நடனமாடிய பெண்களுக்கு அடி, உதை
>> Tuesday, January 27, 2009
மங்களூர்: கர்நாடக மாநிலம் மங்களூரில், ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பு நேற்று நடத்திய வெறித் தாக்குதலில் பெண்கள் காயமடைந்தனர். ஹோட்டலில் நடனம் ஆடிய பெண்களைக் குறி வைத்து இந்தத் தாக்குதல் நடந்தது.
மங்களூர் பல்மட்டா சாலையில் தனியார் ஹோட்டல் உள்ளது. இங்கு இரவு நேரங்களில் இளம் பெண்கள் கவர்ச்சி நடனம் ஆடுவது வழக்கம். அரை குறை ஆடைகளுடன், போதையில் நடனம் ஆடும் இந்த நிகழ்ச்சி குறித்து அறிந்த ஸ்ரீராம் சேனா என்ற இந்து அமைப்பினர் நேற்று அங்கு விரைந்தனர்.
20க்கும் மேற்பட்டோர் அடங்கிய அந்தக் கும்பல், ஹோட்டலுக்குள் கோஷமிட்டபடி புகுந்தனர். அங்கு நடனமாட வந்த பெண்கள், நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் என சகலரையும் கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதைப் பார்த்து அலறி அடித்தபடி பெண்கள் ஓட ஆரம்பித்தனர். ஆனாலும் விடாமல் துரத்தி துரத்தி அடித்ததில் சில பெண்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.
மூலம்.த.தமிழ்//
0 கருத்துரைகள்:
Post a Comment