|
சமீபத்திய பதிவுகள்
மதவெறி தாக்குதலை தடுக்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும்: வாசன்!
| ||||||||||||||||||
|
இஸ்லாமியர்கள் பைபிளை வாசிக்கும் போது எவற்றை மனதில் கொள்ளவேண்டும்?
இஸ்லாமியர்கள் பைபிளை வாசிக்கும் போது எவற்றை மனதில் கொள்ளவேண்டும்?
பைபிளை வாசித்தல்
Reading the Bible
பைபிளைப்பற்றி முதலாவதாக நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால், அமைப்பினால் பைபிள் குர்ஆனிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதே. குர்ஆன் ஷரீப்பின் வசனங்கள் அல்லாவின் நேரடிப் பேச்சு போன்று கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது முகமது மூலமாக வெளிவந்ததாயினும் அவர் இவ்விடத்தில் பாயும் நீரின் தன்மை மாறாமல் கொண்டுச் செல்லும் வாய்க்கால் போன்று சித்தரிக்கப்படுகிறார்.
பைபிளை வாசிக்கும்போது நாம் தேவனின் வார்த்தையின் சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த வித்தியாசத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். பைபிள் குர்ஆனைப் போன்றே இருக்கும் என நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாற்றத்துக்கு உள்ளாவோம். எனினும் திறந்த மனதுடன் நாம் பைபிளை வாசிப்போமானால் நாம் ஆச்சரியப்படும் விதத்தில் தேவன் நம்மோடு ஒரு புதுமைமிக்க வல்லமையான வழியில் பேசுவார்.
© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
முதல் டெஸ்ட்:இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 313
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.மழை காரணமாக ஆட்டம் இடையில் தடைபட்டது.முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 430 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை எடுத்திருந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்திருந்தது. திராவிட் 51 ரன்களும் ஷேவாக் 45 ரன்களும் எடுத்தனர்.கங்குலி 47 ரன்களும் எம்.எஸ்.தோனி 9 ரன்களும் எடுத்தனர்.ஹர்பஜன் சிங் 54 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாகீர்கான் 35ரன்களுடனும் அனில் கும்ப்ளே ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர் |
ஒரிஸ்ஸா கலவரம் ஆடியோவில் கேட்க
ஒரிஸ்ஸா கலவரம் ஒரிசாவின் உண்மை நிலையை அறிந்து கொள்ள ஆடியோ | ||||
இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் வாரக் கணக்கில் இந்து அமைப்புகளுக்கும், கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நீடித்து வருகின்றன. கிறிஸ்தவ தேவாலயங்கள் பல சேதப்படுத்தப்பட்டுள்ளன. பலர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான்வர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
02/10/2008 இந்த நீடிக்கும் மதக் கலவரங்களின் பின்னணி என்ன என்று ஒரிஸ்ஸாவில் 30 ஆண்டுகளாக செயற்பட்டுவரும் தொண்டு நிறுவனமான கிராம வளர்ச்சி சுகாதார மையத்தின் இயக்குநரான வில்லியம் ஸ்டான்லி தமிழோசையில் தகவல் வெளியிட்டார். வில்லியம் ஸ்டான்லி செவ்வி (கிறிஸ்தவர் என்ற பெயரில் உள்ள ஒரு சுரணை இல்லாதவர்) 04/10/2008 ஒரிஸ்ஸா மாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் காந்தமால் மாவட்டத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களையும் திப்புக்குள்ளானவர்களையும் இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் பேரவையின், நீதி மற்றும் அமைதிக்கான மனித மேம்பாட்டு வளர்ச்சி மையத்தின் செயலர் அருட்தந்தை நித்திய சகாயம் அவர்கள் நேரில் சந்தித்து திரும்பியிருக்கிறார். ஒரிஸ்ஸா கலவரங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிப்பதற்கு, பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் தான் காரணம் என்று கிறிஸ்தவ அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் வேதாந்தம் பதில் தெரிவித்தார். பொய் சொல்லதெரியாத சங்பரிவார் தலைவர் (பெறும் புளுகர்) |
ஆண்டுதோறும் 7மில்லியன் பேர் கண்பார்வை இழக்கிறார்கள்:அதிர்ச்சி தகவல்கள்
|
|
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 1.38சதவீதத்தினர் பார்வை இழந்து வருபவர்கள் பட்டியலில் உள்ளனர்.1986-89-ம் ஆண்டில் மத்திய அரசும்,உலக சுகாதார நிறுவனமும் சேகரித்த புள்ளி விவரத்தில் நாட்டின் மக்கள் தொகையில் 1.49சதவீதம் பேர் பார்வை இழந்து வருபவர்கள் என்பது தெரிய வந்தது. கண்பார்வை இழப்புக்கு கண்புரை நோய்,பார்வை குறைபாடுகள்,கண் நீர் அழுத்தம்,சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிப்பு,கருவிழி பாதிப்பு,இதர நோய்கள் பார்வை இழப்பின் முக்கிய காரணங்கள் என்கின்றனர் டாக்டர்கள். கண்புரை நோய் இன்று பலரை பாதிக்க செய்துள்ளது. இந்த நோயினால் 80சதவீதம் பேர் பார்வை இழந்து வந்தனர். இதை மத்திய அரசும்,உலக சுகாதார நிறுவனமும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து 55சதவீதம் ஆக குறைத்து உள்ளது. பார்வை இழப்பை தடுப்பதற்காக மட்டும் ஆண்டு தோறும் ரூ.320கோடி முதல் ரூ.425கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.உலக அளவில் பார்வை இழப்பால் நேரடியாக ஆண்டு தோறும் 25மில்லியன் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லை அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் ராமகிருஷ்ணன் இதுபற்றி கூறியதாவது:- உலகில் 45மில்லியன் மக்கள் பார்வை இழந்து தவிக்கின்றனர். இதில் 60சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர். ஒவ்வொரு 5வினா டிகளில் ஒருவர் பார்வை இழந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் 7மில்லியன் மக்கள் பார்வை இழந்து வருகின்றனர். உலகில் பார்வை இழந்தவர்களில் 5பேர்களில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார். நம்நாட்டில் 11ஆயிரம் கண்டாக்டர்கள் உள்ளனர். இந்திய மக்கள் தொகையை ஒப்பிடும் போது 1லட்சம் பேருக்கு ஒரு கண்டாக்டர் உள்ளார். நகர்ப்புறங்களில் 20ஆயிரம் பேருக்கு ஒரு கண்டாக்டரும்,கிராமப் புறங்களில் 2லட்சம் பேருக்கு ஒரு கண்டாக்டரும் உள்ளனர். வரும் 2020-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் பார்வையோடு இருக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக அளவில் எல்லோருக்கும் பார்வை நலம் "2020"என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உலக கண்ணொளி தினமான நேற்று முதல் உலகம் முழுவதும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். |
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223719595&archive=&start_from=&ucat=1&
Read more...
அமெரிக்க அதிபர் புஷ் மீது ஒபாமா கடும் தாக்கு
|
|
அமெரிக்க அதிபர் புஷ்ஷின் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டன என்று அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா குற்றஞ்சாட்டியுள்ளார். அமெரிக்க அதிபராக இருக்கும் புஷ்ஷின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைகிறது. இதையெடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய அடுத்தமாதம் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக பாரக் ஒபாமாவும் ஆளும் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கைனும் போட்டியிடுகிறார்கள்.இவர்களில் ஒபாமாவுக்கே ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இருவரும் பொதுமக்கள் மத்தியில் அடிக்கடி விவாதம் நடத்தி தங்கள் வருங்கால திட்டங்களை கூறிவருகிறார்கள்.நேற்றுமுன்தினமும் இதே போன்று ஒரு விவாதம் நடைபெற்றது.அப்போது பேசிய ஒபாமா,அதிபர் புஷ்ஷின் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.தான் பதவிக்கு வந்தால் பொருளாதார நெருக்கடியை சீர்படுத்தப்போவதாகவும் அவர் கூறினார். அவரை எதிர்த்து போட்டியிடும் மெக்கைன் பேசுகையில் புதிய பொருளாதார கொள்கைகளை வகுத்து நெருக்கடியை தீர்த்து வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்போவதாக உறுதி அளித்தார்.இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் இறுதியில் ஒருவரை ஒருவர் நாகரீகமான முறையில் கைகுலுக்கி விடைபெற்றனர். |
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223624973&archive=&start_from=&ucat=1&
Read more...பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
|
|
பின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அதிசாரி 2008ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோசவோ,இந்தோனேசியா என பல்வேறு கலவரப் பகுதிகளில் அமைதி ஏற்பட மத்தியஸ்தம் செய்து உதவியவர் இவர். பல்வேறு கண்டங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி சர்வதேச மோதல்களுக்குத் தீர்வு ஏற்பட முயற்சி மேற்கொண்டவர். அவரது அரும்பணியைப் பாராட்டி அவருக்கு 2008ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதென நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்தது என்று இந்த கமிட்டியின் தலைவர் ஓல் டான்பால்ட் எம்ஜோஸ் தெரிவித்தார். 71 வயதாகும் அதிசாரிக்கு நோபல் பரிசு கிடைக்கக்கூடும் என்று பத்திரிகைகளில் முன்னதாகவே செய்தி அடிபட்டது. அவரது பாராட்டத்தக்க முயற்சிகளில் ஒன்று இந்தோனேசிய கலவரத்தை தீர்க்க அவர் பாடுபட்டதாகும். தீவிரவாதிகளுக்கும் இந்தோனேசிய அரசுக்கும் இடையேயான மோதலால் 30 ஆண்டுகளாக கலவரம் நீடித்தது. இதில் 15 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இவரது மேற்பார்வையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பலன் ஏற்பட்டு 2005ல் தீர்வு ஏற்பட்டது. கோசவோ பிரச்னையிலும் தலையிட்டு அது விடுதலை பெற உதவினார். செர்பியா, கோசவோ மற்றும் பிரிஸ்தினா ஆகியவற்றுக்கு இடையே கூட்டு ஒப்பந்தம் ஏற்பட இவரது பேச்சுவார்த்தை உதவவில்லையென்றாலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருதலைப்பட்சமாக விடுதலை பெறுவதாக அறிவித்துக் கொண்டது கோசவோ. தொடக்கத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய அதிசாரி, 1960ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தூதர் பணியில் நுழைந்தார். 36-வது வயதில் அவர் தான்சானியா தூதராக நியமிக்கப்பட்டார். 1994ல் அதிபர் தேர்தல் வேட்பாளராக பின்லாந்தின் சமூக ஜனநாயக கட்சி அவரை நிறுத்தியது. அதில் வெற்றிபெற்று பின்லாந்து வரலாற்றில் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட அதிபர் என்ற பெருமைக்கு உரியவரானார். ஆஸ்லோவில் டிசம்பர் 10ம் தேதி நடக்கும் விழாவில் அவருக்கு நோபல் பதக்கம் மற்றும் ரூ. 6.40 கோடி பரிசு வழங்கப்படும். |
தெண்டுல்கர் சாதனையை பாண்டிங் முறியடிப்பார் லாரா சொல்கிறார்
தெண்டுல்கர் சாதனையை பாண்டிங் முறியடிப்பார் லாரா சொல்கிறார் |
டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் பிரைன் லாரா.வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் 131டெஸ்டில் 11,953 ரன் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தெண் டுல்கர் 11,877ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.லாராவின் சாதனையை முறியடிக்க தெண்டுல்கருக்கு இன்னும் 76 ரன் தேவை. பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்டில் அவர் இந்த சாதனையை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று தொடங்கிய பெங்களூர் டெஸ்டில் பாண்டிங் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 123 ரன்கள் எடுத்ததால் டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 6-வது இடத்தில் இருந்த கவாஸ்கரை முந்தினார். தற்போது கவாஸ்கர் 7-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார். தெண்டுல்கரின் சாதனையை பாண்டிங் ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று லாரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- தெண்டுல்கருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பெங்களூர் டெஸ்டில் எனது சாதனையை அவர் முறியடிப்பார் என்று நம்புகிறேன். ஏற்கனவே அவர் கவாஸ்கர், ஆலன்பார்டர் சாதனைகளை முந்தினார். அவரது சாதனைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் தெண்டுல்கரும் ஒருவர். பாண்டிங்கும் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கிரிக் கெட்டில் மாறி வரும் தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்பவர். இனிவரும் காலங்களில் தெண்டுல்கரின் சாதனைகளை பாண்டிங் ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும். இந்திய அணியில் 5 சீனியர் வீரர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றால் பாதிப்பு ஏற்படும். 1990-ம் ஆண்டில் விவியன் ரிச்சர்ட்ஸ், கிரினிட்ஜி, மார்ஷல் ஓய்வு பெற்றதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும். |
நான் "பலிகடா":கங்குலி ஆவேசம்
|
"தேர்வு குழுவினர் என்னை மோசமாக நடத்தினர்.இனிமேலும் என்னை பலிகடா ஆக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் ஓய்வை அறிவித்தேன்,"என்கிறார் கங்குலி.இந்திய அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்தவர் கங்குலி. இவர் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டின் நிர்ப்பந்தம் தான் காரணம் என கூறப்படுகிறது. நெருக்கடி கொடுத்தனர்:இந்நிலையில் வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வு குழுவினர் தன்னை பலிகடா ஆக்கி விட்டதாக கங்குலி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:தேர்வாளர்களின் கருணையில் விளையாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு தொடருக்கு வாய்ப்பு தருவார்கள். ஆனால், அடுத்த தொடரிலிருந்து நீக்கி விடுவார்கள். எப்போதும் என்னை தான் "பலிகடா"ஆக்குகிறார்கள். இது நீடிக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் ஓய்வு பெற முடிவு செய்தேன். உங்கள் தலையில் துப்பாக்கியை வைத்தால், அதை எவ்வளவு நேரம் தான் பொறுத்து கொள்வீர்கள். 450 போட்டிகள் விளையாடிய பின்பும் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். துக்கம் வரவில்லை: இரானி கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கப்படுவேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. சொல்ல முடியாத வேதனை காரணமாக ஒரு மாதம் எனக்கு துக்கம் வரவில்லை. புதிய தேர்வு குழுவினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பொறுப்பேற்றிருந்தால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும். சிலர் தாங்கள் சேர்த்த ரன்களை விட அதிக முறை "ஹேர் ஸ்டைலை"மாற்றியுள்ளனர். இவர்களுக்கு அணியில் தொடர்ந்து இடம் அளிக்கப்படுகிறது. சிறப்பாக விளையாடிய போதும் என்னை நீக்கிவிட்டார்கள். எனக்குரிய மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு கங்குலி தெரிவித்தார் |
அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம்
அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம்
An open letter to Muslims in the U.S.
எனினும், இத்தகைய கண்டனங்கள் சில நாட்களாகவே மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கின்றன. பொறுமையோடிருக்க வலியுறுத்தும் இத்தகைய கண்டனங்களின் மத்தியில் நான் கேள்விப்படாதது என்னவென்றால், அமைதியை விரும்பும் முஸ்லீம்கள் சமீபத்திய கொடுமைகளினால் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தவறான பொது அபிப்பிராயத்தை எதிர்கொள்ளும்படி இக்கொடுமையை நிறைவேற்றியவர்கள் தங்கள் செயல்கள் தவறானது எனப் புரிந்து கொள்ளும் வகையில் எதிர் நடவடிக்கையாக ஒரு ஆக்கபூர்வமான செயல்களை முஸ்லீம்கள் ஏற்படுத்தினார்களா? என்று கவனித்தால், இல்லை என்பது தான் பதிலாக உள்ளது.
முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
© Answering Islam, 1999 - 2008. All rights reserved.