சமீபத்திய பதிவுகள்

`தெண்டுல்கர் சாதனை செய்வார்'-கும்பிளே

>> Thursday, October 16, 2008


 


 


இந்திய அணியின் கேப்டன் கும்பிளே நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது நன்றாக இருப்பதாக உணர்கிறேன். ஆனால் நான் இந்த போட்டியில் விளையாடுவேனா, இல்லையா என்பது நாளை காலை (இன்று) தான் முடிவு செய்யப்படும். இன்னும் 24 மணி நேரம் இருக்கிறது. அதன் பிறகு என்ன ஆகிறது என்பதை பார்ப்போம். ஆடுகளத்தை பார்க்கையில், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் போல் தெரிகிறது. ஒவ்வொரு முறையும் இங்கு நாங்கள் நிறைய ரன்கள் குவித்து இருக்கிறோம். எனவே இது எங்களது பேட்ஸ்மேன்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.

தெண்டுல்கர் உலகின் தலைசிறந்த வீரர். அவர் லாராவின் சாதனையை சீக்கிரம் முறியடிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இந்த போட்டியிலேயே சாதனைக்கு தேவையான ரன்களை எடுத்து விடுவார் உறுதியாக நம்புகிறேன். இது அவருக்கு மட்டுமல்ல, உலக கிரிக்கெட்டுக்கே மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாக அமையும்.

இவ்வாறு கும்பிளே கூறினார்.

 

`சாதனை செய்ய விடமாட்டோம்'-பாண்டிங்

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ரிக்கிபாண்டிங் கூறியதாவது:-

ஸ்டூவர்ட் கிளார்க் இல்லாதது எங்களுக்கு பின்னடைவு என்று கருத முடியாது. எங்கள் அணியில் உள்ள 11 வீரர்களும் முழு திறமையை வெளிப்படுத்தக்கூடியவர்கள். எங்கள் அணி, உலகின் எந்த அணிக்கு கடும் சவால் அளிக்கக்கூடிய அணியாகும்.

முதல் டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை நன்கு `ரிவர்ஸ் ஸ்விங்' செய்தனர். குறிப்பாக ஜாகீர்கான், அதில் சிறப்பாக செயல்பட்டார். ரிவர்ஸ் ஸ்விங் செய்வதில் எங்கள் அணியின் பிரெட்லீ திறமை மிக்கவர். மொகாலி ஆடுகளத்தில் `ரிவர்ஸ் ஸ்விங்' பந்து வீச்சு எடுபட்டால், அந்த பணியை எங்களது வீரர்கள் நன்றாக செய்வார்கள்.

பெங்களூர் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் தெண்டுல்கர் நிறைய ரன்கள் குவிக்கும் வெறியுடன் ஆடியது தெரிந்தது. லாராவின் சாதனையை அவர் உடைத்தால், அவருக்கு நாங்கள் அனைவரும் வாழ்த்துக்கள் சொல்வோம். ஆனால் எங்களது பந்து வீச்சாளர்கள் அந்த சாதனையை செய்ய விடாமல் பார்த்துக் கொள்வார்கள். தெண்டுல்கர் இந்த டெஸ்டில் சாதனைக்கு தேவையான ரன்களை எடுக்க மாட்டார் என்று நம்புகிறோம்.

இவ்வாறு பாண்டிங் கூறினார். 
 
http://www.dailythanthi.com/article.asp?NewsID=444945&disdate=10/17/2008

StumbleUpon.com Read more...

பாராளுமன்றம் இன்று கூடுகிறது காரசார விவாதத்துக்கு கட்சிகள் தயார்

 


புதுடெல்லி, அக்.17-

பாராளுமன்றம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் காரசார விவாதத்துக்கு கட்சிகள் தயார் நிலையில் இருக்கின்றன.

பாராளுமன்ற கூட்டம்

பாராளுமன்றத்தின் மழைகால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குகிறது. இந்த கூட்டம் 5 வாரங்கள் நடக்கிறது. நவம்பர் 21-ந் தேதி கூட்டம் நிறைவு பெறுகிறது. இந்த கூட்டத்தில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.

அதே நேரத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளன. குறிப்பாக உள்நாட்டில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவங்கள், தீவிரவாதிகளின் அட்டூழியங்கள், அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிரான கொள்கை, பொடா போன்ற சட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், பங்கு மார்க்கெட் வீழ்ச்சி போன்றவற்றை கையில் எடுத்து பா.ஜனதா பிரச்சினைகளை எழுப்பும்.

ஓட்டுக்கு பணம்

கடந்த ஜுலை மாதம் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்த பிரச்சினையை மீண்டும் பா.ஜனதா கிளப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு பதிலடி கொடுக்க காங்கிரஸ் கட்சியும் சில பிரச்சினைகளை கையில் எடுக்க தயாராக இருக்கிறது. பா.ஜனதா ஆட்சி நடத்தும் கர்நாடகம், பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடக்கும் ஒரிசா போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பங்கு மார்க்கெட் வீழ்ச்சி, போன்றவை பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று தெரிய வருகிறது.

பஜ்ரங்தளம்

அதே நேரத்தில் பஜ்ரங்தளம் அமைப்பை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் வற்புறுத்துவார்கள் என்றும் கருதப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் அமைக்கப்பட இருக்கும் ரெயில் பெட்டி தொழிற்சாலைக்கு மாயாவதி அரசு நிலம் ஒதுக்க மறுத்த பிரச்சினை பற்றியும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பேசுவார்கள்.

கடைசி கூட்டம்

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும். எனவே இதுவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடத்தும் கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடராக இருக்கும்.

மேலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 6 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும் நடக்க இருக்கிறது. எனவே இந்த பாராளுமன்ற கூட்டம் முக்கியமான கூட்டம் என்று கருதப்படுகிறது.
 
 

StumbleUpon.com Read more...

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய முடியாது அதிபர் ராஜபக்சே அறிவிப்பு


 


கொழும்பு, அக்.17-

"இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று போர் நிறுத்தம் செய்ய முடியாது. போர் நிறுத்தம் செய்தால், விடுதலைப்புலிகளுக்கு சாதகமாக அமைந்து விடும்'' என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று தெரிவித்தார்.

பிரதமர் அறிவுரை

இலங்கையில் விடுதலைப்புலிகளின் நிர்வாக தலைநகரமாக கருதப்படும் கிளிநொச்சி பகுதியை ராணுவம் முற்றுகையிட்டு உள்ளது. இந்த போரில் அப்பாவி தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். போர் மேகம் சூழ்ந்துள்ளதால் ஐ.நா. மற்றும் சர்வதேச நிவாரண அமைப்புகளையும் இலங்கை அரசு அங்கு இருந்து வெளியேற்றி விட்டது.

எனவே, இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தலையிடக் கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. வருகிற 29-ந் தேதிக்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்படா விட்டால் தமிழக எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, `இலங்கை இனப்பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை கூடாது. பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் அறிவுறுத்தினார்.

ராஜபக்சே அறிக்கை

ஆனால், இதை இலங்கை அரசு நிராகரித்து விட்டது. விடுதலைப் புலிகள் மீதான போரை நிறுத்த முடியாது என்று அதிபர் ராஜபக்சே நேற்று அறிவித்தார். இது குறித்து, இலங்கை ஒலிபரப்பு கழகம் சார்பாக ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

போர் நிறுத்தம் கிடையாது

இலங்கை ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் மீது விடுதலைப் புலிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசியல் தலைவர்களின் கோரிக்கையை ஏற்று எனது அரசால் (இலங்கை அரசு) போர் நிறுத்தத்தை அறிவிக்க முடியாது. போர் நிறுத்தம் குறித்து நாங்கள் பரிசீலிக்கவே இல்லை.

போர் நிறுத்தத்தை அறிவித்தால், இன்னும் அதிகமான அளவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டங்களை வகுப்பதற்கு கால அவகாசம் அளிப்பது போல ஆகிவிடும். கிளிநொச்சி புறநகர் பகுதியை ராணுவம் நெருங்கி விட்டது. எந்த சமயத்திலும் அந்த நகரை கைப்பற்றி விடுவோம் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழக தலைவர்களுக்கு உறுதி

இலங்கை, இறையாண்மை மிக்க நாடு. வன்னி பகுதியில் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைகளை தமிழ்நாட்டில் உள்ள அரசியல் தலைவர்களால் தடுத்து நிறுத்த முடியாது. இலங்கை அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக தவறான பிரச்சாரத்தை விடுதலைப் புலிகள் தொடங்கி இருக்கின்றனர். எனவே, அவர்களின் தவறான வழிகாட்டுதலுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று இந்திய அரசை இலங்கை கேட்டுக்கொள்கிறது.

இலங்கையில் அமைதிப் பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தும் தமிழக தலைவர்களுக்கு ஒன்றை உறுதியாக கூறிக் கொள்கிறேன். வன்னி பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் இலங்கை அரசு வழங்கும்.

இவ்வாறு அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

தமிழர்களுக்கு பாதிப்பு இல்லை

முன்னதாக, இலங்கை வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஒருவர் நேற்று முன்தின இரவு அளித்த பேட்டியில், "இலங்கை அரசின் கட்டுப்பாட்டு பகுதியிலோ அல்லது விடுதலைப் புலிகள் ஆக்கிரமித்துள்ள பகுதியிலோ வசிக்கும் அப்பாவி தமிழர்கள் ஒருவர் கூட பலியாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்'' என்று தெரிவித்தார்.

இலங்கை மந்திரி லட்சுமணன் யபா அபயவர்த்தனா கூறுகையில், "தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்காக, விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை இலங்கை அரசு நிறுத்தாது'' என்று தெரிவித்தார்.

ராஜபக்சே அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கூட்டணி கட்சிகளும், `இந்திய அரசியல்வாதிகளின் நெருக்குதலுக்கு பணிந்து, விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நழுவ விடக்கூடாது' என்று தெரிவித்து உள்ளனர்.

தூதர் பேட்டி

இதற்கிடையே, இலங்கை தூதர் ஜெயசிங்கே டெல்லியில் நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "பிரதமர் மன்மோகன்சிங் விடுத்த வேண்டுகோளை பத்திரிகைகள் மூலமாக அறிந்தேன். இலங்கை இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்ற அவரது அறிவுரையை இலங்கை அரசு தனது கவனத்தில் எடுத்துக் கொள்ளும்'' என்றார்.

 

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=444893&disdate=10/17/2008

StumbleUpon.com Read more...

மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை தூதுக்குழுவை அனுப்பி இலங்கையுடன் பேச வேண்டும்

மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
தூதுக்குழுவை அனுப்பி இலங்கையுடன் பேச வேண்டும்

 

  சென்னை, அக்.17: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

'இலங்கை இனி சிங்கள நாடு, சிங்களர்களுக்கு அடிமையாக வாழ கற்று கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்களுக்கு இங்கு இடமில்லை' என்று இலங்கை போர்ப்படை தளபதி பொன்சேகோ பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதையே புத்தமத குருக்களும் கூறியுள்ளனர்.

அவர்களின் இந்த பிரகடனம் ஒட்டுமொத்த தமிழினத்துக்கு விடப்பட்ட சவால். தமிழர் உரிமைக்காக போராடும் பிரபாகரன், எங்கள் முன்னால் மண்டியிட வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்கு தமிழினத்தை மண்டியிடச் செய்வதுதான் அர்த்தம்.

விடுதலைப்புலிகள் என்ற பூச்சாண்டியைக் காட்டி, தமிழர்களின் தன்மானத்தை மழுங்கடிக்க செய்யும் எந்த முயற்சியிலும் யாரும் ஈடுபட வேண்டாம். இது ஒரு இனத்தின் தன்மான பிரச்னை.

தளபதி பதவில் இருந்து பொன்சேகோவை நீக்க நாம் குரல் எழுப்ப வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு அரசியல் தீர்வு ஏற்பட இந்திய அரசை வலியுறுத்த வேண்டும். இந்த முயற்சியில் முதல்வரும், தமிழக அரசும் ஈடுபட வேண்டும்.

 இலங்கை அதிபருடன் நம் பிரதமர் நேரடியாக பேச வேண்டும். இந்தியாவில் இருந்து உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை அனுப்பி, இலங்கை தலைவர்களை சந்தித்து, அமைதி பேச்சுவார்த்தை தொடங்கவும், போரை நிறுத்தச் செய்யவும், மத்திய அரசை வற்புறுத்த வேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் இனி அவர்களுக்கு உரிமைகளை பெற்று தர முடியாது. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
 

StumbleUpon.com Read more...

3-வது சுற்றில் ரபேல் நடால்

 
lankasri.comமேட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ரபேல் நடால்,லாத்வியாவில் எர்னெஸ்ட் குல்பிஸ் உடன் நேற்று 2வது சுற்று ஆட்டத்தில் மோதினார்.

2மணி நேரம் 22நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ரபேல் நடால் 75,36,63என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

முதல் செட் ஆட்டத்தில் குல்பிஸ்,55 என்ற புள்ளிகள் கணக்கில் நடாலுக்கு சவால் விடுக்கும் வகையில் விளையாடினார்.

எனினும்,சில தவிர்க்க முடியாத தவறுகள் காரணமாக அவர் நடாலிடம் சரண் அடைந்தார்.2வது செட் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற போதிலும்,3வது செட்டில் குல்பிஸ்சை நடால் எளிதாக வீழ்த்தினார்.

இந்த ஆட்டத்தில் குல்பிஸ் சிறப்பாக விளையாடினார் என்றும்,குறிப்பாக 2வது செட் ஆட்டம் கடினமாக இருந்தது என்றும் நடால் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து 3வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் மார்டி பிஷ்ஐ 67,64,63 என்ற செட் கணக்கில் வீழ்த்திய பிரான்சின் ரிச்சர்ட் காஸ்கிட் உடன் ரபேல் நடால் மோதுகிறார்.

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1224056565&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

சச்சின் சாதனை:கவாஸ்கர் விருப்பம்

 
lankasri.comபிரைன் லாராவின் உலக சாதனையை சச்சின் டெண்டுல்கர் முறியடிக்க காத்திருப்பதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள சச்சின் டெண்டுல்கர்,டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரைன் லாராவின் சாதனையை நெருங்கியுள்ளார்.

நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் 2வது இன்னிங்சில் அவர் ஆடிக் கொண்டிருந்த போது லாராவின் சாதனையை முறியடிப்பார் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.அதற்கேற்ப சிறப்பாக ஆடி வந்த டெண்டுல்கர் 49 ரன்கள் எடுத்திருந்த போது எதிர்பாராதவிதமாக ஆட்டம் இழந்தார்.

இதன் காரணமாக அவர் லாரா சாதனையை முறியடிக்க முடியவில்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. லாராவின் சாதனையை முறியடிக்க அவருக்கு இன்னமும் 15 ரன்கள் தேவை.

இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் இந்த 15 ரன்களை எடுத்து லாரா சாதனையை முறியடிக்க ஆர்வத்தோடு காத்திருப்பதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்மேலும் கூறியிருப்பதாவது:

மொஹாலி டெஸ்ட் போட்டியில் டெண்டுல்கர் அரை சதம் அல்லது சதம் அடித்து லாரா சாதனையை முறியடித்தால் சிறப்பாக இருக்கும்.

எப்படியும் சாதனை, சாதனை தான். எனவே 15 ரன்களை எடுத்து இந்த சாதனையை முறியடித்தாலும் அது போற்றக்கூடியதுதான்.சச்சின் இந்த சாதனையை முறியடிப்பதற்காக நான் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.15ரன்களை எடுத்த பிறகு அவர் தொடர்ந்து சிறப்பாக ஆடி சதம் அடித்தால் அது கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223973116&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டி: ஜெயசூர்யா ஆட்டத்தால் இலங்கை வெற்றி-பாகிஸ்தானை வீழ்த்தியது

 
lankasri.comபாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே, கனடா ஆகிய 4 நாடுகள் பங்கேற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கனடாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்-இலங்கை அணிகள் மோதின.

முதலில் ஆடிய பாகிஸ் தான் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்தது. தொடக்க வீரர் சல்மான் பட் 41 பந்தில் 44 ரன்னும், மிஸ்பா உல் ஹக் 23 ரன் னும் எடுத்தனர். அஜந்தா மெண்டீஸ் 3 விக்கெட்டும், மெகரூப், பெர்னாண்டோ தலா 1 விக்கெட்டும் கைப் பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய இலங்கை அணி 19 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்து 5 விக்கெட்டில் வென்று கோப்பையை கைப் பற்றியது.

ஜெயசூர்யா 34 பந்தில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 40 ரன்னும், உத்வதே 25 ரன்னும் எடுத்தனர். சோயிப் மாலிக் 2 விக்கெட் கைப்பற்றினார்.

ஜெயசூர்யா ஆட்ட நாய கனாகவும், மெண்டீஸ் தொடர் நாயகனாகவும் தேர்வு பெற்றனர். லீக் ஆட்டத்தில் தோற்றதற்கு இறுதிப் போட்டியில் வென்று பாகிஸ்தானை இலங்கை அணி பழி தீர்த்துக் கொண்டது.

 

 

StumbleUpon.com Read more...

ராமர் கோயில் பிரச்னையை தேர்தல் பிரசாரமாக்க மாட்டோம்:அத்வானி

 
 
lankasri.comவரும் மக்களவைத் தேர்தலில் ராமர் கோயில் பிரச்னையை முன்னிறுத்தி பிரசாரம் செய்ய மாட்டோம் என்று பாஜக மூத்த தலைவரும் பிரதமர் வேட்பாளருமான எல்.கே.அத்வானி கூறினார்.அமிர்தா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசார அம்சங்களில் ராமர் கோயில் விவகாரம் இடம்பெறவில்லை. கூட்டணி திட்டத்தில் ராமர் கோயில் பிரச்னை இல்லை என்றார் அவர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். அதற்கு நான் ஆதரவாகவே உள்ளேன். அயோத்தியில் கோயில் கட்டினால் தான் எனது மனது திருப்தியடையும் என்று அவர் கூறினார்.

நாம் வாக்குறுதி கொடுத்துவிட்டு அது நிறைவேற்ற முடியாமல் போனால் தவறாகிவிடும் என்றார் அவர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதுபோல் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி உள்ளிட்ட சகோதர அமைப்புகளுடன் உள்ள கருத்து வேறுபாடுகள் பேசித் தீர்க்கப்பட்டுவிட்டன என்று அத்வானி கூறினார்.

முஸ்லிம்களின் நலனில் எனக்கும் அக்கறை உள்ளது. முஸ்லிம்கள் மட்டுமின்றி நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் முன்னேற்றத்திலும் அக்கறை உள்ளது. முஸ்லிம், கிறிஸ்தவர், இந்து என யாராக இருந்தாலும் ஏழைகளின் முன்னேற்றத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றார் அத்வானி.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1224147042&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP