2 மாத குழந்தை மீது வரதட்சணை வழக்கு
>> Wednesday, June 24, 2009
ஜோயா உட்பட 8 பேர் சார்பில் முன்ஜாமீன் கேட்டு செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த செசன்ஸ் நீதிபதி சர்தேசாய் குழந்தை ஜோயா உட்பட 7 பேருக்கு முன்ஜாமீன் வழங்கினார். சம்சுதீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தார். பெரியம்மாவின் புகாரின்பேரில் 2 மாத கைக்குழந்தை மீது வரதட்சணை கொடுமை வழக்கு போட்ட போலீசுக்கும், குழந்தைக்கு முன்ஜாமீன் கொடுக்கப்பட்டதற்கும் சட்ட நிபுணர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து சட்டநிபுணர் ராம் ஜெத்மலானி கூறுகையில், ÔÔ2 மாத குழந்தை மீது வழக்கா? இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. புகார் கொடுத்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும்Õ என்றார்.மும்பை முன்னாள் மேயரும் வக்கீலுமான நிர்மலா சவந்த் கூறுகையில், ÔÔ7 வயது வரை ஒரு குழந்தையை அப்பாவியாகவே சட்டம் கருதுகிறது. ஏனென்றால், எது சரி, எது தவறு என்று அந்த குழந்தைக்கு அதுவரை தெரியாது. 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை இளம்சிறார் சட்டப்படி விசாரிக்க வேண்டும். இந்த நிலையில் 2 மாத கைக்குழந்தை மீது வழக்கு போட்டது விந்தையாக இருக்கிறது. அந்த குழந்தைக்காக முன்ஜாமீன் கேட்டிருக்கவே வேண்டாம். நீதிமன்ற வரலாற்றில் சிறு குழந்தைக்கு எந்த நீதிபதியும் முன்ஜாமீன் கொடுத்தது இல்லை. குழந்தை ஜோயாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது சட்டத்தை கேலிக் கூத்தாக்கிவிட்டதுÕÕ என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment