மகளோடு வல்லுறவு வைத்துள்ள இந்து,முஸ்லீம்,கிறிஸ்தாவர்
>> Friday, March 20, 2009
தாறுமாறான எண்ணங்கள் கொண்ட மனிதர்களுக்கு மதம்,நாடு,கலாச்சாரம் என்று ஒன்றும் இல்லை.அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும் எந்த நாட்டவர்களாக இருந்தாலும்,எந்த கலாச்சாரமாக இருந்தாலும் ஓரே இனத்தை சேர்ந்தவர்களாகவே கருத வேண்டும்.அது மிருக இனம்.
இதில் அந்த மதத்தவர் செய்தார்,இந்த மதத்தவர் செய்தார்,இல்லை நாத்திகர் செய்தார் என்று சொல்லிக்கொள்ளும் கீழ்தரமான செயலை எந்த மதத்தவர்களும் தங்கள் சட்டைக் காலரை தூக்கிவிட்டு சொல்ல முடியாது என்பது என் கருத்து.இதற்கு உதாரணமாக சமீபக்காலங்களாக இதயத்தை பிழிந்தெடுக்கும் சம்பவங்கள் உலகத்தில் அடிக்கடி கேட்கப்படுகிறது.
தானே மாவட்டத்தில் உள்ள மிரா ரோட்டைச் சேர்ந்தவர்
பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் பெயர் போன பாரத நாட்டில் மும்பை அருகே அரங்கேறி, இந்திய மக்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது. கணினியுகம், இன்டர்நெட் யுகம் என்று கூறப்படுகிற இந்தக் காலகட்டத்தில் பணத்தாசை பிடித்து, மூட நம்பிக்கைக்கு ஆளாகி, பெற்ற மகளையே சிதைத்த ஒரு வியாபாரியின் அலங்கோலம் இது.
வியாபார நஷ்டம்
மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில் உள்ள மிரா ரோட்டைச் சேர்ந்தவர் அந்த வியாபாரி. அவர் தொடர்ந்து வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்தார். இந்த நிலையில் தனக்கு 20 வருடங்களாக அறிமுகமான வில்லேபார்லேயை சேர்ந்த மந்திரவாதி ஹஸ்முக் ரத்தோடை கடந்த 2000-ம் ஆண்டு சந்தித்தார். தான் வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதை எடுத்துக் கூறினார். அத்துடன், இந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன வழி என்று யோசனை கேடடார்.
அப்போதுதான் அந்த வியாபாரியிடம் மந்திரவாதி, "உங்களது மூத்த மகளுடன் நீங்கள் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் உங்கள் நிலைமை மாறிவிடும். வாழ்வில் வளங்கள் வந்து சேரும்'' என்றார்.
துணை போன தாய்
இதை வியாபாரி நம்பினார். வீட்டுக்கு வந்தவர், மனைவியிடம் மந்திரவாதி சொன்ன விஷயத்தை போட்டு உடைத்தார். பணத்தாசை பிடித்த மனைவியும், "மந்திரவாதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நீங்கள் அப்படியே செய்யுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, தனது மூத்த மகளை அழைத்து, "நமது குடும்பம் நல்ல நிலைமைக்கு வரவேண்டும், அப்பாவின் வியாபாரம் செழிக்க வேண்டும் என்றால் அவர் சொல்கிறபடி நீ நடந்து கொள்'' என்று கூறினார். அந்தப் பெண், அந்த நிமிடத்தில், தந்தை இப்படித்தான் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க வில்லை.
.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி
தனது சொந்த மகளையே அவளுடைய பதினைந்தாவது வயதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி என்பவர் திருமணம் செய்திருக்கிறார்.
அந்த திருமணத்திற்கு அவர் சொன்ன காரணம் “கடவுளின் கட்டளை”. அல்லா சொல்லிவிட்டார் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ள அனுமதியும் வாங்கியிருக்கிறார் அவர்.
இந்த விஷயம் நடந்து ஐந்தாறு மாதங்களாகியிருக்கின்றன. இப்போது அந்தப் பெண் தன்னுடைய தந்தையால் தாயாகியிருக்கிறாள்.
மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்
ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் ஜோசப்
இருபத்து நான்கு வருடங்களாக தனது மகளை (எலிசபெத்) குகை போன்ற வெளிச்சமே நுழைய முடியாத அறைகளில் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்திருக்கிறான் ஒரு தந்தை.
சின்னச் சின்ன குறுகலான குகைகள் போன்ற ஐந்தடி உயரமே உள்ள, முழுவதும் அடைக்கப்பட்ட உறுதியான அறைகளில் அவள் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறாள். ரகசிய அறை மூலம் தந்தை அந்த அறைகளுக்குச் செல்ல முடியும். அதற்கான நவீன கதவையும், அதைத் திறக்கும் சங்கேத எண்ணையும் யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த அந்த கொடூரமான தந்தைக்கு இப்போது வயது 73.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது வியன்னாவிலிருந்து 80 மைல் தொலைவில் இருக்கும் ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் பகுதியில்.
எலிசபெத் பதினெட்டு வயது சுட்டிப் பெண்ணாக இருந்தபோது அவளுடைய கைகளை கட்டி ஒரு இருட்டு அறைக்குள் பூட்டி அவளை பலாத்காரம் செய்த தந்தை, அவள் வீட்டை விட்டு ஓடி விட்டதாக நாடகமாடி எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறான்.
மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்
0 கருத்துரைகள்:
Post a Comment