55 வயதில் கிடைத்தது அரசு பள்ளி ஆசிரியை பணி
>> Thursday, January 7, 2010
கடந்த 2007ம் ஆண்டு, இறுதியில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து ஆசிரியர் பணிக்கான நேர்முக தேர்வுக்கான அழைப்பு சாவித்திரிக்கு அனுப்பப் பட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மேக்டலின் சாவித்திரி, அனகாபுத் தூர், அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 55. வரும் 2011ம் ஆண்டு மே மாதம் அவர் பணி ஓய்வு பெற உள்ளார். மொத்தம் 3 ஆண்டுகள் 3 மாதம் மட்டுமே அரசு பள்ளியில் அவர் பணியாற்றுவார். இது குறித்து, ஆசிரியை மேக்டலின் சாவித்திரி கூறுகையில், "செங்குன்றத்தில் வசித்து வருகிறேன். கணவர் அரசு பள்ளி ஆசிரியர். நான் பி.எட்., முடித்த பின், தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலைக்கு சேர்ந் தேன். ஒரே பள்ளியில் 20 ஆண்டுகளாக பணிபுரிந் தேன். பொதுவாக, தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், படித்த பெற்றோர் களை பெற்றிருப்பர்; வசதியான வீட்டு குழந்தைகளாகவும் இருப்பர். அரசு பள்ளியில் தான் ஏழை, எளிய வீட்டு குழந்தைகள் படிக்கின்றனர். இதனால், ஒரு சில ஆண்டுகளாவது அரசு பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு. இதனால் தான் தவறாது வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று, என் பதிவை புதுப்பித்து வந் தேன். அதன் பலனாக கடந்த ஆண்டு பணி கிடைத்தது' என்கிறார் பெருமையாக. source:dinamalarசென்னை: அரசு பள்ளி ஆசிரியையாக பணிபுரிய, 55 வயதில் வாய்ப்பு கிடைத்துள்ள ஆசிரியை மேக்டலின் சாவித்ரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சென்னை அனகாபுத்தூர் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் அந்த ஆசிரியை மேக்டலின் சாவித்ரி; சொந்த ஊர் தூத்துக்குடி. தென்காசியில் பள்ளி படிப்பை முடித்த சாவித்ரி, தூத்துக்குடியில் கல்லூரி படிப்பை முடித்தார். கடந்த 1981ம் ஆண்டு சிதம்பரம், அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் தொலைதூர கல்வி திட் டத்தில் பி.எட்., பட்டம் பெற்றார். கடந்த 1984ம் ஆண்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தார். படிப்பை முடித்துவிட்டு தனியார் பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வந் தாலும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த நாளில் இருந்து சாவித்திரி அரசு பள்ளியில் ஆசிரியை வேலையையும் எதிர்பார்த்து காத்திருந்தார். அவரது எதிர்பார்ப்பு 24 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது.
--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment