சமீபத்திய பதிவுகள்

ஐநாவிலிருந்து வேளியேறிவிடுவோம்:ஐநா,மற்றும் அமேரிக்காவுக்கு இலங்கை கடும் எச்சரிக்கை

>> Friday, February 27, 2009

எமது பிரச்சினையில் ஐ.நா. தலையிட முயன்றால் அங்கத்துவத்திலிருந்து வெளியேறி செயற்படவேண்டும்: எல்லாவெல மேதானந்த தேரர்
ஐக்கி நாடுகள் சபை பலாத்காரமாக எமது பிரச்சினையில் தலையிட முனைந்தால் ஐ.நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி இலங்கை சுயாதீனமான நாடாகச் செயற்படும் தீர்மானத்தை இலங்கை எடுக்க வேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

சுயாதீனமான நாடுகளை ஆக்கிரமித்து மனிதப் படுகொலைகளை மேற்கொள்ளும் அமெரிக்காவுக்கு எமது நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.

இலங்கைப் பிரச்சினை தொடர்பில் அமெரிக்க செனற் சபையில் ஆராயப்பட்டதுடன் ஐ.நா. போரை நிறுத்துமாறு வலியுறுத்தி வருவது தொடர்பில் ஹெல உறுமய கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்துகையிலேயே அதன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவெல மேதானந்த தேரர் இதனைத் தெரிவித்தார்.

நாடில்லாது நாடோடிகளாகத் திரிந்தவர்கள் செவ்விந்தியர்களை விரட்டியடித்து பலாத்காரமான ரீதியில் அமெரிக்காவை உருவாக்கினார்கள்.இவ்வாறானவர்கள் மனித உரிமைகளுக்கு குரல் கொடுப்பது கேலிக்கூத்தாகும்.

பல தசாப்த காலங்களாக எமது நாட்டில் அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலி பயங்கரவாதத்தை அழித்தொழிக்கும் இறுதித் தறுவாயில் நாம் இருக்கின்றோம். இந்தச்சூழ்நிலையில் அமெரிக்கா எமக்கு அசெளகரியங்களை ஏற்படுத்தகக்கூடாது.

அப்பாவித் தமிழ்மக்களை பணயக்கைதிகளாக பிரபாகரன் பிடித்து வைத்துள்ளார். அவர்களை மீட்டு ஜனநாயகத்தை வழங்கவே இலங்கை அரசாங்கம் போராடி வருகின்றது. அம்மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் யுத்த சூனியப் பிரதேசங்களையும் அறிவித்துள்ளது.

அமெரிக்காவும், ஐ.நா.வும் ஏனைய நாடுகளும் அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடவடிக்கைகளை கவனத்தில் கொள்ளவேண்டும். அதைவிடுத்து இறையாண்மை உள்ள எமது நாட்டுப் பிரச்சினையில் பலாத்காரமாகத் தலையிட முனையலாகாது.

இராஜதந்திர ரீதியிலான அமெரிக்காவின் நட்புறவை நாம் வரவேற்கின்றோம். அதைவிடுத்து பலாத்காரத்தைப் பிரயோகிக்க முனைந்தால் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்.

ஐ.நா.வுக்கும் இதே செய்தியையே தெரிவிக்க விரும்புகின்றோம். பலாத்காரம் பிரயோகிககப்பட்டால் ஐ.நா. அங்கத்துவத்திலிருந்து வெளியேறி தனித்துவமான சுயாதீனமான இராஜ்ஜியமாக இலங்கையை பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என்றார்.

 

 

StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பு சம‌ர் நிலவரம்:விசேட தொலைக்காட்சி செய்திகள்.




StumbleUpon.com Read more...

கடற்புலிகளின் கட்டமைப்புகள்: மிரண்டு போயுள்ள கடற்படை!-27/02/2009

கடற்புலிகளின் கட்டமைப்புகள்: மிரண்டு போயுள்ள கடற்படை!

27/02/2009

முல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த  வாரம்     மூழ்கடித்திருக்கிறார்கள்.கடந்த 8 ஆம் திகதி         முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் -ஆழ்கடற் பரப்பில் இந்தத் தாக்குதல நடைபெற்றிருக்கிறது.

இதற்கு முன்னதாக கடந்த மாதம் 30ஆம் திகதி முல்லைத்தீவுக் கடலில் மற்றொரு தாக்குதலி ல் கடற்படையினரின் 'அரோ' ரகத்தைச் சேர்ந்த இரண்டு கரையோர ரோந்துப் படகுகள் கடற்பு லிகளால் மூழ்கடிக்கப்பட்டன.அதற்கு முன்பாக கடந்த 19 ஆம் திகதி, கடற்படையின்    P-434 இலக்க அதிவேகத் தாக்குதல் படகு கடற்கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.இந்தத் தாக்குத ல்கள் குறுகிய காலத்துக்குள் நடந்திருப்பவை. கடற்புலிகளின் பலத்தை முறியடிப்பதற்கு கடல் நடவடி க்கைகள் மட்டும்  போதாது    என்று, தரைவழி     நடவடிக்கைகளை         இராணுவம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தான் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

 

மூன்றுவாரங்களுக்குள் கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளும்,   இரண்டு அரோ ரக கரையோர ரோந்துப் படகுகளும் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன.கடற்புலிகளின் பலம் பற்றிய கேள்விகளை இந்தத் தாக்குதல்கள் எழுப்ப வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல் லை.இப்போது இந்தத் தாக்குதல்கள் பற்றியும் இவற்றின் ஒட்டு மொத்த விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்.

முதலாவது தாக்குதல் கடற்கரும்புலிகள் இருவரால் நடத்தப்பட்டது.கரையோரத்தில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் - கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ரோந்து சென்று கொண்டிருந்த போது தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.இரவு 11.28 மணியளவில் கரும்   புலிகளின் தாக்குதல் படகு, கடற்படைப் படகுக்கு அருகே சென்று வெடிக்கும் வரை - கடற்புலிக ளின் நகர்வு பற்றி அவர்கள் அறிந்திருக்கவேயில்லை.இந்தத் தாக்குதலில் கடற்படையின் 4 வது இலக்க அதிவேகத் தாக்குதல் படகு முற்றாகச் சேதமடைந்ததுடன், படையணியின் கட்டளை அதிகாரியான லெப். கொமாண்டர் அபேசிங்கவும் பலியானார்.அத்துடன் லெப். பெரேரா மற் றும் P-434 கடற்படைப் படகின் கட்டளை அதிகாரியான லெப். சம்பத் உள்ளிட்ட மொத்தம் 19 கடற்ப டையினர் கொல்லப்பட்டனர்.கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை அடுத்து கடற்படை முழு நேர மும் உசார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில், சுண்டிக்குளம் கடற்பரப்பில் கடற்கரும்புலிகளின் படகு ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.அது கடற்படையினரின் கண்  ணில் பட்டுவிட அதைத் தாக்கியழித்தனர். இதில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைய நேரிட்டது.ஆனால், அதேதினம் முல்லைத்தீவுக் கடலில் ரோந்து சென்ற கடற்படையின் சிறப் புக் கொமாண்டோ அணியினரின் 'அரோ' கரையோர ரோந்துப் படகுகளை கடற்புலிகள் வழிமட க்கித் தாக்குதல் நடத்தினர்.15 வரையான கடற்படைப் படகுகள் கொண்ட அணியை வழிமறித்த இந்தத் தாக்குதல் காலை 10 மணியளவில் இடமபெற்றிருந்தது.இதில் இரண்டு 'அரோ' வகை கரையோர ரோந்துப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதாகப் புலிகள் கூறியிருந்தனர்.ஆனால், கடற் படையோ இது பற்றி மூச்சுக் கூட விடவில்லை.

இதன் பின்னர் தான் கடந்த 8ஆம்திகதிமுல்லைத்தீவுக் கடலில் மற்றொரு அதிகவேகத் தாக்கு தல் படகைக் கடற்கரும்புலிகள்   மூழ்கடித்திருக்கிறார்கள்.  இந்தச் சண்டை 8 ஆம் திகதி அதி காலை 5.30 மணி  முதல் 6 மணி வரை நடந்திருகிறது.     கடற்கரும்புலிகளோடு கடற்புலிக ளின் அணியும் சண்டையில் பங்கேற்றிருக்கிறது.இதில் கடற்படையின் ஒரு   'சுப்பர் டோறா' மூழ்கடிக்கப்பட்டதாகவும், மற்றொன்று பலத்த சேதத்தக்கு உள்ளானதாகவும்   புலிகள் கூறியுள்ளனர். இந்தப் படகில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும், 4 கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்ததாகவும் புலிகளின் தகவல்கள் கூறுகின்றன.இதை ஒரு வலிந்த தாக்குதல் என்று புலிகள் கூறியுள்ளனர்.ஆனால், முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவுக்குச் சென்று அவர்கள் வலிந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

ஏனெனில், கடற்படை முல்லைத்தீவைச் சுற்றி இப்போது நான்கு கட்டங்களாகப் பாதுகாப்பு வல யங்கள் அமைத்து தமது வெவ்வேறு விதமான 50 இற்கும் அதிகமான   போர்க்கலங்களை நிறுத் தியிருக்கிறது.அதுவும், புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள    கரையோரப் பகுதியானது - சாலைக் குத் தெற்கேயும் வட்டுவாகலுக்கு வடக்கேயுமாக 15 கி.மீ பகுதிக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருக் கிறது.இந்த நிலையில் கடற்படையால் கடற்புலிகளின் நகர்வுகளைத் தடுப்பது இலகுவான காரி யமாகவே இருக்கிறது.ஆனாலும், கடற்புலிகள் முல்லைத்தீவுக் கடலில் அடுத்தடுத்து தாக்குத ல்களை நடத்தி வருகின்றனர்.

கடற்படையின் 4 கட்டப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் முதலாவதாக கரையோர ரோந்துப் படகு கள் மூலமும், அடுத்ததாக அதிவேகத் தாக்குதல் படகுகள் மூலமும், அதையடுத்து பீரங்கிப் பட குகள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.கடைசியும் நான்காவதுமான கண்காணி ப்பு வலயத்துக்கு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.கடற்புலிகள் வலிந்த தாக்குதலை நடத்துவதற்கு கரையோர ரோந்துப் படகுகள் அதிகளவில் கரைக்கு நெருக்கமாக வே நடமாடுகின்றன. அதற்கடுத்து கரையில் இருந்து 10 கடல் மைல் தொலைவு வரையில் அதி வேகத் தாக்குதல் படகுகளின் நடமாட்டம் இருக்கிறது.அதற்கு அப்பால் பீரங்கிப் படகுகள், ஆழ் கடல் ரோந்துப் படகுகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து சென்று கடற்புலிகள் வலிந் ததாக்குதல் நடத்த முற்படுவார்களா? என்ற கேள்வி எழுகிறது.

 

http://www.tamilkathir.com/news/1095/58//d,full_view.aspx

StumbleUpon.com Read more...

முன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்களில் 900 படையினர் பலி: 2,000-க்கும் அதிகமானோர் காயம்

உக்கிரமடைகின்றது வன்னிப் போர்; முன்னேற முடியாமல் சிங்களப் படைகள் முடக்கம்: 3 நாட்களில் 900 படையினர் பலி: 2,000-க்கும் அதிகமானோர் காயம்
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் ஆறாவது நாளாக தொடர்ந்து மேற்கொள்ளும் முன்நகர்வுப் படையெடுப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகளால் தடுத்து தேக்கமடைய வைக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 900 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
 
இது தொடர்பாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர்-கட்டளை-மைய வட்டாரங்களை தெரிவித்துள்ளதாவது:
புதுக்குடியிருப்பு நகரை கைப்பற்ற சிறிலங்கா படையினர் கடந்த ஆறு நாட்களாக தொடர்ச்சியாக முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
சிறிலங்கா படையினரின் 4 டிவிசன் படையினர் பெருமளவிலான சூட்டு வலுக்களை பாவித்து முன்நகர்வுத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் சிறிலங்கா படையினர் தரப்பில் 900 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 2,000-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

 

 

StumbleUpon.com Read more...

வீடியோ:புதுக்குடியிருப்பில் புலிகளிடம் மரண அடி வாங்கிய இலங்கை ராணுவம்



source

StumbleUpon.com Read more...

Breaking News:விடுதலை புலிகள் சுட்டு வீழ்த்திய வான்படையின் விமானம்?

சிறீலங்கா வான்படையின் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது


சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


இவ்விமானம் வானில் வெடித்ததை பலபொதுமக்கள் கண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் விடுதலைப்புலிகள் இதுதொடர்பில் உத்தியோகபூர்லமாக எதுவித அறிவித்தலும் விடவில்லை.

 

இதேவேளை பாதுகாப்பு ஆய்வாளர்கள் விடுதலைப்புலிகளிடம் விமானத்தை சுட்டுவீழ்த்தக்கூடிய ஆயுதவல்லமை இல்லை எனவும் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 

மேலதிக விபரங்கள் விரைவில்....

 

http://www.pathivu.com/news/534/54/.aspx

StumbleUpon.com Read more...

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் கெட்டதை விட்டுவிடவும்:ஏபிஜே.அப்துல்கலாம்

 ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நல்லதை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்:அப்துல்கலாம்

மங்களூர் மங்களாதேவி டெம்பிள் ரோட்டில் உள்ள கார்பரேசன் வங்கி தலைமை அலுவலகத்தில் `நானும், எனது சமுதாயமும்' என்ற தலைப்பில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டார். மங்களூரில் உள்ள ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்துல்கலாமிடம் மாணவ-மாணவிகள் சரமாரியமாக கேள்விகள் கேட்டனர். அவற்றுக்கு எல்லாம் அவர் நிதானமாக பதில் அளித்தார்.

அப்போது, ஸ்லம் டாக் மில்லினர் படத்துக்கு 8 ஆஸ்கார் விருதுகள் கிடைத்தது பற்றி உங்களது கருத்து என்ன?என்று மாணவர்கள் கேட்டதற்கு,

''அந்த படத்தின் கதை மூலம் ஒரு நல்ல கருத்தை சொல்லி உள்ளனர். அந்த கருத்துக்கு கிடைத்த பரிசு தான் இவை. அந்த படத்தில் கெட்டது இருந்தால் அதை விட்டு விட வேண்டும். நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP