சமீபத்திய பதிவுகள்

தலைவர் உயிருடன்...!!

>> Wednesday, September 30, 2009

 
பிரபாகரன் கொல்லப்பட்டதாகத் தொடர்ந்து செய்தி பரப்பும் ஊடகங்கள் எட்டாம் நாள் பால் ஊற்றவும் தயாராகிவிட்டன. ஆனால், புலிகள் அமைப்பின் பிரதிநிதிகளாக உலகம் முழுக்க விரவியிருக்கும் முக்கியஸ்தர்கள், "அண்ணன் மிக பத்திரமா இருக்கார். அவருக்குப் பாதுகாப்பாக முக்கியத் தளபதிகளும் போராளிகளும் இருக்கிறார்கள். விரைவிலேயே அண்ணனின் வீர உரையை உலகம் கேட்கும்!" என உறுதியாகச் சொல்கிறார்கள்.

மூவாயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகள்… இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள்… பிரபாகரனின் சம காலத் தளபதிகள்… என நினைக்கவே நெஞ்சு பதறவைக்கும் ஈழத்து இழப்புகளையும், ஈழத்தின் கடைசி நிமிடங்களையும் வேதனையோடு நம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள் அந்தப் பிரதிநிதிகள்.

அடுத்து என்ன நடக்கும் என்று அவருக்குத் தெரியும்!

"முப்பது வருடப் போராட்ட காலத்தில் 'அடுத்து என்ன நடக்கும்?" என்பதை யூகிப்பதில் தலைவர் ரொம் பவே கெட்டிக்காரர். கடைசிக் கட்ட நெருக்கடிகள் குறித்து, அவருக்குப் பல மாதங்களுக்கு முன்பே தெரியும். அதனால்தான், கடைசிவரை பதிலடித் தாக்குதல் நடத்தாமல், ஆயுதங்களைப் பதுக்குவதிலேயே குறியாக இருந்தார். இரண்டு முறை மட்டுமே தாக்குதல் நடத்திய புலிகளின் டாங்கிப் படைகள், அதன்பிறகு எங்கு போயின என்பது யாருக்கும் தெரியாது..!

அதேபோல் புலிகளின் விமான பாகங்களும் மிக பத்திரமான இடத்தில் பதுக்கப்பட்டிருக்கின்றன. கிளிநொச்சி பிடிபட்டபோதே, புலிகளின் அனைத்துத் துறை தளபதிகளையும் கலந்து ஆலோசித்த தலைவர், 'நம்முடைய பின்னடைவு உறுதியாகிவிட்டது. உலக நாடுகளின் பெரிய ஆயுத உதவிகளை நாம் சமாளிப்பது கடினம். ஆனாலும், தற்காப்புத் தாக்குதலின் மூலமாக மக்களைக் காப்போம். அதற்கிடையில், நம் படைப் பிரிவுகள் முக்கிய ஆயுதங்களைப் பதுக்கவும், காடுகளுக்குள் ஊடுருவவும் தயாராக வேண்டும். கட்டளைக்காகக் காத்திருக்காமல், ஒவ்வொரு தளபதியும் தாக்குதல் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்!" என்று சொல்லி இருக்கிறார்.

அதன்படி கிளிநொச்சி, மாத்தளன், அம்பாறை, முல்லைத் தீவு, கஞ்சிகுடிச்சாறு உள்ளிட்ட பல பகுதிகளில் புலிகளின் படைப் பிரிவுகள் ஊடுருவியிருக்கின்றன. இப்போது என்றைக்குமே இல்லாத மிகப் பெரிய இழப்பை தலைவர் சந்தித்திருந்தாலும், மீட்சிக்கான பல திட்டங்களையும் அவர் ஏற்கெனவே செயல்படுத்தி வைத்திருக்கிறார்.

கடைசி வரை களத்தில் நின்ற 'கரிகாலன்!'

மக்களுக்கும் போராளிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கும் விதமாகக் கடைசி வரை களத்தில் நின்று போர் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார் தலைவர். இந்திய உளவுத் தகவலை வைத்து, தலைவர் களத்தில் நிற்கும் விஷயத்தை அறிந்து கொண்ட சிங்கள ராணுவம், சில நாட்களுக்கு முன் தலைவர் நின்ற ஏரியாவில் நச்சுக் குண்டு வீசியது. கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட முக்கியமான போராளிகள் பலரும் அதில் கருகிப்போனார்கள்.

ஆனால், முந்நூறு பேர்கொண்ட போராளிக் குழு, தலைவரை சர்வபத்திரமாக மீட்டெடுத்தது. அதன் பின்னரும் களத்திலிருந்து வெளியேற தலைவர் விரும்பவில்லை. பொட்டு அம்மான், சூசை ஆகிய தளபதிகளின் வற்புறுத்தலுக்குப் பிறகு, அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசனிடம் பலவிதமான ஆலோசனைகளையும் வழங்கிவிட்டு, தலைவர் முள்ளிவாய்க்காலைவிட்டு வெளியேறினார்.

சார்லஸ் என்ற குலக் கொழுந்து!

தனக்கு மாற்றாக மகன் சார்லஸ் ஆண்டனியை போராளிகளுடன் முள்ளிவாய்க்காலில் தங்கவைத்திருந்தார்.முள்ளிவாய்க்காலில் தங்கி இருந்த மக்கள், அப்போதுதான் முதல்முறையாக சார்லஸைப் பார்த்திருக்கிறார்கள். கடைசிநேர நெருக்கடிகள் மிகுதியான போது புலித் தளபதிகள் மக்களிடம், 'நீங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் போய்விடுங்கள். ரசாயன குண்டு களை வீசி மொத்தமாக அழிக்கப்போகிறார்கள்!' என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், 'மண்ணோடு மண்ணானாலும் நாங்கள் ராணுவக் கட்டுப்பாட்டுக்குப் போகமாட்டோம்' என்று உறுதியாகச் சொன்ன மக்கள், புலிகளிடம் சயனைடு குப்பிகளைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரத்தில் ராணுவத்தின் தாக்குதல் தீவிரமாக, அதனை எதிர்த்து நின்ற மூவாயிரத்துக்கும் அதிகமான போராளிகள் பெரிய அளவில் காயப்பட்டார்கள். இருநூறுக்கும் மேலான போராளிகள் இறந்துபோனார்கள்.

கடைசி நாளில்…

அடுத்தபடியாக மக்கள் மீது ராணுவம் கொடூரத் தாக்குதலை நடத்தத் திட்டமிட… அதைத் தடுக்க முடியாமல் நடேசன் உள்ளிட்ட புலிகளின் பிரதிநிதிகள் திண்டாடியிருக்கிறார்கள். அதன் பிறகு சிங்கள அரசு நடத்திய துரோக நாடகம்தான் புலிகளின் தளகர்த்தர்களை வீழ்த்திவிட்டது!' என்று நிறுத் தியவர்கள், கனத்த இதயத்தோடு அந்தக் கடைசி நிமிடங்களைச் சொல்லத் தொடங்கினார்கள். "மக்களையும் காயம்பட்ட போராளிகளையும் காப்பாற்ற சமாதானத்தைத் தவிர, வேறு வழி இல்லாத நிலை. அதனால் தமிழகத்தில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நடேசன்.

அவர்கள் மத்திய அமைச்சர் ஒருவர் மூலமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷேவிடம் நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையத் தயாராக இருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். 'ஒன்றரை வருடத்துக்கும் மேலாக புலிகள் பிடித்துவைத்திருக்கும் ராணுவ வீரர்களை முதலில் அனுப்பச் சொல்லுங்கள். அதன் பிறகு நடேசன் உள்ளிட்டவர்கள் சரணடையட்டும்' என்று ராஜபக்ஷே சொல்லி இருக்கிறார்.தங்கள் பிடியிலிருந்த ஏழு ராணுவ வீரர்களை விடுவித்த நடேசனும் புலித்தேவனும் ஜெனீவாவில் உள்ள செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் சிலரிடமும் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்கள்.

சித்திரவதைக்குள்ளான நடேசன்

அவர்களும் ராஜபக்ஷேவிடம் பேசி சரணடைய சம்மதம் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். தமிழகத்துத் தலைவர்களும், செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளும் கொடுத்த நம்பிக்கையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட புலிப் பிரதிநிதிகள் 18 பேர் சிங்கள ராணுவத்தின் முகாம் நோக்கி வெள்ளைக் கொடி பிடித்தபடி போயிருக்கிறார்கள்.

ஆனால், அப்போது நடேசனை மட்டும் சிறைப் பிடித்த ராணுவத்தினர், மற்ற அனைவரையும் சுட்டுக் கொன்றுவிட்டார்கள். நடேசனை கொடூரமாக சித்ரவதைப்படுத்தி தலைவரின் இருப்பிடம் குறித்துத் துளைத்தெடுத்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்தத் தகவலையும் பெற முடியவில்லை.

அந்த ஆத்திரத்தில் அவரையும் சுட்டுக் கொன்ற ராணுவத்தினர், காயம்பட்டுத் தவித்த மூவாயிரம் போராளிகளை சகட்டுமேனிக்கு சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இருபதாயிரத்துக்கும் அதிக மான மக்கள் மீது ரசாயன குண்டுகளை வீசி, மொத்தமாக பஸ்பமாக்கி இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் தங்கியிருந்த சார்லஸ் ஆண்டனியும் அதில் தப்பித்திருக்க வாய்ப்பில்லை.

அந்த உடல்…

ஈழத்தையே முழுவதுமாக அழித்த ராணுவத்தினர், உலகத் தமிழர்களின் நம்பிக்கையைத் தகர்க்கும் விதமாக தலைவரைக் கொன்றுவிட்டதாகவும் ஜோடிப்பு காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். தலைவரின் உடலை ஒத்த அந்த உடல், சூசைராஜ் என்கிற போராளியுடையது.

அவருடைய உடம்பில் மாஸ்க் பயன்படுத்தி தலைவரின் உருவத்தை ஜோடித்திருக்கிறது ராணுவம். தலைவர் பயன்படுத்தும் பிஸ்டல், பெல்ட் எப்படிப்பட்டது என்று அமைப்பிலிருக்கும் அனைவருக்குமே தெரியும். ஆனால், சாதாரண ரகத் துப்பாக்கியை அவர் வைத்திருந்தது போல ராணுவம் காட்டுகிறது.

மாவீரர் தினத்தில்… வருவார் !!!

ராணுவத்தின் ஜோடிப்பு இலங்கையில் நடக்க விருக்கும் தேர்தலுக்கு வேண்டுமானால் சாதகமாக இருக்கும். ஆனால், வருகிற நவம்பர் மாதம் 27-ம் தேதி 'வீரவணக்க' தினத்தில் நிச்சயமாக தலைவர் வீர உரையாற்றுவார்! காடுகளிலும் மக்களோடு மக்களாகவும் கலந்திருக்கும் போராளிகள், தலைவருக்குப் பக்கபலமாக மறுபடியும் படை திரட்டுவார்கள்!' என்கிறார்கள் உறுதி குறையாமல்.
 
source:sangamamlive
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பைல்களுக்கு மாற்று பெயர் தரம் - ரீநேமர்

 
 

பைல் ஒன்றுக்கு ரீ நேம் தருவது நம் விருப்பம் என்றால் உடனே பைல் பெயரில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ரீ நேம் (கீஞுணச்ட்ஞு) தேர்ந்தெடுத்து, புதிய பெயர் கொடுத்து அமைத்துவிடுவோம். இதையே அந்த பைலைத் தேர்ந்தெடுத்து பின் எப்2 அழுத்தி பெயர் உள்ள விண்டோ, மறு பெயருக்குத் தயாரானவுடன் புதிய பெயரை டைப் செய்து அமைக்கலாம். ஆனால் பல பைல்களுக்கு மொத்தமாக பெயர் மாற்ற என்ன செய்யலாம்? அதே போல சில டைரக்டரிகளில் பரவிக் கிடக்கும் பைல்களுக்குப் பெயர் மாற்ற என்ன செய்திடலாம்? இதற்கான வழிகளைத் தருகிறது 

அட்வான்ஸ்டு ரீ நேமர் (Advanced Renamer)  என்ற இலவச புரோகிராம். இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்திட நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி :http://aren.hulubulu.net/ இந்த புரோகிராம் எட்டு வகையான வழிகளில் பைல்களுக்குப் புது பெயர் அளிக்கிறது. ஏற்கனவே பைல்களுக்கு உள்ள பெயர்களின் அடிப்படையில், பெயர்களில் சில சொற்களைச் சேர்க்கலாம்; சிலவற்றை எடுக்கலாம்; சின்ன பெரிய எழுத்துக்களை மாற்றலாம்; அல்லது முற்றிலும் புதிய பெயரைத் தரலாம்.

டிஜிட்டல் படங்களைக் கையாள்பவர்களுக்கு இந்த புரோகிராம் மிகவும் உதவி தருகிறது. குறிப்பிட்ட நிகழ்வு அல்லது வகை பட பைல்களை ஒரு தலைப்பில் கொண்டு வந்து, அவை ஒவ்வொன்றுக்கும் வித்தியாசம் காணும் வகையில் பெயர்களை இது தருகிறது. ஒரு நிகழ்வில் எடுக்கும் அனைத்து போட்டோக்களையும் அவற்றை அடையாளம் காணும் வகையில் இது பெயர்களைச் சூட்டுகிறது. பைல்களின் பண்புகளையும் இதில் மாற்றலாம்; எப்போது ஒரு பைலை பார்த்தோம்; எடிட் செய்தோம்; உருவாக்கினோம் என்பதற்கான அட்ரிபியூட்டுகளையும் இதில் மாற்றலாம். ஆங்கிலம் மட்டுமின்றி மேலும் பல ஐரோப்பிய மொழிகளிலும் பெயர் மாற்றத்தை மேற்கொள்ளலாம். இந்த புரோகிராம் விண்டோஸ் 2000 தொடங்கி அதன் பின் வந்த விஸ்டா வரையிலான தொகுப்புகளில் இயங்குகிறது. இதன் அண்மைக் காலத்திய தொகுப்பாக ரீநேமர் பதிப்பு 02.57.00.00 கிடைக்கிறது. இந்த தொகுப்பின் போர்ட்டபிள் பதிப்பு ஒன்றும் இதன் தளத்தில் தரப்படுகிறது. இதனை எந்த பிளாஷ் டிரைவிலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். இந்த தளத்தில் மிக விரிவாக அனைத்து உதவிக் குறிப்புகளும் பல தலைப்புகளிலும் தரப்படுகின்றன.



செல் செலக்ஷன் நீட்டிக்கும் வழிகள்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் ஒரு செல்லைத் தேர்ந்தெடுக்கிறோம். பின்னரே இன்னும் பல செல்களைத் தேர்ந்தெடுத்திருக்கலாமே என்று எண்ணுகிறோம். இந்த எக்ஸ்டென்ஸன் ஒரு செல்லாக இருக்கலாம்; அல்லது முழு வரிசையாக இருக்கலாம்; அல்லது வரிசையில் உள்ள கடைசி தகவல் உள்ள செல்லாக இருக்கலாம். வெவ்வேறு வகையான இந்த நீட்டிப்புகளுக்கான ஷார்ட் கட் கீகளை இங்கு காணலாம்.
1. ஒரு செல் நீட்டிக்க – SHIFT+arrow key



2. அதே நெட்டு வரிசை (column) அல்லது படுக்கை வரிசையில் (row)  உள்ள டேட்டா உள்ள கடைசி செல்வரை – CTRL+SHIFT+arrow key



3. அந்த படுக்கை வரிசையின் தொடக்கம் வரை – SHIFT+HOME



4. ஒர்க் ஷீட்டில் தொடக்கம் வரை நீட்டிக்க CTRL+SHIFT+HOME



5. ஒர்க் ஷீட்டில் கீழாக வலது மூலையில் உள்ள பயன்படுத்திய செல் வரை நீட்டிக்க CTRL+SHIFT+END



6. மேலும் கீழாக உள்ள ஒரு ஸ்கிரீன் வரை உள்ள செல்களுக்கு நீட்டிக்க – SHIFT+PAGE DOWN



7. மேலும் மேலாக உள்ள ஒரு ஸ்கிரீன் வரை உள்ள செல்களுக்கு நீட்டிக்க – SHIFT+PAGE UP



8. இந்த நீட்டிக்கும் வசதியை அமல்படுத்தவும் நிறுத்தவும் – F8

9. இந்த தேர்வுடன் இன்னொரு ரேஞ்ச் செல்களை இணைக்க SHIFT+F8 அழுத்த வேண்டும். இதனை அழுத்தும் முறை குறித்துப் பார்க்கலாம். இதன் பின் நீங்கள் இணைக்க விரும்பும் செல்களின் ரேஞ்ச் தொடங்கும் இடத்தில் ஆரோ கீகள் மூலம் கர்சரைக் கொண்டு செல்லவும். எப் 8 கீயை அழுத்தவும். அதன்பின் ஷிப்ட் + ஆரோ கீகள் மூலம் இணைக்க விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும். 
10. கமெண்ட் உள்ள அனைத்துசெல்களையும் தேர்ந்தெடுக்க CTRL+/ தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதிக்குள் எப்படி கர்சரை நகர்த்தலாம் என்பது குறித்தும் இங்கு பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதிக்குள் மேலும் கீழுமாகச் செல்ல – Enter தொகுதிக்குள் கீழிருந்து மேலாகச் செல்லShift+Enter அழுத்தலாம்.

இடது வலதாகச் செல்ல, அல்லது ஒரே ஒரு நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால் கீழாக ஒரு செல் செல்ல – TAB வலது இடதாகச் செல்ல, அல்லது ஒரே ஒரு நெட்டு வரிசை தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தால்மேலாக ஒரு செல் செல்ல – Shift+TAB தேர்ந்தெடுக்கப்பட்ட செல் தொகுதியில் கடிகாரச் சுற்று வழியில் ஒவ்வொரு மூலைக்கும் செல்ல Ctrl+period வலது பக்கம் தொடர்ச்சியாக இல்லாத செல்களுக்கிடையே செல்ல – Ctrl+Alt+ Right Arrow இடது பக்கம் தொடர்ச்சியாக இல்லாத செல்களுக்கிடையே செல்ல – Ctrl+Alt+ Left Arrow



எழுத்து வகைக்கு ஒரு ஷார்ட் கட்
உங்களுடைய வேர்ட் டாகுமெண்ட்களில் குறிப்பிட்ட ஒரு எழுத்துவகையினை அடிக்கடி பயன்படுத்த எண்ணுகிறீர்கள். அதற்கு என்ன செய்கிறீர்கள்? ஒவ்வொரு முறையும் பாண்ட் கட்டம் சென்று, கிளிக் செய்து, பின் கிடைக்கும் பாண்ட் பட்டியலில் நீங்கள் பயன்படுத்த விரும்பும் பாண்ட்டினைத் தேர்ந்தெடுத்துப் பின் தொடர்ந்து டாகுமெண்ட் அமைக்கிறீர்கள். இதற்குப் பதிலாக, அந்த பாண்ட்டுக்கு ஒரு ஷார்ட் கட் கீ அமைத்து, அதனை அழுத்தி உடனே பாண்ட்டைப் பெறலாம். 
1. Tools  கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Customize  தேர்ந்தெடுக்கவும்.
2. கிடைக்கும் விண்டோவில் Commands  டேப்பில் கிளிக் செய்திடவும். பின் கீ போர்ட் பட்டனில் கிளிக் செய்திடுங்கள்.
3. இதில் Categories என்பதில் ஊணிணtண் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. பாண்ட்ஸ் கீழாக, நீங்கள் அடிக்கடி பயன்படுத்த விரும்பும் எழுத்து வகையினைத் தேர்ந்தெடுக்கவும். 
5. அடுத்து Press New Shortcut Key  என்ற டெக்ஸ்ட் பாக்ஸில் உங்கள் கர்சரை அமைக்கவும். 
6. அடுத்து [Alt]CS என்பதை அழுத்தவும். 
7. அடுத்ததாக Assign என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். 
8. பின் இருமுறை கிளிக் செய்து வெளியேறவும்.
இதில் ஒன்றை உணர்ந்து செயல்படவும். ஏற்கனவே ஷார்ட் கட் கீயாக உள்ள கீ இணைப்பை இதற்கு தேர்ந்தெடுக்கக்கூடாது



source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல

ரஷியாவிடம் உள்ள ஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல: அமெரிக்க நிபுணர் தகவல்
 
லண்டன், செப். 29-
 
2-ம் உலகப் போரில் ஜெர்மனி தோல்வி அடைந்ததும் அதன் அதிபர் ஹிட்லர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந் தேதி அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.
 
ஜெர்மனியில் புக்ரைன் என்ற இடத்தில் இருந்த பாதாள அறையில் அவர் சயனைடு மாத்திரை விழுங்கி பின்னர் தன்னைத்தானே சுட்டு கொன்றதாக தகவல் வெளியானது. பின்னர் அவரது உடல் எரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
 
அந்த பாதாள அறையில் இருந்து ரஷிய படைகள் ஹிட்லர் மண்டை ஓட்டை கைப்பற்றினர். அது இப்போதும் ரஷியாவிடம் இருக்கிறது. அதில் துப்பாக்கி குண்டு பாய்ந்த ஓட்டையும் உள்ளது.
 
அந்த மண்டை ஓட்டை அமெரிக்காவை சேர்ந்த தொல்லியல் நிபுணர் ரிக் பல்லேன் டோனி ஆய்வு செய்தார். டி.என்.ஏ.பரி சோதனையும் நடத்தினார். இதில் அந்த மண்டை ஓடு ஹிட்லருடையது அல்ல என்று தெரிய வந்துள்ளது.
 
இது பற்றி அவர் கூறியதாவது:-
 
இந்த மண்டை ஓடு பெண்ணுக்குரியது. ஆண்கள் மண்டை ஓடு கடினமானதாகவும், பெண்கள் மண்டை ஓடு மெல்லியதாகவும் இருக்கும். இது மெல்லியதாக இருக்கிறது. எனவே இந்த மண்டை ஓடு பெண்ணுக்குரியது.
 
ஹிட்லர் இறந்த போது அவருக்கு வயது 56. ஆனால் மண்டை ஓட்டை ஆய்வு செய்ததில் அதற்கு 40 வயதுக்கும் குறைவாக இருக்கிறது. எனவே இது ஹிட்லர் மண்டை ஓடு அல்ல என்பது உறுதியாக தெரிகிறது.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
ஹிட்லர் மண்டை ஓடு உண்மையானது அல்ல என்று கூறுவதால் அவர் உண்மையிலேயே பாதாள அறையில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு எங்கும் சென்று விட்டாரா? என்ற சர்ச்சை கிளம்பி இருக்கிறது

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP