சமீபத்திய பதிவுகள்

பிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கணிப்பு முடிவுகள் - 30936 வாக்குகள்: "தமிழீழமே இறுதித் தீர்வு"

>> Sunday, December 13, 2009

 
பிரான்சில் 12ம் 13ம் திகதிகளில் 37வாக்குச் சாவடிகளில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தது.

தற்போது வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு முடிவடைந்துள்ளன.

தற்போது கிடைத்த இறுதித் தகவலின் படி,

31148 வாக்குகள் வாக்களிக்கப்பட்டதாகவும் அதில் 30936 வாக்குகள் "ஆம்" என வாக்களிக்கப்பட்டுள்ளது எனவும்,

மேலும், 43 வாக்குகள் மட்டுமே "இல்லை" என வாக்களிக்கப்பட்டதாகவும், 169 வாக்குகள் செல்லுபடியற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனையை புரிந்து, பிரான்ஸ் வாழ் புலம்பெயர் தமிழர்கள் மீண்டுமொரு முறை ஆணித்தரமாக சர்வதேசத்துக்கு "தமிழீழமே இறுதித் தீர்வு" என எடுத்துக்கூறியுள்ளனர்.

இன்று காலை 11மணிக்கு தமிழீழ மக்கள் பேரவையால் நடத்தப்படும் ஊடகவியலாளர்கள் மாகாநாட்டில் மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும் என தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் நடைபெற்றுள்ள இந்த வாக்கெடுப்பு மிகப்பெரும் வெற்றியடைந்துள்ளதை வாக்கெடுப்பின் முடிவுகளில் இருந்து அறியக்கூடியதாக இருப்பதாகவும், இது ஏனைய நாடுகளில் நடைபெறப்போகும் வாக்கெடுப்பிற்கும் முன் உதாரணமாக இருக்கும் எனவும் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.


source:sankathi


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கூகுல் போட்டியில் வென்ற சிறுவன்

 
lankasri.com
கூகுல் தேடியந்திரத்தில் இன்று தோன்றும் லோகோ சித்திரம் சிறப்பாக இருப்பதாக நினைத்தால் புரு பிராதாப் சிங்கிற்கு ஒரு சபாஷ் போடுங்கள்.

கூகுல் தனது லோகோவை அடிக்கடி மாற்றி அமைத்து வருகிறது.இந்த சித்திரங்கள் டூடுல் என்று அழைக்கப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன் கூகுல் லோகோ சித்திரத்திற்கான ஒரு போட்டியை அறிவித்தது.இந்த போட்டியில் பங்கேற்றவர்களில் குர்கோவன் நகரைச்சேர்ந்த புரு பிராதாப் சிங் வெற்றி பெற்றிருக்கிறார்.அவர் உருவாக்கிய சித்திரமே கூகுல் இந்திய முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த சித்திரம் முகப்பு பக்கத்தில் நாள் முழுவதும் காட்சியளிக்கும்.

lankasri.com 


புரு இந்தியாவின் தேசியப்பறவையான மயில் ,மற்றும் அம‌ர் ஜவான் ஜோதி ஆகியவற்றை கொண்டு லோகோவை வடிவமைத்துள்ளார்.கூகுலில் உள்ள ஒ என்னும் எழுத்தை நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய சாதனையாக வரைந்துள்ளார்.

நமது காலாச்சாரம் மற்றும் சாதனைகளை பிரதிபலிக்கும் இந்த லோகோ பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்படுள்ளது பொருத்தமானது தான்.

பல்வேறு மதங்களின் சங்கமமாக இருப்பதே இந்த தேசத்தின் சிறப்பமசம் என்று அவர் பெருமிதத்தோடு கூறிப்பிட்டுள்ளதும் பாரட்டத்தக்கது

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் எனப்படும் பாலா அண்ணா- ஆவணப்பதிவு

StumbleUpon.com Read more...

புலி தலைவர்களை கொல்ல உத்தரவிட்டது யார்? இலங்கை மாஜி தளபதி அதிர்ச்சி தகவல்

Front page news and headlines today : ""இறுதிக்கட்ட போரின் போது ராணுவத்திடம் சரண் அடைந்த நடேசன் உள்ளிட்ட புலித் தலைவர்களை சுட்டுக் கொல்லும்படி பாதுகாப்பு செயலர் கோத்தபயா ராஜபக்ஷே தான், உத்தரவிட்டார்,'' என இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.



இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதியும், அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் போட்டியிடுபவருமான சரத் பொன்சேகா "சண்டே லீடர்' பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி: இலங்கையில் புலிகளுக்கு எதிராக இறுதிக்கட்ட போர் நடந்தபோது, அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் நடேசன், புலித் தேவன், ரமேஷ் உள்ளிட்டோரும், அவர்களது குடும்பத்தினரும் சரண் அடைய முன்வந்தனர். ஆனால், இதுகுறித்த தகவல்கள் எதுவும், அப்போது போரை தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த எனக்கு தெரிவிக்கப்படவில்லை.புலித் தலைவர்கள், நார்வே தலைவர்கள், அதிபரின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷே ஆகியோருக்கு இடையே தான், இந்த பேச்சுவார்த்தை நடந்தது. புலித் தலைவர்கள் சரண் அடைவது குறித்த விவரத்தை பின்னர் பசில் ராஜபக்ஷே, பாதுகாப்புச் செயலர் கோத்தபயா ராஜபக்ஷேயிடம் தெரிவித்தார்.



இதையடுத்து, சரண் அடையும் புலித் தலைவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டாம் என்றும், புலித் தலைவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் சுட்டுக் கொல்லும்படியும் கோத்தபயா ராஜபக்ஷே, ராணுவ அதிகாரி பிரிகேடியர் ஷவேந்திரா சில்வாவுக்கு உத்தரவிட்டார்.இதையடுத்து, அவர் கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். எந்த ஒரு நிலையிலும், இது குறித்து எந்த தகவலும் எனக்கு கூறப்படவில்லை.இவ்வாறு சரத் பொன்சேகா கூறியுள்ளார்.பொன்சேகாவின் குற்றச்சாட்டை இலங்கை மனித உரிமை துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே மறுத்துள்ளார்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கருணாநிதியின் பாசாங்கு அறிக்கை தொடர்பாக "நக்கீரன்" வெளியிட்டுள்ள விளக்கம்

 

கருணாநிதிக்கு அறளை பிறந்துவிட்டது என்பதற்கு அவரது இந்த அறிக்கை நல்ல சான்று. இல்லை பாசாங்கு செய்கிறார்.

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் உள்ள உறவை எப்போதோ விலக்கிக் கொண்டுவிட்டோம். விடுதலைப்புலிகளோடான அணுகுமுறையில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் அணுகுமுறைதான் எங்களது அணுகுமுறை என்று நாக்கூசாமல் - வெட்கமோ துக்கமோ சிறிதளவுமின்றி - தமிழக சட்டசபையில் பேசிய கருணாநிதி இப்போது  "விடுதலைப் புலிகளின் படையில் நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு, தளபதிகளுக்கு, தலைவர்களுக்கு தமிழகத்தின் சார்பில் நாமே வலுவில் சென்று ஆதரவு வழங்கினோம். அது மிக லேசாகவே தெரிந்தது" எனப்  புதுக் கதை பேசுகிறார்.

வி.புலிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு கட்டளை போட்டு காவல்துறை கைது செய்த நூற்றுக் கணக்கான வி.புலிகள் என அய்யப்பட்டவர்களை இன்றும் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்து அழகு பார்க்கும் கருணாநிதி "ஆதரவு வழங்கினோம்" என அப்பட்டமான பொய் சொல்கிறார்.

இப்போது கருணாநிதிக்கு ரணில் விக்கிரமசிங்க மீது அளவுகடந்த பாசம் பொத்துக் கொண்டு வந்திருக்கிறது. அவரைப் புலிகள் தோற்கடித்துவிட்டார்கள் என்று கருணாநிதி ஒப்பாரி வைக்கிறார்.

இந்த விக்கிரமசிங்கவும் அவரது கட்சிக்காரரும்தான் கருணாவை விலைபேசி புலிகளிடம் இருந்து பிரித்தார்கள். தேர்தலின் போது அதைச் சொல்லித்தான் பரப்புரை செய்தார்கள். 

இந்த ரணில் விக்கிரமசிங்கதான் .  தீர்வு எதனையும் முன்வைக்காமல் பேச்சுவார்த்தையை இழுத்தடித்தவர். 2002 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் நாள் ஒஸ்லோவில் நடந்த மாநாட்டில் விடுதலைப்புலிகள் உள்ளக தன்னாட்சி யோசனையை முன்வைத்தார்கள். அதனை அவரது பதவி காலத்தில் நடைமுறைப்படுத்த ஒரு சின்ன அசைவைக்கூடச் செய்யாதவர்.

விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை இந்தியாவின் துணையோடு மூழ்கடித்தவர். அந்தச் சாதனையை  நாடாளுமன்றத்தில் பெருமையாகப் பேசியவர். 

மேற்குநாடுகளின் செல்லப்பிள்ளையாக விளங்கிய ரணில் விக்கிரமசிங்க மேற்குநாடுகளின் துணையோடு விடுதலைப்புலிகளை வீழ்த்த சதிசெய்தார். விடுதலைப் புலிகளை சிக்க வைக்க வலை பின்னினார்.

இது போன்ற காரணங்களின் அடிப்படையில்தான்  தேர்தலை விடுதலைப்புலிகள் புறக்கணித்தார்கள்.  இரண்டு பிசாசுகளில் எந்தப் பிசாசும் வேண்டாம் என்பதே அவர்களது கணிப்பாக இருந்தது. ஏனென்றால் ரணில் விக்கிரமாசிங்கவும் ராஜபக்சவும்  அடிப்படையில் சிங்கள - பெளத்த இனமத வெறியர்கள்.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு இந்திய அரசு செய்த சதிதான் காரணம். அதில் பங்காளியாக இருந்த திமுக கட்சியும் காங்கிரஸ் கட்சியும்தான் காரணம். இந்தியா மட்டும் ஒதுங்கி இருந்திருந்தால் விடுதலைப்புலிகளை போர்க்களத்தில் வீழ்த்தியிருக்க முடியாது.

இதனை நேற்றுக் கூட இலங்கை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய  ராஜபக்ச பகிரங்கமாகச் சொல்லியிருக்கிறார். இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான் என மீண்டும் சத்தியம் செய்திருக்கிறார். இதோ கருணாநிதிக்கு பல்லக்குத் தூக்கும்  விடுதலையில் (17-11-2009)  வந்த செய்தி.

கொழும்பு, நவ. 17_- விடுதலைப் புலிகளுக்கு எதிரான கடைசிக்கட்ட போரின்போது இந்தியா அளித்த ஆதரவு காரணமாகவே இலங்கை மீதான உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்தது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயல-ரும், அதிபர் ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர், இந்தியா அளித்த ஆதரவினால்தான் போரை நிறுத்தக்-கோரும் உலக நாடுகளின் நிர்ப்பந்தம் குறைந்து, தொடர்ந்து தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் நெருங்கிய நட்பு நாடு இந்தியா என்று கூறிய கோத்தபாய, கடந்த நான்காண்டுகளில் இந்த நட்பு மேலும் நெருக்கமானதாகவும், புலிகளுக்கு எதிரான போரில் இந்தியா பல வகைகளில் உதவிபுரிந்ததாகவும் தெரிவித்தார்.

எனவேதான் கருணாநிதியின் கைகளில் தமிழீழ மக்களது குருதி தோய்ந்திருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறோம். வரலாறு தலைவர் பிரபாகரனை தமிழன் மானம் காத்த சுத்த வீரன் என்று போற்றும். கருணாநிதியை தமிழர்களை எதிரிக்குக் காட்டிக்கொடுத்த விபீடணன் என்று தூற்றும். வரலாற்றின் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும்.

நக்கீரன்

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP