சமீபத்திய பதிவுகள்

பெண்கள் கல்வி கற்பது இஸ்லாம் மதத்திற்கு விரோதமானது

>> Friday, December 26, 2008

சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான்கள் தடை:பாகிஸ்தான் எல்லையில் அட்டூழியம்
 
lankasri.comபாகிஸ்தானில் சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான் பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர்.தங்களின் உத்தரவை யாராவது மீற முற்பட்டால்,அவர்கள் கொல்லப்படுவர் என்றும் எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க,தலிபான் பயங்கரவாதிகள் தடை விதித்துள்ளனர்.

அதே பாணியை தற்போது பாகிஸ்தானின் வடமேற் குப் பகுதியிலும் அமல்படுத்தி வருகின்றனர்.சிறுமிகளை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என எச்சரித்துள்ள தலிபான்கள், "மீறுவோர் மரண தண்டனையை சந்திக்க நேரிடும்.மேலும்,பள்ளிகளும் குண்டு வைத்து தகர்க்கப்படும் அல்லது தீ வைத்து எரிக்கப்படும்" என,எச்சரித்துள்ளனர்.இது தொடர்பாக பாகிஸ்தான் சுவாத் பள்ளத்தாக்கு பகுதியின் தலிபான் உதவி கமாண்டர் ஷா தவ்ரன் மேலும் கூறியுள்ளதாவது:

சிறுமிகளை பள்ளிக்கு அனுப்புவதை ஜனவரி 15ம் தேதிக்குள் நிறுத்தி விட வேண்டும்.மேலும்,அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் சிறுமிகளை பள்ளியில் சேர்ப்பதை நிறுத்த வேண்டும்.இல்லையெனில்,அனைத்து பள்ளிகளும் குண்டு வைத்து தகர்க்கப்படும் அல்லது தீ வைத்து எரிக்கப்படும்.இவ்வாறு ஷா தவ்ரன் கூறியுள்ளார்.

இந்த தடை உத்தரவை வெளியிடும் முன்னர்,சுவாத் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் இருக்கும் பள்ளிகளுக்கு சிறுமிகள் செல்ல விடாமல் தலிபான்கள் தடுத்தனர்.மேலும்,பள்ளிக்கு வரக்கூடிய ஆசிரியைகளும் பர்தா அணிந்து வர வேண்டும் என,கடும் உத்தரவிட்டனர்.

சுவாத் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக பாக்.,படையினர் அதிரடி தாக்குதல் நடத்தினாலும்,தலிபான்களின் கெடுபிடி காரணமாக இப்பகுதியில் ஏராளமான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

"பெண்கள் கல்வி கற்பது இஸ்லாம் மதத்திற்கு விரோதமானது" என,தெரிவித்துள்ள இப்பகுதி தலிபான் கமாண்டர் மவுலானா பாசியுல்லா,பாடல்கள் மற்றும் திரைப்படங்கள் பதியப்பட்ட வீடியோ,ஆடியோ "சிடி"க்கள் மற்றும் "விசிடி'க்கள் விற்கும் கடைகள் மீதும்,முடி திருத்தும் கடைகள் மற்றும் சைபர் கபேக்கள் மீதும் தாக்குதல் நடத்தும்படியும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

StumbleUpon.com Read more...

கி.மு.300-ஆம் ஆண்டுக்கு முற்பட்ட எகிப்திய மிருக மம்மிகளை கடத்திய நபர் விமான நிலையத்தில் வைத்து கைது

கி.மு.300-ஆம் ஆண்டுக்கு முற்பட்ட எகிப்திய மிருக மம்மிகளை கடத்திய நபர் விமான நிலையத்தில் வைத்து கைது
 
lankasri.comஎகிப்திலிருந்து பண்டைய மிருக மம்மிகளை கடத்த முயன்ற அவுஸ்திரேலியர் ஒருவர்,அந்நாட்டு கெய்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிறிஸ்துவுக்கு முன் 300-ஆம் ஆண்டுக்கு முற்பட்ட பூனையொன்றினதும் நீண்ட சொண்டுள்ள "ஐபிஸ்" என்ற பறவையினதும் மம்மிகள் மேற்படி அவுஸ்திரேலியரின் பயணப் பொதியிலிருந்து விமான நிலைய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் பண்டைய எகிப்திய கடவுள்களின் 19-சிறிய உருவச்சிலைகளும் அவர் பயணப் பொதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த கடத்தல் குற்றச் செயலுக்காக அந்நபர் 15-வருடங்களுக்கு மேற்பட்ட சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1230301609&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

மெக்ஸிகோ அழகுராணியும் ஏனைய 7-பேரும் கைது-பெருந்தொகையான ஆயுதங்கள்,பணம் மீட்பு

 
 
lankasri.comமெக்ஸிகோவின் அழகுராணியான லோரா ஸுனிகாவும் ஏனைய ஏழு பேரும் பெருந்தொகையான ஆயுதங்கள் மற்றும் பணம் சகிதம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமேற்கு மெக்ஸிகோவிலுள்ள குவாடலாஜராவுக்கு அண்மையிலுள்ள சோதனைச்சாவடியில் லோராவும் ஏனைய ஏழு பேரும் பயணம் செய்த கார் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு சோதிக்கப்பட்ட போதே மேற்படி ஆயுதங்களும் பணமும் கைப்பற்றப்பட்டன.

23 வயதான லோரா கடந்த ஜூலை மாதம் தனது சொந்த மாநிலமான சினாலோவாவில் அழகுராணியாக முடிசூட்டிக் கொண்டார்.பொலிஸார் காரை பரிசோதிக்க முற்பட்ட போது தான் பொருட் கொள்வனவுக்காக பொலிவியாவிலிருந்து கொலம்பியாவுக்கு பயணம் செய்வதாக லோரா தெரிவித்துள்ளார்.

இரு "ஏ.ஆர்.15" துப்பாக்கிகள்,38 விசேட கைத் துப்பாக்கிகள்,633 துப்பாக்கி ரவைத் தொகுதிகள் உட்பட பெருந்தொகையான ஆயுதங்களும் 53,000 அமெரிக்க டொலர் பணமும் லோரா பயணித்த காரிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

மேற்படி பாதையில் போதைவஸ்து கடத்தல் குழுவொன்று பயணிப்பதாக கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே லோராவின் வாகனத்தை தடுத்து நிறுத்தியதாக தெரிவித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்,அந்த வாகனத்தில் அவர் இருப்பார் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார்.

எதிர்வரும் 2009 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சர்வதேச அழகுராணிப் போட்டியில் மெக்ஸிகோவை பிரதிநிதித்துவப்படுத்தும்படி லோரா கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

StumbleUpon.com Read more...

சிங்கள ராணுவத்துடன் மோதல் - 43 புலிகள் பலி

சிங்கள ராணுவத்துடன் மோதல் - 43 புலிகள் பலி



இலங்கையில் முல்லைத்தீவு பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் கடும் போர் நடந்து வருகிறது. முல்லைத்துவு அருகே உள்ள குல முரிப்பு என்ற இடத்தில் இயங்கி வந்த விடுதலைப்புலிகளின் பயிற்சி முகாமை ராணுவத்தினர் கைப்பற்றி இருக்கிறார்கள்.

விடுதலைப்புலிகளின் வயர்லஸ் இணைப்புக்காக இயங்கி வந்த போபுரம் ஒன்றையும், ராணுவம் தங்கள் வசம் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியில் கிறிஸ்துமஸ் நாளில் நடந்த சண்டையில், 28 விடுதலைப்புலிகள் இறந்தனர் என்றும், யாழ்ப்பாணம்-கிளிநொச்சி வரையான பகுதிகளில் நடந்த மோதலில், 15 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

StumbleUpon.com Read more...

சிறிலங்கா அரசின் இன அழிப்பை சித்தரித்து வன்னியில் நத்தார் பந்தல்

 

  

சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பை சித்திரிக்கும் வகையில் வன்னி மறைக் கோட்டத்தில் நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.யாழ். கத்தோலிக்க மறை மாவட்ட மற்றும் வன்னி மறைக்கோட்ட மக்களால் சுதந்திரபுரத்தில் இந்த நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விலங்கிடப்பட்ட கைகளில் குழந்தை யேசு பிறந்திருக்கின்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. பின்பகுதியில் சிலுவையில் தமிழின அழிப்பு ஒளிப்படங்கங்கள் இணைக்கப்பட்டு இந்தப்பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்புக் கொடுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த நத்தார் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP