சமீபத்திய பதிவுகள்

அதிரடியாக டிக்ளர் செய்தது இந்தியா

>> Monday, July 21, 2008

அதிரடியாக டிக்ளர் செய்தது இந்தியா
.
.
கொழும்பு, ஜூலை 20: இலங்கை வாரியத்தலைவர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அதிரடியாக டிக்ளர் செய்தது. இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல்  டெஸ்ட் வரும் 23ந் தேதி தொடங்குகிறது.
.
இந்நிலையில் இந்திய அணி இலங்கை வாரியத்தலைவர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. வாரியத்தலைவர் அணி 224 ரன்களில் சுருண்டது. இரண்டாம் நாளான நேற்று இந்தியா 8 விக்கெட்இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. டெண்டுல்களர் 69 ரன்களும், தினேஷ் கார்த்திக் 58 ரன்களும் எடுத்தனர்.

இந்நிலையில் இன்று காலை இந்திய அணி அதிரடியாக டிக்ளர் செய்தது. இதனையடுத்து இலங்கை அணி 28 ரன்கள் முன்னிலை பெற்றது. தொடர்ந்து ஆடத்தொடங்கிய இலங்கை வாரியத்தலைவர் அணி 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்திருந்தது. ஜாகீர்கான் சிறப்பாக பந்து வீசி தரங்கா விக்கெட்டை வீழ்த்தினார். மற்றொரு விக்கெட்டை ஹர்பஜன் சிங் வீழ்த்தினார்.

நேற்றைய ஆட்டத்தின்போது இந்திய ஆட்டக்காரர்கள் சிறப்பாக ஆடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது. எனினும் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக், இந்தியா எப்போதுமே தொடரின் தொடக்கத்தில் மந்தமாக ஆடுவது வழக்கம் என்றும், விரைவில் இது சீராகிவிடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

 

 

StumbleUpon.com Read more...

சமாதானப் பேச்சுவார்த்தைக்காகத் தென்னாபிரிக்கா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த நிலைப்பாடுகளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர்

சமாதானப் பேச்சுவார்த்தைக்காகத் தென்னாபிரிக்கா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த நிலைப்பாடுகளைத் தமிழீழ விடுதலைப்புலிகள் நிராகரித்துள்ளனர்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைக்கான தென்னாபிரிக்கா அல்லது ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மத்தியஸ்த ஏற்பாட்டைத் தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இராசையா இளந்திரையன் நோர்வேயைத் தவிர தமீழீழ விடுதலைப் புலிகள், சமாதான ஏற்பாட்டாளர்களாக எந்த நாட்டையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை நோர்வேயின் சமாதான ஏற்பாட்டாளர்களான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் மற்றும் சமாதானத் தூதர் ஹன்சன் பௌயர் ஆகியோரை வன்னியில் வைத்துச் சந்திக்க விரும்புகிறது

இந்தநிலையில் இந்தச் சந்திப்பு விரைவில் இடம்பெறும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தாம் நோர்வே நாட்டவர்கள் சமாதான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பார்கள் என்பதற்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தென்னாபிரிக்காவின் உதவி அமைச்சர் இராதாகிருஸ்ண படையாட்சியும், ஐஸ்லாந்தின் ஜனாதிபதி ஒலாபு ரெக்னார் கிரிம்சனும் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வில் தாம் மத்தயஸ்தம் வகிக்கத் தயாராக உள்ளதாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அறிவித்திருந்தனர்.

இந்தநிலையிலேயே இளந்திரையன் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

http://www.swisstamilweb.com/indexTamilnews.html

StumbleUpon.com Read more...

சந்தனக்காடு

 
24.07.08    ஹாட் டாபிக் 
 

யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்' என்ற பழமொழி சந்தன வீரப்பனுக்கும் ரொம்பவே பொருந்தும் போலிருக்கிறது.

தற்போது மக்கள் தொலைக்காட்சியில் மீள்ஒளிபரப்பாகி வரும் `சந்தனக்காடு' என்ற வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றுத் தொடருக்கு தொடக்கத்தில் இருந்தே சர்ச்சை சலங்கை கட்டி ஆடுகிறது. ஆரம்பத்தில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அதற்கு எதிராக நீதிமன்றத்தையும் அணுகியதால் `சந்தனக்காடு'  குழு அதிர்ச்சி அடைந்தது நிஜம்.

அதன்பின் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முத்துலட்சுமியை அழைத்து சமரசம் செய்தார். பின்னர், வழக்கை வாபஸ் வாங்கிய முத்துலட்சுமி, `அந்தத் தொடரை  ஒளிபரப்ப எந்த எதிர்ப்பும் இல்லை' என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். இதன்பிறகு புதுத்தெம்புடன் ஒளிபரப்பான சந்தனக்காடு தொடர், பலத்த வரவேற்பைப் பெற்றது. `வீரப்பன் என்கவுன்ட்டர் செய்யப்படவில்லை. விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்' என்ற க்ளைமாக்ஸோடு அந்தத் தொடர் முடிவுக்கு வந்தது.

`சந்தனக்காட்டின்' வெற்றி விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்ட மக்கள் தொலைக்காட்சி நிர்வாகிகள், அதற்காக ஒரு திரைப்படத்தின் வெற்றி விழா ரேஞ்சுக்கு நாளிதழ்களில் விளம்பரம் செய்து. ப்ளக்ஸ் பேனர்களை வைத்து அசத்தினர்.

கடந்த புதனன்று அந்த விழா சென்னையில் வெற்றிகரமாக நடந்தேறியது. டாக்டர் ராமதாஸ், இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா, பாலாஜி சக்திவேல், சீமான், திருச்செல்வன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் சந்தனக்காடு இயக்குநர் கௌதம் மற்றும் குழுவினர் அதில்கலந்து கொண்டனர்.

விழாவில் பேசியவர்கள், வீரப்பனையும் ராமதாஸையும் இஷ்டத்துக்குப் புகழ்ந்து தள்ளினர். ``இந்தியாவில் இருந்து ஒளிபரப்பாகும் அனைத்து தொலைக்காட்சிகளும் தமிழீழத்தில் தடை செய்யப்பட்ட நிலையில், மக்கள் தொலைக்காட்சி மட்டுமே அங்கு ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் போர்க்களத்தில் இருக்கும் என் சகோதரன் (பிரபாகரன்) தினமும் இரவு எட்டரை மணிக்கு ஒளிபரப்பாகும் சந்தனக்காடு தொடரைப் பார்க்காமல் இருக்க மாட்டான்(!)'' என்று சீமான் ஒரே போடாகப் போட்டார்.

ஓவியர் வீர.சந்தானம் பேசும்போது, ``ராமேஸ்வரத்தில் விஜயகாந்த் பேசியது குமுதம் ரிப்போர்ட்டரில் தெளிவாக வந்திருக்கிறது. அவரது பேச்சுக்கு தமிழக அரசு என்ன சொல்லப் போகிறது?'' என்று கேள்வி எழுப்பினார். இயக்குநர்கள் மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றோர் இயக்குநர் கௌதமையும், வீரப்பனாக நடித்த கராத்தே ராஜாவையும் புகழ்ந்ததோடு ராமதாஸையும் புகழ்ந்து தள்ளினார்கள்.

புஷ்பவனம் குப்புசாமி அவர் பங்குக்கு, ``வீரப்பன் அடக்கம் செய்யப்பட்ட இடம் சமாதி அல்ல. கோயில்'' என்ற சந்தனக்காடு டைட்டில் பாடலைப் பாடி அசத்தினார். பின்னர், நாட்டுப்புறப் பாடல் ஒன்றை மனைவி அனிதாவுடன் சேர்ந்து பாடி கலகலப்பூட்டினார். ``வீரப்பன் ஒரு மாவீரன், அவன் உயிருடன் இருந்திருந்தால் ஒகேனக்கல் எங்களுடையது என்று கர்நாடகம் பிரச்னை செய்திருக்காது. தமிழகத்தின் எல்லைச்சாமி வீரப்பன்'' என்று விழாப் பேருரையில் பேசினார் ராமதாஸ். கலகலப்பாக நடந்த இந்த விழாவில் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கலந்து கொள்ளவில்லை என்ற தகவல், பத்திரிகை நிருபர்களை உறுத்த, தங்கள் சந்தேகத்தை மக்கள் தொலைக்காட்சித் தரப்பில், அவர்கள் கேட்டும் விட்டார்கள்.

``எங்கள் தரப்பில் இருந்து அழைத்தோம்; அவர்தான் வரவில்லை. காரணம் தெரியவில்லை'' என்ற பதில் மக்கள் தொலைக்காட்சி நிர்வாகிகளிடம் இருந்து வந்தது. `உண்மையில் முத்துலட்சுமி விழாவுக்கு அழைக்கப்பட்டாரா?' என்பதைத் தெரிந்து கொள்ள அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

``முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். சந்தனக்காடு தொடர் வெற்றிவிழாவுக்கு என்னை யாரும் அழைக்கவில்லை. அப்படியே அழைத்திருந்தாலும் நான் சென்றிருக்க  மாட்டேன்'' என்றார் முத்துலட்சுமி. `ஏன் சென்றிருக்க மாட்டீர்கள்?' என்று அவரிடம் கேட்டபோது, பேசஆரம்பித்தார்.

``என்னிடம் அனுமதி வாங்காமலேயே வீரப்பன் கதையை சந்தனக்காடு தொடராக எடுக்கத் தொடங்கினார்கள். நாங்கள் நீதிமன்றத்தை அணுகினோம். என்னைப் பற்றியும், என் மகள்கள் இருவரைப் பற்றியும் தொடரில் எதுவும் சொல்லக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தோம்.

அதன்பின், ராமதாஸ் ஐயா என்னைத் திண்டிவனத்துக்கு அழைத்தார். `வீரப்பனைப் பற்றி தரக்குறைவாக எதையும் நாங்கள் காட்டப் போவதில்லை. உன்னைப் பற்றியும் எதுவும் தவறாகச் சொல்லப் போவதில்லை. எனவே வழக்கை வாபஸ் வாங்கிவிடு. அதே சமயத்தில் உனக்கு விருப்பம் இல்லையென்றால் வழக்கை நடத்திக் கொள்ளலாம். நாங்கள் உன்னை வற்புறுத்தவில்லை' என்று என்னிடம் சொன்னார். அவரே கேட்டுக் கொண்டதால் வழக்கை வாபஸ் வாங்க முடிவெடுத்தேன். மேலும் என்னைப் பற்றி தொடரில் காட்டுவதையும் எதிர்க்கவில்லை என்று எழுதிக் கொடுத்துவிட்டேன். பின்னர், வழக்கு செலவுக்காக ஐம்பதாயிரம் ரூபாயை ஐயா என்னிடம் கொடுத்தார். என் இரு மகள்களின் படிப்புச் செலவுக்காக அவர்கள் படிக்கும் பள்ளியில் ஒரு முறை இருபத்து மூன்றாயிரமும், மற்றொரு முறை பதினைந்தாயிரமும் அவர் செலுத்தினார்.

இதுதவிர,வேறு எந்தப் பணமும் அவரிடம் இருந்து நாங்கள் பெறவில்லை. பிளஸ் டூ படிக்கும் என் மூத்த மகள் வித்யாராணி, பிளஸ் ஒன் படிக்கும் இளைய மகள் பிரபா ஆகியோருக்கு பள்ளியில் பணம் செலுத்த வேண்டியிருந்தது. நான் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகை பாக்கியும்இருந்தது. இந்தச் செலவுக்காகப் பணம் கேட்டு, கடந்த மே மாதம் என் அக்கா மற்றும் என் இரு மகள்களுடன் ஐயாவைச் சந்திக்க திண்டிவனம் போனேன். ஐயாவிடம் `செலவுக்குப் பணம் வேண்டும்' என்று கேட்டேன். அப்போது அவர் எங்களைத் திட்டத் தொடங்கினார். `எங்களை எதிர்த்து கேஸ் போட்டு என்ன சாதித்தாய்? மகள்கள் படிப்புச் செலவுக்குப் பணம் கொடுத்துவிட்டேன். இனி எதுவும் கிடையாது. முடியாது' என்று கோபமாகப் பேசினார். அவரது பேச்சால் ஆவேசமான என் இளைய மகள் பிரபா, `கேஸை வாபஸ் வாங்கிவிட்டோம். எழுதியும் கொடுத்துவிட்டோம். இனி இவர்களால் என்ன செய்ய முடியும் என்றுதானே இப்படிப் பேசுகிறீர்கள். இது நியாயமா?' என்று ஐயாவைப் பார்த்துக் கேட்டாள். உடனே ஐயா `வெளியே போ' என்று என் மகளைப் பார்த்துக் கத்தினார்.

அதற்கு, என் மகள், `யார் யாரோ எங்கள் அப்பாவின்  கதையைப் படம் எடுக்க முன்வந்தார்கள். எங்கள் அம்மாவே படம் எடுத்திருந்தால் எங்களுக்குத் தேவையான பணம் கிடைத்திருக்கும்' என்றாள். அப்போது ஐயா, `உங்க அம்மாவால் படம் எடுக்க முடியுமா?' என்று கேட்டார். அதில் மேலும் ஆவேசமான என் மகள், என்னைப் பார்த்து `உன்னை நன்றாக ஏமாற்றி விட்டார்கள். அவர்களிடம் இனி மண்டியிட்டுத்தான் பணம் வாங்க முடியும்' என்றாள். அவளது இந்தப் பேச்சால் அதிர்ச்சியடைந்த ஐயா, தன் உதவியாளரை அழைத்து, என் மகளை வெளியே இழுத்துப் போகச் சொன்னார். அவரும் எங்களைப் பிடித்து வெளியே இழுத்துத் தள்ளினார். இதனால் என் மகள்கள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டனர்'' என்றவர், தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.

``என் கணவர் வாழ்ந்த அந்தக் காட்டுப் பகுதியில் அலைந்து படம் எடுத்ததையே சந்தனக்காடு குழுவினர் சாதனையாகப் பேசுகிறார்கள். ஒருகாலத்தில் அவருடன் அந்தப் பகுதியில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சுற்றித் திரிந்த எங்களுக்கு எவ்வளவு வேதனை இருந்திருக்கும்? இன்றைக்கு என் கணவரைப் புகழும் யாரும் எங்கள் குடும்பக் கஷ்டத்துக்கு உதவ முன் வருவதில்லை. அவரது பெயரில் நடக்கும் விழாவுக்குப் பெயரளவில் கூட எனக்கு அழைப்பிதழ் அனுப்பவில்லை.  தமிழ், தமிழ் என்று பேசி நாடகம் ஆடுபவர்களின் முகத்திரையைக் கிழித்து, யார் உண்மையானவர்கள் என்பதை உலகிற்குக் காட்டுவேன்'' என்று வீரப்பன் பாணியில் சபதம் போட்டு முடித்துக் கொண்டார் முத்துலட்சுமி.

படம்: மீடியா ராமு
ஸீ வெற்றி

StumbleUpon.com Read more...

நம்பிக்கை வாக்கெடுப்பு : நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்

நம்பிக்கை வாக்கெடுப்பு : நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்
டெல்லி : மத்திய அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவதை ஒட்டி, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது.

அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிக்கட்சிகள் அண்மையில் விலக்கிக் கொண்டன. இதனையடுத்து, மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் முடிவு செய்தது, இதனையொட்டி பாராளுமன்றத்தின் சிறப்புக்கூட்டம் இன்று காலை தொடங்கியது. அப்போது மத்திய அரசு மீது நம்பிக்கை கோரும் ஒருவரி தீர்மானத்தை தாக்கல் செய்து, பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். அணுசக்தி ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்றும், இந்த ஒப்பந்தம் நாட்டு மக்களின் முழு ஆதரவைப் பெற்ற பிறகே நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார். பின்னர், விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, நாட்டில் பணவீக்கம், விலைவாசி உயர்வு பிரச்னை போன்றவை பெரிதாக இருக்கும் போது, அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கு முக்கியத்துவம் தருவது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பின்னர் விவாதம் தொடர்ந்து நடந்தது.
http://www.kumudam.com

StumbleUpon.com Read more...

அனானிமஸ்ஸுக்கு உமரின் பதில்:

அனானிமஸ்ஸுக்கு உமரின் பதில்:

அனானிமஸ்ஸுக்கு உமரின் பதில்:
=============================

அன்புள்ள அனானிமஸ் அவர்களே,

உங்கள் பின்னூட்டத்திற்காக நன்றி.

Anonymous  Said:
// இயேசு கிருஷ்து ராஜாவிற்கு முழு நேர ஊழியம் செய்கிறேன் பேர்வழி என்று கூறிவிட்டு தினமும் குர்ஆனை தமிழில் படித்து வருவதும் அதன் தொடர்ச்சியான உங்களின் இஸ்லாத்தை நோக்கிய உங்களின் பயணம் கவலை அளிப்பதாக உள்ளது.//

Umar Said:

நான் முழுநேர ஊழியன் என்று உங்களுக்கு யார் சொன்னது? நான் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது, உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது? ஒகோ, நீங்களும் ஒரு முஸ்லீமா?

Anonymous Said:

//"...Seeing they see not
and hearing they hear not,
neither do they understand(Holy Bible Mathew 13:13)" //

 

Umar Said:
அருமையான வசனத்தை எடுத்துக்கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.

மத்தேயு 13:13 அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன்.

நீங்கள் குறிப்பிட்ட வசனத்தில் இயேசு அவர்களுடன் உவமைகளைக் கொண்டு அதிகமாக பேசினார், அது போல, நானும் சில கதைகள் மூலமாக விளக்குகிறேன், அவ்வளவு தான்.

Anonymous Said:
கடவுளை நம்புகிற எவரும் சாதாரணமாக பதில் கூறும் அளவிற்கு உள்ள உங்களின் இந்த கதை முட்டாள் தனமானது. கடவுள் நம்பிக்கைக்கு எதிரானது. பைபிளின் மீதே உங்கள் குற்றச்சாட்டு உள்ளது. பைபிள் திரித்து எழுதியிருப்பதாக கூறுவது போன்றுள்ளது.

Umar Said:
அப்படியா! உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது அல்லவா? அப்படியானால், பதில் சொல்லுங்கள். இக்கட்டுரையில் நான் சொன்ன கேள்விகளுக்கு உங்கள் பதில் என்ன?
என் கதையில் எந்த பகுதி முட்டாள் தனமானது?

முட்டாள் தனமான விவரம் ஒன்று என் கதையில் இருக்குமானால், அது அந்த அரசன் அதிகமாக சக்தியுள்ளவனாக இருந்தும் தன்னிடம் உள்ளவற்றை பாதுகாக்காமல் போனது தான், மட்டுமல்ல, அதைப்பற்றி மக்களுக்கு வெட்கமில்லாமல், என் புத்தகத்தை ஒரு ஏழை அழித்துவிட்டான் என்றுச் சொன்னது தான். 

உங்கள் கருத்துப்படி, எது முட்டாள் தனமானது என்றுச் சொல்லுங்கள்?

Anonymous Said:

நீங்கள் ஊழியம் செய்வதற்கு அருகதையற்றவர். அது தொடர்பாக முழுமையாக எனது கண்டனத்தை திருச்சபைக்கு அனுப்ப இருக்கிறேன்.
--கிருஸ்து அடிமை

Umar Said:

என் தகுதியைப் பற்றி, அருகதையைப் பற்றி, நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம்.

உங்கள் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறீர்களா? தெரிவித்துக்கொள்ளுங்கள். யாரும் கவலைப்படப்போவதில்லை.

எந்த திருச்சபைக்கும் தெரிவித்துக்கொள்ளுங்கள், எவ்வளவு கண்டனம் வேண்டுமானாலும் தெரிவித்துக்கொள்ளுங்கள்.

ஆனால், ஒரு சின்ன வேண்டுகோள், அது என்னவென்றால்,  "பைபிள் கற்பனை என்று இஸ்லாமியர்கள்  சொல்கிறார்கள், இயேசு தேவகுமாரன் இல்லை என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், அல்லாவை நம்பவில்லையானால் கிறிஸ்தவர்கள் அனைவரும் நரகத்தில் அல்லா தள்ளுவார் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், இந்த கேள்விகளுக்கு இந்த நபர் பதில் சொல்கிறார், இது தவறானது, ஆகையால் என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று உங்கள் கண்டனத்தை எந்த திருச்சபைக்கும் தெரிவித்துக்கொள்ளுங்கள், நான் கவலைப்படப்போவதில்லை.  ஒரு வேளை, உங்கள் கண்டனத்தை அவர்கள் ஏற்றுக்கொண்டு, நீங்கள் சொல்வது சரி தான் என்றுச் சொல்லக்கூடும். முயற்சி எடுத்துப்பாருங்கள்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
 
Umar

StumbleUpon.com Read more...

எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம்

எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம்

 
 
ஒரு முஸ்லீம் உமரிடம் கேட்ட கேள்விகள் மற்றும் பதில்கள்

உண்மையடியான் தளத்தில் பதிக்கப்பட்டு இருந்த "இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்துவடிவ விவாதம்" என்ற கட்டுரைக்கு ஒரு இஸ்லாமியர் கேட்ட கேள்விகள் மற்றும் அதற்கு நான் கொடுத்த பதில்களை இங்கே தருகிறேன்.

இதை ஏன் தனி பதிவாக தருகிறேனென்றால், இவர் பல கேள்விகள் கேட்டு இருக்கிறார், பைபிளின் மூல மொழி என்ன? ஏன் பைபிள் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது, மற்றும் இவர் கேட்ட முக்கியமான கேள்வி: 2 சாமுவேல் 11ம் மற்றும் 12ம் அதிகாரத்தை குடும்பத்துடன் படிக்கமுடியுமா? என்றார். இவைகள் அனைத்திற்கும் என் பதில் இக்கட்டுரையில் இருக்கிறது.

கிறிஸ்தவத்திற்கு எதிராக, இஸ்லாமிய இமாம்கள், அறிஞர்கள் எப்படி பொய்களைச் சொல்லி முஸ்லீம்களின் மனதிலே சந்தேகத்தை விதைக்கிறார்கள் என்பதற்கு இச்சகோதரரின் வரிகள் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும், எவ்வளவு அறியாமையாக இச்சகோதரர் கேள்விகளை கேட்கிறார் என்பதை பாருங்கள்.


-----------------------------


 
Quote:
Anonymous Said:

//கிருஸ்தவ அருமை நன்பர்கலெ!
நான் என்னுடைய சந்தெகங்கலை உங்கலிடம் சமர்பிக்கின்ரென் இதர்கு உங்கலிடம் பதில் கோருகிரென்!
//


Umar Said:
அன்புள்ள அனானிமஸ் அவர்களே, உங்களுக்கு என் வணக்கங்கள். உங்க‌ள் ச‌ந்தேகங்க‌ளை கேளுங்க‌ள் ப‌தில் த‌ருகிறோம்.




 
Quote:
Anonymous Said:
//நீங்கல் இரைவெதமாக மதிக்கும் பைபில் எம்மொழியில் இரக்கப்பட்டது? அம்மொழியில் தர்பொது பைபில் உல்லதா? அம் மொழி தர்பொது வலக்கதில் உல்லதா அல்லது வலகொடிந்து விட்டதா?//


Umar Said:
பைபிள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவைகள் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு.

பழைய ஏற்பாடு எபிரேய மொழியிலும், புதிய ஏற்பாடு கிரேக்க மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இந்த இரண்டு மொழிகளிலும் பைபிள் உள்ளது. உங்களுக்கு எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் தேவையானால், இணையத்தில் தேடுங்கள், உங்களுக்கு கிடைக்கும், மற்றும் ஏதாவது கிறிஸ்தவ புத்தக கடையில் சென்று கேளுங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

எபிரேய மற்றும் கிரேக்க மொழிகள் இப்போது வழக்கத்தில் இல்லை. ஆனால், இவைகளை கற்றுக்கொள்ள அனேக கல்லூரிகள், புத்தகங்கள் நூற்றுக்கணக்கான எண்ணிக்கையில் உள்ளன.



 
Quote:
Anonymous Said:
//நீங்கல் இரைவெதமாக மதிக்கும் பைபில் இரைவனால் இரக்கப்பட்டதா//


Umar said:

குர்‍ஆன் இறைவனால் இறக்கப்பட்டது என்று நீங்கள் குர்‍ஆனுக்குச் சொல்லும் ஆதாரங்களை விட, பைபிளுக்கு அதிகமாக ஆதாரங்கள் உள்ளன.



 
Quote:
Anonymous Said:

// அப்படி இருப்பின் நாட்டுக்கு நாடு மாநிலதுக்கு மாநிலம் ஊருக்கு ஊர் தனி தனியாக வித விதமாக இரக்கபட்டதா உங்கல் பைபிலில் எலுதப்பட்ட வசன்ங்கல் ஒரு நாட்டில் ஒரு பைபிலில் இருந்தால் மற்றொன்றில் இல்லயெ ஏன்? //


Umar said:

யாரோ சொன்னதைக் கேட்டு, அப்படியே கேட்கவேண்டாம்.

நீங்கள் பைபிளை ஒரு முறையாவது பார்த்துள்ளீர்களா?
தமிழ் மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ பைபிளை பார்த்து இருக்கிறீர்களா?

இன்னொரு கேள்வி, நீங்கள் குர்‍ஆனை தமிழில் பார்த்து இருக்கிறீர்களா? அப்படி பார்த்து இருந்தால், குர்‍ஆனை ஒருமுறையாவது முழுவதுமாக தமிழில் படித்து இருக்கிறீர்களா? நான் இப்படி கேட்பது, கொஞ்சம் அதிகமாக தோன்றலாம், ஆனால், உண்மை இது தானே, நீங்கள் குர்‍ஆனை அரபியில் படிக்கத்தானே அதிகமாக ஊக்குவிக்கப்படுகிறீர்கள். ஒருவேளை, நீங்கள் நேர்மையானவர்களாக இருந்து, நான் குர்‍ஆனை இதுவரை தமிழில் படிக்கவில்லை என்று சொல்வீர்களானால், உங்களை நான் உட்சாகப்படுத்துகிறேன், முதலாவது, நீங்கள் உங்கள் குர்‍‍ஆனை தமிழில் படியுங்கள், அல்லாவின் வார்த்தைகளை நீங்கள் புரிந்துக்கொள்ளும் மொழியில் படியுங்கள், அரபியில் படிப்பதினால், ஒரு நன்மையும் இல்லை. வேண்டுமானால், நான் குர்‍ஆனை அரபியில் முழுவதுமாக படித்துவிட்டேன் என்று மற்றவர்களுக்கு பெருமையாகச் சொல்லிக்கொள்ளலாமே ஒழிய, அறிவு சார்ப்பாக எந்த பிரயோஜனமும் இல்லை, அதாவது, அல்லா குர்‍ஆனில் என்ன சொல்லியுள்ளார் என்று தமிழில் படித்து புரிந்துக்கொள்ளாமல், இருப்பதினால் என்ன நன்மை சொல்லுங்கள்.


 
Quote:
Anonymous Said:
// பலய ஏர்பாடு புதிய ஏர்பாடு என்ரால் என்ன?பலய ஏர்பாட்டில் உல்லவசன்ம் புதியதில் இல்லயெ ஏன்? //


Umar Said:

பழைய ஏற்பாடு என்பது, இயேசுவிற்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசனங்களின் தொகுப்பாகும். அதாவது, இப்ராஹிம், மூசா, தாவூத் போன்றவர்களுக்கு அல்லா இறக்கினான் என்றுச் சொல்வார்களே அந்த தொகுப்பாகும்.

புதிய ஏற்பாடு என்பது, இஞ்ஜில் என்றுச் சொல்லும் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் புத்தகங்கள், இயேசுவின் சீடர்கள் எப்படி ஊழியம் செய்தார்கள், அவர்கள் மூலமாக செய்யப்பட்ட அற்புதங்கள் என்ன? மற்றும் திருச்சபை எப்படி வளர்ச்சி அடைந்தது? போன்ற விவரங்கள் அடங்கிய தொகுப்பாகும்.

"பழைய ஏற்பாட்டில் இருக்கும் வசனம் புதிய ஏற்பாட்டில் இல்லையே" என்று நீங்கள் கேட்டது மிகவும் தவறான கேள்வியாகும். பழைய ஏற்பாட்டில் இயேசுவிற்கு முன்பு வாழ்ந்த தீர்க்கதரிசிகளின் வாழ்க்கை வரலாறுகள், அவர்களைக்கொண்டு தேவன் என்னென்ன அற்புதங்களைச் செய்தார்? போன்ற விவரஙக்ளை அறியலாம். அது போல, இயேசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது சொற்பொழிவுகளை புதிய ஏற்பாட்டில் அறியலாம். என்வே, பழைய ஏற்பாட்டில் இருக்கும் வசனம் ஏன் புதிய ஏற்பாட்டில் இல்லை என்பது ஒரு தவறான கேள்வியாகும்.


 
Quote:
Anonymous Said:
// நாட்டுக்கு நாடு வருடதுக்கு வருடம் பக்கங்கல் குரைகின்ற்தெ ஏன்? //



Umar Said:

எது சொல்லவேண்டுமானாலும், ஆதாரத்துடன் சொல்லவேண்டும், இப்படி யாரோ உங்களிடம் சொன்ன பொய்களை(இந்த பொய்களை முக்கியமாக நீங்கள் தினமும் நமாஜுக்குச் செல்லும், இமாம் கூட சொல்லியிருக்கலாம்), அப்படியே எழுதக்கூடாது.

உங்களால் ஏதாவது ஆதாரம் காட்டமுடியுமா? முதலில் நீங்கள் பைபிளை பார்த்து இருக்கிறீர்களா?

உங்களின் இந்த வரிகளைக்கண்டு நான் அறிந்துக்கொண்ட ஒரு விவரம், உங்களுக்கு குர்‍ஆனை அரபியில் பார்த்த அனுபவம் மட்டுமே உண்டு என்பதும், குர்‍ஆனை தமிழில் படித்த அனுபவம் இல்லை என்பதும் தெரிகின்றது. மற்றும் அதே போல, பைபிளையும் நீங்கள் படிக்கவில்லை என்பதும் நிச்சயம். ஆனால், நீங்கள் எழுதுவதோ, எல்லாம் தெரிந்தவர் போல எழுதுகின்றீர்கள். எனவே, உங்கள் அறியாமையை போக்கிக்கொள்ளுங்கள். குர்‍ஆனை தமிழில் படியுங்கள், உங்களுக்கு உங்கள் இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால், பைபிளையும் படித்துப்பாருங்கள்.


 
Quote:
Anonymous Said:

// நீங்கல் இரைவெதமாக மதிக்கும் பைபிலை அதில் உல்ல சாமுவெல் பகுதி 2வசனம் 11,12 உங்களுடைய குடும்பதுடன் குழந்தைகலுடன் கூடி படிக்க முடிக்கிரதா? சவ்த் ஆப்ரிக்காவில் ஏன் இந்த(இதைபொன்ர) பொன்ற வசனதிர்கு தடைவிதிக்கபட்டதெ ஏன்? இதில் கூறிய பல வசனங்கல் தர்பொது தமிழகதில் தவளும் பைபிலில் இல்லையெ ஏன்? //



Umar Said:

அருமையான அனானிமஸ் அவர்களே,

நீங்கள் குறிப்பிட்ட பகுதியை நீங்கள் பைபிளிலிருந்து படித்து பார்த்ததுண்டா?

அந்தப் பகுதியில் யாரைப்பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளது என்று தெரியுமா?

அந்த 2 சாமுவேல் 11ம் மற்றும் 12ம் அதிகாரங்களில் உள்ள சம்பவம் பற்றி குர்‍ஆனும், இஸ்லாமும் என்ன சொல்கிறது என்று தெரியுமா?

இந்த 2 சாமுவேல் 11ம் & 12ம் அதிகாரத்தில் தாவூத் அதாவது தாவீது என்ற நபரைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.

1. தாவீது, உரியா என்ற நபரின் மனைவியின் மீது ஆசைக்கொண்டு, விபச்சாரம் செய்து, உரியாவைக் கொன்று, அப்பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார் என்று பைபிள் சொல்கிறது.

ஆனால், முஸ்லீம்களோ இது தவறு, தாவீது என்ற தீர்க்கதரிசி இப்படி செய்யவில்லை என்றுச் சொல்கிறார்கள். அதற்காக பல பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

உரியாவின் மனைவியாகிய பெத்செபாளுக்கும் தாவீதுக்கும் பிறந்தவர் தான் சாலொமோன் என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இதற்கு உயர் மட்ட இஸ்லாமிய அறிஞர்கள் முதற்கொண்டு, சராசரி சாதாரண முஸ்லீம் வரை அனைவரும் பைபிளை இந்த விஷயத்தில் குற்றம் சாட்டுகின்றனர்.


ஆனால்:

1. தாவீது உரியாவின் மனைவி மீது மோகம் கொண்டார் என்றும்,

2. தாவீது உரியாவை திட்டமிட்டு கொன்றார் என்றும்,

3. தாவீதின் பாவத்தை அல்லா அவருக்கு உணர்த்தினார் என்றும்,

4. பிறகு தாவீது தன் பாவத்திற்காக அல்லாவிடம் பாவ மன்னிப்பு கோரினார் என்றும்


குர்‍ஆனின் வசனங்களும், இஸ்லாமிய பாரம்பரியமாகிய ஹதீஸ்களும், ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களும், குர்‍ஆனுக்கு உரை எழுதிய இஸ்லாமிய அறிஞர்களும் ஏக மனதாக ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை மட்டும் நம் தமிழ் முஸ்லீம்கள் மறைக்கிறார்கள் அல்லது இவர்களுக்கு இதைப் பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி குர்‍ஆன் பல வசனங்களில் சொல்கிறது.



 
Quote:

-----------------
தாவீதை சந்தித்த இரண்டு வழக்காளிகள் பற்றி குர்‍ஆன் வசனங்கள் - குர்‍ஆன் 38:21-24,30

அந்த வழக்காளிகளின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள் (தாவூது இறைவணக்கத்திற்காக அமைத்திருந்த) மிஹ்ராபின் சுவரைத் தாண்டி - (38:21 )

தாவூதிடம் நுழைந்த போது அவர்; அவர்களைக் கண்டு திடுக்குற்றார்; அப்போது அவர்கள் கூறினார்கள்; "பயப்படாதீர்! நாங்களிருவரும் வழக்காளிகள்; எங்களில் ஒருவர் மற்றவர் மீது அநீதம் செய்திருக்கிறார்;; எங்களிருவருக்கிடையில் நீதத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! (அதில்) தவறிழைத்து விடாதீர்! எங்களைச் செவ்வையான பாதைக்கு நேர்வழி காட்டுவீராக!" (38:22 )

(அவர்களில் ஒருவர் கூறினார்; ) "நிச்சயமாக இவர் என்னுடைய சகோதரர்; இவரிடம் தொண்ணூற்றொன்பது ஆடுகள் இருக்கின்றன் ஆனால் என்னிடம் ஒரே ஓர் ஆடுதான் இருக்கிறது அவர் அதனையும் தனக்குக் கொடுத்துவிட வேண்டுமெனச் சொல்லி, வாதத்தில் என்னை மிகைத்து விட்டார்." (38:23 )

(அதற்கு தாவூது; ) "உமமுடைய ஆட்டை அவர் தம்முடைய ஆடுகளுடன் சேர்த்து விடும்படிக் கேட்டது கொண்டு நிச்யசமாக அவர் உம்மீது அநியாயம் செய்து விட்டார்; நிச்சயமாகக் கூட்டாளிகளில் பெரும்பாலோர் - அவர்களில் சிலர் சிலரை மோசம் செய்து விடுகின்றனர்; ஈமான் கொண்டு (ஸாலிஹான) நல்லமல்கள் செய்பவர்களைத் தவிர இத்தகையவர் சிலரே" என்று கூறினார்; இதற்குள்; "நிச்சயமாக நாமே அவரைச் சோதித்து விட்டோம்" என்று தாவூது எண்ணித் தம்முடைய இறைவனிடம் மன்னிப்பு கோரிக்குனிந்து விழுந்தவராக இறைவனை நோக்கினார். (38:24)

இன்னும் தாவூதுக்கு(ப் புதல்வராக) ஸுலைமானை வழங்கினோம்; சிறப்பான (நம்) நல்லடியார், நிச்சயமாக அவர் (எதிலும் நம்மையே) நோக்குபவர். (38:30 )
---------------



தான் செய்த பாவத்திற்காக அல்லாவிடம் தாவீது மன்னிப்பை கோரினார் என்று குர்‍ஆன் சொல்கிறது.

இந்த நிகழ்ச்சியைப் பற்றி விவரமாக அறிய வேண்டுமானால், கீழ் கண்ட கட்டுரையை படிக்கவும்:

இஸ்லாமிய நபிகளும், பாவங்களும் - 2 - பைபிள் மீது முஸ்லீம்களின் குற்றச்சாட்டு அம்பளம் (தாவீதை மனம் திரும்பச் செய்ய முயற்சி எடுத்த அல்லா)



அருமையான அனானிமஸ் அவர்களே, நான் மேலே குறிப்பிட்ட குர்‍ஆன் வசனங்களின் உண்மை பொருள் என்ன என்று, பல இஸ்லாமிய அறிஞர்கள் சொன்ன விவரங்களை இந்த கட்டுரையில் நீங்கள் படிக்கலாம்.


எனவே, யாரோ ஏதோ சொன்னார்கள் என்று, நீங்கள் சுயமாக சோதித்துப் பார்க்காமல் இப்படி கேள்வியை கேட்காதீர்கள்.


என்னிடம் ஒரு பைபிள் பகுதியை காட்டி, இதை குடும்பத்துடன் படிக்கமுடியுமா என்று கேட்டீர்கள், நான் அதற்கு பதில் அளித்தேன். ஆனால், நான் கேட்கிறேன், கீழ் கண்ட வசனங்களை, விவரங்களை உங்கள் குடும்பத்துடன் நீங்கள் படிக்கமுடியுமா? என்று சோதித்துப்பாருங்கள்.


3. இஸ்லாமில் ஆபாசம் அல்லது குர்‍ஆன் வசனங்களின் ஆபாசம்

இஸ்லாமியர்கள் ஒரு விஷயத்தை மறந்துப்போய் எப்போதும் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருக்கிறார்கள், அதாவது பைபிளில் இந்த குறை உள்ளது என்று குறை கூறுவதற்கு முன்பு, தங்கள் குர்‍ஆனில் தங்கள் ஹதீஸ்களில், தங்கள் முகமதுவின் வாழ்க்கையை சிறிது நினைவிற்கு கொண்டு வருவார்களானால், ஒரு கட்டுரையும் எழுதமாட்டார்கள். ஆனால், இவர்கள் இப்படி செய்வதில்லை. இந்த கட்டுரையில் இவர்களின் நிலையை ஒரு சில வரிகளை விவரித்துவிட்டு, என் அடுத்த பதிலில் இன்னும் விவரமாக இஸ்லாமின் நிலையையும், முகமதுவின் தனிப்பட்ட திருமண தாம்பத்திய வாழ்க்கையைப்பற்றியும், விவரமாக அலசுவோம். இஸ்லாம் செக்ஸ் பற்றி என்ன சொல்கிறது, முகமதுவின் அபிப்பிராயங்கள் என்ன என்பதை விவரமாக காணலாம்.

[இந்த பகுதியில் வரும் சில வார்த்தைகள் வாசகர்களை சஞ்சலப்படுத்தலாம், விருப்பமில்லையானால் இப்போதே இதை படிக்காமல் இப்பக்கத்தைவிட்டு சென்றுவிடும் படி, கேட்டுக்கொள்கிறேன்]


குர்‍ஆனும் பெண்களும்:

அல்லா முஸ்லீம் ஆண்களுக்கு கீழ் கண்டவற்றை கொடுக்கிறாராம்:



 
Quote:
தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். (78:32) ஒரே வயதுள்ள கன்னிகளும். (78:33) பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (78:34)



வசனம் 78:33ஐ கவனியுங்கள், தமிழில் அழகாக "ஒரே வயதுடைய கன்னிகள்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள். ஆனால், இந்த கீழ் கண்ட மொழிபெயர்ப்பை பாருங்கள்:


 
Quote:
Surely for the godfearing awaits a place of security, gardens and vineyards and maidens with swelling breasts, like of age, and a cup overflowing.

http://arthursclassicnovels.com/arthurs/koran/koran-arberry10.html

Enclosed gardens and vineyards;

And damsels with swelling breasts, their peers in age,

And a full cup:

http://www.sacred-texts.com/isl/qr/078.htm



குர்‍ஆனில் இந்த வசனங்களில் அல்லா சொல்கிறார், முஸ்லீம்களுக்கு அவர் சொர்க்கத்தில் "திடமான மார்பகங்கள்( SWELLING BREAST) உள்ள" பெண்களை தருவாராம். இதை இஸ்லாமிய மொழிபெயர்ப்பாளர்கள், சிறிது மறைத்து எழுதுகிறார்கள்.

இல்லை, இல்லை இது தவறான மொழிபெயர்ப்பு, அரபியில் அப்படி இல்லை, என்று சொல்வீர்களானால், இஸ்லாமிய காமண்டரி இபின் கதிர் என்ன சொல்கிறார் என்றுப்பாருங்கள். அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா?

" Kawa`ib" என்ற அரபி வார்த்தைக்கு அவர் குறிப்பிடும் பொருள் என்னவென்றுப்பாருங்கள்: கீழே ஆங்கிலத்தில் இபின் கதிரின் காமண்டரி சொல்வதை நான் தமிழில் எழுதவேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணுகின்றேன்.



 
Quote:
(And vineyards, and Kawa`ib Atrab,) meaning, wide-eyed maidens with fully developed breasts. Ibn `Abbas, Mujahid and others have said,

(Kawa`ib) "This means round breasts. They meant by this that the breasts of these girls will be fully rounded and not sagging, because they will be virgins, equal in age. This means that they will only have one age.'' The explanation of this has already been mentioned in Surat Al-Waqi`ah. Concerning Allah's statement,

Source: http://www.qtafsir.com/index.php?option=com_content&task=view&id=1404&Itemid=134


.......
எங்கும் ஆபாசம் எதிலும் ஆபாசம், அது தான் இஸ்லாம்:

முகமது சொல்கிறாராம், சொர்கத்தில் மனைவி இல்லாமல் ஒருவரும் இருக்கமாட்டார்களாம், மற்றும் உலகத்தில் அவரது இரண்டு மனைவிகள் அவருக்கு கொடுக்கப்படுமாம். இபின் கதிர் சொல்லும் போது, இந்த உலக மனைவிகள் இரண்டு பேரோடு, இன்னும் 70 மனைவிகளை அல்லா கொடுப்பாராம். மொத்தம் 72 மனைவிகள். ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லா கொடுப்பானாம், எதற்காக சமுதாயத்திற்கு சேவை செய்வதற்காக என்று நினைத்தீர்களா? இல்லை, இல்லை, சொர்க்கத்தில் பெண்களோடு உறவு கொள்வதற்காம். ஏன் அல்லாவிற்கு இதை விட்டால் வேறு வேலை சொர்க்கத்தில் இல்லையா?

ஒரு முறை உறவு கொண்டவுடன், அப்பெண்களை மறுபடியும் அல்லா "கன்னிகளாக" மாற்றிவிடுவானாம். என்ன இஸ்லாமியர்களே, இது தேவையா அல்லாவிற்கு... அப்படி பெண்களை கன்னிகளாக மாற்றும் வேலையை இந்த உலகத்திலாவது செய்தால், கற்பழிக்கபப்ட்டவர்களுக்கு ஒரு புது வாழ்வு கொடுத்தவராக அல்லா இருப்பார், கோர்ட்டு வழக்கு என்றுச் சொல்லி பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கை நாசனமாகாமல் இருக்குமில்லையா? இன்னும் முஸ்லீம்கள் பல ஆண்டுகள் தங்கள் மனைவிகளோடு வாழ்ந்து விவாகரத்து செய்துவிடும் போது, அந்தப்பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள், இப்படிப்பட்டவர்களை கன்னிகளாக அல்லா மாற்றினால், மற்ற முஸ்லீம்களாவது அவர்களை திருமணம் செய்துக்கொள்ள இது உதவியாக இருக்குமல்லவா? அந்தப்பெண்கள் மறுபடியும் கன்னிகளாக மாற்றப்பட்டதால், அவர்களுக்கும் நல்ல கணவர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்குமல்லவா?

இதையெல்லாம் உங்கள் பிள்ளைகளுக்கு எங்கும் எல்லாருக்கும் முன்பு உட்கார்ந்து உங்கள் பெற்றோருக்கும் முன்புன் உட்கார்ந்து, உங்கள் நபி இப்படிச் சொன்னார், அல்லா இப்படி செய்வார் என்று செய்திகளை பரிமாறிக்கொள்வீர்களா? சொல்லுங்கள்.



 
Quote:
The idea of having sexual relations in Paradise has led some Muslims to interpret these passages metaphorically. This in turn has prompted the assumption that the description is merely a poetic attempt to describe that which is indescribable.

Unfortunately for these scholars, Muhammad will not allow for such an interpretation. In Sahih Muslim, no. 6793 and 6794, we are told:

"In Paradise... every person would have two wives (so beautiful) that the marrow of their shanks would glimmer beneath the flesh and there would be none without a wife in Paradise."

According to Ibn Kathir's commentary on S. 56:35-37, a Muslim will be given seventy specially created females with two of his earthly wives, for a total of seventy-two maidens in Paradise.

In Mishkat Al-Masabih, Muhammad indicates:

"The believer will be given such and such strength in Paradise for sexual intercourse. It was questioned: O prophet of Allah! Can he do that? He said: 'He will be given the strength of one hundred persons.'" (Bk. IV, chp. XLII, Hadith no. 24; transmitted by Tirmizi who classified this Hadith as sound)

Even more amazing is this statement from Muhammad:

"The Prophet was asked: 'Do we have sex in Paradise?' He answered: 'Yes, by him who holds my soul in his hand, and it will be done dahman, dahman. And when it is finished she will return pure and virgin again.'" (Ibn Kathir's commentary on S. 56:35-37)

An editorial footnote to Ibn Kathir's translation indicates that the word dahman means intercourse done with such "shove and disturbance." (Ibid.)

Source: http://www.answering-islam.org/Shamoun/shabir-d.htm And

Wikipedia: http://en.wikipedia.org/wiki/Houri


Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/egaththuvam/Egathuvam-1.html



முடிவாக, அன்பாக சகோதரரே, உங்களை நான் குர்‍ஆன் படிக்க, பைபிளைப் படிக்க உட்சாகப்படுத்துகிறேன்.


உங்களுக்கு இயேசுவின் வாழ்க்கையை படிக்க இந்த தொடுப்பு உதவியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்: லூக்கா சுவிசேஷம்
 
 
 

StumbleUpon.com Read more...

'சாதனை' சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதே என் கனவு: மெண்டிஸ்

'சாதனை' சச்சின் விக்கெட்டை வீழ்த்துவதே என் கனவு: மெண்டிஸ்
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை செய்யவுள்ள சச்சின் டெண்டுல்கரை வீழ்த்துவதே எனது கனவு என்று சுழற்பந்து வீச்சின் புதிய வித்தகராக கருதப்படும் மெண்டிஸ் கூறியுள்ளார்.

இந்தியா - இலங்கை இடையே இம்மாதம் 23-ம் தேதி முதல் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஆசிய கோப்பையில் தனது 'கேரம் பந்து' ரக பந்துவீச்சால் ஜாலம் செய்த மெண்டிஸ் மீது அனைவரின் கவனம் உள்ளது.

ஆசிய கோப்பையை வெல்ல முழுமுதற் காரணமாக திகழ்ந்த அவர், சச்சின் டெண்டுல்கரின் விக்கெட்டை வீழ்த்துவதே தனது கனவு என்று பேட்டி ஒன்றில் குறிப்ப்பிட்டுள்ளார்.

அதுவும், லாராவின் சாதனையை முறியடிக்கும் தருணத்தில் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தினால் பெருமகிழ்ச்சி அடைவதாக அவர் கூறியுள்ளார்.

இதுவரை 147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11,782 ரன்கள் குவித்த சச்சின், மேற்கிந்திய தீவுகளின் லாராவின் சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 171 ரன்களே தேவை. லாரா குவித்த ரன்கள் 11,953.

லஷ்மண், சச்சின், திராவிட், கங்குலி உள்ளிட்ட மூத்த வீரர்களுக்கு பந்துவீசும் நாட்களை ஆர்வத்துடன் எண்ணிக்கொண்டிருப்பதாக கூறிய மெண்டிஸ், 'கேரம் பந்து' முறையைத் தவிர வேறுபல புதிய உத்திகளையும் கைவசம் வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை!  
ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

முற்பகல் 11.39 (இந்திய நேரப்படி காலை 8.09) மணியளவில் ஹோன்சு கடற்கரையோரப் பகுதியில் 27 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட உயிர், பொருட் சேதம் குறித்து உடனடித் தகவல்கள் வெளியிடப்படவில்லை.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/19/1080719007_1.htm

StumbleUpon.com Read more...

ஈராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் வாபஸ்: பிரவுன்

ஈராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் வாபஸ்: பிரவுன்
ராக்கில் முகாமிட்டுள்ள பிரிட்டன் படைகள் விரைவில் வாபஸ் பெறப்படும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

ஒரு நாள் பயணமாக ஈராக் சென்றுள்ள பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் கூறியதாவது:

பிரிட்டன் படையின் தலைமையகமாக செயல்படும் பாஸ்ரா விமான நிலையத்தின் பாதுகாப்பு விரைவில் ஈராக்கிடம் ஒப்படைக்கப்படும்.

2010ம் ஆண்டு பிரிட்டன் தேர்தலுக்கு முன்பாக, ஈராக்கிலிருந்து படைகள் திரும்பப் பெறப்படும்.

அதற்கு முன்னதாக ஈராக் படையினருக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP