சமீபத்திய பதிவுகள்

எங்கள் கேள்விக்கு பதில் சொன்னால் மரண தேதியை சொல்லுவோம்

>> Monday, August 31, 2009

கேள்விக்கு பதில் சொன்னால் மரண தேதியை சொல்லும் இணைய தளம்

 

நியூயார்க், ஆக. 31-

கேள்விக்கு பதில் சொன்னால் மரண தேதியை சொல்லும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.  அமெரிக்காவில் உள்ள கார்னஜிக் மெல்லன் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் "ஹெத்ரிக் ரேங் கிங்ஸ் டாட்காம்" என்ற பெயரில் இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
 
இந்த இணைய தளத்துக்குள் சென்றால் பல்வேறு கேள்விகள் இருக்கும் அதற்கு பதில் அளித்தால் அவர்களுக்கு எப்போது மரணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை சொல்கிறது.
 
 
நமது உடல் நிலை, நாம் வசிக்கும் இடத்தின் பூகோள ரீதியான சூழ்நிலை, நமது பிறந்த தேதி போன்ற விவரங்களை கேட்கும். கேள்விகளில் இருந்து ஆய்வு செய்து மரணம் சம்பவிக்கும் காலத்தை சொல்லும்.

ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்த நோயினால் அதிகம் பேர் மரணத்தை சந்திப்பார்கள் வயதி வாரியாக நடக்கும் மரணங்கள் போன்ற விவரங்களையும் இந்த இணைய தளம் சொல்கிறது.

 
 
மூலம்:மாலைமலர்
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ithratholam yehova sahayichu-MALAYALAM CHRISTIAN SONGS

StumbleUpon.com Read more...

மாஜி போலீஸ் கமிஷனர் தேமுதிகவில் இணைந்தார்

 

 

சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பி.காளிமுத்து இன்று தேமுதிகவில் இணைந்தார்.
. 
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.காளிமுத்து. அவர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். 


அவரை விஜயகாந்த் வரவேற்று கட்சியில் இணைத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பா.பார்த்தசாரதி, கே. பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 



--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் - ஐ.நா. அதிகாரி


ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் - ஐ.நா. அதிகாரி

UNஇலங்கைத் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்படுவதைக் காட்டும் விடியோ தொடர்பாக தன்னிச்சையான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என இலங்கை அரசை ஐ.நா. சிறப்பு விசாரணை அதிகாரி பிலிப் ஆல்சன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்றதொரு விசாரணை மூலமாக அரசு மீது தவறு இல்லை எனத் தெரியவந்தால், அரசின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்றும், இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசு உறுதியாக நம்பினால், விசாரணைக்கு உத்தரவிடாமல் தவிர்ப்பது எந்தவகையிலும் நியாயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

 

அதே நேரத்தில், விடியோ காட்சிகள் அனைத்தும் உண்மையென நிரூபணமானால்,  அது சர்வதேசச் சட்டங்களை மீறியவையாகவே கருதப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கைக்குச் செல்வதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் தமக்கு இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை எனவும் ஆல்சன் குறிப்பிட்டார்.


 விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரிலேயே 'சேனல் 4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தப் படுகொலைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்தக்காலப் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக இலங்கை அரசின் மீது போர்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கு இது ஒரு சிறந்த ஆதாரம் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

 
source:murasam
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP