சமீபத்திய பதிவுகள்

இஸ்லாமிய மதபோதகர் மீது பகீர் குற்றச்சாட்டு

>> Sunday, June 13, 2010




                     ர்ஹாவுக்கு வரும் பெண்களை வசியம் பண்ணி... அவர்களை தன் ஆசைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், சிறுவர்களையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி அவர்களது உடல் நலத்தையும் மன நலத்தையும் கெடுக்கிறார்' - இப்படியாக காவல்துறைக்கு பகீர் குற்றச் சாட்டுகள் போக... அந்த இஸ்லாமிய மத போதகரை குறிவைத்திருக்கிறது போலீஸ்.

சென்னையில் இருந்து பாண்டிச் சேரிக்குப் போகும் வழியில் கிழக்குக் கடற் கரைச் சாலையில் இருக்கிறது கோவளம். இங்கு நபிகள் நாயகத்தின் நேரடி சீடரான தமீம் அன்சாரி அடக்கம் ஆகியிருக்கும் தர்ஹா அமைந்திருக்கிறது. முஸ்லிம்களும் இந்துக்களும் பெருமளவில் வந்து வழிபடும் இந்த பிரபல தர்ஹாவின் பக்கத்திலேயே... 'போட்டியாக மஜ்லீஸ் மதி ரசூலுல்லா தைக்கா ஷெரிப்' என்ற பெயரில் ஏ.சி.அறைகளுடன் கூடிய இஸ்லாமிய ஆசிரமத்தை நடத்திவருகிறார் ஷாகுல் ஹமீது. இவர் நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர். சர்க்கார் வாப்பா என இஸ்லாமியர்களால் மிகுந்த மரியாதையோடு அழைக்கப்படும் இந்த ஷாகுல் ஹமீது மீதுதான் மேற்படி குற்றச்சாட்டுக்கள் எழுந்து பலத்த பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஆறடி உயரம், பருமனான தேகம், சிவந்த நிறம், உருது, அரபி, பாரசிகம் ஆகிய மொழிகளில் புலமை, குர்ரானில் தேர்ச்சி என பலரையும் வியப்பில் ஆழ்த்திவந்த இந்த 40 வயதுக்காரரை இப்போது வேறுபார்வை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோவளவாசிகள்.

கோவளம் தர்ஹாவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும் நக்கீரன் வாசகருமான அன்சர் பாஷாவிடம் இந்த விவகாரம் குறித்து நாம் கேட்டபோது """இந்த சர்க்கார் வாப்பா மீது 2008-லேயே பாலியல் புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து கோவளம் போலீஸ் எங்கள் ஜமாத்தினரையும் தர்ஹா நிர்வாகிகளையும் அழைத்து விசாரித்தார்கள். நாங்கள் எங்களுக்குத் தெரிந்த விசயங்களை... தெரிவித்துவிட்டு வந்தோம்'' என்றார்.

இது குறித்து மேலும் சிலரிடம் விசாரித்தபோது, ""இவர் மீது பல மன்மத புகார்கள் -குறிப்பா கல்லூரி நடத்தும் ஒரு இஸ்லாமியத் தொழிலதிபரின் குடும்பத்தில் இருக்கும் பெண்களிடம் இவர் நடந்துகொண்ட முறை யால் அவர்கள் தந்த புகார்தான் 2008-ல் போலீஸுக்கு வந்தது. பெரிய குடும்ப விவகாரம் என்பதால் இதை சீரியஸா எடுத்துக்கிட்டு விசாரிச்சாங்க. ஆனா மதத்தின் பெயருக்கு இழுக்குன்னுதான் அவரைப் பத்தி மழுப்பலான பதில்களைச் சொல்லியும் அவர் நல்லவர்னு எழுதிக் கொடுத்தும் சிலர் அவரைக் காப்பாத்தினாங்க'' என்றார்கள் ஆணித்தரமாய்.

கோவளம் மசூதி முத்தவல்லியும் ம.தி.மு.க. பிரமுகருமான காதர் பாஷாவிடம் இது குறித்து நாம் கேட்டபோது """இந்த சர்க்கார் வாப்பாவின் ஆசிரமத்தில் சென்னை மண்ணடியைச் சேர்ந்த முகமது பாருக் என்பவர் கொஞ்சகாலம் தங்கி இருந்தார். அவர்தான் இப்போது சர்க்கார் வாப்பா குறித்து புகார் கொடுத்திருக்கிறார். கேட்க அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது'''என்று முடித்துக் கொண்டார்.

காவல்துறையிடம் புகார் தந்திருக்கும் முகமது பாருக்கை மண்ணடியில் நாம் சந்தித்தபோது """நான் அவரோட ஆசிரமத்தில் கொஞ்சகாலம் தங்கி யிருந்தேன். அப்பதான் அவரோட செக்ஸ் ரீதியிலான நடவடிக்கை களைப் பார்த்து அதிர்ந்துபோனேன். மந்திரிச்சி தண்ணீர் கொடுப்பார். பிறகு கற்கண்டு கொடுப்பார். அதை சாப்பிடும் பெண்கள்... கண்செருகிப் போய்டுவாங்க. அப்புறம் அவர் இஷ்டப்படிதான் அவங்க நடக்கணும். இதேபோல்... சின்ன பையன்களைக் கூப்பிட்டு... என்னோட செக்ஸ் விளையாடினால் உங்களுக்கு ஆயுள் அதிகரிக்கும்னு தன் அறைக்குள் கூட்டிட்டுப்போய்டுவார். இந்தக் கொடுமைகளையெல்லாம் பார்த்து... இஸ்லாத்தின் மாண்பை இப்படி இந்த ஆள் கெடுக்கிறாரேன்னு கோபமாகித் தான்... அங்கிருந்து வந்தேன். இதை என் நண்பர்கள்ட்டசொல்லி நான் புலம்பினேன். அவங்கதான் என்னை போலீஸ்ல புகார் கொடுக்கச் சொன்னாங்க. இந்த சர்க்கார் வாப்பாவின் முகமூடியை நான் கிழிக்காம ஓயமாட்டேன்''''என்றார் எரிச்சல் மண்டும் குரலில்.

இந்த பகீர் புகார்கள் குறித்து சர்க்கார் வாப்பா எனப்படும் ஷாகுல் ஹமீதிடமே நாம் கேட்டபோது """அந்த முகமது பாருக்குக்கு அவர் மனைவி யைப் பிடிக்கலை. அதனால் அவளை பிரிச்சிவிட்ருங்கன்னு என்னிடம் கேட்டார். நான் இது சம்பந்தமா அவருக்கு எந்த உதவியையும் செய்யலை. அந்தக் கோபத் தில்தான் என்மீது கண்ட படி புகார்களைச் சொல் றார்'''' என முடித்துக் கொண்டார்.

""இங்க இருக்கும் நபிகளின் சீடரான தமீம் அன்சாரி தர்ஹாவுக்குப் போட்டியாக... சம்சுதீன் சங்கிலி வாலா என்ற சாமியார் ஒருவழிபாட்டு மையத்தை உருவாக்கி அதில் அமர்ந்துகொண்டு மந்திர மாயங்களைச் செய்துவந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சிஷ்யர்கள் சங்கிலி வாப்பா என்ற பெய ரில் இதே வேலையை இன்றுவரை செய்துக்கிட்டு இருக்காங்க. மந்திர மாயம், பில்லி சூன்யம் என்பதே இசுலாத்துக்கு விரோதமானது. இதைச் செய்பவர்களும் இசுலாத்துக்கு விரோதமானவர் களே'''என்று அடித்துச்சொல்கிறார் கோவளம் அன்சர் பாஷா.

நம்மிடம் மனம் நொந்து பேசிய இஸ்லாமிய நண்பர்களோ """கோவளத்தில் மட்டுமல்ல; சென்னையின் பிரதான சாலையில் இருக்கும் மசூதியில் இமாமாக இருப்பவர் சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு பயன்படுத்தி வர்றதா புகார்கள் வருது. கொளத்தூர் பகுதியில் இருக்கும் ஒரு மதரசாவில் அரபி பாடம் நடத்தும் மௌலவி ஒருவர், படிக்கும் பசங்களை அசிங்கமான காரியங்களுக்குப் பயன்படுத்திக்கிறதாவும் புகார். இசுலாத்தின் மாண்பைக் கெடுக்கும் இப்படிப்பட்டவர்களைக் களையெடுத் தாகணும்'''என்கிறார்கள் கோபம் கோபமாய்.

தேசிய லீக் கட்சியின் தலைவரான பஷீர் முகமதுவோ ""தர்ஹாக்களில் நடக்கும் மாந்த் ரீகம், பில்லிசூன்யம் போன்றவை ஏமாற்று வேலைகள்தான். இதை அனுமதிக்கக் கூடாது'' என்கிறார் கவலையாய்.

ஆன்மீக போலி கள்... எல்லா மதங்களிலும் இருக்கிறார் கள். நித்யானந்தாக் களும் எல்லா மதங்களி லும் இருக்கிறார்கள்.

source:nakkheeran


--
http://thamilislam.tk

NewsPaanai.com Tamil News Sharing Site

Related Posts with Thumbnails

0 கருத்துரைகள்:

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP