BREAKING NEWS: தமிழீழ தேசியத் தலைவரைப் போலவே உள்ள ஒருவர் – வீடியோ ஆதாரம்
>> Friday, January 22, 2010
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் போரில் கொல்லப்பட்டதாக சிங்கள அரசு அறிவித்தமை, பொய்யான சேதி என்று முகத்தில் அறைந்தாற்போல் கூறும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. இக் காணொளியைப் பதிவு செய்தோர் சிங்கள இராணுவத்தினர் ஆவர். ஒட்டுசுட்டான் பகுதியை சிங்கள இராணுவப் படையினர் கைப்பற்றியபோது எடுக்கப்பட்ட படம் இது.
இப்படத்தில், சிங்களப் படையினரில் ஒருவராக வட்டத் தொப்பி அணிந்த மனிதர் நிற்கிறார். அவரது தோற்றம் தலைவர் பிரபாகரன் போலவே உள்ளது.
மேலும், தலைவர் பிரபாகரனது உடல் என சிங்களர் காட்டிய உருவம் இத் தொப்பித் தலையரது உருவம் போல் தெரிகிறது. இக்காணொளியைத் தங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.
"இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே பேசிக் கொண்டிருந்த போது தான் பிரபாகரன் கொல்லப்பட்டார். பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட போது அவர் வேறு உடையில்தான் இருந்தார். நாங்கள் தான் விடுதலைப் புலிகளின் சீருடையை அவரது உடலில் அணிவித்தோம்" என்று இறுதி கட்டப் போரின்போது பணியில் ஈடுபட்டிருந்த 53வது படைப் பிரிவின் தளபதியான கமல் குணரத்ன ஏற்கெனவே தெரிவித்திருந்தார். லங்கதீப் என்ற சிங்கள இதழுக்கு அளித்தப் பேட்டியில் அவர் அதனை தெரிவித்திருந்தார். இந்நாள் வரை அதைனை அவர் மறுக்கவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழீழ தேசியத் தலைவரைப் போலவே விமலன் என்ற போராளி படைக்குள் இருந்ததாகவும் சிலா கூறுகின்றனர். சிங்கள இராணுவத்தை திசைத் திருப்ப தமிழீழ புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவரது சடலத்தைக் கூட அவ்வாறு விட்டுச் சென்றிருக்க முடியும் என்றும் அவர்கள் கணிக்கின்றனர்.
source:namthesam--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment