இருக்கிறார்க‌ள். ஒருவ‌னின் பெற்றோர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளாக‌ இருந்தால், அவ‌ன் கூட ஒரு கிறிஸ்த‌வ‌ன், ச‌ரியா? என்று கேட்டால், பதில் தவறு என்பதாகும்.

இந்நாட்டை தோற்றுவித்த நம் முன்னோர்கள், கிறிஸ்தவத்தை நாட்டின் அங்கீகரிக்கபப்ட்ட மதமாக ஆக்கியிருந்தாலும், நாம் குழப்பமடையத் தேவையில்லை. கிறிஸ்தவத்தில் உள்ள ஒரு முக்கியமான அடிப்படை கோட்பாடு என்னவென்றால், இறைவனை நம்பும் படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதாகும். தேவன் அவருடைய அன்பு மற்றும் இரக்கத்தின் பக்கம் நீங்கள் உங்கள் சுய விருப்பத்தின் படி திரும்ப வேண்டும் அல்லது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இந்நாட்டை தோற்றுவித்த நம் முன்னோர்கள் அவர்களால் முடிந்த ஒன்றை செய்து விட்டு சென்றுள்ளார்கள், அது என்னவென்றால், இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை என்றால் என்ன? என்ற கேள்விக்கு எதிர் காலத்தில் வரும் ஒவ்வொரு சந்ததியும் பதில் அளிக்கட்டும் என்று விட்டுவிட்டார்கள் (So our founders did the only thing they could—they left the question of faith to be answered by each succeeding generation).

ஆகையால், நம் நம்பிக்கைகள் மற்றும் செயல்களுக்கு நாமே பொறுப்பு வகிப்பதையே சுதந்திரம் என்கின்றோம். துரதிஷ்டமாக, மக்கள் இயேசுவின் போதனைகளை நம்புவதைக் காட்டிலும், எதையும் நம்பாமல் இருப்பது மிகவும் சுலபம் என்று எண்ணி விடுகின்றனர். இதைவிட மிகவும் கொடூரமானது என்னவென்றால், மக்கள் தங்களுக்கு மிகவும் கவர்ச்சியாக உள்ள போதகத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் ஆனால், தங்கள் மனதிற்கு சஞ்சலத்தை கொடுத்தும் போதகத்தை தள்ளி விடுகின்றனர். இப்படிப்பட்ட மனப்பான்மைத் தான் "கிறிஸ்தவன்" என்ற வார்த்தையின் உண்மை அர்த்தத்தை மறைக்கச் செய்கிறது. "கிறிஸ்தவன்" என்ற வார்த்தைக்கு பொருள் என்னவென்றால், அவன் "கிறிஸ்தவ" பெற்றோருக்கு பிறந்தவனாக இருக்கலாம், அல்லது "சரியான ஒன்றைச் செய்கிறவனாக" இருக்கவேண்டும் . நீங்கள் மற்றவர்களை சரியாக நேர்மையாக நடத்தவிரும்பினால், அவர்களை சபிக்காதீர்கள், அல்லது அவர்களை மது அருந்தச் செய்யாதீர்கள், இப்படி நீங்கள் செய்வீர்களானால், நீங்கள் கிறிஸ்தவராக நடந்துக்கொள்கிறீர்கள் என்று பொருள். இன்று நாம் பொதுவாக‌ "கிறிஸ்தவம்" என்ற வார்த்தைக்கு கொடுக்கும் பொருளில், அன்று இயேசு வாழவில்லை. இன்றுள்ள கிறிஸ்தவம் என்ற வார்த்தையின் பொருளுக்குள் அவரை நாம் அடைக்க முடியாது.

இயேசுவின் வார்த்தைகளை மிகவும் ஆர்வத்துடன் நம்புகின்ற எங்களைப் பற்றி இப்போது நீங்கள் கற்பனை செய்துப் பார்க்க முடியும். நாம் நம் அயலகத்தாருடன் நம் நம்பிக்கைப் பற்றி பேசுவதற்கு முன்பாக சில பழக்கப்பட்ட வார்த்தைகளின் உண்மை பொருள் என்ன என்பதை வகையறுக்க வேண்டும். உண்மையைச் சொல்லப் போனால், "சர்ச் அல்லது கிறிஸ்தவ சபை" என்ற வார்த்தையும் தன் முழு அர்த்தத்தை இழந்து விட்டது எனலாம். இப்போது இவ்வார்த்தைக்கு "இயேசுவின் சரீரம்" என்று பொருள் இல்லை, இதற்கு பதிலாக சர்ச் என்பது ஒரு கட்டிடம், அங்கே மத சம்மந்தப்பட்ட மக்கள் கூடுவார்கள் அல்லது ஆன்மீக உற்சாகம் உள்ளவர்கள் கூடும் ஒரு இடம் என்று பொருளாக மாறிவிட்டது. இப்படிப்பட்ட குழப்பம் நம்முடைய எல்லைக்குள் உள்ளவர்களிடையே இருக்கிறது, அப்படியானால், வேறு ஒரு கலாச்சாரத்தை பின்பற்றுபவர்கள் புரிந்துக் கொள்ளவிலலை என்றுச் சொல்வதில் ஆச்சரியமில்லை.

[கீழ் கண்ட பத்தியை படிப்பதற்கு முன்பாக ஒரு சிறு தமிழாக்க‌ குறிப்பு: அமெரிக்காவில் சோப் ஆபுரா என்று ஒரு நாடகத்தை (மெகா சீரியல்) தொலைக் காட்சிகளில், வானொலிகளில் ஒளி(லி)பரப்புகிறார்கள். இந்த நாடகங்கள் பெரும்பான்மையாக உயர்மட்ட பணக்கார பெண்கள் மற்றும் ஆண்களின் வாழ்க்கையைப் பற்றிய கற்பனைக் கதை அல்லது நாவலாக தயாரித்து ஒளி(லி)பரப்புவார்கள். இந்நாடகங்களில் பெரும்பான்மையாக செக்ஸ் அல்லது உடலுறவு, மற்றும் கள்ளத் தொடர்புகளுள்ள உறவுகள்  பற்றிய கதைகள் தான் மேலோங்கி இருக்கும். இந்நாடகங்களைக் காணும் அமெரிக்கர் அல்லாத நாட்டு மக்கள், அமெரிக்காவின் வாழும் மக்களின் உண்மை வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று நம்பிவிடுகின்றனர். மேலும் அறிய இங்கே Soap-Opera  சொடுக்கவும்.]

இப்படி மக்கள் கிறிஸ்தவத்தை தவறாக புரிந்துக் கொள்வதினால், பல திடுக்கிடும் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு இது காரணமாகிவிடுகிறது. ஒரு முறை நான் துருக்கியில் இருக்கும் போது இப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு முறை நானும் என் சிநேகிதியும் துருக்கி நாட்டுக்கு பிரயாணப்பட்டு இருந்தோம், துருக்கியில் சந்திக்கும் நபர்களிடம் நம் குடும்ப நபர்களின் புகைப்படங்களை கொண்டுச்சென்று காட்டும் படி எங்களுக்கு அறிவுரை கூறப்பட்டது. என்னோடு வந்த அந்த சிநேகிதி, தன் வீட்டில் விட்டுவந்த தன் நான்கு பிள்ளைகளின் புகைப் படங்களை தன்னோடு கூட கொண்டு வந்தாள், மற்றும் அவைகளை மற்றவர்களிடம் காட்டும் போது மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டே காட்டினாள். துருக்கியில் எங்களோடு வந்த வழிகாட்டி(மொழி பெயர்ப்பாளர்) எங்களிடம் "துருக்கி மக்களாகிய நாங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு எத்தனை தந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறோம்" என்றுச் சொன்னபோது, நாங்கள் இருவரும் அதிர்ந்து போனோம்! இவர்கள் இப்படி கேட்பதற்கு, "சோப் ஆபுரா – Soap Opera" என்ற வானோலி மற்றும் தொலைக்காட்சி மெகா சீரியல் தான் காரணம். இந்த Soap Opera என்ற நாடகங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தான் அமெரிக்காவில் உள்ள வாழ்க்கைப் பற்றி எதிர்மறையாக உலகமனைத்திற்கும் சொல்கின்ற பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். இவர்களின் நாடகங்களை உலக மக்கள் கண்டு, இப்படித் தான் ஒவ்வொரு அமெரிக்கனின் வாழ்க்கையும் கீழ் தரமாக‌ இருக்கும் என்று நம்பிவிடுகின்றனர். என்னுடைய சிநேகிதி, துருக்கியிலுள்ள மற்ற புதிய சிநேகிதிகளுக்கு "என் பிள்ளைகள் அனைவருக்கும் ஒரு தந்தை தான் இருக்கிறார் என்று" எடுத்துக்கூறினாள். ஆனால், எங்கள் உள்ளங்களில்  அந்த உரையாடல் ஒரு பெரிய பாதிப்பை உண்டாக்கி விட்டது. அதாவது, சோப் ஆபுரா = அமெரிக்கர்கள், மற்றும் கிறிஸ்தவர்கள் = அமெரிக்கர்கள் என்றுச் சொன்னால், சோப் ஆபுராக்கள் = கிறிஸ்தவர்கள் என்று பொருளா! அப்படியானால், இவ்வுலத்திற்கு இயேசு கொண்டு வந்த சுவிசேஷத்தின் நற்செய்தி என்ன ஆவது?

அப்படியானால், இயேசு என்பவர் யார்? அவர் ஒரு வெள்ளைத் தோலோடு, நீல கண்களோடு கூடிய ஒரு மேற்கத்திய நாட்டவரா? ஆனால், என் பைபிள் சொல்கிறது, அவர் ஒரு யூதனாக பிறந்தார், அதனால், வெள்ளைத் தோலையும், நீலகண்களையும் மறந்து விடுங்கள். அவர் ஒரு மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் அவர் அந்த இடங்களில் வாழ்கிற மக்களைப் போலவே இருந்திருப்பார், இதில் எந்த சந்தேகமுமில்லை. அவர் ஒரு யூத குடும்பத்தில் வளர்க்கப்பட்டார் மற்றும் தன் முழு வாழ்க்கையையும்  இஸ்ரவேல் என்ற நாட்டிலேயே கழித்தார். அப்படியானால், மத்திய கிழக்கு யூத நாட்டை மையமாகக் கொண்ட‌ ஒரு மதம், எப்படி ஒரு மேற்கத்திய மார்க்கமாக கருதப்படுகிறது? (How could the religion that is centered on a Middle Eastern Jew came to be regarded as Western?)

இயேசுவின் போதனைகளில் முத்துக்களால் பதிக்கப்படவேண்டிய ஒரு போதனை என்னவென்றால், "இறைவனை நாம் உண்மையோடும், ஆவியோடும் தொழுதுக் கொள்ள வேண்டும்" என்பதாகும். அவருடைய இரட்சிப்பின் செய்தியானது நாடு மற்றும் கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது. உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும், எல்லைகளைத் தாண்டி இறைவனிடம் திரும்பும் வாய்ப்பை பெறவேண்டும் என்ற நோக்கில் இறைவன் தன் இரட்சிப்பு திட்டத்தை உருவாக்கினார். முழு உலகமும் அவரை தொழுதுக் கொள்ள ஏற்ற இடமாகும்(இந்த இடத்தில் தான் தொழுதுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை); எல்லா மொழிகளும் தேவ ஆட்டுக் குட்டியாகிய இயேசுவை புகழ மற்றும் ஆராதிக்க தகுதியுடையது. நாம் வித்தியாசமான நாடுகளில், வித்தியாசமான கலாச்சார மொழிகள் உள்ள சமுதாயங்களில் வாழுகின்றோம் என்று அவருக்குத் தெரியும், மற்றும் அவருடைய கிருபையின் சிங்காசனத்தை நெருங்க நம்மால் முடியும். ஆகையால், தேவன் ஒருவர் மட்டுமே, மனித வர்க்கம் இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பதால் மீட்பு அடைய முடியும் என்ற மிகவும் சுலபமான வழிமுறையை உருவாக்க முடியும்.

தற்போது, உலகத்தின் மற்ற பாகங்களை விட, மேற்கத்திய நாடுகளில் அதிக சதவிகித கிறிஸ்தவர்கள் இருப்பதாக நாம் காண முடியும். ஆனால், எப்போதும் இது போல‌ இருந்த‌தில்லை, எதிர் கால‌த்தில் இப்ப‌டியே இருக்க‌ப் போவ‌துமில்லை என்பது மிகவும் தெளிவாக உள்ளது. நம்மில் ஒவ்வொருவரும் இப்படியே இருக்கப் போவதுமில்லை, மற்றும் சரித்திரமும் இன்று போலவே இருக்கப் போவதுமில்லை. கிறிஸ்தவம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மேற்கிற்கு பரவியதும், இறைவனின் திட்டங்களில் ஒன்று தான். இன்று அனேக ஆப்ரிக்க மக்கள் இயேசுவின் பெயரை பறைசாற்றுகிறார்கள். ஆசியாவில் இயேசுவின் சபை செழித் தோங்கிக் கொண்டு இருக்கின்றது (கொரியா தன் மிஷனரிகளை அமெரிக்காவிற்கு அனுப்பி க்கொண்டு இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!). இன்னும் சில நூறு ஆண்டுகளுக்கு பிறகு இயேசுவின் உருவம் என்று இதுவரைஅச்சடிக்கப்பட்டுக் கொண்டு இருக்கும் உருவமானது கருப்பாக மாறும் மற்றும் அவருடைய கண்கள் பாதாம் கொட்டைகள் போல வண்ணத்தில் அச்சடிக்கப்படும். இப்படி இயேசுவின் உருவப் படத்தை மாற்றுவதினால், நற்செய்தியின் சாராம்சம் மாறாது, அது அப்படியே இருக்கும்:

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். யோவான் 3:16

மூலம்:  தமிழ் - அமெரிக்கர்=கிறிஸ்தவர்? | ஆங்கிலம் - American=Christian?




Isa Koran Home Page Back - Christianity Index
setstats1

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP