சமீபத்திய பதிவுகள்

1 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்!

>> Monday, March 2, 2009

மெரிக்கா:1 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்! 


சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியால் அரபுநாடுகளிலும், அமெரிக்காவிலும் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்து நாடு திரும்பி கொண்டிருக்கின்றனர்.


இந்நிலையில் அமெரிக்காவில் 3 அல்லது 5 வருடத்தில் 1 லட்சம் இந்தியர்கள் வேலை இழந்து நாடு திரும்புவார்கள் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் பல்வேறு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் இந்தியர்கள், சீனர்கள் அதிகம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

அமெரிக்காவில் தொழில்நுட்பம் தெரிந்த ஆட்கள் கிடைக்காததால் இந்தியா, சீனாவை சேர்ந்தவர்களை தேர்வு செய்து வேலையில் அமர்த்தினார்கள்.

ஆனால் இப்போது அமெரிக்காவிலேயே கல்வித்தரத்தை மேலும் உயர்த்தி திறமையான மாணவர்களை உருவாக்கி வரு கின்றனர். எனவே அவர்கள் படித்து முடித்து வெளியே வந்ததும் இந்த வேலைகள் அவர்களிடம் சென்று விடும். எனவே வெளிநாட்டினர் வேலை இழப்பார்கள்.

இது தொடர்பாக இந்திய அமெரிக்க தொழில்நுட்பம் சங்கம் சர்பில் ஹார்வர்டு, வெர்க்கிலி பல்கலைக்கழக ஆசிரியர்களை கொண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அதில் இன்னும் 3-ல் இருந்து 5 வருடத்தில் 1 லட்சம் இந்தியர்கள் வேலை இழப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. இதே அளவு சீனர்களும் வேலை இழப்பார்கள் என்றும் அதில் தெரிய வந்தது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=4333

StumbleUpon.com Read more...

வட இந்திய மீடியாக்களும்,வைகோ ,பிரபாகரன் தொடர்பும்

வை.கோ. பிரபாகரன் தொடர்பு சிங்கள இராணுவம் கிளப்பிய புரளியில் கூத்தாடும் வடவர் பத்திரிகைகள் !

March 2, 2009

vaiko-28.jpg 

பல வருடங்களுக்கு முன்பு திமுக ராஜ்யசபா எம்.பியாக இருந்தபோது, இலங்கை சென்று பிரபாகரனை வைகோ சந்தித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ படங்களை இப்போது வெளியிட்டு, இருவருக்கும் 'தொடர்பு' இருப்பதாக கூறியுள்ளது இலங்கை ராணுவம்.

ராஜ்யசபா எம்.பியாக, திமுகவில் வைகோ இருந்தபோது (அப்போது அவரது பெயர் வை.கோபாலசாமி) இலங்கை சென்று விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்தித்தார் வைகோ.

இந்தச் சந்திப்பு குறித்து அப்போதே புகைப்படங்கள் எல்லாம் தமிழக பத்திரிக்கைகளில் வெளிவந்துவிட்டன. மேலும் இந்த சந்திப்ப வீடியோவும் அப்போதே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது குடும்பத்தினரிடமோ திமுகவில் யாரிடமுமோ தெரிவிக்கால் இலங்கை சென்று வந்தார் வைகோ.

இந் நிலையில், வைகோவும், பிரபாகரனும் இருப்பதைப் போன்ற புகைப்படங்களையும், வீடியோ படங்களையும் இலங்கை ராணுவம் வெளியிட்டு, இருவருக்கும் உள்ள 'தொடர்புகள்' உறுதியாகியுள்ளதாகக் கூறியுள்ளது.

இந்தப் படங்களில் வைகோவும், பிரபாகரனும் காணப்படுகின்றனர். வைகோ படு இளமையாக இருக்கிறார். ஒரு படத்தில் வைகோ விடுதலைப் புலிகளின் சீருடையில், துப்பாக்கியை சுடுவது போல நீட்டி பிரபாகரனுடன் போஸ் கொடுத்துள்ளார்.

இந்தப் பழைய படங்களை தற்போது கண்டுபிடித்து எடுத்துள்ள இலங்கை ராணுவம், அவற்றை தனது இணையத் தளத்தில் (ட்ற்ற்ல்://க்ங்ச்ங்ய்ஸ்ரீங்.ப்ந்/ய்ங்ஜ்.ஹள்ல்?ச்ய்ஹம்ங்=20090301ஜ02) வெளியிட்டு, விடுதலைப் புலிகளுக்கும், வைகோவுக்கும் தொடர்பு இருப்பது உறுதியாகி விட்டதாக கூறியுள்ளது.

இன்னொரு படத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவருடன் பேசுவது போல உள்ளது.

அதேபோல ஜார்ஜ் பெர்னாண்டஸ், வைகோ உள்ளிட்டோருடன் சில புலிகள் அமைப்பினர் இருப்பதைப் போன்ற படமும் உள்ளது. இந்தப் படங்களை எங்கு பிடித்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை.

இலங்கை ராணுவம் கொடுத்துள்ள இந்தப் படங்களை வைத்து வட இந்திய மீடியாக்களும் ஏதோ இப்போது தான் இந்தப் படங்களே வெளியானது மாதிரி செய்திகளை வெளியிட்டுள்ளன
 

StumbleUpon.com Read more...

கடைசி செய்தி:இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பாக்கிஸ்தானில் தீவிரவாதிகளால் சுடப்பட்டனர்



நன்றி:தினமலர்

StumbleUpon.com Read more...

உரிமை இழந்தோம் ,உடமையும் இழந்தோம்…! உணர்வை இழக்கலாமா??

எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.இதை அனைவரும் படிக்க வேண்டும் என்று பொதுவில் வைக்கிறேன்.

 

தமிழீழத்திற்கான தேவையும் , சாத்தியக்கூறுகளும்.!

Thursday, February 26, 2009

யூதர்களுக்கு இசுரேல் சாத்தியமென்றால் , இந்தோனேசிய கிறித்தவ மக்களுக்கு கிழக்கு திமூர் சாத்தியமென்றால் , கொசாவோ சாத்தியமென்றால் ஏன் தமிழர்களுக்கு ஈழம் சாத்தியமில்லை என்ற கேள்வி வெகு ஆழமானது. 

Your browser may not support display of this image.
 

இந்தக் காலகட்டத்திற்கு தேவையானது. புலிகள் வீழ்ந்து விட்டனரோ என்ற ஐயத்திலிருக்கும் புலம் பெயர் ஈழத்தமிழர்களுக்கும் , கையாலாகதவர்களாக தம்மைக் கருதிக்கொண்டு புலம்பும் தாய்த்தமிழக மக்களுக்கும் ஆழ்ந்த சிந்தனையைத் தோற்றுவிக்க வல்ல கேள்வி அது. 

இன்றைய உலகத் தமிழர்களின் ஒரே சாத்தியமான குரலான தாய்த்தமிழக மாநில அரசு தனது கடமையைச் சரிவரச் செய்கிறதா என்று ஆராய்வதும் , தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அளவிற்கு அது திறனுடன் இருக்கிறதா என்று பார்ப்பதும் தமிழீழத்திற்கான தேவையை உறுதி செய்ய உதவும்.! 

***

 

எல்லோரையும் போல , நானும் கூட கலைஞரைப் பற்றிக் குறைகூறிக்கொண்டுதான் இருக்கிறேன் , ஒரு மாநில முதல்வர் என்ற அளவிற்கு கூட அவர் முயற்சிக்கவில்லையே என்று. ஆனால் நிதர்சனம் என்று பார்த்தால் , மீறிப் போனால் கலைஞரால் என்ன செய்து விட முடியும்.? 

இந்திய அரசின் மேல் நம்பிக்கையற்று பாராளுமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்தாலும் கூட இரண்டு மாதங்களுக்கு முன் அரசு கவிழ்ந்திருக்கும். அவ்வளவுதான். தனது மாநில ஆட்சியைத் துறந்திருந்தால் மீண்டும் தேர்தல் வந்திருக்கும். அவ்வளவேதான். காரணம் – அவருக்குள்ள அதிகாரங்கள் மிகவும் குறுகியவை. அவரால் மட்டுமல்ல , தேசிய அளவில் எந்தவொரு இந்திய மாகாணமுமே அந்த அளவில் மட்டுமே ஆதிக்கம் செலுத்த முடியும்…அதற்கு மேல் இங்கே வழியுமில்லை.

 

இன்று அமெரிக்கா , ஐ.நா , செஞ்சிலுவைச் சங்கம் , நார்வே , ஐரோப்பிய ஒன்றியம் இவைகள் விடுக்கும் எந்த வேண்டுகோளையுமே மதிக்க மறுக்கும் இலங்கை அரசாங்கம் கருணாநிதியை மட்டுமா மதிக்கப்போகிறது??? 

Your browser may not support display of this image.

இன்றைக்கு கலைஞரைக் குறை சொல்லும் அனேக உடன்பிறப்புக்கள் அவருடைய தமிழினக் காவலர் பட்டம் பறி போய்விடுமே என்ற கவலையில்தான் அவருக்கு வேண்டுகோள்களை வைத்துச் சலிக்கிறார்களே தவிர அவரால் கூட ஒன்றும் கிழிக்க முடியாது என்று தெளிவாக உணர்ந்தே இருக்கிறார்கள். மக்கள்தான் குழம்பிப் போயிருக்கிறார்கள். அந்தக்குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கத்தான் அவரவர் தமிழகத்தின் ஈழ ஆதரவு எழுச்சியை தனது எல்லைக்குட்பட்டவாறு உபயோகப்படுத்துகிறார்கள்.  

அவரவர் அரசியல் ஆதாயத்தைத் தவிர ஒரு உபயோகமான காரியத்தையும் இந்த எழுச்சி செய்திருக்கிறது……..…அதென்ன? 

மத்திய அரசில் ஆதிக்கம் செலுத்தும் நிலையிலும் கூட தமிழர்களுக்கான நியாயமான உரிமைகளை தமிழுணர்வுள்ள ஒரு கட்சியாலேயே நிறைவேற்ற இயலவில்லை என்று கண்டுணர்ந்ததுதான் அது.! தற்போதைக்கு தமிழர் நலனையும் , உரிமையையும் பாதுக்காக்க வல்ல ஒரூ அமைப்போ , நாடோ , மாநிலமோ இன்று இல்லை என்பதை இங்கே நாம் தெளிவுற விளங்கிக் கொள்ள முடியும்.

 

*** 

தான் சார்ந்த ஒரு கூட்டம் , தான் சார்ந்த ஒரு ஊர் , தான் சார்ந்த ஒரு நகரம் , தான் சார்ந்த ஒரு நாடு , அதில் வாழ்வோர் என்னைச் சார்ந்தவர்கள் , அவர்கள் பேசும் மொழி என்னுடையது என்ற நோக்கிலேயே மனிதன் தனித் தனி தேசிய இனங்களாக பிரிந்து வாழத்துவங்கினான். 

அத்தேசிய இனங்கள் தான் பாரசீகனாகவும் , ஆரியனாகவும் , அரேபியனாகவும் , திராவிடனாகவும் , வெள்ளையனாகவும் , டூட்சிகளாகவும் , சாவளர்களாகவும் , கலிங்கர்களாகவும் , ஒஸ்ஸேத்தியர்களாகவும் , ஜார்ஜியர்களாகவும் , கிரேக்கர்களாகவும் மாற்றிற்று. அவரவர்கள் தங்களுக்கென்று ஒரு மொழியையும் நிர்மாணித்துக்கொண்டார்கள் , அல்லது ஒரு குறிப்பிட்ட மொழியினை பேசுபவர்கள் அவர்கள் தங்களை அம்மொழி பேசும் இனத்தவர்களாக அடையாளப்படுத்திக்கொண்டார்கள். இந்தியாவில் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும் இதே அடிப்படையில்தான் என்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். 

நிற்க ,

இதைச் சொல்வதே எந்தவொரு தேசிய இனமும் ஒரு தனிப்பட்ட ஒரு நாட்டை கொண்டிருக்கும் போது அந்த இனம் பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்….அப்படித்தான் இனங்களே உருவாகின, மனிதனின் பாதுகாப்பின்மை பற்றிய பயமே அவரவர்களுக்கென்று ஒரு குழுவினை உருவாக்க அடிகோலிற்று.

 

தமிழீழம்காலத்தின் கட்டாயம்…!

தமிழன் என்ற தேசிய இனத்திற்கு ஒரு நாட்டை உருவாக்க முடியாதா? அதற்கான வசதியும் , வாய்ப்பும் இல்லையா?? 

Your browser may not support display of this image.
 

இந்த இரு கேள்விகளுக்கான சரியான விடையைக் காண நாம் சற்றேறக்குறைய 60 ஆண்டுகள் பின்னோக்கி இரண்டாம் உலகப்போரின் கடைசிக்கட்டத்திற்கு செல்லுவோம். 

இரண்டாம் உலகப்போரில் போக்கிடமற்ற தேசிய இனமாக அறியப்பட்ட யூதர்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்…..! ஹிட்லரால் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட ஒரு சூழலில் அவர்களுக்கென்று ஒரு தனி இடம் / தனி பூமி தேவை என்ற நோக்கில் இங்கிலாந்து மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் இசுரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு அங்கு யூதர்கள் குடியேற்றப்பட்டார்கள்.

 

இன்றைய உலகச்சூழலை உற்று நோக்குகையில் இரண்டாம் உலகப் போர் காலத்தை விட முற்றிலும் வேறுப்பட்டதாக காட்சியளிக்கிறது. இரண்டாம் உலகப் போரில் அச்சு நாடுகளும் , நேச நாடுகளும் ஒன்றுக்கொன்று சண்டையிட்ட அந்தக் காலம் உலக வரலாற்றில் குறிப்பிடத் தகுந்த நிகழ்வாகும். காலனி ஆட்சிகளின் காலத்தின் முடிவுகள் அரும்பத்தொடங்கியிருந்த காலமது. 

யூதம் என்ற தனி தேசிய இனத்திற்கென ஒரு நாடு இருக்கப் போய்தான் இங்கே மும்பை நாரிமன் ஹவுசில் அகப்பட்ட ஒரு சில யூதர்களுக்காக அது இந்தியாவுடன் தொடர்ச்சியாக மும்பை நிலவரம் பற்றி விசாரித்தும் வந்தது. அங்கு கொல்லப்பட்ட ஒரு சில யூதர்கள் இந்திய கமேண்டோக்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் வெளிப்படையாக தெரிவித்தது. 

இன்றும் உலகின் ஒரே ஆண் பிள்ளை நாடாக அது இருக்கிறது. தன் இன மக்கள் எங்கே தாக்கப்பட்டாலும் உடனே தன் எதிர்ப்பையும் , தேவைப்பட்டால் இராணுவ ரீதியிலும் பதிலடி கொடுக்கிறது. 

ஆகவே , உலகளாவிய முறையில் தமிழர்களின் உரிமையை நிலை நாட்டவும் , தமிழர்களின் தேவையை உலகுக்கு உரத்துச் சொல்லவும் , எங்கெங்கு தமிழரின் உரிமைகள் பறிக்கப்படுகிறதோ அதையெல்லாம் தட்டிக்கேட்கவும் , சர்வதேச அளவில் அந்தப்பிரச்சினைகளை எடுத்துச் செல்லவும் , ஐ.நா போன்ற உலக அரங்குகளில் தமிழரின் குரல் வலுவாக ஒலிக்க உதவவும் தேசிய நாடு ஒன்று தமிழர்களுக்கு அவசியம் தேவை.

 
 

இங்கேதான் உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனும் தமிழீழத்திற்கான ஆதரவை வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஏனென்றால் தமிழனுக்கென்று ஒரு தேசிய நாடு ஈழத்தில் மட்டும்தான் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அந்தச் சாத்தியக்கூறுகளை அதிகரித்து தமிழீழத்தை உருவாக்கிட ஒவ்வொரு தமிழனும் தன்னால் இயன்ற அளவிலான பணிகளைத் தொடர்ந்து செய்திடுவதே நம்முன் உள்ள மிகப்பெரும் சவால். அதற்குமுன் இன்றைய இடியாப்பச் சிக்கலுக்கு மூல காரணம் என்ன என்பதைப் பற்றிய புரிதலே உடனடித் தேவை…..!

 

***

 

யூதர்கள் இரண்டாம் உலகப்போரில் எப்படி கொன்று புதைக்கப்பட்டார்களோ அதே போலத்தான் இன்று தமிழர்கள் வன்னியில் புதைக்கப்படுகிறார்கள். 

Your browser may not support display of this image.
 

ஆனால் சில வித்தியாசங்களுண்டு……! அவை என்ன?

அன்று உலகம் இரு பிரிவுகளாக நின்று ஒரு பிரிவு மட்டுமே யூதர்களை இனப்படுகொலைக்கு ஆளாக்கியது. ஆனால் இன்று ஒட்டுமொத்த உலகமும் கூடி நின்று தமிழினப்படுகொலையை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.

அன்று யூதர்களைக் காப்பாற்ற ஒருவருமே இல்லையே என்று நேச நாடுகள் நாஜிகளை எதிர்த்துப் போராடினார்கள். இன்று தமிழர்களுக்கு ஒரே ஆதரவான புலிகளையும் அழித்துவிடத் துடிக்கிறது மேற்குலகமும் மற்ற உலக நாடுகளும்.  
 

ஏன்?? 

 

அன்று உலகளாவிய ஐ.நா போன்ற சமாதான அமைப்போ , மனித உரிமை அமைப்புக்களோ , உலக நீதிமன்றமோ இல்லை. இன்று அவைகள் இருந்தும் வாய்மூடி மெளன சாட்சிகளாக , இரக்கமற்ற கட்டிடங்களாக அந்த அமைப்புக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன. அதைத்தான் ஒருசில தினங்களுக்கு முன் ஆப்பிரிக்க யூனியனும் ஆப்பிரிக்காவையே சுற்றி வரும் உலக நீதிமன்றம் இலங்கையைக் கண்டு கொள்வதே இல்லை என்று குற்றஞ்சாட்டியது. 

ஏன்?? 
 

அன்று உரிமைகளுக்காக போராடியவர்கள் தியாகிகளாக்கப்பட்டார்கள். இன்று உரிமைகளுக்காகப் போராடுபவர்கள் ஏகாதிபத்தியங்களின் நலனுக்காக தீவிரவாதிகள் ஆக்கப்படுகிறார்கள். தியாகிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் ஒரே வேறுபாடுதான் , ஜெயித்தவன் தியாகி ஆகின்றான் , போராடிக்கொண்டிருப்பவன் தீவிரவாதி ஆகிறான். 

நேற்றைய பகத் சிங்கும் , நேதாஜியும் , வாஞ்சிநாதனும் எப்படி ஆங்கிலேய அரசுக்கு தீவிரவாதிகளோ அதுபோலவே இன்று பிரபாகரன் இலங்கைக்கு தீவிரவாதி.. இன்றைக்கு புரட்சிநாயகர்களாக சித்தரிக்கப்படும் பிடல் காஸ்ட்ரோவையும் , சே குவேராவையுமே அவர்கள் தோல்வியைச் சந்தித்திருந்தால் உலகம் இவ்வளவு கொண்டாடியிருக்குமா என்பது கேள்விக்குறியே. ஆகவே வெற்றி பெற்றவர்கள் தான் இன்று உலகிற்கு நண்பர்கள்.! 

கொசாவோவை தனி நாடாகப் பெற்றுத்தந்த மேற்குலகம் தமிழ் ஈழத்தை மட்டும் அங்கீகரிக்க மறுக்கிறார்கள்………..

 

மிலோசெவிக்கை படுகொலையாளன் என்று சித்தரித்து உலக நீதிமன்றத்தில் நிறுத்திய சர்வதேச நீதி மன்றம் இன்று இராஜபக்சேவை தனது கூட்டாளி ஆக்கிக்கொண்டிருக்கிறது.

 

ஏன்??? 

மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில் இந்தியா , இந்தியா , இந்தியா , இந்தியா என்பதுதான். ஆசியக் கண்டத்தில் சீனாவிற்கு நிகரான சக்தியொன்று வேண்டுமென்ற கோணத்திலேயே தெற்காசியப் பிரச்சினைகளை உலக நாடுகள் அணுகுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய சந்தை தமது பொருட்களை விற்கத் தேவையென்ற நோக்கிலேயே உலகநாடுகள் இந்தியாவுடன் உறவைப் பேண விரும்புகின்றன.

 

ஆக , இந்தியாவின் நண்பனையே தனது நண்பனாக ஏற்றுக்கொள்ளும் மேற்குலகம் இன்று இந்தியாவின் புலிகளுக்கெதிரான நிலையை தமது நிலையாக ஏற்றுக்கொண்டிருக்கின்றன.

 

ஆங்கிலேயர்களால் தைக்கப்பட்ட இந்தியாவின் தேசியத்தைக் காக்க தமிழர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. தமிழர்களின் போராட்டம் நசுக்கப்படுகிறது. அதுதான் நாம் இன்றைய சூழலின் உண்மை நிலவரம்.!

 

இன்றைய தமிழகத்தின் இந்திய நடுவண் அரசிற்கெதிரான போராட்டங்கள் கேலிக்கூத்தானவை. நமது உரிமைகளை பறிப்பவர்களிடமே எங்கள் உரிமைகளை மீட்டுத்தாருங்கள் என்று கதறுகிறோமோ அது எவ்வளவு முட்டாள்தனம்? எவர் தமிழர்களை கொன்றொழிக்கிறார்களோ அவர்களிடமே இனப்படுகொலை பதாகைகளை ஏந்தி அவர்களுக்குப் புரிய வைக்க கொடி பிடிக்கிறோமே அது வடிகட்டின பைத்தியக்காரத் தனம் இல்லை என்ற தமிழுணர்வாளர்களின் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை.

திசை திருப்பப்படும் போராட்டக்களம்.!

இந்திய தேசியத்தின் அங்கமான தாய்த் தமிழக மக்கள் திக்குத் தெரியாமல் தமது சோதரர்களைக் காக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றார்கள். ஆதங்கப்பட்டு நிற்கிறார்கள். அந்த ஆதங்கம்தான் இங்கு தீக்குளிப்புக்களாக மாறிக்கொண்டிருக்கின்றன. அந்த இயலாமைதான் இன்று மாணவர்களின் தன்னெழுச்சியாக மாறிக்கிடக்கிறது.

 

Your browser may not support display of this image.

 

ஈழத்தின் பாலான தமிழகத் தமிழர்களின் உணர்வு வழக்கறிஞர் , காவல்துறை மோதலால் திசை திருப்பப் படுகிறது. உண்ணாவிரத நாடகங்களால் பிரச்சினையின் தீவிரத்தைத் தணிக்க முயற்சிக்கப்படுகிறது. பிரணாப்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டும் , சோனியாக்களின் திடீர் நிவாரணங்களாலும் நமது ஓட்டுக்களைச் சூறையாட சூழ்ச்சி நடக்கிறது. இப்படி பொய்யானதொரு தேசியத்தைக் கிழிக்கும் சீமான்கள் இல்லாத இறையாண்மையின் பால் சிறையிலடைக்கப்படுகிறார்கள்.

 

அத்தகைய சூழ்ச்சிகளையும் , செப்படி வித்தைகளையும் , திசை திருப்பல்களையும் , நாடகங்களையும் தமிழன் பகுத்தாராய்ந்து புறந்தள்ள வாய்ப்புண்டா? பெரியாரின் பகுத்தறிவுத் துணையோடு அவன் இந்த ஓட்டரசியலையும் , சுயநல அரசியல்வாதிகளின் வேடத்தையும் கிழித்தெறிவானா?

 

பதில் என்னவோ தெரியவில்லை, ஒரு வேளை இந்த பாராளுமன்றத் தேர்தல் அதற்கான பதிலை வைத்திருக்கிறதோ என்னவோ….காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

***

புலிகள் உடனடியாக ஒரு பெரிய போர் வெற்றியைத் தராத நிலையில் , சர்வதேசமும் புலிகளுக்கெதிரான ஒரு நிலையை எடுத்து விட்ட சூழலில் தமிழீழம் சாத்தியமா ? ஆம் சாத்தியம் தான். காரணம் எந்தவொரு விடுதலைப்போரும் உரிமைகள் மறுக்கப்படுவதனால் மட்டுமே உருவாகிறது. அந்த உரிமைகளை மீட்டுத்தர வாய்ப்பில்லாத போது அப்போராட்டம் முடங்கிப் போய்விடுவதென்பது இயலாதது.

 

அங்கே போராட உணர்வுள்ள இளம்புலிகள் இருக்கிறார்கள். இன்றைய சூழலில் தமிழக மக்கள் செய்யக்கூடியது என்ன???? போராட்டக்களத்தில் நிற்கும் புலிகளுக்கான அங்கீகாரத்தை இந்தியாவிடமிருந்து பெற்றுத்தர முயல்வதே….!

 

எப்படி?

 

தமீழீழத் தமிழர்களின் ஒரே வலுவுள்ள பிரதிநிதிகள் விடுதலைப்புலிகள்தான் என்று இந்தியாவை அங்கீகரிக்கச் செய்வது !

 

புலிகளுடன் சமாதானம் பேச வசதியாக அவர்களின் மீதான தடையினை நீக்க வலியுறுத்துவது…!

 

தமிழீழமே தீர்வு என்று இந்தியாவிடம் இடித்துரைப்பது…..!

 

தமிழர்களின் நலனை புறக்கணிக்காமல் இந்திய நடுவண் அரசு தனது வெளியுறவுக்கொள்கையை மாற்ற வலியுறுத்துவது….!

 

தொடர்ந்து மத்திய அரசுகள் நமது நலன்களை புறக்கணிக்குமானால் மத்திய அரசின் நிறுவனங்களை தமிழகத்தில் செயல்பட விடாமல் முற்றுகைளாலும் , ஆர்ப்பாட்டங்களாலும் முடக்குவது…..!

 

இவைகள்தான் தமிழகத்தில் தமிழன் செய்யக் கூடியவை…….செய்ய இயன்றவை…. நமது தார்மீகப் பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம். தமிழீழத்திற்கான ஆதரவினை வழங்குவோம்.! நமது ஆதரவு முழக்கம்தான் , தமிழர்களின் அழுகுரலுக்கான விடிவுக்கு வழி சமைக்கப் போகிறது.…..!

 

அந்த விடிவுகாலமென்பது கண்டிப்பாக ஒருநாள் நமது உரிமைகளை மீட்டுத்தர தமிழீழம் உருவாகும் காலமேயாகும். அப்படிப்பட்டதொரு தமிழீழம் பெயரளவிற்கு மட்டுமே தமிழ்நாடாக இல்லாமல் உண்மையான தமிழனின் நாடாக இருக்கும்…..!!

 

உரிமை இழந்தோம் ,

உடமையும் இழந்தோம்…!

உணர்வை இழக்கலாமா??

 

 

StumbleUpon.com Read more...

தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் நமது மக்களின் தேசியப் பங்களிப்பும்

 
 
உலகெங்கும் பரந்து வாழும் நம் தமிழ் பேசும் மக்கள் முன் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் எழுந்துள்ள பல கேள்விகளுள் முதன்மையானது, நம் தாயக விடுதலைப் போராட்டத்துக்கான சிந்தனையும் தமிழ் பேசும் மக்களின் தேசியப் பங்களிப்பு பற்றியதுமாகும் என்பதனை எவரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

 
எமது சுதந்திரப் போராட்டம் மூன்று தலைமுறைகளைக் கடந்தும் ஆயுதம் தாங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் முளைவிட்டு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகி முப்படைகளுடன் வெற்றிநடையிட்டும் வருகையில், தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளான விடுதலைப் புலிகளுடன் சிங்கள சிறிலங்கா அரசு இறுதியாகச் செய்த "யுத்த நிறுத்த உடன்படிக்கை" தனது ஆறாவது அகவையைப் பூர்த்தியாக்கியுள்ள நிலையில் தாயகத்தில் முன்னெப்போதுமில்லாத வகையில் நெருக்கடியும் பதட்டமும் மிகுந்துள்ள சூழல் நிலவும் இந்நேரத்தில் இத்தகைய வினா, தவிர்க்கப்பட முடியாததே.

 
இந்நிலையில், நமது தேசியப் பங்களிப்பு பற்றி நோக்க முன், நமது போராட்டத்துக்கான சிந்தனை பற்றி ஆராய்வது பொருத்தப்பாடானதாக இருக்கும் என்று கருதுவதால், அதுபற்றி சற்று ஆழமாக நோக்குவோம். மனித குலத்தின் நாகரிக வளர்ச்சிக்கும் சமூக மேம்பாட்டிற்கும் கல்வியே மூலாதாரமானது, ஆணிவேர் போன்றது என்பது நாம் யாவரும் அறிந்ததே.

 
இந்தக் கல்வியின் பிரதான நோக்கம், ஒரு தனி மனிதனின் ஆளுமைகளை வெளிக்கொணர்ந்து அவனை (/அவளை) சிந்தனை செய்யும் திறன் மிக்கவனாகவும் தன்நம்பிக்கையுள்ள நற்பண்பாளனாகவும் சமூக, தேசப்பற்றுள்ளவனாகவும் அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடும் திறனுள்ள நீதியுணர்வுள்ளவனாகவும் வளர்ப்பதுவும் அதன் மூலம் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள தன் சமூகத்தவருக்கும் தன் தேசத்தவருக்கும் மட்டுமின்றி முழு உலகுக்குமே பயனுறச் செய்வதுமாகும்.

 
ஓரினத்தின் அல்லது ஒரு சமூகத்தின் அல்லது ஒரு நாட்டின் முன்னேற்றம் பிரதானமாக மக்களின் கல்வியறிவிலேயே தங்கியுள்ளது. அதனால், அக்கல்வியறிவு உயர்வதற்கும் உரிய, உயரிய பயனை அளிப்பதற்கும் கல்வி முறையும், அதாவது கல்வித் திட்டம் மற்றும் கல்விச் செயற்பாடுகள் யாவும் சிறப்பானதாக அமைய வேண்டியது அத்தியாவசியமாகிறது. ஆனால், இன்று நாம் நடைமுறையிற் காண்பதுதான் என்ன? ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுத் தூங்கிக் கிடந்த தமிழினம், படிப்படியாகத் தனது பிறப்புரிமைகளை இழந்து வந்த போதினும், சிங்கள அரசால் தரப்படுத்துதல் முறை கல்வியிற் புகுத்தப்பட்ட போதே விழித்து எழுந்தது; காலம் காலமாக, தான் எம்மாற்றுப்பட்டத்தையும் ஏமாறி வந்ததையும், நம்பி நம்பி நாசமாகிப் போனதையும் உணர்ந்து கொண்டது.

 

 
உயர் கல்வி வாய்ப்புகளுக்கும் வேலை வாய்ப்புகளுக்கும் கதவுகள் அடைக்கப்பட்டதாலும் உரிமைகள் மறுக்கப்பட்டதோடல்லாமல் சாதாரண சலுகைகள் கூட மறுக்கப்பட்டதாலும் தமிழினப் பரம்பரை, ஆவேசம் கொண்டது. இதன் உச்ச விளைவாக அதுவரையான சாத்வீக ரீதியிலான உரிமைப் போராட்டம் முனைப்புற்று, சுயநிர்ணயத்துக்கான ஆயுதம் தாங்கிய தேசிய விடுதலைப் போராட்டமாகப் பரிணமித்தது.

 
இவ்வாறாக, எமது தேசிய விடுதலைக்கான தற்போதைய போராட்டத்தின் பிரதான தோற்றுவாய் மாணவர் தொடர்பான விடையங்களாய் அமைந்த போதினும், நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போராட்டத்துக்கான சிந்தனையை இன்று வரை நடைமுறையில் உள்ள கல்வி ஊட்டுகிறதா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவர்களாகவே இன்றும் நாம் உள்ளோம். இலங்கைத் தீவானது ஐரோப்பியரிடமிருந்து சுதந்திரமடைந்ததாகக் கொள்ளப்பட்ட காலம் முதலாக இன்று வரை கல்வியும் அவை தொடர்பான சகல விடையங்களுமே மாறி மாறி ஆட்சி செய்கின்ற சிங்கள அரசுகளாலேயே கையாளப்பட்டு வருகின்றன.

 
ஆயினும், தமிழரின் பூர்வீக நிலங்களில் அத்து மீறிய சிங்களக் குடியேற்றங்கள், தனிச் சிங்களச் சட்ட அமுலாக்கல் மற்றும் இனப்படுகொலைகள் என மிகவும் நுட்பமாகத் திட்டமிட்டு நீண்ட, குறுகியகால நோக்கங்களுடன் ஆரம்பித்து முன்னெடுக்கப்பட்ட தமிழின அழிப்பு முயற்சியானது, பிரதானமாக 1980ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசு பாடநூல்களை அச்சிட்டு இலவசமாக விநியோகிக்கத் தொடங்கியது முதலாக எம்மால் புரிந்து கொள்ளவோ அன்றி இலகுவில் உணர்ந்து கொள்ளவோ முடியாதவகையிலும் முன்னர் மறைமுகமாகவும் தற்போது வெளிப்படையாகவும் தீவிர - துரித கதியிலான பல்வேறு வடிவங்களிலும் நடைபெற்று வருகின்றமையை எவருமே மறுக்க முடியாது.

 
உலக வரலாற்றின் புதிய குழந்தையான நாளைய தமிழீழ தேசத்தைக் கட்டி வளர்த்துத் தலைவர்களாகப் போகின்ற இன்றைய இளம் பரம்பரையினரை - குறிப்பாக மாணவர்களைக் குறிவைத்தே இராணுவத் தாக்குதல்களும் திட்டமிட்ட படுகொலைகளும் பொருளாதார, கல்வி, மருத்துவத் தடைகளுடன் கூடவே எமது தேசிய போராட்ட உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்யக் கூடிய வகையிலான பாடப் பரப்புகளும் அமைந்துள்ளன. அத்துடன், தன்னம்பிக்கையற்ற, மொழி இனப்பற்றற்ற சமுதாயத்தை உருவாக்கியும் வரலாற்றையே உண்மைக்குப் புறம்பாகத் திரிபுபடுத்தி (சிங்கள மாணவர் மத்தியில் இனவிரோதத்தை வளர்க்கும் வகையில்) போலித் தகவல்களை வழங்கியும் உளவியல் ரீதியாகவும் பாதிப்புறும் வண்ணம் நிகழ்த்தப்படும் மறைமுகமான யுத்தமொன்றையும் தமிழ் மாணவ சமுதாயம் தம்மையுமறியாமலேயே எதிர்கொண்டு வருகிறது.

 

 
இன்றைய யதார்த்த நிலைமை இவ்வாறாகவெல்லாம் இருக்கின்ற பொழுது,போராட்டத்துக்கான சிந்தனையை இங்குள்ள கல்வி, இலங்கைத்தீவில் வாழும் தமிழ் பேசும் மாணவர் மத்தியில் ஊட்டுகிறதா என வினவினால், அதற்கு, இல்லை என்பதே, தவிர்க்க முடியாத பதிலாக அமைகிறது. இன்று நாம் எமது தாயக விடுதலைப் போராட்டத்தினை அளவற்ற அர்ப்பணிப்புகள், ஒப்பற்ற தியாகங்கள் மூலம் ஆயிரமாயிரம் இன்னுயிர்களை ஈந்து முன்னெடுத்து வருகின்றோம்.

 
அத்துடன் இந்தப் புனிதமான தேசியப் பணிக்கு எம்மையோத்த இளைஞர் அணியினரை எமது சமுதாயத்திலிருந்தே அணிதிரட்டுகிறோம். ஆனால், இவர்களில் கணிசமானவர்கள், இந்த துடிப்பு மிக்க இளம் வயதில் - கல்வி கற்கின்ற பராயத்தில் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ இப்பணிக்குத் தம்மைப் பங்காளிகளாக்கி அர்ப்பணிக்கும் தெரிவுக்கு முதன்மைக் காரணியாக அமைவது இன்றைய காலத்தின் தேவையின் அவசியமும் நடைமுறைப் பாதிப்புகளூடாகப் பெற்ற அனுபவ உணர்வுகளின் உந்துதலுமே அன்றி வேறொன்றுமல்ல என்பது கண்கூடாகும்.

 
எமது மக்கள் சக்தியின் கணிசமான வீதமான மாணவ சக்தியினை, எமது போராட்டத்துக்குச் சாதகமான பயனுள்ள முறையில் உபயோகிக்கக் கூடிய நிலை சிலகாலம் முன் வரை ஒப்பீட்டு அளவில் அரிதாக இருந்தமைக்கும் மாணவர் தாமாக முன் வந்து பங்களிப்பை முழுமையாக நல்குவதிலிருந்து ஒதுங்கியிருந்ததற்கும் கல்வியமப்பே காரணமாகும். எமது விடுதலைப் போராட்டம் எமது கல்விக்குக் கவசமாய் இருப்பது போன்று, நாம் கற்கும் கல்வி, எமது போராட்டத்துக்குரிய சிந்தனையை ஊட்டி வளர்த்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்துக்குக் காப்பரணாக அமைவதில் தனது பங்கைச் சரிவரச் செய்வதில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

 

 
தாயக மீட்புக்கான போரொன்று இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாணவராகிய எமது பங்களிப்பு காலத்தின் தேவை - நேரத்தின் நிர்ப்பந்தம் - வரலாற்றுக் கடமை என்கின்றன உணர்வை இன்றுவரையான கல்வி எமக்கு எடுத்துக் கூறவில்லை. அத்துடன், எமது இனத்தின் சுதந்திரம், கலை, கலாசாரம், பொருளாதாரம், நிலம் மொழி, பாரம்பரியம், பாண்பாடு போன்றன உயிர்ப்புடன் இருந்தாலேயே எமது எதிர்காலமும் நிச்சயமானது என்பதயும் எமது இனத்தின் எதிர்காலமே நடைபெற்றுக் கொண்டிருக்கிற தேச விடுதலை போராட்டத்தின் முடிவில்தான், அதன் இறுதி வெற்றியில்தான் தங்கியுள்ளது என்கின்ற மறுக்க முடியாத உண்மையையும் எதிர்காலத்தின் விலையே நிகழ்காலம்தான் என்பதனையும் இன்றைய கல்வி எமக்குப் போதிக்கவில்லை.

 
மாறாக, பொதுவாக மாணவர்களைப் பரீட்சைகளுக்கும் சான்றிதழ்களுக்கும் தயார் செய்வதும், அதன் பலனாக குறித்த சிலருக்கு உயர் கல்விவாய்ப்பும் வெளிநாட்டு மேற்படிப்பும் வசதியான வாழ்க்கையும் தேடப்படக்கூடியதாக இருப்பதுமே இன்றைய கல்வியமைப்பின் முதன்மையான விளைவாகவுள்ளமை வெளிப்படையாகும். (ஆனாலும், இதிலும் எத்தனை வீதமானோர் உரிய பயனைப் பெறுகின்றனர் என்பது வேறு விடையம்.) தவணைத் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயாராக்கும் இன்றைய கல்வி, வாழ்க்கைத் தேர்விலும், அதற்கான தெரிவிலும் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்குரிய வழிகாட்டலை வழங்கத் தவறியே வருவதையும் கணக்கூடியதாகவுள்ளது.

 
மேலும், ஆண்டு ஒன்று முதல் பல்கலைக்கழகம் ஈறாக, சகல படிநிலைகளிலும் மாணவர் மத்தியில் சுயநலப் போக்கே மேலோங்குவதற்கும் இந்த மண்ணின் வளத்தில், மூலதனத்தில் படித்துப் பட்டம் பெற்ற பின்னர் வேலை வாய்ப்புகளுக்காகவும், பணம், பட்டம், பதவி என்பவற்றுக்காகவும் இந்த மண்ணுக்கும், அதன் மைந்தர்க்கும் அந்நியமாகும் மனநிலைக்கும் இன்றைய கல்வித்திட்டமே வழிவகுத்து ஊக்குவிக்கின்றது. இதற்குக் கல்விப் பணியுடன் தொடர்புடைய, தொடர்பு கொண்டிருந்த பலரும் தத்தமது சுயநல நோக்கங்களுக்காகத் தமது கடமைகளை, சமூக வழிப்படுத்துதல்களைச் சீராகச் செய்யத் தவறியமையும் முன்னுதாரணமாக வாழ்ந்து மாணவ சமுதாயத்தை உரிய முறையில் நெறிப்படுத்தாமையும் முக்கியமான துணைக் காரணிகளாக அமைந்துவிட்டமை, துரதிர்ஷ்டவசமானதே.

 

 
மாணவர் மத்தியில் பரவலான அளவில் விடுதலைப் போராட்டம் பற்றிய சிந்தனை ஏற்படவும் போராட்டவுணர்வு தோன்றவும் எமது மாணவர் மத்தியில் தேசியவுணர்வு ஏற்படுத்தப்படவேண்டியது அத்தியாவசியமாகிறது. இன்றைய கல்வியறிவு, சுதேச உணர்வைச் சரியாகப் போதிக்காமையே இன்று, (வன்னி மண்ணின் ஒரு சில பிரதேசங்களைத் தவிர தாயகத்தின் ஏனைய பகுதிகளில்) எமது சக மாணவர்கள் போராட்டச் சிந்தனையோ அன்றிப் போராட்டவுணர்வோ இன்றி அடிமை மனப்பாங்குடன் வாழக் காரணமாயிற்று. அத்துடன் எமது தேசத்தின் நிலவளத்தையும் மூல வளங்களையும் எமது மக்களின் மொழி, கலை, பண்பாட்டு, தொன்மைச் சிறப்பு போன்றவற்றையும் அழியாது பாதுகாத்தலும் அபிவிருத்தி செய்வதும், அதன் மூலம் சமூக மேம்பாட்டுக்கு உதவுதலும் அனைவருக்குமேயுரிய தேசியப் பணி என்பதையும், எமக்கு உரிமைகள் இருப்பது போல கடமைகளும் இருக்கின்றன என்பதையும் எமது கல்வி எமக்கு உணர்த்துவதில்லை என்பதும் தேசியவுணர்வு குன்றக் காரணமாகின்றன.

 
மேலும், தேசியப்பணி பற்றித் தெரியப்படுத்துவதுடன் மாணவர்களுக்குத் தமது அடிப்படை உரிமைகள் பற்றியும் உரிய முறையில் எடுத்துக் கூறி, தாம் பெறுகின்ற அறிவை அனுபவமாக்குகின்ற திறனை வளர்க்கும் வகையிலான திட்டம் ஏதும் நாம் கற்கும் கல்வித் திட்டத்தில் இல்லை. ஆதி காலம் முதலே மனிதன் நெருக்கமான சமுதாய உறவுடன் பிணைக்கப்பட்டு, கூட்டு வாழ்க்கையே வாழ்ந்து வருவதால், எமக்கும் எமது சமுதாயத்துடன் இணைந்து வாழ்வதற்குப் பொருத்தமான குணங்களைப் பெறும் மனப்பாங்கை எமது கல்வி ஊட்ட வேண்டியது அவசியமானது.

 
அவ்வாறே, ஒருவர் தனக்கும் தன் சமூகத்துக்கும் உள்ள தொடர்பை சரிவரப் புரிந்து தனது பிறப்புரிமைகளைத் தெரிந்து கொள்வதுடன் தன்னைப் போன்று மற்றையவர்களும் அவ்வுரிமைகளை அனுபவிக்கும் உரிமை உண்டு எனும் எண்ணத்தையும் அவற்றைச் சகலரும் அனுபவிக்க இடமளிக்கும் உளப்பாங்கையும் வளர்க்க வேண்டிய பாரிய கடமை கல்வி அமைப்புக்கு உண்டு.

 
அதே போன்று, இம்மனித உரிமைகளை அனுபவிப்பதில் எவ்விதத்திலாயினும் தடைகள் இருப்பின், அவற்றைத் தாண்டி தமதுரிமைகளைப் பெற முயல்கின்ற, தேவை ஏற்படுமிடத்தில் அவற்றுக்காகப் போராடுகின்ற மனப்பாங்கையும் அப்படிப் பெறுபவற்றை நிலைநாட்டும் சக்தியும் பாதுகாக்கும் ஆற்றலும் நமது மாணவரிடத்தில் உடல் மற்றும் உள ரீதியாக வளரவும் வழிகாட்டவேண்டியதும் நம் பெறும் கல்வியே. எனினும், இன்றுள்ள கல்வி இவற்றைச் சரியாகச் சுட்டிக் காட்டுவதில்லை என்பதே உண்மை நிலையாகும்.

 
இன்று எமதினம் வாழ்கின்ற உரிமைகள் மறுக்கப்பட்ட - இழந்த நிலையையும் தற்போதிய அரசியல், பொருளாதார நிலையையும் சீர்தூக்கி ஆராயவும் துரிதமாக மாறிக் கொண்டுவரும் புதிய உலக ஒழுங்கின் போக்கினைப் புரிந்து கொள்ளவும் எமது மாணவர்களுக்கு இந்த மண்ணின் பூர்வீக வரலாறு பற்றியும் இதன் உண்மை உரிமையாளர் பற்றியும், ஆதி முதல் எமது மூதாதையர் வாழ்ந்த சுதந்திரவாழ்வு, நாகரிகம் வளர்ந்த முறை, பொருளாதாரத் தன்னிறைவு போன்றன பற்றியும் எமதினத்தின் தனித்துவம், சிறப்பு பற்றியும் தெரியப்படுத்தப்பட வேண்டியதும் அத்தியாவசியமானது.

 
எமது மண், சிறிது சிறிதாக அந்நியனின் வல்வளைப்புகளால் அழிக்கப்பட்டும் ஆண்டாண்டு காலமாக நமது மூதாதையர் உழைத்து வாழ்ந்து வந்த எமது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து நாம் எல்லோரும் இடம்பெயர்க்கப்பட்டு அகதியாகத் துரத்தப்பட்டு அவலவாழ்வு வாழும் நிலைக்கும், எடுத்ததற்கெல்லாம் அடுத்தவரை எதிர்பார்த்து நம்பிய, நம்பிக்கொண்டிருக்கிற மனப்பாங்கு மேலோங்கியமைக்கும், நமது பிரச்சினைகளுக்குத் நாமே ஆராய்ந்து சரியான தீர்வைக் காண்கிற பண்பு குன்றியுள்ளமைக்கும் சுயநம்பிக்கையின்மையும் அச்சவுணர்வுமே காரணம்.

 
இத்தகைய பயவுணர்வற்ற, தன்னம்பிக்கையுடன் கூடிய உளப்பாங்கை வளர்க்கக் கூடிய கல்வி வழிகாட்டல் நீண்ட காலமாகவே எமது முன்னைய தலைமுறைக்கும் எமதருமைச் சகோதர சகோதரியருக்கும் கிடைக்காமையே இன்றுள்ள இந்நிலைமைக்கு, தட்டிக் கேட்கின்ற - உரிமைகளைப் பெற இயல்பாகவே போராடுகின்ற நிலை இல்லாமைக்குக் காரணமாகும். இப்போதெல்லாம், எமது சுதந்திரத்துக்காகவும் சுயநிர்ணய உரிமைக்காகவும் நாமேதான் உழைக்க வேண்டும் என்பதும் நூற்றுக்கணக்கில் தினசரி கொல்லப்பட்டாலும் ஆயிரக்கணக்கில் காயப்பட்டு இரத்த ஆறு தேசமெங்கும் ஓடினாலும் நாம் போராடியாகவே வேண்டும் என்பதும் நிச்சயம் விரைவில் எமது தேசத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில் நாமாகவே முன்வந்து போராட வேண்டும் என்பதும் எம் எல்லோருக்கும் புரிகிறது.

 
வீட்டுக்கு ஒருவர், இருவர் என்றில்லாது, நமது நாட்டுக்காக நாம் எல்லோருமே வயது, பால் வேறுபாடின்றி ஒன்றிணைத்து செயற்படவேண்டியது காலம் நமக்கிட்டுள்ள கட்டளை என்பதும் தெரிகிறது. ஆனால், இவற்றையெல்லாம் அறிந்தும் புரிந்தும் இருப்பினும் நாம் இன்னும் ஏன் தயங்குகிறோம்? எதிரியானவன் எமது எல்லைகளை எம்மை நோக்கி வேகமாக நகர்த்தி வருகையில் கங்கணம் கட்டிக்கொண்டு கண்மூடித்தனமாக கொத்துக் கொத்தாக எம் மக்களைக் கொன்று ஒழிக்கையில் வெளிப்படையாகவே இனப்படுகொலையை பிறநாடுகளின் உதவி ஒத்தாசைகளுடன் அரங்கேற்றுகையில் - உடலால் புலம்பெயர்ந்திருந்தாலும், உள்ளதால் எம்முடனேயே இன்றுவரை பின்னிப் பிணைந்து நிற்கின்ற எமதருமை உறவுகள் அரசியல் ரீதியாக விழித்தெழுந்து வீதிக்கு வந்து நேரமோ காலநிலையோ பாராது, எமக்காகவும் குரல் கொடுக்கையில் - அயல் தேசத்திலுள்ள எமது தொப்பூழ்க்கொடியுறவுகள் தீக்குளித்தும் உண்ணாவிரதமிருந்தும் தடியடிக்குள்ளாகி காயப்பட்டும் எமக்காகப் பல்வேறு போராட்டங்களைத் தம்மால் முடிந்தளவு இரவு பகல் பாராது முன்னெடுக்கையில் - இங்குள்ள நாம், வடக்கில் - திறந்தவெளிச் சிறையில் ஒருவிதமான உணர்வுடனும் கிழக்கில் இன்னொருவிதமாகவும் நெருக்குவாரங்களுக்குள் உள்ளாகி பல்வேறுவிதமான அவமதிப்புகளுடன் அடிமை வாழ்வு வாழ்வதை அறிந்தும் - வந்தாரையெல்லாம் வாழ வைத்துக் கொண்டிருந்த வன்னி மண்ணில், நெருக்கடிகள் சதிகள் மிகுந்த வேளைகளில் எல்லாம் போராட்டத்தைக் கட்டிக் காத்து வளர்த்த பின், இத்தனை ஆயிரம் மக்களும் சரணடைந்து போகலாமா?

 
எதிரி இத்தனை நாட்களாக எதிர்பார்த்துள்ளது போல அடிபணிந்து வீணே வீழ்ந்து சாகலாமா? மண் மானம் காக்க தமது இன்னுயிரீந்த மானமாவீரரின் கனவுகளை நனவாக்காது, அவை சீரழிந்து சிதைந்து போக, நாம் காரணமானோம் என்ற வரலாற்றுப் பழிக்கு ஆளாகி அவமானப்படலாமா?

 
எனவே, எனதன்பு மாணவச் சகோதரரே! சகோதரியரே!! இவையெல்லாம் பற்றி வாசித்தும் கேட்டும் அறிந்துள்ள நாம் - இப்பொழுதெல்லாம் நன்கு பட்டும் அறிந்து வருகிறோம். இன்னும் கறிக்குதவாத ஏட்டுச் சுரக்காய் போல நாங்கள் இருந்தால், எமது இனத்தின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும் என்பது நிச்சயம். விடுதலைப் போராட்டங்களுக்கு யாருமே காலவரையறை செய்து ஆரம்பித்து முன்னெடுப்பதில்லை. தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கையின் உள்நாட்டுப் போரில் கடந்த வருடத்தின் இறுதி மாதத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக பத்துத் தமிழர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

 
இப்பொழுது நாள் ஒன்றுக்கு நூறு பேர் வீதம் கொலை செய்யப்படுவதை ஊடகச் செய்திகள் உறுதி செய்கின்றன. எனவே, இதற்கெல்லாம் நாமும் ஒருவகையில் காரணமாகிவிட்ட நிலையில், தற்போது களத்தில் நிற்கும் வீரருடன் தயக்கமோ தாமதமோ இன்றி வலுவுள்ள நாம் எல்லோரும் இணைந்து கொண்டால் மட்டுமே உலகின் கண்களுக்கும் அறிக்கைகளுக்கும் புள்ளிவிபரங்களாகிக் கொண்டு போகும் எமது மக்களின் எண்ணிக்கையைத் தடுத்து நிறுத்தலாம்; உலக வரைபடத்தில் தமிழீழ தேசத்தின் எல்லைக் கோடுகளையும் சரிவரப் பதித்து புதிய வரலாறு படைக்கலாம்.

 

 
"இயற்கையைத் நண்பனாகவும் வாழ்க்கையைத் தத்துவாசிரியனாகவும் வரலாறை வழிகாட்டியாகவும்" கொண்டு விளங்கும் எமது விடுதலைப் பேரொளியான தேசியத் தலைவரை வழிகாட்டியாகக் கொள்ளும் பெரும் பேறு பெற்றுள்ள நாம், நம்மை நம்பியுள்ள நம் நாட்டுக்கும் மக்களுக்கும் தலைவருக்கும் ஆற்றவேண்டிய பணிகளைச் செம்மையாகச் செய்து வரலாற்றின் வரிகளில் இணைந்து கொள்வோமாக.

 
-சங்கதிக்காக  ஆதவி
 

StumbleUpon.com Read more...

வீடியோ:வைகோ,பிராபாகரன் உறவு பற்றி இலங்கை தொலைக்காட்சியின் பரபரப்பு செய்தி

வைகோ,பிராபாகரன் உறவு பற்றி இலங்கை தொலைக்காட்சியின் பரபரப்பு செய்தி என்று கிறுக்குத்தனமாக வெளியிட்டுள்ள செய்தி. வன்னிக்கு வைகோ சென்றது,பழ,நெடுமாறன் சென்றது சின்னக் குழந்தைகளுக்கு கூட தெரிந்திருக்க கூடியதே.இதை எதோ புதுக்கண்டுபிடிப்பாக சொல்லி உள்ள இலங்கை ரூபவாகினி


click

StumbleUpon.com Read more...

விடுதலை புலிகள்:இந்தியாவுக்கு இலங்கை எச்சரிக்கை

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது : அமைச்சர் சம்பிக்க ரணவக்க
 
விடுதலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கிருக்கின்றது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்தும்> ஐ.நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே சுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: "விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் உள்ளனர். இந்தச் சூழலில் யுத்த நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. புலிகளின் யுத்த நிறுத்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்தை இந்தியா வலியுறுத்துவது உலகளாவில் அந்நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும்.
இதற்கு முன்பும் இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகித்துப் பிரபாகரனைப் பாதுகாத்தது. அதே செயலை இன்றும் செய்வதற்கு முனைந்தால் 1987 ஆம் ஆண்டைப் போன்று தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். இந்திய எதிர்ப்புப் போராட்டங்கள் வெடிக்கும்.
இலங்கை இறையாண்மை கொண்ட சுயாதீனமான நாடு. எனவே எமது பிரச்சினையில் தலையிட பிரிட்டனுக்கோ அல்லது வேறெந்த மேற்குலக நாடுகளுக்கோ அதிகாரமில்லை. அவர்களது ஆலோசனைகளைக் கேட்க வேண்டிய தேவையும் எமக்கில்லை. இந்த மேற்குலக நாடுகள் தான் புலிகளுக்கு விமானங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கின. எனவே, மேற்குலக நாடுகளின் பேச்சைக் கேட்க நாம் தயாரில்லை.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இலங்கைக்கு எதிராக எந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் நாம் கவலைப்படப் போவதில்லை. எம்மை அசைக்க முடியாது. சீனா, ரஷ்யா, வியட்நாம் போன்ற நாடுகளின் ஆதரவு எமக்கு இருக்கின்றது." இவ்வாறு அவர் கூறினார்.

 

http://www.tamilwin.com/view.php?2a36QVF4b33Z9EOe4d46Wn5cb0bf7GU24d2YYpD3e0dzZLumce03g2hF0cc2tj0Cde

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP