சமீபத்திய பதிவுகள்

பாகிஸ்தானில் இந்து வாலிபர் கடத்தல் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்

>> Wednesday, February 24, 2010

  

பெஷாவர், பிப்.24-

பாகிஸ்தானில் மலைவாசிகள் அதிக வசிக்கும் பெஷாவர் பகுதியில் சுமார் 40 நாட்களுக்கு முன் சில சீக்கியர்கள் தலீபான் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை விடுதலை செய்ய ரூ.3 கோடி கேட்டு மிரட்டல் விடுத்து இருந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பணய தொகை கொடுப்பதற்கான காலக்கெடு முடிந்ததால் அவர்களில் 2 பேரை தலையை துண்டித்து படுகொலை செய்தனர். இன்னும் 2 முதல் 4 சீக்கியர்கள் தீவிரவாதிகளிடம் பணய கைதிகளாக இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தலீபான்கள் ஆதிக்கம் மிகுந்த அதே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவில் இந்து வாலிபர் ஒருவர் கடத்தப்பட்டு உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவரது பெயர் ராபின் சிங். கம்ப்ïட்டர் என்ஜினீயரான அவரை பல்கலைக்கழக சாலையில் போய் கொண்டிருந்த போது கடத்திய தீவிரவாதிகள், அவரை விடுதலை செய்ய வேண்டுமானால் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்து உள்ளனர். ராபின்சிங் கடத்தப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவரை பத்திரமாக மீட்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.


source:dailythanthi

--
www.thamilislam.co.cc

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP