என்ன பிழை செய்தோமடி தாயே ? மனதை கலங்க வைக்கும் பாடல்
>> Tuesday, May 5, 2009
என்ன பிழை செய்தோமடி தாயே
என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
வெடி விழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காய்ந்த குளம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி படிந்த சிறு முற்றம்
இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வழிந்த குழந்தை பொம்மை
தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய………………சம்மதமோ…………..
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
தாயே என்ன பிழை செய்தோமடி தாயே
விளக்கேற்றிய மாடமெல்லாம்
வீழ்ந்தே போனதோ…………..
ஊஞ்சலாடிய கம்பு இல்லை
நீந்தி பழகிய ஆறு இல்லை
என் தோப்பினுள் அடைந்த
பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற
தாய்பூனை என்ன ஆனதோ
முற்றம் தெளித்திட
விடியல் வருமோ
யுத்த சாமத்தில்
வாழ்வு முடியுமோ?
source:pachaitamilan.blogspo
0 கருத்துரைகள்:
Post a Comment