சமீபத்திய பதிவுகள்

சிங்களப் பெண்களிடம் பாலியல் வல்லுறவு

>> Monday, June 15, 2009

ருசிகண்ட பூனைகள் சிங்கள படையின் வீரர்கள் கொத்தபையாவின் அய்யோக்கியர்கள் தமிழ் பெண்களின் செத்த பிணத்தை கூட சீண்டி சீரழித்தது போதாமல் இப்பொழுது சிங்கள பெண்களையும் வேட்டையாட ஆரம்பித்துள்ளனர்.
 
 
 
 
 
 
 
 

பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாக போற்றப்படும் அனுராதபுரி ஸ்ரீமஹாபோதி பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வரும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் சிப்பாய்கள் மீது காவல்துறை உயரதிகாரிகள் பாலியல் சித்திரவதை மேற்கொள்வதாக ஹெலதிவ பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.

அனுராதபுரத்தில் உள்ள உயர் காவல்துறை அதிகாரிகளும் பிரபல அரசியல் தலைவர்களும் இவ்வாறு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக குறித்த பெண்கள் சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீமஹாபோதி பிரதேசத்தில் 60 பெண்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

StumbleUpon.com Read more...

இந்திய உளவு பிரிவு "ரா" உலகத் தமிழர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதியில்

உலகத் தமிழர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நாசகார சதியில் "றோ"
 

இதற்கென்று புதுடில்லியை சேர்ந்த இராமச்சந்திரன் என்ற தென்னிந்திய ஆங்கில பத்தியெழுத்தாளர் ஒருவரை தென்கிழக்காசிய நாடொன்றுக்கு "றோ" நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதோடு, அவர் ஊடாக கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இயங்கி வரும் தமிழ் - ஆங்கில பத்திஎழுத்தாளர்கள் அணுகப்பட்டு, தமிழீழம் என்பது வெறும் பகற்கனவு என்றகருத்தியலை விதைக்கும் நகர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இதேபோன்று, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையில் முரண்பாடுகள் நிலவியமை போன்ற கருத்துக்களையும், தற்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு கட்டமைப்புக்களில் உடைவுகள் ஏற்பட்டிருப்பது போன்ற செய்திகளையும் வெளியிடும் நிகழ்ச்சித்திட்டம் ஒன்றை, த நேசன், த சண்டே லீடர், த ஹிந்து, புறொன்ட் லைன் போன்றஆங்கில ஊடகங்களில் ஆய்வுப் பத்திகளை எழுதி வந்த கனடிய தமிழ் ஊடகவியலாளரின் உதவியுடன், "றோ" நிறுவனம் அமுல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் வெளிப்பாடாகவே, இதுவரை காலமும் புலிச் சாயத்துடன் இயங்கி வந்த சில தமிழ் இணைய ஊடகங்கள், தமது முன்னைய தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து குத்துக்கரணம் அடித்து, மாற்று அரசியல் தீர்வுகள், இராசதந்திர உறவாடல்கள் போன்ற குழப்பகரமான செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடுவதாக விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

இதனிடையே, தென்தமிழீழமாவட்டங்களில் தலைமறைவாக செயற்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின்அரசியல்துறைப் போராளிகளின் பெயரைப் பயன்படுத்தி, அவர்களின் ஒப்புதலும் அங்கீகாரமும் இன்றி போலியான அறிக்கைகள் சிலவற்றை சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கி வரும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிடுவதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP