சென்னை ரயில்விபத்துக்கு காரணமான மர்மமனிதன்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
>> Thursday, April 30, 2009
அது சரக்கு ரெயில் குறுக்கே வந்ததால் தவிர்க்கப்பட்டுள்ளது. உயிர் சேதமும் குறைந்துள்ளது. இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
ஆனால் கடந்த ஒருவாரத்திற்கு முன்பே சென்டிரல் ரெயில் நிலையத்தின் மீதும் ரெயில்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை தென்னக ரெயில்வேயையும், ரெயில்வே போலீசாரையும், உஷார் படுத்தி உள்ளது. அப்படி இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்டு தப்பித்த தீவிரவாதிகள் யாராவது சென்னைக்குள் ஊடுருவி இந்த கொடூர தாக்குதலை திட்டமிட்டு நடத்தி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தில் ஒரு பிரிவு தடயங்களை சேகரித்து வருகிறது. ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் உள்ள காயம் அடைந்த பயணிகளிடம் ஒரு பிரிவும், சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு பிரிவும், ரெயில் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்களிடம் ஒரு பிரிவும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment