சமீபத்திய பதிவுகள்

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது 19,000 மாணவர்கள் பலி

>> Saturday, November 22, 2008

 

  • பெய்ஜிங்
    சீனாவின் சிச்சுவான் மாநிலத்தை நிலநடுக்கம் உலுக்கி 6 மாதங்கள் ஆகின்றன.
    அந்த நிலநடுக்கத்தில் எத்தனை பள்ளிக் குழந்தைகள் இறந்தனர் என்பது பற்றிய விவரத்தை அரசாங்கம் இதுவரை தெரிவிக்காமல் இருந்து வந்தது.
    இப்போது முதன் முறையாக அரசாங்கம் அந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
    நிலநடுக்கத்தின்போது பள்ளிக்கூடங்கள் இடிந்து விழுந்ததில் 19,000 மாணவர்கள் உயிரிழந்ததாக அரசாங்க அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
    சிச்சுவான் மாநிலத்தை 7.9 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலுக்கியபோது 80,000 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கையில் கால்வாசியினர் பள்ளி மாணவர்கள் என்று இப்போது அரசாங்கம் அறிவித்துள்ளது.
    நிலநடுக்கத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை பற்றிய கணக்கெடுப்பு இன்னும் முடியவில்லை என்று சிச்சுவான் மாநில துணை ஆளுநர் வெய் ஹோங் கூறினார்.
    பள்ளிக்கூடக் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் கொல்லப்பட்ட 19,000 பேரில் ஆசிரியர்களும் அடங்குவார்களா, அல்லது மாணவர்கள் மட்டுமா என்ற விவரத்தை அவர் தெரிவிக்கவில்லை. நிலநடுக்கத்தின்போது இடிந்துவிழுந்த பள்ளிக்கூடங்கள் முன்னதாக அந்த நிலநடுக்கத்தில் 10,000-க்கும் குறைவான மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியிட்டிருந்ததாக ராய்ட்டர்ஸ் தகவல் கூறியது.
    நிலநடுக்கத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட சிச்சுவான் மாநிலத்தில் மறுநிர்மாணப் பணிகளை மேற்கொள்ள அரசாங்கம் 440 பில்லியன் யுஎஸ் டாலர் செலவு செய்யவிருப்பதாக சிச்சுவான் மாநில துணை ஆளுநர் வெய் ஹோங் கூறினார்.
    அடுத்த ஈராண்டுகளுக்கு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சிச்சுவான் மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பழைய நிலைக்குத் திரும்ப நாள் ஆகும் என்றும் அவர் கூறினார்.

StumbleUpon.com Read more...

ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவிற்கும் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1

ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவிற்கும் பவுலுக்கும் இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1



ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும் பாகம் -1
 
குறிப்பு: நம் தமிழ் முஸ்லீம்கள் முக்கியமாக ஏகத்துவம் தளத்தில் பவுலும் கிறிஸ்தவமும் என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதி வெளியிட்டு இருந்தார்கள். கிறிஸ்தவத்தை உண்மையாக ஸ்தாபித்தது இயேசு அல்ல, பவுல் தான் என்ற தோரணையில் கட்டுரையை எழுதியிருந்தார்கள். அவர்களின் கட்டுரைகளுக்கு தனிப்பட்ட முறையில் பதில் சொல்வதற்கு முன்பாக, இயேசுவின் போதனைக்கும், அப்போஸ்தலரான பவுலின் போதனைக்கும் இடையே உள்ள ஒற்றுமையை இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம். (முஸ்லீம்களின் நம்பிக்கையின் படி, இயேசுவின் செய்தியும், முகமதுவின் செய்தியும் ஒன்று தான். ஆனால், இயேசுவிற்கும் முகமதுவிற்கும் கிழக்கிற்கும், மேற்கிற்கும் உள்ள தொலைவு போல வித்தியாசம் உள்ளது, இதனை கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர் அல்லாத மாற்று மத நம்பிக்கையாளர்களும் அறிந்துள்ளார்கள்.)இஸ்லாமியர்கள் நினைப்போது போல அல்லாமல், இயேசு எதைச் சொன்னாரோ, அதையே சொல்லியிருக்கிறார் அப்போஸ்தலர் பவுலும், இக்கட்டுரையில் ஒவ்வொரு தலைப்பைப் பற்றி இயேசு எதைச் சொல்லியுள்ளாரோ, பவுலும் அதையே சொல்லியுள்ளார் என்பதை வாசகர்கள் கவனிக்கலாம். பவுல் சொன்னது இயேசு சொன்னதற்கு முரண்பட்டது என்றுச் சொன்னால், பவுல் முகமதுவைப் போல, உன் எதிரிகளை கொல்லு, ஒன்றுக்கும் அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொண்டு, உன் அடிமைப்பெண்களை வைப்பாட்டிகளாக எடுத்துக்கொள் என்று சொல்லியிருந்தால், இயேசு சொன்னதற்கு எதிராக பவுல் சொன்னார் என்று நாம் கருதலாம், பவுல் சொன்னது அப்படி இல்லையே, இத்தொடர் கட்டுரைகளை படித்து தெளிவுப் பெருங்கள்.

இந்த தலைப்பில் இது முதலாவது பாகமாகும், இதில் 35 ஒற்றுமைகளை காட்டியுள்ளோம், மீதமுள்ளதை அடுத்த தொடரில் காண்போம்.
 
 


 
கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும், அப்போஸ்தலர் பவுலுக்கும்
இடையேயான 100 ஒற்றுமைகள் - Part 1


100 Similarities between the Lord Jesus Christ and the Apostle Paul

தொகுத்தவர்: அந்தோனி வேல்ஸ் (Anthony Wales)
 
முன்னுரை:

அநேக முஸ்லீம்கள் இயேசு ஒரு இஸ்லாமிய நபி என்று விசுவாசிக்கின்றனர். மேலும் இதை உறுதிபடுத்துவதற்கு அநேக விவாதங்களையும் எழுப்புகின்றனர். அதில் ஒரு முக்கியமான விவாதம் என்னவென்றால் பவுல் தான் கிறிஸ்தவத்தின் உண்மையான ஸ்தாபகர் என்பதாகும். இந்த விவாதத்தில் அவர்களின் கூற்று, வேதாகமத்தில் புனித பவுலின் போதனைகள் இயேசுவின் போதனைகளுக்கு முற்றிலும் வேறுபட்டதாயிருக்கிறது என்பதாகும். இந்தக் கட்டுரையானது பவுலுக்கும் இயேசுவுக்கும் இடையிலான் 100 ஒற்றுமைகளைக் காண்பித்து அவர்களின் கூற்றுக்கு பதில் அளிக்கும் படியாக கொடுக்கப்படுகிறது.

 
இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமைகள் இயேசு மற்றும் பவுல் பற்றியதான வேதப்பகுதிகளிலிருந்து எடுத்தாளப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் வார்த்தைகள், கிரியைகளை தெரிவிக்கும் ஆதாரப் பகுதியாக சுவிசேஷங்கள் (மத்தேயு, மாற்கு, லூக்கா மற்றும் யோவான்) உள்ளது. மேலும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும், வெளிப்படுத்தின சுவிஷேசத்திலும் இயேசுவுடைய சில வார்த்தைகளும் கிரியைகளும் இருக்கிறது. பவுலுடைய வார்த்தைகளும், கிரியைகளும் அப்போஸ்தலருடைய நடபடிகளிலும் அவருடைய நிருபங்களில் காணப்படுகிறது (ரோமர் நிருபம் முதல் பிலேமோன் நிருபம் வரையிலும்). அவர்களின் வார்த்தைகள், கிரியைகள் மற்றும் வாழ்க்கையில் உள்ள ஒற்றுமைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
 
 
1. இயேசு தான் மேசியா அல்லது கிறிஸ்து (Jesus is the Messiah or Christ)

 
இயேசு: அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான், மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். (மத்தேயு : 16:15-17)

 
பவுல்: மக்கெதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங் கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான்(அப் :18: 5).

 
2. இயேசு தேவனுடைய குமாரன்(Jesus is the Son of God)

 
இயேசு: அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள். (லூக்கா 22: 70-71)

 
பவுல்: தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். (அப் 9: 20)

 
3. இயேசுவே ஆண்டவர்(Jesus is Lord)

 
இயேசு: நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர் தான். (யோவான் 13:13)

 
பவுல்: பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது, அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு, அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். (1 கொரி 8: 6)

 
4. இயேசுவே தேவன் (Jesus is God)

 
இயேசு: தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். (யோவான் 20: 28-29)

 
பவுல்: பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். (ரோமர் 9: 5)

 
5. இயேசு மனிதர் (Jesus is Human)

 
இயேசு: அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. (யோவான் 8: 39-40)

 
பவுல்: தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2: 5-6)

 
6. இயேசு ஸ்தீரியினிடத்தில் பிறந்தவர் (Jesus was born of Woman)

 
இயேசு: தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். (லூக்கா 1: 30-32)

 
பவுல்: காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். (கலா 4: 5)

 
7. தேவன் இயேசுவை அனுப்பினார்(God sent Jesus)

 
இயேசு: இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். (யோவான் 8: 42)

 
பவுல்: அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். (ரோமர் 8: 3)

 
8. இயேசுவே பிதாவனிடத்திற்கு போகும் வழி (Jesus is the way to the Father)

 
இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

 
பவுல்: அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். (எபே : 2: 18)

 
9. இயேசுவே ஒளி (Jesus is Light)

 
இயேசு: மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். (யோவான் 8: 12)

 
பவுல்: அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?. கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? (2 கொரி 6: 14-15)

 
10. இயேசுவே ஜீவன் (Jesus is Life)

 
இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

 
பவுல்: நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். (கொலோ 3: 4)
 
 
 
11. இயேசுவே தொடக்கம் /ஆதியுமாக இருக்கிறார் உள்ளார் (Jesus is the Beginning)

 
இயேசு: நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். (வெளி 22:13)

 
பவுல்: ….அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். (கொலோ 1:18)

 
12. இயேசு முதலாமவர் (Jesus is First)

 
இயேசு: .....நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், .... (வெளி 1: 17-18)

 
பவுல்: அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். (கொலோ 1:18)

 
13. இயேசு தாவீதின் சந்ததியானவர் ( Jesus is a descendent of David)

 
இயேசு: தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். (லூக்கா 1: 30-32)

 
பவுல்:தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின் படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். (2 தீமோ 2: 8)

 
14. இயேசு மணவாளன் (Jesus is the Bridegroom)

 
இயேசு: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்ன வென்று கேட்டார்கள். அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. (மாற்கு 2: 18-19)

 
பவுல்: நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். (2 கொரி 11: 2)

 
15. இயேசுவே ராஜா (Jesus is King)

 
இயேசு: இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18; 36-37)

 
பவுல்: விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. (எபே 5: 5)

 
16. இயேசு பரத்திலிருந்து இறங்கினவர்(Jesus descended from Heaven)

 
இயேசு:பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. (யோவான் 3: 13)

 
பவுல்: ஏறினார் என்பதினாலே அவர் அதற்கு முன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? (எபே 4: 9)

 
17. இயேசுவே இரட்சகர் (Jesus is Saviour)

 
இயேசு: உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். (யோவான் 3:17)

 
பவுல்:பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். (1 தீமோ 1: 15)

 
18. இயேசுவே சத்தியமானவர்(Jesus is the Truth)

 
இயேசு: அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14: 6)

 
பவுல்:இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின் படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. (எபே 4: 21)

 
19. இயேசு ஏழையாக இருந்தார் (Jesus was poor)

 
இயேசு: அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். (மத்தேயு 8: 20)

 
பவுல்: நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும் படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. (2 கொரி 8: 9)

 
20. தேவனின் மகிமையின் ஒளி இயேசுவின் முகத்தில் பிரகாசித்தது.
(The glory of God shines in the face of Jesus)


 
இயேசு: ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. (மத்தேயு 17: 1-2)

 
பவுல்: இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். (2 கொரி 4: 6)

 
21. இயேசு தேவனுடைய பந்தியை ஏற்படுத்தினார் (Jesus instituted the Lord's Supper)

 
இயேசு: அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள்.அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. (மாற்கு 14: 22-24)

 
பவுல்: நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார் போஜனம் பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும் போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். (1 கொரி 11: 23-25)

 
22. இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டார்(Jesus was betrayed)

 
இயேசு: .... உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். .... மனுஷகுமாரன் தம்மைக் குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷ குமாரன் காட்டிக் கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ!.... (மாற்கு 14: 18, 21)

 
பவுல் : நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக் கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, (1 கொரி 11: 23)

 
23. இயேசு பொந்திய பிலாத்துவுக்கு முன்பாக சாட்சியளித்தார் (Jesus testified before Pontius Pilate)

 
இயேசு : அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். (யோவான் 18: 33-37)

 
பவுல்: எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். (1 தீமோ 6: 14)

 
24. இயேசு பாடுபட்டார்(Jesus suffered)

 
இயேசு: அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள் பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத் தொடங்கினார். (மத்தேயு 16: 21)

 
பவுல்: எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது (2 கொரி 1: 5).

 
25. இயேசு மரித்தார்(Jesus died)

 
இயேசு: இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். (மாற்கு 15: 37)

 
பவுல் :இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; …. (1 தெச 4: 14)

 
26. இயேசு அடக்கம்பண்ணப்ட்டார் (Jesus was buried)

 
இயேசு: அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். (மாற்கு 15: 46)

 
பவுல்: ..... அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். (ரோமர் 6: 4)

 
27. இயேசு மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்தார்(Jesus rose from the dead on the third day)

 
இயேசு: இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். (யோவான் 2: 19, 22)

 
பவுல்: நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளில் உயிர்த்தெழுந்து, (1 கொரி 15 : 3-4)

 
28. இயேசு பரமேறினார்(Jesus ascended)

 
இயேசு: அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். (லூக்கா 24: 51)

 
பவுல்: இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். (எபே 4: 10)

 
29. இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் அமர்ந்தார். (Jesus is seated at the right hand of the Father)

 
இயேசு: .....மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர் தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14: 61-62)

 
பவுல்: எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, (எபே 1: 20)

 
30. இயேசு மீண்டும் வருவார் (Jesus will come again)

 
இயேசு: அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். (மத்தேயு 24: 30)

 
பவுல்: ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். (1 தெச 4: 16)

 
31. இயேசு ஆடுகளுக்காக மரித்தார் (Jesus died for the sheep)

 
இயேசு:ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். (யோவான் 10: 15)

 
பவுல்: ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். (அப் 20:28)

 
32. இயேசு நம்மேலிருந்த அன்பின் நிமித்தம் மரித்தார் (Jesus died for love of us)

 
இயேசு:நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. (யோவான் 15: 12-13)

 
பவுல்: ....நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன (கலா 2: 20)

 
33. இயேசுவின் மரணம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது (Jesus' death demonstrates God's love)

 
இயேசு: தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். (யோவான் 3: 16)

 
பவுல்: நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப் பண்ணுகிறார். (ரோமர் 5: 8)

 
34. இயேசு தன்னை ஒரு பரிகார பலியாக ஒப்புக்கொடுத்தார் (Jesus gave himself as a ransom)

 
இயேசு: அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங் கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். (மத்தேயு 20: 28)

 
பவுல்: தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. (1 தீமோ 2: 5-6)

 
35. இயேசுவை சிலுவையிலறைந்தவர்கள் அறியாமையினாலே அப்படிச் செய்தார்கள்
(Those who crucified Jesus were ignorant and acted in ignorance)


 
இயேசு: அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். ... (லூக்கா 23: 34)

 
பவுல்: உலகத்தோற்றத்திற்கு முன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவ ஞானத்தையே பேசுகிறோம். அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. (1 கொரி 2: 7-8)

 
 
முடிவுரை: அன்பான இஸ்லாமியர்களே, நீங்களே உங்கள் கண்களால் காணுங்கள், உங்கள் காதுகளால் கேளுங்கள், மனதால் உணருங்கள். இயேசுவின் போதனைக்கும், அப்போஸ்தலனாகிய பவுலின் போதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், இயேசுவின் போதனைக்கும், நீங்கள் நபி என்று நம்பிக்கொண்டு இருக்கும் முகமதுவின் போதனைக்கு எவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இயேசுவிற்கு முரண்பட்டவர் பவுல் அல்ல, இயேசுவின் மற்ற சீடர்கள் அல்ல, உங்கள் முகமது தான் முரண்பட்டார், ஆரம்ப முதல் கடைசி வரைக்கும் இயேசுவிற்கு முரண்பட்ட எல்லா செயல்களையும் அவர் செய்தார். குர்‍ஆனையும் பைபிளையும் படித்துப்பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

 
அடுத்த தொடரில் சந்திக்கும் வரை கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. இயேசுவே நாங்கள் உங்களை நேசிக்கிறோம், சீக்கிரமாக வாரும். ஆமென்.


 

 
 

StumbleUpon.com Read more...

கழிவறையில் ரகசியக் கேமரா - ஆபாச சிடி - செல்போன் - இணைய தளங்கள் - பெண்களுக்கு பகிரங்க எச்சரிக்கைப் பதிவு

 

கேரளாவில் ஒரு பேருந்து நிலையத்தில் இருந்த பெண்கள் கழிவறையில் 9 ரகசிய கேமராக்கள் பொருத்தப் பட்டு அந்தக் கழிவறையைப் பயன்படுத்திய பெண்கள் ஆபாசமாகப் படம் பிடிக்கப் பட்ட கொடுமை கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.

வக்கிரர்கள் தாங்கள் இப்படி திருட்டுத் தனமாக எடுக்கும் ஆபாசப் படங்களை அவர்கள் உடனடியாக சிடியாக மாற்றியும், செல்போன்களில் ஏற்றிக் கொடுத்தும், இணைய தளங்களில் பதிந்தும் பணம் ஈட்டி விடுகின்றனர்.

இந்தக் கொடுஞ்செயல் பற்றி விரிவாக...

பெண்களைத் தெய்வமாக மதித்துப் போற்றும் நமது நாட்டில்தான் இப்படிப்பட்ட வக்கிரச் செயல்களை செய்யும் பெண் பித்தர்களும் உள்ளனர்.

கேமராவுடன் உள்ள அலைபேசிகளை கையில் வைத்துக் கொண்டு பொது இடங்களில் நடமாடும் பெண்களை அவர்கள் அறியா வண்ணம் சமயம் பார்த்து ஆபாசமாகப் படம் பிடிக்கும் குறு மனம் படைத்தோரும் இங்கே உள்ளனர்.

அப்பாவிப் பெண்களைத் துகிலுரித்துப் பார்க்கத் துடிக்கும் ஆண் வக்கிரர்களின் கொடு மனம், தங்களின் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்ள எந்த அளவுக்குக் கீழ்த்தரமான காரியங்களையும் செய்யத் துணியும் என்பது உண்மைதான் போல.

பெண்கள் குளிப்பதை அவர்கள் அறியா வண்ணம் ஒளிந்து இருந்து பார்க்கத் துடிக்கும் பென்பித்தர்களை நாம் பார்த்து இருப்போம், அவர்களைப் பற்றிக் கேள்விப் பட்டு இருப்போம்.

ஆனால் பெண்கள் கழிப்பறைக்குள் வீடியோ கேமரா வைத்து படம் பிடித்து பார்க்கத் துடிக்கும் கொடூரர்கள் பற்றிக் கேள்விப் படும் போது இதயம் பதறுகிறது.

நெடுந்தொலைவு பயணம் செய்யும் போது பெரும்பாலான மக்கள் பேருந்துப் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அவ்வாறு பேருந்துப் பயணம் செய்யும் போது அந்தப் பேருந்துகள் ஊருக்கு வெளிப்புறங்களில் உள்ள உணவங்களில் நிறுத்தப் படுகின்றன அல்லவா?

பேருந்தில் பயணம் செய்யும் பெண்கள் அக்தகைய உணவங்களில் உள்ள கழிவறையைப் பயன் படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

அப்படிப்பட்ட உணவகங்களில் உள்ள கழிவறைகளில் வீடியோ கேமராக்களை மறைத்து வைத்து விடுகின்றனர் இந்தக் கோணல் புத்திக்காரர்கள்.

கழிவறைகளின் மேலே உள்ளே விளக்குகிலோ அல்லது சுவற்றில் இருக்கும் குழாயிலோ அல்லது கழிவறையின் கதவிலோ இந்த வீடியோக் கேமராக்களைப் பொருத்தி விடுகின்றனர் இந்தக் கொடூரர்கள்.

இந்தப் படு பாதக சதிச் செயலைப் பற்றி ஏதும் அறியாமல் பேருந்தில் வந்த பெண்கள் தங்கள் இயற்கை உபாதையைத் தீர்த்துக் கொள்ள அந்தக் கழிவறையை பயன்படுத்தி விடுகின்றனர்.

அங்கே மறைத்து வைக்கப் பட்டு இருக்கும் கேமராக்கள் மூலமாக அந்தப் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்த அந்தக் கும்பல் அதனை உடனே குறுந்தகடுக்கு மாற்றி விற்று விடுகின்றனர்.

பெண் பித்தும், பணத்தாசையும் பிடித்த இந்தக் கொடுரக் கூட்டம் பெண்களின் ஆபாச வீடியோவை சிடியாக மாற்றுவதோடு நின்று விடாமல் அதை இணையம்வரை கொண்டு சென்றும் பணம் பார்த்து விடுகின்றனர்.

கழிவறைக்குள் வைத்து திருட்டுத் தனமாக படம் பிடிக்கப் படும் இந்த ஆபாசக் காட்சிகளை எந்த அருவருப்பும் இல்லாமல் பார்த்து ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருப்பது அதை விட வேதனையான விஷயம்.

இந்த ஆபாசக் காட்சிகளை தங்கள் அலைபேசிகளில் ஏற்றிக் கொண்டு அதைப் பார்த்து ரசிக்கும் ஒரு கூட்டமும் இருக்கிறது.

இப்படிக் கூட அசிங்கமான காரியங்களில் ஈடுபடுவார்களா என்று நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள இந்த அவலச் செயல் எப்படிக் கண்டு பிடிக்கப் பட்டது என்றால்,

திருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் கார்ப்பரேஷன் பாத்ரூமில் ஓணம் பண்டிகைக்கு பாத்ரூமை வெள்ளை அடித்து சுத்தம் செய்யும்போது பெண்கள் பாத்ரூமில் 9 இடத்தில் கேமரா இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.

கேமராவை கழிவறையின் மேலே தொங்கும் மின்விளக்கில் பொருத்தி படம் பிடித்து வந்து உள்ளனர்.

இதை அறிந்த கேரளா பிரஜா என்ற பெண்கள் அமைப்பினர் அந்தக் கழிவறையைப் பூட்டி பெரும் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய அந்தப் பரபரப்பினால் தான் இக்தகைய ஒரு கொடுஞ்செயல்
வெளியில் தெரிய வந்து உள்ளது.

அந்தப் பேருந்து நிலையக் கழிவறையை ஒரு நாளைக்கு ஆயிரக் கணக்கான பெண்கள் பயன் படுத்தி வரும் நிலையில் இந்த வக்கிரர்கள் யார் யாரை எல்லாம் படம் பிடித்து உள்ளனரோ என்ற கவலை பலர் மனதில் ஏற்பட்டு உள்ளது.

இது கேரளாவில் தானே நடந்தது என்று நாம் சாதாரணமாக எண்ணிக் கொள்ளக் கூடாது, இந்தப் பேருந்து நிலைய சம்பவம் நமக்கு ஒரு உதாரணம்தான், அங்கே செய்தவர்கள் அகப் பட்டுக் கொண்டார்கள், இன்னும் அகப்படாதோர் எத்தனையோ.

நாகர்கோவிலில் ஒரு துணிக்கடையில் இது போலக் கழிவறையில் கேமரா வைத்துப் படம் பிடிக்கப் பட்ட சம்பவம் வெளியில் தெரிந்து பரபரப்பை ஏற்படுத்த வில்லையா?

இது போல இன்னும் எத்தனை இடங்களில் எத்தனை வக்கிரர்கள் இந்த செயலை செய்து வருகின்றனரோ?
எத்தனை அப்பாவிப் பெண்களின் அந்தரங்கங்கள் கொடூரர்களின் கண்களுக்கு விருந்தாக்கப் பட்டதோ?
இந்தப் படு பாதக செயல்களுக்கு யார் யார் உடந்தையாக இருக்கின்றனரோ?
தெரியவில்லை.

இந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து நாம் போராடுகிறோமோ இல்லையோ குறைந்த பட்சம் நாமோ நமது குடும்பத்துப் பெண்களோ இது போல போது இடங்களில் உள்ள கழிவறைகளைப் பயன் படுத்துவதை அறவே தவிர்த்து விடலாம் அல்லவா?.

அப்படியே அந்தக் கழிவறையைப் பயன் படுத்த வேண்டிய காட்டாய சூழல் என்றாலும் கூட இது போன்ற வக்கிரங்கள் எதுவும் கழிவறையினுள் இருக்கின்றனவா என்பதை சோதித்து நமது பாதுகாப்பை உறுதி செய்து கொண்டு பின்னர் பயன்படுத்தலாம் அல்லவா?.

அதற்காக எல்லோரையும் எச்சரிக்கை செய்ய வேண்டும் என்பதே இந்தப் பதிவின் நோக்கம்................

ஆதாரம்: 12-10-2008 தேதியிட்ட நக்கீரன் இதழ்
 

StumbleUpon.com Read more...

படித்தேன் பதித்தேன்: பெல்ஜியத்திலிருந்து முன்னால் முஸ்லீம்:

படித்தேன் பதித்தேன்: பெல்ஜியத்திலிருந்து முன்னால் முஸ்லீம்:

 


Source: I am an Ex-Muslim from Belgium



இன்று Faith Freedom தளத்தில் ஒரு கட்டுரையை படித்தேன், முழுகட்டுரையை தமிழாக்கம் செய்யாமல், நான் முக்கியமாக கருதிய ஒரு சில விவரங்களை மட்டும் தரலாம் என்று விரும்புகிறேன்.

பெல்ஜியத்திலிருந்து முன்னால் முஸ்லீம் என்ற பெயரில் வெளியான கட்டுரையை ஒரு முன்னால் கத்தோலிக்கர் எழுதினார். என்னடா இவன் குழப்புகிறானே என்று நினைக்காதீர்கள். இவர் இஸ்லாமை விட்டு விலகியதற்கு காரணம், குர்‍ஆன், ஹதீஸ்கள் மற்றும் இஸ்லாமிய ஆரம்ப கால முகமதுவின் சரித்திர புத்தகங்கள் , குர்‍ஆன் உரைகள்(காமண்டரிகள், தஃப்சீர்கள்) என்றுச் சொல்கிறார். எப்படி என்று அறிய தொடர்ந்து படியுங்கள்.


1. இவர் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவர்.

2. இவர் இஸ்லாமுக்கு மாறியது தன் பெற்றோருக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தாலும், தன் பெற்றோர்கள் அவரை அன்பாக கவனித்துக் கொண்டதாக கூறுகிறார். இப்படி தன் பெற்றோர்கள் நடந்துக்கொண்டதாலும் இன்னும் பல நல்ல காரணங்களாலும், தன் பெற்றோர்கள் "ஒரு நல்ல கிறிஸ்தவர்கள்" என்று சொல்கிறார்.


Quote:


I converted to Islam long ago. I have been raised in a very strict Catholic family and grew up in a loving environment. I always felt real good in the "Catholic "system". Even though my conversion was a very big shock for my parents, they always considered me as their beloved son. In this respect and in many other points my parents are true Christians.




3. அனேகர் இஸ்லாம் பற்றி தெரிந்துக் கொள்ளாமல் அதற்கு மாறுகிறார்கள், அப்படி மாறியவரில் இவரும் ஒருவர். அதாவது, ஒரு இஸ்லாமிய பெண்ணிடம் "என்னை திருமணம்" செய்துக்கொள்வாயா என்று கேட்டபோது, நீ இஸ்லாமுக்கு மாறினால் திருமணம் செய்துக்கொள்ளலாம் என்று அப்பெண் சொன்னதால், இவர் இஸ்லாம் பற்றி எதுவும் தெரிந்துக் கொள்ளாமல் மாறியுள்ளார், (காதலித்து இருப்பார் என்று தோன்றுகிறது)


Quote:


When I proposed to my fiancé, she wanted me to convert to Islam, which I did. I realize now that it was not wise to convert to a religion, which I hardly knew anything about. So I converted to Islam without studying it carefully.




4. ஒருவரிடம் இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ள விருப்பம் என்றுச் சொல்லும் போது, அவர்கள் இஸ்லாமை அழகான மார்க்கமாக காட்டும் புத்தகங்களை மட்டும் தருவார்கள், இது உண்மையான இஸ்லாமை நம்மிடமிருந்து மறைத்துவிடும் என்கிறார் இவர்.


Quote:


If one asks information about Islam to Muslims, they will give you a few innocent books to show how beautiful Islam is. These books are mostly misleading and even texts written by the "Centre for Islam in Europe", linked to the University of Gent (Belgium) are a twist of "real Islam" and a denial of the teachings of the 4 main schools of Islam.


5. இவர் தன் முன்னேற்றத்தில் கண்ணோட்டமாக இருந்ததாலும், மற்றும் அக்காலத்தில் இணையம் இல்லாததாலும், இவர் இஸ்லாம் பற்றி எப்படி அறியவேண்டும் என்று தெரியாமல், விருப்பமில்லாமல் பல வருடங்களை கழித்துள்ளார்.



Quote:


My conversion to Islam was in a period of my life in which I was building up my career and family life and there was no room to study Islam. As a matter of fact, I had no idea how to start studying it. At the time there was no Internet yet.


6. குர்‍ஆனில் உள்ளதை சரியாக புரிந்துக்கொண்டவர்கள் சிலரே, ஏனென்றால், குர்‍ஆனின் அமைப்பு மிகவும் குழப்பம் நிறைந்ததாகவும், ஒரு கோர்வையாக இல்லாமலும், மற்றும் ஒரு தலைப்பிலிருந்து உடனே வேறு ஒரு தலைப்பிற்கு திடீரென்று தாவுவதாலும், அனேகருக்கு குர்‍ஆன் புரிவது கடினமே, என்று இவர் கருதுகிறார்.


Quote:


I think very few people, Muslims as as well candidate-Muslims understand anything of the Quran. The reason is simple: the Quran is badly structured, very confusing and jumps from one subject to another. It's an endless repetition of the same theme: believe in Allah and his Messenger Muhammad or you will receive the most horrible punishments in hell. This is repeated endlessly. Hundreds of times.


7. இவர் இதுவரை குர்‍ஆன் வசனத்தால் கவரப்பட்டு, மனதை தொட்டுச் செல்லும் வசனத்தால் நான் இழுக்கப்பட்டேன் என்றுச் சொல்லக்கூடியவர்களை இவர் சந்திக்கவில்லையாம்.




Quote:


I have never met anyone who can tell me which verses he or she was moved by or found touching, or new things Muhammad brought that weren't already in Christianity or Judaism except the well-developed Jihad-ideology, and the threat and declaring as enemy anyone who does not believe in Allah and Muhammad.


8. முகமது மிகவும் புத்திசாலி என்றுச் சொல்கிறார், அதற்கு காரணத்தை இவ்விதமாகச் சொல்கிறார், அனேக முரண்பாடுகள், பிழைகள் உள்ள குர்‍ஆனை அவரால் எப்படி விற்க முடிந்தது என்று ஆச்சரியப்படுகிறார்.


Quote:


The Quran is without any doubt the miracle of Islam. I really think Muhammad was an incredible genius to "sell" a book with....
- Absurdities (the sun goes down in a muddy pond Quran 18.86)

- Contradictions (initially everyone has the right to choose his own religion, Quran chapter 109, and in the end polytheists have to be killed in Quran 9.5),

- Logical mistakes in thinking (according to the Quran, verse 4.157, the Jews say that Jesus is the Messiah and a Prophet of Allah, which they never did)

- threats (the unbelievers are fuel for hell Quran, 2.24)


9. பக்தியுள்ள முஸ்லீம்களே, குர்‍ஆனை புரிந்துக்கொள்வது கடினம் என்று ஒப்புக்கொள்கிறார்கள், மற்றும் குர்‍ஆன் ஒரு வழிகாட்டி என்றுச் சொல்கிறார்கள் ஆனால், அதனை புரிந்துக்கொள்ள வேறு 10 புத்தகங்கள் துணைக்கு வேண்டும், ஒரு வழிகாட்டியாக இருக்கும் புத்தகம் தெளிவாக புரியவேண்டுமல்லவா? என்று கேள்வி எழுப்புகிறார்.



Quote:


As a matter of fact even devout Muslims will confirm the Quran is hard to understand. They even prove it by the existence of the so-called tafsirs, Quranic commentaries. The Quran claims to be a guide for the believer but to understand it one needs 10 more books. This cannot be right! A guiding book has to be clear!


10. சில ஆண்டுகளுக்கு முன்பு தன் மனைவியிடம், ஏன் இஸ்லாம் பற்றிய அனைத்துச் செய்திகளும் தீயதாக வருகின்றன? உண்மையில் இஸ்லாம் என்ன போதிக்கிறது? என்று கேட்டாராம். அதற்கு அவர் மனைவி இஸ்லாம் பற்றிய அனைத்து விவரங்களும் புத்தகங்களில் தெளிவாக உள்ளது என்றார்களாம், அதனால், பல புத்தகங்களை வாங்கினாராம், இணையத்தில் என்ன புத்தகங்கள் கிடைக்கும் என்று தேடிய போது, கீழ் கண்ட தளங்கள் கிடைத்ததாம்.

website:

http://www.prophetofdoom.net/
http://www.news.faithfreedom.org




Quote:


A few years ago, I mentioned to my wife that all news about Islam was so negative and that I wondered what Islam really teaches. She told me there were no secrets and that everything was written in the books. Of course I had Muslims confirm that these were the best sources and I bought them in online islamic bookstores. Which books she could not say, so I looked on the Internet to find the sourcebooks of Islam that I needed to read and found them on the following website www.prophetofdoom.net and faithfreedom.org.


11. இவர் கீழ் கண்ட புத்தகங்களை வாங்கி படித்தாராம். இவைகள் இஸ்லாமிய புத்தக கடைகளிலும் கிடைக்கும், ஆனால், இந்த புத்தகங்கள் இஸ்லாம் பற்றி என்ன சொல்கின்றனவே, அவைகளைத் தான் "இஸ்லாமுக்கு எதிராக உள்ள தளங்களும்" சொல்கின்றன. இவைகளை படித்த பிறகு தான் ஒரு இஸ்லாமியராக இல்லை என்றுச் சொல்கிறார்.

Quote:

So I purchased these books, read them and found out that they say exactly the same as what websites that are against Islam say. I have read the following 20 books:

[b]1. Quran குர்‍ஆன்

2. The authentic traditions of Muhammad (Sahih Hadith) by Bukhari: 9 books அல்புகாரி ஹதீஸ் தொடுப்புக்கள்

3. A summary of the authentic traditions of Muhammad by (Sahih) Muslim: 2 books சஹி மூஸ்லீம் ஹதீஸ் தொகுப்புக்கள்

4. Life of the Prophet: oldest biography by Ibn Ishaq முகமதுவின் சரிதை

5. Life of the Prophet: Tabari: 4 books முகமதுவின் சரிதை


6. Life of the Prophet: Ibn Sa'd: 2 books முகமதுவின் சரிதை


7. Shariah book called Umdat as-salik / Reliance of the Traveller of the Shafi'i school (1 of the 4 large schools of Islam recognized by the Al-Azhar university in Egypt). This is not an original source but it is how the Quran, the hadith and the biographies of the Muhammad are interpreted by Muslim scholars and are being turned into laws. This book is incredibly user-friendly and I use it to check my interpretation of the Quran and the Hadith. ஷரியா



12. இப்போது நான் முஸ்லீமாக இல்லை, ஏனென்றால், இஸ்லாமின் ஆரம்ப கால புத்தகங்கள், சரித்திர நூல்கள் இஸ்லாமையும், முகமதுவையும் நல்ல வெளிச்சத்தில் காட்டக்கூடியவையாக இல்லை என்றுச் சொல்கிறார். எனவே தான் இஸ்லாமுக்கு எதிரடையாக இருக்கும் தளங்கள் இந்த புத்தகங்களை படிக்கச்சொல்கிறார்கள் என்கிறார் இவர்.


Quote:



After reading these books I am no longer a Muslim. There is no greater insult to Muhammad as a prophet and for Islam as an ideology, than the Quran and the original sources of Islam: books written by Muslims for Muslims. That is why websites that fight Islam advise everyone to study Islam from these original sources.



13. இதற்கு அடுத்து பல குர்‍ஆனின் நெருடலாக இருக்கும் வசனங்கள், ஹதீஸ்களை அவர் மேற்கோள் காட்டுகிறார். இந்த ஹதீஸ்கள், வசனங்கள் பற்றி அறிந்துக்கொள்ள, இந்த கட்டுரையை மூலக் கட்டுரையில் (http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=2160
I am a Ex-Muslim from Belgium ) படித்துக் கொள்ளுங்கள். பிறகு கடைசியாக, முஸ்லீம்களை இஸ்லாம் பற்றி அறிந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்.


Quote:


When I put everything in perspective I cannot understand how anyone who has studied Islam thoroughly on the basis of the islamic sources, still can remain a Muslim. I am no longer a Muslim and I hope every Muslim will study Islam thoroughly and follow in my footsteps.


இக்கட்டுரையின் ஆங்கில மூலம்: I am a Ex-Muslim from Belgium


இனி என் கருத்து...


இப்போது இவர் கிறிஸ்தவராக இருக்கிறாரா இல்லையா ?

இக்கட்டுரையை எழுதியவர் இஸ்லாமை விட்டு வெளியேறியதற்கு காரணம் இஸ்லாமிய புத்தகங்களாகிய, குர்‍ஆன், குர்‍ஆனின் உரைகள், ஹதீஸ்கள், சரித்திர நூல்களை போன்றவற்றை குறிப்பிடுகிறார். இப்போது இவர் கிறிஸ்தவராக இருக்கிறாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. இவர் கிறிஸ்தவராக இருக்கிறாரா இல்லையா என்று தெரியாத பட்சத்தில் ஏன் கிறிஸ்தவ தளங்களில் இதனை பதிக்கிறாய் என்று என்னிடம் சிலர் கேள்விகள் கேட்கக்கூடும். இக்கேள்விக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இஸ்லாமைப் பற்றி சரியான அறிவு நமக்கு (முஸ்லீம்களுக்கானாலும் சரி, கிறிஸ்தவர்களுக்கானாலும் சரி, மற்ற யாவருக்கும்) தேவையானால், நாம் படிக்க ஆரம்பிக்க வேண்டியவைகள், குர்‍ஆன், ஹதீஸ்கள், மற்றும் சரித்திர நூல்கள் என்பதை தெரிவிக்கத் தான் இந்த கட்டுரையை நான் பதிக்கிறேன். எனவே, நான் எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன், முக்கியமாக இஸ்லாமியர்களிடம் கேட்டுக்கொள்வது, இஸ்லாமை முழுவதுமாக அறிய நீங்களே குர்‍ஆனையும், ஹதீஸ்களையும், உரைகளையும் சரித்திர நூல்களையும் படியுங்கள், அப்போது சத்தியத்தை அறிவீர்கள், அந்த சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.


இப்போதுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் எழுதும் புத்தகங்களை படித்தால், அதில் இஸ்லாம் பற்றிய உண்மை முழுமையாக இருக்காது, எனவே, ஆரம்ப காலத்தில் இஸ்லாமியர்களால் இஸ்லாமியர்களுக்காக எழுதப்பட்ட புத்தங்களை படிக்கவேண்டும்.


பைபிளையும் கிறிஸ்தவத்தையும் தாக்கி எழுதும் இஸ்லாமியர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, உங்கள் இஸ்லாமிய நூல்களை படிக்கும் படி நாங்கள் மற்றவர்களை கேட்டுக்கொள்கிறோம், அதற்கான தொடுப்புகளையும் தருகிறோம், அது போல, நீங்கள் எங்கள் பைபிளின் தொடுப்பை, பைபிள் காமண்டரிகளின் (உரைகளின்) தொடுப்பை உங்கள் தளங்களில் தரமுடியுமா? தரமாட்டீர்கள்.

குர்‍ஆன் தமிழில்

குர்‍ஆன், ஹதீஸ்கள் ஆங்கிலத்தில்:

இபின் இஷாக்கின் முகமது சரித்திரம்: Sirat Rasoul Allah The earliest biography of Muhammad, by ibn Ishaq -

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP